வெள்ளி, 17 நவம்பர், 2017

நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

சென்னை ஆதம்பக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இந்துஜா என்ற பெண்மணி தன் பள்ளி வகுப்பு தோழனான ஆகாஷ் என்பவனால்  தீக்கறை யாக்க பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

பள்ளி தோழன், நட்பாகி பிறகு ஒரு தலை காதலாக மாறி இன்று உயிரையே குடித்து விட்டது. ஆகாஷ் செய்தது பைத்தியகார தனத்தின் உச்சம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.அந்த தண்டனை மற்ற ஆகாஷ் களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை

இந்துஜா தீக்கரையாக்க பட்டது அவளது வீட்டில்
உங்கள் மகளிடத்தில் நான் பேச வேண்டும் என்று சம்மதம் கேட்டுள்ளான். தாயாரும் சம்மதித்துள்ளார் என்றால் அவர்களின் நட்பு நன்கு பரிச்சயமான நட்பு என்று எண்ண தோன்றுகிறது.
பேச்சு ஒரு கட்டத்தில் எல்லை மீற திட்டமிட்ட படி கொண்டு வந்திருந்த எரிபொருளை இந்துஜா மீது ஊற்றி பற்ற வைத்து விட்டான் செய்வதறியாது திகைத்த அவளது தாயார், சகோதரி அனைவருடத்திலும் ஊற்றி தீக்கறை யாக்கி விட்டான். மருத்தவமனைக்கு செல்லும் முன்னே இந்துஜாவின் உயிர் பிரிந்தது

தவறு ஆகாஷிடம் மட்டும் தான் உள்ளதா ? ஏனென்றால் ஆகாஷ் போன்ற நட்புகளை வீடு வரை அனுமதித்ததே முதல் தவறு. இக்காலத்தில் எந்த பெண்ணும் மிக சுலபமாக புரிந்து கொள்வாள் ஆண் தன்னுடன் பழகும் பழக்கத்தை வைத்து இது நட்பா இல்லை காதலா என்று

காதல் என்று தெரியும் பட்சத்தில் இது நம் வாழ்க்கைக்கு, குடும்பத்துக்கு உகந்ததா ? என்பதை நன்கு ஆராய்தல் மிக அவசியம்

இன்றைய சமூகத்தில் கார்,பைக் இல்லாமல் இருப்பவர்களை எப்படி பார்க்குமோ அதே போல் காதலனோ / காதலியோ இல்லையென்றால் ஒரு மாதிரியாக பார்க்கும் காலம் இது

காதல் என்பது படகில்  சவாரி செய்வது    
போன்றது அக்கறையிலிருந்து இக்கறைக்கு பயணிக்கையில் மகிழ்ச்சியாகவும்,இனிமையாகவும் இருக்கும் ஆனால் பயணத்தின் நடுவிலேயே அக்கறைக்கு திரும்ப நினைக்கையில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது சிலர் லாவகமாக அக்கறை திரும்புகின்றனர் சிலர் தான் நடுவில் தவித்து காட்டாறால் அடித்து செல்ல படுகின்றனர்

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழனாக தான் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஓதுக்குங்கள், விவாதியுங்கள், உங்களை அவர்களுக்கு புரியவையுங்கள்  அவர்களை நன்கு  புரிந்து கொண்டு நட்பாகி விட்டால் போதும் அவர்களுக்கு எதாவது சிக்கல்  என்றால் உங்களிடம் தான் முதலில் கூறுவர் பிரச்சனைகளையும் எளிதில் கலைந்து விடலாம்.

பிள்ளைகளும் பெற்றோர்களை நண்பர்களாக பாவித்தால் 
இந்துஜாக்களையும்,சுவாதிக்களின்   இழப்பை தடுக்கலாம் இவ்வுலகத்தில்.

நட்புடன்

ராஜா. 
நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

சென்னை ஆதம்பக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இந்துஜா என்ற பெண்மணி தன் பள்ளி வகுப்பு தோழனான ஆகாஷ் என்பவனால்  தீக்கறை யாக்க பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

பள்ளி தோழன், நட்பாகி பிறகு ஒரு தலை காதலாக மாறி இன்று உயிரையே குடித்து விட்டது. ஆகாஷ் செய்தது பைத்தியகார தனத்தின் உச்சம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.அந்த தண்டனை மற்ற ஆகாஷ் களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை

இந்துஜா தீக்கரையாக்க பட்டது அவளது வீட்டில்
உங்கள் மகளிடத்தில் நான் பேச வேண்டும் என்று சம்மதம் கேட்டுள்ளான். தாயாரும் சம்மதித்துள்ளார் என்றால் அவர்களின் நட்பு நன்கு பரிச்சயமான நட்பு என்று எண்ண தோன்றுகிறது.
பேச்சு ஒரு கட்டத்தில் எல்லை மீற திட்டமிட்ட படி கொண்டு வந்திருந்த எரிபொருளை இந்துஜா மீது ஊற்றி பற்ற வைத்து விட்டான் செய்வதறியாது திகைத்த அவளது தாயார், சகோதரி அனைவருடத்திலும் ஊற்றி தீக்கறை யாக்கி விட்டான். மருத்தவமனைக்கு செல்லும் முன்னே இந்துஜாவின் உயிர் பிரிந்தது

தவறு ஆகாஷிடம் மட்டும் தான் உள்ளதா ? ஏனென்றால் ஆகாஷ் போன்ற நட்புகளை வீடு வரை அனுமதித்ததே முதல் தவறு. இக்காலத்தில் எந்த பெண்ணும் மிக சுலபமாக புரிந்து கொள்வாள் ஆண் தன்னுடன் பழகும் பழக்கத்தை வைத்து இது நட்பா இல்லை காதலா என்று

காதல் என்று தெரியும் பட்சத்தில் இது நம் வாழ்க்கைக்கு, குடும்பத்துக்கு உகந்ததா ? என்பதை நன்கு ஆராய்தல் மிக அவசியம்

இன்றைய சமூகத்தில் கார்,பைக் இல்லாமல் இருப்பவர்களை எப்படி பார்க்குமோ அதே போல் காதலனோ / காதலியோ இல்லையென்றால் ஒரு மாதிரியாக பார்க்கும் காலம் இது

காதல் என்பது படகில்  சவாரி செய்வது    
போன்றது அக்கறையிலிருந்து இக்கறைக்கு பயணிக்கையில் மகிழ்ச்சியாகவும்,இனிமையாகவும் இருக்கும் ஆனால் பயணத்தின் நடுவிலேயே அக்கறைக்கு திரும்ப நினைக்கையில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது சிலர் லாவகமாக அக்கறை திரும்புகின்றனர் சிலர் தான் நடுவில் தவித்து காட்டாறால் அடித்து செல்ல படுகின்றனர்

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழனாக தான் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஓதுக்குங்கள், விவாதியுங்கள், உங்களை அவர்களுக்கு புரியவையுங்கள்  அவர்களை நன்கு  புரிந்து கொண்டு நட்பாகி விட்டால் போதும் அவர்களுக்கு எதாவது சிக்கல்  என்றால் உங்களிடம் தான் முதலில் கூறுவர் பிரச்சனைகளையும் எளிதில் கலைந்து விடலாம்.

பிள்ளைகளும் பெற்றோர்களை நண்பர்களாக பாவித்தால் 
இந்துஜாக்களையும்,சுவாதிக்களின்   இழப்பை தடுக்கலாம் இவ்வுலகத்தில்.

நட்புடன்

ராஜா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக