வெள்ளி, 28 டிசம்பர், 2018

அடங்கமறு

ஜெயம் ரவி நடித்த படத்தில் ஒரு காட்சியை கூட தொலைகாட்சியில் பார்க்காமல்,
திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் அன்று  #தனிஒருவன்
இன்று #அடங்கமறு;

இன்னொரு தனி ஒருவனாக இருக்குமா இந்த அடங்கமறு என்று எதிரபார்ப்பில் அமர்ந்தேன்.

எளிமையான கதை தேர்வு.பெண்களை கற்பழிக்கும் காமுகர்களை கதாநாயகன் எப்படி தண்டிக்கிறான் ? என்பதை விறுவிறுப்பான தன் திரைக்கதையால்  சொல்லி  வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.


ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மிக முக்கிய தேவை பலமான வில்லன்கள் அவர்கள்  உதவியுடன் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது;
கதாநாயகன் பழி வாங்குவதாக சவால் விடுகிறான்.

எப்படி சவாலில் வெல்கிறான் என்பதை நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறான்.ஒரு சில லாஜிக் மீறல்கள்,
தமிழ் படம்னா அப்படி தான் இருக்கும்.

கதாநாயகிக்கு பெரிய வேலை இல்லை வந்து போகிறார். அழகம் பெருமாள் அழகாக நடித்திருக்கிறார். பாடல்களுக்கு பெரிய வேலை இல்லை, பின்னனி இசை பலம் தான்.

தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.”ஜெயம்” ரவிக்கு இன்னொரு “ஜெயம்”கொடுக்க முயற்சித்திருக்கிறது இந்த #அடங்கமறு

ரசிகன்
ராஜா.க
ஜெயம் ரவி நடித்த படத்தில் ஒரு காட்சியை கூட தொலைகாட்சியில் பார்க்காமல்,
திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் அன்று  #தனிஒருவன்
இன்று #அடங்கமறு;

இன்னொரு தனி ஒருவனாக இருக்குமா இந்த அடங்கமறு என்று எதிரபார்ப்பில் அமர்ந்தேன்.

எளிமையான கதை தேர்வு.பெண்களை கற்பழிக்கும் காமுகர்களை கதாநாயகன் எப்படி தண்டிக்கிறான் ? என்பதை விறுவிறுப்பான தன் திரைக்கதையால்  சொல்லி  வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.


ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மிக முக்கிய தேவை பலமான வில்லன்கள் அவர்கள்  உதவியுடன் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது;
கதாநாயகன் பழி வாங்குவதாக சவால் விடுகிறான்.

எப்படி சவாலில் வெல்கிறான் என்பதை நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறான்.ஒரு சில லாஜிக் மீறல்கள்,
தமிழ் படம்னா அப்படி தான் இருக்கும்.

கதாநாயகிக்கு பெரிய வேலை இல்லை வந்து போகிறார். அழகம் பெருமாள் அழகாக நடித்திருக்கிறார். பாடல்களுக்கு பெரிய வேலை இல்லை, பின்னனி இசை பலம் தான்.

தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.”ஜெயம்” ரவிக்கு இன்னொரு “ஜெயம்”கொடுக்க முயற்சித்திருக்கிறது இந்த #அடங்கமறு

ரசிகன்
ராஜா.க

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ஐயப்பனும்,கம்யூனிசமும்

ஐயப்பனும்,கம்யூனிசமும்

கம்யூனிசத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கிடையாது என்றாலும் இப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும்  என நான் உணர்ந்த இடம் சபரிமலை.

கடந்த 12 வருடங்களாக சபரிமலைக்கு செல்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வசதிகளை பக்தர்களுக்கு தருவது கேரள தெவசம் போர்ட்;ஆட்சியில் யார் மாறினாலும் (காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்) இந்த சேவைகள் தொடர்வது கவனிக்கதக்கது.

அதில் சில
Online ticket booking , plastic free, சுற்றுபுற தூய்மை,நடந்து செல்லும் பாதையில் அமரும் அறை அமைத்தல்,சுத்தமான (தானியங்கி) தண்ணீர்,பேருந்து வசதி (பம்பை-நிலக்கல்).

அது என்ன கம்யூனிசமும்,ஐயப்பனும் ?
தமிழகத்தில் பல கோயில்களுக்கு சென்றிருக்கிறேன், இங்கு பணம் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை,பணம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை. பெரும்பாலான கோயில்களில் இது தான் நடைமுறை.

சபரிமலையில் இன்று வரை கட்டண தரிசனம் கிடையாது. Online Ticket கூட இலவசம் தான்.  வடிவேலு பாணியில் காவலரிடம் 20₹ கொடுத்தால் 40₹ திருப்பி கொடுத்து ஒடி விடு என்பார்கள். இப்படி கட்டணம் இல்லாததால் தான் என்னவோ, கோயில் உண்டியல்களில் கட்டணம் குவிகிறது. அதை கொண்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடிகிறது.

குழந்தைகளிடமும்,
வயதானவர்களிடமும் கேரள காவல்துறை நடந்து கொள்ளும் விதத்திற்கு தனி சல்யூட் அடிக்கலாம்.

இந்த வருடம் கேரளாவில் பெய்த கனமழை யில் பாதிக்கபட்ட பகுதிகளில் சபரிமலையும் அடக்கம்.
சேதமடைந்த சாலைகளை எல்லாம் சரி செய்து விட்டார்கள். இது போன்ற  சுவடிலிருந்து இவ்வளவு வேகமாக மீண்டு வருவதெல்லாம் சேட்டன்களால் மட்டுமே முடியும் போல.

பக்தர்களின் வேண்டுதலை தீர்ப்பதால் தான் என்னவோ, வருடா வருடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. பக்தர்களின் வேண்டுதலை உணர்ந்த ஐயப்பன் தன் திருத்தலைத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுவார் என்று நம்புவோமாக!

நம்பிக்கையுடன்
ராஜா.க
ஐயப்பனும்,கம்யூனிசமும்

கம்யூனிசத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கிடையாது என்றாலும் இப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும்  என நான் உணர்ந்த இடம் சபரிமலை.

கடந்த 12 வருடங்களாக சபரிமலைக்கு செல்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வசதிகளை பக்தர்களுக்கு தருவது கேரள தெவசம் போர்ட்;ஆட்சியில் யார் மாறினாலும் (காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்) இந்த சேவைகள் தொடர்வது கவனிக்கதக்கது.

அதில் சில
Online ticket booking , plastic free, சுற்றுபுற தூய்மை,நடந்து செல்லும் பாதையில் அமரும் அறை அமைத்தல்,சுத்தமான (தானியங்கி) தண்ணீர்,பேருந்து வசதி (பம்பை-நிலக்கல்).

அது என்ன கம்யூனிசமும்,ஐயப்பனும் ?
தமிழகத்தில் பல கோயில்களுக்கு சென்றிருக்கிறேன், இங்கு பணம் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை,பணம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை. பெரும்பாலான கோயில்களில் இது தான் நடைமுறை.

சபரிமலையில் இன்று வரை கட்டண தரிசனம் கிடையாது. Online Ticket கூட இலவசம் தான்.  வடிவேலு பாணியில் காவலரிடம் 20₹ கொடுத்தால் 40₹ திருப்பி கொடுத்து ஒடி விடு என்பார்கள். இப்படி கட்டணம் இல்லாததால் தான் என்னவோ, கோயில் உண்டியல்களில் கட்டணம் குவிகிறது. அதை கொண்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடிகிறது.

குழந்தைகளிடமும்,
வயதானவர்களிடமும் கேரள காவல்துறை நடந்து கொள்ளும் விதத்திற்கு தனி சல்யூட் அடிக்கலாம்.

இந்த வருடம் கேரளாவில் பெய்த கனமழை யில் பாதிக்கபட்ட பகுதிகளில் சபரிமலையும் அடக்கம்.
சேதமடைந்த சாலைகளை எல்லாம் சரி செய்து விட்டார்கள். இது போன்ற  சுவடிலிருந்து இவ்வளவு வேகமாக மீண்டு வருவதெல்லாம் சேட்டன்களால் மட்டுமே முடியும் போல.

பக்தர்களின் வேண்டுதலை தீர்ப்பதால் தான் என்னவோ, வருடா வருடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. பக்தர்களின் வேண்டுதலை உணர்ந்த ஐயப்பன் தன் திருத்தலைத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுவார் என்று நம்புவோமாக!

நம்பிக்கையுடன்
ராஜா.க

Lord Iyappa & Communism

Lord Iyappa  & communism

Although there is not much interest in Communism, I feel that it would be better, after visiting Sabarimala.

For the past 12 years, I have gone to Sabarimala. Every year a new facility is given to the devotees by the Kerala Government , whoever changes in power (Congress, Communist) is noticed that these services continue.

Some of them
Online ticket booking, plastic free, environmental cleanliness, walk-in parking, clean (automatic) water, bus facility (pumpa -nelakal).

What is communism and a doubt?

I have visited many temples in Tamilnadu, here is a row for those who have money, a row for those without money. This is practical in most temples.

In Sabarimala there is no charge for darshan. The online ticket is also free. Bcz of this, devotes donates money to hundi. It enables the devotees to have the necessary facilities.

Children and elder people were treated gently by Kerala police, separate salute for their duty.

Areas in Sabarimala got affected by heavy rainfall in Kerala this year.
Damaged roads are all repaired. The only way to get back out of this tragedy is to be done only by “Chetan”

Number of devotees coming to Sabarimala annually increases because devotees prayers were heard by him. Let us believe that Ayyappa realized the prayer of the devotees and would have a good lesson for the evil forces who wants to play politics using him.

With confidence
Raja K.S
Lord Iyappa  & communism

Although there is not much interest in Communism, I feel that it would be better, after visiting Sabarimala.

For the past 12 years, I have gone to Sabarimala. Every year a new facility is given to the devotees by the Kerala Government , whoever changes in power (Congress, Communist) is noticed that these services continue.

Some of them
Online ticket booking, plastic free, environmental cleanliness, walk-in parking, clean (automatic) water, bus facility (pumpa -nelakal).

What is communism and a doubt?

I have visited many temples in Tamilnadu, here is a row for those who have money, a row for those without money. This is practical in most temples.

In Sabarimala there is no charge for darshan. The online ticket is also free. Bcz of this, devotes donates money to hundi. It enables the devotees to have the necessary facilities.

Children and elder people were treated gently by Kerala police, separate salute for their duty.

Areas in Sabarimala got affected by heavy rainfall in Kerala this year.
Damaged roads are all repaired. The only way to get back out of this tragedy is to be done only by “Chetan”

Number of devotees coming to Sabarimala annually increases because devotees prayers were heard by him. Let us believe that Ayyappa realized the prayer of the devotees and would have a good lesson for the evil forces who wants to play politics using him.

With confidence
Raja K.S

வெள்ளி, 7 டிசம்பர், 2018

பாஜகவும் , அதிமுகவும்

அறிவோம் அரசியல்:

அரசியலில் கட்சிகளின் இடையே ஆன கூட்டணி வேடிக்கையாகவும்,விசித்திறமாகவும் இருக்கும்;அதில் ஒன்று அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள உறவு ருசிகரமானது.

அது ஏன் குறிப்பாக BJP அதில் ஒரு வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது.
1998ல் திரு.வாஜ்பாய் தலைமையில் NDA government அங்கம் வகித்தது அதிமுக.

அச்சமயத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி நடக்கிறது ; மத்திய அரசின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார் அம்மையார். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு அரசை கலைக்க மேதகு திரு.வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கலைக்க விரும்பவில்லை.

அப்படி இருந்த பாஜக தான் இப்போது
இப்படி இருக்கிறது என்பது வேறு கதை.

சரியாக 13 மாதங்கள் ஆகையில் அதிமுக NDA அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றது, NDA அரசை கலைக்க காங்கிரஸ் உடன் “கை” கோர்த்தது  உடன் டெல்லி சென்றது அதிமுக தலைமை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு ஓட்டு வித்யாசத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க தவறியது பாஜக.

அந்த 13 மாத காலத்தில் திரு.வாஜ்பாய் பதவி முள் மேல் படுக்கை போன்றது அதனால் தான் என்னவோ பாராளுமன்றம் விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் வணக்கம் வைத்தது மிக பிரபலம்.

பாராளுமன்றம் கலைக்க பட்டு
ஒட்டு மொத்த இந்திய தேசமும் தேர்தலை சந்தித்து. அதன் பின் நடந்த தேர்தலில் திமுக மற்றும் பிற மாநில கட்சிகளின் தயவுடன்  NDA அரசு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் பதவி வகித்தது ஓரு புறம்.

அன்று நடந்த ஆட்சி கலைப்பிற்காக அதிமுக வின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்த பயன்படுத்தி அக்கட்சியை (அதிமுக) BJP தன் கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்துவிட்டது.

அறிந்ததும், அறிவதும் தொடரும்.
ராஜா.க
அறிவோம் அரசியல்:

அரசியலில் கட்சிகளின் இடையே ஆன கூட்டணி வேடிக்கையாகவும்,விசித்திறமாகவும் இருக்கும்;அதில் ஒன்று அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள உறவு ருசிகரமானது.

அது ஏன் குறிப்பாக BJP அதில் ஒரு வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது.
1998ல் திரு.வாஜ்பாய் தலைமையில் NDA government அங்கம் வகித்தது அதிமுக.

அச்சமயத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி நடக்கிறது ; மத்திய அரசின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார் அம்மையார். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு அரசை கலைக்க மேதகு திரு.வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கலைக்க விரும்பவில்லை.

அப்படி இருந்த பாஜக தான் இப்போது
இப்படி இருக்கிறது என்பது வேறு கதை.

சரியாக 13 மாதங்கள் ஆகையில் அதிமுக NDA அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றது, NDA அரசை கலைக்க காங்கிரஸ் உடன் “கை” கோர்த்தது  உடன் டெல்லி சென்றது அதிமுக தலைமை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு ஓட்டு வித்யாசத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க தவறியது பாஜக.

அந்த 13 மாத காலத்தில் திரு.வாஜ்பாய் பதவி முள் மேல் படுக்கை போன்றது அதனால் தான் என்னவோ பாராளுமன்றம் விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் வணக்கம் வைத்தது மிக பிரபலம்.

பாராளுமன்றம் கலைக்க பட்டு
ஒட்டு மொத்த இந்திய தேசமும் தேர்தலை சந்தித்து. அதன் பின் நடந்த தேர்தலில் திமுக மற்றும் பிற மாநில கட்சிகளின் தயவுடன்  NDA அரசு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் பதவி வகித்தது ஓரு புறம்.

அன்று நடந்த ஆட்சி கலைப்பிற்காக அதிமுக வின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்த பயன்படுத்தி அக்கட்சியை (அதிமுக) BJP தன் கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்துவிட்டது.

அறிந்ததும், அறிவதும் தொடரும்.
ராஜா.க

திங்கள், 3 டிசம்பர், 2018

திருமண திருத்தலம்

இன்றைய சமூகத்தில் தலையாய பிரச்சனைகள் பல அதில் ஒன்று திருமணம் தள்ளி போகுதல்.

எல்லாம் சரியாக இருக்கிறது,எல்லா கோயில்களுக்கும் சென்றாயிற்று  ஆனாலும் ஏன் தள்ளி போகிறது என்று நினைப்பவர்கள் பலர் அவர்களுக்கான பதிவு தான் இது.

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் கண்டியூர் என்னும் ஊரில் அருகே உள்ளது திருமண திருத்தலமான திருவேதிகுடி. இங்கே தம்பதி சமேதமாக வீற்றிருக்கிறார்கள் அருள்மிகு வேதபுரீஸ்வரரும், அருள்மிகு மங்கையர் கரசியும்.

பழமையான கோயில், 7ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சில புனரமைக்களுடன் உள்ளது; இத்திருத்தலத்தில் பங்குனி மாதம் 14,15,16 ஆகிய 3 தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவபெருமானின் மீது விழுகிறது; சூரிய பகவானே பூஜிப்பதாக ஐதீஜம். அமைதியான சூழல் உலாவுவதால் நிம்மதியாக வழிபடலாம். செல்வதற்கு முன் குருக்களுக்கு தொலைபேசியில் சொல்லிவிடுவது ஊசிதம்.

இத்திருத்தலத்திற்கு வருகையில்
2 மாலை,தேங்காய்,பழம்,வெத்தலை பாக்கு மற்றும் 21 சிறிய அகல் விளக்குகள் கொண்டு வந்து நெய் தீபம் இடவும். குருக்கள் அர்ச்சனை செய்து மாலை இடுவார் மாலையும் கழுத்தமாக  கோயிலை சுற்றி வரவும்.

அந்த  மாலையை வீட்டில் பத்திரமாக வைத்து கொள்ளவும், மணமான பின் அந்த மாலையை இத்திருத்தலத்திற்கு எதிரிலே இருக்கும் குளத்தில் விடவும்.

நீங்கள் நிறைய கோயில்களுக்கு சென்று இருப்பீர்கள் அந்த பட்டியலில் இந்த புனித தலத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை இங்கு சென்று திருமணம் நடந்துவிட்டால் மகிழ்ச்சி தானே, கண்டிப்பாக நடக்கும் என்றார்கள்; சென்றேன்,  நடந்தது.

திருச்சிற்றம்பலம்
ராஜா.க

#தஞ்சாவூர் #கண்டியூர் #திரிவேதிகுடி
இன்றைய சமூகத்தில் தலையாய பிரச்சனைகள் பல அதில் ஒன்று திருமணம் தள்ளி போகுதல்.

எல்லாம் சரியாக இருக்கிறது,எல்லா கோயில்களுக்கும் சென்றாயிற்று  ஆனாலும் ஏன் தள்ளி போகிறது என்று நினைப்பவர்கள் பலர் அவர்களுக்கான பதிவு தான் இது.

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் கண்டியூர் என்னும் ஊரில் அருகே உள்ளது திருமண திருத்தலமான திருவேதிகுடி. இங்கே தம்பதி சமேதமாக வீற்றிருக்கிறார்கள் அருள்மிகு வேதபுரீஸ்வரரும், அருள்மிகு மங்கையர் கரசியும்.

பழமையான கோயில், 7ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சில புனரமைக்களுடன் உள்ளது; இத்திருத்தலத்தில் பங்குனி மாதம் 14,15,16 ஆகிய 3 தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவபெருமானின் மீது விழுகிறது; சூரிய பகவானே பூஜிப்பதாக ஐதீஜம். அமைதியான சூழல் உலாவுவதால் நிம்மதியாக வழிபடலாம். செல்வதற்கு முன் குருக்களுக்கு தொலைபேசியில் சொல்லிவிடுவது ஊசிதம்.

இத்திருத்தலத்திற்கு வருகையில்
2 மாலை,தேங்காய்,பழம்,வெத்தலை பாக்கு மற்றும் 21 சிறிய அகல் விளக்குகள் கொண்டு வந்து நெய் தீபம் இடவும். குருக்கள் அர்ச்சனை செய்து மாலை இடுவார் மாலையும் கழுத்தமாக  கோயிலை சுற்றி வரவும்.

அந்த  மாலையை வீட்டில் பத்திரமாக வைத்து கொள்ளவும், மணமான பின் அந்த மாலையை இத்திருத்தலத்திற்கு எதிரிலே இருக்கும் குளத்தில் விடவும்.

நீங்கள் நிறைய கோயில்களுக்கு சென்று இருப்பீர்கள் அந்த பட்டியலில் இந்த புனித தலத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை இங்கு சென்று திருமணம் நடந்துவிட்டால் மகிழ்ச்சி தானே, கண்டிப்பாக நடக்கும் என்றார்கள்; சென்றேன்,  நடந்தது.

திருச்சிற்றம்பலம்
ராஜா.க

#தஞ்சாவூர் #கண்டியூர் #திரிவேதிகுடி

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அம்மா வின் கரும்பலகை

என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை
மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவள்.

நர்சரி பள்ளி, தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.

இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர்.

வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர்.

ஒரு உதவாக்கரையை
இன்று
ஒரு உதவும்கரை ஆக்கி
இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

September 5
Radhakrishnan Birthday
#TeachersDay 👩‍🏫  👨‍🏫
என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை
மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவள்.

நர்சரி பள்ளி, தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.

இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர்.

வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர்.

ஒரு உதவாக்கரையை
இன்று
ஒரு உதவும்கரை ஆக்கி
இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

September 5
Radhakrishnan Birthday
#TeachersDay 👩‍🏫  👨‍🏫

சனி, 1 செப்டம்பர், 2018

சுவாதியும்,ரோகினியும்

சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?

கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது; சுவாதி நட்சத்திரதிர நாளில் தான் சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால் சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை

அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உனக்குரியா நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.

பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க  நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்  
முத்து கிருஷ்ணனாகரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார்

மகிழ்ச்சி அடைந்தாள்ரோகிணி” 
அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊

இவண்

ராஜா கண்ணன் 
சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?

கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது; சுவாதி நட்சத்திரதிர நாளில் தான் சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால் சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை

அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உனக்குரியா நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.

பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க  நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்  
முத்து கிருஷ்ணனாகரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார்

மகிழ்ச்சி அடைந்தாள்ரோகிணி” 
அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊

இவண்

ராஜா கண்ணன் 

புதன், 29 ஆகஸ்ட், 2018

ஜெய் மோடி சர்கார்

ஒரே வருடத்தில் 15₹ பெட்ரோல் விலை ஏற்றம்; சர்வதேத சந்தையில் கச்சா எண்ணெய் சரிவு;

கேட்டால் மன்மோகன் ஆட்சியில் ஏறவில்லையா ? என்பார்கள் ; ஒவ்வொரு வருடதையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்; படித்த பொருளாதார மேதையின் நிர்வாகமும்;  ஏழைத்தாயின் மகனின் நிர்வாகமும்.

இத்தனைக்கும் 2009 இல் உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது அதில் சுமாராக பாதிப்படைந்தது இந்தியாவே ;

மாதிரி ஆதார பூர்வமான தகவல்களை சங்கிகளிடம் காட்டினால், இந்தியா இந்துக்களுக்கே என்று பிதற்றல் வேறு;

பாஜக வின் ஒரே சாதனை காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகம் பரவாயில்லை என்று நம்மை சிந்திக்க வைத்தது..

ஜெய் மோடி சர்கார் 🎤 அது தாண்டா
அதே தான் 🙏🏻🙏🏻🙏🏻

பிராயிசித்தம் தேடும்
ராஜா.க
ஒரே வருடத்தில் 15₹ பெட்ரோல் விலை ஏற்றம்; சர்வதேத சந்தையில் கச்சா எண்ணெய் சரிவு;

கேட்டால் மன்மோகன் ஆட்சியில் ஏறவில்லையா ? என்பார்கள் ; ஒவ்வொரு வருடதையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்; படித்த பொருளாதார மேதையின் நிர்வாகமும்;  ஏழைத்தாயின் மகனின் நிர்வாகமும்.

இத்தனைக்கும் 2009 இல் உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது அதில் சுமாராக பாதிப்படைந்தது இந்தியாவே ;

மாதிரி ஆதார பூர்வமான தகவல்களை சங்கிகளிடம் காட்டினால், இந்தியா இந்துக்களுக்கே என்று பிதற்றல் வேறு;

பாஜக வின் ஒரே சாதனை காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகம் பரவாயில்லை என்று நம்மை சிந்திக்க வைத்தது..

ஜெய் மோடி சர்கார் 🎤 அது தாண்டா
அதே தான் 🙏🏻🙏🏻🙏🏻

பிராயிசித்தம் தேடும்
ராஜா.க

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

ஏழைத்தாயின் மகள்

கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா.

தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,
சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..

வடிவேலு இல்லாமல் தவித்த
தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம்.

அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.  

பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன்
 என்ற  #KolamaavuKokila
கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா.

தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,
சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..

வடிவேலு இல்லாமல் தவித்த
தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம்.

அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.  

பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன்
 என்ற  #KolamaavuKokila

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

PaayrPremaKadhal

படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..

தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..

கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல;

மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன்,
ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ?

Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற்
கொண்டு.

அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு
கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.

ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ?

எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு
செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.

இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.

அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;

இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.

ப்யார்,ப்ரேமா,காதலுடன்
ராஜா.க
படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..

தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..

கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல;

மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன்,
ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ?

Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற்
கொண்டு.

அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு
கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.

ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ?

எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு
செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.

இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.

அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;

இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.

ப்யார்,ப்ரேமா,காதலுடன்
ராஜா.க

ஞாயிறு, 29 ஜூலை, 2018

சாப்பிட போலாம் வாங்க

சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே 
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது 
காசி விநாயகா மெஸ்
திருவல்லிக்கேணி 

சுவையுடன்

ராஜா.
சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே 
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது 
காசி விநாயகா மெஸ்
திருவல்லிக்கேணி 

சுவையுடன்

ராஜா.

வெள்ளி, 13 ஜூலை, 2018

கள்ளி காட்டு கள்வரே !!!

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசிவெற்றி
முதல் காதலில் தோற்றவனுக்கு அது 
தான் கடைசிதோல்வி

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின்அழகு
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின்அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

உந்தன் தமிழ் வரிகளால் எங்களை கடத்திய கள்ளரே !!! 
வேல் கம்பை விட கூர்மையானது உங்கள் பேனா (வின்) முனை..

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்,
தேசப்பற்று என அனைத்தையும் உங்கள்வைரவரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர்வைரமுத்து 


இவண்

ராஜா. 

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசிவெற்றி
முதல் காதலில் தோற்றவனுக்கு அது 
தான் கடைசிதோல்வி

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின்அழகு
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின்அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

உந்தன் தமிழ் வரிகளால் எங்களை கடத்திய கள்ளரே !!! 
வேல் கம்பை விட கூர்மையானது உங்கள் பேனா (வின்) முனை..

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்,
தேசப்பற்று என அனைத்தையும் உங்கள்வைரவரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர்வைரமுத்து 


இவண்

ராஜா. 

ஞாயிறு, 24 ஜூன், 2018

தமிழ் சினிமாவின் புற்று நோய்

தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம்.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க
தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம்.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க

சனி, 9 ஜூன், 2018

காலா என் பார்வையில்

அறிமுக காட்சி முதல் இறுதி காட்சி வரை நான் இயக்குனரின் நடிகன்  என்று நிருபணம் செய்த “super star” சினிமாவில் தன் வெறுப்பாளர்களை  
 “க்ளீன் போல்ட்செய்திருக்கிறார்.

கரிகாலனின் அடுத்த தலைமுறைக்கான பார்வையை அகிம்சை,வன்முறை,சுயநலம் என்று மகன்கள் கதாபாத்திரத்தால் இன்றைய சமூகத்தின் இயக்குனர் பார்வைநச்”.

மனைவி,முன்னாள் காதலி கதாபாத்திரத்தின் வலிமையை நகைச்சுவையாக,கவிதையாக,நேர்த்தியாக காட்சிபடுத்திய விதம் அழகியஹைகூ”.

கதையில் வில்லனின் பலத்தை பொறுத்து நாயகனின் பலம் புலப்படும். அந்த வகையில் தன் நடிப்பால்,வசனங்களால் ஒரு காட்சியில் நாயகனை தன் நடிப்பால் அடித்து தன் அசுரபலத்தை (இராவணன்) நிருப்பிக்கிறார் நானா படேகர்.

கதையுடன் கூடிய பாடல்கள்,பிண்ணனி இசை படத்திற்கு பலம்

விஷமிகளின் விமர்சனங்களை துறந்து,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
பற்றற்று பார்க்கையில் 
காலா என்கிற கருப்புமேலும் அழகாகிறது

ரசிகன்
ராஜா.  




அறிமுக காட்சி முதல் இறுதி காட்சி வரை நான் இயக்குனரின் நடிகன்  என்று நிருபணம் செய்த “super star” சினிமாவில் தன் வெறுப்பாளர்களை  
 “க்ளீன் போல்ட்செய்திருக்கிறார்.

கரிகாலனின் அடுத்த தலைமுறைக்கான பார்வையை அகிம்சை,வன்முறை,சுயநலம் என்று மகன்கள் கதாபாத்திரத்தால் இன்றைய சமூகத்தின் இயக்குனர் பார்வைநச்”.

மனைவி,முன்னாள் காதலி கதாபாத்திரத்தின் வலிமையை நகைச்சுவையாக,கவிதையாக,நேர்த்தியாக காட்சிபடுத்திய விதம் அழகியஹைகூ”.

கதையில் வில்லனின் பலத்தை பொறுத்து நாயகனின் பலம் புலப்படும். அந்த வகையில் தன் நடிப்பால்,வசனங்களால் ஒரு காட்சியில் நாயகனை தன் நடிப்பால் அடித்து தன் அசுரபலத்தை (இராவணன்) நிருப்பிக்கிறார் நானா படேகர்.

கதையுடன் கூடிய பாடல்கள்,பிண்ணனி இசை படத்திற்கு பலம்

விஷமிகளின் விமர்சனங்களை துறந்து,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
பற்றற்று பார்க்கையில் 
காலா என்கிற கருப்புமேலும் அழகாகிறது

ரசிகன்
ராஜா.  




வியாழன், 17 மே, 2018

ஒரு முறை சொர்க்கத்தில்

ஒரு முறை சொர்க்கத்தில் 
நாரத மாமுனியும், கர்ணனும் சந்திக்கிறார்கள். கர்ணன் கூறினான் எனக்கு இங்கே வெகுவாக பசிக்கிறது ஆனால் உணவே கிடைக்காமல் அவதி படுகிறேன் என கூறினான்


அதை கேட்ட நாராதர் சிரித்து கொண்டே உன் ஆட்காட்டி விரலை கடி என்கிறார். கர்ணனும் கடிக்க அவன் பசி எல்லாம் அடங்கி போகிறது. கர்ணனுக்கோ வியப்பாக உள்ளது !! எப்படி என் பசி அடங்கியது என வினவுகிறான்

நாரதர் கூறினார் பூலோகத்தில் நீ அனைவருக்கும் பொன்னையும்,பொருளையும் உன் கையால்  வாரி வழக்கினாய். ஆனால் அன்னம் (உணவு) கேட்டவர்களுக்கு உன் ஆட் காட்டி விரலை காட்டி அங்கு உணவழிக்கிறார்கள் என்று கூறினாய்

புண்ணியங்கள் அனைத்தும் உன் ஆட்காட்டி விரலுக்கு தான் சென்றது அதனால் தான் இன்று அதை கடிக்கையில் உன் பசி போய் விடுகிறது
பொன்னையும் , பொருளையும் போன்று அன்னத்தையும் உன் கையால் கொடுத்திருந்தால் அதன் சுவையை முழுவதுமாக அடைந்திருப்பாய் என்றார்.


ஆதலால் இப்பூலோகத்தில் வாழும் நாட்களில் நம்மால் முடிந்த அன்னதானத்தை இயலாதவர்களுக்கு நம் கையால் கொடுத்தால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தை காணலாம்.

இவண்
ராஜா. 





Attachment.png
ஒரு முறை சொர்க்கத்தில் 
நாரத மாமுனியும், கர்ணனும் சந்திக்கிறார்கள். கர்ணன் கூறினான் எனக்கு இங்கே வெகுவாக பசிக்கிறது ஆனால் உணவே கிடைக்காமல் அவதி படுகிறேன் என கூறினான்


அதை கேட்ட நாராதர் சிரித்து கொண்டே உன் ஆட்காட்டி விரலை கடி என்கிறார். கர்ணனும் கடிக்க அவன் பசி எல்லாம் அடங்கி போகிறது. கர்ணனுக்கோ வியப்பாக உள்ளது !! எப்படி என் பசி அடங்கியது என வினவுகிறான்

நாரதர் கூறினார் பூலோகத்தில் நீ அனைவருக்கும் பொன்னையும்,பொருளையும் உன் கையால்  வாரி வழக்கினாய். ஆனால் அன்னம் (உணவு) கேட்டவர்களுக்கு உன் ஆட் காட்டி விரலை காட்டி அங்கு உணவழிக்கிறார்கள் என்று கூறினாய்

புண்ணியங்கள் அனைத்தும் உன் ஆட்காட்டி விரலுக்கு தான் சென்றது அதனால் தான் இன்று அதை கடிக்கையில் உன் பசி போய் விடுகிறது
பொன்னையும் , பொருளையும் போன்று அன்னத்தையும் உன் கையால் கொடுத்திருந்தால் அதன் சுவையை முழுவதுமாக அடைந்திருப்பாய் என்றார்.


ஆதலால் இப்பூலோகத்தில் வாழும் நாட்களில் நம்மால் முடிந்த அன்னதானத்தை இயலாதவர்களுக்கு நம் கையால் கொடுத்தால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தை காணலாம்.

இவண்
ராஜா. 





Attachment.png