செவ்வாய், 28 ஏப்ரல், 2020

புரிதல்

புரிதல்  !!!

இன்று நடக்கும் பல குழப்பங்களுக்கு இது இல்லாததது தான் முதல் காரணமே. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.

என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் புரிதலுக்கு உண்டான சான்றுகள்..

செல்வா,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை.
யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம்.

சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE மாணவர்கள் 7 நபர்கள் தங்கும் பெரிய வீடு. கூட்டினுள் கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.

நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் அமர்ந்து வெட்டி கதை பேசி மகிழ்ந்த தருணம்.

ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் என முகத்தை சுறுக்க,

நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் அளவளாவியது ஒரு புறம்.

எங்கள் மூவருக்கும் உண்டான புரிதல் அன்று வெளிப்பட்ட தருணம். நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல்.

இரண்டாவது நிகழ்வு.

8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால்
A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார்.

நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை.
மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம்.

இந்த புரிதல் ஒருவருக்கு ஒருவர் இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.

புரிதலுடன்
ராஜா . க
புரிதல்  !!!

இன்று நடக்கும் பல குழப்பங்களுக்கு இது இல்லாததது தான் முதல் காரணமே. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.

என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் புரிதலுக்கு உண்டான சான்றுகள்..

செல்வா,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை.
யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம்.

சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE மாணவர்கள் 7 நபர்கள் தங்கும் பெரிய வீடு. கூட்டினுள் கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.

நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் அமர்ந்து வெட்டி கதை பேசி மகிழ்ந்த தருணம்.

ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் என முகத்தை சுறுக்க,

நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் அளவளாவியது ஒரு புறம்.

எங்கள் மூவருக்கும் உண்டான புரிதல் அன்று வெளிப்பட்ட தருணம். நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல்.

இரண்டாவது நிகழ்வு.

8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால்
A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார்.

நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை.
மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம்.

இந்த புரிதல் ஒருவருக்கு ஒருவர் இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.

புரிதலுடன்
ராஜா . க

சனி, 11 ஏப்ரல், 2020

IPl ம் மசாலாவும்

சினிமாவில மட்டுமல்ல எல்லாவற்றிலும்   மசாலா கேட்கறாங்க நம் மக்கள் என்று கூறுவார் நம்மவர் கமல்
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில்.

அது போல் IPL கிரிக்கெட்டிலும் cheers girls, dance,வீரர்களுகிடையே சண்டை,அழுகாட்சி என மசாலாக்களை தூவி திறம்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறது IPL நிர்வாகம்.

இது மட்டும் போதாது என்று நினைத்து உள்ளது போலும், மேலும் சில பல சுவாரசிய நிகழ்ச்சிகளை அறங்கேற்றுகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சில rules and regulations இருக்கும் அதையும் மீறுகையில் தான் அது விவாத பொருளாகிறது.

நமக்கு பிடித்த அணி, நமக்கு பிடித்த ஆட்டகாரர் என்பதால் அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அவுட் ஆகி சென்றவர் மீண்டும் மைதானத்துக்குள் வருவதே தவறு. அதிலும் ஒரு கேப்டன் உள்ளே வந்து அம்பையரிடம் வாக்குவாதம் செய்வது தவறான எடுத்துகாட்டு .

பிறகு களத்தில் எதற்கு இரண்டு நடுவர்கள் ? 3ம் நடுவர் எதற்கு ?  வெறும் 50% அபராதத்துடன் அதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில், அந்த கேப்டன் தோனியாக இருக்க வேண்டும். மேட்ச் இந்தியாவில் தான் நடக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் பல நல்ல நுட்பங்களை சக வீரர்களுக்கு கற்று கொடுக்கும் வீரர் இது போன்றவைகளை தவிர்த்துருக்கலாம். நாளை இது போல் மற்ற அணி வீரர்களும் இதை பின் தொடர்ந்தால் gentlemen game சிறுபிள்ளை விளையாட்டாகி விடும்.

விசில் போடுவோம்
ராஜா.க
சினிமாவில மட்டுமல்ல எல்லாவற்றிலும்   மசாலா கேட்கறாங்க நம் மக்கள் என்று கூறுவார் நம்மவர் கமல்
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில்.

அது போல் IPL கிரிக்கெட்டிலும் cheers girls, dance,வீரர்களுகிடையே சண்டை,அழுகாட்சி என மசாலாக்களை தூவி திறம்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறது IPL நிர்வாகம்.

இது மட்டும் போதாது என்று நினைத்து உள்ளது போலும், மேலும் சில பல சுவாரசிய நிகழ்ச்சிகளை அறங்கேற்றுகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சில rules and regulations இருக்கும் அதையும் மீறுகையில் தான் அது விவாத பொருளாகிறது.

நமக்கு பிடித்த அணி, நமக்கு பிடித்த ஆட்டகாரர் என்பதால் அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அவுட் ஆகி சென்றவர் மீண்டும் மைதானத்துக்குள் வருவதே தவறு. அதிலும் ஒரு கேப்டன் உள்ளே வந்து அம்பையரிடம் வாக்குவாதம் செய்வது தவறான எடுத்துகாட்டு .

பிறகு களத்தில் எதற்கு இரண்டு நடுவர்கள் ? 3ம் நடுவர் எதற்கு ?  வெறும் 50% அபராதத்துடன் அதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில், அந்த கேப்டன் தோனியாக இருக்க வேண்டும். மேட்ச் இந்தியாவில் தான் நடக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் பல நல்ல நுட்பங்களை சக வீரர்களுக்கு கற்று கொடுக்கும் வீரர் இது போன்றவைகளை தவிர்த்துருக்கலாம். நாளை இது போல் மற்ற அணி வீரர்களும் இதை பின் தொடர்ந்தால் gentlemen game சிறுபிள்ளை விளையாட்டாகி விடும்.

விசில் போடுவோம்
ராஜா.க