வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

சல்லிகளும் சல்லாபங்களும்...

சல்லிகளும் சல்லாபங்களும்..

சாமியார்கள் என்று சொன்னால்
Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.

இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ?
பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.

80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..

15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??

குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..

இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?
இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது.
நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ?
நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.

இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடம் கலந்துரையாடு,நட்புகளை உருவாக்கி கொள் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.

அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.

சிந்திப்போம்.....
சல்லிகளும் சல்லாபங்களும்..

சாமியார்கள் என்று சொன்னால்
Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.

இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ?
பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.

80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..

15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??

குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..

இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?
இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது.
நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ?
நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.

இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடம் கலந்துரையாடு,நட்புகளை உருவாக்கி கொள் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.

அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.

சிந்திப்போம்.....

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிஜேபி அன்றும் / இன்றும்

பிஜேபி என்ற கட்சியின் மீதிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இன்று அமாவாசையான நாள்.

பிஜேபி என்ற கட்டுக்கோப்பான கட்சியை திரு.வாஜ்பாயிக்கு முன் / பின் இரண்டு வகையாக பிரிக்கலாம்

வாஜ்பாயின்  13 மாத கால ஆட்சியாகட்டும் அடுத்த 5 ஆண்டுகளாகட்டும் (1999-2004) சிறப்பாகவே ஆட்சி செய்தார் குறிப்பாக மாநில உரிமைகளில் பிராந்திய கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது உதாரணம் காஷ்மீர் மாநிலத்தை கையாண்ட விதம்

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் அனைத்து மாநிலங்களிலும் ஒன்று ஆட்சியை பிடிக்க வேண்டும் இல்லை ஆட்சியில் இருப்பவர்களிடத்தில் கூட்டணி ஏற்படுத்துதல் இல்லை கட்சியையே கபளிகரம் செய்தல் சபீபத்திய உதாரணம் தமிழ்நாடு

மத்திய அரசு நடுவண் அரசு போல் அல்லாமல் அதிமுக இரு அணிகளுக்கும் இடையில் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறது
திருமதி.சசிகலா (நல்லவரோ / கெட்டவரோ ) 122 MLA க்கள் கையொப்பம் இட்ட கடிதத்தை வாங்க இதே ஆளுநர் எப்படியெல்லாம் நாள் கடத்தினார் என்பது காலம் அறியும்
இன்று அதே ஆளுநர் காலையில் வருவாராம் மாலையில் அமைச்சரவை மாற்றமாம். மத்திய அரசுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று தன்னிலை விளக்கம் வேறு.. 

25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவை நம்ப வைத்து கழுத்தறுத்தது

பீகாரில் ஐயக்கிய ஜனதாதளம் , கோவா,அருணாச்சல் பிரதேசம் என மேற்கொண்ட மாநிலங்களில் தோற்றும் ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகத்திருக்கு விட்டிருக்கும் சவால்

மக்களின் முடிவையோ, ஜனநாயக மான்பையோ காற்றில் பறக்க விட்டு விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே தாரக மந்திரம். அதிகாரம் என்ற கருவி உதவியுடன் வெற்றி என்னும் பரிசை எடுப்பதில் பிஜேபி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் 

இதுவும் மாறும்....
பிஜேபி என்ற கட்சியின் மீதிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இன்று அமாவாசையான நாள்.

பிஜேபி என்ற கட்டுக்கோப்பான கட்சியை திரு.வாஜ்பாயிக்கு முன் / பின் இரண்டு வகையாக பிரிக்கலாம்

வாஜ்பாயின்  13 மாத கால ஆட்சியாகட்டும் அடுத்த 5 ஆண்டுகளாகட்டும் (1999-2004) சிறப்பாகவே ஆட்சி செய்தார் குறிப்பாக மாநில உரிமைகளில் பிராந்திய கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது உதாரணம் காஷ்மீர் மாநிலத்தை கையாண்ட விதம்

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் அனைத்து மாநிலங்களிலும் ஒன்று ஆட்சியை பிடிக்க வேண்டும் இல்லை ஆட்சியில் இருப்பவர்களிடத்தில் கூட்டணி ஏற்படுத்துதல் இல்லை கட்சியையே கபளிகரம் செய்தல் சபீபத்திய உதாரணம் தமிழ்நாடு

மத்திய அரசு நடுவண் அரசு போல் அல்லாமல் அதிமுக இரு அணிகளுக்கும் இடையில் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறது
திருமதி.சசிகலா (நல்லவரோ / கெட்டவரோ ) 122 MLA க்கள் கையொப்பம் இட்ட கடிதத்தை வாங்க இதே ஆளுநர் எப்படியெல்லாம் நாள் கடத்தினார் என்பது காலம் அறியும்
இன்று அதே ஆளுநர் காலையில் வருவாராம் மாலையில் அமைச்சரவை மாற்றமாம். மத்திய அரசுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று தன்னிலை விளக்கம் வேறு.. 

25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவை நம்ப வைத்து கழுத்தறுத்தது

பீகாரில் ஐயக்கிய ஜனதாதளம் , கோவா,அருணாச்சல் பிரதேசம் என மேற்கொண்ட மாநிலங்களில் தோற்றும் ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகத்திருக்கு விட்டிருக்கும் சவால்

மக்களின் முடிவையோ, ஜனநாயக மான்பையோ காற்றில் பறக்க விட்டு விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே தாரக மந்திரம். அதிகாரம் என்ற கருவி உதவியுடன் வெற்றி என்னும் பரிசை எடுப்பதில் பிஜேபி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் 

இதுவும் மாறும்....