வெள்ளி, 28 டிசம்பர், 2018

அடங்கமறு

ஜெயம் ரவி நடித்த படத்தில் ஒரு காட்சியை கூட தொலைகாட்சியில் பார்க்காமல்,
திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் அன்று  #தனிஒருவன்
இன்று #அடங்கமறு;

இன்னொரு தனி ஒருவனாக இருக்குமா இந்த அடங்கமறு என்று எதிரபார்ப்பில் அமர்ந்தேன்.

எளிமையான கதை தேர்வு.பெண்களை கற்பழிக்கும் காமுகர்களை கதாநாயகன் எப்படி தண்டிக்கிறான் ? என்பதை விறுவிறுப்பான தன் திரைக்கதையால்  சொல்லி  வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.


ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மிக முக்கிய தேவை பலமான வில்லன்கள் அவர்கள்  உதவியுடன் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது;
கதாநாயகன் பழி வாங்குவதாக சவால் விடுகிறான்.

எப்படி சவாலில் வெல்கிறான் என்பதை நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறான்.ஒரு சில லாஜிக் மீறல்கள்,
தமிழ் படம்னா அப்படி தான் இருக்கும்.

கதாநாயகிக்கு பெரிய வேலை இல்லை வந்து போகிறார். அழகம் பெருமாள் அழகாக நடித்திருக்கிறார். பாடல்களுக்கு பெரிய வேலை இல்லை, பின்னனி இசை பலம் தான்.

தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.”ஜெயம்” ரவிக்கு இன்னொரு “ஜெயம்”கொடுக்க முயற்சித்திருக்கிறது இந்த #அடங்கமறு

ரசிகன்
ராஜா.க
ஜெயம் ரவி நடித்த படத்தில் ஒரு காட்சியை கூட தொலைகாட்சியில் பார்க்காமல்,
திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் அன்று  #தனிஒருவன்
இன்று #அடங்கமறு;

இன்னொரு தனி ஒருவனாக இருக்குமா இந்த அடங்கமறு என்று எதிரபார்ப்பில் அமர்ந்தேன்.

எளிமையான கதை தேர்வு.பெண்களை கற்பழிக்கும் காமுகர்களை கதாநாயகன் எப்படி தண்டிக்கிறான் ? என்பதை விறுவிறுப்பான தன் திரைக்கதையால்  சொல்லி  வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.


ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மிக முக்கிய தேவை பலமான வில்லன்கள் அவர்கள்  உதவியுடன் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது;
கதாநாயகன் பழி வாங்குவதாக சவால் விடுகிறான்.

எப்படி சவாலில் வெல்கிறான் என்பதை நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறான்.ஒரு சில லாஜிக் மீறல்கள்,
தமிழ் படம்னா அப்படி தான் இருக்கும்.

கதாநாயகிக்கு பெரிய வேலை இல்லை வந்து போகிறார். அழகம் பெருமாள் அழகாக நடித்திருக்கிறார். பாடல்களுக்கு பெரிய வேலை இல்லை, பின்னனி இசை பலம் தான்.

தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.”ஜெயம்” ரவிக்கு இன்னொரு “ஜெயம்”கொடுக்க முயற்சித்திருக்கிறது இந்த #அடங்கமறு

ரசிகன்
ராஜா.க

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ஐயப்பனும்,கம்யூனிசமும்

ஐயப்பனும்,கம்யூனிசமும்

கம்யூனிசத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கிடையாது என்றாலும் இப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும்  என நான் உணர்ந்த இடம் சபரிமலை.

கடந்த 12 வருடங்களாக சபரிமலைக்கு செல்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வசதிகளை பக்தர்களுக்கு தருவது கேரள தெவசம் போர்ட்;ஆட்சியில் யார் மாறினாலும் (காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்) இந்த சேவைகள் தொடர்வது கவனிக்கதக்கது.

அதில் சில
Online ticket booking , plastic free, சுற்றுபுற தூய்மை,நடந்து செல்லும் பாதையில் அமரும் அறை அமைத்தல்,சுத்தமான (தானியங்கி) தண்ணீர்,பேருந்து வசதி (பம்பை-நிலக்கல்).

அது என்ன கம்யூனிசமும்,ஐயப்பனும் ?
தமிழகத்தில் பல கோயில்களுக்கு சென்றிருக்கிறேன், இங்கு பணம் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை,பணம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை. பெரும்பாலான கோயில்களில் இது தான் நடைமுறை.

சபரிமலையில் இன்று வரை கட்டண தரிசனம் கிடையாது. Online Ticket கூட இலவசம் தான்.  வடிவேலு பாணியில் காவலரிடம் 20₹ கொடுத்தால் 40₹ திருப்பி கொடுத்து ஒடி விடு என்பார்கள். இப்படி கட்டணம் இல்லாததால் தான் என்னவோ, கோயில் உண்டியல்களில் கட்டணம் குவிகிறது. அதை கொண்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடிகிறது.

குழந்தைகளிடமும்,
வயதானவர்களிடமும் கேரள காவல்துறை நடந்து கொள்ளும் விதத்திற்கு தனி சல்யூட் அடிக்கலாம்.

இந்த வருடம் கேரளாவில் பெய்த கனமழை யில் பாதிக்கபட்ட பகுதிகளில் சபரிமலையும் அடக்கம்.
சேதமடைந்த சாலைகளை எல்லாம் சரி செய்து விட்டார்கள். இது போன்ற  சுவடிலிருந்து இவ்வளவு வேகமாக மீண்டு வருவதெல்லாம் சேட்டன்களால் மட்டுமே முடியும் போல.

பக்தர்களின் வேண்டுதலை தீர்ப்பதால் தான் என்னவோ, வருடா வருடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. பக்தர்களின் வேண்டுதலை உணர்ந்த ஐயப்பன் தன் திருத்தலைத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுவார் என்று நம்புவோமாக!

நம்பிக்கையுடன்
ராஜா.க
ஐயப்பனும்,கம்யூனிசமும்

கம்யூனிசத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கிடையாது என்றாலும் இப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும்  என நான் உணர்ந்த இடம் சபரிமலை.

கடந்த 12 வருடங்களாக சபரிமலைக்கு செல்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வசதிகளை பக்தர்களுக்கு தருவது கேரள தெவசம் போர்ட்;ஆட்சியில் யார் மாறினாலும் (காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்) இந்த சேவைகள் தொடர்வது கவனிக்கதக்கது.

அதில் சில
Online ticket booking , plastic free, சுற்றுபுற தூய்மை,நடந்து செல்லும் பாதையில் அமரும் அறை அமைத்தல்,சுத்தமான (தானியங்கி) தண்ணீர்,பேருந்து வசதி (பம்பை-நிலக்கல்).

அது என்ன கம்யூனிசமும்,ஐயப்பனும் ?
தமிழகத்தில் பல கோயில்களுக்கு சென்றிருக்கிறேன், இங்கு பணம் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை,பணம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை. பெரும்பாலான கோயில்களில் இது தான் நடைமுறை.

சபரிமலையில் இன்று வரை கட்டண தரிசனம் கிடையாது. Online Ticket கூட இலவசம் தான்.  வடிவேலு பாணியில் காவலரிடம் 20₹ கொடுத்தால் 40₹ திருப்பி கொடுத்து ஒடி விடு என்பார்கள். இப்படி கட்டணம் இல்லாததால் தான் என்னவோ, கோயில் உண்டியல்களில் கட்டணம் குவிகிறது. அதை கொண்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடிகிறது.

குழந்தைகளிடமும்,
வயதானவர்களிடமும் கேரள காவல்துறை நடந்து கொள்ளும் விதத்திற்கு தனி சல்யூட் அடிக்கலாம்.

இந்த வருடம் கேரளாவில் பெய்த கனமழை யில் பாதிக்கபட்ட பகுதிகளில் சபரிமலையும் அடக்கம்.
சேதமடைந்த சாலைகளை எல்லாம் சரி செய்து விட்டார்கள். இது போன்ற  சுவடிலிருந்து இவ்வளவு வேகமாக மீண்டு வருவதெல்லாம் சேட்டன்களால் மட்டுமே முடியும் போல.

பக்தர்களின் வேண்டுதலை தீர்ப்பதால் தான் என்னவோ, வருடா வருடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. பக்தர்களின் வேண்டுதலை உணர்ந்த ஐயப்பன் தன் திருத்தலைத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுவார் என்று நம்புவோமாக!

நம்பிக்கையுடன்
ராஜா.க

Lord Iyappa & Communism

Lord Iyappa  & communism

Although there is not much interest in Communism, I feel that it would be better, after visiting Sabarimala.

For the past 12 years, I have gone to Sabarimala. Every year a new facility is given to the devotees by the Kerala Government , whoever changes in power (Congress, Communist) is noticed that these services continue.

Some of them
Online ticket booking, plastic free, environmental cleanliness, walk-in parking, clean (automatic) water, bus facility (pumpa -nelakal).

What is communism and a doubt?

I have visited many temples in Tamilnadu, here is a row for those who have money, a row for those without money. This is practical in most temples.

In Sabarimala there is no charge for darshan. The online ticket is also free. Bcz of this, devotes donates money to hundi. It enables the devotees to have the necessary facilities.

Children and elder people were treated gently by Kerala police, separate salute for their duty.

Areas in Sabarimala got affected by heavy rainfall in Kerala this year.
Damaged roads are all repaired. The only way to get back out of this tragedy is to be done only by “Chetan”

Number of devotees coming to Sabarimala annually increases because devotees prayers were heard by him. Let us believe that Ayyappa realized the prayer of the devotees and would have a good lesson for the evil forces who wants to play politics using him.

With confidence
Raja K.S
Lord Iyappa  & communism

Although there is not much interest in Communism, I feel that it would be better, after visiting Sabarimala.

For the past 12 years, I have gone to Sabarimala. Every year a new facility is given to the devotees by the Kerala Government , whoever changes in power (Congress, Communist) is noticed that these services continue.

Some of them
Online ticket booking, plastic free, environmental cleanliness, walk-in parking, clean (automatic) water, bus facility (pumpa -nelakal).

What is communism and a doubt?

I have visited many temples in Tamilnadu, here is a row for those who have money, a row for those without money. This is practical in most temples.

In Sabarimala there is no charge for darshan. The online ticket is also free. Bcz of this, devotes donates money to hundi. It enables the devotees to have the necessary facilities.

Children and elder people were treated gently by Kerala police, separate salute for their duty.

Areas in Sabarimala got affected by heavy rainfall in Kerala this year.
Damaged roads are all repaired. The only way to get back out of this tragedy is to be done only by “Chetan”

Number of devotees coming to Sabarimala annually increases because devotees prayers were heard by him. Let us believe that Ayyappa realized the prayer of the devotees and would have a good lesson for the evil forces who wants to play politics using him.

With confidence
Raja K.S

வெள்ளி, 7 டிசம்பர், 2018

பாஜகவும் , அதிமுகவும்

அறிவோம் அரசியல்:

அரசியலில் கட்சிகளின் இடையே ஆன கூட்டணி வேடிக்கையாகவும்,விசித்திறமாகவும் இருக்கும்;அதில் ஒன்று அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள உறவு ருசிகரமானது.

அது ஏன் குறிப்பாக BJP அதில் ஒரு வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது.
1998ல் திரு.வாஜ்பாய் தலைமையில் NDA government அங்கம் வகித்தது அதிமுக.

அச்சமயத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி நடக்கிறது ; மத்திய அரசின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார் அம்மையார். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு அரசை கலைக்க மேதகு திரு.வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கலைக்க விரும்பவில்லை.

அப்படி இருந்த பாஜக தான் இப்போது
இப்படி இருக்கிறது என்பது வேறு கதை.

சரியாக 13 மாதங்கள் ஆகையில் அதிமுக NDA அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றது, NDA அரசை கலைக்க காங்கிரஸ் உடன் “கை” கோர்த்தது  உடன் டெல்லி சென்றது அதிமுக தலைமை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு ஓட்டு வித்யாசத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க தவறியது பாஜக.

அந்த 13 மாத காலத்தில் திரு.வாஜ்பாய் பதவி முள் மேல் படுக்கை போன்றது அதனால் தான் என்னவோ பாராளுமன்றம் விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் வணக்கம் வைத்தது மிக பிரபலம்.

பாராளுமன்றம் கலைக்க பட்டு
ஒட்டு மொத்த இந்திய தேசமும் தேர்தலை சந்தித்து. அதன் பின் நடந்த தேர்தலில் திமுக மற்றும் பிற மாநில கட்சிகளின் தயவுடன்  NDA அரசு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் பதவி வகித்தது ஓரு புறம்.

அன்று நடந்த ஆட்சி கலைப்பிற்காக அதிமுக வின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்த பயன்படுத்தி அக்கட்சியை (அதிமுக) BJP தன் கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்துவிட்டது.

அறிந்ததும், அறிவதும் தொடரும்.
ராஜா.க
அறிவோம் அரசியல்:

அரசியலில் கட்சிகளின் இடையே ஆன கூட்டணி வேடிக்கையாகவும்,விசித்திறமாகவும் இருக்கும்;அதில் ஒன்று அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள உறவு ருசிகரமானது.

அது ஏன் குறிப்பாக BJP அதில் ஒரு வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது.
1998ல் திரு.வாஜ்பாய் தலைமையில் NDA government அங்கம் வகித்தது அதிமுக.

அச்சமயத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி நடக்கிறது ; மத்திய அரசின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார் அம்மையார். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு அரசை கலைக்க மேதகு திரு.வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கலைக்க விரும்பவில்லை.

அப்படி இருந்த பாஜக தான் இப்போது
இப்படி இருக்கிறது என்பது வேறு கதை.

சரியாக 13 மாதங்கள் ஆகையில் அதிமுக NDA அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றது, NDA அரசை கலைக்க காங்கிரஸ் உடன் “கை” கோர்த்தது  உடன் டெல்லி சென்றது அதிமுக தலைமை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு ஓட்டு வித்யாசத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க தவறியது பாஜக.

அந்த 13 மாத காலத்தில் திரு.வாஜ்பாய் பதவி முள் மேல் படுக்கை போன்றது அதனால் தான் என்னவோ பாராளுமன்றம் விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் வணக்கம் வைத்தது மிக பிரபலம்.

பாராளுமன்றம் கலைக்க பட்டு
ஒட்டு மொத்த இந்திய தேசமும் தேர்தலை சந்தித்து. அதன் பின் நடந்த தேர்தலில் திமுக மற்றும் பிற மாநில கட்சிகளின் தயவுடன்  NDA அரசு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் பதவி வகித்தது ஓரு புறம்.

அன்று நடந்த ஆட்சி கலைப்பிற்காக அதிமுக வின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்த பயன்படுத்தி அக்கட்சியை (அதிமுக) BJP தன் கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்துவிட்டது.

அறிந்ததும், அறிவதும் தொடரும்.
ராஜா.க

திங்கள், 3 டிசம்பர், 2018

திருமண திருத்தலம்

இன்றைய சமூகத்தில் தலையாய பிரச்சனைகள் பல அதில் ஒன்று திருமணம் தள்ளி போகுதல்.

எல்லாம் சரியாக இருக்கிறது,எல்லா கோயில்களுக்கும் சென்றாயிற்று  ஆனாலும் ஏன் தள்ளி போகிறது என்று நினைப்பவர்கள் பலர் அவர்களுக்கான பதிவு தான் இது.

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் கண்டியூர் என்னும் ஊரில் அருகே உள்ளது திருமண திருத்தலமான திருவேதிகுடி. இங்கே தம்பதி சமேதமாக வீற்றிருக்கிறார்கள் அருள்மிகு வேதபுரீஸ்வரரும், அருள்மிகு மங்கையர் கரசியும்.

பழமையான கோயில், 7ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சில புனரமைக்களுடன் உள்ளது; இத்திருத்தலத்தில் பங்குனி மாதம் 14,15,16 ஆகிய 3 தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவபெருமானின் மீது விழுகிறது; சூரிய பகவானே பூஜிப்பதாக ஐதீஜம். அமைதியான சூழல் உலாவுவதால் நிம்மதியாக வழிபடலாம். செல்வதற்கு முன் குருக்களுக்கு தொலைபேசியில் சொல்லிவிடுவது ஊசிதம்.

இத்திருத்தலத்திற்கு வருகையில்
2 மாலை,தேங்காய்,பழம்,வெத்தலை பாக்கு மற்றும் 21 சிறிய அகல் விளக்குகள் கொண்டு வந்து நெய் தீபம் இடவும். குருக்கள் அர்ச்சனை செய்து மாலை இடுவார் மாலையும் கழுத்தமாக  கோயிலை சுற்றி வரவும்.

அந்த  மாலையை வீட்டில் பத்திரமாக வைத்து கொள்ளவும், மணமான பின் அந்த மாலையை இத்திருத்தலத்திற்கு எதிரிலே இருக்கும் குளத்தில் விடவும்.

நீங்கள் நிறைய கோயில்களுக்கு சென்று இருப்பீர்கள் அந்த பட்டியலில் இந்த புனித தலத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை இங்கு சென்று திருமணம் நடந்துவிட்டால் மகிழ்ச்சி தானே, கண்டிப்பாக நடக்கும் என்றார்கள்; சென்றேன்,  நடந்தது.

திருச்சிற்றம்பலம்
ராஜா.க

#தஞ்சாவூர் #கண்டியூர் #திரிவேதிகுடி
இன்றைய சமூகத்தில் தலையாய பிரச்சனைகள் பல அதில் ஒன்று திருமணம் தள்ளி போகுதல்.

எல்லாம் சரியாக இருக்கிறது,எல்லா கோயில்களுக்கும் சென்றாயிற்று  ஆனாலும் ஏன் தள்ளி போகிறது என்று நினைப்பவர்கள் பலர் அவர்களுக்கான பதிவு தான் இது.

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் கண்டியூர் என்னும் ஊரில் அருகே உள்ளது திருமண திருத்தலமான திருவேதிகுடி. இங்கே தம்பதி சமேதமாக வீற்றிருக்கிறார்கள் அருள்மிகு வேதபுரீஸ்வரரும், அருள்மிகு மங்கையர் கரசியும்.

பழமையான கோயில், 7ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சில புனரமைக்களுடன் உள்ளது; இத்திருத்தலத்தில் பங்குனி மாதம் 14,15,16 ஆகிய 3 தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவபெருமானின் மீது விழுகிறது; சூரிய பகவானே பூஜிப்பதாக ஐதீஜம். அமைதியான சூழல் உலாவுவதால் நிம்மதியாக வழிபடலாம். செல்வதற்கு முன் குருக்களுக்கு தொலைபேசியில் சொல்லிவிடுவது ஊசிதம்.

இத்திருத்தலத்திற்கு வருகையில்
2 மாலை,தேங்காய்,பழம்,வெத்தலை பாக்கு மற்றும் 21 சிறிய அகல் விளக்குகள் கொண்டு வந்து நெய் தீபம் இடவும். குருக்கள் அர்ச்சனை செய்து மாலை இடுவார் மாலையும் கழுத்தமாக  கோயிலை சுற்றி வரவும்.

அந்த  மாலையை வீட்டில் பத்திரமாக வைத்து கொள்ளவும், மணமான பின் அந்த மாலையை இத்திருத்தலத்திற்கு எதிரிலே இருக்கும் குளத்தில் விடவும்.

நீங்கள் நிறைய கோயில்களுக்கு சென்று இருப்பீர்கள் அந்த பட்டியலில் இந்த புனித தலத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை இங்கு சென்று திருமணம் நடந்துவிட்டால் மகிழ்ச்சி தானே, கண்டிப்பாக நடக்கும் என்றார்கள்; சென்றேன்,  நடந்தது.

திருச்சிற்றம்பலம்
ராஜா.க

#தஞ்சாவூர் #கண்டியூர் #திரிவேதிகுடி