திங்கள், 16 அக்டோபர், 2017

மெர்சல் ஆன தமிழக அரசியல்



மெர்சல் ஆன தமிழக அரசியல்  

தமிழக அரசியலுக்கும், திரைதுறைக்கும் நெருங்கிய நெருங்கிய தொடர்புண்டு. திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவபவர்களை திருமண வாழ்க்கையோடு ஒப்பிட்டு மூன்று வகையாக பிரிக்கலாம்

  1. திருமணம் செய்து கொண்டு  மனைவியின் மனதை நன்கறிந்து சிறப்பான வெற்றி பெற்று சரித்தரத்தில் இடம் பெற்றவர்கள்.
  2. எவ்வளவு மன கசப்பு இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் இந்த படகிலேயே பயணம் செய்பவர்கள்
  3. மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, தோல்வியுற்று அதிலிருந்து விலகியிருபவர்கள்.   

மேல் சொன்ன மூன்றையும் அரசியலுடன் ஓப்பிட்டு பாருங்கள் இரண்டாம்,மூன்றாம் ரக மக்கள்  தான் மிக அதிகம்

முதல் ரகத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் மனைவி க்கு பதில் மக்களின் மனதை நன்கு அறிந்தவர்களே அரசியலில் வெற்றி கொடி கட்டி  வீட்டோடு,நாட்டையும் சேர்த்து ஆண்டார்கள்

திரு. MGR திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். நாம் நினைப்பது போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசியலுக்கு வந்து உடனே முதல்வர் ஆகவில்லை

ஒரு கட்சியில் சேர்ந்து நடிப்புடன், அரசியலையும், அரசியல்வாதிகளையும் ஒரளவு  தெரிந்து கொண்டவர்
தன் திரைப்படம் ஒடும் திரையரங்கிற்கு சென்று தான் நினைத்த காட்சியில் மக்களின் மனது எப்படி இருக்கிறது என்று மக்கள் பல்ஸ் பார்த்தவர்
MGR இன் field work இது ஒரு சான்று

மேலும் தனகென்று ஒரு விசுவாசமான கூட்டத்தையும் சேர்ந்திருந்தார் இன்றைய நாளில் விசுவாசத்திற்கு பல பேருக்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது.

MGR தனி கட்சி தொடங்கிய பின் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட( .சு.வாலிபன்) திரைக்கு வருவதில் ஏற்பட்ட சிக்கலை அவர் கையாண்ட விதமும் அதில் பெற்ற வெற்றியும் தான் அவரை அரசியலிலும் வெற்றி நாயகனாக்கியது

MGR க்கு இந்த வெற்றி எளிதில் கிடைக்க வில்லை கள அரசியல் கண்டு, மக்கள் மனம் படித்து கிடைத்த வெற்றி.  

அதே யுக்தியை கையாண்டாலும் இன்று வெற்றி கிடைப்பது கடினம் ஆனால் அதையே இங்குள்ளவர்கள் எடுக்க துணிவில்லாதபோது
திரையில் மட்டும் அரசியல் பன்ச் (Punch)வசனங்கள் பேசுவது,அரசியல் வாதிகளுக்கு எதிராக குரல் 
கொடுப்பது (திரையில்) , வருவேன் , வரமாட்டேன் என ரசிகனை ஏமாற்றினால் அதற்கான எதிர் வினையை கையாள தான் வேண்டும்

திரைத்துறையில் உள்ள அனைத்து நடிகர்களும் இது போன்ற (படம் திரைக்கு வராமல்) பிரச்சனையை எதிர் கொள்ள வில்லையே ஏன் ? அவர்கள் தங்கள் படத்தில் அரசையோ , அரசியல்வாதிகளையோ குறை சொல்லவில்லையா ? சொல்கிறார்கள் ஆனால் திரையோடு நிறுத்தி கொள்கிறார்கள்

அதையும் தாண்டி சில நடிகர்களின் நடவடிக்கைகள் அரசியல் (பதவி) ருசியை உணர முயற்சிக்கும் போது தான் ஆளும் தரப்பு நடிகனை சீண்டி பார்க்கிறது அதை துணிந்து எதிர் கொண்டு வெற்றியாளனாக தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உள்ளனர் தோல்வியை பதிவு செய்தவர்களும் உள்ளனர்.

இவண்

Raja K.S



மெர்சல் ஆன தமிழக அரசியல்  

தமிழக அரசியலுக்கும், திரைதுறைக்கும் நெருங்கிய நெருங்கிய தொடர்புண்டு. திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவபவர்களை திருமண வாழ்க்கையோடு ஒப்பிட்டு மூன்று வகையாக பிரிக்கலாம்

  1. திருமணம் செய்து கொண்டு  மனைவியின் மனதை நன்கறிந்து சிறப்பான வெற்றி பெற்று சரித்தரத்தில் இடம் பெற்றவர்கள்.
  2. எவ்வளவு மன கசப்பு இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் இந்த படகிலேயே பயணம் செய்பவர்கள்
  3. மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, தோல்வியுற்று அதிலிருந்து விலகியிருபவர்கள்.   

மேல் சொன்ன மூன்றையும் அரசியலுடன் ஓப்பிட்டு பாருங்கள் இரண்டாம்,மூன்றாம் ரக மக்கள்  தான் மிக அதிகம்

முதல் ரகத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் மனைவி க்கு பதில் மக்களின் மனதை நன்கு அறிந்தவர்களே அரசியலில் வெற்றி கொடி கட்டி  வீட்டோடு,நாட்டையும் சேர்த்து ஆண்டார்கள்

திரு. MGR திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். நாம் நினைப்பது போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசியலுக்கு வந்து உடனே முதல்வர் ஆகவில்லை

ஒரு கட்சியில் சேர்ந்து நடிப்புடன், அரசியலையும், அரசியல்வாதிகளையும் ஒரளவு  தெரிந்து கொண்டவர்
தன் திரைப்படம் ஒடும் திரையரங்கிற்கு சென்று தான் நினைத்த காட்சியில் மக்களின் மனது எப்படி இருக்கிறது என்று மக்கள் பல்ஸ் பார்த்தவர்
MGR இன் field work இது ஒரு சான்று

மேலும் தனகென்று ஒரு விசுவாசமான கூட்டத்தையும் சேர்ந்திருந்தார் இன்றைய நாளில் விசுவாசத்திற்கு பல பேருக்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது.

MGR தனி கட்சி தொடங்கிய பின் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட( .சு.வாலிபன்) திரைக்கு வருவதில் ஏற்பட்ட சிக்கலை அவர் கையாண்ட விதமும் அதில் பெற்ற வெற்றியும் தான் அவரை அரசியலிலும் வெற்றி நாயகனாக்கியது

MGR க்கு இந்த வெற்றி எளிதில் கிடைக்க வில்லை கள அரசியல் கண்டு, மக்கள் மனம் படித்து கிடைத்த வெற்றி.  

அதே யுக்தியை கையாண்டாலும் இன்று வெற்றி கிடைப்பது கடினம் ஆனால் அதையே இங்குள்ளவர்கள் எடுக்க துணிவில்லாதபோது
திரையில் மட்டும் அரசியல் பன்ச் (Punch)வசனங்கள் பேசுவது,அரசியல் வாதிகளுக்கு எதிராக குரல் 
கொடுப்பது (திரையில்) , வருவேன் , வரமாட்டேன் என ரசிகனை ஏமாற்றினால் அதற்கான எதிர் வினையை கையாள தான் வேண்டும்

திரைத்துறையில் உள்ள அனைத்து நடிகர்களும் இது போன்ற (படம் திரைக்கு வராமல்) பிரச்சனையை எதிர் கொள்ள வில்லையே ஏன் ? அவர்கள் தங்கள் படத்தில் அரசையோ , அரசியல்வாதிகளையோ குறை சொல்லவில்லையா ? சொல்கிறார்கள் ஆனால் திரையோடு நிறுத்தி கொள்கிறார்கள்

அதையும் தாண்டி சில நடிகர்களின் நடவடிக்கைகள் அரசியல் (பதவி) ருசியை உணர முயற்சிக்கும் போது தான் ஆளும் தரப்பு நடிகனை சீண்டி பார்க்கிறது அதை துணிந்து எதிர் கொண்டு வெற்றியாளனாக தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உள்ளனர் தோல்வியை பதிவு செய்தவர்களும் உள்ளனர்.

இவண்

Raja K.S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக