வெள்ளி, 8 செப்டம்பர், 2017

எங்கே என் பழைய இந்தியா ??

எங்கே என் பழைய இந்தியா ??

வந்தாரை வாழ வைத்த என் இந்திய தேசம் இன்று ரோஹிங்யா இன மக்களை அனுமதிக்க மறுப்பது ஏன் ?

யார் இந்த் ரோஹிங்யா இன மக்கள் ?
மியான்மாரில் வசித்த சன்னி இன முஸ்லீம்களின் ஒரு பிரிவு.

புத்தரின் கொள்கைகளை கடுகளவு கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு நேரெதிரான வன்முறையை கையில் எடுத்த பெளத்தர்களின் வெறியாட்டத்தால் வீடு வாசல் இழந்து ,நடை பிணமாக நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்.

இஸ்லாமிய நாடுகள் சில கை விரிக்க சில ஆயிரம் நபர்களை அண்டை நாடான பங்களாதேஷ் ஏற்று கொண்டது.இதற்கு மேல் எங்களால் முடியாது என்று எல்லை கதவையும் மூடியாகிவிட்டது.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் திபெத்தியர்களையும்,பார்சிகளையும்   இரு கரம் கூப்பி  இன்முகத்துடன் வரவேற்ற  என் இந்தியா இன்று இம் மக்களை ஏற்க மறுத்ததுடன் வருபவர்களை நாடு கடத்துகின்றது. சட்டப்படி தான் எல்லாம் நடக்கின்றது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ
நீதித்துறைக்கு பதிலளித்து விட்டார்.

இந்தியாவின் அழகே பன்முகதன்மை கொண்ட மக்களை அரைவணைத்து சென்று ஜன நாயகத்தை பூத்து குலுங்க செய்வதே.

மத வெறியர்களால் அனைத்தையும் இழந்து நிற்கதியாக வரும் மக்களை இந்த நாடாவது (கடவுள்) காப்பாற்றாதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை திருப்பி அனுப்புவதான் அறமா ? இது தான் ராஜநியதி யா ?

நம் பாரத தேசம் என்று புகழ் போற்றுவோம் ? என்பது இப்பொழுது வெறும் பாடல் வரிகளே..

நம் போன்ற மக்களை வரவேற்கும் நாடு இந்தியா என்று ரோஹிங்யா மக்கள் நினைத்திருப்பார்கள் போலும்  அவர்களுக்கு தெரியவில்லை நாம் இருப்பது
" புதிய இந்தியாவில் "  என்று

இப்படிக்கு
 புதிய இந்தியன் 😭😭😭
எங்கே என் பழைய இந்தியா ??

வந்தாரை வாழ வைத்த என் இந்திய தேசம் இன்று ரோஹிங்யா இன மக்களை அனுமதிக்க மறுப்பது ஏன் ?

யார் இந்த் ரோஹிங்யா இன மக்கள் ?
மியான்மாரில் வசித்த சன்னி இன முஸ்லீம்களின் ஒரு பிரிவு.

புத்தரின் கொள்கைகளை கடுகளவு கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு நேரெதிரான வன்முறையை கையில் எடுத்த பெளத்தர்களின் வெறியாட்டத்தால் வீடு வாசல் இழந்து ,நடை பிணமாக நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்.

இஸ்லாமிய நாடுகள் சில கை விரிக்க சில ஆயிரம் நபர்களை அண்டை நாடான பங்களாதேஷ் ஏற்று கொண்டது.இதற்கு மேல் எங்களால் முடியாது என்று எல்லை கதவையும் மூடியாகிவிட்டது.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் திபெத்தியர்களையும்,பார்சிகளையும்   இரு கரம் கூப்பி  இன்முகத்துடன் வரவேற்ற  என் இந்தியா இன்று இம் மக்களை ஏற்க மறுத்ததுடன் வருபவர்களை நாடு கடத்துகின்றது. சட்டப்படி தான் எல்லாம் நடக்கின்றது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ
நீதித்துறைக்கு பதிலளித்து விட்டார்.

இந்தியாவின் அழகே பன்முகதன்மை கொண்ட மக்களை அரைவணைத்து சென்று ஜன நாயகத்தை பூத்து குலுங்க செய்வதே.

மத வெறியர்களால் அனைத்தையும் இழந்து நிற்கதியாக வரும் மக்களை இந்த நாடாவது (கடவுள்) காப்பாற்றாதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை திருப்பி அனுப்புவதான் அறமா ? இது தான் ராஜநியதி யா ?

நம் பாரத தேசம் என்று புகழ் போற்றுவோம் ? என்பது இப்பொழுது வெறும் பாடல் வரிகளே..

நம் போன்ற மக்களை வரவேற்கும் நாடு இந்தியா என்று ரோஹிங்யா மக்கள் நினைத்திருப்பார்கள் போலும்  அவர்களுக்கு தெரியவில்லை நாம் இருப்பது
" புதிய இந்தியாவில் "  என்று

இப்படிக்கு
 புதிய இந்தியன் 😭😭😭

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக