சனி, 26 ஆகஸ்ட், 2023

தங்கமும் , நண்பனும் !!

 தங்கம் வாங்கிய அனுபவம்



சில , பல வருடங்களுக்கு முன்பு என் நண்பன் தன் மனைவிக்கு மோதிரம் வாங்க GRT க்கு அழைத்து சென்றான். எனக்கு பேரம் லாம் பேச தெரியாது , நீ எவ்வளவு குறைத்து வாங்கி தந்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்றான். சரி பார்த்து கொள்ளலாம் வா என்று உள்ளே சென்றாயிற்று. 


அரை பவுன் மோதிரம் எடுத்தான்.

ஏன் டா , ஒரு பவுனுக்காவது வாங்க வேண்டாமா உன் மாமனார் நில சுவந்தார் என்றேன். நண்பனின் மனைவிக்கு ஒரு பெருமிதம்.

விடுங்க அண்ணா அவர் வாங்கி தருவதே பெரிய விஷயம் என்றார்கள்.

6 கிராம் க்கு வாங்கிங்கோ , சுக்கிரன் நம்பர் என்றேன். 

உன்னையே கூட்டிட்டு வந்ததுக்கு.

உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நல்ல செய்யற டா என்றான்..



ஒரு வழியா மோதிரம் எடுத்தாயிற்று. Sales girl பேப்பரில் அன்றைய தங்கம் விலை , சேதராம் 14% , அது போக வரி எல்லாம் போட்டு ஒரு பில் கொடுத்தார்கள். நண்பன் ஷாக் என்னடா இவ்ளோ வருது என்றான். பேசலாம் வாடா என்று supervisor சென்றோம்.



போல ஒரு supervisor , அவர்  பேசி விட்டு 1% குறைத்து 13% என்றார்.  நான் சிரித்து கொண்டே இது எப்படி சார் ,இப்போ எவ்வளவு குறைந்துள்ளது என்றேன் பெரிய வித்தியாசம் இல்லையே என்றேன். 

நீங்க் எவ்ளோ எதிர்பார்க்கிறீர்கள் என்றார் நான் 6 to 7 % என்றேன். இப்போ அவர் சிரித்தார் என்ன சார் ?



அவளோ லாம் குறைக்க முடியாது என்றார். நான் ஏன் சார் ,உங்கள் 15% க்கு உண்டான ரூபாய் க்கு இன்றைய தங்கம் (3/4) முக்கால் கிராம் சேதாரம் வருது. நான் எடுத்த 6 கிராம் க்கு முக்கால் கிராம் தங்கம் னா எப்படி சார் முடியும். 

சார் டிசைன் அப்படி சார் என்றார். 

நான் சிரித்து கொண்டே இதில் என்ன டிசைன் இருக்கு.  சாதாரண சின்ன வளையம் ,அதுக்கு தான் 7% தாரேனே என்றேன். 



பதிலுக்கு அவர் , சார்  கொஞ்சம் நியாயமா பேசுங்க சார் என்றார். சார் , இந்த பாருங்க நம்ம கடையில் தங்கம் quality அதில் மாற்று கருத்து இல்லை. அது போக இவன் என் நண்பன் இப்போது தான் தங்கம் வாங்க ஆரம்பித்து உள்ளான்.

நீங்கள் இந்த மாதிரி பண்ணின தங்கம் பற்றிய பயம் தான் இருக்கும் , மாசா மாசம் அவன் லாம் வாங்க மாட்டான். 



உங்க பேச்சு வைச்சு தெரியுது நீங்க் திருநெல்வேலி தான் ,நம்ம MH ஜூவல்லரி எவ்ளோ குறைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா என்றேன். அவர் என்னை பார்த்து சார் என்னலா அவ்ளோ குறைக்க முடியாது.என்றார் , என்ன சார் நீங்க பிரம்மா நினைச்சா ஆயுசுக்கா பஞ்சம் என்றேன். சிரித்து விட்டார். நீங்க் திருநெல்வேலி எங்க என கேட்க , எனக்கு திருச்செந்தூர் சார் என்றேன்.  இறுதியில் சார் முதல் முறை அப்படி னு 9% வந்தார். 



எல்லாம் பில் போட்டு வாங்கி கொண்டு வெளியே வந்தோம். என் நண்பன் நீ , பேரம் பேசியதை பார்த்து எனக்கு பயம் வந்து விட்டது எங்கே நம்மை திட்டி விடுவாரோ என்றான். 

ஏன் டா ?  நம் தங்கம் நம் உரிமை என்று பிரபு குரலில் கூறினேன். ஆனால் இபோதுலாம் GRT இல் குறை க்க மாட்டார்கள் என கேள்வி பட்டேன். தங்கம் வாங்க ஒரு regular கடையை பிடித்து கொள்ள வேண்டும். அவ்ளோ தான்.


இவன் 

ராஜா.க




 தங்கம் வாங்கிய அனுபவம்



சில , பல வருடங்களுக்கு முன்பு என் நண்பன் தன் மனைவிக்கு மோதிரம் வாங்க GRT க்கு அழைத்து சென்றான். எனக்கு பேரம் லாம் பேச தெரியாது , நீ எவ்வளவு குறைத்து வாங்கி தந்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்றான். சரி பார்த்து கொள்ளலாம் வா என்று உள்ளே சென்றாயிற்று. 


அரை பவுன் மோதிரம் எடுத்தான்.

ஏன் டா , ஒரு பவுனுக்காவது வாங்க வேண்டாமா உன் மாமனார் நில சுவந்தார் என்றேன். நண்பனின் மனைவிக்கு ஒரு பெருமிதம்.

விடுங்க அண்ணா அவர் வாங்கி தருவதே பெரிய விஷயம் என்றார்கள்.

6 கிராம் க்கு வாங்கிங்கோ , சுக்கிரன் நம்பர் என்றேன். 

உன்னையே கூட்டிட்டு வந்ததுக்கு.

உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நல்ல செய்யற டா என்றான்..



ஒரு வழியா மோதிரம் எடுத்தாயிற்று. Sales girl பேப்பரில் அன்றைய தங்கம் விலை , சேதராம் 14% , அது போக வரி எல்லாம் போட்டு ஒரு பில் கொடுத்தார்கள். நண்பன் ஷாக் என்னடா இவ்ளோ வருது என்றான். பேசலாம் வாடா என்று supervisor சென்றோம்.



போல ஒரு supervisor , அவர்  பேசி விட்டு 1% குறைத்து 13% என்றார்.  நான் சிரித்து கொண்டே இது எப்படி சார் ,இப்போ எவ்வளவு குறைந்துள்ளது என்றேன் பெரிய வித்தியாசம் இல்லையே என்றேன். 

நீங்க் எவ்ளோ எதிர்பார்க்கிறீர்கள் என்றார் நான் 6 to 7 % என்றேன். இப்போ அவர் சிரித்தார் என்ன சார் ?



அவளோ லாம் குறைக்க முடியாது என்றார். நான் ஏன் சார் ,உங்கள் 15% க்கு உண்டான ரூபாய் க்கு இன்றைய தங்கம் (3/4) முக்கால் கிராம் சேதாரம் வருது. நான் எடுத்த 6 கிராம் க்கு முக்கால் கிராம் தங்கம் னா எப்படி சார் முடியும். 

சார் டிசைன் அப்படி சார் என்றார். 

நான் சிரித்து கொண்டே இதில் என்ன டிசைன் இருக்கு.  சாதாரண சின்ன வளையம் ,அதுக்கு தான் 7% தாரேனே என்றேன். 



பதிலுக்கு அவர் , சார்  கொஞ்சம் நியாயமா பேசுங்க சார் என்றார். சார் , இந்த பாருங்க நம்ம கடையில் தங்கம் quality அதில் மாற்று கருத்து இல்லை. அது போக இவன் என் நண்பன் இப்போது தான் தங்கம் வாங்க ஆரம்பித்து உள்ளான்.

நீங்கள் இந்த மாதிரி பண்ணின தங்கம் பற்றிய பயம் தான் இருக்கும் , மாசா மாசம் அவன் லாம் வாங்க மாட்டான். 



உங்க பேச்சு வைச்சு தெரியுது நீங்க் திருநெல்வேலி தான் ,நம்ம MH ஜூவல்லரி எவ்ளோ குறைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா என்றேன். அவர் என்னை பார்த்து சார் என்னலா அவ்ளோ குறைக்க முடியாது.என்றார் , என்ன சார் நீங்க பிரம்மா நினைச்சா ஆயுசுக்கா பஞ்சம் என்றேன். சிரித்து விட்டார். நீங்க் திருநெல்வேலி எங்க என கேட்க , எனக்கு திருச்செந்தூர் சார் என்றேன்.  இறுதியில் சார் முதல் முறை அப்படி னு 9% வந்தார். 



எல்லாம் பில் போட்டு வாங்கி கொண்டு வெளியே வந்தோம். என் நண்பன் நீ , பேரம் பேசியதை பார்த்து எனக்கு பயம் வந்து விட்டது எங்கே நம்மை திட்டி விடுவாரோ என்றான். 

ஏன் டா ?  நம் தங்கம் நம் உரிமை என்று பிரபு குரலில் கூறினேன். ஆனால் இபோதுலாம் GRT இல் குறை க்க மாட்டார்கள் என கேள்வி பட்டேன். தங்கம் வாங்க ஒரு regular கடையை பிடித்து கொள்ள வேண்டும். அவ்ளோ தான்.


இவன் 

ராஜா.க




வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

தலைநகரம்2 விமர்சனம்

 



சென்னை யில் மூன்று Gangsters (வட , மத்திய , தென் சென்னை) மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடுவுல இந்த கௌசிக் வந்தா , என்கிற மாதிரி ரைட் (ரிட்டயர் ரவுடி)வந்து அனைவரையும் கொலை செய்து சென்னையின் ஒரே ரவுடி நான் தான் என்கிறான்.

முகவரி , தொட்டி ஜெயா , படங்களின் இயக்குனர் V.Z.durai இயக்கியுள்ளார்.
ரைட் டாக இயக்குனர் சுந்தர் C. இறுகிய முகம் , வேஷ்டி ,சட்டையில் அதகளம் செய்கிறார்.
முதல் பாதி விறு விறுப்பு. இரண்டாம் பாதி இழுவை.
பாடல்கள் / காமெடி சேர்ந்திருந்தால் நல்ல கமர்ஷியல் படமாக இருந்திருக்கும்.

#தலைநகரம்2 #சுந்தர் #தலைநகரம்

 



சென்னை யில் மூன்று Gangsters (வட , மத்திய , தென் சென்னை) மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடுவுல இந்த கௌசிக் வந்தா , என்கிற மாதிரி ரைட் (ரிட்டயர் ரவுடி)வந்து அனைவரையும் கொலை செய்து சென்னையின் ஒரே ரவுடி நான் தான் என்கிறான்.

முகவரி , தொட்டி ஜெயா , படங்களின் இயக்குனர் V.Z.durai இயக்கியுள்ளார்.
ரைட் டாக இயக்குனர் சுந்தர் C. இறுகிய முகம் , வேஷ்டி ,சட்டையில் அதகளம் செய்கிறார்.
முதல் பாதி விறு விறுப்பு. இரண்டாம் பாதி இழுவை.
பாடல்கள் / காமெடி சேர்ந்திருந்தால் நல்ல கமர்ஷியல் படமாக இருந்திருக்கும்.

#தலைநகரம்2 #சுந்தர் #தலைநகரம்

வல்லரசும் - காவிரி நீரும்

 

August 25 - Vijayakanth Birthday




புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்

#வல்லரசு
இந்த படம் பிடிக்க ஒரு காரணம். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சி.
ஒரு MP யை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் நினைப்பார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி கேட்பார் ஏன் MP யைஎன்று ?
அதற்கு கேப்டன் கூறுவார்
சென்னை க்கு வருவது மைசூர் சேர்ந்த MP நஞ்சுச்சுண்டேஸ்வரா

அவர் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு க்கு காவிரி நீர் கொடுக்க கூடாது என கூறினார். அவர் இங்கு வருகையில் அவருக்கு எதாவது ஆபத்து என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் கலவரம் என்று கூறுவார்.

ஒரு வழியா அந்த MP காப்பாற்றி விடுவார் கேப்டன். Airport இல் இருக்கும் security system பார்த்து விட்டு அந்த MP கேட்பார் , எனக்கு பிறகு பிரதமர் யாரும் வராரார்களா என அவர் கேட்பார் ? இல்லை உங்களுக்கு  தான் பாதுகாப்பு ,

உங்களை கொல்ல வந்த தீவிரவாதியை கொன்று விட்டோம் என கூறுவார்கள். அப்போது அந்த MP விஜயகாந்த் இடத்தில் கூறுவார்.
உன் ஒருவனுக்காவது காவிரி தண்ணீர் தர சொல்கிறேன் என்பார். காமெடி யாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமா கைகளை தட்டி ரசித்த பார்த்த காட்சி.
இன்று Augest 25
விஜயகாந்த் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

#வல்லரசு
#HBDVijayakanth #Vijayakanth

 

August 25 - Vijayakanth Birthday




புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்

#வல்லரசு
இந்த படம் பிடிக்க ஒரு காரணம். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சி.
ஒரு MP யை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் நினைப்பார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி கேட்பார் ஏன் MP யைஎன்று ?
அதற்கு கேப்டன் கூறுவார்
சென்னை க்கு வருவது மைசூர் சேர்ந்த MP நஞ்சுச்சுண்டேஸ்வரா

அவர் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு க்கு காவிரி நீர் கொடுக்க கூடாது என கூறினார். அவர் இங்கு வருகையில் அவருக்கு எதாவது ஆபத்து என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் கலவரம் என்று கூறுவார்.

ஒரு வழியா அந்த MP காப்பாற்றி விடுவார் கேப்டன். Airport இல் இருக்கும் security system பார்த்து விட்டு அந்த MP கேட்பார் , எனக்கு பிறகு பிரதமர் யாரும் வராரார்களா என அவர் கேட்பார் ? இல்லை உங்களுக்கு  தான் பாதுகாப்பு ,

உங்களை கொல்ல வந்த தீவிரவாதியை கொன்று விட்டோம் என கூறுவார்கள். அப்போது அந்த MP விஜயகாந்த் இடத்தில் கூறுவார்.
உன் ஒருவனுக்காவது காவிரி தண்ணீர் தர சொல்கிறேன் என்பார். காமெடி யாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமா கைகளை தட்டி ரசித்த பார்த்த காட்சி.
இன்று Augest 25
விஜயகாந்த் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

#வல்லரசு
#HBDVijayakanth #Vijayakanth

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

குன்றத்தூர் முருகனும் , நானும் !!




 என்ன முருகா ?

உன்னை இன்று நான் காண வேண்டும் என நினைத்தை போல பலரையும் நினைத்துள்ளாய் போல ? இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நல்ல கூட்டம்.


நண்பன் : அது என்ன எப்படி அவர் காண வேண்டும் என நினைத்தால் தான் முடியுமா ? 

நான் : அட ஆமாம் பா , அவர் அப்படி தான். 

நண்பன் : உனக்கு திருச்செந்தூர் தானே , நீ நினைத்தால் எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து விடலாமே ? பிறகு என்ன..


நான் : உன்னை போல தான் ஒரு முறை நானும் , நம்மூர் காரர் தானே எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம் (மனதிற்குள் அகங்காரம்) என நினைத்து சென்னையில் இருந்து வெள்ளி கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை காலை ஊருக்கு செல்வோம். காலை சுப்ரமணியசுவாமி சந்திப்போம் என்று திட்டம்.



வெள்ளி இரவு திட்டமிட்டபடி பயணபட்டு சனிக்கிழமை காலை ஊருக்கு வந்து வீட்டிற்கு சென்றேன். வாப்பா வா, என்ன திடீர் விஜயம் என் வீட்டில் கேட்க உங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படி நம்ம சுப்ரமணிய சுவாமி யையும் , ஷண்முகரையும் பார்க்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் சிறிது ஷாக்.



என்ன ? என நான் கேட்க , நம் சொந்தக்காரர் களில் ஒருவர் (வயதானவர்) இன்று காலை தான் இறந்தார். அதனால் 10 நாட்கள் நாம் எந்த கோயிலுக்கும் செல்ல கூடாது என்றார்கள். திட்டம் எல்லாம் பனால் , மனதில் உள்ள அகங்காரம் சுக்கு நூறானது. அன்று முதல் அவர் (முருகன்) நினைத்தால் தான் அவரை காண முடியும் என உணர்ந்தேன். 


 நன்பனிடம் இந்த கதையை கூறி குன்றத்தூரிலிருந்து விடை பெற்றோம்.

 

இவன்

ராஜா.க

#குன்றத்தூர் #Kundrathur #Muruga #Tiruchendur 





 என்ன முருகா ?

உன்னை இன்று நான் காண வேண்டும் என நினைத்தை போல பலரையும் நினைத்துள்ளாய் போல ? இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நல்ல கூட்டம்.


நண்பன் : அது என்ன எப்படி அவர் காண வேண்டும் என நினைத்தால் தான் முடியுமா ? 

நான் : அட ஆமாம் பா , அவர் அப்படி தான். 

நண்பன் : உனக்கு திருச்செந்தூர் தானே , நீ நினைத்தால் எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து விடலாமே ? பிறகு என்ன..


நான் : உன்னை போல தான் ஒரு முறை நானும் , நம்மூர் காரர் தானே எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம் (மனதிற்குள் அகங்காரம்) என நினைத்து சென்னையில் இருந்து வெள்ளி கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை காலை ஊருக்கு செல்வோம். காலை சுப்ரமணியசுவாமி சந்திப்போம் என்று திட்டம்.



வெள்ளி இரவு திட்டமிட்டபடி பயணபட்டு சனிக்கிழமை காலை ஊருக்கு வந்து வீட்டிற்கு சென்றேன். வாப்பா வா, என்ன திடீர் விஜயம் என் வீட்டில் கேட்க உங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படி நம்ம சுப்ரமணிய சுவாமி யையும் , ஷண்முகரையும் பார்க்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் சிறிது ஷாக்.



என்ன ? என நான் கேட்க , நம் சொந்தக்காரர் களில் ஒருவர் (வயதானவர்) இன்று காலை தான் இறந்தார். அதனால் 10 நாட்கள் நாம் எந்த கோயிலுக்கும் செல்ல கூடாது என்றார்கள். திட்டம் எல்லாம் பனால் , மனதில் உள்ள அகங்காரம் சுக்கு நூறானது. அன்று முதல் அவர் (முருகன்) நினைத்தால் தான் அவரை காண முடியும் என உணர்ந்தேன். 


 நன்பனிடம் இந்த கதையை கூறி குன்றத்தூரிலிருந்து விடை பெற்றோம்.

 

இவன்

ராஜா.க

#குன்றத்தூர் #Kundrathur #Muruga #Tiruchendur 


புதன், 2 ஆகஸ்ட், 2023

ஜெய்லர் ட்ரைலர் !!

 ஒரு திரைப்படத்தின் இயக்குனர் தன் படங்களில் தனக்கான identity காட்டி கொள்வார். சில இயக்குனர்கள் மட்டும் இந்த பழக்கம் இருக்கும். அந்த சிலரில் நெல்சன்ஒருவர் @Nelsondilpkumar அந்த identity யாக நான் உணர்ந்தது. படத்தின் நாயகன் / நாயகி கொஞ்சம் இறுக்கமாக இருப்பர். அதிகம் பேச மாட்டார்க்கள்.



கோலவாவு கோகிலா தொடங்கி டாக்டர் , பீஸ்ட் வரை தொடர்ந்தது.  நயன்தாரா விற்கும் , சிவகார்திகேயனுக்கும் கச்சிதமாக பொருந்திய அந்த கதாபாத்திரம் விஜய் க்கும் பொருந்தியது.வர இருக்கும் #Jailer படத்திலும்  சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமும் அப்படி தான் உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் க்கு உரித்தான


Transformation இந்த படத்தில் பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் அனிருத் இசை மற்றும் பாடல்கள் , சன் pictures விளம்பரம் இதை எல்லாம் சேர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற brand எல்லாம் சேர்த்து அனைத்து ரசிகர்களையும் தியேட்டர் க்கு கண்டிப்பாக அழைத்து வரும்..



பீஸ்ட் கொடுத்த சிறு காயம் நெல்சனுக்கும் ,  நான் இருக்கும் வரை நான் தான்  சூப்பர் ஸ்டார் என்கிற energy யும் இரண்டும் சேர்ந்து ஒரு blockbuster படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் என்று வாழ்த்துவோம்.

#JailerTrailer 

#SuperstarRajinikanth 

#JailerFromAug10






 ஒரு திரைப்படத்தின் இயக்குனர் தன் படங்களில் தனக்கான identity காட்டி கொள்வார். சில இயக்குனர்கள் மட்டும் இந்த பழக்கம் இருக்கும். அந்த சிலரில் நெல்சன்ஒருவர் @Nelsondilpkumar அந்த identity யாக நான் உணர்ந்தது. படத்தின் நாயகன் / நாயகி கொஞ்சம் இறுக்கமாக இருப்பர். அதிகம் பேச மாட்டார்க்கள்.



கோலவாவு கோகிலா தொடங்கி டாக்டர் , பீஸ்ட் வரை தொடர்ந்தது.  நயன்தாரா விற்கும் , சிவகார்திகேயனுக்கும் கச்சிதமாக பொருந்திய அந்த கதாபாத்திரம் விஜய் க்கும் பொருந்தியது.வர இருக்கும் #Jailer படத்திலும்  சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமும் அப்படி தான் உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் க்கு உரித்தான


Transformation இந்த படத்தில் பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் அனிருத் இசை மற்றும் பாடல்கள் , சன் pictures விளம்பரம் இதை எல்லாம் சேர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற brand எல்லாம் சேர்த்து அனைத்து ரசிகர்களையும் தியேட்டர் க்கு கண்டிப்பாக அழைத்து வரும்..



பீஸ்ட் கொடுத்த சிறு காயம் நெல்சனுக்கும் ,  நான் இருக்கும் வரை நான் தான்  சூப்பர் ஸ்டார் என்கிற energy யும் இரண்டும் சேர்ந்து ஒரு blockbuster படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் என்று வாழ்த்துவோம்.

#JailerTrailer 

#SuperstarRajinikanth 

#JailerFromAug10