புதன், 3 ஜனவரி, 2024

MGR உம் , இரட்டை இலையும்

 




திருச்செந்தூர் கோயில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் கோயில் பஸ்ஸ்டாண்ட் இப்போது செயல்படவில்லை. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தரிசனம் முடித்து கோயிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் தான் செல்ல வேண்டும் அவர்கள் ஊருக்கு செல்ல.இந்த முறை கோயிலில் இருந்து நான் பைக்கில் வெளியே வரும் போது 


பக்தர் ஒருவர் சார் , ஊருக்குள் தானே போறீங்க , நீங்கள் செல்லும் வரை அழைத்து செல்லுங்கள் அங்கிருந்து நான் நடந்து போகிறேன் என்று கூறினார். வெளியூர் இருந்து எங்கள் ஊருக்கு வரும் பக்தர்கள் எங்கள் விருந்தாளி அதனால் ஏற்றி கொண்டேன். பைக் கிளம்பியது , அவரின் செல்போன் அடித்தது அந்த ரிங்


டோன் பாடல் இப்படை தோற்பின் எப்படை வெல்லும் ?என்கிற எம்.ஜி.ஆர் பாட்டு mobile இல் பேசி விட்ட பிறகு நான் அவரிடம் கேட்டேன் , அண்ணே ரிங் டோன் சொல்லுது MGR ரசிகர் என்று ,ஏன் அவரை இன்றும் பிடிக்கிறது என கேட்டேன் ?அது என்னவோ இனம் புரியாத பாசம் , அவரையும் , அம்மா (ஜெயலலிதா) ரொம்ப பிடிக்கும் என்றார்.


அவர் சொல்லும் போது அவர் முகத்தில் இருந்த சிரிப்பு , அந்த குரல் அதெல்லாம் என்னை சிறிது ஆச்சரியபடுத்தியது. இன்று வரை இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எதற்கும் போட்டது இல்லை என்றார். இப்போ திரு.EPS , திரு.OPS இவர்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்றேன் ? யாரு



வேண்டுமானாலும் இருக்கட்டும் , ஆனால் இரட்டை இலை சின்னம் தோற்று விட கூடாது அதனால் அந்த சின்னத்துக்கு தான் என் ஒட்டு என் வாழ்நாள் முழுவதும் M.GR & அம்மா க்காக தான் என்றார். ஒரு நிமிடம் எனக்கு மயிற்கோச்சரியம் (புல்லரித்து விட்டது) பாமரன் மனதில் MGR & இரட்டை இலை


சின்னம் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது என எண்ணி வியந்தேன் , பேசி கொண்டே அவரை பஸ் ஸ்டாண்ட் க்கு கொண்டு விட்டேன் , எந்த ஊர் என்று கேட்டேன் ராமேஸ்வரம் என்றார். தம்பி , வாங்க ஒரு காஃபி சாப்பிடலாம் என்றார். இருவரும் காஃபி சாப்பிடுகையில் டீ கடையில் பாடல் ஒலித்தது

 " நான் ஆணையிட்டால்" 


இவன்

ராஜா.க


#MGR #Jayalalitha #அம்மா #Amma #AIADMK #ADMK

 




திருச்செந்தூர் கோயில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் கோயில் பஸ்ஸ்டாண்ட் இப்போது செயல்படவில்லை. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தரிசனம் முடித்து கோயிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் தான் செல்ல வேண்டும் அவர்கள் ஊருக்கு செல்ல.இந்த முறை கோயிலில் இருந்து நான் பைக்கில் வெளியே வரும் போது 


பக்தர் ஒருவர் சார் , ஊருக்குள் தானே போறீங்க , நீங்கள் செல்லும் வரை அழைத்து செல்லுங்கள் அங்கிருந்து நான் நடந்து போகிறேன் என்று கூறினார். வெளியூர் இருந்து எங்கள் ஊருக்கு வரும் பக்தர்கள் எங்கள் விருந்தாளி அதனால் ஏற்றி கொண்டேன். பைக் கிளம்பியது , அவரின் செல்போன் அடித்தது அந்த ரிங்


டோன் பாடல் இப்படை தோற்பின் எப்படை வெல்லும் ?என்கிற எம்.ஜி.ஆர் பாட்டு mobile இல் பேசி விட்ட பிறகு நான் அவரிடம் கேட்டேன் , அண்ணே ரிங் டோன் சொல்லுது MGR ரசிகர் என்று ,ஏன் அவரை இன்றும் பிடிக்கிறது என கேட்டேன் ?அது என்னவோ இனம் புரியாத பாசம் , அவரையும் , அம்மா (ஜெயலலிதா) ரொம்ப பிடிக்கும் என்றார்.


அவர் சொல்லும் போது அவர் முகத்தில் இருந்த சிரிப்பு , அந்த குரல் அதெல்லாம் என்னை சிறிது ஆச்சரியபடுத்தியது. இன்று வரை இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எதற்கும் போட்டது இல்லை என்றார். இப்போ திரு.EPS , திரு.OPS இவர்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்றேன் ? யாரு



வேண்டுமானாலும் இருக்கட்டும் , ஆனால் இரட்டை இலை சின்னம் தோற்று விட கூடாது அதனால் அந்த சின்னத்துக்கு தான் என் ஒட்டு என் வாழ்நாள் முழுவதும் M.GR & அம்மா க்காக தான் என்றார். ஒரு நிமிடம் எனக்கு மயிற்கோச்சரியம் (புல்லரித்து விட்டது) பாமரன் மனதில் MGR & இரட்டை இலை


சின்னம் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது என எண்ணி வியந்தேன் , பேசி கொண்டே அவரை பஸ் ஸ்டாண்ட் க்கு கொண்டு விட்டேன் , எந்த ஊர் என்று கேட்டேன் ராமேஸ்வரம் என்றார். தம்பி , வாங்க ஒரு காஃபி சாப்பிடலாம் என்றார். இருவரும் காஃபி சாப்பிடுகையில் டீ கடையில் பாடல் ஒலித்தது

 " நான் ஆணையிட்டால்" 


இவன்

ராஜா.க


#MGR #Jayalalitha #அம்மா #Amma #AIADMK #ADMK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக