செவ்வாய், 20 டிசம்பர், 2022

திருச்செந்தூரின் அடையாளம் !!

 எங்கள் திருச்செந்தூர் முதல் அடையாளம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அதற்கு பிறகு கல்வி கோயில்கள் மூலம் சிறந்த அடையாளம் தந்ததில் சி.பா #ஆதித்தனார் பங்கு அளப்பரியது. ஆம்.  ஆதித்தனார் ,

கோவிந்த்தமாள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்த இரு கல்லூரிகள் மூலம் மூன்று தலைமுறை யினர் பட்டம் 

பெற்றுள்ளனர். 


ஆண்களுக்கு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியும் , பெண்களுக்கு கோவிந்தமாள் கல்லூரி யும் உருவாக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் செயல் பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முன் இந்த இரு கோயில்களையும் கடந்து வந்து தான் சுப்ரமணியசுவாமியே தரிசிக்கலாம். 



கல்வி சேவையில் திரு. சி.பா. ஆதித்தனார் , சிவந்தி ஆதித்தனார் இவர்களின் பங்கும்  காலம் கடந்தும் அவர்கள் பெருமைகளை பறைசாற்றும்.


 #ஆதித்தனார் #கோவிந்தம்மாள் #கல்லூரி #திருச்செந்தூர்




 எங்கள் திருச்செந்தூர் முதல் அடையாளம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அதற்கு பிறகு கல்வி கோயில்கள் மூலம் சிறந்த அடையாளம் தந்ததில் சி.பா #ஆதித்தனார் பங்கு அளப்பரியது. ஆம்.  ஆதித்தனார் ,

கோவிந்த்தமாள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்த இரு கல்லூரிகள் மூலம் மூன்று தலைமுறை யினர் பட்டம் 

பெற்றுள்ளனர். 


ஆண்களுக்கு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியும் , பெண்களுக்கு கோவிந்தமாள் கல்லூரி யும் உருவாக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் செயல் பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முன் இந்த இரு கோயில்களையும் கடந்து வந்து தான் சுப்ரமணியசுவாமியே தரிசிக்கலாம். 



கல்வி சேவையில் திரு. சி.பா. ஆதித்தனார் , சிவந்தி ஆதித்தனார் இவர்களின் பங்கும்  காலம் கடந்தும் அவர்கள் பெருமைகளை பறைசாற்றும்.


 #ஆதித்தனார் #கோவிந்தம்மாள் #கல்லூரி #திருச்செந்தூர்




செவ்வாய், 22 நவம்பர், 2022

மேடைவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலை

 சில நாட்களுக்கு முன் நடந்தது.


வழக்கமாக செல்லும் office Bus இல் ,  நானும் என் நண்பரும் செல்கையில் அன்று ஏனோ அனைத்து சீட் களும் நிரம்பியது , காலை trip என்பதால் வேறு சில நிறுத்தங்களிலும் driver நிறுத்தியதால் நான்கைந்து நபர்கள் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது. 



ஒரு சிலரோ அடுத்த பஸ் ஸ்டாப்பிங் இறங்கி வேறு பஸ்சில்  ஏறி கொள்வர் இவர்கள் ஏனோ செய்யவில்லை. 5 பேரில் இருவர் எங்கள் சீட் அருகே நின்று கொண்டிருந்தனர் ,இருவரும் பெண்கள். அன்று மேடைவாக்கம்-சோழிங்கநல்லூர் செம ட்ராபிக். 




வெகு நேரமாக பேருந்து நகரவில்லை , அதில் ஒரு பெண்ணால் நிற்க முடியவில்லை என்பது பட்டுவர்த்தனமாக தெரிந்தது.  என் நண்பரை பார்த்தேன் , அடுத்த கனமே தெரிந்து விட்டது நான் என்ன செய்ய போகிறேன் என்று இருவரும் எழுந்து விட்டோம் அவர்களை அமர சொன்னோம். 


It's ok no problem என்ற வார்த்தைகள் , அட உட்காருங்க ஜீ என்றவுடன் இருவரும் அமர்ந்தனர்.  நானும் , என் நண்பரும் நின்று கொண்டு driver play பண்ணின இசை மழையில் மிதக்க என் நண்பர் என்னை எரிக்கும் பார்வையில் பார்த்தார். 


இனிமேல் உங்களை நான் பக்கத்தில் உட்கார வைக்க மாட்டேன் என்றார் , தலைவரே விடுங்க ladies , செண்டிமெண்ட் அப்படி என்று இழுத்தேன். இங்கே இந்த பஸ் எத்தனை பெண்கள் உள்ளனர் அவர்கள் இடம் கொடுத்தார்களா என்ற போது என்னிடம் பதில் இல்லை .  வருங்காலங்களில் மாறும் என்று நம்பிக்கையோடு பயணிப்போம். 


#officebus #omr #chennaitraffic #trafficupdate #Travel #womens

இவன்

ராஜா.க

 சில நாட்களுக்கு முன் நடந்தது.


வழக்கமாக செல்லும் office Bus இல் ,  நானும் என் நண்பரும் செல்கையில் அன்று ஏனோ அனைத்து சீட் களும் நிரம்பியது , காலை trip என்பதால் வேறு சில நிறுத்தங்களிலும் driver நிறுத்தியதால் நான்கைந்து நபர்கள் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது. 



ஒரு சிலரோ அடுத்த பஸ் ஸ்டாப்பிங் இறங்கி வேறு பஸ்சில்  ஏறி கொள்வர் இவர்கள் ஏனோ செய்யவில்லை. 5 பேரில் இருவர் எங்கள் சீட் அருகே நின்று கொண்டிருந்தனர் ,இருவரும் பெண்கள். அன்று மேடைவாக்கம்-சோழிங்கநல்லூர் செம ட்ராபிக். 




வெகு நேரமாக பேருந்து நகரவில்லை , அதில் ஒரு பெண்ணால் நிற்க முடியவில்லை என்பது பட்டுவர்த்தனமாக தெரிந்தது.  என் நண்பரை பார்த்தேன் , அடுத்த கனமே தெரிந்து விட்டது நான் என்ன செய்ய போகிறேன் என்று இருவரும் எழுந்து விட்டோம் அவர்களை அமர சொன்னோம். 


It's ok no problem என்ற வார்த்தைகள் , அட உட்காருங்க ஜீ என்றவுடன் இருவரும் அமர்ந்தனர்.  நானும் , என் நண்பரும் நின்று கொண்டு driver play பண்ணின இசை மழையில் மிதக்க என் நண்பர் என்னை எரிக்கும் பார்வையில் பார்த்தார். 


இனிமேல் உங்களை நான் பக்கத்தில் உட்கார வைக்க மாட்டேன் என்றார் , தலைவரே விடுங்க ladies , செண்டிமெண்ட் அப்படி என்று இழுத்தேன். இங்கே இந்த பஸ் எத்தனை பெண்கள் உள்ளனர் அவர்கள் இடம் கொடுத்தார்களா என்ற போது என்னிடம் பதில் இல்லை .  வருங்காலங்களில் மாறும் என்று நம்பிக்கையோடு பயணிப்போம். 


#officebus #omr #chennaitraffic #trafficupdate #Travel #womens

இவன்

ராஜா.க

திங்கள், 14 நவம்பர், 2022

காந்தாரா என் பார்வையில் !!

 மனிதன் தான் கடவுள் , கடவுள் தான் மனிதன். கடவுள் மனிதனிடம் , 

தான் கூறியதை நிறைவேற்றியதை போல நீ கூறியதை நிறைவேற்று என கூறி தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பறினார் கடவுள் என்பது தான் காந்தாரா..



மலை வாழ் மக்கள் அவர்களுக்கு என ஒரு கடவுள் , அந்த கடவுள் என்னோடு வர வேண்டும் என ராஜா ஒருவர் கேட்க ? அதற்கு அந்த கடவுள, என் மக்களுக்கு என்ன என்ன கொடுப்பாய் என பதிலுக்கு கேட்க ? தனக்கு சொந்தமான இந்த நிலங்களை தருகிறேன் என கூறுகிறார்.



பேராசை கொண்ட மனிதன் தானே , ராஜாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் கொடுத்த இடத்தை கேட்கிறார்கள்.

 எப்படி கடவுள் ?(மனிதர்கள் ,கோ , அரசு) காப்பாற்றினார் என்பதை சுவாரஸ்யமான திரைகதையால் 

படம் முழுக்க அந்த கிராம மக்களுடன் வாழும் உணர்வை பெருகிறோம். 


கமல் கூறுவார் சினிமாவே ஒரு மொழி தானே அந்த மாதிரி (கன்னடம் , துளு) என்று சில இடங்களில் பேசினாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது , கன்னட மக்களின் விளையாட்டு , அவர்கள் சாமி கும்பிடும் முறை அனைத்தும் தமிழ்நாடு மக்களோடு ஒத்துப்போகும் படியாக உள்ளதால் என்னவோ படத்தோடு ஒண்றிக்கொள்ள முடிகிறது.



இறை நம்பிக்கை உள்ளவர்கள் படம் பார்க்கும் போது அவர்களின் சிறு வயதில் கேட்ட கதைகள் பார்த்த மனிதர்கள் கதாப்பாத்திரமாக வருவார்கள். இறுதி காட்சி எல்லாம் மெய் சிலிர்த்து போகும் அளவுக்கான நடிப்பு , கடவுளின் உடல் மொழி கிராமத்து மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைத்திருப்பது மயிர்கூச்சரியும் காட்சி (goosebumps). படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது படத்தின் தாக்கம் சிறுது நேரம் இருக்க வேண்டும் இருந்தது.



கொசுறு தகவல்:  Night Show பார்த்துவிட்டு பைக்கில் செல்கையில் 7 எட்டு நாய்கள் அருகில் செல்கையில் காந்தார மாதிரி ஓஓஓஓஓஓம்ம்ம் என்றேன் நாய்கள் தெறிந்து ஓடியது 😲😀😂





#Kantara #Kantaramovie 

இவன்

ராஜா க


 மனிதன் தான் கடவுள் , கடவுள் தான் மனிதன். கடவுள் மனிதனிடம் , 

தான் கூறியதை நிறைவேற்றியதை போல நீ கூறியதை நிறைவேற்று என கூறி தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பறினார் கடவுள் என்பது தான் காந்தாரா..



மலை வாழ் மக்கள் அவர்களுக்கு என ஒரு கடவுள் , அந்த கடவுள் என்னோடு வர வேண்டும் என ராஜா ஒருவர் கேட்க ? அதற்கு அந்த கடவுள, என் மக்களுக்கு என்ன என்ன கொடுப்பாய் என பதிலுக்கு கேட்க ? தனக்கு சொந்தமான இந்த நிலங்களை தருகிறேன் என கூறுகிறார்.



பேராசை கொண்ட மனிதன் தானே , ராஜாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் கொடுத்த இடத்தை கேட்கிறார்கள்.

 எப்படி கடவுள் ?(மனிதர்கள் ,கோ , அரசு) காப்பாற்றினார் என்பதை சுவாரஸ்யமான திரைகதையால் 

படம் முழுக்க அந்த கிராம மக்களுடன் வாழும் உணர்வை பெருகிறோம். 


கமல் கூறுவார் சினிமாவே ஒரு மொழி தானே அந்த மாதிரி (கன்னடம் , துளு) என்று சில இடங்களில் பேசினாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது , கன்னட மக்களின் விளையாட்டு , அவர்கள் சாமி கும்பிடும் முறை அனைத்தும் தமிழ்நாடு மக்களோடு ஒத்துப்போகும் படியாக உள்ளதால் என்னவோ படத்தோடு ஒண்றிக்கொள்ள முடிகிறது.



இறை நம்பிக்கை உள்ளவர்கள் படம் பார்க்கும் போது அவர்களின் சிறு வயதில் கேட்ட கதைகள் பார்த்த மனிதர்கள் கதாப்பாத்திரமாக வருவார்கள். இறுதி காட்சி எல்லாம் மெய் சிலிர்த்து போகும் அளவுக்கான நடிப்பு , கடவுளின் உடல் மொழி கிராமத்து மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைத்திருப்பது மயிர்கூச்சரியும் காட்சி (goosebumps). படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது படத்தின் தாக்கம் சிறுது நேரம் இருக்க வேண்டும் இருந்தது.



கொசுறு தகவல்:  Night Show பார்த்துவிட்டு பைக்கில் செல்கையில் 7 எட்டு நாய்கள் அருகில் செல்கையில் காந்தார மாதிரி ஓஓஓஓஓஓம்ம்ம் என்றேன் நாய்கள் தெறிந்து ஓடியது 😲😀😂





#Kantara #Kantaramovie 

இவன்

ராஜா க


சனி, 12 நவம்பர், 2022

குடிகாரருடன் ஒரு பயணம் !!

 இந்த மாதிரி கதை எழுத எனக்கு inspiration @Sollakudatham இவரை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறோம் என்று கூறிவிட்டு கதைக்கு செல்வோம்.

திட்டமிடா பயணம் என்பதால் இரயில் டிக்கெட் கிடைக்கவில்லை @redBus_in உதவியுடன் ticket book செய்கையில் individual sleeper சீட் , double sleeper சீட் இரண்டும் இருந்தது. 


இரண்டு seat க்கும் 75₹ வித்யாசம் தான்.

இந்த ரூபாயை மிச்சம் பிடித்து தான் ஊரப்பாகத்தில் அரை ground இடம் வாங்க போறோம் என்ற நினைப்பு அதனால் double  sleeper சீட் தான் புக் பண்ணியாச்சு.


உடன்குடி யிலிருந்து பஸ் கிழம்பும் போது நடத்துனர் call பண்ணி அண்ணே கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க என்றார். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ்க்காகலாம் சூனா , பானா காத்திருக்க வேண்டி இருக்கு என்ற insta ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த பொழுது பஸ் வந்தது.



Busஇல் எனக்கான சீட்டில் கால் நீட்டி உடகார்ந்த போது பக்கத்து சீட் பேர்வழி வரல , இதுக்கு அப்புறம் வருவார் போலனு நினைத்து கொண்டே,  charging point வேலை செய்யுதா செக் பண்ணிட்டு மல்லாக்கா படுத்து கொண்டு வானில் நட்சத்திரங்களோடு , நகர  தொடங்கியது பயணம். தூத்துக்குடி வந்தாயிற்று.



வழக்கமாக நிற்கும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் கடையில் பிடித்த பொறிச்ச புரோட்டா வும் இட்லி வாங்கி கொண்டு சீட்டுக்கு வந்தேன் , பஸ் கிழம்பியது பக்கத்து சீட்டு க்கு ஆள் வரவில்லை சின்ன சந்தோஷம். PS-1 பார்த்து கொண்டே டின்னர் முடித்து விட்டு படமும் ஓடியது.



பஸ் மதுரை நெருங்க தூக்கமும் எட்டி பார்த்தது. இன்னும் என்னடா படம் தூங்கு என்ற range இல் double seat comfortable தூங்கியாச்சு. 

தூங்கா நகரம் (மதுரை) வந்தது , என் தூக்கத்தை கெடுக்கும் இம்சை யும் கூடவே வர போகிறது என்று எனக்கு அப்போ தெரியல.



பக்கத்து சீட் பேர்வழி மதுரை யில் ஏறினார் , சோகம் என்னன்னா படி வழியா அவரால எற முடியல அந்த அளவுக்கு மது வோடு இணக்கம் போல , இணைந்த கைகள் ஹீரோனு நினைப்பு எனக்கு அவரின் கையை  பிடித்து சீட்டில் அமர்ந்தார். ரொம்ப thanks பாஸ் என்றார் , பரவாயில்லை என்றேன்.


சாப்பிட நினைத்து அவர் கொண்டு வந்த பார்சலை ஓப்பன் செய்தார் ,பரோட்டா வை பிச்சு போட்டு குருமாவை எடுத்தார் , ஆண்டவன் முடிச்சை விட கடைக்காரர்கள் தான் கற்று கொண்ட மொத்த வித்தை யையும் காட்டி கஷ்டமான முடிச்சு போட்டுருப்பார் போல , அண்ணே கொஞ்சம் பிரிச்சி கொடுங்க என்றார். 



சரி பொறுமையா

அந்த ரப்பர் பேண்டை கழட்டி கொடுத்தேன் , சோகம் என்னன்னா நமக்கு இந்த மாதிரி நடக்கும் போது எரிச்சல் வரும் அடுத்தவர்களுக்கு என்று வரும் போது பொறுமை யா கை ஆள்வோம் அது தான் டிசைன் போல. இந்த உதவிக்கும் ரொம்ப thanks அண்ணே என்றார். அட இருக்கட்டும் என்றேன்.



தூங்க தொடங்கினேன். பக்கத்து சீட் பேர்வழி சாப்பிட்டு விட்டு போனில் சத்தமாக பேச தொடங்கினார் , ரைட்டு இன்று நம் தூக்கம் அவ்ளோ தான் போல என்று நினைத்தேன். பேசி முடித்து விட்டு lover  அண்ணே , புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறா என்னை என்று காதல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான் அந்த தம்பி.



அடேய் போதும் டா , என்னை தூங்கவிடு தம்பி என்று மனதுக்குள் சொல்லி கொண்டேன். அழ ஆரம்பித்தான் ஒரு வழியா மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி விட்டு அப்படியே தூங்கி விட்டார் அந்த குடிகாரர் தம்பி. இந்த மாதிரி காலேஜ் days என் நண்பர்கள் செய்வது ஏன் நினைவுக்கு வந்தது.



காதல் இன்னும் இவ்வுலகில் உயிர்ப்போடு உள்ளது தான் போல அதை நினைத்து கொண்டு ,  சிரித்து கொண்டே தூங்க தொடங்கினேன். திடீரென ஒரு சத்தம் , ஆம் குறட்டை சத்தம் , தம்பி பயங்கரமா குறட்டை விட்டு கொண்டே அவரின் கைகளை என் மீது போட்டார் , அவரின் கைகளை தள்ளி விட்டேன்.



ஆனால் குறட்டை சத்தம் தொடர்ந்து ஒலித்தது. எனக்கு தூக்கம் எல்லாம் பல கிலோமீட்டர் க்கு அப்பால் சென்று விட்டது. இனிமேல் இந்த மாதிரி சீட் புக் பண்ணுவ என எனக்கு நானே கேட்டு கொண்டேன். ஒரு வழியா தூங்கி எழுகையில் கூடுவாஞ்செரி அருகில் பஸ் சென்றது.


சுதாரித்து எழுந்து கொண்டு பக்கத்து சீட் தம்பியை எழுப்பினேன் ,  அவர் எழுந்து அண்ணே ரொம்ப thanks என்றார் சிரித்து கொண்டே வண்டலூர் இறங்கி கொண்டேன். காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் இன்னும் மாறவில்லை. கதைகள் தொடரும் ..


#travel  #Travelexperience #journey 

இவண் 

ராஜா. க


 இந்த மாதிரி கதை எழுத எனக்கு inspiration @Sollakudatham இவரை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறோம் என்று கூறிவிட்டு கதைக்கு செல்வோம்.

திட்டமிடா பயணம் என்பதால் இரயில் டிக்கெட் கிடைக்கவில்லை @redBus_in உதவியுடன் ticket book செய்கையில் individual sleeper சீட் , double sleeper சீட் இரண்டும் இருந்தது. 


இரண்டு seat க்கும் 75₹ வித்யாசம் தான்.

இந்த ரூபாயை மிச்சம் பிடித்து தான் ஊரப்பாகத்தில் அரை ground இடம் வாங்க போறோம் என்ற நினைப்பு அதனால் double  sleeper சீட் தான் புக் பண்ணியாச்சு.


உடன்குடி யிலிருந்து பஸ் கிழம்பும் போது நடத்துனர் call பண்ணி அண்ணே கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க என்றார். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ்க்காகலாம் சூனா , பானா காத்திருக்க வேண்டி இருக்கு என்ற insta ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த பொழுது பஸ் வந்தது.



Busஇல் எனக்கான சீட்டில் கால் நீட்டி உடகார்ந்த போது பக்கத்து சீட் பேர்வழி வரல , இதுக்கு அப்புறம் வருவார் போலனு நினைத்து கொண்டே,  charging point வேலை செய்யுதா செக் பண்ணிட்டு மல்லாக்கா படுத்து கொண்டு வானில் நட்சத்திரங்களோடு , நகர  தொடங்கியது பயணம். தூத்துக்குடி வந்தாயிற்று.



வழக்கமாக நிற்கும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் கடையில் பிடித்த பொறிச்ச புரோட்டா வும் இட்லி வாங்கி கொண்டு சீட்டுக்கு வந்தேன் , பஸ் கிழம்பியது பக்கத்து சீட்டு க்கு ஆள் வரவில்லை சின்ன சந்தோஷம். PS-1 பார்த்து கொண்டே டின்னர் முடித்து விட்டு படமும் ஓடியது.



பஸ் மதுரை நெருங்க தூக்கமும் எட்டி பார்த்தது. இன்னும் என்னடா படம் தூங்கு என்ற range இல் double seat comfortable தூங்கியாச்சு. 

தூங்கா நகரம் (மதுரை) வந்தது , என் தூக்கத்தை கெடுக்கும் இம்சை யும் கூடவே வர போகிறது என்று எனக்கு அப்போ தெரியல.



பக்கத்து சீட் பேர்வழி மதுரை யில் ஏறினார் , சோகம் என்னன்னா படி வழியா அவரால எற முடியல அந்த அளவுக்கு மது வோடு இணக்கம் போல , இணைந்த கைகள் ஹீரோனு நினைப்பு எனக்கு அவரின் கையை  பிடித்து சீட்டில் அமர்ந்தார். ரொம்ப thanks பாஸ் என்றார் , பரவாயில்லை என்றேன்.


சாப்பிட நினைத்து அவர் கொண்டு வந்த பார்சலை ஓப்பன் செய்தார் ,பரோட்டா வை பிச்சு போட்டு குருமாவை எடுத்தார் , ஆண்டவன் முடிச்சை விட கடைக்காரர்கள் தான் கற்று கொண்ட மொத்த வித்தை யையும் காட்டி கஷ்டமான முடிச்சு போட்டுருப்பார் போல , அண்ணே கொஞ்சம் பிரிச்சி கொடுங்க என்றார். 



சரி பொறுமையா

அந்த ரப்பர் பேண்டை கழட்டி கொடுத்தேன் , சோகம் என்னன்னா நமக்கு இந்த மாதிரி நடக்கும் போது எரிச்சல் வரும் அடுத்தவர்களுக்கு என்று வரும் போது பொறுமை யா கை ஆள்வோம் அது தான் டிசைன் போல. இந்த உதவிக்கும் ரொம்ப thanks அண்ணே என்றார். அட இருக்கட்டும் என்றேன்.



தூங்க தொடங்கினேன். பக்கத்து சீட் பேர்வழி சாப்பிட்டு விட்டு போனில் சத்தமாக பேச தொடங்கினார் , ரைட்டு இன்று நம் தூக்கம் அவ்ளோ தான் போல என்று நினைத்தேன். பேசி முடித்து விட்டு lover  அண்ணே , புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறா என்னை என்று காதல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான் அந்த தம்பி.



அடேய் போதும் டா , என்னை தூங்கவிடு தம்பி என்று மனதுக்குள் சொல்லி கொண்டேன். அழ ஆரம்பித்தான் ஒரு வழியா மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி விட்டு அப்படியே தூங்கி விட்டார் அந்த குடிகாரர் தம்பி. இந்த மாதிரி காலேஜ் days என் நண்பர்கள் செய்வது ஏன் நினைவுக்கு வந்தது.



காதல் இன்னும் இவ்வுலகில் உயிர்ப்போடு உள்ளது தான் போல அதை நினைத்து கொண்டு ,  சிரித்து கொண்டே தூங்க தொடங்கினேன். திடீரென ஒரு சத்தம் , ஆம் குறட்டை சத்தம் , தம்பி பயங்கரமா குறட்டை விட்டு கொண்டே அவரின் கைகளை என் மீது போட்டார் , அவரின் கைகளை தள்ளி விட்டேன்.



ஆனால் குறட்டை சத்தம் தொடர்ந்து ஒலித்தது. எனக்கு தூக்கம் எல்லாம் பல கிலோமீட்டர் க்கு அப்பால் சென்று விட்டது. இனிமேல் இந்த மாதிரி சீட் புக் பண்ணுவ என எனக்கு நானே கேட்டு கொண்டேன். ஒரு வழியா தூங்கி எழுகையில் கூடுவாஞ்செரி அருகில் பஸ் சென்றது.


சுதாரித்து எழுந்து கொண்டு பக்கத்து சீட் தம்பியை எழுப்பினேன் ,  அவர் எழுந்து அண்ணே ரொம்ப thanks என்றார் சிரித்து கொண்டே வண்டலூர் இறங்கி கொண்டேன். காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் இன்னும் மாறவில்லை. கதைகள் தொடரும் ..


#travel  #Travelexperience #journey 

இவண் 

ராஜா. க


சனி, 29 அக்டோபர், 2022

நானே வருவேன்

 நடிகர் ராமராஜன் நடித்த படம். "ஊரு விட்டு ஊரு வந்து " நடிகை கௌதமி யின் கல்யாணம் கடைசி நேரத்தில் தடைபட்டு நிற்க ராமராஜன் அம்மா நீ கட்டுடா தாலியை என சொல்ல கல்யாணம் செய்கிறார் கதாநாயகன். முதல் இரவில் கௌதமி க்கு பேய் பிடித்தது தெரிய வருகிறது. எதற்கு கௌதமியை அந்த பேய் பிடித்தது.


சிங்கப்பூர் உள்ள தன் தந்தை யை தூக்கிலிருந்து ராமராஜன் எப்படி காப்பாற்றினார் என்பதை கவுண்ட மணி ,செந்தில் , காமெடி இளையராஜா இசை சொர்க்கமே என்றாலும் பாடல் இந்த படம் தான் )சுவாராஸ்யமாக சொல்லி இருப்பார்கள். 

சரி இந்த படத்தை ஏன் சொல்லறோம் னா ? 


சமிபத்தில் பார்த்த நானே வருவேன் படமும் கிட்ட திட்ட ஒரே கதை தான் , தன் சகோதரனை கொன்றவனை கொல்ல துடிக்கும் ஆவி இன்னொரு உயிர்க்குள் போய் அவளை பாடாய் படுத்தி எடுக்கிறது. அந்த ஆவியுடன் பேசி அது கேட்பதை செய்ய ஒத்துக்கொள்கிறான் கதாநாயகன் தனுஷ்.

#நானேவருவேன்



முதல் பாதியில் ஒரு மகளின் தந்தையாக அப்படி ஒரு பக்குவபட்ட நடிப்பு , அந்த பெண் குழந்தை தனுஷ் ஒவ்வொரு முறையும் Dada என்று கூறுகையில் அவ்ளோ அழகு. தன் குழந்தை க்கு பிரச்சினை என்ற பின் தனுஷ் தன் முகத்தில் காட்டும் expression அவ்ளோ எதார்த்தம். #தனுஷ் #நானேவருவேன்



இரண்டாம் பாதியில் மற்றோரு தனுஷ் அவரும் மனைவி குழந்தை களுடன்  சந்தோஷமாக வாழ்கிறார் .  இரவில் வேட்டை க்கு செல்கிறார் , அவருக்கு தெரியமால் மகனும் அவருடன் ஏறி செல்கிறார் , மகனுக்கு என்ன ஆனது ? என இரண்டு கதைகளையும் சுவாரஸ்யமான முறையில் முடித்து வைக்கிறார் இயக்குனர் #செல்வராகவன்



இரண்டாம் பாதியில் வரும் தனுஷ் நடிப்பு நடிப்பின் அடுத்த பரிமாணம் , ஒரே ஒரு ஊரிலே பாட்டுக்கு தனுஷ் போடும் ஆட்டம் கலக்கல். @dhanushkraja தன் கண் முன்னே தன் மகள் உடல்நிலை மோசமாவதை ஏற்று கொள்ள இயலாமல் நொறுங்கிறார் #தனுஷ் #நானேவருவேன்


இறுதியில் தன் மகளை காப்பாறினாரா , அந்த ஆவியின் ஆசை நிறைவேறியதா என்பதை எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் தன் அனுபவ இயக்கத்தால் நகர்த்தி செல்கிறார் #செல்வராகவன் #நானேவருவேன் 

வென்று விட்டான் 💪🏼👏🏼👏🏼👌🏻👌🏻#Amazonprime








 நடிகர் ராமராஜன் நடித்த படம். "ஊரு விட்டு ஊரு வந்து " நடிகை கௌதமி யின் கல்யாணம் கடைசி நேரத்தில் தடைபட்டு நிற்க ராமராஜன் அம்மா நீ கட்டுடா தாலியை என சொல்ல கல்யாணம் செய்கிறார் கதாநாயகன். முதல் இரவில் கௌதமி க்கு பேய் பிடித்தது தெரிய வருகிறது. எதற்கு கௌதமியை அந்த பேய் பிடித்தது.


சிங்கப்பூர் உள்ள தன் தந்தை யை தூக்கிலிருந்து ராமராஜன் எப்படி காப்பாற்றினார் என்பதை கவுண்ட மணி ,செந்தில் , காமெடி இளையராஜா இசை சொர்க்கமே என்றாலும் பாடல் இந்த படம் தான் )சுவாராஸ்யமாக சொல்லி இருப்பார்கள். 

சரி இந்த படத்தை ஏன் சொல்லறோம் னா ? 


சமிபத்தில் பார்த்த நானே வருவேன் படமும் கிட்ட திட்ட ஒரே கதை தான் , தன் சகோதரனை கொன்றவனை கொல்ல துடிக்கும் ஆவி இன்னொரு உயிர்க்குள் போய் அவளை பாடாய் படுத்தி எடுக்கிறது. அந்த ஆவியுடன் பேசி அது கேட்பதை செய்ய ஒத்துக்கொள்கிறான் கதாநாயகன் தனுஷ்.

#நானேவருவேன்



முதல் பாதியில் ஒரு மகளின் தந்தையாக அப்படி ஒரு பக்குவபட்ட நடிப்பு , அந்த பெண் குழந்தை தனுஷ் ஒவ்வொரு முறையும் Dada என்று கூறுகையில் அவ்ளோ அழகு. தன் குழந்தை க்கு பிரச்சினை என்ற பின் தனுஷ் தன் முகத்தில் காட்டும் expression அவ்ளோ எதார்த்தம். #தனுஷ் #நானேவருவேன்



இரண்டாம் பாதியில் மற்றோரு தனுஷ் அவரும் மனைவி குழந்தை களுடன்  சந்தோஷமாக வாழ்கிறார் .  இரவில் வேட்டை க்கு செல்கிறார் , அவருக்கு தெரியமால் மகனும் அவருடன் ஏறி செல்கிறார் , மகனுக்கு என்ன ஆனது ? என இரண்டு கதைகளையும் சுவாரஸ்யமான முறையில் முடித்து வைக்கிறார் இயக்குனர் #செல்வராகவன்



இரண்டாம் பாதியில் வரும் தனுஷ் நடிப்பு நடிப்பின் அடுத்த பரிமாணம் , ஒரே ஒரு ஊரிலே பாட்டுக்கு தனுஷ் போடும் ஆட்டம் கலக்கல். @dhanushkraja தன் கண் முன்னே தன் மகள் உடல்நிலை மோசமாவதை ஏற்று கொள்ள இயலாமல் நொறுங்கிறார் #தனுஷ் #நானேவருவேன்


இறுதியில் தன் மகளை காப்பாறினாரா , அந்த ஆவியின் ஆசை நிறைவேறியதா என்பதை எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் தன் அனுபவ இயக்கத்தால் நகர்த்தி செல்கிறார் #செல்வராகவன் #நானேவருவேன் 

வென்று விட்டான் 💪🏼👏🏼👏🏼👌🏻👌🏻#Amazonprime








வெள்ளி, 14 அக்டோபர், 2022

உன்னால் முடியும் !!

 உன்னால் முடியும் !!


90's களில் ஆடியோ கேசட்டுகள் பிரபலம் , அதில் பெயர் போனது HMV கம்பெனி. இவர்களின் பக்தி பாடல்கள் ஆல்பம் பெரிய ஹிட். அதில் ஒன்று சூலமங்களம் sister's பாடிய கந்த சஷ்டி கவசம் , கந்த குரு குவசம்.  ஆனால் இவர்கள் எல்லா கடைகளுக்கும் தங்கள் கேசட்டுகளை கொடுக்க மாட்டார்கள் , ஒரு குறிப்பிட்ட deposit தொகை கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.


எங்கள் கடை அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த நேரம் , சண்முகவிலாசம் புக்ஸ்டால். எல்லாருக்கும் வழி கிடைத்தது போலவே எங்களுக்கும் கிடைத்தது ஆம் HMV இணையாக symphony என்ற கேசட் கம்பெனி அப்போது பிரபலமாகி தொடங்கி இருந்தது. அவர்கள் எங்கள் கடைக்கு எந்த deposit தொகை யும் இல்லாமல் உங்களுக்கு விற்பனை ஆவதை வைத்து எங்களுக்கு பணம் செலுத்தினால் போதும் என்றனர்.



Symphony யும் கந்த சஷ்டி கவசம் ஆல்பம் ரெடி செய்தனர் பாடியது மகாநதி பட புகழ் ஷோபனா. எங்கள் கடைக்கு முதலில் 500 கேசட்டுகள் கொடுத்தனர். பள்ளி நேரங்கள் தவிர கிடைக்கும் நேரங்களில் கடைக்கு சென்று வியாபாரம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 


டேப்பிர் கார்டில் மாகநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாட்டை கேட்டேன் , மிகவும் பிடித்தது. சரி இதை விற்பனை செய்ய வேண்டும் ஆனால் கேட்க்கும் பலரும் HMV யின்  சூலமங்களம்  சிஸ்ட்ரஸ் பாடிய கேசட்டுகள் தான் வேண்டும் என்றனர். தனது முயற்சி யில் சற்றும் தளராத விகர்மாதித்ன் போல வந்தவர்களிடம் இந்த பாடலை ஒரு கேட்டு பாருங்கள் என்ற கேட்க ஆரம்பித்தேன்.



முதல் முயற்சி வெற்றி கிடைத்தது , ஆம் கேட்டவர்களுக்கு பிடித்த போக அதே யுக்தியை கையாண்டேன். மற்ற கேசட்டுகள் கேட்டு வந்தாலும் இந்த கேசட் விளம்பர படுத்தினேன். ஒரு வழியாக 500 கேசட்டுகள் விற்று தீர்ந்தது. அடுத்து முறை 1000 கொடுத்தார்கள் நம்பிக்கை அடிப்படை யில் , உள்ளூர வைராக்கியம் இவர்கள் நம்மை நம்பி கொடுத்துள்ளனர்.



கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் ரெக்கில் மகாநதி ஷோபனா விற்கென்று தனி Row , வருப்வர்களிடத்தில் எல்லாம் இந்த கேசட்டுகள் விற்று தீர்த்து விட வேண்டும் என்ற இலட்சியம். கடவுள் ஆசியுடன் இனிதே நடந்தது. ஆம் 5000 கேசட்டுகள் விற்பனை செய்தோம்.

பின்னாளில் sympony கம்பெனி யின் பல ஆலபங்கள் hit. குறிப்பாக "கட்டும் கட்டி " என்ற ஆல்பம் இன்று வரை மார்கழி மாதத்தில் ஒலிக்கும். மனதில் சின்ன மகிழ்ச்சி நம்மால் முடியும் என்று.


#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால் 

#திருச்செந்தூர்

#ShanmugavilasamBookStall

#Tiruchendur 





 உன்னால் முடியும் !!


90's களில் ஆடியோ கேசட்டுகள் பிரபலம் , அதில் பெயர் போனது HMV கம்பெனி. இவர்களின் பக்தி பாடல்கள் ஆல்பம் பெரிய ஹிட். அதில் ஒன்று சூலமங்களம் sister's பாடிய கந்த சஷ்டி கவசம் , கந்த குரு குவசம்.  ஆனால் இவர்கள் எல்லா கடைகளுக்கும் தங்கள் கேசட்டுகளை கொடுக்க மாட்டார்கள் , ஒரு குறிப்பிட்ட deposit தொகை கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.


எங்கள் கடை அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த நேரம் , சண்முகவிலாசம் புக்ஸ்டால். எல்லாருக்கும் வழி கிடைத்தது போலவே எங்களுக்கும் கிடைத்தது ஆம் HMV இணையாக symphony என்ற கேசட் கம்பெனி அப்போது பிரபலமாகி தொடங்கி இருந்தது. அவர்கள் எங்கள் கடைக்கு எந்த deposit தொகை யும் இல்லாமல் உங்களுக்கு விற்பனை ஆவதை வைத்து எங்களுக்கு பணம் செலுத்தினால் போதும் என்றனர்.



Symphony யும் கந்த சஷ்டி கவசம் ஆல்பம் ரெடி செய்தனர் பாடியது மகாநதி பட புகழ் ஷோபனா. எங்கள் கடைக்கு முதலில் 500 கேசட்டுகள் கொடுத்தனர். பள்ளி நேரங்கள் தவிர கிடைக்கும் நேரங்களில் கடைக்கு சென்று வியாபாரம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 


டேப்பிர் கார்டில் மாகநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாட்டை கேட்டேன் , மிகவும் பிடித்தது. சரி இதை விற்பனை செய்ய வேண்டும் ஆனால் கேட்க்கும் பலரும் HMV யின்  சூலமங்களம்  சிஸ்ட்ரஸ் பாடிய கேசட்டுகள் தான் வேண்டும் என்றனர். தனது முயற்சி யில் சற்றும் தளராத விகர்மாதித்ன் போல வந்தவர்களிடம் இந்த பாடலை ஒரு கேட்டு பாருங்கள் என்ற கேட்க ஆரம்பித்தேன்.



முதல் முயற்சி வெற்றி கிடைத்தது , ஆம் கேட்டவர்களுக்கு பிடித்த போக அதே யுக்தியை கையாண்டேன். மற்ற கேசட்டுகள் கேட்டு வந்தாலும் இந்த கேசட் விளம்பர படுத்தினேன். ஒரு வழியாக 500 கேசட்டுகள் விற்று தீர்ந்தது. அடுத்து முறை 1000 கொடுத்தார்கள் நம்பிக்கை அடிப்படை யில் , உள்ளூர வைராக்கியம் இவர்கள் நம்மை நம்பி கொடுத்துள்ளனர்.



கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் ரெக்கில் மகாநதி ஷோபனா விற்கென்று தனி Row , வருப்வர்களிடத்தில் எல்லாம் இந்த கேசட்டுகள் விற்று தீர்த்து விட வேண்டும் என்ற இலட்சியம். கடவுள் ஆசியுடன் இனிதே நடந்தது. ஆம் 5000 கேசட்டுகள் விற்பனை செய்தோம்.

பின்னாளில் sympony கம்பெனி யின் பல ஆலபங்கள் hit. குறிப்பாக "கட்டும் கட்டி " என்ற ஆல்பம் இன்று வரை மார்கழி மாதத்தில் ஒலிக்கும். மனதில் சின்ன மகிழ்ச்சி நம்மால் முடியும் என்று.


#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால் 

#திருச்செந்தூர்

#ShanmugavilasamBookStall

#Tiruchendur 





திங்கள், 3 அக்டோபர், 2022

மண்ணின் மைந்தன்


 பத்திரிக்கையில் கார்டுனிஸ்ட் ஆக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒரு சராசரி மனிதன் ,  தன் மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தி யாக எப்படி உருவானார் ? என்பதை 2மணி நேரத்தில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்து , அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.


கதையின் நாயகன் தன் எண்ணங்களை கார்ட்டூன் மூலம் பேச்சு பொருளாகி புயலை கிளப்புகிறான் , பத்திரிக்கை யின் தன் உயரதிகாரி நாயகனை கண்டிக்க வேலையை உதறி தள்ளி விட்டு சினிமா செல்கிறான்,  அங்கே தன் மக்கள் கேளிக்கை பொருளாவதை கண்டு அம்மக்களுக்கு தன் முயன்றதை பத்திரிகை மூலம் செய்ய முயல்கிறார்.


எம் மண்ணில் என் மாநில

மக்களுக்கு தான் முதல் உரிமை , பத்திரிகை மூலம் பரப்புகிறான். அது வரை மனதில் புழங்கி கொண்டிருந்த மக்களுக்கு தனக்கான ஒரு நபர் / பத்திரிகை வந்தது கண்டு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கரம் நீள்கிறது (காவல் துறை உட்பட).


பத்திரிகையை கட்சி யாக மாற்றி அதிகார மையத்தை நோக்கி நகர்கிறான் , அவனது துடிப்பான பேச்சில் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். களத்தில் இறங்கி தன் மாநில மக்களுக்கு தான் முன்னுரிமை என சுபாஷ் சந்திர போஸ் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.  அடி மட்ட தொண்டர்கள் வரை உதவிகள் செய்து பூஜை அறையில் தன் புகைப்படம் வைக்கின்ற 

தலைவனாக உருவாகிறான்.


கட்சி யை காங்கிரஸ் உடன் சேர்க்க கட்டாயத்த படுத்துகின்றனர். உதறி தள்ளுகிறான். எமர்ஜென்சி யை தனக்கு சாதுர்யமாக மாற்றி கொண்டு அவன் பாதையை நோக்கி காய்களை நகர்த்தி கொள்கிறான். இறுதியில் தன்

 கட்சி யை சேர்ந்த நபரை முதலமைச்சர் ஆக்கி கிங் மேக்கராக மக்கள் மனதில் நிற்கிறான்.


கதையின் நாயகன்

Nawazuddin Siddiqui அவ்ளோ நேர்த்தி யாக நடித்திருந்தார் என்பதை தாண்டி தாக்கரே வே வாழ்ந்திருந்தார். ஹிந்தி தெரியத எனக்கு கூட "ஜெய் மகாராஷ்ட்ரா" என என்னை அறியாமல் சொல்ல வைக்கும் அளவுக்கு ghoosebup நடிப்பு.பலமான பின்னணி இசை @NetflixIndia உள்ளது #Thackeray


இவண்

ராஜா.க



 பத்திரிக்கையில் கார்டுனிஸ்ட் ஆக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒரு சராசரி மனிதன் ,  தன் மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தி யாக எப்படி உருவானார் ? என்பதை 2மணி நேரத்தில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்து , அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.


கதையின் நாயகன் தன் எண்ணங்களை கார்ட்டூன் மூலம் பேச்சு பொருளாகி புயலை கிளப்புகிறான் , பத்திரிக்கை யின் தன் உயரதிகாரி நாயகனை கண்டிக்க வேலையை உதறி தள்ளி விட்டு சினிமா செல்கிறான்,  அங்கே தன் மக்கள் கேளிக்கை பொருளாவதை கண்டு அம்மக்களுக்கு தன் முயன்றதை பத்திரிகை மூலம் செய்ய முயல்கிறார்.


எம் மண்ணில் என் மாநில

மக்களுக்கு தான் முதல் உரிமை , பத்திரிகை மூலம் பரப்புகிறான். அது வரை மனதில் புழங்கி கொண்டிருந்த மக்களுக்கு தனக்கான ஒரு நபர் / பத்திரிகை வந்தது கண்டு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கரம் நீள்கிறது (காவல் துறை உட்பட).


பத்திரிகையை கட்சி யாக மாற்றி அதிகார மையத்தை நோக்கி நகர்கிறான் , அவனது துடிப்பான பேச்சில் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். களத்தில் இறங்கி தன் மாநில மக்களுக்கு தான் முன்னுரிமை என சுபாஷ் சந்திர போஸ் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.  அடி மட்ட தொண்டர்கள் வரை உதவிகள் செய்து பூஜை அறையில் தன் புகைப்படம் வைக்கின்ற 

தலைவனாக உருவாகிறான்.


கட்சி யை காங்கிரஸ் உடன் சேர்க்க கட்டாயத்த படுத்துகின்றனர். உதறி தள்ளுகிறான். எமர்ஜென்சி யை தனக்கு சாதுர்யமாக மாற்றி கொண்டு அவன் பாதையை நோக்கி காய்களை நகர்த்தி கொள்கிறான். இறுதியில் தன்

 கட்சி யை சேர்ந்த நபரை முதலமைச்சர் ஆக்கி கிங் மேக்கராக மக்கள் மனதில் நிற்கிறான்.


கதையின் நாயகன்

Nawazuddin Siddiqui அவ்ளோ நேர்த்தி யாக நடித்திருந்தார் என்பதை தாண்டி தாக்கரே வே வாழ்ந்திருந்தார். ஹிந்தி தெரியத எனக்கு கூட "ஜெய் மகாராஷ்ட்ரா" என என்னை அறியாமல் சொல்ல வைக்கும் அளவுக்கு ghoosebup நடிப்பு.பலமான பின்னணி இசை @NetflixIndia உள்ளது #Thackeray


இவண்

ராஜா.க


செவ்வாய், 27 செப்டம்பர், 2022

இந்திய நீதி துறையும் , தீர்ப்புகளும்

 சிறு வயது முதலே கதை கேட்பதில் ஆர்வம் உண்டு. அடுத்த கட்டம் School days இல்  வரலாறு மீது கொண்ட ஆர்வம் , குடிமையியல் மீதான கேள்விகள் , புவியியல் மீதான ஆச்சரியங்கள் என சமூக அறிவியல் பாடம் மீது அதீத விருப்பம்.  


புத்தக பாடத்தை தாண்டி இந்திய அரசியலை பால படமாக கற்று கொடுத்த குரு சாந்தா டீச்சர். அவர்கள் மீதான மதிப்பு அப்படத்தில் மேலும் ஆர்வம் காட்டியது. அப்படி ஒரு முறை கூறிய பாடம் 1975 இல் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு.  



Justice Jagmohanlal Sinha சர்வ வல்லமை படைத்த இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கூறி வரலாற்று தீர்ப்பு எழுதினார் என்று கூறினார். அப்போது தான் தெரியும் இந்திய நீதி துறையின் அதிகாரம் பற்றி படித்து தெரிந்து கொண்டேன்.



இதெல்லாம் இனி வரும் காலங்களில் நடக்குமா என எனக்கு நானே கேள்வி கேட்பதுண்டு. வருடங்கள் உருண்டோடின 30 வருடம் கழித்து 2015 செப்டம்பர் 27இல் அது போன்ற தொரு தீர்ப்பு இம்முறை பண பலம் , அதிகார பலம் என அனைத்தையும் தாண்டி நீதியரசர் குன்ஹா தன் தீர்ப்பை எழுதினார். அதில் PB ஆச்சார்யா விற்கு முக்கிய பங்குண்டு. 




 சிறு வயது முதலே கதை கேட்பதில் ஆர்வம் உண்டு. அடுத்த கட்டம் School days இல்  வரலாறு மீது கொண்ட ஆர்வம் , குடிமையியல் மீதான கேள்விகள் , புவியியல் மீதான ஆச்சரியங்கள் என சமூக அறிவியல் பாடம் மீது அதீத விருப்பம்.  


புத்தக பாடத்தை தாண்டி இந்திய அரசியலை பால படமாக கற்று கொடுத்த குரு சாந்தா டீச்சர். அவர்கள் மீதான மதிப்பு அப்படத்தில் மேலும் ஆர்வம் காட்டியது. அப்படி ஒரு முறை கூறிய பாடம் 1975 இல் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு.  



Justice Jagmohanlal Sinha சர்வ வல்லமை படைத்த இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கூறி வரலாற்று தீர்ப்பு எழுதினார் என்று கூறினார். அப்போது தான் தெரியும் இந்திய நீதி துறையின் அதிகாரம் பற்றி படித்து தெரிந்து கொண்டேன்.



இதெல்லாம் இனி வரும் காலங்களில் நடக்குமா என எனக்கு நானே கேள்வி கேட்பதுண்டு. வருடங்கள் உருண்டோடின 30 வருடம் கழித்து 2015 செப்டம்பர் 27இல் அது போன்ற தொரு தீர்ப்பு இம்முறை பண பலம் , அதிகார பலம் என அனைத்தையும் தாண்டி நீதியரசர் குன்ஹா தன் தீர்ப்பை எழுதினார். அதில் PB ஆச்சார்யா விற்கு முக்கிய பங்குண்டு. 




ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

Happy Independence Day


இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.


மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 


8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!


பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.


பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 


"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"


"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.


படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.


ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.


 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 


ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.


இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 


படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.


நினைவுகளுடன்

ராஜா.க


இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.


மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 


8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!


பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.


பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 


"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"


"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.


படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.


ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.


 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 


ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.


இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 


படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.


நினைவுகளுடன்

ராஜா.க

செவ்வாய், 12 ஜூலை, 2022

கள்ளிகாட்டு கவிஞனே !!!

 முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”

முதல் காதலில் தோற்றவனுக்கு அது 

தான் கடைசி “தோல்வி”


தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’

தொட நினைக்காமலே தொட்டு

பேசுவது நட்பின் ‘அழகு’ !!!


கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.

ஆனால்

காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!


கள்ளிகாட்டு கவிஞனே !!!


நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.


தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து 


இவண்

ராஜா.க

 முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”

முதல் காதலில் தோற்றவனுக்கு அது 

தான் கடைசி “தோல்வி”


தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’

தொட நினைக்காமலே தொட்டு

பேசுவது நட்பின் ‘அழகு’ !!!


கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.

ஆனால்

காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!


கள்ளிகாட்டு கவிஞனே !!!


நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.


தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து 


இவண்

ராஜா.க

திங்கள், 6 ஜூன், 2022

சிலேடையும் , தமிழ் பாடலும்

 பிடித்த வரிகள் !!! 

"சிலேடை" 

இரு நபர்களின் பொதுவான


குணாதிசயங்கள் ஒரு பொருள் பட எடுத்துரைப்பது. 


நீரையும் , பெண் இருவரின் குணாதிசயங்கள் ஒரு சேர சேர்த்து  அமைந்த ஒரு தமிழ் பாடல். ரிதம் திரைபடத்தில் கவிஞர் வைரமுத்து வால் , எழுதபட்டிருக்கும்.


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே


நீர் பெருமையை பெண்ணோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கணத்தை காலத்தால் அழியாத படைப்புகளில் சேர்த்த பெருமை

வைரமுத்து வை சாரும் !!!


இவன்

ராஜா.க


#ரிதம் #தமிழ்பாடல்கள் #சிலேடை #இலக்கணம் 


 பிடித்த வரிகள் !!! 

"சிலேடை" 

இரு நபர்களின் பொதுவான


குணாதிசயங்கள் ஒரு பொருள் பட எடுத்துரைப்பது. 


நீரையும் , பெண் இருவரின் குணாதிசயங்கள் ஒரு சேர சேர்த்து  அமைந்த ஒரு தமிழ் பாடல். ரிதம் திரைபடத்தில் கவிஞர் வைரமுத்து வால் , எழுதபட்டிருக்கும்.


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே


நீர் பெருமையை பெண்ணோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கணத்தை காலத்தால் அழியாத படைப்புகளில் சேர்த்த பெருமை

வைரமுத்து வை சாரும் !!!


இவன்

ராஜா.க


#ரிதம் #தமிழ்பாடல்கள் #சிலேடை #இலக்கணம் 


வெள்ளி, 3 ஜூன், 2022

விக்ரம் திரை விமர்சனம்

 


தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு , அன்றைய இயக்குனர் ஸ்ரீதர் தொடங்கி இன்றைய இயக்குனர் நெல்சன் வரை இந்த பட்டியல் நீளும். 


அந்த பட்டியலில் இக்காலத்தில் உள்ள முக்கியமான இயக்குனர் திரு. லோகோஷ் கனகராஜ் , தன் முந்தைய மூன்று படங்கள் மூலம் அதை நிரூபித்து காட்டியுள்ளார். அதனால் தான் என்னவோ நான்காம் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு .மேலும் இந்த முறை அவர் கை கோர்த்து உள்ளது உலகநாயகன் கமல்ஹாசனிடம்.


இயக்குனர் ஷங்கர் க்கு மூன்றாவது படத்தில் கமலை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அது போன்றதொரு வாய்ப்பு லோகேஷ் க்கு நான்காம் படத்தில் கிடைத்துள்ளது. இயக்குனரிடம் முழு பொறுப்பை கொடுத்தால் வெற்றி உறுதி என்பதை ஷங்கர் இந்தியனில் நிரூபித்ததை போல் லோகேஷ் கனகராஜ் விக்ரமில் நிரூபித்தாரா ?


இந்த முறை விமர்சிக்கும் படம் விக்ரம் , படத்துக்கு போலாமா ?


கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றம் தன் படைப்புகளில் அமைக்க வேண்டியது இயக்குனர் கட்டாயம் , அப்படி ஒரு மாற்றம் தன் முந்தைய படத்தை தற்போது உள்ள படத்தோடு லிங்க்(connect) செய்வது. தன் முந்தைய படமான கைதி யை இதில் இணைந்துள்ளார்.


கைப்பற்ற பட்ட கஞ்சாவை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருளை , காவல்துறை அதிகாரி பத்திரமாக வைக்கிறார் என்று தொடங்குகிறது இந்த படம், அவரை கொன்று அவரோடு நில்லாமல் மேலும் அதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் கொல்ல படுகிறார்கள் மேலும் கர்ணன் எனும் போதை ஆசாமி (போலீஸ் அதிகாரியின் தந்தை) கமலும் கொல்லப்படுகிறார் , கொலையாளிகளை பிடிக்க காவல்துறை ஒரு ரகசிய குழுவை அமைக்கிறது  அதற்கு தலைமை வகிக்கிறார் ஃபஹத் ஃபாசில் , 


ஃபஹத் ஃபாசில்  அந்த கும்பலை கண்டுபிடித்தாரா ? அந்த கஞ்சா மூலப்பொருளை எப்படியாவது மீட்டு ஒரு அரசாங்கத்தையே உருவாக்க முடியும் என நினைக்கும் சந்தானத்தின் கனவு நிறைவேறியதா ? மகனை பறி கொடுத்த தந்தை என்ன செய்தார் ? இந்த மூன்று கேள்விகளுக்கான விடையை 3 மணி நேரம் சுவாரஸ்யமான அதே நேரத்தில் தொய்வில்லாத திரைக்கதை யால் நம்மை கஞ்சா Mafia உலகத்திற்கு அழைத்து செல்கிறார் இயக்குனர்.


ஃபஹத் ஃபாசில் நடிப்பு , அவரின் பேச்சு அவரின் பார்வை , action காட்சிகள் எல்லாமே நடிப்பின் வேறு பரிமாணம் , தமிழ்சினிமா விற்கு  புதிது அவரின் கண்களே நடிக்கிறது. 


சந்தானமாக விஜய் சேதுபதி அவருக்கே உரித்தான இயல்பான நடிப்பு சில படங்களில் பார்த்தது தான் ஆனாலும் தன் பங்கை நிறைவாக செய்கிறார்.  போதை வஸ்து வை கடித்த பிற்பாடு அவரினுள் வெளிப்படும் மிருகதனமான நடிப்பு பகீர் ரகம்.



கர்ணனாக கமல் , மகனை இழந்த ஒரு தந்தை யின் மனது எப்படி பரிதவிக்கும் என தனக்கே உரிய நடிப்பு அவரின் குரல் சிங்கத்தின் கர்ஜனை நினைவு படுத்துகிறது. பிற்பாடு மது, மாது , கஞ்சா என வாழ்க்கை தடம்மாறி மகனை கொன்றவனை அவர் பழிவாங்கினாரா ? அவரின் குடும்பதிற்கும் வருங்கால சந்ததிகும் அவர் அளிக்கும் பங்கு என்ன என்பதை தன் நடிப்பால் விடை கூறுகிறார்.


இந்த மூவரின் நடிப்பு க்கு தீனி போடுவது சவாலானது அதை தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தால் வெளிக்கொணர்ந்து வெற்றி வாகி சூடியுள்ளார் லோகேஷ் கனகராஜ். Trendsetter movie in kollywood.


அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் , பத்தல பத்தல பாடல் கமல் தன் ரசிகர்களுக்கு கொடுக்கும்  மினி ட்ரீட். படத்தின் இடைவேளை காட்சி , சின்ன சின்ன twist , action sequence களில் கேமரா கண்களால் தன் பங்கை சரியாக செய்துள்ளார்

கிருஷ் கங்காதரன்.


தியேட்டர் க்கு செல்லுமுன் இயக்குனர் கூறியது போல கைதி படத்தை பார்த்து விட்டு செல்வது பரீட்சை க்கு செல்லும் முன் படித்துவிட்டு செல் என்று ஆசிரியர் கூறுவது  போல ஒரு அறிவுரை.


விக்ரம் விக்டரி 

ராஜா .க 


#விக்ரம் #Vikram #vikramreview

#Vikramreview #Vikraminaction


 


தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு , அன்றைய இயக்குனர் ஸ்ரீதர் தொடங்கி இன்றைய இயக்குனர் நெல்சன் வரை இந்த பட்டியல் நீளும். 


அந்த பட்டியலில் இக்காலத்தில் உள்ள முக்கியமான இயக்குனர் திரு. லோகோஷ் கனகராஜ் , தன் முந்தைய மூன்று படங்கள் மூலம் அதை நிரூபித்து காட்டியுள்ளார். அதனால் தான் என்னவோ நான்காம் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு .மேலும் இந்த முறை அவர் கை கோர்த்து உள்ளது உலகநாயகன் கமல்ஹாசனிடம்.


இயக்குனர் ஷங்கர் க்கு மூன்றாவது படத்தில் கமலை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அது போன்றதொரு வாய்ப்பு லோகேஷ் க்கு நான்காம் படத்தில் கிடைத்துள்ளது. இயக்குனரிடம் முழு பொறுப்பை கொடுத்தால் வெற்றி உறுதி என்பதை ஷங்கர் இந்தியனில் நிரூபித்ததை போல் லோகேஷ் கனகராஜ் விக்ரமில் நிரூபித்தாரா ?


இந்த முறை விமர்சிக்கும் படம் விக்ரம் , படத்துக்கு போலாமா ?


கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றம் தன் படைப்புகளில் அமைக்க வேண்டியது இயக்குனர் கட்டாயம் , அப்படி ஒரு மாற்றம் தன் முந்தைய படத்தை தற்போது உள்ள படத்தோடு லிங்க்(connect) செய்வது. தன் முந்தைய படமான கைதி யை இதில் இணைந்துள்ளார்.


கைப்பற்ற பட்ட கஞ்சாவை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருளை , காவல்துறை அதிகாரி பத்திரமாக வைக்கிறார் என்று தொடங்குகிறது இந்த படம், அவரை கொன்று அவரோடு நில்லாமல் மேலும் அதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் கொல்ல படுகிறார்கள் மேலும் கர்ணன் எனும் போதை ஆசாமி (போலீஸ் அதிகாரியின் தந்தை) கமலும் கொல்லப்படுகிறார் , கொலையாளிகளை பிடிக்க காவல்துறை ஒரு ரகசிய குழுவை அமைக்கிறது  அதற்கு தலைமை வகிக்கிறார் ஃபஹத் ஃபாசில் , 


ஃபஹத் ஃபாசில்  அந்த கும்பலை கண்டுபிடித்தாரா ? அந்த கஞ்சா மூலப்பொருளை எப்படியாவது மீட்டு ஒரு அரசாங்கத்தையே உருவாக்க முடியும் என நினைக்கும் சந்தானத்தின் கனவு நிறைவேறியதா ? மகனை பறி கொடுத்த தந்தை என்ன செய்தார் ? இந்த மூன்று கேள்விகளுக்கான விடையை 3 மணி நேரம் சுவாரஸ்யமான அதே நேரத்தில் தொய்வில்லாத திரைக்கதை யால் நம்மை கஞ்சா Mafia உலகத்திற்கு அழைத்து செல்கிறார் இயக்குனர்.


ஃபஹத் ஃபாசில் நடிப்பு , அவரின் பேச்சு அவரின் பார்வை , action காட்சிகள் எல்லாமே நடிப்பின் வேறு பரிமாணம் , தமிழ்சினிமா விற்கு  புதிது அவரின் கண்களே நடிக்கிறது. 


சந்தானமாக விஜய் சேதுபதி அவருக்கே உரித்தான இயல்பான நடிப்பு சில படங்களில் பார்த்தது தான் ஆனாலும் தன் பங்கை நிறைவாக செய்கிறார்.  போதை வஸ்து வை கடித்த பிற்பாடு அவரினுள் வெளிப்படும் மிருகதனமான நடிப்பு பகீர் ரகம்.



கர்ணனாக கமல் , மகனை இழந்த ஒரு தந்தை யின் மனது எப்படி பரிதவிக்கும் என தனக்கே உரிய நடிப்பு அவரின் குரல் சிங்கத்தின் கர்ஜனை நினைவு படுத்துகிறது. பிற்பாடு மது, மாது , கஞ்சா என வாழ்க்கை தடம்மாறி மகனை கொன்றவனை அவர் பழிவாங்கினாரா ? அவரின் குடும்பதிற்கும் வருங்கால சந்ததிகும் அவர் அளிக்கும் பங்கு என்ன என்பதை தன் நடிப்பால் விடை கூறுகிறார்.


இந்த மூவரின் நடிப்பு க்கு தீனி போடுவது சவாலானது அதை தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தால் வெளிக்கொணர்ந்து வெற்றி வாகி சூடியுள்ளார் லோகேஷ் கனகராஜ். Trendsetter movie in kollywood.


அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் , பத்தல பத்தல பாடல் கமல் தன் ரசிகர்களுக்கு கொடுக்கும்  மினி ட்ரீட். படத்தின் இடைவேளை காட்சி , சின்ன சின்ன twist , action sequence களில் கேமரா கண்களால் தன் பங்கை சரியாக செய்துள்ளார்

கிருஷ் கங்காதரன்.


தியேட்டர் க்கு செல்லுமுன் இயக்குனர் கூறியது போல கைதி படத்தை பார்த்து விட்டு செல்வது பரீட்சை க்கு செல்லும் முன் படித்துவிட்டு செல் என்று ஆசிரியர் கூறுவது  போல ஒரு அறிவுரை.


விக்ரம் விக்டரி 

ராஜா .க 


#விக்ரம் #Vikram #vikramreview

#Vikramreview #Vikraminaction


திங்கள், 30 மே, 2022

கண்ணே கண்ணாடி

 கண்ணே கண்ணாடி !!!


இந்த கண் கண்ணாடி யை பற்றி எழுத என்ன காரணம் ?  

வருடங்கள் பல உருண்டோயிய பிறகு கண்ணையும் , கண்ணாடியையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை .


என்ன கண்ணு தெரியாது அது தானே ? 

என்ற பகடி வார்த்தைகள் பார்த்து, கேட்டு.

பழகி , புளித்து போனது என் கண்ணாடி க்கும் , காதுகளுக்கும்.


உன்னை முதன் முதலில் அணியும் போது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சொல்ல போனால் உன்னை மறந்தும் கூட சென்றுள்ளேன் அதனால் தான் என்னவோ தெளிவான பார்வை இல்லாமல் சிலரின் உண்மை முகங்களை காண முடியவில்லை. 


நாட்கள் செல்ல , செல்ல என் உடம்பினுள் உள்ள ஒரு உறுப்பாகவே மாறிவிட்டாய். இப்போதும் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் , நீ என்னோடு இருக்கிறாய் என்று கூட தெரியாமல் ,  ஆழ்ந்த நித்திரை க்கு சென்று விட்டு எழுந்து முகத்தில் தண்ணிர் விடுகையில் தான் உணர்கிறேன். நீ என்னோடு தான் உள்ளாய் என்பதை. பிறகு சிரித்து கொண்டே உன்னை துடைத்து கொள்வேன்.


எனக்கான அடையாளங்கில் ஒருவனாகவே மாறி போனாய் , அந்த கண்ணாடி போட்ட ஒரு தம்பி ஒருவர் வருவாரே ? என்று என் பெயர் கூட தெரியாமல் உன்னை வைத்து எனக்கு கிடைத்த அங்கிகாரம் பல இடங்களில்.


பூமியே தன் சமநிலை யிலிருந்து விலகி ஒரு இடத்தில் அதிக மழை ,அதிக வெயில் கொடுக்கும். மானிடர்கள் எம்மாத்திரம் அவர்கள் தரும் ஒரு வகையான வெளிப்பாடன

கண்ணீர், என் கண்ணங்கள் வரை கூட விடாமல் ஒரு அ(ன்)ணை போல தடுத்து விடுவாய். 


அஃறிணை யான நீ உயர்திணை யை விட உயர்ந்து நிற்கிறாய் பல நேரங்களில்.


கண்ணாடி யுடன் 

ராஜா. க


 கண்ணே கண்ணாடி !!!


இந்த கண் கண்ணாடி யை பற்றி எழுத என்ன காரணம் ?  

வருடங்கள் பல உருண்டோயிய பிறகு கண்ணையும் , கண்ணாடியையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை .


என்ன கண்ணு தெரியாது அது தானே ? 

என்ற பகடி வார்த்தைகள் பார்த்து, கேட்டு.

பழகி , புளித்து போனது என் கண்ணாடி க்கும் , காதுகளுக்கும்.


உன்னை முதன் முதலில் அணியும் போது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சொல்ல போனால் உன்னை மறந்தும் கூட சென்றுள்ளேன் அதனால் தான் என்னவோ தெளிவான பார்வை இல்லாமல் சிலரின் உண்மை முகங்களை காண முடியவில்லை. 


நாட்கள் செல்ல , செல்ல என் உடம்பினுள் உள்ள ஒரு உறுப்பாகவே மாறிவிட்டாய். இப்போதும் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் , நீ என்னோடு இருக்கிறாய் என்று கூட தெரியாமல் ,  ஆழ்ந்த நித்திரை க்கு சென்று விட்டு எழுந்து முகத்தில் தண்ணிர் விடுகையில் தான் உணர்கிறேன். நீ என்னோடு தான் உள்ளாய் என்பதை. பிறகு சிரித்து கொண்டே உன்னை துடைத்து கொள்வேன்.


எனக்கான அடையாளங்கில் ஒருவனாகவே மாறி போனாய் , அந்த கண்ணாடி போட்ட ஒரு தம்பி ஒருவர் வருவாரே ? என்று என் பெயர் கூட தெரியாமல் உன்னை வைத்து எனக்கு கிடைத்த அங்கிகாரம் பல இடங்களில்.


பூமியே தன் சமநிலை யிலிருந்து விலகி ஒரு இடத்தில் அதிக மழை ,அதிக வெயில் கொடுக்கும். மானிடர்கள் எம்மாத்திரம் அவர்கள் தரும் ஒரு வகையான வெளிப்பாடன

கண்ணீர், என் கண்ணங்கள் வரை கூட விடாமல் ஒரு அ(ன்)ணை போல தடுத்து விடுவாய். 


அஃறிணை யான நீ உயர்திணை யை விட உயர்ந்து நிற்கிறாய் பல நேரங்களில்.


கண்ணாடி யுடன் 

ராஜா. க


ஞாயிறு, 22 மே, 2022

பேருந்து பயணமும் திடீர் பற்றும்....

 




வெகு நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் -தூத்துக்குடி பேருந்தில் செல்லும் வாய்ப்பு நல்கியது. கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. திருச்செந்தூர் இருந்து ஏறியதாலவோ என்னவோ அமர்ந்து செல்ல இடம் கிடைத்தது , பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது.


என்னருகில் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் வயதானவர் , தம்பி நீங்கள் எழுந்து அமர இடம் கொடுத்தால் நானும் எழுந்திருக்க வேண்டி இருக்கும் அதனால் , என்று இழுத்தார்,

சரி என்று புரிந்து  கொண்டு இருவரும் அமர்ந்திருந்தோம்.


பேருந்து பயணிக்க தொடங்கியது. மூன்று , நான்கு பேருந்து நிறுத்தத்திற்கு பிறகு பேருந்து "காயல்பட்டினம்" வந்தது அங்கு ஒரு பெண் சகோதரி ஏறினார்கள் , அது வரை பேருந்தில் நடப்பதை கண்டுகொள்ளாமல்  அமைதியாக இருந்த அந்த பெரியவர் ,


திடீரென எழுந்து காயல்பட்டினத்தில் எறிய அந்த பாய்அம்மா வை நோக்கி குரல் கொடுத்து நீங்க என் சீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று திடீர் பற்றுடன் அவரை அமர வைத்தார்.


 அப்பெரியவரின் செய்கை அப்போது தான் எனக்குள் தூங்கி கொண்டிருந்த பற்று வெளிக் கொணர செய்தது, நானும் என் அருகில் நின்று கொண்டிருந்த செந்தூரில் இருந்து பயணித்து கொண்டிருந்த குங்கும பொட்டு வைத்திருந்த சீதா லெட்சுமி (இந்த பெயரில் மாற்று கருத்து உள்ளவர்கள் வள்ளி ,காமாட்சி , மீனாட்சி , விசாலாட்சி என்று ஏதேனும் ஒன்றை படித்து கொள்ளுங்கள் ) யை போன்ற சகோதரியை அமருங்கள் என்று எனது இருக்கையை கொடுத்தேன்.


யானைக்கும் சரி மனிதனுக்கும் சரி மதம் பிடித்து விட்டால் பேராபத்து என்று எங்கேயோ படித்தது  நினைவுக்கு வந்தது..


நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் சுற்றமும் , சூழ்நிலையும் தான் தீர்மானிக்கும் போல.


ஜெய்ஹிந்த்

தமிழ் வெல்லும்

ராஜா .க

 




வெகு நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் -தூத்துக்குடி பேருந்தில் செல்லும் வாய்ப்பு நல்கியது. கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. திருச்செந்தூர் இருந்து ஏறியதாலவோ என்னவோ அமர்ந்து செல்ல இடம் கிடைத்தது , பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது.


என்னருகில் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் வயதானவர் , தம்பி நீங்கள் எழுந்து அமர இடம் கொடுத்தால் நானும் எழுந்திருக்க வேண்டி இருக்கும் அதனால் , என்று இழுத்தார்,

சரி என்று புரிந்து  கொண்டு இருவரும் அமர்ந்திருந்தோம்.


பேருந்து பயணிக்க தொடங்கியது. மூன்று , நான்கு பேருந்து நிறுத்தத்திற்கு பிறகு பேருந்து "காயல்பட்டினம்" வந்தது அங்கு ஒரு பெண் சகோதரி ஏறினார்கள் , அது வரை பேருந்தில் நடப்பதை கண்டுகொள்ளாமல்  அமைதியாக இருந்த அந்த பெரியவர் ,


திடீரென எழுந்து காயல்பட்டினத்தில் எறிய அந்த பாய்அம்மா வை நோக்கி குரல் கொடுத்து நீங்க என் சீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று திடீர் பற்றுடன் அவரை அமர வைத்தார்.


 அப்பெரியவரின் செய்கை அப்போது தான் எனக்குள் தூங்கி கொண்டிருந்த பற்று வெளிக் கொணர செய்தது, நானும் என் அருகில் நின்று கொண்டிருந்த செந்தூரில் இருந்து பயணித்து கொண்டிருந்த குங்கும பொட்டு வைத்திருந்த சீதா லெட்சுமி (இந்த பெயரில் மாற்று கருத்து உள்ளவர்கள் வள்ளி ,காமாட்சி , மீனாட்சி , விசாலாட்சி என்று ஏதேனும் ஒன்றை படித்து கொள்ளுங்கள் ) யை போன்ற சகோதரியை அமருங்கள் என்று எனது இருக்கையை கொடுத்தேன்.


யானைக்கும் சரி மனிதனுக்கும் சரி மதம் பிடித்து விட்டால் பேராபத்து என்று எங்கேயோ படித்தது  நினைவுக்கு வந்தது..


நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் சுற்றமும் , சூழ்நிலையும் தான் தீர்மானிக்கும் போல.


ஜெய்ஹிந்த்

தமிழ் வெல்லும்

ராஜா .க

வியாழன், 28 ஏப்ரல், 2022

நண்பர்களும் புரிதலும் !!

 நண்பர்களும்  புரிதலும்  !!! 


இன்று நண்பர்கள் க்கு இடையே நடக்கும் பல குழப்பங்களுக்கு இந்த

 " புரிதல் " இல்லாததது தான் முதல் காரணம் என்பது என் அவதானிப்பு. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.


அப்படி ஒரு அழகான மற்றும் அழத்தமான நினைவுகள் என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் இந்த புரிதலுக்கு உண்டான சிறு சான்றுகள்..


செல்வ ராஜ் ,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை. 

யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம். 


சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE பிரிவு மாணவர்கள் 7, நாங்கள் CSE மொத்தம் 10 நபர்கள் தங்கும் பெரிய வீடு.


கூட்டினுள் (விடுதியில்) கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.


நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி   மகிழ்ந்த காலம். 


ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல,  செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் உங்களுக்கு புரியாது என முகத்தை சுறுக்க,


நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது,  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் பேசியது ஒரு புறம். 


நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல். 

ஆனால் எங்களுக்குள் உள்ள புரிதல் ஒரே சேர வெளி கொணர்ந்த தருணம் அது.


இரண்டாவது நிகழ்வு.


8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால் 

A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம். 

A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார். 


நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை. 

மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம். எங்களை பார்த்து எங்கள் B பிரிவு மாணவிகள் வெளியேறியது செம மாஸா இருந்தது.


இந்த மாதிரி யான  புரிதல் நண்பர்களுக்குள்   இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.


புரிதலுடன் 

ராஜா . க

 நண்பர்களும்  புரிதலும்  !!! 


இன்று நண்பர்கள் க்கு இடையே நடக்கும் பல குழப்பங்களுக்கு இந்த

 " புரிதல் " இல்லாததது தான் முதல் காரணம் என்பது என் அவதானிப்பு. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.


அப்படி ஒரு அழகான மற்றும் அழத்தமான நினைவுகள் என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் இந்த புரிதலுக்கு உண்டான சிறு சான்றுகள்..


செல்வ ராஜ் ,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை. 

யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம். 


சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE பிரிவு மாணவர்கள் 7, நாங்கள் CSE மொத்தம் 10 நபர்கள் தங்கும் பெரிய வீடு.


கூட்டினுள் (விடுதியில்) கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.


நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி   மகிழ்ந்த காலம். 


ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல,  செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் உங்களுக்கு புரியாது என முகத்தை சுறுக்க,


நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது,  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் பேசியது ஒரு புறம். 


நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல். 

ஆனால் எங்களுக்குள் உள்ள புரிதல் ஒரே சேர வெளி கொணர்ந்த தருணம் அது.


இரண்டாவது நிகழ்வு.


8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால் 

A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம். 

A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார். 


நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை. 

மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம். எங்களை பார்த்து எங்கள் B பிரிவு மாணவிகள் வெளியேறியது செம மாஸா இருந்தது.


இந்த மாதிரி யான  புரிதல் நண்பர்களுக்குள்   இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.


புரிதலுடன் 

ராஜா . க

சனி, 2 ஏப்ரல், 2022

ஸ்ரீ பாலாஜி பவன் சைதாப்பேட்டை !!!

 



ஒரு வேலையாக #சைதாப்பேட்டை செல்ல  வேண்டி இருந்தது, வேலை முடிந்த பின் பழைய நினைவுகளுடன்

சைதாப்பேட்டை பாலத்தை கடந்து செல்கையில் சைதை யின் ஒரு அடையாளமான கலைஞர் ஆர்ச் (வளைவு) தாண்டி உள்ள ஸ்ரீ பாலாஜி பவன் அன்போடு அழைத்தது.


ஒரு காலத்துல என்னோட favourite ஹோட்டல் இங்கே மதியம்  lunch ரொம்ப சூப்பரா இருக்கும் குறிப்பாக சாம்பார், டிபன் வகையறாக்கள் கூட நல்லா தான் இருக்கும், சரி வந்ததும் வந்துட்டோம், மாலை பொழுதில்  லைட்டா ஒரு டிபன் சாப்பிடுவோம் என முடிவு செய்து, உள்ளே சென்றேன், ஒரு போர்டில் evening Combo என்று ஒரு மெனு.


ஒரு தோசை(மினி), கிச்சடி, சாம்பார் வடை, மினி காபி. அடடே நம்மை போல ஒருவன் தான் இது போன்ற மெனுவை  தயார் செய்து  இருப்பான் என்ற மகிழ்ச்சியில் சரி இன்று அதேயே ஆர்டர் கொடுத்தேன், எனக்கு தெரிந்து 12 வருடமாக அதே இடத்தில் இயங்குகின்ற கடை,


அதற்கு போட்டியாக அருகிலேயே ஹோட்டல் உடுப்பி ,

காரைக்குடி உணவகம் 

எல்லாம் வந்தது கால போக்கில் காணாமல் போனது. ஹோட்டல் தொழில் செய்வதில் எவ்வளவு கஷ்டம் என நினைத்து கொண்டு இருக்கையில் ஆர்டர் செய்த மெனு வந்தது. 


தேங்காய் சட்னி, கார சட்னி,சாம்பார் சகிதம்

முதலில் கிச்சடி யை நோக்கியே கண்கள் சென்றது. சாம்பாரை கிச்சடியில் படர செய்து சூடான சாம்பார் மற்றும் சற்று குழைந்த கிச்சடியுடன் சுவைக்கையில் அடடே பாண்டிய மன்னனுக்கு எழுந்த சந்தேகம் போல சாம்பரால் கிச்சடி சுவையானதா ? கிச்சடியால் சாம்பார் சுவை யானதா ? என்று சந்தேகம்.


சந்தேகம் தீர்க்க புலவர் தருமியை யா அழைக்க முடியும் ? இந்த முறை சட்னி உதவியுடன் உட்கொள்கையில் அந்த அளவுக்கு சுவையில்லை  கண்டேன் சீதையை என்ற கம்பன் வரிகளை போல கண்டேன் விடையை என்று பெருமிதத்துடன், சாம்பார் தான் சுவைக்கு காரணம் என்று ,ஆதலால் சாம்பார் வடை உதவியுடன் கிச்சடி உண்ணும் போது அதன் சுவை இரட்டிப்பு ஆனது.


மூன்றாவது முறையாக சாம்பார் வடை, கார சட்னி சகிதம் கிச்சடி சேர்த்து உண்ட பொழுது அட இந்த காம்போ நல்லா தான் இருக்கு என்று நினைத்து கிச்சடி யை தேடினால் அதன் தடமே இல்லை, அடேய் இது மினி கிச்சடி டா என்றது பிளேட். சரி சாம்பார் வடையை வதம் செய்து, மினி தோசை க்கு சென்று சட்னியுடன் ,சாம்பார்


சேர்த்து குழைத்து அடித்து தோசை யை முடிப்பதற்கு முன்பே காபியை கேட்டு விட்டேன், காபி வரம் நேரமும்  கார சட்னி தோசை காம்போ முடியவும் பழைய தமிழ் படங்களில் க்ளைமாக்ஸ் வரும் போலீஸ் போல சரியாக இருந்தது, நாக்கில் காரத்தின் சுவை ஒட்டி இருக்கையில் காபி யை ருசிக்கும் தருணம் காரமும் , அந்த காபி யின் இனிப்பும் ஒரு சேர்கையில் it's Bliss (இட்ஸ் பிளிஸ்).


திருப்தியான ஒரு evening டிபன் சாப்பிட்ட உணர்வு , பில் வந்தது குறைந்தது 90₹ முதல் 100₹ இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியம் நம் கணிப்பு பெரும்பாலும் தவறாக தான் முடியும் போல.  60₹ என்று இருந்தது 100 நாட்கள் கடந்தும் பெட்ரோல் விலை மாறாமல் இருந்ததை போன்ற அதிர்ச்சி.

இது போன்ற (Combo) காம்போ க்களை மற்ற ஹோட்டல்களும் முயற்சி செய்யலாம்.


பில்லை கட்டி விட்டு கல்லாவில் இருந்தவரிடத்தில் நல்லா இருந்தது, மூன்று வருடங்கள் முன்பு இங்கு வந்ததா நினைவு இன்றும் உங்கள் கடையின் சாம்பார் சுவை குறையவில்லை என்று கூறி விடை பெற்றேன். அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

நன்றி என்று கூறினார். 


இப்போது ள்ள பெரும்பாலான ஹோட்டல் கள் திறந்த வுடன் மூடு விழா காண்கிறது. காரணம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம், 

மேலும் முறையான master இல்லாமல் அவர்களே மாஸ்டர் வேடம் போட்டு கொள்வது. இதை பற்றி கேட்ட போது நமக்கு நல்லா சமைக்க தெரியும் மைண்ட் வாய்ஸ் அதை நாங்க சொல்லணும்.


 ஆண்பாவம் படத்தில் ஒரு காட்சி வரும், அதில் விகே. ராமசாமியை பார்த்து தென்னை மட்டை விற்றவன் லாம் தியேட்டர் கட்டினா இப்படி தான் நடக்கும் என்பார். அது போல எல்லாராலும் ஹோட்டல் வியாபாரம் செய்து வெற்றி பெறுவது கடினமே !!


ஸ்ரீ பாலாஜி பவன் வெற்றி அங்கு பணி புரியும் அனைவருக்குமான வெற்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉


இவன்

ராஜா.க

 



ஒரு வேலையாக #சைதாப்பேட்டை செல்ல  வேண்டி இருந்தது, வேலை முடிந்த பின் பழைய நினைவுகளுடன்

சைதாப்பேட்டை பாலத்தை கடந்து செல்கையில் சைதை யின் ஒரு அடையாளமான கலைஞர் ஆர்ச் (வளைவு) தாண்டி உள்ள ஸ்ரீ பாலாஜி பவன் அன்போடு அழைத்தது.


ஒரு காலத்துல என்னோட favourite ஹோட்டல் இங்கே மதியம்  lunch ரொம்ப சூப்பரா இருக்கும் குறிப்பாக சாம்பார், டிபன் வகையறாக்கள் கூட நல்லா தான் இருக்கும், சரி வந்ததும் வந்துட்டோம், மாலை பொழுதில்  லைட்டா ஒரு டிபன் சாப்பிடுவோம் என முடிவு செய்து, உள்ளே சென்றேன், ஒரு போர்டில் evening Combo என்று ஒரு மெனு.


ஒரு தோசை(மினி), கிச்சடி, சாம்பார் வடை, மினி காபி. அடடே நம்மை போல ஒருவன் தான் இது போன்ற மெனுவை  தயார் செய்து  இருப்பான் என்ற மகிழ்ச்சியில் சரி இன்று அதேயே ஆர்டர் கொடுத்தேன், எனக்கு தெரிந்து 12 வருடமாக அதே இடத்தில் இயங்குகின்ற கடை,


அதற்கு போட்டியாக அருகிலேயே ஹோட்டல் உடுப்பி ,

காரைக்குடி உணவகம் 

எல்லாம் வந்தது கால போக்கில் காணாமல் போனது. ஹோட்டல் தொழில் செய்வதில் எவ்வளவு கஷ்டம் என நினைத்து கொண்டு இருக்கையில் ஆர்டர் செய்த மெனு வந்தது. 


தேங்காய் சட்னி, கார சட்னி,சாம்பார் சகிதம்

முதலில் கிச்சடி யை நோக்கியே கண்கள் சென்றது. சாம்பாரை கிச்சடியில் படர செய்து சூடான சாம்பார் மற்றும் சற்று குழைந்த கிச்சடியுடன் சுவைக்கையில் அடடே பாண்டிய மன்னனுக்கு எழுந்த சந்தேகம் போல சாம்பரால் கிச்சடி சுவையானதா ? கிச்சடியால் சாம்பார் சுவை யானதா ? என்று சந்தேகம்.


சந்தேகம் தீர்க்க புலவர் தருமியை யா அழைக்க முடியும் ? இந்த முறை சட்னி உதவியுடன் உட்கொள்கையில் அந்த அளவுக்கு சுவையில்லை  கண்டேன் சீதையை என்ற கம்பன் வரிகளை போல கண்டேன் விடையை என்று பெருமிதத்துடன், சாம்பார் தான் சுவைக்கு காரணம் என்று ,ஆதலால் சாம்பார் வடை உதவியுடன் கிச்சடி உண்ணும் போது அதன் சுவை இரட்டிப்பு ஆனது.


மூன்றாவது முறையாக சாம்பார் வடை, கார சட்னி சகிதம் கிச்சடி சேர்த்து உண்ட பொழுது அட இந்த காம்போ நல்லா தான் இருக்கு என்று நினைத்து கிச்சடி யை தேடினால் அதன் தடமே இல்லை, அடேய் இது மினி கிச்சடி டா என்றது பிளேட். சரி சாம்பார் வடையை வதம் செய்து, மினி தோசை க்கு சென்று சட்னியுடன் ,சாம்பார்


சேர்த்து குழைத்து அடித்து தோசை யை முடிப்பதற்கு முன்பே காபியை கேட்டு விட்டேன், காபி வரம் நேரமும்  கார சட்னி தோசை காம்போ முடியவும் பழைய தமிழ் படங்களில் க்ளைமாக்ஸ் வரும் போலீஸ் போல சரியாக இருந்தது, நாக்கில் காரத்தின் சுவை ஒட்டி இருக்கையில் காபி யை ருசிக்கும் தருணம் காரமும் , அந்த காபி யின் இனிப்பும் ஒரு சேர்கையில் it's Bliss (இட்ஸ் பிளிஸ்).


திருப்தியான ஒரு evening டிபன் சாப்பிட்ட உணர்வு , பில் வந்தது குறைந்தது 90₹ முதல் 100₹ இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியம் நம் கணிப்பு பெரும்பாலும் தவறாக தான் முடியும் போல.  60₹ என்று இருந்தது 100 நாட்கள் கடந்தும் பெட்ரோல் விலை மாறாமல் இருந்ததை போன்ற அதிர்ச்சி.

இது போன்ற (Combo) காம்போ க்களை மற்ற ஹோட்டல்களும் முயற்சி செய்யலாம்.


பில்லை கட்டி விட்டு கல்லாவில் இருந்தவரிடத்தில் நல்லா இருந்தது, மூன்று வருடங்கள் முன்பு இங்கு வந்ததா நினைவு இன்றும் உங்கள் கடையின் சாம்பார் சுவை குறையவில்லை என்று கூறி விடை பெற்றேன். அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

நன்றி என்று கூறினார். 


இப்போது ள்ள பெரும்பாலான ஹோட்டல் கள் திறந்த வுடன் மூடு விழா காண்கிறது. காரணம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம், 

மேலும் முறையான master இல்லாமல் அவர்களே மாஸ்டர் வேடம் போட்டு கொள்வது. இதை பற்றி கேட்ட போது நமக்கு நல்லா சமைக்க தெரியும் மைண்ட் வாய்ஸ் அதை நாங்க சொல்லணும்.


 ஆண்பாவம் படத்தில் ஒரு காட்சி வரும், அதில் விகே. ராமசாமியை பார்த்து தென்னை மட்டை விற்றவன் லாம் தியேட்டர் கட்டினா இப்படி தான் நடக்கும் என்பார். அது போல எல்லாராலும் ஹோட்டல் வியாபாரம் செய்து வெற்றி பெறுவது கடினமே !!


ஸ்ரீ பாலாஜி பவன் வெற்றி அங்கு பணி புரியும் அனைவருக்குமான வெற்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉


இவன்

ராஜா.க

வெள்ளி, 25 மார்ச், 2022

RRR என் பார்வையில்

 RRR


சினிமா என்பது ஒரு கண் கட்டி வித்தை, பார்க்கும் நம் இரு கண்களை  ஒரு மூன்று மணி நேரம் கட்டி போட்டு திரையில் வரும் காட்சிகளோடு நம்மை பயணிக்க வைப்பது. சில  திரைப்படங்கள் பார்த்து விட்டு தியேட்டர் விட்டு வெளியேறிய பின்பும் சில காட்சிகள் நம் மன திரையில் ஒடும் அப்படி யுள்ள படங்கள் காலத்தால் அழியாத கோலங்கள்.


ராம் சரண், ஜூனியர் NTR  நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 

வெளிவந்துள்ள திரைப்படம்

RRR .


சமீப காலமாக சினிமாவில் கதை பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றெல்லாம் ஒரு பேச்சு அடிபடும் எனக்கு அதில் பெரும்பாலும் உடன்பாடு கிடையாது, ஏனென்றால் நம் வாழும் வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் என ஒவ்வொன்றும் வித்தியாசமானது அதை வைத்தே ஆயிரமாயிரம் கதை எழுதலாம் மேலும் நம் இந்தியா வில் பிறந்ததுநாளோ என்னவோ ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை என இதிகாசங்களை கேட்டு வளர்ந்து இருப்போம்.


இன்னும் சொல்ல போனால் ராமாயணம், மகாபாரதம் போன்ற வற்றில் உள்ள கிளை கதைகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் அதில் உள்ள ஒரு கிளை கதையை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் இன்றைய technology உபயோகித்து திரையில் நம் கண்களுக்கு விருந்து படைக்கலாம்.


இந்த இதிகாசங்களில் உள்ள ஒரு வரி கதை யை நிகழ் காலத்தில் நம் சந்திந்த நாம் பார்த்த மனிதர்களோடு இணைத்து ஒரு கதையை கையில் எடுத்து அதை தொய்வில்லாமல் நகர்த்தும் திரைக்கதை அமைத்தால் அப்படம் வெற்றியே.


சுதந்திரத்திற்கு முன் இந்தியா வில் உள்ள ஒரு  மலைவாழ் கிராமம் அங்குள்ள சிறு பிள்ளையை (மல்லி) அவளின் குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் பிரிட்டிஷார் மனைவி மல்லியை இழுத்து செல்கிறாள் அவளை அந்த கிராமத்து காப்பான் ஒருவன் எப்படி மீட்க போகிறான் இது ஒரு கதை.


பிரிட்டிஷாரின் போலீஸ் பணியில் சேர்ந்து மிக உயர்ந்த பொறுப்பான உச்ச காவல் அதிகாரி யாக விரும்பும் ஒரு இந்திய இளைஞன் அவன் ஏன் அந்த பணியில் சேர விரும்பினான் ? அதற்காக அவன் என்னவெல்லாம் செய்தான் , எதற்காக இதை செய்கிறான் இது ஒரு கதை.


இந்த இரு கதையில் உள்ள நாயகர்கள் ஒரு மைய புள்ளியில் இணைந்து அவர்கள் எவ்வாறு வெற்றி இலக்கை அடைந்தார்கள் என்பதை 3 மணி நேரம் மிக சுவாரஸ்யமான திரைக்கதை யால்  நகைச்சுவை, பாசம்,நட்பு, காதல்,துரோகம்,தேசம்,

விடுதலை என எல்லாம் கலந்து நம் கவலைகளை மறக்க செய்து இவ்வளவு கஷ்டப்பட்டா நமக்கு சுதந்திரம் கிடைத்தது என நம்மை நினைக்க வைத்து வெற்றி பெறுகிறார் இயக்குனர்.


ராம் சரண், ஜூனியர் NTR இவர்களின் அசாத்திய உடற் கட்டு இவர்கள் எதிரிகளை துவம்சம் செய்யும் போதெல்லாம் இதெல்லாம்  சாத்தியம் தான் என் நம்மை நினைக்க வைப்பது தான் கதாபாத்திரங்கள் வெற்றி அதை செவ்வனே செய்துள்ளார்கள் இருவரும்.


முதல் பாதியில் junior NTR நடிப்பு, நடனம்,சண்டை காட்சிகள், கண்ணீர் என ஸ்கோர் செய்கிறார், இரண்டாம் பாதியில் ராம் சரண்  ஸ்கோர் செய்கிறார்  அதிலும் அவரின் தோற்றமும், வில் ஏந்தி ராமனாக வே நம் கண்களில் தோன்றி வெள்ளை காரர்களை வதம் செய்வதெல்லாம் மயிற்கூச்சரியும் காட்சிகள்.


ராம்சரனை கண்டதும் அவரின் காதலி சீதா கொடுத்த டாலரை NTR கொடுப்பது அழகிய ஹைக்கூ ❤️❤️


ராமனுக்கு (ராம் சரன் ) உதவியாக பீம் (Junior NTR) இருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் பரபரப்பின் உச்சம். (சொல்லப்போனா சில்லறைகளை சிதற விடும் காட்சிகள்)


மதன் கார்கியின் வசனங்கள் துப்பாக்கி யில் இருந்து வரும் தோட்டாகள் ரகம் (வைரமுத்து மகன் ஆயிற்றே).


இரண்டு கதாபாத்திரங்களும் சம அளவில் பங்கு கொடுத்தற்கே இயக்குனர்க்கு சபாஷ்.பாடல்களும் சரி ,பிண்ணனி இசையும் சரி படத்திற்கு மிக பெரிய பலம்.


அசுரன்  போன்ற படங்களுக்கு சென்று அப்படத்தை பார்த்து கலைஞர்களை  ஊக்குவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது போன்ற சுதந்திர த்தை போற்றும் திரைப்படங்களுக்கும் சென்று ஊக்குவித்தால் அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.


ராஜமௌலி சார் உங்கள் திரைப்படத்தில் இன்னொரு மணிமகுடம் இந்த RRR வாழ்த்துக்கள்  ❤️❤️❤️

#RRR 


ரசிகன்

ராஜா.க


 RRR


சினிமா என்பது ஒரு கண் கட்டி வித்தை, பார்க்கும் நம் இரு கண்களை  ஒரு மூன்று மணி நேரம் கட்டி போட்டு திரையில் வரும் காட்சிகளோடு நம்மை பயணிக்க வைப்பது. சில  திரைப்படங்கள் பார்த்து விட்டு தியேட்டர் விட்டு வெளியேறிய பின்பும் சில காட்சிகள் நம் மன திரையில் ஒடும் அப்படி யுள்ள படங்கள் காலத்தால் அழியாத கோலங்கள்.


ராம் சரண், ஜூனியர் NTR  நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 

வெளிவந்துள்ள திரைப்படம்

RRR .


சமீப காலமாக சினிமாவில் கதை பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றெல்லாம் ஒரு பேச்சு அடிபடும் எனக்கு அதில் பெரும்பாலும் உடன்பாடு கிடையாது, ஏனென்றால் நம் வாழும் வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் என ஒவ்வொன்றும் வித்தியாசமானது அதை வைத்தே ஆயிரமாயிரம் கதை எழுதலாம் மேலும் நம் இந்தியா வில் பிறந்ததுநாளோ என்னவோ ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை என இதிகாசங்களை கேட்டு வளர்ந்து இருப்போம்.


இன்னும் சொல்ல போனால் ராமாயணம், மகாபாரதம் போன்ற வற்றில் உள்ள கிளை கதைகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் அதில் உள்ள ஒரு கிளை கதையை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் இன்றைய technology உபயோகித்து திரையில் நம் கண்களுக்கு விருந்து படைக்கலாம்.


இந்த இதிகாசங்களில் உள்ள ஒரு வரி கதை யை நிகழ் காலத்தில் நம் சந்திந்த நாம் பார்த்த மனிதர்களோடு இணைத்து ஒரு கதையை கையில் எடுத்து அதை தொய்வில்லாமல் நகர்த்தும் திரைக்கதை அமைத்தால் அப்படம் வெற்றியே.


சுதந்திரத்திற்கு முன் இந்தியா வில் உள்ள ஒரு  மலைவாழ் கிராமம் அங்குள்ள சிறு பிள்ளையை (மல்லி) அவளின் குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் பிரிட்டிஷார் மனைவி மல்லியை இழுத்து செல்கிறாள் அவளை அந்த கிராமத்து காப்பான் ஒருவன் எப்படி மீட்க போகிறான் இது ஒரு கதை.


பிரிட்டிஷாரின் போலீஸ் பணியில் சேர்ந்து மிக உயர்ந்த பொறுப்பான உச்ச காவல் அதிகாரி யாக விரும்பும் ஒரு இந்திய இளைஞன் அவன் ஏன் அந்த பணியில் சேர விரும்பினான் ? அதற்காக அவன் என்னவெல்லாம் செய்தான் , எதற்காக இதை செய்கிறான் இது ஒரு கதை.


இந்த இரு கதையில் உள்ள நாயகர்கள் ஒரு மைய புள்ளியில் இணைந்து அவர்கள் எவ்வாறு வெற்றி இலக்கை அடைந்தார்கள் என்பதை 3 மணி நேரம் மிக சுவாரஸ்யமான திரைக்கதை யால்  நகைச்சுவை, பாசம்,நட்பு, காதல்,துரோகம்,தேசம்,

விடுதலை என எல்லாம் கலந்து நம் கவலைகளை மறக்க செய்து இவ்வளவு கஷ்டப்பட்டா நமக்கு சுதந்திரம் கிடைத்தது என நம்மை நினைக்க வைத்து வெற்றி பெறுகிறார் இயக்குனர்.


ராம் சரண், ஜூனியர் NTR இவர்களின் அசாத்திய உடற் கட்டு இவர்கள் எதிரிகளை துவம்சம் செய்யும் போதெல்லாம் இதெல்லாம்  சாத்தியம் தான் என் நம்மை நினைக்க வைப்பது தான் கதாபாத்திரங்கள் வெற்றி அதை செவ்வனே செய்துள்ளார்கள் இருவரும்.


முதல் பாதியில் junior NTR நடிப்பு, நடனம்,சண்டை காட்சிகள், கண்ணீர் என ஸ்கோர் செய்கிறார், இரண்டாம் பாதியில் ராம் சரண்  ஸ்கோர் செய்கிறார்  அதிலும் அவரின் தோற்றமும், வில் ஏந்தி ராமனாக வே நம் கண்களில் தோன்றி வெள்ளை காரர்களை வதம் செய்வதெல்லாம் மயிற்கூச்சரியும் காட்சிகள்.


ராம்சரனை கண்டதும் அவரின் காதலி சீதா கொடுத்த டாலரை NTR கொடுப்பது அழகிய ஹைக்கூ ❤️❤️


ராமனுக்கு (ராம் சரன் ) உதவியாக பீம் (Junior NTR) இருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் பரபரப்பின் உச்சம். (சொல்லப்போனா சில்லறைகளை சிதற விடும் காட்சிகள்)


மதன் கார்கியின் வசனங்கள் துப்பாக்கி யில் இருந்து வரும் தோட்டாகள் ரகம் (வைரமுத்து மகன் ஆயிற்றே).


இரண்டு கதாபாத்திரங்களும் சம அளவில் பங்கு கொடுத்தற்கே இயக்குனர்க்கு சபாஷ்.பாடல்களும் சரி ,பிண்ணனி இசையும் சரி படத்திற்கு மிக பெரிய பலம்.


அசுரன்  போன்ற படங்களுக்கு சென்று அப்படத்தை பார்த்து கலைஞர்களை  ஊக்குவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது போன்ற சுதந்திர த்தை போற்றும் திரைப்படங்களுக்கும் சென்று ஊக்குவித்தால் அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.


ராஜமௌலி சார் உங்கள் திரைப்படத்தில் இன்னொரு மணிமகுடம் இந்த RRR வாழ்த்துக்கள்  ❤️❤️❤️

#RRR 


ரசிகன்

ராஜா.க


செவ்வாய், 8 மார்ச், 2022

தூளான பொங்கல்


 


தூள் !!!

பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்பே படம் ரிலீஸ்.

#நெல்லை பூர்ணகலா தியேட்டரில் நண்பர்களுடன் பார்க்க சென்றாகிவிட்டது. Online இல்லாத காலகட்டம் மேட்னி ஷோக்கு கூட்டம் அப்படி, இப்பிடி னு நண்பன் டிக்கெட் வாங்கிவிட்டான்.


 #தில் இன் தில்லான வெற்றிக்கு பின்  தரணி-#விக்ரம் இணைகிறார் கள் இரண்டாவது முறை ஏகப்பட்ட எதிர்பார்ப்பு,

 #வித்யாசாகர் துள்ளாளன இசை, பாட்டு எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

கேசட்டுகள் புழக்கத்தில் இருந்த நேரம்.


 கொடுவா மீசை, 

சோக்கே சோக்கே பாடல் ,ஆசை ஆசை ,  சிங்கம் போல நடந்து வராண்டி பாட்டுடன் கூடிய சண்டை காட்சி, என அனைத்து பாடல்களும் ஹிட்.


 ஜோ,ரீமாசென் இரண்டு கதாநாயகிகள், விவேக் காமெடி, பசுபதி , சொர்ணக்கா மிரட்டல்  வில்லத்தனம், ஷகிலா வின் கெஸ்ட் அப்பியிரன்ஸ் 

தரணி யின் சின்ன,சின்ன டிவிஸ்டிங்க் திரைக்கதை,  என பக்கா மசாலா திரைப்படம். அதனால் தான் என்னவோ நான்கு நாட்களுக்கு

பின்பு பொங்கல் க்கு வெளி வந்த அன்பேசிவம், வசீகரா என்ற இரண்டு நல்ல படங்களும் 


#தூள் என்னும் சுனாமியால் அடித்து வெளியேறப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் #சீயான் தமிழ்சினிமாவின் வசூல் தாதா, இந்த படத்தின் நூறு நாட்கள் வெற்றி க்கு பிறகு #சாமி என்னும் படம் வெளியாக தயாராக இருந்தது #சீயான் #விக்ரம்


 


தூள் !!!

பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்பே படம் ரிலீஸ்.

#நெல்லை பூர்ணகலா தியேட்டரில் நண்பர்களுடன் பார்க்க சென்றாகிவிட்டது. Online இல்லாத காலகட்டம் மேட்னி ஷோக்கு கூட்டம் அப்படி, இப்பிடி னு நண்பன் டிக்கெட் வாங்கிவிட்டான்.


 #தில் இன் தில்லான வெற்றிக்கு பின்  தரணி-#விக்ரம் இணைகிறார் கள் இரண்டாவது முறை ஏகப்பட்ட எதிர்பார்ப்பு,

 #வித்யாசாகர் துள்ளாளன இசை, பாட்டு எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

கேசட்டுகள் புழக்கத்தில் இருந்த நேரம்.


 கொடுவா மீசை, 

சோக்கே சோக்கே பாடல் ,ஆசை ஆசை ,  சிங்கம் போல நடந்து வராண்டி பாட்டுடன் கூடிய சண்டை காட்சி, என அனைத்து பாடல்களும் ஹிட்.


 ஜோ,ரீமாசென் இரண்டு கதாநாயகிகள், விவேக் காமெடி, பசுபதி , சொர்ணக்கா மிரட்டல்  வில்லத்தனம், ஷகிலா வின் கெஸ்ட் அப்பியிரன்ஸ் 

தரணி யின் சின்ன,சின்ன டிவிஸ்டிங்க் திரைக்கதை,  என பக்கா மசாலா திரைப்படம். அதனால் தான் என்னவோ நான்கு நாட்களுக்கு

பின்பு பொங்கல் க்கு வெளி வந்த அன்பேசிவம், வசீகரா என்ற இரண்டு நல்ல படங்களும் 


#தூள் என்னும் சுனாமியால் அடித்து வெளியேறப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் #சீயான் தமிழ்சினிமாவின் வசூல் தாதா, இந்த படத்தின் நூறு நாட்கள் வெற்றி க்கு பிறகு #சாமி என்னும் படம் வெளியாக தயாராக இருந்தது #சீயான் #விக்ரம்

ஞாயிறு, 6 மார்ச், 2022

காந்தி மகான்

 மகான்  ,


விக்ரம், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சிம்ரன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்துள்ள படம் மகான்.


 ஒரு படம் பார்த்து முடிக்கும் போது அந்த Hero character நம்மிடம் சில மணி நேரங்களாவது நாமே அந்த கதாபாத்திரமா உணரும் படி இருக்கணும்.அது தான் ஒரு சினிமா மற்றும் இயக்குனர் க்கு கிடைத்த வெற்றி, 


அந்த விதத்தில் கார்த்திக் சுப்புராஜ்  காந்தி மகான்  வெற்றி பெற்றிருக்கிறார்.


படத்தின் மிக பெரிய பலம் வசனங்கள் கத்தி போல கூர்மையானதாக உள்ளது.

எ.கா என்னை மாதிரி எந்த கொள்கையும் இல்லாம எல்லா செயல்களும் செய்து வாழ்க்கையே நடத்துவதும் தவறு,

உன்னை மாதிரி கொள்கை , கொள்கை னு அடுத்தவரின் வாழ்க்கையை கெடுப்பதும் தவறு இரண்டுமே extreme.


கார்த்திக் சுப்புராஜ் ட்ரெண்ட் மார்க் திரைக்கதை யில் நிகழும் சின்ன சின்ன ட்விஸ்ட் தான்.இந்த படத்தில் அது climax தான் வருகிறது. மற்றபடி கோர்வையான திரைக்கதை படத்தை நன்றாக பயணிக்க வைக்கிறது..


விக்ரம் நடிப்பு சூப்பர் ஒரு அப்பாவாக அவரின் தவிப்பு உணர்ந்து நடித்துள்ளார்.

பாபி சிம்ஹா வும் நல்ல scope திறம் பட செய்துள்ளார்.


துருவ் மட்டும் சைக்கோ வாக மனதில் பதிகிறார்.


நல்ல கதை , திரைக்கதை தாராளமாக amazon prime பார்க்கலாம் இந்த காந்தி மகானை.

 மகான்  ,


விக்ரம், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சிம்ரன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்துள்ள படம் மகான்.


 ஒரு படம் பார்த்து முடிக்கும் போது அந்த Hero character நம்மிடம் சில மணி நேரங்களாவது நாமே அந்த கதாபாத்திரமா உணரும் படி இருக்கணும்.அது தான் ஒரு சினிமா மற்றும் இயக்குனர் க்கு கிடைத்த வெற்றி, 


அந்த விதத்தில் கார்த்திக் சுப்புராஜ்  காந்தி மகான்  வெற்றி பெற்றிருக்கிறார்.


படத்தின் மிக பெரிய பலம் வசனங்கள் கத்தி போல கூர்மையானதாக உள்ளது.

எ.கா என்னை மாதிரி எந்த கொள்கையும் இல்லாம எல்லா செயல்களும் செய்து வாழ்க்கையே நடத்துவதும் தவறு,

உன்னை மாதிரி கொள்கை , கொள்கை னு அடுத்தவரின் வாழ்க்கையை கெடுப்பதும் தவறு இரண்டுமே extreme.


கார்த்திக் சுப்புராஜ் ட்ரெண்ட் மார்க் திரைக்கதை யில் நிகழும் சின்ன சின்ன ட்விஸ்ட் தான்.இந்த படத்தில் அது climax தான் வருகிறது. மற்றபடி கோர்வையான திரைக்கதை படத்தை நன்றாக பயணிக்க வைக்கிறது..


விக்ரம் நடிப்பு சூப்பர் ஒரு அப்பாவாக அவரின் தவிப்பு உணர்ந்து நடித்துள்ளார்.

பாபி சிம்ஹா வும் நல்ல scope திறம் பட செய்துள்ளார்.


துருவ் மட்டும் சைக்கோ வாக மனதில் பதிகிறார்.


நல்ல கதை , திரைக்கதை தாராளமாக amazon prime பார்க்கலாம் இந்த காந்தி மகானை.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

அன்னபூரணி மெஸ் சைவம்


 அன்னபூரணி மெஸ் சைவம்


ஹோட்டலின் முகப்பில்  வைத்துள்ள அன்னபூரணி படமே நம்மை சாப்பிட அழைப்பது போல உள்ளது.


சாப்பாடு க்கு டோக்கன் சிஸ்டம் போல கல்லா பெட்டியில் அன்னபூரணி போலவே அக்கா ஒருவர் அமர்ந்திருந்தார்கள்.


சாப்பாடு டோக்கன் என்றவுடன், வாழைப்பூ வடை வேணுமா என கேட்க ? வடை என்றாலே வரிந்து கட்டி உண்ணும் நம்மிடம் 

வாழைப்பூ வடை என்றால் கேட்க வா வேண்டும் உம் கொட்ட, 


பாயாசம் வேணுமா என கேட்க ? பொதுவாக தயிர் தானே extra காசு கேடப்பார்கள் சரி காலம் மாறிடுச்சு போல ,என்ன பாயாசம் என பதிலுக்கு நான் கேட்க ? பால் பாயசாம் என்றவுடன் , ரோஜா படத்தில் ரகுமான் இசையை இப்போதுள்ள headphone இல் கேட்டு  பரவசம் அடைவது போல பால் பாயாசம் என்ற வார்த்தை ஒலித்தது.


டோக்கனை பணியாளரிடத்தில் கொடுத்தேன், இலை யில் ஒவ்வொரு ஐயிட்டமாக பரிமாறப்பட்டது, 

அந்த வாழைப்பூ வடை என்றேன் ? சாரி சார் என்றார் , திக் கென்று  வடை போச்சா என்றது மனது..

வடை ரெடி யாகி கொண்டே இருக்கிறது கொஞ்சம் பொறுங்க சார் என்றார்.


சரி எதுக்கு வம்பு சாம்பார் க்கு உருளைக்கிழங்கு பொறியல் போதுமே sachin & schewag போன்ற நல்ல கூட்டணி , 

சார் வத்த குழம்பு என்றார் சர்வர் அந்த "வாழைப்பூ வடை "

என்றேன் , இரண்டே நிமிடம் சுட , சுட கொண்டு வந்துவிடுகிறேன் என்றார்.


வத்த குழம்பு , அப்பளம் காம்போ நன்றாகவே இருந்தது, திருவிளையாடல் படத்தில் நாகேஷ் 

புலம்பவது உனக்கு பொற்காசுகள் கிடையாது ,  கிடையாது என்று கூறுவது போல வடை கிடையாது , கிடையாது என்றது மனது.


இதோ வந்துட்டேன் என்று மதன் பாப் கூறுவது போல சர்வர் சூடான வடையுடன் வந்து நின்றார்.

செக்க சிவந்து மொறு, மொறு வென்று, லேட்டாக வந்தாலும் டேஸ்டாக வந்தது.


இரசத்துடன் வடை சேர்த்து சாப்பிடுகையில் இரசத்தின் புளிப்பு, வாழைப்பூ வடை காம்போ தோனி-கோலி combo போல பட்டையை கிழப்பியது..

பரவாயில்லை லேட்டாக வந்ததும் நல்லது தான் போல என்று நம்மை நாமே சாமாதானாப்படுத்தி கொள்ள வேண்டும்.


வாழைப்பூ வடை என்றவுடன் இது போல ஒரு ஹோட்டலில் மம்மூட்டி சாப்பிடுகையில் இந்த சுவை ஸ்ரீவித்யா கை பக்குவம் ஆயிற்றே என்று சமையல் அறைக்கே சென்று  கண்டுபிடித்துவிடுவார்  "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் " திரை படத்தில். சமையல் மற்றும் கை பக்குவத்திற்கு என்றுமே தனி சக்தி.


எல்லாம் சுபாமாக முடிந்தது பால்பாயாசம்  மட்டும் சுமாரகவே இருந்தது எதன் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்குமோ அதன் தரம்  சிறுது குறைந்தாலும் சற்று ஏமாற்றம் அடையலாம்.


எதிரிபார்ப்பை குறைத்தால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.


தாம்பரம் பேருந்து நிலையம் பின்புறம் ஒரு நல்ல உணவகம்

அண்ணபுரணி மெஸ்

 sriram stamp paper கடை அருகில் உள்ளது.


இவண்

ராஜா.க


 அன்னபூரணி மெஸ் சைவம்


ஹோட்டலின் முகப்பில்  வைத்துள்ள அன்னபூரணி படமே நம்மை சாப்பிட அழைப்பது போல உள்ளது.


சாப்பாடு க்கு டோக்கன் சிஸ்டம் போல கல்லா பெட்டியில் அன்னபூரணி போலவே அக்கா ஒருவர் அமர்ந்திருந்தார்கள்.


சாப்பாடு டோக்கன் என்றவுடன், வாழைப்பூ வடை வேணுமா என கேட்க ? வடை என்றாலே வரிந்து கட்டி உண்ணும் நம்மிடம் 

வாழைப்பூ வடை என்றால் கேட்க வா வேண்டும் உம் கொட்ட, 


பாயாசம் வேணுமா என கேட்க ? பொதுவாக தயிர் தானே extra காசு கேடப்பார்கள் சரி காலம் மாறிடுச்சு போல ,என்ன பாயாசம் என பதிலுக்கு நான் கேட்க ? பால் பாயசாம் என்றவுடன் , ரோஜா படத்தில் ரகுமான் இசையை இப்போதுள்ள headphone இல் கேட்டு  பரவசம் அடைவது போல பால் பாயாசம் என்ற வார்த்தை ஒலித்தது.


டோக்கனை பணியாளரிடத்தில் கொடுத்தேன், இலை யில் ஒவ்வொரு ஐயிட்டமாக பரிமாறப்பட்டது, 

அந்த வாழைப்பூ வடை என்றேன் ? சாரி சார் என்றார் , திக் கென்று  வடை போச்சா என்றது மனது..

வடை ரெடி யாகி கொண்டே இருக்கிறது கொஞ்சம் பொறுங்க சார் என்றார்.


சரி எதுக்கு வம்பு சாம்பார் க்கு உருளைக்கிழங்கு பொறியல் போதுமே sachin & schewag போன்ற நல்ல கூட்டணி , 

சார் வத்த குழம்பு என்றார் சர்வர் அந்த "வாழைப்பூ வடை "

என்றேன் , இரண்டே நிமிடம் சுட , சுட கொண்டு வந்துவிடுகிறேன் என்றார்.


வத்த குழம்பு , அப்பளம் காம்போ நன்றாகவே இருந்தது, திருவிளையாடல் படத்தில் நாகேஷ் 

புலம்பவது உனக்கு பொற்காசுகள் கிடையாது ,  கிடையாது என்று கூறுவது போல வடை கிடையாது , கிடையாது என்றது மனது.


இதோ வந்துட்டேன் என்று மதன் பாப் கூறுவது போல சர்வர் சூடான வடையுடன் வந்து நின்றார்.

செக்க சிவந்து மொறு, மொறு வென்று, லேட்டாக வந்தாலும் டேஸ்டாக வந்தது.


இரசத்துடன் வடை சேர்த்து சாப்பிடுகையில் இரசத்தின் புளிப்பு, வாழைப்பூ வடை காம்போ தோனி-கோலி combo போல பட்டையை கிழப்பியது..

பரவாயில்லை லேட்டாக வந்ததும் நல்லது தான் போல என்று நம்மை நாமே சாமாதானாப்படுத்தி கொள்ள வேண்டும்.


வாழைப்பூ வடை என்றவுடன் இது போல ஒரு ஹோட்டலில் மம்மூட்டி சாப்பிடுகையில் இந்த சுவை ஸ்ரீவித்யா கை பக்குவம் ஆயிற்றே என்று சமையல் அறைக்கே சென்று  கண்டுபிடித்துவிடுவார்  "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் " திரை படத்தில். சமையல் மற்றும் கை பக்குவத்திற்கு என்றுமே தனி சக்தி.


எல்லாம் சுபாமாக முடிந்தது பால்பாயாசம்  மட்டும் சுமாரகவே இருந்தது எதன் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்குமோ அதன் தரம்  சிறுது குறைந்தாலும் சற்று ஏமாற்றம் அடையலாம்.


எதிரிபார்ப்பை குறைத்தால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.


தாம்பரம் பேருந்து நிலையம் பின்புறம் ஒரு நல்ல உணவகம்

அண்ணபுரணி மெஸ்

 sriram stamp paper கடை அருகில் உள்ளது.


இவண்

ராஜா.க

புதன், 12 ஜனவரி, 2022

மார்கழி தான் ஓடிப் போச்சு போகியாச்சு

 நம்முடைய பண்டிகை நாட்களுக்கும் தமிழ் சினிமா பாடல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்.


Happy New Year ஆரம்பித்து, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி,( ஹோலி, தசரா) சொல்லி வைப்போம் இல்லை நீ இந்தியனா கேள்வி கேட்பாங்க எதுக்கு வம்பு.


அப்படி ஒரு நல்ல நாள் தான் போகி இந்த நாள் பற்றி நினைக்கியில் நம் முன்னே ஒலிக்கும் முதல் பாட்டு,


மார்கழி தான் ஓடிப் போச்சு போகியாச்சு


நாளைக்குத் தான் தை பொறக்கும் தேதியாச்சு 

போகி இது போகி இது நந்தலாலா 

பொங்கல் வைப்போம் நாளைக்குத் தான் நந்தலாலா....


1991 இல் தளபதி படத்தில் உள்ள பாடல் மணிரத்னம் இயக்கதில் , வாலி யின் வாலிப வரிகளில், இளையராஜா இசையமைத்த பாடல்,

 கிட்டதட்ட 31 வருடங்கள் உருண்டோடிவிட்டது ஆனால் இந்த பாடலை சமன் செய்ய வேறு எந்த பாடலும் இன்று வரை வரவில்லை  என்பது கற்பனை பஞ்சம்  தான் என்றாலும் வருங்காலத்தில் வரும் என்று நம்பிக்கை யோடு  

இந்த வருடமும் இந்த பாட்டோடு போகியை கொண்டாடுவோம்.


அனைவருக்கும் போகி வாழ்த்துக்கள்.





 நம்முடைய பண்டிகை நாட்களுக்கும் தமிழ் சினிமா பாடல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்.


Happy New Year ஆரம்பித்து, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி,( ஹோலி, தசரா) சொல்லி வைப்போம் இல்லை நீ இந்தியனா கேள்வி கேட்பாங்க எதுக்கு வம்பு.


அப்படி ஒரு நல்ல நாள் தான் போகி இந்த நாள் பற்றி நினைக்கியில் நம் முன்னே ஒலிக்கும் முதல் பாட்டு,


மார்கழி தான் ஓடிப் போச்சு போகியாச்சு


நாளைக்குத் தான் தை பொறக்கும் தேதியாச்சு 

போகி இது போகி இது நந்தலாலா 

பொங்கல் வைப்போம் நாளைக்குத் தான் நந்தலாலா....


1991 இல் தளபதி படத்தில் உள்ள பாடல் மணிரத்னம் இயக்கதில் , வாலி யின் வாலிப வரிகளில், இளையராஜா இசையமைத்த பாடல்,

 கிட்டதட்ட 31 வருடங்கள் உருண்டோடிவிட்டது ஆனால் இந்த பாடலை சமன் செய்ய வேறு எந்த பாடலும் இன்று வரை வரவில்லை  என்பது கற்பனை பஞ்சம்  தான் என்றாலும் வருங்காலத்தில் வரும் என்று நம்பிக்கை யோடு  

இந்த வருடமும் இந்த பாட்டோடு போகியை கொண்டாடுவோம்.


அனைவருக்கும் போகி வாழ்த்துக்கள்.





செவ்வாய், 11 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்து அட்டைகள் !!!

 என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை. 


அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  

“பொங்கல் வாழ்த்து அட்டைகள்” பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  


எங்கள் ஊரில் உள்ள 

அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள். 


MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.

50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள். 


சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்

நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று. 


நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.

நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை. 

சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும். 


நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள். 


இனிப்புடன் 

ராஜா.க


 என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை. 


அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  

“பொங்கல் வாழ்த்து அட்டைகள்” பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  


எங்கள் ஊரில் உள்ள 

அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள். 


MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.

50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள். 


சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்

நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று. 


நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.

நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை. 

சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும். 


நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள். 


இனிப்புடன் 

ராஜா.க


வெள்ளி, 7 ஜனவரி, 2022

அன்பறிவு விமர்சனம்

 அன்பறிவு விமர்சனம்


அடி, தடி  குணாதிசயங்கள் உள்ள ஒரு கதாபாத்திரம், 

பாசமாமுள்ள, பாந்தமான கதாபாத்திரம்,எங்கள் வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்  முதல் வேல் சூர்யா வரை தமிழ் சினிமா அடித்து  துவைத்த இரட்டை வேட  கதை தான் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள்  , இக்காலத்திற்கு ஏற்ற மாதிரி எடுத்துள்ளனர்.


இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அவர்களின் கல்யாணம், அதை காதலை உபயோகித்து சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவன் தன்னை அதிகாரமையமாக்கி கொள்ளும் தந்திரமுள்ள வில்லன்.


பிற்காலத்தில் அவனே சாதியை வைத்து தான் சார்ந்த மக்களை பின்னோக்கி அழைத்து செல்வது என நிகழ்கால அரசியலை தன் திரைக்கதை யால் பதியவைக்கும் இயக்குனர்க்கு சபாஷ்.


2K kid ஆஸ்தான ஹீரோ ஆதி (ஹிப்ஹாப் தமிழா) கிராமத்து சண்டியர்  கதாப்பாத்திரம், 

வெளிநாட்டில் வளரும் படித்த, பாந்தமான yo-yo boy கதாபாத்திரம் என இரு வேடங்களில் தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்கிறார்.


அம்மா-மகன் செண்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். மாஸ் & கிளாஸ் intro ஆதி க்கு பொருந்துகிறது. ரஜினி ஆரம்பித்து வைத்தது இன்றும் தொடர்கிறது.


எல்லா மனிதர்களும் சமம், ஆண்ட பெருமை பேசி (கடந்த கால) கொண்டு நிகழ் காலத்தை வீணடிக்காமல் ,  படித்து பரந்து,விரிந்த உலகை பார்த்து  உன்னோடு, உன் சார்ந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள் என்கிறான் அன்பறிவு.


அன்பறிவு - அற்புதம்

 

#AnbarivuOnHotstar 

#Anbariv 

#AnbarivuReview 

#AnbarivuFestOnJan7th 

#AnbarivuReview 

#AnbarivuOnHotstar 

#AnbarivuFestOnJan7th

 அன்பறிவு விமர்சனம்


அடி, தடி  குணாதிசயங்கள் உள்ள ஒரு கதாபாத்திரம், 

பாசமாமுள்ள, பாந்தமான கதாபாத்திரம்,எங்கள் வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்  முதல் வேல் சூர்யா வரை தமிழ் சினிமா அடித்து  துவைத்த இரட்டை வேட  கதை தான் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள்  , இக்காலத்திற்கு ஏற்ற மாதிரி எடுத்துள்ளனர்.


இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அவர்களின் கல்யாணம், அதை காதலை உபயோகித்து சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவன் தன்னை அதிகாரமையமாக்கி கொள்ளும் தந்திரமுள்ள வில்லன்.


பிற்காலத்தில் அவனே சாதியை வைத்து தான் சார்ந்த மக்களை பின்னோக்கி அழைத்து செல்வது என நிகழ்கால அரசியலை தன் திரைக்கதை யால் பதியவைக்கும் இயக்குனர்க்கு சபாஷ்.


2K kid ஆஸ்தான ஹீரோ ஆதி (ஹிப்ஹாப் தமிழா) கிராமத்து சண்டியர்  கதாப்பாத்திரம், 

வெளிநாட்டில் வளரும் படித்த, பாந்தமான yo-yo boy கதாபாத்திரம் என இரு வேடங்களில் தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்கிறார்.


அம்மா-மகன் செண்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். மாஸ் & கிளாஸ் intro ஆதி க்கு பொருந்துகிறது. ரஜினி ஆரம்பித்து வைத்தது இன்றும் தொடர்கிறது.


எல்லா மனிதர்களும் சமம், ஆண்ட பெருமை பேசி (கடந்த கால) கொண்டு நிகழ் காலத்தை வீணடிக்காமல் ,  படித்து பரந்து,விரிந்த உலகை பார்த்து  உன்னோடு, உன் சார்ந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள் என்கிறான் அன்பறிவு.


அன்பறிவு - அற்புதம்

 

#AnbarivuOnHotstar 

#Anbariv 

#AnbarivuReview 

#AnbarivuFestOnJan7th 

#AnbarivuReview 

#AnbarivuOnHotstar 

#AnbarivuFestOnJan7th

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஆர்கானிக் உணவு வகைகள்

 


ஒரு காலத்தில் நெல்  சோறு(அரிசி) சாதம்  , பால் , முட்டை, அசைவ உணவு (கோழி கறி) அனைவருக்கும் கிடைக்கவில்லை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

(காதலர் தினம் படத்தில் குணால் அப்பா கூறுவார் என்னடா படிக்கணும் ஆசை 

படற நாளைக்கு நெல்லு சோறு தின்ன ஆசை படுவ ஒழுங்கா இரு என்பார் )


பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இந்தியாவில் தலை எடுக்கும் முன் எல்லாமே ஆர்கானிக் உணவு தான்.

அதனால் தான் அரிசி சாப்பாடு பெரிய விசயமாய் கருதப்பட்டது. 


நம் அனைவருக்கும் இப்போது கிடைக்கும் அரிசி சாப்பாடாக இருக்கட்டும், அசைவ உணவாக இருக்கட்டும், இவற்றை உண்பவர்கள் சராசரி வயது அப்போது ஆர்கானிக்காக இருந்த காலத்தின் சராசரி வயதை விட இப்போது கூடுதலாகத்தானிருக்கிறது.


என் பாட்டி காலத்தில் வீட்டிற்கு சில பிள்ளைகள் இறந்து கொண்டே தான் இருக்கும். 

ஒப்பீட்டளவில் இந்த மரணம் எல்லாம் குறைந்துள்ளன.


ஆர்கானிக் என்பது இப்போதய வெற்றிகரமான வியாபாரம் மேலும்,

 மக்களிடையே ஒரு பாகுபாட்டைக் கொண்டு வரும் ஆயுதமும் ஆகும்.


அதனால் நமக்கு கிடைத்த உணவை நன்கு உண்டு இன்புற்றிருக்கலாம்.


இவண்

ராஜா.க

 


ஒரு காலத்தில் நெல்  சோறு(அரிசி) சாதம்  , பால் , முட்டை, அசைவ உணவு (கோழி கறி) அனைவருக்கும் கிடைக்கவில்லை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

(காதலர் தினம் படத்தில் குணால் அப்பா கூறுவார் என்னடா படிக்கணும் ஆசை 

படற நாளைக்கு நெல்லு சோறு தின்ன ஆசை படுவ ஒழுங்கா இரு என்பார் )


பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இந்தியாவில் தலை எடுக்கும் முன் எல்லாமே ஆர்கானிக் உணவு தான்.

அதனால் தான் அரிசி சாப்பாடு பெரிய விசயமாய் கருதப்பட்டது. 


நம் அனைவருக்கும் இப்போது கிடைக்கும் அரிசி சாப்பாடாக இருக்கட்டும், அசைவ உணவாக இருக்கட்டும், இவற்றை உண்பவர்கள் சராசரி வயது அப்போது ஆர்கானிக்காக இருந்த காலத்தின் சராசரி வயதை விட இப்போது கூடுதலாகத்தானிருக்கிறது.


என் பாட்டி காலத்தில் வீட்டிற்கு சில பிள்ளைகள் இறந்து கொண்டே தான் இருக்கும். 

ஒப்பீட்டளவில் இந்த மரணம் எல்லாம் குறைந்துள்ளன.


ஆர்கானிக் என்பது இப்போதய வெற்றிகரமான வியாபாரம் மேலும்,

 மக்களிடையே ஒரு பாகுபாட்டைக் கொண்டு வரும் ஆயுதமும் ஆகும்.


அதனால் நமக்கு கிடைத்த உணவை நன்கு உண்டு இன்புற்றிருக்கலாம்.


இவண்

ராஜா.க