வியாழன், 4 மே, 2023

நம்பிக்கை !!

 நம்பிக்கை: 








வழக்கமாக செல்லும் டீ கடைக்கு சென்று காபி கேட்டேன். மாஸ்டர் இல்லாததால் கடையின் ஓனரே காபி போட்டு கொடுத்தார். காபியை குடித்து கொண்டே இருக்கையில் ஓனர் என்னிடம் பேச தொடங்கினார். கடையை அப்படி இழுத்து முடி விட்டு போகிடலாம் என நினைக்கிறேன் என்றார். என்னாச்சு ஓனர் என்றேன் ?



காலை முதல் வியாபாரமே இல்லை கடுப்பா இருக்கு சார் என்றார். அட விடுங்க ஓனர் எல்லாம் சரியாகிவிடும் என்றேன். என்ன செய்ய என்று தெரியவில்லை என்றார்.



அது ஒரு மாலை பொழுது. நான் ஒனரிடம் #கடவுள் நம்பிக்கை இருக்கா என்றேன் ? இருக்கு சார் என்றார். சரி , சாயங்காலம் நேரம் நீங்கள் கடையில் வைத்துள்ள #கடவுள் படம் முன் உள்ள விளக்கு ஏற்றி  , ஊது பத்தி , சாம்பிராணி கொளுத்தி வைத்து மனதார கடவுளை கும்பிடுங்கள் கண்டிப்பாக வியாபாரம் நடக்கும் என்றேன். 



எப்படி சார் என்றார் ? அட #நம்பிக்கை தான் நம்பி செய்து பாருங்கள் என்றேன். முதல் நாள் செய்தார் , குறுப்பிட்டு சொல்லும் படி வியாபாரம் நடந்ததாம். முறையே அதை தொடர்ந்து செய்துள்ளார் போலும் , ஓரு வாரம் கழித்து அந்த கடைக்கு சென்றேன்.



 சார் , கை யை கொடுங்க என்றார் ? என்னாச்சு என்றேன் , சார் நீங்கள் சொன்னதை முதலில் நம்பவில்லை இருந்தாலும் நம்பிக்கை யை கை விடாமல் செய்து வந்தேன் இப்போது சாயங்காலத்துக்கு மேல்

நல்லா வியாபாரம் நடக்குது சார் , ரொம்ப நன்றி சார் என்றார். ஓனர் "நாமெல்லாம் ஒரே கன்ட்ரி (country)

நமக்கு எதுக்கு நன்றி" என்று கூறி வழக்கமான காபியை குடித்தேன்.



எப்படி சார் உங்களுக்கு இதெல்லாம் தெரியது என்றார் ? நம்பிக்கை தான் ஓனர் , எங்க கடையில் வியாபாரம் இல்லை என்றால் இதை தான்

செய்ய சொன்னார் எனக்கு தெரிந்த ஒரு நல விரும்பி , அதையே தான் உங்களுக்கு பரிந்துரைத்தேன் அவ்வளவு தான். 




நம் உழைப்பு மேல் வைக்கும் நம்பிக்கை யை ஓரு கடவுள் (சக்தி)மீதும் வைத்தால் பலன் இரடிப்பாக கிடைக்கும் என்றேன். கடவுளை நம்பினோர் கைவிட படார். முற்றும்.


#நம்பிக்கை #கடவுள் #உழைப்பு

 நம்பிக்கை: 








வழக்கமாக செல்லும் டீ கடைக்கு சென்று காபி கேட்டேன். மாஸ்டர் இல்லாததால் கடையின் ஓனரே காபி போட்டு கொடுத்தார். காபியை குடித்து கொண்டே இருக்கையில் ஓனர் என்னிடம் பேச தொடங்கினார். கடையை அப்படி இழுத்து முடி விட்டு போகிடலாம் என நினைக்கிறேன் என்றார். என்னாச்சு ஓனர் என்றேன் ?



காலை முதல் வியாபாரமே இல்லை கடுப்பா இருக்கு சார் என்றார். அட விடுங்க ஓனர் எல்லாம் சரியாகிவிடும் என்றேன். என்ன செய்ய என்று தெரியவில்லை என்றார்.



அது ஒரு மாலை பொழுது. நான் ஒனரிடம் #கடவுள் நம்பிக்கை இருக்கா என்றேன் ? இருக்கு சார் என்றார். சரி , சாயங்காலம் நேரம் நீங்கள் கடையில் வைத்துள்ள #கடவுள் படம் முன் உள்ள விளக்கு ஏற்றி  , ஊது பத்தி , சாம்பிராணி கொளுத்தி வைத்து மனதார கடவுளை கும்பிடுங்கள் கண்டிப்பாக வியாபாரம் நடக்கும் என்றேன். 



எப்படி சார் என்றார் ? அட #நம்பிக்கை தான் நம்பி செய்து பாருங்கள் என்றேன். முதல் நாள் செய்தார் , குறுப்பிட்டு சொல்லும் படி வியாபாரம் நடந்ததாம். முறையே அதை தொடர்ந்து செய்துள்ளார் போலும் , ஓரு வாரம் கழித்து அந்த கடைக்கு சென்றேன்.



 சார் , கை யை கொடுங்க என்றார் ? என்னாச்சு என்றேன் , சார் நீங்கள் சொன்னதை முதலில் நம்பவில்லை இருந்தாலும் நம்பிக்கை யை கை விடாமல் செய்து வந்தேன் இப்போது சாயங்காலத்துக்கு மேல்

நல்லா வியாபாரம் நடக்குது சார் , ரொம்ப நன்றி சார் என்றார். ஓனர் "நாமெல்லாம் ஒரே கன்ட்ரி (country)

நமக்கு எதுக்கு நன்றி" என்று கூறி வழக்கமான காபியை குடித்தேன்.



எப்படி சார் உங்களுக்கு இதெல்லாம் தெரியது என்றார் ? நம்பிக்கை தான் ஓனர் , எங்க கடையில் வியாபாரம் இல்லை என்றால் இதை தான்

செய்ய சொன்னார் எனக்கு தெரிந்த ஒரு நல விரும்பி , அதையே தான் உங்களுக்கு பரிந்துரைத்தேன் அவ்வளவு தான். 




நம் உழைப்பு மேல் வைக்கும் நம்பிக்கை யை ஓரு கடவுள் (சக்தி)மீதும் வைத்தால் பலன் இரடிப்பாக கிடைக்கும் என்றேன். கடவுளை நம்பினோர் கைவிட படார். முற்றும்.


#நம்பிக்கை #கடவுள் #உழைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக