வியாழன், 31 டிசம்பர், 2020

வைகுண்ட ஏகாதசி யும், அதிபரும்

 இது போல ஒரு வருடத்தின் கடைசி நாள் டிசம்பர் 31. அன்று: வைகுண்ட ஏகாதசி. காலையில் எழுந்த வுடன் தொலைக்காட்சி முகத்தில் விழித்தேன்.இன்று போல் அன்று மொபைல் க்கு முக்கிய துவம் இல்லாத காலகட்டம். 

தொலைக்காட்சி யில் அன்றைய தலைப்பு செய்தி ஈராக் முன்னாள் அதிபர் சதாம்முசைன் பற்றியது. 


அப்போது எனக்கு இருந்த வாசிப்பு அறிவுக்கு அவர் சிறந்த நிர்வாகி. எண்ணெய்க்கு உணவு வழங்கும் திட்டம் மூலம் இந்தியாவிடம் நல்ல நட்பு. 

 தன் நாட்டை திறம் பட வழிநடத்தியவர்.


 அமெரிக்க வுக்கு எதிரான பின் நடந்த போரில் தோல்வி யடைந்து சிறை பட்டிருந்தார். யாரும் எதிர்பாராத நிகழ்வு என்று நான் நினைத்த தருணம். காலையில் செய்தி பார்த்த பின் எனது டியஷன் சாரிடம் இதை பற்றி பேசி கொண்டிருந்தேன். இறுதியில் அவர் கூறினார் இன்று வைகுண்ட ஏகாதசி வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்.


ஆம் , இன்று டிசம்பர் 31 ஒரு நாட்டின் அதிபர் தூக்கிலிடபட்டு இறந்த நாள். நான் நம்புகிறேன் வைகுண்டத்தில் சதாமுசைன் இருப்பார் என்று.


 இது போல ஒரு வருடத்தின் கடைசி நாள் டிசம்பர் 31. அன்று: வைகுண்ட ஏகாதசி. காலையில் எழுந்த வுடன் தொலைக்காட்சி முகத்தில் விழித்தேன்.இன்று போல் அன்று மொபைல் க்கு முக்கிய துவம் இல்லாத காலகட்டம். 

தொலைக்காட்சி யில் அன்றைய தலைப்பு செய்தி ஈராக் முன்னாள் அதிபர் சதாம்முசைன் பற்றியது. 


அப்போது எனக்கு இருந்த வாசிப்பு அறிவுக்கு அவர் சிறந்த நிர்வாகி. எண்ணெய்க்கு உணவு வழங்கும் திட்டம் மூலம் இந்தியாவிடம் நல்ல நட்பு. 

 தன் நாட்டை திறம் பட வழிநடத்தியவர்.


 அமெரிக்க வுக்கு எதிரான பின் நடந்த போரில் தோல்வி யடைந்து சிறை பட்டிருந்தார். யாரும் எதிர்பாராத நிகழ்வு என்று நான் நினைத்த தருணம். காலையில் செய்தி பார்த்த பின் எனது டியஷன் சாரிடம் இதை பற்றி பேசி கொண்டிருந்தேன். இறுதியில் அவர் கூறினார் இன்று வைகுண்ட ஏகாதசி வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்.


ஆம் , இன்று டிசம்பர் 31 ஒரு நாட்டின் அதிபர் தூக்கிலிடபட்டு இறந்த நாள். நான் நம்புகிறேன் வைகுண்டத்தில் சதாமுசைன் இருப்பார் என்று.


வெள்ளி, 20 நவம்பர், 2020

சூரரை போற்றுவோம்

  முதன் முதலில் பார்க்கையில் ஒரு அச்சம். தலையாட்டி கொண்டே

இடது-வலது,மேழும்-கீழும் என

கையில் கத்தி சகிதம்  கம்பிரமாக தெரு வீதி உலா வருவார். 

நான்கு ரத வீதிகளில் உலா சென்று முருகனை  போரில் காண போர் களத்துக்கு(கடல்)  சென்றடைவார்.


நல்லவன் தானாம் பின் நாட்களில் கெட்டவனாகி எங்கள் ஊர் சக்ரவர்த்தி யுடனே  போர் செய்ய தயாராகிவிட்டான் என சிறுவயதில் அன்னை கூறியது. பின் நாட்களில் அவரை வைத்து தான் அன்னை சாதம் கொடுப்பாளாம்.


இப்பொழுது பார்க்கையிலும் அவரின்  வருகை, அவருடன் கூட வரும் மேல தாளங்கள் சுவாரசியத்தையும் , இனம் புரியாத மகிழ்ச்சியையம் தருகிறது. 


இம்முறை மருமகளுக்கு அவரை காண்பித்து சாதம் ஊட்டினாள் தங்கை.


நல்லவரோ /கெட்டவரோ இன்று வரை மறக்க முடியாத நபர் சூரபத்மன்.


#திருச்செந்தூர் #சூரபத்மன்



  முதன் முதலில் பார்க்கையில் ஒரு அச்சம். தலையாட்டி கொண்டே

இடது-வலது,மேழும்-கீழும் என

கையில் கத்தி சகிதம்  கம்பிரமாக தெரு வீதி உலா வருவார். 

நான்கு ரத வீதிகளில் உலா சென்று முருகனை  போரில் காண போர் களத்துக்கு(கடல்)  சென்றடைவார்.


நல்லவன் தானாம் பின் நாட்களில் கெட்டவனாகி எங்கள் ஊர் சக்ரவர்த்தி யுடனே  போர் செய்ய தயாராகிவிட்டான் என சிறுவயதில் அன்னை கூறியது. பின் நாட்களில் அவரை வைத்து தான் அன்னை சாதம் கொடுப்பாளாம்.


இப்பொழுது பார்க்கையிலும் அவரின்  வருகை, அவருடன் கூட வரும் மேல தாளங்கள் சுவாரசியத்தையும் , இனம் புரியாத மகிழ்ச்சியையம் தருகிறது. 


இம்முறை மருமகளுக்கு அவரை காண்பித்து சாதம் ஊட்டினாள் தங்கை.


நல்லவரோ /கெட்டவரோ இன்று வரை மறக்க முடியாத நபர் சூரபத்மன்.


#திருச்செந்தூர் #சூரபத்மன்



திங்கள், 7 செப்டம்பர், 2020

புதிய இந்தியா

 எங்கே என் பழைய இந்தியா ??


வந்தாரை வாழ வைத்த என் இந்திய தேசம் இன்று ரோஹிங்யா இன மக்களை அனுமதிக்க மறுப்பது ஏன் ?


யார் இந்த் ரோஹிங்யா இன மக்கள் ?

மியான்மாரில் வசித்த சன்னி இன முஸ்லீம்களின் ஒரு பிரிவு. 


புத்தரின் கொள்கைகளை கடுகளவு கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு நேரெதிரான வன்முறையை கையில் எடுத்த பெளத்தர்களின் வெறியாட்டத்தால் வீடு வாசல் இழந்து ,நடை பிணமாக நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்.


இஸ்லாமிய நாடுகள் சில கை விரிக்க சில ஆயிரம் நபர்களை அண்டை நாடான பங்களாதேஷ் ஏற்று கொண்டது.இதற்கு மேல் எங்களால் முடியாது என்று எல்லை கதவையும் மூடியாகிவிட்டது.


இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் திபெத்தியர்களையும்,பார்சிகளையும்   இரு கரம் கூப்பி  இன்முகத்துடன் வரவேற்ற  என் இந்தியா இன்று இம் மக்களை ஏற்க மறுத்ததுடன் வருபவர்களை நாடு கடத்துகின்றது. சட்டப்படி தான் எல்லாம் நடக்கின்றது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ 

நீதித்துறைக்கு பதிலளித்து விட்டார்.


இந்தியாவின் அழகே பன்முகதன்மை கொண்ட மக்களை அரைவணைத்து சென்று ஜன நாயகத்தை பூத்து குலுங்க செய்வதே.  


மத வெறியர்களால் அனைத்தையும் இழந்து நிற்கதியாக வரும் மக்களை இந்த நாடாவது (கடவுள்) காப்பாற்றாதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை திருப்பி அனுப்புவதான் அறமா ? இது தான் ராஜநியதி யா ? 


நம் பாரத தேசம் என்று புகழ் போற்றுவோம் ? என்பது இப்பொழுது வெறும் பாடல் வரிகளே.. 


நம் போன்ற மக்களை வரவேற்கும் நாடு இந்தியா என்று ரோஹிங்யா மக்கள் நினைத்திருப்பார்கள் போலும்  அவர்களுக்கு தெரியவில்லை நாம் இருப்பது

" புதிய இந்தியாவில் "  என்று 


இப்படிக்கு 

 புதிய இந்தியன் 😭😭😭

 எங்கே என் பழைய இந்தியா ??


வந்தாரை வாழ வைத்த என் இந்திய தேசம் இன்று ரோஹிங்யா இன மக்களை அனுமதிக்க மறுப்பது ஏன் ?


யார் இந்த் ரோஹிங்யா இன மக்கள் ?

மியான்மாரில் வசித்த சன்னி இன முஸ்லீம்களின் ஒரு பிரிவு. 


புத்தரின் கொள்கைகளை கடுகளவு கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு நேரெதிரான வன்முறையை கையில் எடுத்த பெளத்தர்களின் வெறியாட்டத்தால் வீடு வாசல் இழந்து ,நடை பிணமாக நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்.


இஸ்லாமிய நாடுகள் சில கை விரிக்க சில ஆயிரம் நபர்களை அண்டை நாடான பங்களாதேஷ் ஏற்று கொண்டது.இதற்கு மேல் எங்களால் முடியாது என்று எல்லை கதவையும் மூடியாகிவிட்டது.


இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் திபெத்தியர்களையும்,பார்சிகளையும்   இரு கரம் கூப்பி  இன்முகத்துடன் வரவேற்ற  என் இந்தியா இன்று இம் மக்களை ஏற்க மறுத்ததுடன் வருபவர்களை நாடு கடத்துகின்றது. சட்டப்படி தான் எல்லாம் நடக்கின்றது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ 

நீதித்துறைக்கு பதிலளித்து விட்டார்.


இந்தியாவின் அழகே பன்முகதன்மை கொண்ட மக்களை அரைவணைத்து சென்று ஜன நாயகத்தை பூத்து குலுங்க செய்வதே.  


மத வெறியர்களால் அனைத்தையும் இழந்து நிற்கதியாக வரும் மக்களை இந்த நாடாவது (கடவுள்) காப்பாற்றாதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை திருப்பி அனுப்புவதான் அறமா ? இது தான் ராஜநியதி யா ? 


நம் பாரத தேசம் என்று புகழ் போற்றுவோம் ? என்பது இப்பொழுது வெறும் பாடல் வரிகளே.. 


நம் போன்ற மக்களை வரவேற்கும் நாடு இந்தியா என்று ரோஹிங்யா மக்கள் நினைத்திருப்பார்கள் போலும்  அவர்களுக்கு தெரியவில்லை நாம் இருப்பது

" புதிய இந்தியாவில் "  என்று 


இப்படிக்கு 

 புதிய இந்தியன் 😭😭😭

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

படித்ததில் ரசித்தது

 #அந்தகாலம் 


ஊசி போடாத *Doctor* ..


சில்லறை கேட்காத *Conductor* ..


சிரிக்கும் *police* ...


முறைக்கும் *காதலி* ..


உப்பு தொட்ட *மாங்கா* ..


மொட்டமாடி *தூக்கம்* ..


திருப்தியான ஏப்பம்...


Notebookன் *கடைசிப்பக்கம்* ...


தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....


பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..


இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..


இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...


கோபம் மறந்த *அப்பா* ..


சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..


அக்கறை காட்டும் *அண்ணன்* ..


அதட்டும் *அக்கா* ...


மாட்டி விடாத *தங்கை* ..


சமையல் பழகும் *மனைவி* ...


சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..


வழிவிடும் *ஆட்டோ* காரர்...


 *High beam* போடாத லாரி ஓட்டுனர்..


அரை மூடி *தேங்கா* ..


12மணி *குல்பி* ..


sunday *சாலை* ...


மரத்தடி *அரட்டை* ...


தூங்க விடாத *குறட்டை* ...


புது நோட் *வாசம்* ..


மார்கழி *மாசம்* ..


ஜன்னல் *இருக்கை* ..


கோவில் *தெப்பகுளம்* ..


Exhibition *அப்பளம்* ..


முறைப்பெண்ணின் *சீராட்டு* ...


எதிரியின் *பாராட்டு* ..


தோசைக்கல் *சத்தம்* ..


எதிர்பாராத  *முத்தம்* ...


பிஞ்சு *பாதம்* ..


எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,


வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,


சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,


முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,


 *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,


 *எம்ஜிஆர், கலைஞர்*  உயிரோடு இருந்தார்கள்.


 *ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.


கபில் தேவின் *கிரிக்கெட்* .


குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.


 *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,


எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,


சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,* 


தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,


மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,


மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,


ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,


பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,


எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,


கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...


பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...


கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...


7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..


பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...


எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது


வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்


 *சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்


ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்


பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,


சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,


தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,


இதை எழுதும் *நான்* ..


படிக்கும் *நீங்கள்* ..


இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .


கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.


#நம்சுகங்களும்_நம்பிக்கைகளும்தான்.

 #அந்தகாலம் 


ஊசி போடாத *Doctor* ..


சில்லறை கேட்காத *Conductor* ..


சிரிக்கும் *police* ...


முறைக்கும் *காதலி* ..


உப்பு தொட்ட *மாங்கா* ..


மொட்டமாடி *தூக்கம்* ..


திருப்தியான ஏப்பம்...


Notebookன் *கடைசிப்பக்கம்* ...


தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....


பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..


இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..


இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...


கோபம் மறந்த *அப்பா* ..


சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..


அக்கறை காட்டும் *அண்ணன்* ..


அதட்டும் *அக்கா* ...


மாட்டி விடாத *தங்கை* ..


சமையல் பழகும் *மனைவி* ...


சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..


வழிவிடும் *ஆட்டோ* காரர்...


 *High beam* போடாத லாரி ஓட்டுனர்..


அரை மூடி *தேங்கா* ..


12மணி *குல்பி* ..


sunday *சாலை* ...


மரத்தடி *அரட்டை* ...


தூங்க விடாத *குறட்டை* ...


புது நோட் *வாசம்* ..


மார்கழி *மாசம்* ..


ஜன்னல் *இருக்கை* ..


கோவில் *தெப்பகுளம்* ..


Exhibition *அப்பளம்* ..


முறைப்பெண்ணின் *சீராட்டு* ...


எதிரியின் *பாராட்டு* ..


தோசைக்கல் *சத்தம்* ..


எதிர்பாராத  *முத்தம்* ...


பிஞ்சு *பாதம்* ..


எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,


வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,


சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,


முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,


 *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,


 *எம்ஜிஆர், கலைஞர்*  உயிரோடு இருந்தார்கள்.


 *ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.


கபில் தேவின் *கிரிக்கெட்* .


குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.


 *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,


எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,


சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,* 


தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,


மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,


மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,


ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,


பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,


எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,


கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...


பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...


கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...


7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..


பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...


எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது


வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்


 *சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்


ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்


பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,


சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,


தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,


இதை எழுதும் *நான்* ..


படிக்கும் *நீங்கள்* ..


இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .


கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.


#நம்சுகங்களும்_நம்பிக்கைகளும்தான்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

#TeachersDay

 September 5  

Radhakrishnan Birthday 

#TeachersDay 👩‍🏫  👨‍🏫


என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை  

மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவர்கள்.


நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  


இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர். 


வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர். 


ஒரு உதவாக்கரையை 

இன்று 

ஒரு உதவும்கரை ஆக்கி 

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

 September 5  

Radhakrishnan Birthday 

#TeachersDay 👩‍🏫  👨‍🏫


என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை  

மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவர்கள்.


நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  


இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர். 


வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர். 


ஒரு உதவாக்கரையை 

இன்று 

ஒரு உதவும்கரை ஆக்கி 

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இரயிலும், மசால் பொரியும்

 சுவையான அனுபவம்


ஒரு இரயில் பயணத்தின் பொழுது எனது கோச்சில் மசாலா பொறி கொண்டு வந்தார் வணிகர், 

முதலில் அனைவருமே மன்மோகன்சிங் நிலையில் தான் இருந்தோம், 

நாம் சும்மா இருந்தால் தான் நம் வாய் சும்மாக இருக்காதே ! 

அண்ணா பொறி என்றேன், 

அவரும் சிக்கிட்டான் டா ஒருத்தன் என்ற ரீதியில் எடுத்து கொடுத்தார்.


சில நொடிகளில் நம் வலது கை, இடது கை,எதிரில் இருந்தவர் என 6 கைகள் நீட்டியது..

மைண்ட் வாய்ஸ் : ஏன் பா நீங்களா வாங்க மாட்டிங்க, எவராவது ஒருவர் வாங்கியவுடன் தானும் வாங்கி கொள்வது..

என்ன ஒரு புத்திசாலி தனம் 😲


நீங்களும் ஒரு முறை இது போன்று முயற்சி செய்து பாருங்களேன் 👍🏻

 சுவையான அனுபவம்


ஒரு இரயில் பயணத்தின் பொழுது எனது கோச்சில் மசாலா பொறி கொண்டு வந்தார் வணிகர், 

முதலில் அனைவருமே மன்மோகன்சிங் நிலையில் தான் இருந்தோம், 

நாம் சும்மா இருந்தால் தான் நம் வாய் சும்மாக இருக்காதே ! 

அண்ணா பொறி என்றேன், 

அவரும் சிக்கிட்டான் டா ஒருத்தன் என்ற ரீதியில் எடுத்து கொடுத்தார்.


சில நொடிகளில் நம் வலது கை, இடது கை,எதிரில் இருந்தவர் என 6 கைகள் நீட்டியது..

மைண்ட் வாய்ஸ் : ஏன் பா நீங்களா வாங்க மாட்டிங்க, எவராவது ஒருவர் வாங்கியவுடன் தானும் வாங்கி கொள்வது..

என்ன ஒரு புத்திசாலி தனம் 😲


நீங்களும் ஒரு முறை இது போன்று முயற்சி செய்து பாருங்களேன் 👍🏻

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

சல்லிகளும் சல்லாபங்களும்..

 

சல்லிகளும் சல்லாபங்களும்..


சாமியார்கள் என்று சொன்னால் 

Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.


இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ? 

பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.


80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..


15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??


குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..


இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?  

இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது. 

நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ? 

நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.


இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடமும், நட்புகளிடமும் கலந்துரையாடினால் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.


அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.  


சிந்திப்போம்.....

 

சல்லிகளும் சல்லாபங்களும்..


சாமியார்கள் என்று சொன்னால் 

Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.


இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ? 

பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.


80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..


15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??


குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..


இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?  

இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது. 

நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ? 

நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.


இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடமும், நட்புகளிடமும் கலந்துரையாடினால் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.


அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.  


சிந்திப்போம்.....

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

எனக்கு பிடித்த பாடல்

 எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

முதல்வன் திரைப்படத்தில் வரும்

 " குருக்கு சிறுத்தவளே " பாடல். இன்று வரை அடிக்கடி முனுமுனுக்கும் பாடலும் கூட.


பஞ்ச பூதங்களில் (நீர்,நிலம்,காற்று, நெருப்பு, ஆகாயம்) நடப்பது போல் இப்பாடல் படமாக்க பட்டிருக்கும்.

கேமரா மேன் மற்றும் இயக்குனர்  ஷங்கர் ரொம்பவே மெனக்கிட்டுருப்பார்கள். 


மனசு கொஞ்சம் கனமாக இருக்கையில் இந்த பாடலை 

கேட்கையில் ரொம்ப லேசாகி விடும். அப்படி ஒரு அருமையான மெலடி பாடல். 


இப்பாடல் புல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கும். 


இப்பாடல் உருவாக காரணமானவர்கள் தாய், தந்தை(இசை, வரிகள்)யாக    ரஹமான்,வைரமுத்துவும்.  


பாடல் வரிகள் கிராமத்து பெண்ணை மனதில் வைத்து எழுதியிருப்பார் வைரமுத்து.

 (பெண்: கம்பசங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்திரியே, 

ஆண்: மஞ்சள் தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே, 

உம்போல சிவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல ) 


ரகுமான் இசை அப்படியே நம்மை மெய்மறக்க செய்யும் குறிப்பாக புல்லாங்குழல் தனித்துவமாக தெரியும். இசை வாத்தியங்கள் நம்மை தாலாட்டு  modeக்கு கொண்டு செல்லும்.


இப்பாடலுக்கு தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார் 

பாடகர் ஹரிஹரன். (குறிப்பாக குங்குமத்தில் கரைச்சவளே என்பதில் ஒரு அழத்தம் கொடுப்பார் ) மனுஷன் ரசிச்சு பாடியிருப்பார். இன்று வரை முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வுக்கு அக்குரல் முக்கிய காரணம்..


இப்பாடல் ஒரு குழந்தையை போன்றது எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.


இவன்

ராஜா.க

 எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

முதல்வன் திரைப்படத்தில் வரும்

 " குருக்கு சிறுத்தவளே " பாடல். இன்று வரை அடிக்கடி முனுமுனுக்கும் பாடலும் கூட.


பஞ்ச பூதங்களில் (நீர்,நிலம்,காற்று, நெருப்பு, ஆகாயம்) நடப்பது போல் இப்பாடல் படமாக்க பட்டிருக்கும்.

கேமரா மேன் மற்றும் இயக்குனர்  ஷங்கர் ரொம்பவே மெனக்கிட்டுருப்பார்கள். 


மனசு கொஞ்சம் கனமாக இருக்கையில் இந்த பாடலை 

கேட்கையில் ரொம்ப லேசாகி விடும். அப்படி ஒரு அருமையான மெலடி பாடல். 


இப்பாடல் புல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கும். 


இப்பாடல் உருவாக காரணமானவர்கள் தாய், தந்தை(இசை, வரிகள்)யாக    ரஹமான்,வைரமுத்துவும்.  


பாடல் வரிகள் கிராமத்து பெண்ணை மனதில் வைத்து எழுதியிருப்பார் வைரமுத்து.

 (பெண்: கம்பசங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்திரியே, 

ஆண்: மஞ்சள் தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே, 

உம்போல சிவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல ) 


ரகுமான் இசை அப்படியே நம்மை மெய்மறக்க செய்யும் குறிப்பாக புல்லாங்குழல் தனித்துவமாக தெரியும். இசை வாத்தியங்கள் நம்மை தாலாட்டு  modeக்கு கொண்டு செல்லும்.


இப்பாடலுக்கு தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார் 

பாடகர் ஹரிஹரன். (குறிப்பாக குங்குமத்தில் கரைச்சவளே என்பதில் ஒரு அழத்தம் கொடுப்பார் ) மனுஷன் ரசிச்சு பாடியிருப்பார். இன்று வரை முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வுக்கு அக்குரல் முக்கிய காரணம்..


இப்பாடல் ஒரு குழந்தையை போன்றது எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.


இவன்

ராஜா.க

புதன், 19 ஆகஸ்ட், 2020

ஏழைத்தாயின் மகள்

 கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா. 


தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,

சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..


வடிவேலு இல்லாமல் தவித்த 

தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம். 


அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.    


பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன் 

 என்ற  #KolamaavuKokila

 கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா. 


தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,

சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..


வடிவேலு இல்லாமல் தவித்த 

தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம். 


அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.    


பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன் 

 என்ற  #KolamaavuKokila

புதன், 12 ஆகஸ்ட், 2020

ப்யார்,ப்ரேமா,காதலுடன்

 படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..


தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..


கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல; 


மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன், 

ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ? 


Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற் 

கொண்டு.


அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு 

கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.


ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ? 


எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு 

செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.


இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.


அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;


இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.


ப்யார்,ப்ரேமா,காதலுடன்

ராஜா.க

 படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..


தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..


கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல; 


மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன், 

ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ? 


Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற் 

கொண்டு.


அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு 

கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.


ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ? 


எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு 

செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.


இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.


அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;


இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.


ப்யார்,ப்ரேமா,காதலுடன்

ராஜா.க

செவ்வாய், 28 ஜூலை, 2020

சாப்பிட போலாம் வாங்க

சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று,
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்,
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்)

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது
“காசி விநாயகா மெஸ்”

சுவையுடன்
ராஜா.க


சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று,
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்,
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்)

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது
“காசி விநாயகா மெஸ்”

சுவையுடன்
ராஜா.க


ஞாயிறு, 12 ஜூலை, 2020

கள்ளிகாட்டு கவிஞனே !!!

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”
முதல் காதலில் தோற்றவனுக்கு அது
தான் கடைசி “தோல்வி”

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின் ‘அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து

இவண்
ராஜா.க
முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”
முதல் காதலில் தோற்றவனுக்கு அது
தான் கடைசி “தோல்வி”

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின் ‘அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து

இவண்
ராஜா.க

புதன், 8 ஜூலை, 2020

தமிழ் சினிமாவின் துரோணர்

ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.

 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல.

நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,
லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,
சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....

யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....
ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.

 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல.

நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,
லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,
சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....

யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....

பழைய குற்றாலம்

பழைய குற்றாலம் வரலாறு

வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.இந்த முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று..

சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.

இவண்
ராஜா.க
பழைய குற்றாலம் வரலாறு

வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.இந்த முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று..

சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.

இவண்
ராஜா.க

செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழ் சினிமாவின் புற்று நோய்

தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம். 

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க
தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம். 

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க

ஞாயிறு, 7 ஜூன், 2020

சிலேடையும், ரிதமும்

பிடித்த வரிகள் !!!

தமிழ் இலக்கணங்களில் அழகான மற்றும் நகைச்சுவை பொருள் படி மக்களுக்கு கருத்தை கொண்டு சேர்வதில்
"சிலேடை" பங்கு அதிகம்.

சிலேடை என்பது இரு நபர்களின் பொதுவான குணங்களை மிக அழகாக எடுத்துரைப்பது.
ரிதம் படத்தில் இடம்பெறும்
" நதியே நதியே "  பாடலில் தண்ணீரையும்,பெண்ணையம் ஒப்பிட்டிருப்பார் கவிஞர்.

காதலியின் அருமை பிரிவில்,
மனைவியின் அருமை மறைவில்,
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் ,
விரல்கள் தொட்டால் உருகும்,
நீரும் பெண்ணும் ஒன்று ,
வாடையிலே !!!!

வண்ண வண்ணப் பெண்ணே, வட்டமிடும் நதியே,
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு !!

மெல்லிசைகள் படைத்தல்,
மேடு பள்ளம் மறைத்தல் ,
நதிகளின் குணமே
அது நங்கையின்  குணமே !!!

பெண்ணின் பெருமையையம்,
தண்ணீரின் அருமையையும் தன்
"வைர" வரிகளால் பதித்தவர்
வைரமுத்து !!!

#வைரமுத்து #ரிதம் #தமிழ்பாடல்கள்

#Vairamuthu #Rahman

இவன்
ராஜா.க
பிடித்த வரிகள் !!!

தமிழ் இலக்கணங்களில் அழகான மற்றும் நகைச்சுவை பொருள் படி மக்களுக்கு கருத்தை கொண்டு சேர்வதில்
"சிலேடை" பங்கு அதிகம்.

சிலேடை என்பது இரு நபர்களின் பொதுவான குணங்களை மிக அழகாக எடுத்துரைப்பது.
ரிதம் படத்தில் இடம்பெறும்
" நதியே நதியே "  பாடலில் தண்ணீரையும்,பெண்ணையம் ஒப்பிட்டிருப்பார் கவிஞர்.

காதலியின் அருமை பிரிவில்,
மனைவியின் அருமை மறைவில்,
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் ,
விரல்கள் தொட்டால் உருகும்,
நீரும் பெண்ணும் ஒன்று ,
வாடையிலே !!!!

வண்ண வண்ணப் பெண்ணே, வட்டமிடும் நதியே,
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு !!

மெல்லிசைகள் படைத்தல்,
மேடு பள்ளம் மறைத்தல் ,
நதிகளின் குணமே
அது நங்கையின்  குணமே !!!

பெண்ணின் பெருமையையம்,
தண்ணீரின் அருமையையும் தன்
"வைர" வரிகளால் பதித்தவர்
வைரமுத்து !!!

#வைரமுத்து #ரிதம் #தமிழ்பாடல்கள்

#Vairamuthu #Rahman

இவன்
ராஜா.க

திங்கள், 25 மே, 2020

செண்டிமெண்ட்

செண்டிமெண்ட்

இந்த வார்த்தைக்கும் நம்ம தமிழ் சினிமாவிற்கும் உள்ள தொடர்பு
“அம்பானிக்கும்,ஐபில் கப்பிற்கும்” உள்ள தொடர்பு போல் உறுதியானது, பிரிப்பது கொஞ்சம் கஷ்டம்.

இந்த மாதிரி செண்டிமெண்ட் ஷங்கர், மனிரத்தனம் போன்ற ஆளுமைகளை போல விட்டு வைப்பதில்லை. இயக்குனர் மணிரத்தனம் படங்களில் பார்த்திந்திங்கனா “Bus(பேருந்து)” ஒரு செண்டிமெண்ட்.

படத்தோட கதாநாயகனும்,
கதாநாயகியும் பேருந்தில் அமர்ந்து பேசி கொள்வதை போல் சில காட்சிகளை வைத்திருப்பார். அந்த காட்சி மிக இயல்பாகவும், ரொமெண்டிக்காகவும் இருக்கும்.

மெளனராகம் தொடங்கி அலைபாயுதே,ஆயுத எழுத்து,கடல்,
ஒ காதல் கண்மணி படங்கள் வரை காட்சிகள் தொடர்கிறது.

இது போல train  சில படங்களில் வரும்,ஹீரோ clean shave பண்ணியிருப்பார். இதையெல்லாம் சில குறியீடுனு கூட சொல்லுவார்கள்.

இயக்குனர் சுந்தர்.C யோட நிறைய படங்களில் உருட்டு கட்டை வரும்

பொதுவாக நம்ம எல்லாருக்கும் கூட இந்த மாதிரி சின்ன,சின்ன செண்டிமெண்ட் இருக்கும். இந்த மாதிரி பண்னினா success ஆகி இருக்கும், அதே அப்படியே எப்பவும் follow பண்னுவோம்.

வாழ்க்கைனா சில செண்டிமெண்ட்ஸ்கள் இருக்க தானே செய்யும்.

இவண்
ராஜா.க
செண்டிமெண்ட்

இந்த வார்த்தைக்கும் நம்ம தமிழ் சினிமாவிற்கும் உள்ள தொடர்பு
“அம்பானிக்கும்,ஐபில் கப்பிற்கும்” உள்ள தொடர்பு போல் உறுதியானது, பிரிப்பது கொஞ்சம் கஷ்டம்.

இந்த மாதிரி செண்டிமெண்ட் ஷங்கர், மனிரத்தனம் போன்ற ஆளுமைகளை போல விட்டு வைப்பதில்லை. இயக்குனர் மணிரத்தனம் படங்களில் பார்த்திந்திங்கனா “Bus(பேருந்து)” ஒரு செண்டிமெண்ட்.

படத்தோட கதாநாயகனும்,
கதாநாயகியும் பேருந்தில் அமர்ந்து பேசி கொள்வதை போல் சில காட்சிகளை வைத்திருப்பார். அந்த காட்சி மிக இயல்பாகவும், ரொமெண்டிக்காகவும் இருக்கும்.

மெளனராகம் தொடங்கி அலைபாயுதே,ஆயுத எழுத்து,கடல்,
ஒ காதல் கண்மணி படங்கள் வரை காட்சிகள் தொடர்கிறது.

இது போல train  சில படங்களில் வரும்,ஹீரோ clean shave பண்ணியிருப்பார். இதையெல்லாம் சில குறியீடுனு கூட சொல்லுவார்கள்.

இயக்குனர் சுந்தர்.C யோட நிறைய படங்களில் உருட்டு கட்டை வரும்

பொதுவாக நம்ம எல்லாருக்கும் கூட இந்த மாதிரி சின்ன,சின்ன செண்டிமெண்ட் இருக்கும். இந்த மாதிரி பண்னினா success ஆகி இருக்கும், அதே அப்படியே எப்பவும் follow பண்னுவோம்.

வாழ்க்கைனா சில செண்டிமெண்ட்ஸ்கள் இருக்க தானே செய்யும்.

இவண்
ராஜா.க

செவ்வாய், 19 மே, 2020

லவ் டுடே

90 களில் நடந்த காதலை அழுத்தமாக கூறிய படம்.

கம்யூட்டர் class, பஸ் டாப்பில் காத்திருப்பு, வாட்ச்சில் காதலியின் புகைப்படம்.

பட்டி தொட்டி எங்கும் ஒலித்த
என்ன அழகு,ஏன் பெண் என்று பிறந்தாய் பாடல்.

நம் நட்பு வட்டாரத்தில் கண்டிப்பாக இது போன்ற கணேஷ் பார்த்திருப்போம்.

இப்போது இப்படத்தை பார்த்து
சிலர் சிரிக்கலாம்,
சிலர் ரசிக்கலாம்

#லவ்டுடே
90 களில் நடந்த காதலை அழுத்தமாக கூறிய படம்.

கம்யூட்டர் class, பஸ் டாப்பில் காத்திருப்பு, வாட்ச்சில் காதலியின் புகைப்படம்.

பட்டி தொட்டி எங்கும் ஒலித்த
என்ன அழகு,ஏன் பெண் என்று பிறந்தாய் பாடல்.

நம் நட்பு வட்டாரத்தில் கண்டிப்பாக இது போன்ற கணேஷ் பார்த்திருப்போம்.

இப்போது இப்படத்தை பார்த்து
சிலர் சிரிக்கலாம்,
சிலர் ரசிக்கலாம்

#லவ்டுடே

ஞாயிறு, 17 மே, 2020

திருமலையும், விவேக்கும்

திருமலை படத்தோட shooting எல்லாம் முடித்துவிட்டு first copy அடிப்படையில் படத்தோட
producer இயக்குனர் பாலசந்தர் படம் திரையிடபட்டது,
படம் பார்த்தவர் படத்தில் Relaxation மிஸ்லிங் என கூற பின்னர் விவேக்கின் காட்சி தனி track இல் படமாக்கபட்டிருக்கும்.

பெயருக்கு இரண்டு காட்சிகளில் விஜயும்,விவேக்கும் சேர்ந்திருப்பார்கள். 

அவர் கணிப்பு படி படத்தில் விவேக்கின் காமெடி நல்ல Relaxation ஆக இருக்கும்.

இயக்குனர் சிகரம்னா சும்மாவா ??

#KB
திருமலை படத்தோட shooting எல்லாம் முடித்துவிட்டு first copy அடிப்படையில் படத்தோட
producer இயக்குனர் பாலசந்தர் படம் திரையிடபட்டது,
படம் பார்த்தவர் படத்தில் Relaxation மிஸ்லிங் என கூற பின்னர் விவேக்கின் காட்சி தனி track இல் படமாக்கபட்டிருக்கும்.

பெயருக்கு இரண்டு காட்சிகளில் விஜயும்,விவேக்கும் சேர்ந்திருப்பார்கள். 

அவர் கணிப்பு படி படத்தில் விவேக்கின் காமெடி நல்ல Relaxation ஆக இருக்கும்.

இயக்குனர் சிகரம்னா சும்மாவா ??

#KB

வெள்ளி, 15 மே, 2020

பசி என்னும் கலி

இந்திய நாட்டின் பட்ஜெட் தொகை
மதிப்பீடு 200 இலட்ஷம் கோடி யாம்
அதில் 10% என்பது 20 இலட்ஷம் கோடி அதை special package  திட்டம் என்று கூறி திட்டங்களை அடுக்கினார் நிதி அமைச்சர்.

சமானியனாக ஒரு கேள்வி எழுகிறது , இந்த பணம் நேரடியாக அடி மட்டத்தில் உள்ள குடிமகனாக சென்று அடைய முடியுமா ? என்றால் முடியாது. ஏன் ?

சிறிய வயதில் நாம் அனைவரும் செடிக்கு தண்ணீர் விட்டுருப்போம், அதில் சிலர் விவரம் தெரியாமல் செடியின் மேலிருந்து செடியின் இலைகளுக்கு தண்ணீரை கொட்டுவார்கள். அவ்வாறு செய்கையில் மேலை உள்ள செடிக்கு தண்ணீரில் நனையும்.ஆனால் ஒட்டுமொத்த செடியும் வளரும் என்று நினைத்தால் அது நம் தவறு.

அது போலவே அரசின் இந்த செயல்பாடும் இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

என்ன செய்திருக்க வேண்டும் ?

200இலட்ஷம் கோடி அதில் 1%
2இலட்ஷம் கோடியை 
68000₹ கோடி வீதம்
மூன்று மாதங்களில் 
6000₹ (ஒவ்வொரு மாதம் )
வழங்கினால்
11ஆயிரம் கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் என்றாலும் 44000 கோடி மக்கள் பயன்பெறுவர்கள்.

அவர்கள் account இல் நேரடியாகவே பணத்தை போடலாம் அதற்கு வழி வகையும் உள்ளது பிரதமரின்( Nil Balance account ).
கீழே உள்ளவர்களிடத்தில் பணம் சென்றால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் மேலும் பண சுழற்சியும் அனைத்து மட்டங்களிலும் நடக்கும்.

மூன்று மாதத்திற்கு பிறகு நிலைமை சீரைடையும் வழக்கமான தொழிலை
செய்து அவர்கள்  பிழைத்து கொள்வார்கள்.

நான் மேல் கூறிய உவமையோடு ஒப்பிடுகையில் செடியின் வேர்களில் தண்ணீர் விடுகையில் ஒட்டு மொத்த செடியும் வளறும். அது போல மக்களை கோரானா என்ற கொடூரனோடு அல்லாமல் பசி என்ற கலியிடமிருந்து கூட காப்பாற்றியிருக்கலாம்.

இவன்
சாமானியன்.
இந்திய நாட்டின் பட்ஜெட் தொகை
மதிப்பீடு 200 இலட்ஷம் கோடி யாம்
அதில் 10% என்பது 20 இலட்ஷம் கோடி அதை special package  திட்டம் என்று கூறி திட்டங்களை அடுக்கினார் நிதி அமைச்சர்.

சமானியனாக ஒரு கேள்வி எழுகிறது , இந்த பணம் நேரடியாக அடி மட்டத்தில் உள்ள குடிமகனாக சென்று அடைய முடியுமா ? என்றால் முடியாது. ஏன் ?

சிறிய வயதில் நாம் அனைவரும் செடிக்கு தண்ணீர் விட்டுருப்போம், அதில் சிலர் விவரம் தெரியாமல் செடியின் மேலிருந்து செடியின் இலைகளுக்கு தண்ணீரை கொட்டுவார்கள். அவ்வாறு செய்கையில் மேலை உள்ள செடிக்கு தண்ணீரில் நனையும்.ஆனால் ஒட்டுமொத்த செடியும் வளரும் என்று நினைத்தால் அது நம் தவறு.

அது போலவே அரசின் இந்த செயல்பாடும் இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

என்ன செய்திருக்க வேண்டும் ?

200இலட்ஷம் கோடி அதில் 1%
2இலட்ஷம் கோடியை 
68000₹ கோடி வீதம்
மூன்று மாதங்களில் 
6000₹ (ஒவ்வொரு மாதம் )
வழங்கினால்
11ஆயிரம் கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் என்றாலும் 44000 கோடி மக்கள் பயன்பெறுவர்கள்.

அவர்கள் account இல் நேரடியாகவே பணத்தை போடலாம் அதற்கு வழி வகையும் உள்ளது பிரதமரின்( Nil Balance account ).
கீழே உள்ளவர்களிடத்தில் பணம் சென்றால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் மேலும் பண சுழற்சியும் அனைத்து மட்டங்களிலும் நடக்கும்.

மூன்று மாதத்திற்கு பிறகு நிலைமை சீரைடையும் வழக்கமான தொழிலை
செய்து அவர்கள்  பிழைத்து கொள்வார்கள்.

நான் மேல் கூறிய உவமையோடு ஒப்பிடுகையில் செடியின் வேர்களில் தண்ணீர் விடுகையில் ஒட்டு மொத்த செடியும் வளறும். அது போல மக்களை கோரானா என்ற கொடூரனோடு அல்லாமல் பசி என்ற கலியிடமிருந்து கூட காப்பாற்றியிருக்கலாம்.

இவன்
சாமானியன்.

திங்கள், 11 மே, 2020

கோவிந்தா கோவிந்தா


தனது வங்கியில் சேமிப்பு கணக்கு
வைத்துள்ள ஒருவருக்கு மாதாமாதம் வட்டி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், பணத்துக்கு நிகரான தங்கமாக வரவு வைத்துள்ளது அந்த வங்கி.

வங்கியின் பெயர் நினைவில்லை,
அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர் திருப்பதி தேவஸ்தானம்.

இன்று அவர்களால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை என்ற செய்தி படிக்கையில், வருத்தம் கலந்த சிரிப்புடன்
இந்த பாட்டு
தான் நினைவுக்கு
வருகிறது.

"திருப்பதி, ஏழுமலை,வெங்கடேசா என்ன இது ?"
"இந்த காசு எல்லாம் வைச்சு என்ன பண்ணறது "

கொரானா என்ற கொடூரனை கூட தங்கள் தேவைக்கு உபயோக படித்தி கொள்கிறார்கள் நம் கலியுக சக்கரவர்த்திகள்.

தனது வங்கியில் சேமிப்பு கணக்கு
வைத்துள்ள ஒருவருக்கு மாதாமாதம் வட்டி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், பணத்துக்கு நிகரான தங்கமாக வரவு வைத்துள்ளது அந்த வங்கி.

வங்கியின் பெயர் நினைவில்லை,
அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர் திருப்பதி தேவஸ்தானம்.

இன்று அவர்களால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை என்ற செய்தி படிக்கையில், வருத்தம் கலந்த சிரிப்புடன்
இந்த பாட்டு
தான் நினைவுக்கு
வருகிறது.

"திருப்பதி, ஏழுமலை,வெங்கடேசா என்ன இது ?"
"இந்த காசு எல்லாம் வைச்சு என்ன பண்ணறது "

கொரானா என்ற கொடூரனை கூட தங்கள் தேவைக்கு உபயோக படித்தி கொள்கிறார்கள் நம் கலியுக சக்கரவர்த்திகள்.

புதன், 6 மே, 2020

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

அஸ்தினபுர நகரத்தின் கட்டமைப்பு, மன்னர்கள்,நாட்டின் இராணுவ படை,மக்கள் இவைகளை படித்து இருக்கிறேன். அதை  கண்ணுக்கு விருந்தாக்கிய "கலை இயக்குனர்" சாபு சரீல் க்கு முதல் சபாஷ்.

கதை: பங்காளி சண்டை அரியனையில் அமர்வதற்கு, (மகாபாரதம்)தான்.
அந்த ஒரு வரி கதையை தனக்குரிய தனித்துவத்துடன்; திரைக்கதையை வேகமாகவும்,விவேகமாகவும் காட்சிகளை அமைத்து; ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன் திரைக்கதையால் வலிமை சேர்த்து,  ரசிகனை இறுதி வரை இருக்கையில் அமர வைத்த இயக்குனர்.
"இராஜ மெளலி" யே மகிழ்மதியின் சக்கரவர்த்தி.

கதா நாயகனின் வெற்றி தன்னை விட பலமுள்ள, அழுத்தமான தனக்கு நேரெதிரான எண்ணம் கொண்ட (வில்லனை) எதிரியை வெற்றி கொள்வதே; அப்படி ஒரு வாய்ப்பை நாயகனுக்கு நல்கிய
 "பல்வாள் தேவன்" ராணா வும் நாயகனே.(துரியோதனின் குணாதிசியம்).

அரசன் என்பவன் இப்படி தான் இருந்திருப்பான் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாக தன்னை உடலளிவிலும்,மனதளவிலும் வடிவமைத்து  கொண்ட கதையின் நாயகன் பிரபாஸ். (அர்ச்சுனனை நினைவு கூறுகிறான்)

 "ராஜ மாதா"சிவகாமி தேவி,
"இளவரசி" தேவைசேனை
நெடு நாட்களுக்கு பிறகு சினிமாவில்  ஆண்களுக்கு நிகராக அல்ல,
அதற்கும் மேலான கதாபாத்திரத்தில்
"இரட்டை குழல்" துப்பாக்கியாக
வெடிக்கின்றனர்.

கட்டப்பா கதாபாத்திரம் பிதாமகர் பீஷ்மரைய நினைவுபடுத்துகிறது. அரசின் அடிமை. மனிதர் கலக்கியிருக்கிறார் தன் வழக்கமான நக்கல் பேச்சில்.

வீரம் கலந்த விவேகமான போர் கள காட்சிகள்,கார்க்கியின் வசனம்,கீரவாணியின் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

பாடல்கள் மனதில் நிற்கவில்லை
தமிழ் கவிஞர்களுக்கும், தமிழ் வரிகளுக்கும் பஞ்சமா என்ன பாடல்களுக்கு ??கட்டப்பா கதாபாத்திரத்தை "நாய்" என்ற வார்த்தையை (பல முறை )தவிர்த்திருக்கலாம்.

திரைப்படம் முடிந்து எழுந்து செல்கையில் ரசிகனையும்
 "ஜெய் மகிழ்மதி" என கோஷம் போட வைத்துவிட்டான்.

இந்த "பாகுபலி ..."
மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

அஸ்தினபுர நகரத்தின் கட்டமைப்பு, மன்னர்கள்,நாட்டின் இராணுவ படை,மக்கள் இவைகளை படித்து இருக்கிறேன். அதை  கண்ணுக்கு விருந்தாக்கிய "கலை இயக்குனர்" சாபு சரீல் க்கு முதல் சபாஷ்.

கதை: பங்காளி சண்டை அரியனையில் அமர்வதற்கு, (மகாபாரதம்)தான்.
அந்த ஒரு வரி கதையை தனக்குரிய தனித்துவத்துடன்; திரைக்கதையை வேகமாகவும்,விவேகமாகவும் காட்சிகளை அமைத்து; ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன் திரைக்கதையால் வலிமை சேர்த்து,  ரசிகனை இறுதி வரை இருக்கையில் அமர வைத்த இயக்குனர்.
"இராஜ மெளலி" யே மகிழ்மதியின் சக்கரவர்த்தி.

கதா நாயகனின் வெற்றி தன்னை விட பலமுள்ள, அழுத்தமான தனக்கு நேரெதிரான எண்ணம் கொண்ட (வில்லனை) எதிரியை வெற்றி கொள்வதே; அப்படி ஒரு வாய்ப்பை நாயகனுக்கு நல்கிய
 "பல்வாள் தேவன்" ராணா வும் நாயகனே.(துரியோதனின் குணாதிசியம்).

அரசன் என்பவன் இப்படி தான் இருந்திருப்பான் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாக தன்னை உடலளிவிலும்,மனதளவிலும் வடிவமைத்து  கொண்ட கதையின் நாயகன் பிரபாஸ். (அர்ச்சுனனை நினைவு கூறுகிறான்)

 "ராஜ மாதா"சிவகாமி தேவி,
"இளவரசி" தேவைசேனை
நெடு நாட்களுக்கு பிறகு சினிமாவில்  ஆண்களுக்கு நிகராக அல்ல,
அதற்கும் மேலான கதாபாத்திரத்தில்
"இரட்டை குழல்" துப்பாக்கியாக
வெடிக்கின்றனர்.

கட்டப்பா கதாபாத்திரம் பிதாமகர் பீஷ்மரைய நினைவுபடுத்துகிறது. அரசின் அடிமை. மனிதர் கலக்கியிருக்கிறார் தன் வழக்கமான நக்கல் பேச்சில்.

வீரம் கலந்த விவேகமான போர் கள காட்சிகள்,கார்க்கியின் வசனம்,கீரவாணியின் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

பாடல்கள் மனதில் நிற்கவில்லை
தமிழ் கவிஞர்களுக்கும், தமிழ் வரிகளுக்கும் பஞ்சமா என்ன பாடல்களுக்கு ??கட்டப்பா கதாபாத்திரத்தை "நாய்" என்ற வார்த்தையை (பல முறை )தவிர்த்திருக்கலாம்.

திரைப்படம் முடிந்து எழுந்து செல்கையில் ரசிகனையும்
 "ஜெய் மகிழ்மதி" என கோஷம் போட வைத்துவிட்டான்.

இந்த "பாகுபலி ..."

அட்சய திருதியயை

அட்சய திருதியயை

சித்திரையின் வளர்பிறை இரண்டாம் நாள்
(வளர் துவிதையை).

"அட்சய" உணவு;
இந்நாளில் மாதவியின் மகள் மணிமேகலை உணவில்லா ஏழைகளுக்கு உணவு வழங்கினாள்.

கால வாக்கில் அதை அப்படியே மாற்றி தங்கம் வாங்குங்கள் எங்களிடம்
"செய்கூலி இல்லை,சேதாராம் இல்லை .." ஏனைன்றால் இது தங்கமே இல்லை !!!என்ற அளவிற்கு விளம்பர படுத்தி வரலாற்றேயே மாற்றி விட்டனர் நம் வியாபார காந்தங்கள்(Business Magnates).

ஆதலால் அட்சய திருதியை நாளான இன்று இயலாதவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் மனமும், வயிறும் நிரம்பும் படி செய்வோம்.

#அட்சயதிருதியை

இவண்
ராஜா.க
அட்சய திருதியயை

சித்திரையின் வளர்பிறை இரண்டாம் நாள்
(வளர் துவிதையை).

"அட்சய" உணவு;
இந்நாளில் மாதவியின் மகள் மணிமேகலை உணவில்லா ஏழைகளுக்கு உணவு வழங்கினாள்.

கால வாக்கில் அதை அப்படியே மாற்றி தங்கம் வாங்குங்கள் எங்களிடம்
"செய்கூலி இல்லை,சேதாராம் இல்லை .." ஏனைன்றால் இது தங்கமே இல்லை !!!என்ற அளவிற்கு விளம்பர படுத்தி வரலாற்றேயே மாற்றி விட்டனர் நம் வியாபார காந்தங்கள்(Business Magnates).

ஆதலால் அட்சய திருதியை நாளான இன்று இயலாதவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் மனமும், வயிறும் நிரம்பும் படி செய்வோம்.

#அட்சயதிருதியை

இவண்
ராஜா.க

செவ்வாய், 5 மே, 2020

வியட்நாம் வீடு

பொதுவாக பழைய (MGR,Sivaji)
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு.

“வியட்நாம்காலனி” காமெடி என்று YouTube தேடுகையில் “வியட்நாம்வீடு” என்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்.

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது.

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால் “வியட்நாம்” வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்.

மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது.

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்.  வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார்
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா.க
பொதுவாக பழைய (MGR,Sivaji)
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு.

“வியட்நாம்காலனி” காமெடி என்று YouTube தேடுகையில் “வியட்நாம்வீடு” என்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்.

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது.

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால் “வியட்நாம்” வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்.

மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது.

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்.  வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார்
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா.க

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

புரிதல்

புரிதல்  !!!

இன்று நடக்கும் பல குழப்பங்களுக்கு இது இல்லாததது தான் முதல் காரணமே. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.

என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் புரிதலுக்கு உண்டான சான்றுகள்..

செல்வா,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை.
யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம்.

சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE மாணவர்கள் 7 நபர்கள் தங்கும் பெரிய வீடு. கூட்டினுள் கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.

நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் அமர்ந்து வெட்டி கதை பேசி மகிழ்ந்த தருணம்.

ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் என முகத்தை சுறுக்க,

நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் அளவளாவியது ஒரு புறம்.

எங்கள் மூவருக்கும் உண்டான புரிதல் அன்று வெளிப்பட்ட தருணம். நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல்.

இரண்டாவது நிகழ்வு.

8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால்
A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார்.

நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை.
மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம்.

இந்த புரிதல் ஒருவருக்கு ஒருவர் இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.

புரிதலுடன்
ராஜா . க
புரிதல்  !!!

இன்று நடக்கும் பல குழப்பங்களுக்கு இது இல்லாததது தான் முதல் காரணமே. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.

என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் புரிதலுக்கு உண்டான சான்றுகள்..

செல்வா,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை.
யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம்.

சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE மாணவர்கள் 7 நபர்கள் தங்கும் பெரிய வீடு. கூட்டினுள் கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.

நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் அமர்ந்து வெட்டி கதை பேசி மகிழ்ந்த தருணம்.

ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் என முகத்தை சுறுக்க,

நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் அளவளாவியது ஒரு புறம்.

எங்கள் மூவருக்கும் உண்டான புரிதல் அன்று வெளிப்பட்ட தருணம். நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல்.

இரண்டாவது நிகழ்வு.

8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால்
A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார்.

நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை.
மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம்.

இந்த புரிதல் ஒருவருக்கு ஒருவர் இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.

புரிதலுடன்
ராஜா . க

சனி, 11 ஏப்ரல், 2020

IPl ம் மசாலாவும்

சினிமாவில மட்டுமல்ல எல்லாவற்றிலும்   மசாலா கேட்கறாங்க நம் மக்கள் என்று கூறுவார் நம்மவர் கமல்
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில்.

அது போல் IPL கிரிக்கெட்டிலும் cheers girls, dance,வீரர்களுகிடையே சண்டை,அழுகாட்சி என மசாலாக்களை தூவி திறம்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறது IPL நிர்வாகம்.

இது மட்டும் போதாது என்று நினைத்து உள்ளது போலும், மேலும் சில பல சுவாரசிய நிகழ்ச்சிகளை அறங்கேற்றுகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சில rules and regulations இருக்கும் அதையும் மீறுகையில் தான் அது விவாத பொருளாகிறது.

நமக்கு பிடித்த அணி, நமக்கு பிடித்த ஆட்டகாரர் என்பதால் அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அவுட் ஆகி சென்றவர் மீண்டும் மைதானத்துக்குள் வருவதே தவறு. அதிலும் ஒரு கேப்டன் உள்ளே வந்து அம்பையரிடம் வாக்குவாதம் செய்வது தவறான எடுத்துகாட்டு .

பிறகு களத்தில் எதற்கு இரண்டு நடுவர்கள் ? 3ம் நடுவர் எதற்கு ?  வெறும் 50% அபராதத்துடன் அதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில், அந்த கேப்டன் தோனியாக இருக்க வேண்டும். மேட்ச் இந்தியாவில் தான் நடக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் பல நல்ல நுட்பங்களை சக வீரர்களுக்கு கற்று கொடுக்கும் வீரர் இது போன்றவைகளை தவிர்த்துருக்கலாம். நாளை இது போல் மற்ற அணி வீரர்களும் இதை பின் தொடர்ந்தால் gentlemen game சிறுபிள்ளை விளையாட்டாகி விடும்.

விசில் போடுவோம்
ராஜா.க
சினிமாவில மட்டுமல்ல எல்லாவற்றிலும்   மசாலா கேட்கறாங்க நம் மக்கள் என்று கூறுவார் நம்மவர் கமல்
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில்.

அது போல் IPL கிரிக்கெட்டிலும் cheers girls, dance,வீரர்களுகிடையே சண்டை,அழுகாட்சி என மசாலாக்களை தூவி திறம்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறது IPL நிர்வாகம்.

இது மட்டும் போதாது என்று நினைத்து உள்ளது போலும், மேலும் சில பல சுவாரசிய நிகழ்ச்சிகளை அறங்கேற்றுகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சில rules and regulations இருக்கும் அதையும் மீறுகையில் தான் அது விவாத பொருளாகிறது.

நமக்கு பிடித்த அணி, நமக்கு பிடித்த ஆட்டகாரர் என்பதால் அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அவுட் ஆகி சென்றவர் மீண்டும் மைதானத்துக்குள் வருவதே தவறு. அதிலும் ஒரு கேப்டன் உள்ளே வந்து அம்பையரிடம் வாக்குவாதம் செய்வது தவறான எடுத்துகாட்டு .

பிறகு களத்தில் எதற்கு இரண்டு நடுவர்கள் ? 3ம் நடுவர் எதற்கு ?  வெறும் 50% அபராதத்துடன் அதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில், அந்த கேப்டன் தோனியாக இருக்க வேண்டும். மேட்ச் இந்தியாவில் தான் நடக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் பல நல்ல நுட்பங்களை சக வீரர்களுக்கு கற்று கொடுக்கும் வீரர் இது போன்றவைகளை தவிர்த்துருக்கலாம். நாளை இது போல் மற்ற அணி வீரர்களும் இதை பின் தொடர்ந்தால் gentlemen game சிறுபிள்ளை விளையாட்டாகி விடும்.

விசில் போடுவோம்
ராஜா.க

ஞாயிறு, 29 மார்ச், 2020

கெ(கே)ட்ட வார்த்தைகள்

ஒரு பிரபலமான ஜவுளி கடையில் நடந்த சம்பவம்.
 Lift உதவியுடன் 5வது மாடிக்கு செல்கையில் ஒரு அழகான பெண் குழந்தை அதற்குறிய பாணியில் அதன் அன்னையை இம்சை செய்த்தது.

கடுப்பான அந்த அன்னை அவளுக்குரிய பாஷையில் “ஏய் சாவ அடிச்சுடுவேன்” என்று தன் முகத்தை அஷ்ட கோணலுடன் கூறினாள்..
அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் அக்குழந்தை விழித்தது. தந்தையும் எதுவும் பேசாமல் இருந்தார்.

இதே கெ(கே)ட்ட வார்த்தையை தான் நாளை இக்குழந்தை மற்ற இடத்திலும் பிறயோகிக்கும்.

யாருக்கு தெரியும் ? சிவா,சிவா என்று
எதிர்காலத்தில் நீங்கள்
“சங்கரா புராணம்” பார்க்கும் வயதில்
இதே வார்த்தையை உங்களிடமே கூறி உங்களை உரைய வைக்கலாம்.

கெட்ட வார்த்தை களை தவிர்ப்போம்
இவண்
ராஜா.க
ஒரு பிரபலமான ஜவுளி கடையில் நடந்த சம்பவம்.
 Lift உதவியுடன் 5வது மாடிக்கு செல்கையில் ஒரு அழகான பெண் குழந்தை அதற்குறிய பாணியில் அதன் அன்னையை இம்சை செய்த்தது.

கடுப்பான அந்த அன்னை அவளுக்குரிய பாஷையில் “ஏய் சாவ அடிச்சுடுவேன்” என்று தன் முகத்தை அஷ்ட கோணலுடன் கூறினாள்..
அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் அக்குழந்தை விழித்தது. தந்தையும் எதுவும் பேசாமல் இருந்தார்.

இதே கெ(கே)ட்ட வார்த்தையை தான் நாளை இக்குழந்தை மற்ற இடத்திலும் பிறயோகிக்கும்.

யாருக்கு தெரியும் ? சிவா,சிவா என்று
எதிர்காலத்தில் நீங்கள்
“சங்கரா புராணம்” பார்க்கும் வயதில்
இதே வார்த்தையை உங்களிடமே கூறி உங்களை உரைய வைக்கலாம்.

கெட்ட வார்த்தை களை தவிர்ப்போம்
இவண்
ராஜா.க

வியாழன், 13 பிப்ரவரி, 2020

மசால் தோசையும் , Arranged Marriage ம்

மசால் தோசையும் ,
Arranged Marriage ம்

உள்துறை அமைச்சர் (மனைவி) உடன் வெளியே சென்றிருந்தேன்;
பார் புகழும் "அண்ணா சாலை"யில் நீண்ட நேர பயணத்தில்  சற்று இளைப்பாற ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் சென்றோம்.

இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுக்க பிரித்து பார்த்தேன்; வடிவேலு ஒரு படத்தில் கூறுவாரே Veg Roll, Spring Roll, என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்ற வழிய பாருங்கப்பானு சொல்லுவாரு.
அது போல அத்தனை வகைகள் இருந்தது மெனுக்கார்டில்.

சிறு வயது முதல் இன்று வரை எனக்கு Veg Puff மீது பிரியம் அதை ஆர்டர் செய்ய, உள்துறை அமைச்சரோ waiter இடம் ஆங்கிலத்தில் உரையாடி கேக் ஆர்டர் செய்தார்.

உங்களுக்கு Pineapple Pastry
கேக் பிடிக்காதா என கேட்க,
இப்படில்லாம் கேக் இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும் என நான் கூற, எப்ப பாரு கிண்டல்,நக்கல் என மறுமுனையில்.

சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது; எடுத்து பார்த்தேன் சிறிய அதிர்ச்சி  கேக் 99₹ என்று இருந்தது, ஏய் ஒரு கேக் 99₹  ஆ !!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt என மனசுக்குள் கேட்டு;

இந்த ரூபாய்க்கு ஒரு மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே கூற;
இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் "arranged marriage" ஆச்சு னு என உள்துறை அமைச்சர் கூற

சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,
" சொல்லால் அடித்த சுந்தரி " என விஜயகாந்தை போல் இளையராஜா பாடலை பாடி பில்லை கட்டி நடையை கட்டினோம்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

இவன்
ராஜா.க
மசால் தோசையும் ,
Arranged Marriage ம்

உள்துறை அமைச்சர் (மனைவி) உடன் வெளியே சென்றிருந்தேன்;
பார் புகழும் "அண்ணா சாலை"யில் நீண்ட நேர பயணத்தில்  சற்று இளைப்பாற ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் சென்றோம்.

இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுக்க பிரித்து பார்த்தேன்; வடிவேலு ஒரு படத்தில் கூறுவாரே Veg Roll, Spring Roll, என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்ற வழிய பாருங்கப்பானு சொல்லுவாரு.
அது போல அத்தனை வகைகள் இருந்தது மெனுக்கார்டில்.

சிறு வயது முதல் இன்று வரை எனக்கு Veg Puff மீது பிரியம் அதை ஆர்டர் செய்ய, உள்துறை அமைச்சரோ waiter இடம் ஆங்கிலத்தில் உரையாடி கேக் ஆர்டர் செய்தார்.

உங்களுக்கு Pineapple Pastry
கேக் பிடிக்காதா என கேட்க,
இப்படில்லாம் கேக் இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும் என நான் கூற, எப்ப பாரு கிண்டல்,நக்கல் என மறுமுனையில்.

சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது; எடுத்து பார்த்தேன் சிறிய அதிர்ச்சி  கேக் 99₹ என்று இருந்தது, ஏய் ஒரு கேக் 99₹  ஆ !!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt என மனசுக்குள் கேட்டு;

இந்த ரூபாய்க்கு ஒரு மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே கூற;
இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் "arranged marriage" ஆச்சு னு என உள்துறை அமைச்சர் கூற

சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,
" சொல்லால் அடித்த சுந்தரி " என விஜயகாந்தை போல் இளையராஜா பாடலை பாடி பில்லை கட்டி நடையை கட்டினோம்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

இவன்
ராஜா.க

சனி, 8 பிப்ரவரி, 2020

வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
சிற்றருவி, தண்ணீர் இல்லாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!

எல்லா அருவிகளிலும் குளித்த பிற்பாடு இந்த சிற்றருவியில்   குளித்தால் தான் ஒரு finishing touch கிடைக்கும்.

காலத்தின் கோலம்;
வறட்சி சிற்றருவியையும் இன்று விட்டு வைக்கவில்லை..

அன்று பழமுதிர் தோட்டம் அருவி,
நேற்று செண்பகாதேவி அருவி,
இன்று சிற்றருவி..
நாளை ?

 #Courtallam | #Chitraruvi
வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
சிற்றருவி, தண்ணீர் இல்லாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!

எல்லா அருவிகளிலும் குளித்த பிற்பாடு இந்த சிற்றருவியில்   குளித்தால் தான் ஒரு finishing touch கிடைக்கும்.

காலத்தின் கோலம்;
வறட்சி சிற்றருவியையும் இன்று விட்டு வைக்கவில்லை..

அன்று பழமுதிர் தோட்டம் அருவி,
நேற்று செண்பகாதேவி அருவி,
இன்று சிற்றருவி..
நாளை ?

 #Courtallam | #Chitraruvi

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

வைரமுத்துக்கள்

ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.

விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு.

வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.
ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும்.

அதில் சில பாடல் வரிகள். 

பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்)

வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,

பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா)

வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..

பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)

வரிகள் : கொஞ்சம் கடவுள்,
கொஞ்சம் மிருகம்

பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)

வரிகள் : கடவுள் பாதி,
மிருகம் பாதி..

பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே

வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.
உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.

பாடல் : இளமை விடுகதை (வரலாறு)

மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,
பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..

வைரமுத்துகளுடன்
ராஜா.க
ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.

விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு.

வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.
ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும்.

அதில் சில பாடல் வரிகள். 

பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்)

வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,

பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா)

வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..

பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)

வரிகள் : கொஞ்சம் கடவுள்,
கொஞ்சம் மிருகம்

பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)

வரிகள் : கடவுள் பாதி,
மிருகம் பாதி..

பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே

வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.
உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.

பாடல் : இளமை விடுகதை (வரலாறு)

மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,
பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..

வைரமுத்துகளுடன்
ராஜா.க

செவ்வாய், 14 ஜனவரி, 2020

அஜித்தின் அது !!!

இது போன்றதொறு பொங்கல் திருநாளில் தல அஜித் தின் ரெட் படம் வெளியானது. எங்கள் ஊர் (திருச்செந்தூர்) அருகில் உள்ள ஆத்தூர் பம்பையா திரையரங்கில் திரையிட்டிருந்தார்கள்.

எதற்கும் கவலைப்படா கல்லூரி காலம் அது. முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் மேட்னி ஷோக்கு தான் டிக்கெட் கிடைத்தது. நண்பர்கள் படை சூழ திரையரங்கம் சென்றாயிற்று.

இந்த டிவிட்டர், facebook,movie review என்று எதுவும் இல்லா ஒரு காலம் அது. தேனீசை தென்றல் தேவா வின் இசையில் ஏற்கனவே பாடல்கள் எல்லாம் ஹிட். மேலும்
அத்திரைப் படத்தில்  தல யின் ஹேர் ஸ்டைல் (ரெட் கட்டிங் ரொம்ப பேஷன்) என தன் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது.

அஜித்தின் (அப்போதைய) ஆஸ்தான தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உலகநாயகன் கமலின் P K S படத்திற்கு போட்டியாக வெளியிட்டுருந்தார்.

அடித்து,பிடித்து தியேட்டர் க்குள் சென்றாயிற்று, திரையிலிருந்து வரும் ஒலியை விட திரைக்குள் இருக்கும் ஒலி பலமாக இருந்தது. அஜித்தின் இன்ட்ரோ வெல்லாம் அட்டகாசமாக இருக்கும். ஆர்வத்தில் சீட்டின் மேல்  எல்லாம் ஏறி  நின்றார்கள்.  அஜித் என்ன பேசினாலும் பயங்கர கத்தல்.

அடேய் அவர் பேசுவதை கேட்க விடுங்கடா (மைண்ட் வாய்ஸ்,) நண்பனிடமே கேட்டு விட்டேன் என்ன டா பஞ்ச் டயலாக் என்று ?
நண்பன்  "அது" என்றான்.
எது என்றேன் "அது" இது தான் பஞ்ச் என்றான். இதுக்கு மேல கேட்டால் நம்மை கடித்து விடுவான் என மனதிற்குள் சொல்லி கொண்டேன்.

பாடல்களுக்கெல்லாம்( கண்ணை கசக்கும் சூரியன்,ரோஜா காடு, ஒல்லி  குச்சி ஒடம்பு காரி) தல யை விட ரசிகர்களின் ஆட்டம் உக்கிரமாக இருந்தது.

நேரம் செல்ல ,செல்ல சத்தம் கம்மியானது. இரண்டாம் பாதியில் அனைவரும் சைலண்ட் மோட்.  அமைதியாக படம் பார்த்தோம்.

முழுக்க முழுக்க அஜித்தின் மாஸ் மற்றும் தல ரசிகர்களை திருப்தி படுத்த இயக்குனர் ராம் சத்யா இன்றைய சிங்கம் புலி நடிகர்  எடுத்த படம் எதற்கோ பெயரை மாற்றி கொண்டார்.

இறுதி காட்சியில் "தாய் மடியை தேடுகிறேன்" என ஒரு அருமையான மெலடி பாடல் ஒன்று இருக்கும்,ஏனோ அது சூப்பர் ஹிட் ஆகல முடிந்தால் இப்போது கேளுங்கள்.

படம் முடிந்து வெளியே வருகையில் அடுத்த காட்சி க்கு தயாராக இருந்தது தலையின் படை.  அதில் ஒருவர் என்னிடம் வந்து படம் சூப்பரா ? என கேட்க; அவர் கண்களில் இருந்த ஏக்கம் என்னை உண்மையை மறைத்து கொள் என்றது.
எதுவும் பேசாமல் விரல்களால் 👌🏼👌🏼சொல்லிவிட்டு Esc.

நினைவுகளுடன்
ராஜா க

இது போன்றதொறு பொங்கல் திருநாளில் தல அஜித் தின் ரெட் படம் வெளியானது. எங்கள் ஊர் (திருச்செந்தூர்) அருகில் உள்ள ஆத்தூர் பம்பையா திரையரங்கில் திரையிட்டிருந்தார்கள்.

எதற்கும் கவலைப்படா கல்லூரி காலம் அது. முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் மேட்னி ஷோக்கு தான் டிக்கெட் கிடைத்தது. நண்பர்கள் படை சூழ திரையரங்கம் சென்றாயிற்று.

இந்த டிவிட்டர், facebook,movie review என்று எதுவும் இல்லா ஒரு காலம் அது. தேனீசை தென்றல் தேவா வின் இசையில் ஏற்கனவே பாடல்கள் எல்லாம் ஹிட். மேலும்
அத்திரைப் படத்தில்  தல யின் ஹேர் ஸ்டைல் (ரெட் கட்டிங் ரொம்ப பேஷன்) என தன் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது.

அஜித்தின் (அப்போதைய) ஆஸ்தான தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உலகநாயகன் கமலின் P K S படத்திற்கு போட்டியாக வெளியிட்டுருந்தார்.

அடித்து,பிடித்து தியேட்டர் க்குள் சென்றாயிற்று, திரையிலிருந்து வரும் ஒலியை விட திரைக்குள் இருக்கும் ஒலி பலமாக இருந்தது. அஜித்தின் இன்ட்ரோ வெல்லாம் அட்டகாசமாக இருக்கும். ஆர்வத்தில் சீட்டின் மேல்  எல்லாம் ஏறி  நின்றார்கள்.  அஜித் என்ன பேசினாலும் பயங்கர கத்தல்.

அடேய் அவர் பேசுவதை கேட்க விடுங்கடா (மைண்ட் வாய்ஸ்,) நண்பனிடமே கேட்டு விட்டேன் என்ன டா பஞ்ச் டயலாக் என்று ?
நண்பன்  "அது" என்றான்.
எது என்றேன் "அது" இது தான் பஞ்ச் என்றான். இதுக்கு மேல கேட்டால் நம்மை கடித்து விடுவான் என மனதிற்குள் சொல்லி கொண்டேன்.

பாடல்களுக்கெல்லாம்( கண்ணை கசக்கும் சூரியன்,ரோஜா காடு, ஒல்லி  குச்சி ஒடம்பு காரி) தல யை விட ரசிகர்களின் ஆட்டம் உக்கிரமாக இருந்தது.

நேரம் செல்ல ,செல்ல சத்தம் கம்மியானது. இரண்டாம் பாதியில் அனைவரும் சைலண்ட் மோட்.  அமைதியாக படம் பார்த்தோம்.

முழுக்க முழுக்க அஜித்தின் மாஸ் மற்றும் தல ரசிகர்களை திருப்தி படுத்த இயக்குனர் ராம் சத்யா இன்றைய சிங்கம் புலி நடிகர்  எடுத்த படம் எதற்கோ பெயரை மாற்றி கொண்டார்.

இறுதி காட்சியில் "தாய் மடியை தேடுகிறேன்" என ஒரு அருமையான மெலடி பாடல் ஒன்று இருக்கும்,ஏனோ அது சூப்பர் ஹிட் ஆகல முடிந்தால் இப்போது கேளுங்கள்.

படம் முடிந்து வெளியே வருகையில் அடுத்த காட்சி க்கு தயாராக இருந்தது தலையின் படை.  அதில் ஒருவர் என்னிடம் வந்து படம் சூப்பரா ? என கேட்க; அவர் கண்களில் இருந்த ஏக்கம் என்னை உண்மையை மறைத்து கொள் என்றது.
எதுவும் பேசாமல் விரல்களால் 👌🏼👌🏼சொல்லிவிட்டு Esc.

நினைவுகளுடன்
ராஜா க

சனி, 11 ஜனவரி, 2020

தன் அடையாளம் மறகிறானா தமிழன்...

தீபாவளி பண்டிகை க்கு முந்தைய வாரங்களில்( குறிப்பாக கடைசி இரு நாட்களுக்கு முன் )கடை தெருக்களுக்கு செல்வது வழக்கம், அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழியும் குறிப்பாக துணி கடைகளில் பல அதிரடி offer களை காணலாம்.

துணி கடைகள் மட்டுமின்றி நகை கடை, ஸ்விட் (லாலா) கடைகள் வரைக்கும் இது பொருந்தும். அனைவரும் இது போன்றதொரு உணர்வை உணர்திருப்போம்.

இது வரையில் பொங்கலுக்கு புது துணி எடுத்தது கிடையாது. சரி இந்த முறை ஒரு மாற்றத்திற்காக எடுப்போம் என்று பொங்கலுக்கு முந்தைய நாட்களில்  கடைகளுக்கு சென்றேன், சற்று சிறிய அதிர்ச்சி. தீபாவளி பண்டிகையை போல் அல்லாமல்  குறைவான மக்கள் நடமாட்டமே இருந்தது. அதிரடி offer களையும் காணமுடியவில்லை.

ஒரு காலத்தில் பொங்கலுக்கு தான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் புது துணி எடுத்து மகிழ்ச்சி  பொங்க பொங்கல் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.

ஒருவேளை சென்னை போன்ற பெருநகரங்களில் பொங்கலுக்கு,  தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொடுக்கவில்லையா ? இல்லை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் ஆட்சி மாற்றத்தை போல மாறுகின்ற கலாச்சார மாற்றமா ? இல்லை உலக மயமாக்கலுக்கு  பிறகு( 1991க்கு பிறகு) பெருகி வரும் பண்டிகைகளால்( New Year, Christmas, ஆடிக்கழிவு, weekend shopping) இவற்றின் வருகைகளுக்கு அப்பால் தன் அடையாளம் மறக்கிறானா தமிழன் என என்ன தோன்றுகிறது.

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இவன்
ராஜா க
தீபாவளி பண்டிகை க்கு முந்தைய வாரங்களில்( குறிப்பாக கடைசி இரு நாட்களுக்கு முன் )கடை தெருக்களுக்கு செல்வது வழக்கம், அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழியும் குறிப்பாக துணி கடைகளில் பல அதிரடி offer களை காணலாம்.

துணி கடைகள் மட்டுமின்றி நகை கடை, ஸ்விட் (லாலா) கடைகள் வரைக்கும் இது பொருந்தும். அனைவரும் இது போன்றதொரு உணர்வை உணர்திருப்போம்.

இது வரையில் பொங்கலுக்கு புது துணி எடுத்தது கிடையாது. சரி இந்த முறை ஒரு மாற்றத்திற்காக எடுப்போம் என்று பொங்கலுக்கு முந்தைய நாட்களில்  கடைகளுக்கு சென்றேன், சற்று சிறிய அதிர்ச்சி. தீபாவளி பண்டிகையை போல் அல்லாமல்  குறைவான மக்கள் நடமாட்டமே இருந்தது. அதிரடி offer களையும் காணமுடியவில்லை.

ஒரு காலத்தில் பொங்கலுக்கு தான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் புது துணி எடுத்து மகிழ்ச்சி  பொங்க பொங்கல் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.

ஒருவேளை சென்னை போன்ற பெருநகரங்களில் பொங்கலுக்கு,  தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொடுக்கவில்லையா ? இல்லை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் ஆட்சி மாற்றத்தை போல மாறுகின்ற கலாச்சார மாற்றமா ? இல்லை உலக மயமாக்கலுக்கு  பிறகு( 1991க்கு பிறகு) பெருகி வரும் பண்டிகைகளால்( New Year, Christmas, ஆடிக்கழிவு, weekend shopping) இவற்றின் வருகைகளுக்கு அப்பால் தன் அடையாளம் மறக்கிறானா தமிழன் என என்ன தோன்றுகிறது.

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இவன்
ராஜா க

வியாழன், 9 ஜனவரி, 2020

தர்பார் என் பார்வையில்

பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா வின் சூப்பர் ஸ்டார் படத்திற்கு (தர்பார்) முதல் நாள் டிக்கெட் கிடைத்தது. அப்பொழுதே சிறிது சந்தேகம் எழுந்தது இருந்தாலும் உற்சாகத்துடன் திரையரங்கம் சென்றாயிற்று.

எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல்  சீட்டில் அமர்ந்தபின் சுற்றும் முற்றும் பார்த்தேன், பல இருக்கைகள் காலியிருந்தது. ஆகா சிக்கிட்டோம் போல, என்றது மைண்ட் வாய்ஸ்.

மகளை கொலை செய்த வில்லன்களை கொல்ல துடிக்கும்  தந்தை யின் கதை.
யார் கொலை செய்தார் என்று தெரியாமல் அனைத்து ரவுடிகளையும் encounter செய்கிறார் ரஜினி.

என்ன லைட்டா கஜினி ஸ்மெல் அடிக்குதா ஆமாம் அதில் சஞ்செய் ராமசாமி இதில் ஆதித்யா அருணாச்சலம் அவ்வளவே வித்யாசாம். அதற்காக ரஜினியிடம் இன்னொரு கஜினியை எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

மும்பையில் அதிகரிக்கும் Drugs விற்பனையை கட்டுப்படுத்த வருகிறார் கமிஷனர், துணை முதல்வரின் மகளை வில்லன்கள் கடத்துகிறார்கள் அப் பெண்களுடன் மேலும் பல பெண்களை காப்பற்றுகிறார், வில்லனை சிறை பிடிக்கிறார் பின் அவனை கொல்கிறார் இப்படியாக முதல் பாதி செல்கிறது.

சரி இரண்டாம் பாதி நன்றாக இருக்கும் நம்பினால் ஏமாற்றமே. ரஜினி படத்தில் வில்லன்கள் தான் ரஜினியின் பாதி பலமே இதில் வில்லன்களுக்கு வெறும் buildup தான் (international don) பட்டம் வேறு.

இந்த கதைக்கு யாரும் சொந்த கொண்டாடத போதே தெரிகிறது இப்படத்தில் கதையே இல்லையென்று.
யூகிக்க பட்ட திரை கதை அலுப்படைய செய்கிறது.

படத்தின் பலம்
ரஜினி,அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள், அனிருத் பின்னணி இசை அவ்வளவே.  நயன்தாரா எதற்கு ?

ரஜினியின் தர்பார் சும்மா கிழியுது !!!

#தர்பார் #Darbar
பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா வின் சூப்பர் ஸ்டார் படத்திற்கு (தர்பார்) முதல் நாள் டிக்கெட் கிடைத்தது. அப்பொழுதே சிறிது சந்தேகம் எழுந்தது இருந்தாலும் உற்சாகத்துடன் திரையரங்கம் சென்றாயிற்று.

எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல்  சீட்டில் அமர்ந்தபின் சுற்றும் முற்றும் பார்த்தேன், பல இருக்கைகள் காலியிருந்தது. ஆகா சிக்கிட்டோம் போல, என்றது மைண்ட் வாய்ஸ்.

மகளை கொலை செய்த வில்லன்களை கொல்ல துடிக்கும்  தந்தை யின் கதை.
யார் கொலை செய்தார் என்று தெரியாமல் அனைத்து ரவுடிகளையும் encounter செய்கிறார் ரஜினி.

என்ன லைட்டா கஜினி ஸ்மெல் அடிக்குதா ஆமாம் அதில் சஞ்செய் ராமசாமி இதில் ஆதித்யா அருணாச்சலம் அவ்வளவே வித்யாசாம். அதற்காக ரஜினியிடம் இன்னொரு கஜினியை எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

மும்பையில் அதிகரிக்கும் Drugs விற்பனையை கட்டுப்படுத்த வருகிறார் கமிஷனர், துணை முதல்வரின் மகளை வில்லன்கள் கடத்துகிறார்கள் அப் பெண்களுடன் மேலும் பல பெண்களை காப்பற்றுகிறார், வில்லனை சிறை பிடிக்கிறார் பின் அவனை கொல்கிறார் இப்படியாக முதல் பாதி செல்கிறது.

சரி இரண்டாம் பாதி நன்றாக இருக்கும் நம்பினால் ஏமாற்றமே. ரஜினி படத்தில் வில்லன்கள் தான் ரஜினியின் பாதி பலமே இதில் வில்லன்களுக்கு வெறும் buildup தான் (international don) பட்டம் வேறு.

இந்த கதைக்கு யாரும் சொந்த கொண்டாடத போதே தெரிகிறது இப்படத்தில் கதையே இல்லையென்று.
யூகிக்க பட்ட திரை கதை அலுப்படைய செய்கிறது.

படத்தின் பலம்
ரஜினி,அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள், அனிருத் பின்னணி இசை அவ்வளவே.  நயன்தாரா எதற்கு ?

ரஜினியின் தர்பார் சும்மா கிழியுது !!!

#தர்பார் #Darbar