சனி, 29 அக்டோபர், 2022

நானே வருவேன்

 நடிகர் ராமராஜன் நடித்த படம். "ஊரு விட்டு ஊரு வந்து " நடிகை கௌதமி யின் கல்யாணம் கடைசி நேரத்தில் தடைபட்டு நிற்க ராமராஜன் அம்மா நீ கட்டுடா தாலியை என சொல்ல கல்யாணம் செய்கிறார் கதாநாயகன். முதல் இரவில் கௌதமி க்கு பேய் பிடித்தது தெரிய வருகிறது. எதற்கு கௌதமியை அந்த பேய் பிடித்தது.


சிங்கப்பூர் உள்ள தன் தந்தை யை தூக்கிலிருந்து ராமராஜன் எப்படி காப்பாற்றினார் என்பதை கவுண்ட மணி ,செந்தில் , காமெடி இளையராஜா இசை சொர்க்கமே என்றாலும் பாடல் இந்த படம் தான் )சுவாராஸ்யமாக சொல்லி இருப்பார்கள். 

சரி இந்த படத்தை ஏன் சொல்லறோம் னா ? 


சமிபத்தில் பார்த்த நானே வருவேன் படமும் கிட்ட திட்ட ஒரே கதை தான் , தன் சகோதரனை கொன்றவனை கொல்ல துடிக்கும் ஆவி இன்னொரு உயிர்க்குள் போய் அவளை பாடாய் படுத்தி எடுக்கிறது. அந்த ஆவியுடன் பேசி அது கேட்பதை செய்ய ஒத்துக்கொள்கிறான் கதாநாயகன் தனுஷ்.

#நானேவருவேன்



முதல் பாதியில் ஒரு மகளின் தந்தையாக அப்படி ஒரு பக்குவபட்ட நடிப்பு , அந்த பெண் குழந்தை தனுஷ் ஒவ்வொரு முறையும் Dada என்று கூறுகையில் அவ்ளோ அழகு. தன் குழந்தை க்கு பிரச்சினை என்ற பின் தனுஷ் தன் முகத்தில் காட்டும் expression அவ்ளோ எதார்த்தம். #தனுஷ் #நானேவருவேன்



இரண்டாம் பாதியில் மற்றோரு தனுஷ் அவரும் மனைவி குழந்தை களுடன்  சந்தோஷமாக வாழ்கிறார் .  இரவில் வேட்டை க்கு செல்கிறார் , அவருக்கு தெரியமால் மகனும் அவருடன் ஏறி செல்கிறார் , மகனுக்கு என்ன ஆனது ? என இரண்டு கதைகளையும் சுவாரஸ்யமான முறையில் முடித்து வைக்கிறார் இயக்குனர் #செல்வராகவன்



இரண்டாம் பாதியில் வரும் தனுஷ் நடிப்பு நடிப்பின் அடுத்த பரிமாணம் , ஒரே ஒரு ஊரிலே பாட்டுக்கு தனுஷ் போடும் ஆட்டம் கலக்கல். @dhanushkraja தன் கண் முன்னே தன் மகள் உடல்நிலை மோசமாவதை ஏற்று கொள்ள இயலாமல் நொறுங்கிறார் #தனுஷ் #நானேவருவேன்


இறுதியில் தன் மகளை காப்பாறினாரா , அந்த ஆவியின் ஆசை நிறைவேறியதா என்பதை எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் தன் அனுபவ இயக்கத்தால் நகர்த்தி செல்கிறார் #செல்வராகவன் #நானேவருவேன் 

வென்று விட்டான் 💪🏼👏🏼👏🏼👌🏻👌🏻#Amazonprime








 நடிகர் ராமராஜன் நடித்த படம். "ஊரு விட்டு ஊரு வந்து " நடிகை கௌதமி யின் கல்யாணம் கடைசி நேரத்தில் தடைபட்டு நிற்க ராமராஜன் அம்மா நீ கட்டுடா தாலியை என சொல்ல கல்யாணம் செய்கிறார் கதாநாயகன். முதல் இரவில் கௌதமி க்கு பேய் பிடித்தது தெரிய வருகிறது. எதற்கு கௌதமியை அந்த பேய் பிடித்தது.


சிங்கப்பூர் உள்ள தன் தந்தை யை தூக்கிலிருந்து ராமராஜன் எப்படி காப்பாற்றினார் என்பதை கவுண்ட மணி ,செந்தில் , காமெடி இளையராஜா இசை சொர்க்கமே என்றாலும் பாடல் இந்த படம் தான் )சுவாராஸ்யமாக சொல்லி இருப்பார்கள். 

சரி இந்த படத்தை ஏன் சொல்லறோம் னா ? 


சமிபத்தில் பார்த்த நானே வருவேன் படமும் கிட்ட திட்ட ஒரே கதை தான் , தன் சகோதரனை கொன்றவனை கொல்ல துடிக்கும் ஆவி இன்னொரு உயிர்க்குள் போய் அவளை பாடாய் படுத்தி எடுக்கிறது. அந்த ஆவியுடன் பேசி அது கேட்பதை செய்ய ஒத்துக்கொள்கிறான் கதாநாயகன் தனுஷ்.

#நானேவருவேன்



முதல் பாதியில் ஒரு மகளின் தந்தையாக அப்படி ஒரு பக்குவபட்ட நடிப்பு , அந்த பெண் குழந்தை தனுஷ் ஒவ்வொரு முறையும் Dada என்று கூறுகையில் அவ்ளோ அழகு. தன் குழந்தை க்கு பிரச்சினை என்ற பின் தனுஷ் தன் முகத்தில் காட்டும் expression அவ்ளோ எதார்த்தம். #தனுஷ் #நானேவருவேன்



இரண்டாம் பாதியில் மற்றோரு தனுஷ் அவரும் மனைவி குழந்தை களுடன்  சந்தோஷமாக வாழ்கிறார் .  இரவில் வேட்டை க்கு செல்கிறார் , அவருக்கு தெரியமால் மகனும் அவருடன் ஏறி செல்கிறார் , மகனுக்கு என்ன ஆனது ? என இரண்டு கதைகளையும் சுவாரஸ்யமான முறையில் முடித்து வைக்கிறார் இயக்குனர் #செல்வராகவன்



இரண்டாம் பாதியில் வரும் தனுஷ் நடிப்பு நடிப்பின் அடுத்த பரிமாணம் , ஒரே ஒரு ஊரிலே பாட்டுக்கு தனுஷ் போடும் ஆட்டம் கலக்கல். @dhanushkraja தன் கண் முன்னே தன் மகள் உடல்நிலை மோசமாவதை ஏற்று கொள்ள இயலாமல் நொறுங்கிறார் #தனுஷ் #நானேவருவேன்


இறுதியில் தன் மகளை காப்பாறினாரா , அந்த ஆவியின் ஆசை நிறைவேறியதா என்பதை எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் தன் அனுபவ இயக்கத்தால் நகர்த்தி செல்கிறார் #செல்வராகவன் #நானேவருவேன் 

வென்று விட்டான் 💪🏼👏🏼👏🏼👌🏻👌🏻#Amazonprime








வெள்ளி, 14 அக்டோபர், 2022

உன்னால் முடியும் !!

 உன்னால் முடியும் !!


90's களில் ஆடியோ கேசட்டுகள் பிரபலம் , அதில் பெயர் போனது HMV கம்பெனி. இவர்களின் பக்தி பாடல்கள் ஆல்பம் பெரிய ஹிட். அதில் ஒன்று சூலமங்களம் sister's பாடிய கந்த சஷ்டி கவசம் , கந்த குரு குவசம்.  ஆனால் இவர்கள் எல்லா கடைகளுக்கும் தங்கள் கேசட்டுகளை கொடுக்க மாட்டார்கள் , ஒரு குறிப்பிட்ட deposit தொகை கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.


எங்கள் கடை அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த நேரம் , சண்முகவிலாசம் புக்ஸ்டால். எல்லாருக்கும் வழி கிடைத்தது போலவே எங்களுக்கும் கிடைத்தது ஆம் HMV இணையாக symphony என்ற கேசட் கம்பெனி அப்போது பிரபலமாகி தொடங்கி இருந்தது. அவர்கள் எங்கள் கடைக்கு எந்த deposit தொகை யும் இல்லாமல் உங்களுக்கு விற்பனை ஆவதை வைத்து எங்களுக்கு பணம் செலுத்தினால் போதும் என்றனர்.



Symphony யும் கந்த சஷ்டி கவசம் ஆல்பம் ரெடி செய்தனர் பாடியது மகாநதி பட புகழ் ஷோபனா. எங்கள் கடைக்கு முதலில் 500 கேசட்டுகள் கொடுத்தனர். பள்ளி நேரங்கள் தவிர கிடைக்கும் நேரங்களில் கடைக்கு சென்று வியாபாரம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 


டேப்பிர் கார்டில் மாகநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாட்டை கேட்டேன் , மிகவும் பிடித்தது. சரி இதை விற்பனை செய்ய வேண்டும் ஆனால் கேட்க்கும் பலரும் HMV யின்  சூலமங்களம்  சிஸ்ட்ரஸ் பாடிய கேசட்டுகள் தான் வேண்டும் என்றனர். தனது முயற்சி யில் சற்றும் தளராத விகர்மாதித்ன் போல வந்தவர்களிடம் இந்த பாடலை ஒரு கேட்டு பாருங்கள் என்ற கேட்க ஆரம்பித்தேன்.



முதல் முயற்சி வெற்றி கிடைத்தது , ஆம் கேட்டவர்களுக்கு பிடித்த போக அதே யுக்தியை கையாண்டேன். மற்ற கேசட்டுகள் கேட்டு வந்தாலும் இந்த கேசட் விளம்பர படுத்தினேன். ஒரு வழியாக 500 கேசட்டுகள் விற்று தீர்ந்தது. அடுத்து முறை 1000 கொடுத்தார்கள் நம்பிக்கை அடிப்படை யில் , உள்ளூர வைராக்கியம் இவர்கள் நம்மை நம்பி கொடுத்துள்ளனர்.



கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் ரெக்கில் மகாநதி ஷோபனா விற்கென்று தனி Row , வருப்வர்களிடத்தில் எல்லாம் இந்த கேசட்டுகள் விற்று தீர்த்து விட வேண்டும் என்ற இலட்சியம். கடவுள் ஆசியுடன் இனிதே நடந்தது. ஆம் 5000 கேசட்டுகள் விற்பனை செய்தோம்.

பின்னாளில் sympony கம்பெனி யின் பல ஆலபங்கள் hit. குறிப்பாக "கட்டும் கட்டி " என்ற ஆல்பம் இன்று வரை மார்கழி மாதத்தில் ஒலிக்கும். மனதில் சின்ன மகிழ்ச்சி நம்மால் முடியும் என்று.


#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால் 

#திருச்செந்தூர்

#ShanmugavilasamBookStall

#Tiruchendur 





 உன்னால் முடியும் !!


90's களில் ஆடியோ கேசட்டுகள் பிரபலம் , அதில் பெயர் போனது HMV கம்பெனி. இவர்களின் பக்தி பாடல்கள் ஆல்பம் பெரிய ஹிட். அதில் ஒன்று சூலமங்களம் sister's பாடிய கந்த சஷ்டி கவசம் , கந்த குரு குவசம்.  ஆனால் இவர்கள் எல்லா கடைகளுக்கும் தங்கள் கேசட்டுகளை கொடுக்க மாட்டார்கள் , ஒரு குறிப்பிட்ட deposit தொகை கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.


எங்கள் கடை அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த நேரம் , சண்முகவிலாசம் புக்ஸ்டால். எல்லாருக்கும் வழி கிடைத்தது போலவே எங்களுக்கும் கிடைத்தது ஆம் HMV இணையாக symphony என்ற கேசட் கம்பெனி அப்போது பிரபலமாகி தொடங்கி இருந்தது. அவர்கள் எங்கள் கடைக்கு எந்த deposit தொகை யும் இல்லாமல் உங்களுக்கு விற்பனை ஆவதை வைத்து எங்களுக்கு பணம் செலுத்தினால் போதும் என்றனர்.



Symphony யும் கந்த சஷ்டி கவசம் ஆல்பம் ரெடி செய்தனர் பாடியது மகாநதி பட புகழ் ஷோபனா. எங்கள் கடைக்கு முதலில் 500 கேசட்டுகள் கொடுத்தனர். பள்ளி நேரங்கள் தவிர கிடைக்கும் நேரங்களில் கடைக்கு சென்று வியாபாரம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 


டேப்பிர் கார்டில் மாகநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாட்டை கேட்டேன் , மிகவும் பிடித்தது. சரி இதை விற்பனை செய்ய வேண்டும் ஆனால் கேட்க்கும் பலரும் HMV யின்  சூலமங்களம்  சிஸ்ட்ரஸ் பாடிய கேசட்டுகள் தான் வேண்டும் என்றனர். தனது முயற்சி யில் சற்றும் தளராத விகர்மாதித்ன் போல வந்தவர்களிடம் இந்த பாடலை ஒரு கேட்டு பாருங்கள் என்ற கேட்க ஆரம்பித்தேன்.



முதல் முயற்சி வெற்றி கிடைத்தது , ஆம் கேட்டவர்களுக்கு பிடித்த போக அதே யுக்தியை கையாண்டேன். மற்ற கேசட்டுகள் கேட்டு வந்தாலும் இந்த கேசட் விளம்பர படுத்தினேன். ஒரு வழியாக 500 கேசட்டுகள் விற்று தீர்ந்தது. அடுத்து முறை 1000 கொடுத்தார்கள் நம்பிக்கை அடிப்படை யில் , உள்ளூர வைராக்கியம் இவர்கள் நம்மை நம்பி கொடுத்துள்ளனர்.



கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் ரெக்கில் மகாநதி ஷோபனா விற்கென்று தனி Row , வருப்வர்களிடத்தில் எல்லாம் இந்த கேசட்டுகள் விற்று தீர்த்து விட வேண்டும் என்ற இலட்சியம். கடவுள் ஆசியுடன் இனிதே நடந்தது. ஆம் 5000 கேசட்டுகள் விற்பனை செய்தோம்.

பின்னாளில் sympony கம்பெனி யின் பல ஆலபங்கள் hit. குறிப்பாக "கட்டும் கட்டி " என்ற ஆல்பம் இன்று வரை மார்கழி மாதத்தில் ஒலிக்கும். மனதில் சின்ன மகிழ்ச்சி நம்மால் முடியும் என்று.


#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால் 

#திருச்செந்தூர்

#ShanmugavilasamBookStall

#Tiruchendur 





திங்கள், 3 அக்டோபர், 2022

மண்ணின் மைந்தன்


 பத்திரிக்கையில் கார்டுனிஸ்ட் ஆக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒரு சராசரி மனிதன் ,  தன் மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தி யாக எப்படி உருவானார் ? என்பதை 2மணி நேரத்தில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்து , அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.


கதையின் நாயகன் தன் எண்ணங்களை கார்ட்டூன் மூலம் பேச்சு பொருளாகி புயலை கிளப்புகிறான் , பத்திரிக்கை யின் தன் உயரதிகாரி நாயகனை கண்டிக்க வேலையை உதறி தள்ளி விட்டு சினிமா செல்கிறான்,  அங்கே தன் மக்கள் கேளிக்கை பொருளாவதை கண்டு அம்மக்களுக்கு தன் முயன்றதை பத்திரிகை மூலம் செய்ய முயல்கிறார்.


எம் மண்ணில் என் மாநில

மக்களுக்கு தான் முதல் உரிமை , பத்திரிகை மூலம் பரப்புகிறான். அது வரை மனதில் புழங்கி கொண்டிருந்த மக்களுக்கு தனக்கான ஒரு நபர் / பத்திரிகை வந்தது கண்டு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கரம் நீள்கிறது (காவல் துறை உட்பட).


பத்திரிகையை கட்சி யாக மாற்றி அதிகார மையத்தை நோக்கி நகர்கிறான் , அவனது துடிப்பான பேச்சில் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். களத்தில் இறங்கி தன் மாநில மக்களுக்கு தான் முன்னுரிமை என சுபாஷ் சந்திர போஸ் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.  அடி மட்ட தொண்டர்கள் வரை உதவிகள் செய்து பூஜை அறையில் தன் புகைப்படம் வைக்கின்ற 

தலைவனாக உருவாகிறான்.


கட்சி யை காங்கிரஸ் உடன் சேர்க்க கட்டாயத்த படுத்துகின்றனர். உதறி தள்ளுகிறான். எமர்ஜென்சி யை தனக்கு சாதுர்யமாக மாற்றி கொண்டு அவன் பாதையை நோக்கி காய்களை நகர்த்தி கொள்கிறான். இறுதியில் தன்

 கட்சி யை சேர்ந்த நபரை முதலமைச்சர் ஆக்கி கிங் மேக்கராக மக்கள் மனதில் நிற்கிறான்.


கதையின் நாயகன்

Nawazuddin Siddiqui அவ்ளோ நேர்த்தி யாக நடித்திருந்தார் என்பதை தாண்டி தாக்கரே வே வாழ்ந்திருந்தார். ஹிந்தி தெரியத எனக்கு கூட "ஜெய் மகாராஷ்ட்ரா" என என்னை அறியாமல் சொல்ல வைக்கும் அளவுக்கு ghoosebup நடிப்பு.பலமான பின்னணி இசை @NetflixIndia உள்ளது #Thackeray


இவண்

ராஜா.க



 பத்திரிக்கையில் கார்டுனிஸ்ட் ஆக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒரு சராசரி மனிதன் ,  தன் மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தி யாக எப்படி உருவானார் ? என்பதை 2மணி நேரத்தில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்து , அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.


கதையின் நாயகன் தன் எண்ணங்களை கார்ட்டூன் மூலம் பேச்சு பொருளாகி புயலை கிளப்புகிறான் , பத்திரிக்கை யின் தன் உயரதிகாரி நாயகனை கண்டிக்க வேலையை உதறி தள்ளி விட்டு சினிமா செல்கிறான்,  அங்கே தன் மக்கள் கேளிக்கை பொருளாவதை கண்டு அம்மக்களுக்கு தன் முயன்றதை பத்திரிகை மூலம் செய்ய முயல்கிறார்.


எம் மண்ணில் என் மாநில

மக்களுக்கு தான் முதல் உரிமை , பத்திரிகை மூலம் பரப்புகிறான். அது வரை மனதில் புழங்கி கொண்டிருந்த மக்களுக்கு தனக்கான ஒரு நபர் / பத்திரிகை வந்தது கண்டு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கரம் நீள்கிறது (காவல் துறை உட்பட).


பத்திரிகையை கட்சி யாக மாற்றி அதிகார மையத்தை நோக்கி நகர்கிறான் , அவனது துடிப்பான பேச்சில் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். களத்தில் இறங்கி தன் மாநில மக்களுக்கு தான் முன்னுரிமை என சுபாஷ் சந்திர போஸ் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.  அடி மட்ட தொண்டர்கள் வரை உதவிகள் செய்து பூஜை அறையில் தன் புகைப்படம் வைக்கின்ற 

தலைவனாக உருவாகிறான்.


கட்சி யை காங்கிரஸ் உடன் சேர்க்க கட்டாயத்த படுத்துகின்றனர். உதறி தள்ளுகிறான். எமர்ஜென்சி யை தனக்கு சாதுர்யமாக மாற்றி கொண்டு அவன் பாதையை நோக்கி காய்களை நகர்த்தி கொள்கிறான். இறுதியில் தன்

 கட்சி யை சேர்ந்த நபரை முதலமைச்சர் ஆக்கி கிங் மேக்கராக மக்கள் மனதில் நிற்கிறான்.


கதையின் நாயகன்

Nawazuddin Siddiqui அவ்ளோ நேர்த்தி யாக நடித்திருந்தார் என்பதை தாண்டி தாக்கரே வே வாழ்ந்திருந்தார். ஹிந்தி தெரியத எனக்கு கூட "ஜெய் மகாராஷ்ட்ரா" என என்னை அறியாமல் சொல்ல வைக்கும் அளவுக்கு ghoosebup நடிப்பு.பலமான பின்னணி இசை @NetflixIndia உள்ளது #Thackeray


இவண்

ராஜா.க