செவ்வாய், 12 நவம்பர், 2019

வாழ்க ஜனநாயகம்

எஜமான் திரைப்படத்தில் நடிகர் திரு.நெப்போலியன் பேசும் ஒரு வசனம் மிக பிரபலம்.

கல்யாண வீடாக இருந்தால் நான் தான் மாப்பிள்ளை ஆக இருக்கனும், இறந்த வீடாக இருந்தால் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று.

அது போல் எங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் எங்களுடன்
 கூட்டனி ஆட்சி அமைக்க வேண்டும், இல்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்தப்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, ஆளுநர் பரிந்துரை.

காஷ்மீர் தொடர்ந்து இன்று மகாராஷ்டிரா நாளை..

வாழ்க ஜனநாயகம்
ராஜா க
எஜமான் திரைப்படத்தில் நடிகர் திரு.நெப்போலியன் பேசும் ஒரு வசனம் மிக பிரபலம்.

கல்யாண வீடாக இருந்தால் நான் தான் மாப்பிள்ளை ஆக இருக்கனும், இறந்த வீடாக இருந்தால் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று.

அது போல் எங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் எங்களுடன்
 கூட்டனி ஆட்சி அமைக்க வேண்டும், இல்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்தப்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, ஆளுநர் பரிந்துரை.

காஷ்மீர் தொடர்ந்து இன்று மகாராஷ்டிரா நாளை..

வாழ்க ஜனநாயகம்
ராஜா க

திங்கள், 4 நவம்பர், 2019

அவரும் நானும்

 முதன் முதலில் பார்க்கையில் ஒரு அச்சம். தலையாட்டி கொண்டே
இடது-வலது,மேழும்-கீழும் என
கையில் கத்தி சகிதம்  கம்பிரமாக தெரு வீதி உலா வருவார்.

நல்லவன் தானாம் பின் நாட்களில் கெட்டவனாகி எங்கள் ஊர் சக்ரவர்த்தி யுடனே  போர் செய்ய தயாராகிவிட்டான் என சிறுவயதில் அன்னை கூறியது. பின் நாட்களில் அவரை வைத்து தான் அன்னை சாதம் கொடுப்பாளாம்.

இப்பொழுது பார்க்கையிலும் அவரின்  வருகை, அவருடன் கூட வரும் மேல தாளங்கள் சுவாரசியத்தையும் , இனம் புரியாத மகிழ்ச்சியையம் தந்தது.

இம்முறை மருமகளுக்கு அவரை காண்பித்து சாதம் ஊட்டினாள் தங்கை.

நல்லவரோ /கெட்டவரோ இன்று வரை மறக்க முடியாத நபர் சூரபத்மன்.

#திருச்செந்தூர் #சூரபத்மன்
 முதன் முதலில் பார்க்கையில் ஒரு அச்சம். தலையாட்டி கொண்டே
இடது-வலது,மேழும்-கீழும் என
கையில் கத்தி சகிதம்  கம்பிரமாக தெரு வீதி உலா வருவார்.

நல்லவன் தானாம் பின் நாட்களில் கெட்டவனாகி எங்கள் ஊர் சக்ரவர்த்தி யுடனே  போர் செய்ய தயாராகிவிட்டான் என சிறுவயதில் அன்னை கூறியது. பின் நாட்களில் அவரை வைத்து தான் அன்னை சாதம் கொடுப்பாளாம்.

இப்பொழுது பார்க்கையிலும் அவரின்  வருகை, அவருடன் கூட வரும் மேல தாளங்கள் சுவாரசியத்தையும் , இனம் புரியாத மகிழ்ச்சியையம் தந்தது.

இம்முறை மருமகளுக்கு அவரை காண்பித்து சாதம் ஊட்டினாள் தங்கை.

நல்லவரோ /கெட்டவரோ இன்று வரை மறக்க முடியாத நபர் சூரபத்மன்.

#திருச்செந்தூர் #சூரபத்மன்

வெள்ளி, 1 நவம்பர், 2019

பிகிலு என் பார்வையில்

கதை

கத்தி யை கையிலேயே எப்போதும் வைத்திருக்கும் ராயபுரம் போக்கிரி  ராயப்பன் தன் பிள்ளையை காலில் பந்து டன் Sports Man ஆக்க முயற்சிக்கிறார் அவர் கனவு பழித்ததா ?

எந்த ஒரு ரவுடியும் தன் மகன் கையிலும் கத்தி இருக்க விரும்ப மாட்டார். ராயப்பன் மட்டும் விதிவிலக்கா ? ஆனால் கர்மா அவரையும் (மைக்கேல்) கத்தி யை தூக்க வைக்கிறது.

வழக்கமான மாஸ் intro சண்டை காட்சி, பிறகு பாடல் சகிதம் குஷி யாக வலம் வருகிறார் மைக்கேல்.பிறகு காமெடிக்கு கதாநாயகி யின் கல்யாண நிறுத்தம் சற்று சலிப்புட்டுகிறது.

நட்பு : மைக்கேலின் நண்பன் கதிர் (football team coach)தன் அணியுடன் சென்னை வருகிறார்,
வில்லன் : ஹீரோ வை போட்டு தள்ள வருகிறார்,செம யாக அடி வாங்கி ஒன்றும் அறியா கதிரை குத்துகிறார்.

coach இல்லாமல் டீம் அல்லோல் படுகிறது, கதிர் மைக்கேலை கை காட்ட ஒரு ரவுடி எப்படி coach ஆக முடியும்? அவர் யார் தெரியுமா  பிகிலு என நிழ்கிறது Flashback ஆரம்பம்.

காவி வேட்டி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் குங்குமம், salt & pepper லுக்கில் ராயப்பன் intro.
கொஞ்சம் வித்தியாசமாக Body language அசத்துகிறார் விஜய்.
தன் மகனுடன் அன்பு மழை பொழிகிறார் மனிதர்( பிகிலு கப்போடு தான் வரணும்).

ராயப்பனை வில்லன் கோஷ்டி போட்டு தள்ளுகிறது வழக்கம் போல் மகனார் ரவுடி யாகிறார். நாமும் என்னடா இழுக்கிறிங்க என கொட்டாவி விடுவது தெரிந்து தான் போல இடைவேளை க்கு கேண்டின் கதவுகள் திறக்கப்படுகிறது.

பில்டர் காபியுடன், பாப்கார்ன் ருசித்து நாம் சுறுசுறுப்பாகையில் படமும் இரண்டாம் பாதியில் சுவாரசியமாகிறது.

சமூகத்தில் பெண்கள் படும் இன்னல்களை காட்சி படுத்திய விதம் அருமை. கால்பந்து போட்டி ரசிக்கும் படி உள்ளது. (விஜய் விளையாடும் போது அது மிஸ்ஸிங்) இறுதியில் பெண்கள் ஜெயித்து வெற்றி கொடி நாட்டுகின்றனர்.

முதல் பாதி - அடேய்
இரண்டாம் பாதி - அடடே !!!

ஒரு முறை குடும்பத்துடன் ரசிக்கலாம் இந்த பிகிலை !!

#பிகில்
கதை

கத்தி யை கையிலேயே எப்போதும் வைத்திருக்கும் ராயபுரம் போக்கிரி  ராயப்பன் தன் பிள்ளையை காலில் பந்து டன் Sports Man ஆக்க முயற்சிக்கிறார் அவர் கனவு பழித்ததா ?

எந்த ஒரு ரவுடியும் தன் மகன் கையிலும் கத்தி இருக்க விரும்ப மாட்டார். ராயப்பன் மட்டும் விதிவிலக்கா ? ஆனால் கர்மா அவரையும் (மைக்கேல்) கத்தி யை தூக்க வைக்கிறது.

வழக்கமான மாஸ் intro சண்டை காட்சி, பிறகு பாடல் சகிதம் குஷி யாக வலம் வருகிறார் மைக்கேல்.பிறகு காமெடிக்கு கதாநாயகி யின் கல்யாண நிறுத்தம் சற்று சலிப்புட்டுகிறது.

நட்பு : மைக்கேலின் நண்பன் கதிர் (football team coach)தன் அணியுடன் சென்னை வருகிறார்,
வில்லன் : ஹீரோ வை போட்டு தள்ள வருகிறார்,செம யாக அடி வாங்கி ஒன்றும் அறியா கதிரை குத்துகிறார்.

coach இல்லாமல் டீம் அல்லோல் படுகிறது, கதிர் மைக்கேலை கை காட்ட ஒரு ரவுடி எப்படி coach ஆக முடியும்? அவர் யார் தெரியுமா  பிகிலு என நிழ்கிறது Flashback ஆரம்பம்.

காவி வேட்டி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் குங்குமம், salt & pepper லுக்கில் ராயப்பன் intro.
கொஞ்சம் வித்தியாசமாக Body language அசத்துகிறார் விஜய்.
தன் மகனுடன் அன்பு மழை பொழிகிறார் மனிதர்( பிகிலு கப்போடு தான் வரணும்).

ராயப்பனை வில்லன் கோஷ்டி போட்டு தள்ளுகிறது வழக்கம் போல் மகனார் ரவுடி யாகிறார். நாமும் என்னடா இழுக்கிறிங்க என கொட்டாவி விடுவது தெரிந்து தான் போல இடைவேளை க்கு கேண்டின் கதவுகள் திறக்கப்படுகிறது.

பில்டர் காபியுடன், பாப்கார்ன் ருசித்து நாம் சுறுசுறுப்பாகையில் படமும் இரண்டாம் பாதியில் சுவாரசியமாகிறது.

சமூகத்தில் பெண்கள் படும் இன்னல்களை காட்சி படுத்திய விதம் அருமை. கால்பந்து போட்டி ரசிக்கும் படி உள்ளது. (விஜய் விளையாடும் போது அது மிஸ்ஸிங்) இறுதியில் பெண்கள் ஜெயித்து வெற்றி கொடி நாட்டுகின்றனர்.

முதல் பாதி - அடேய்
இரண்டாம் பாதி - அடடே !!!

ஒரு முறை குடும்பத்துடன் ரசிக்கலாம் இந்த பிகிலை !!

#பிகில்