சனி, 14 ஜனவரி, 2023

துணிவு திரைவிமர்சனம்

 நடிகர்கள் தங்கள் நடித்து வெளி வரும் படங்களில் சமுதாயத்திற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பது அறம் சார்ந்தது அதை பெரும்பாலானோர் செய்ய தவறினாலும் சிலர் தயங்காமல் செய்கின்றனர்.



தனக்கான ஒரு பெருங்கூட்டம் இருப்பது தெரிந்ததால் தான் என்னவோ ,  அவர்களுக்கு தன்னால் முடிந்த அறிவுறையை திரையின் வாயிலாக கூற இயலும் நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். 



அஜித்குமார் , மஞ்சுவாரியர் , சமுத்திரகனி , பக்ஸ் ,இன்னும் பலர் நடித்து , ஜிப்ரான் இசையில் , H.வினோத் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு  திரைக்கு வந்துள்ள படம் துணிவு. 



நகரத்தின் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை கொள்ளையர்கள் கொள்ள அடிக்க முயல்கிறார்கள் அவர்கள் எண்ணம் நிறைவேறியதா ? அந்த வங்கியின் பின்னணி என்ன ? வங்கியில் உள்ள மக்களை எப்படி அரசு காக்க முயலும் என்பதை சமகால நிகழ்வுகளோடு சுவார்ஸமாக சொல்லி வென்று விட்டார் படத்தின் இயக்குனர் வினோத்.



கொள்ளையர்களிடமிருந்து வங்கியில் உள்ள பிணைய கைதிகளை காப்பாற்ற முயலும்  அஜீத்தை கைதட்டி வரவேற்கும் மக்களிடம் சிரித்து கொண்டே நானும் கொள்ளையடிக்கத்தான் வந்துள்ளேன் என்று கூறி அமர்க்களமான ஆரம்ப காட்சி முதல் No Guts No Glory என்று கூறி இறுதி காட்சி வரை அஜீத் தன் கொடி பறக்க விடுகிறார் திரைப்படம் முழுவதும்.



சென்னை கமிஷனராக சமுத்திரகனி கனகச்சிதமாக பொருந்துகிறார் , குறிப்பாக கமெண்டோ chief இடம் இது வடக்கு அல்ல தமிழ்நாடு என்று கூறுகையில் தன்னை அறியாமல் கைதட்டல் சத்தம் இடுகிறார்கள்.


வெள்ளித்திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் மோகன சுந்தரம் (மை பா ) பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்கிறார் பக்ஸ் (போலீஸ் அதிகாரி )உடன் அவரின் பேரம் கலந்த journalism சிரிப்பு க்கு உத்தரவாதம்  நடப்பு journalism கண் முன் நிறுத்துகிறார்கள் இருவரும். 



வெளியில் நடப்பதை வேவு பார்த்து அஜித் க்கு உதவியாக சொல்லப்போனால் வலதுகரமாக இருந்து படம் முழுவதும் stylish  பயணிக்கிறார் கண்மணி என்கிற

மஞ்சு வாரியர்.  


சில்லா , சில்லா என்ற பாடலில் ஜிப்ரான் இசை , வைசாக் வரிகள் , அனிருத் குரலில் இன்றைய ரசிகர்களை ஆட வைக்கிறது ,  பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நிரவ்ஷா வின் கேமரா ஒவ்வொரு frame ம் கண்களுக்கு விருந்து , வங்கியை அவ்வளவு லாவகமாக எடுந்திருந்தார் , சண்டை காட்சிகளில் அவ்வளவு தத்ரூபம். 



முதல் பாதி முழுக்க அஜித் தின் ஆட்டம் , இரண்டாம் பாதியில் இயக்குனர் வலுவான திரைக்கதையால் வலு சேர்கிறார் வங்கிகளின் அத்துமீறல் , share market , mutual fund உள்ள அப்தங்களின் தோலுரித்து காட்டுகிறார். பொது மக்களுக்குள்ள பொறுப்பை உணர அறிவுறுத்துகிறார். 


துணிவு - அஜித்தின் துள்ளல். 


இவண்

ராஜா.க 



 நடிகர்கள் தங்கள் நடித்து வெளி வரும் படங்களில் சமுதாயத்திற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பது அறம் சார்ந்தது அதை பெரும்பாலானோர் செய்ய தவறினாலும் சிலர் தயங்காமல் செய்கின்றனர்.



தனக்கான ஒரு பெருங்கூட்டம் இருப்பது தெரிந்ததால் தான் என்னவோ ,  அவர்களுக்கு தன்னால் முடிந்த அறிவுறையை திரையின் வாயிலாக கூற இயலும் நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். 



அஜித்குமார் , மஞ்சுவாரியர் , சமுத்திரகனி , பக்ஸ் ,இன்னும் பலர் நடித்து , ஜிப்ரான் இசையில் , H.வினோத் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு  திரைக்கு வந்துள்ள படம் துணிவு. 



நகரத்தின் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை கொள்ளையர்கள் கொள்ள அடிக்க முயல்கிறார்கள் அவர்கள் எண்ணம் நிறைவேறியதா ? அந்த வங்கியின் பின்னணி என்ன ? வங்கியில் உள்ள மக்களை எப்படி அரசு காக்க முயலும் என்பதை சமகால நிகழ்வுகளோடு சுவார்ஸமாக சொல்லி வென்று விட்டார் படத்தின் இயக்குனர் வினோத்.



கொள்ளையர்களிடமிருந்து வங்கியில் உள்ள பிணைய கைதிகளை காப்பாற்ற முயலும்  அஜீத்தை கைதட்டி வரவேற்கும் மக்களிடம் சிரித்து கொண்டே நானும் கொள்ளையடிக்கத்தான் வந்துள்ளேன் என்று கூறி அமர்க்களமான ஆரம்ப காட்சி முதல் No Guts No Glory என்று கூறி இறுதி காட்சி வரை அஜீத் தன் கொடி பறக்க விடுகிறார் திரைப்படம் முழுவதும்.



சென்னை கமிஷனராக சமுத்திரகனி கனகச்சிதமாக பொருந்துகிறார் , குறிப்பாக கமெண்டோ chief இடம் இது வடக்கு அல்ல தமிழ்நாடு என்று கூறுகையில் தன்னை அறியாமல் கைதட்டல் சத்தம் இடுகிறார்கள்.


வெள்ளித்திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் மோகன சுந்தரம் (மை பா ) பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்கிறார் பக்ஸ் (போலீஸ் அதிகாரி )உடன் அவரின் பேரம் கலந்த journalism சிரிப்பு க்கு உத்தரவாதம்  நடப்பு journalism கண் முன் நிறுத்துகிறார்கள் இருவரும். 



வெளியில் நடப்பதை வேவு பார்த்து அஜித் க்கு உதவியாக சொல்லப்போனால் வலதுகரமாக இருந்து படம் முழுவதும் stylish  பயணிக்கிறார் கண்மணி என்கிற

மஞ்சு வாரியர்.  


சில்லா , சில்லா என்ற பாடலில் ஜிப்ரான் இசை , வைசாக் வரிகள் , அனிருத் குரலில் இன்றைய ரசிகர்களை ஆட வைக்கிறது ,  பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நிரவ்ஷா வின் கேமரா ஒவ்வொரு frame ம் கண்களுக்கு விருந்து , வங்கியை அவ்வளவு லாவகமாக எடுந்திருந்தார் , சண்டை காட்சிகளில் அவ்வளவு தத்ரூபம். 



முதல் பாதி முழுக்க அஜித் தின் ஆட்டம் , இரண்டாம் பாதியில் இயக்குனர் வலுவான திரைக்கதையால் வலு சேர்கிறார் வங்கிகளின் அத்துமீறல் , share market , mutual fund உள்ள அப்தங்களின் தோலுரித்து காட்டுகிறார். பொது மக்களுக்குள்ள பொறுப்பை உணர அறிவுறுத்துகிறார். 


துணிவு - அஜித்தின் துள்ளல். 


இவண்

ராஜா.க 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக