திங்கள், 30 மே, 2022

கண்ணே கண்ணாடி

 கண்ணே கண்ணாடி !!!


இந்த கண் கண்ணாடி யை பற்றி எழுத என்ன காரணம் ?  

வருடங்கள் பல உருண்டோயிய பிறகு கண்ணையும் , கண்ணாடியையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை .


என்ன கண்ணு தெரியாது அது தானே ? 

என்ற பகடி வார்த்தைகள் பார்த்து, கேட்டு.

பழகி , புளித்து போனது என் கண்ணாடி க்கும் , காதுகளுக்கும்.


உன்னை முதன் முதலில் அணியும் போது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சொல்ல போனால் உன்னை மறந்தும் கூட சென்றுள்ளேன் அதனால் தான் என்னவோ தெளிவான பார்வை இல்லாமல் சிலரின் உண்மை முகங்களை காண முடியவில்லை. 


நாட்கள் செல்ல , செல்ல என் உடம்பினுள் உள்ள ஒரு உறுப்பாகவே மாறிவிட்டாய். இப்போதும் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் , நீ என்னோடு இருக்கிறாய் என்று கூட தெரியாமல் ,  ஆழ்ந்த நித்திரை க்கு சென்று விட்டு எழுந்து முகத்தில் தண்ணிர் விடுகையில் தான் உணர்கிறேன். நீ என்னோடு தான் உள்ளாய் என்பதை. பிறகு சிரித்து கொண்டே உன்னை துடைத்து கொள்வேன்.


எனக்கான அடையாளங்கில் ஒருவனாகவே மாறி போனாய் , அந்த கண்ணாடி போட்ட ஒரு தம்பி ஒருவர் வருவாரே ? என்று என் பெயர் கூட தெரியாமல் உன்னை வைத்து எனக்கு கிடைத்த அங்கிகாரம் பல இடங்களில்.


பூமியே தன் சமநிலை யிலிருந்து விலகி ஒரு இடத்தில் அதிக மழை ,அதிக வெயில் கொடுக்கும். மானிடர்கள் எம்மாத்திரம் அவர்கள் தரும் ஒரு வகையான வெளிப்பாடன

கண்ணீர், என் கண்ணங்கள் வரை கூட விடாமல் ஒரு அ(ன்)ணை போல தடுத்து விடுவாய். 


அஃறிணை யான நீ உயர்திணை யை விட உயர்ந்து நிற்கிறாய் பல நேரங்களில்.


கண்ணாடி யுடன் 

ராஜா. க


 கண்ணே கண்ணாடி !!!


இந்த கண் கண்ணாடி யை பற்றி எழுத என்ன காரணம் ?  

வருடங்கள் பல உருண்டோயிய பிறகு கண்ணையும் , கண்ணாடியையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை .


என்ன கண்ணு தெரியாது அது தானே ? 

என்ற பகடி வார்த்தைகள் பார்த்து, கேட்டு.

பழகி , புளித்து போனது என் கண்ணாடி க்கும் , காதுகளுக்கும்.


உன்னை முதன் முதலில் அணியும் போது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சொல்ல போனால் உன்னை மறந்தும் கூட சென்றுள்ளேன் அதனால் தான் என்னவோ தெளிவான பார்வை இல்லாமல் சிலரின் உண்மை முகங்களை காண முடியவில்லை. 


நாட்கள் செல்ல , செல்ல என் உடம்பினுள் உள்ள ஒரு உறுப்பாகவே மாறிவிட்டாய். இப்போதும் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் , நீ என்னோடு இருக்கிறாய் என்று கூட தெரியாமல் ,  ஆழ்ந்த நித்திரை க்கு சென்று விட்டு எழுந்து முகத்தில் தண்ணிர் விடுகையில் தான் உணர்கிறேன். நீ என்னோடு தான் உள்ளாய் என்பதை. பிறகு சிரித்து கொண்டே உன்னை துடைத்து கொள்வேன்.


எனக்கான அடையாளங்கில் ஒருவனாகவே மாறி போனாய் , அந்த கண்ணாடி போட்ட ஒரு தம்பி ஒருவர் வருவாரே ? என்று என் பெயர் கூட தெரியாமல் உன்னை வைத்து எனக்கு கிடைத்த அங்கிகாரம் பல இடங்களில்.


பூமியே தன் சமநிலை யிலிருந்து விலகி ஒரு இடத்தில் அதிக மழை ,அதிக வெயில் கொடுக்கும். மானிடர்கள் எம்மாத்திரம் அவர்கள் தரும் ஒரு வகையான வெளிப்பாடன

கண்ணீர், என் கண்ணங்கள் வரை கூட விடாமல் ஒரு அ(ன்)ணை போல தடுத்து விடுவாய். 


அஃறிணை யான நீ உயர்திணை யை விட உயர்ந்து நிற்கிறாய் பல நேரங்களில்.


கண்ணாடி யுடன் 

ராஜா. க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக