வியாழன், 28 ஏப்ரல், 2022

நண்பர்களும் புரிதலும் !!

 நண்பர்களும்  புரிதலும்  !!! 


இன்று நண்பர்கள் க்கு இடையே நடக்கும் பல குழப்பங்களுக்கு இந்த

 " புரிதல் " இல்லாததது தான் முதல் காரணம் என்பது என் அவதானிப்பு. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.


அப்படி ஒரு அழகான மற்றும் அழத்தமான நினைவுகள் என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் இந்த புரிதலுக்கு உண்டான சிறு சான்றுகள்..


செல்வ ராஜ் ,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை. 

யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம். 


சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE பிரிவு மாணவர்கள் 7, நாங்கள் CSE மொத்தம் 10 நபர்கள் தங்கும் பெரிய வீடு.


கூட்டினுள் (விடுதியில்) கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.


நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி   மகிழ்ந்த காலம். 


ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல,  செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் உங்களுக்கு புரியாது என முகத்தை சுறுக்க,


நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது,  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் பேசியது ஒரு புறம். 


நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல். 

ஆனால் எங்களுக்குள் உள்ள புரிதல் ஒரே சேர வெளி கொணர்ந்த தருணம் அது.


இரண்டாவது நிகழ்வு.


8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால் 

A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம். 

A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார். 


நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை. 

மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம். எங்களை பார்த்து எங்கள் B பிரிவு மாணவிகள் வெளியேறியது செம மாஸா இருந்தது.


இந்த மாதிரி யான  புரிதல் நண்பர்களுக்குள்   இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.


புரிதலுடன் 

ராஜா . க

 நண்பர்களும்  புரிதலும்  !!! 


இன்று நண்பர்கள் க்கு இடையே நடக்கும் பல குழப்பங்களுக்கு இந்த

 " புரிதல் " இல்லாததது தான் முதல் காரணம் என்பது என் அவதானிப்பு. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.


அப்படி ஒரு அழகான மற்றும் அழத்தமான நினைவுகள் என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் இந்த புரிதலுக்கு உண்டான சிறு சான்றுகள்..


செல்வ ராஜ் ,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை. 

யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம். 


சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE பிரிவு மாணவர்கள் 7, நாங்கள் CSE மொத்தம் 10 நபர்கள் தங்கும் பெரிய வீடு.


கூட்டினுள் (விடுதியில்) கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.


நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி   மகிழ்ந்த காலம். 


ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல,  செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் உங்களுக்கு புரியாது என முகத்தை சுறுக்க,


நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது,  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் பேசியது ஒரு புறம். 


நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல். 

ஆனால் எங்களுக்குள் உள்ள புரிதல் ஒரே சேர வெளி கொணர்ந்த தருணம் அது.


இரண்டாவது நிகழ்வு.


8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால் 

A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம். 

A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார். 


நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை. 

மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம். எங்களை பார்த்து எங்கள் B பிரிவு மாணவிகள் வெளியேறியது செம மாஸா இருந்தது.


இந்த மாதிரி யான  புரிதல் நண்பர்களுக்குள்   இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.


புரிதலுடன் 

ராஜா . க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக