ஞாயிறு, 5 நவம்பர், 2017

என்னை மறுபடியும் விரும்பி அழைக்குமா என் “டூரிங் டாக்கிஸ்” ???



சிறிய இடைவேளைக்கு பிறகு நண்பனுடன் திரையரங்கிற்கு செல்ல திட்டமிட்டு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் (தேவி தியேட்டர்) சென்றேன்.

நேரடியாகவே டிக்கெட் எடுக்க முடிவு செய்து கவுண்டரில் வரிசையில் நின்று எவ்வளவு என்றேன் ? ரூபாய் 414 என்றார்கள் ஒரு டிக்கெட் விலை (ரூபாய் 207) வடிவேலு கூறுவது போல் அப்படி நான் “ஷாக்” ஆயிட்டேன். (Online பதிவென்றால் Rs35 ஒரு டிக்கெட்டுக்கு எக்ஸ்ட்ரா)

அதை வெளிகாட்டி கொள்ளாமல் ஸ்டைலாக கடன் அட்டையை (Credit Card) நீட்டி டிக்கெட் பெற்று கொண்டு திகிலுடன் பேய் படம் (அவள்) சென்றேன்.

இடைவேளேயில் நாம் சும்மா இருந்தாலும் நம் வாய் சும்மா இருக்காதே !!
இரண்டு வெஜ் பப்ஸ் என்றேன்
கோலி அடிக்கடி எடுக்கும் ரன் என்றான். காந்தி படம் இட்ட பெரிய நோட்டை (Rs100) கொடுத்தேன் anything else என்றான் no thanks என்று ஸ்டைலாக சொல்லி விட்டு பயத்துடன் மீதி படத்தையும் திகிலுடன் பார்த்து முட்டித்தேன்.
நன்றி சுபம் மீண்டும் வருக என்றது தேவி வளாகம்  🙏🏻 ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பைக் உதைத்தேன்.
சார் பைக் Parking 30 என்றான்.

இதற்கு மேல் நின்றால் waiting charge கேட்பார்கள் என்று நினைத்து தலை தெறிக்க இடத்தை காலி செய்தேன்.

திரையரங்கிற்கு சென்ற வகைக்கு  செலவான தொகை Rs610 சராசரியாக ஒருவருக்கு Rs305.

ஒரு Middle Class கணவன்,மனைவி, குழைந்தைகளுடன் சென்றால்
 Rs1000 செலவு நிச்சயம். சில
அறிவு ஜீவிகள் சினிமா என்பது ஆடம்பரம் அது அத்யாவசியமில்லை அதனால் அதை தவிர்த்து விடுங்கள் என்பார்கள்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாவும் அவசியமானது ஆனால் அது இன்று போகும் பாதை மிகுந்த ஆபத்தானது இதில் எல்லோராலும் பயணம் செய்வது கடினமே.

இதை சம்பந்த பட்ட துறையில் உள்ளவர்கள் சற்று ஆராய்ந்து சரியான நடவடிக்கை இல்லை என்றால் இப்பொழுதுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை மூடு விழா காண்பதை தவிர்க்க இயலாது.


சிறிய இடைவேளைக்கு பிறகு நண்பனுடன் திரையரங்கிற்கு செல்ல திட்டமிட்டு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் (தேவி தியேட்டர்) சென்றேன்.

நேரடியாகவே டிக்கெட் எடுக்க முடிவு செய்து கவுண்டரில் வரிசையில் நின்று எவ்வளவு என்றேன் ? ரூபாய் 414 என்றார்கள் ஒரு டிக்கெட் விலை (ரூபாய் 207) வடிவேலு கூறுவது போல் அப்படி நான் “ஷாக்” ஆயிட்டேன். (Online பதிவென்றால் Rs35 ஒரு டிக்கெட்டுக்கு எக்ஸ்ட்ரா)

அதை வெளிகாட்டி கொள்ளாமல் ஸ்டைலாக கடன் அட்டையை (Credit Card) நீட்டி டிக்கெட் பெற்று கொண்டு திகிலுடன் பேய் படம் (அவள்) சென்றேன்.

இடைவேளேயில் நாம் சும்மா இருந்தாலும் நம் வாய் சும்மா இருக்காதே !!
இரண்டு வெஜ் பப்ஸ் என்றேன்
கோலி அடிக்கடி எடுக்கும் ரன் என்றான். காந்தி படம் இட்ட பெரிய நோட்டை (Rs100) கொடுத்தேன் anything else என்றான் no thanks என்று ஸ்டைலாக சொல்லி விட்டு பயத்துடன் மீதி படத்தையும் திகிலுடன் பார்த்து முட்டித்தேன்.
நன்றி சுபம் மீண்டும் வருக என்றது தேவி வளாகம்  🙏🏻 ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பைக் உதைத்தேன்.
சார் பைக் Parking 30 என்றான்.

இதற்கு மேல் நின்றால் waiting charge கேட்பார்கள் என்று நினைத்து தலை தெறிக்க இடத்தை காலி செய்தேன்.

திரையரங்கிற்கு சென்ற வகைக்கு  செலவான தொகை Rs610 சராசரியாக ஒருவருக்கு Rs305.

ஒரு Middle Class கணவன்,மனைவி, குழைந்தைகளுடன் சென்றால்
 Rs1000 செலவு நிச்சயம். சில
அறிவு ஜீவிகள் சினிமா என்பது ஆடம்பரம் அது அத்யாவசியமில்லை அதனால் அதை தவிர்த்து விடுங்கள் என்பார்கள்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாவும் அவசியமானது ஆனால் அது இன்று போகும் பாதை மிகுந்த ஆபத்தானது இதில் எல்லோராலும் பயணம் செய்வது கடினமே.

இதை சம்பந்த பட்ட துறையில் உள்ளவர்கள் சற்று ஆராய்ந்து சரியான நடவடிக்கை இல்லை என்றால் இப்பொழுதுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை மூடு விழா காண்பதை தவிர்க்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக