சனி, 7 பிப்ரவரி, 2026

Tea Talkies Diaries: OMR-ல் ஒரு அமைதியான வெள்ளி

 

Tea Talkies – ஒரு வெள்ளி இரவு


Tea Talkies.


A cinematic café.

இந்த பெயரே ஒரு முன்னுரை போல இருந்தது.





அங்கே நான் peri peri fries order பண்ணியிருந்தேன்.

French fries-க்கு cuisine இருக்கா என தெரியாது.

ஆனா அந்த fries, அந்த இரவு,

சென்னை குளிர்ந்த காற்றோடு

தூரல் மழை கலந்து

சரியான இடத்தில் வந்து சேர்ந்திருந்தது.


OMR சாலை.

வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்து

அடுத்த இரண்டு நாட்கள்

ECR-ல் செலவு செய்பவர்களின் பகுதி என்று

எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

இப்போது அந்த வாழ்க்கையை

நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடையை சுற்றி கண்ணாடி.

உள்ளே… இன்னொரு கண்ணாடி அறை.

அதற்குள் நான்.

உள்ளிருந்து

வெளியே போகும் வாகனங்களை

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.


வெள்ளி இரவு.

மணி 11.

முன்னால் இரண்டு நாட்கள் விடுமுறை.

இந்த freedom-ஐ monetize செய்ய

OMR-ல் இப்போது

எண்ணிக்கையில்லா கடைகள்.

கடைக்குள்

“ஒரு தடவை சொல்வாயா…”

Vintage Vijay-யின் Vaseegara

மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது.

Time machine இல்லாமலே

அந்தப் படம்

என்னை தன் காலத்துக்கு அழைத்துச் சென்றது.


பாடல் முடியும் தருணத்தில்

“Sir… your order”

என்று waiter சொன்னான்.

நிகழ்காலம்

திரும்ப கை பிடித்து இழுத்தது.

அந்த waiter-க்கு வயசு ரொம்ப சின்னது.

அவன் “Sir”னு சொன்னது சரிதான்.

ஆனா “Bro”னு சொல்லி இருந்தா

என் சந்தோஷம்

இரட்டிப்பு ஆகி இருக்கும்.


சின்ன வயசுல

பெரியவன் ஆகணும்னு ஆசை படறதும்…

பெரியவன் ஆனதும்

சின்ன பையன் ஆகணும்னு ஆசை படறதும்

மனித இயல்பு தானே?


மொறு மொறு fries.

ஒரு கடி.

அட… அருமை.

எனக்கு ஒரு பழக்கம்.

சாப்பாடு உண்மையிலேயே சுவையா இருந்தா

கண்ணை மூடி

அதை ரசிப்பேன்.

அந்த இரவு

அதுவே நடந்தது.

உடனே

“Super bro…”

ன்னு சொன்னேன்.

அவன் முகத்துல

சின்ன சந்தோஷம்.

ஆனா உண்மையானது.


அம்மா சொல்வாள்:

“நீ சமைச்சவங்களை மறக்காம பாராட்டுவ.

மற்றவர்கள் மாடு போல தின்னிட்டு போயிடுவாங்க.”

அந்த வார்த்தைகள்

மனசுக்குள் மெதுவா வந்தது.

உருளைக்கிழங்கு மீது எனக்கு இருக்கும் விருப்பம்

அம்மாவிடமிருந்து தான்.

சின்ன வயசுல

அவள் ஆரம்பித்தது,

இன்று French fries வரை வந்திருக்கிறது.

அதனால்தான் என்னவோ,

நானும் இப்போது

உருளை போல

கொஞ்சம் குண்டா ஆயிட்டேன்.


வருடம் தொடங்கும்போது

“இந்த வருஷம் weight குறைக்கணும்”

ன்னு சொன்ன வாக்குறுதி,

அரசியல்வாதிகளின் வாக்குறுதி போல

ஜனவரி லேயே

காலாவதி ஆனது.


Fries கொரித்துக் கொண்டே

வழக்கம் போல

எதிர்காலத்தை பற்றி

சிந்திக்க ஆரம்பித்தேன்.

சிரிப்பு வந்தது.

“எதை இழந்தாலும்

உன் நம்பிக்கையை இழக்காதே”

ன்னு

என் பாட்டி

சின்ன வயசுல சொன்ன வார்த்தைகள்

மனசுக்குள் ஒலித்தது.


இந்த memes உலகில்,

கவுண்டமணி

ஒட்டக்கண்ணாடி போட்டுக்கிட்டு

எப்படி தைரியமா நிக்கறியோ

ன்னு

ரஜினிகாந்த் கேட்பார் இல்லையா…

அந்த மாதிரி

நானே எனக்கே

“நீ ரொம்ப தைரியசாலி”

ன்னு சொல்லிக்கிட்டு

சிரிச்சுக்கிட்டேன்.


அந்த நேரம்

கடைக்குள்

“அலையே அலையே

காட்டுல மழையே…”

ஒலித்தது.

“என் மூச்சவள்

பேச்சவள்

பேர் சொல்லும் அழகவள்

எனக்குள்ள கலக்குற

ஆக்ஸிஜன் அளவவள்…”

என்னை அறியாமலே

பாட ஆரம்பிச்சேன்.

“Super bro!”

ன்னு அந்த கடை தம்பி சொன்னான்.

இந்த முறை

“Sir” இல்ல.

“Bro”.

அந்த ஒரு வார்த்தை

இந்த வெள்ளி இரவை

முழுமையாக்கியது.

இப்படித்தான்

கடந்து போனது

ஒரு வெள்ளி இரவு.


#TeaTalkies

#FridayNight

#ChennaiNights

#OMRDiaries

 

Tea Talkies – ஒரு வெள்ளி இரவு


Tea Talkies.


A cinematic café.

இந்த பெயரே ஒரு முன்னுரை போல இருந்தது.





அங்கே நான் peri peri fries order பண்ணியிருந்தேன்.

French fries-க்கு cuisine இருக்கா என தெரியாது.

ஆனா அந்த fries, அந்த இரவு,

சென்னை குளிர்ந்த காற்றோடு

தூரல் மழை கலந்து

சரியான இடத்தில் வந்து சேர்ந்திருந்தது.


OMR சாலை.

வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்து

அடுத்த இரண்டு நாட்கள்

ECR-ல் செலவு செய்பவர்களின் பகுதி என்று

எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

இப்போது அந்த வாழ்க்கையை

நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடையை சுற்றி கண்ணாடி.

உள்ளே… இன்னொரு கண்ணாடி அறை.

அதற்குள் நான்.

உள்ளிருந்து

வெளியே போகும் வாகனங்களை

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.


வெள்ளி இரவு.

மணி 11.

முன்னால் இரண்டு நாட்கள் விடுமுறை.

இந்த freedom-ஐ monetize செய்ய

OMR-ல் இப்போது

எண்ணிக்கையில்லா கடைகள்.

கடைக்குள்

“ஒரு தடவை சொல்வாயா…”

Vintage Vijay-யின் Vaseegara

மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது.

Time machine இல்லாமலே

அந்தப் படம்

என்னை தன் காலத்துக்கு அழைத்துச் சென்றது.


பாடல் முடியும் தருணத்தில்

“Sir… your order”

என்று waiter சொன்னான்.

நிகழ்காலம்

திரும்ப கை பிடித்து இழுத்தது.

அந்த waiter-க்கு வயசு ரொம்ப சின்னது.

அவன் “Sir”னு சொன்னது சரிதான்.

ஆனா “Bro”னு சொல்லி இருந்தா

என் சந்தோஷம்

இரட்டிப்பு ஆகி இருக்கும்.


சின்ன வயசுல

பெரியவன் ஆகணும்னு ஆசை படறதும்…

பெரியவன் ஆனதும்

சின்ன பையன் ஆகணும்னு ஆசை படறதும்

மனித இயல்பு தானே?


மொறு மொறு fries.

ஒரு கடி.

அட… அருமை.

எனக்கு ஒரு பழக்கம்.

சாப்பாடு உண்மையிலேயே சுவையா இருந்தா

கண்ணை மூடி

அதை ரசிப்பேன்.

அந்த இரவு

அதுவே நடந்தது.

உடனே

“Super bro…”

ன்னு சொன்னேன்.

அவன் முகத்துல

சின்ன சந்தோஷம்.

ஆனா உண்மையானது.


அம்மா சொல்வாள்:

“நீ சமைச்சவங்களை மறக்காம பாராட்டுவ.

மற்றவர்கள் மாடு போல தின்னிட்டு போயிடுவாங்க.”

அந்த வார்த்தைகள்

மனசுக்குள் மெதுவா வந்தது.

உருளைக்கிழங்கு மீது எனக்கு இருக்கும் விருப்பம்

அம்மாவிடமிருந்து தான்.

சின்ன வயசுல

அவள் ஆரம்பித்தது,

இன்று French fries வரை வந்திருக்கிறது.

அதனால்தான் என்னவோ,

நானும் இப்போது

உருளை போல

கொஞ்சம் குண்டா ஆயிட்டேன்.


வருடம் தொடங்கும்போது

“இந்த வருஷம் weight குறைக்கணும்”

ன்னு சொன்ன வாக்குறுதி,

அரசியல்வாதிகளின் வாக்குறுதி போல

ஜனவரி லேயே

காலாவதி ஆனது.


Fries கொரித்துக் கொண்டே

வழக்கம் போல

எதிர்காலத்தை பற்றி

சிந்திக்க ஆரம்பித்தேன்.

சிரிப்பு வந்தது.

“எதை இழந்தாலும்

உன் நம்பிக்கையை இழக்காதே”

ன்னு

என் பாட்டி

சின்ன வயசுல சொன்ன வார்த்தைகள்

மனசுக்குள் ஒலித்தது.


இந்த memes உலகில்,

கவுண்டமணி

ஒட்டக்கண்ணாடி போட்டுக்கிட்டு

எப்படி தைரியமா நிக்கறியோ

ன்னு

ரஜினிகாந்த் கேட்பார் இல்லையா…

அந்த மாதிரி

நானே எனக்கே

“நீ ரொம்ப தைரியசாலி”

ன்னு சொல்லிக்கிட்டு

சிரிச்சுக்கிட்டேன்.


அந்த நேரம்

கடைக்குள்

“அலையே அலையே

காட்டுல மழையே…”

ஒலித்தது.

“என் மூச்சவள்

பேச்சவள்

பேர் சொல்லும் அழகவள்

எனக்குள்ள கலக்குற

ஆக்ஸிஜன் அளவவள்…”

என்னை அறியாமலே

பாட ஆரம்பிச்சேன்.

“Super bro!”

ன்னு அந்த கடை தம்பி சொன்னான்.

இந்த முறை

“Sir” இல்ல.

“Bro”.

அந்த ஒரு வார்த்தை

இந்த வெள்ளி இரவை

முழுமையாக்கியது.

இப்படித்தான்

கடந்து போனது

ஒரு வெள்ளி இரவு.


#TeaTalkies

#FridayNight

#ChennaiNights

#OMRDiaries

திங்கள், 2 பிப்ரவரி, 2026

மெட்ராஸ் டயரி: விசிலில் தொடங்கும் விடியல்

 மெட்ராஸ் டயரி: விசிலில் தொடங்கும் விடியல் 



​தை குளிர் தரையைப் பிளக்கிறதோ இல்லையோ, நடுத்தர வர்க்கத்தின் கனவுகளைப் பிளந்து கொண்டு சூரியன் வந்துவிட்டான்.


​குக்கர் புராணம்

சென்னையில் கோழிகள் கூவுவதில்லை; குக்கர்கள்தான் அலறுகின்றன. அடுப்பு ஊதி, சோறு பொங்கி, டிபன் பாக்ஸில் அடைத்து... ஒரு வழியாகக் கணவனையும் பிள்ளைகளையும் 'ஷிப்மென்ட்' செய்துவிட்டுதான் அந்தப் பெண்களுக்குப் பொழுது விடிகிறது.


​ஒத்திகை பார்க்கும் முதுகுகள்


பள்ளிப் பைகள்... அது பையல்ல, குழந்தைகளின் எதிர்காலச் சுமைக்கான பயிற்சி முகாம். பிற்காலத்தில் குடும்ப பாரத்தைத் தாங்கப் போகும் முதுகுகளுக்கு இப்போதே 'ஹெவி வெயிட்' டிரெய்னிங் கொடுக்கிறது இந்தச் சமூகம். அந்தப் பிஞ்சு முதுகுகளில் தெரிவது புத்தகங்கள் அல்ல, நம் தோல்விகளின் பாரம்.


​அட்டைப்பூச்சிகளும் அனிச்சைச் செயல்களும்


அரசுப் பேருந்துகளில் நடுத்தர வர்க்கப் பெண்களின் பயணம் ஒரு யுத்தம். கூட்டத்தைச் சாக்காக்கி உரசிப் பார்க்கும் அந்த அட்டைப்பூச்சிகளைச் சபித்துக் கொண்டே, "நாளை விடியும்" என்கிற போலி நம்பிக்கையைத் துணையாகக் கொண்டு நகர்கிறார்கள். அந்தத் தீண்டல்களைக் கடந்து அலுவலகம் செல்வதே ஒரு சாதனைதான்.


​EMI எலைட்கள்


EMI-ல் கார் வாங்கிவிட்டு, அடுத்த மாதம் தவணை கட்ட முடியுமா என்ற கவலையை மறைக்கக் கண்ணாடி ஏற்றி ஏசி போட்டுக்கொண்டு, சாலையில் பைக்கில் போவோரை 'கிள்ளுக்கீரையாய்' பார்க்கும் ஜந்துக்கள் இவர்கள். ரோடு சரியில்லை என்று அரசாங்கத்தைத் திட்டிவிட்டு, தான் ஏதோ அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் பயணிப்பதாக ஒரு மாயையில் இருக்கும் 'குளோபல்' குடிமகன்கள்.


​சாமான்யர்களின் சாலை யுத்தம்


இன்னொரு பக்கம் ஷேர் ஆட்டோக்களில் முட்டி மோதிப் பயணிக்கும் நடுத்தர வர்க்கம். சாதாரண ஆட்டோக்களில் மீட்டர் போடுவதைப் பற்றிப் பேசிப் பேசிப் பயனும் இல்லை... ஒரு தொகையை பேரம் பேசி, அதில் ஆட்டோக்காரருக்கும் திருப்தி இருக்காது, ஏறிய பயணிக்கும் மன நிறைவு இருக்காது; இருவருக்குள்ளும் ஒரு 'அமைதிப் படை' போர் நடந்து கொண்டே இருக்கும். இனி 'கேப்' (Cab) எடுத்தால் நிம்மதி கிடைக்குமா என்றால், ஆப் காட்டும் தொகைக்கு மேல் 'ஒரு அம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா' கொடுத்தால் தான் வண்டி நகரும் என அடம் பிடிக்கும் டிரைவர்கள். இவர்கள்தான் நம் நாட்டின் உண்மையான அன்றாட அடையாளங்கள்!


​யார் அந்த 'ஆள்'?


"நம்மைப் பற்றி எல்லாம் யார் எழுதப் போகிறார்கள்?" என்று தங்களைத் தாங்களே தாழ்வாக நினைக்கும் இந்தச் சாதாரண மனிதர்களை, ஒரு கேமராவின் துல்லியத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன்.

​அவன் இந்தப் பிரபஞ்சத்தின் சாட்சி.

அவன் தான் நான்.

​அன்புடன்,

ராஜா. க

 மெட்ராஸ் டயரி: விசிலில் தொடங்கும் விடியல் 



​தை குளிர் தரையைப் பிளக்கிறதோ இல்லையோ, நடுத்தர வர்க்கத்தின் கனவுகளைப் பிளந்து கொண்டு சூரியன் வந்துவிட்டான்.


​குக்கர் புராணம்

சென்னையில் கோழிகள் கூவுவதில்லை; குக்கர்கள்தான் அலறுகின்றன. அடுப்பு ஊதி, சோறு பொங்கி, டிபன் பாக்ஸில் அடைத்து... ஒரு வழியாகக் கணவனையும் பிள்ளைகளையும் 'ஷிப்மென்ட்' செய்துவிட்டுதான் அந்தப் பெண்களுக்குப் பொழுது விடிகிறது.


​ஒத்திகை பார்க்கும் முதுகுகள்


பள்ளிப் பைகள்... அது பையல்ல, குழந்தைகளின் எதிர்காலச் சுமைக்கான பயிற்சி முகாம். பிற்காலத்தில் குடும்ப பாரத்தைத் தாங்கப் போகும் முதுகுகளுக்கு இப்போதே 'ஹெவி வெயிட்' டிரெய்னிங் கொடுக்கிறது இந்தச் சமூகம். அந்தப் பிஞ்சு முதுகுகளில் தெரிவது புத்தகங்கள் அல்ல, நம் தோல்விகளின் பாரம்.


​அட்டைப்பூச்சிகளும் அனிச்சைச் செயல்களும்


அரசுப் பேருந்துகளில் நடுத்தர வர்க்கப் பெண்களின் பயணம் ஒரு யுத்தம். கூட்டத்தைச் சாக்காக்கி உரசிப் பார்க்கும் அந்த அட்டைப்பூச்சிகளைச் சபித்துக் கொண்டே, "நாளை விடியும்" என்கிற போலி நம்பிக்கையைத் துணையாகக் கொண்டு நகர்கிறார்கள். அந்தத் தீண்டல்களைக் கடந்து அலுவலகம் செல்வதே ஒரு சாதனைதான்.


​EMI எலைட்கள்


EMI-ல் கார் வாங்கிவிட்டு, அடுத்த மாதம் தவணை கட்ட முடியுமா என்ற கவலையை மறைக்கக் கண்ணாடி ஏற்றி ஏசி போட்டுக்கொண்டு, சாலையில் பைக்கில் போவோரை 'கிள்ளுக்கீரையாய்' பார்க்கும் ஜந்துக்கள் இவர்கள். ரோடு சரியில்லை என்று அரசாங்கத்தைத் திட்டிவிட்டு, தான் ஏதோ அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் பயணிப்பதாக ஒரு மாயையில் இருக்கும் 'குளோபல்' குடிமகன்கள்.


​சாமான்யர்களின் சாலை யுத்தம்


இன்னொரு பக்கம் ஷேர் ஆட்டோக்களில் முட்டி மோதிப் பயணிக்கும் நடுத்தர வர்க்கம். சாதாரண ஆட்டோக்களில் மீட்டர் போடுவதைப் பற்றிப் பேசிப் பேசிப் பயனும் இல்லை... ஒரு தொகையை பேரம் பேசி, அதில் ஆட்டோக்காரருக்கும் திருப்தி இருக்காது, ஏறிய பயணிக்கும் மன நிறைவு இருக்காது; இருவருக்குள்ளும் ஒரு 'அமைதிப் படை' போர் நடந்து கொண்டே இருக்கும். இனி 'கேப்' (Cab) எடுத்தால் நிம்மதி கிடைக்குமா என்றால், ஆப் காட்டும் தொகைக்கு மேல் 'ஒரு அம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா' கொடுத்தால் தான் வண்டி நகரும் என அடம் பிடிக்கும் டிரைவர்கள். இவர்கள்தான் நம் நாட்டின் உண்மையான அன்றாட அடையாளங்கள்!


​யார் அந்த 'ஆள்'?


"நம்மைப் பற்றி எல்லாம் யார் எழுதப் போகிறார்கள்?" என்று தங்களைத் தாங்களே தாழ்வாக நினைக்கும் இந்தச் சாதாரண மனிதர்களை, ஒரு கேமராவின் துல்லியத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன்.

​அவன் இந்தப் பிரபஞ்சத்தின் சாட்சி.

அவன் தான் நான்.

​அன்புடன்,

ராஜா. க

வியாழன், 15 ஜனவரி, 2026

பொங்கல் கொண்டாட்டங்கள்: அன்பின் பிணைப்பா? அல்லது அதிகாரமா?

 



​சமூக வலைதளங்களில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் 82 வயது மாமனார் கரும்பு சுமக்கிறார், ஆந்திராவில் மாமியார் 155 பதார்த்தங்கள் செய்கிறார்; இது பெண்ணை விட ஆண் உயர்ந்தவர் என்ற நிலையை உறுதிப்படுத்துகிறது" என்பது அந்த வாதத்தின் சுருக்கம்.

​ஆனால், என் பார்வை வேறு. உறவுகளுக்குள் இருக்கும் "பாசம்" மற்றும் "கடமை" ஆகியவற்றை வெறும் ஆதிக்கக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது ஒரு மிகப்பெரிய தவறு.

​பாசம் என்பது சௌகரியம் பார்ப்பதல்ல

​82 வயதில் ஒரு முதியவர் கரும்பு சுமப்பதும், ஒரு தாய் 150-க்கும் மேற்பட்ட பதார்த்தங்களைச் செய்வதும் யாருடைய கட்டாயத்தினாலோ அல்லது ஒருவரை உயர்ந்தவராகக் காட்டவோ செய்யப்படுவதல்ல. அவை அன்பின் வெளிப்பாடுகள். உறவுகளுக்குள் இருக்கும் இந்த நெகிழ்ச்சிதான் இந்தியக் குடும்ப அமைப்பின் அஸ்திவாரம். இதை 'ஆணுக்குச் சௌகரியம், பெண்ணுக்கு அசௌகரியம்' என்று 'Normalize' செய்வது உறவுகளின் புனிதத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.

​பணத்தைத் தாண்டிய ஒரு உலகம்

​உலகமயமாக்கலுக்குப் பிறகு (Globalization), உலகம் முழுவதிலும் மனிதர்கள் "பணம்" என்ற ஒன்றை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாசம், நேசம் மற்றும் விசுவாசம் ஆகியவை குறைந்து வரும் வேளையில், இந்தியப் பண்டிகைகள் இன்றும் அந்த மதிப்பீடுகளை உயிர்ப்போடு வைத்துள்ளன. மற்ற நாடுகள் நம் இந்தியக் குடும்ப அமைப்பைப் பார்த்து வியப்பதற்குக் காரணமே இதுபோன்ற விட்டுக்கொடுத்தல்களும், ஒருவருக்கொருவர் காட்டும் அளப்பரிய பிரியமும்தான்.

​குடும்பச் சங்கிலியின் பலம்

​மேற்கத்திய நாடுகள் தனிமனிதவாதத்தால் (Individualism) சிதைந்து வரும் வேளையில், இந்தியக் குடும்பச் சங்கிலியை அறுந்துவிடாமல் பிடிப்புடன் வைத்திருப்பது இதுபோன்ற தருணங்கள்தான். அன்பால் செய்யப்படும் செயல்களை 'அடிமைத்தனம்' என்று முத்திரை குத்துவது ஆபத்தானது.

​உண்மையில், இதுபோன்ற ஆழமான அன்பைக் குடும்பத்தினரிடம் இருந்து அனுபவிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களே இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பணம் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது, அது "அன்பு" என்பதை இந்தப் பொங்கல் பண்டிகை மீண்டும் நிரூபித்துள்ளது.


அன்புடன் 

ராஜா.க 

 



​சமூக வலைதளங்களில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் 82 வயது மாமனார் கரும்பு சுமக்கிறார், ஆந்திராவில் மாமியார் 155 பதார்த்தங்கள் செய்கிறார்; இது பெண்ணை விட ஆண் உயர்ந்தவர் என்ற நிலையை உறுதிப்படுத்துகிறது" என்பது அந்த வாதத்தின் சுருக்கம்.

​ஆனால், என் பார்வை வேறு. உறவுகளுக்குள் இருக்கும் "பாசம்" மற்றும் "கடமை" ஆகியவற்றை வெறும் ஆதிக்கக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது ஒரு மிகப்பெரிய தவறு.

​பாசம் என்பது சௌகரியம் பார்ப்பதல்ல

​82 வயதில் ஒரு முதியவர் கரும்பு சுமப்பதும், ஒரு தாய் 150-க்கும் மேற்பட்ட பதார்த்தங்களைச் செய்வதும் யாருடைய கட்டாயத்தினாலோ அல்லது ஒருவரை உயர்ந்தவராகக் காட்டவோ செய்யப்படுவதல்ல. அவை அன்பின் வெளிப்பாடுகள். உறவுகளுக்குள் இருக்கும் இந்த நெகிழ்ச்சிதான் இந்தியக் குடும்ப அமைப்பின் அஸ்திவாரம். இதை 'ஆணுக்குச் சௌகரியம், பெண்ணுக்கு அசௌகரியம்' என்று 'Normalize' செய்வது உறவுகளின் புனிதத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.

​பணத்தைத் தாண்டிய ஒரு உலகம்

​உலகமயமாக்கலுக்குப் பிறகு (Globalization), உலகம் முழுவதிலும் மனிதர்கள் "பணம்" என்ற ஒன்றை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாசம், நேசம் மற்றும் விசுவாசம் ஆகியவை குறைந்து வரும் வேளையில், இந்தியப் பண்டிகைகள் இன்றும் அந்த மதிப்பீடுகளை உயிர்ப்போடு வைத்துள்ளன. மற்ற நாடுகள் நம் இந்தியக் குடும்ப அமைப்பைப் பார்த்து வியப்பதற்குக் காரணமே இதுபோன்ற விட்டுக்கொடுத்தல்களும், ஒருவருக்கொருவர் காட்டும் அளப்பரிய பிரியமும்தான்.

​குடும்பச் சங்கிலியின் பலம்

​மேற்கத்திய நாடுகள் தனிமனிதவாதத்தால் (Individualism) சிதைந்து வரும் வேளையில், இந்தியக் குடும்பச் சங்கிலியை அறுந்துவிடாமல் பிடிப்புடன் வைத்திருப்பது இதுபோன்ற தருணங்கள்தான். அன்பால் செய்யப்படும் செயல்களை 'அடிமைத்தனம்' என்று முத்திரை குத்துவது ஆபத்தானது.

​உண்மையில், இதுபோன்ற ஆழமான அன்பைக் குடும்பத்தினரிடம் இருந்து அனுபவிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களே இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பணம் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது, அது "அன்பு" என்பதை இந்தப் பொங்கல் பண்டிகை மீண்டும் நிரூபித்துள்ளது.


அன்புடன் 

ராஜா.க 

The Essence of Pongal: A Celebration of Bond or a Sign of Inequality?

 




​A debate has been trending on social media recently regarding the traditional ways we celebrate festivals. One side argues that an 82-year-old father-in-law carrying a heavy bundle of sugarcane on his bicycle for 17 kilometers, or a mother-in-law preparing 155 varieties of dishes for Makar Sankranti, are symbols of gender inequality—suggesting that women are being conditioned to serve and provide comfort to men.

​However, I view this through a different lens. Viewing "affection" and "familial duty" solely through the prism of power dynamics is, in my opinion, a significant misunderstanding of the Indian family fabric.

​1. Affection Knows No Convenience

​When an elderly man carries sugarcane or a mother spends hours preparing a grand feast, it isn't out of compulsion or to establish a hierarchy. These are profound expressions of unconditional love. This inherent flexibility and sacrifice within relationships are the very foundations of the Indian family system. To "normalize" these acts as mere "comfort for men and discomfort for women" is to diminish the sacredness of human bonds.

​2. A World Beyond Money

​In this era of globalization, the world is racing toward "materialism" and "individualism." While loyalty, love, and devotion are fading in many cultures, Indian festivals keep these values alive. Many nations look at the Indian family structure with awe because of this very spirit of giving and the immense love we have for one another. These are treasures that money simply cannot buy.

​3. The Strength of the Family Chain

​While Western societies are often struggling with the side effects of extreme individualism, the "chain" that holds Indian families together is made of these very moments of selfless effort. Labeling acts of love as "slavery" or "inequality" is a dangerous trend.

​Conclusion

​In reality, those who criticize these traditions often do so because they haven't experienced the warmth of such a deep-rooted family support system. This Pongal has once again proven that there is a world that exists far beyond financial gain—a world built on love and gratitude.


What is that one selfless thing your elders do during festivals that makes you feel loved? Share your favorite family Pongal memories with me!


Regards

Raja K.S



 




​A debate has been trending on social media recently regarding the traditional ways we celebrate festivals. One side argues that an 82-year-old father-in-law carrying a heavy bundle of sugarcane on his bicycle for 17 kilometers, or a mother-in-law preparing 155 varieties of dishes for Makar Sankranti, are symbols of gender inequality—suggesting that women are being conditioned to serve and provide comfort to men.

​However, I view this through a different lens. Viewing "affection" and "familial duty" solely through the prism of power dynamics is, in my opinion, a significant misunderstanding of the Indian family fabric.

​1. Affection Knows No Convenience

​When an elderly man carries sugarcane or a mother spends hours preparing a grand feast, it isn't out of compulsion or to establish a hierarchy. These are profound expressions of unconditional love. This inherent flexibility and sacrifice within relationships are the very foundations of the Indian family system. To "normalize" these acts as mere "comfort for men and discomfort for women" is to diminish the sacredness of human bonds.

​2. A World Beyond Money

​In this era of globalization, the world is racing toward "materialism" and "individualism." While loyalty, love, and devotion are fading in many cultures, Indian festivals keep these values alive. Many nations look at the Indian family structure with awe because of this very spirit of giving and the immense love we have for one another. These are treasures that money simply cannot buy.

​3. The Strength of the Family Chain

​While Western societies are often struggling with the side effects of extreme individualism, the "chain" that holds Indian families together is made of these very moments of selfless effort. Labeling acts of love as "slavery" or "inequality" is a dangerous trend.

​Conclusion

​In reality, those who criticize these traditions often do so because they haven't experienced the warmth of such a deep-rooted family support system. This Pongal has once again proven that there is a world that exists far beyond financial gain—a world built on love and gratitude.


What is that one selfless thing your elders do during festivals that makes you feel loved? Share your favorite family Pongal memories with me!


Regards

Raja K.S



செவ்வாய், 30 டிசம்பர், 2025

Vaikunda Ekadasi and the Fall of a President:

 

​Vaikunda Ekadasi and the Fall of a President: A Journey Through Memory

​Date: December 30

Category: Memoirs / History / Spirituality

​That Early Morning: December 30, 2006

​The calendar marked December 30—the auspicious day of Vaikunda Ekadasi. It was an era before smartphones dominated our lives, a time when we didn't wake up to WhatsApp notifications but to the glow of the television screen for world news. On that particular morning, however, the news flashing across the screen wasn't just another headline; it signaled the end of an era.

​The Fall of a Titan

​The world was reeling from the news regarding the former President of Iraq, Saddam Hussein. From what I had gathered through my reading at the time, he was a formidable administrator and a steadfast friend to India. His "Oil-for-Food" program, which fostered a deep bond with our nation, remains a significant chapter in diplomatic history.

​After the defeat in the war against America and a long period of imprisonment, the news of his execution came at a moment few truly expected. A massive chapter of history had reached its conclusion at the end of a rope.

​Words from a Mentor

​I shared the shock of this news with my college professor that day. We discussed at length the life, the power, and the eventual downfall of the Iraqi leader. As our conversation drew to a close, he uttered a sentence that has echoed in my mind ever since:

​"Today is Vaikunda Ekadasi... the day Vaikundam welcomes even those who opposed it."

(In Tamil: "வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்!")

​There is a profound philosophy hidden in those words. The world may judge a man by his actions, politics, or power. However, the compassion of the Almighty is boundless. Vaikunda Ekadasi is believed to be the day the gates of heaven (Paramapada Vaasal) open—a day of ultimate grace that transcends human judgment.

​Conclusion: The Account of Time

​Beyond politics, wars, and the struggle for power, there exists a space where every soul seeks ultimate peace. Reflecting on the fact that Saddam Hussein’s life ended on this sacred day, I choose to believe—as my professor did—that he too found solace in the shadows of that divine grace.

​Time has a strange way of intertwining events. On one side, deep devotion; on the other, global geopolitics. The intersection of these two on that December 30th remains an unforgettable memory in my life.

​Suggested Social Media Caption (for X/Twitter or Facebook):

​"December 30, 2006: A day of spiritual significance and a historic political end. Remembering the Vaikunda Ekadasi when the world watched the departure of Saddam Hussein. A reflection on grace, history, and the words of a mentor. 🕊️🏛️ 

#VaikundaEkadasi #SaddamHussein #Memories #History


 

​Vaikunda Ekadasi and the Fall of a President: A Journey Through Memory

​Date: December 30

Category: Memoirs / History / Spirituality

​That Early Morning: December 30, 2006

​The calendar marked December 30—the auspicious day of Vaikunda Ekadasi. It was an era before smartphones dominated our lives, a time when we didn't wake up to WhatsApp notifications but to the glow of the television screen for world news. On that particular morning, however, the news flashing across the screen wasn't just another headline; it signaled the end of an era.

​The Fall of a Titan

​The world was reeling from the news regarding the former President of Iraq, Saddam Hussein. From what I had gathered through my reading at the time, he was a formidable administrator and a steadfast friend to India. His "Oil-for-Food" program, which fostered a deep bond with our nation, remains a significant chapter in diplomatic history.

​After the defeat in the war against America and a long period of imprisonment, the news of his execution came at a moment few truly expected. A massive chapter of history had reached its conclusion at the end of a rope.

​Words from a Mentor

​I shared the shock of this news with my college professor that day. We discussed at length the life, the power, and the eventual downfall of the Iraqi leader. As our conversation drew to a close, he uttered a sentence that has echoed in my mind ever since:

​"Today is Vaikunda Ekadasi... the day Vaikundam welcomes even those who opposed it."

(In Tamil: "வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்!")

​There is a profound philosophy hidden in those words. The world may judge a man by his actions, politics, or power. However, the compassion of the Almighty is boundless. Vaikunda Ekadasi is believed to be the day the gates of heaven (Paramapada Vaasal) open—a day of ultimate grace that transcends human judgment.

​Conclusion: The Account of Time

​Beyond politics, wars, and the struggle for power, there exists a space where every soul seeks ultimate peace. Reflecting on the fact that Saddam Hussein’s life ended on this sacred day, I choose to believe—as my professor did—that he too found solace in the shadows of that divine grace.

​Time has a strange way of intertwining events. On one side, deep devotion; on the other, global geopolitics. The intersection of these two on that December 30th remains an unforgettable memory in my life.

​Suggested Social Media Caption (for X/Twitter or Facebook):

​"December 30, 2006: A day of spiritual significance and a historic political end. Remembering the Vaikunda Ekadasi when the world watched the departure of Saddam Hussein. A reflection on grace, history, and the words of a mentor. 🕊️🏛️ 

#VaikundaEkadasi #SaddamHussein #Memories #History


வைகுண்ட ஏகாதசியும்... ஒரு தேச அதிபரின் முடிவும்:

 வைகுண்ட ஏகாதசியும்... ஒரு தேச அதிபரின் முடிவும்:


ஓர் உணர்வுப் பயணம்

​தேதி: டிசம்பர் 30

பிரிவு: நினைவலைகள் / வரலாறு / ஆன்மீகம்

​அந்த அதிகாலைப் பொழுது: டிசம்பர் 30, 2006

​காலண்டரில் டிசம்பர் 30. அன்று வைகுண்ட ஏகாதசி. இன்று போல் கைகளில் மொபைல் போன்கள் ஆதிக்கம் செலுத்தாத, வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்கள் இல்லாத அமைதியான காலம் அது. அதிகாலையில் கண் விழித்ததும் அன்றைய உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள தொலைக்காட்சியையே தஞ்சமடைந்திருந்தோம். ஆனால், அன்று திரையில் ஓடிய செய்தி ஒரு சாதாரணச் செய்தி அல்ல; அது ஒரு யுகத்தின் முடிவைப் பறைசாற்றியது.

​ஒரு தலைவரின் வீழ்ச்சி

​ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன் பற்றிய தலைப்புச் செய்திகள் உலகம் முழுவதையும் உலுக்கிக் கொண்டிருந்தன. எனக்கு இருந்த வாசிப்பு அறிவில், அவர் ஒரு இரும்புக்கரம் கொண்ட நிர்வாகியாகவும், இந்தியாவின் நெருங்கிய நண்பராகவும் தெரிந்தவர். 'எண்ணெய்க்கு உணவு' (Oil-for-Food) திட்டம் மூலம் இந்தியாவுடன் அவர் கொண்டிருந்த ஆழமான உறவு இன்றும் நினைவுகூரத்தக்கது.

​அமெரிக்காவுடனான போரில் தோல்வி, நீண்ட சிறைவாசம் எனப் பல சோதனைகளுக்குப் பிறகு, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவர் தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானது. ஒரு மாபெரும் சரித்திரம், ஒரு கயிற்றின் நுனியில் முடிவுக்கு வந்திருந்தது.

​ஆசிரியரின் அந்த ஒரு வார்த்தை

​இந்தச் செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சியை, அன்று எனது கல்லூரி ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டேன். அந்தத் தலைவரின் வாழ்வையும் வீழ்ச்சியையும் பற்றி நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம். உரையாடலின் இறுதியில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது:

​"இன்று வைகுண்ட ஏகாதசி... வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்!"

​அந்த வார்த்தைகளில் எத்தனை பெரிய தத்துவம் ஒளிந்திருக்கிறது! மனிதர்கள் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் எடை போடலாம், அவரது செயல்களை விமர்சிக்கலாம். ஆனால், அந்தப் பரம்பொருளின் கருணை எல்லைகளற்றது. தன்னைத் திட்டியவர்களுக்கும் (வைதார்), எதிர்த்தவர்களுக்கும் கூட மோட்சம் அளிக்கும் கதவுகள் திறந்திருக்கும் நாள் அது.

​முடிவுரை: காலத்தின் கணக்கு

​அரசியல், போர், அதிகாரம் என அனைத்தையும் கடந்து, ஒரு மனிதனின் ஆன்மா இறுதி அமைதி கொள்ளும் இடமாக வைகுண்டம் இருக்கிறது. அந்தப் புனிதமான ஏகாதசி நாளில், சொர்க்க வாசல் திறந்திருக்கும் வேளையில், சதாம் உசைனின் உயிர் பிரிந்ததை நினைக்கும் போது, என் ஆசிரியரின் கூற்றுப்படி அவரும் அந்தப் பெருங்கருணையின் நிழலில் அமைதி கொண்டிருப்பார் என்றே நானும் நம்புகிறேன்.

​காலம் சில நிகழ்வுகளை விசித்திரமாக இணைக்கிறது. ஒருபுறம் பக்தி, மறுபுறம் உலக அரசியல் - இவ்விரண்டையும் இணைத்த அந்த டிசம்பர் 30 என்றும் என் நினைவில் அழியாது.

 வைகுண்ட ஏகாதசியும்... ஒரு தேச அதிபரின் முடிவும்:


ஓர் உணர்வுப் பயணம்

​தேதி: டிசம்பர் 30

பிரிவு: நினைவலைகள் / வரலாறு / ஆன்மீகம்

​அந்த அதிகாலைப் பொழுது: டிசம்பர் 30, 2006

​காலண்டரில் டிசம்பர் 30. அன்று வைகுண்ட ஏகாதசி. இன்று போல் கைகளில் மொபைல் போன்கள் ஆதிக்கம் செலுத்தாத, வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்கள் இல்லாத அமைதியான காலம் அது. அதிகாலையில் கண் விழித்ததும் அன்றைய உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள தொலைக்காட்சியையே தஞ்சமடைந்திருந்தோம். ஆனால், அன்று திரையில் ஓடிய செய்தி ஒரு சாதாரணச் செய்தி அல்ல; அது ஒரு யுகத்தின் முடிவைப் பறைசாற்றியது.

​ஒரு தலைவரின் வீழ்ச்சி

​ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன் பற்றிய தலைப்புச் செய்திகள் உலகம் முழுவதையும் உலுக்கிக் கொண்டிருந்தன. எனக்கு இருந்த வாசிப்பு அறிவில், அவர் ஒரு இரும்புக்கரம் கொண்ட நிர்வாகியாகவும், இந்தியாவின் நெருங்கிய நண்பராகவும் தெரிந்தவர். 'எண்ணெய்க்கு உணவு' (Oil-for-Food) திட்டம் மூலம் இந்தியாவுடன் அவர் கொண்டிருந்த ஆழமான உறவு இன்றும் நினைவுகூரத்தக்கது.

​அமெரிக்காவுடனான போரில் தோல்வி, நீண்ட சிறைவாசம் எனப் பல சோதனைகளுக்குப் பிறகு, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவர் தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானது. ஒரு மாபெரும் சரித்திரம், ஒரு கயிற்றின் நுனியில் முடிவுக்கு வந்திருந்தது.

​ஆசிரியரின் அந்த ஒரு வார்த்தை

​இந்தச் செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சியை, அன்று எனது கல்லூரி ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டேன். அந்தத் தலைவரின் வாழ்வையும் வீழ்ச்சியையும் பற்றி நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம். உரையாடலின் இறுதியில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது:

​"இன்று வைகுண்ட ஏகாதசி... வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்!"

​அந்த வார்த்தைகளில் எத்தனை பெரிய தத்துவம் ஒளிந்திருக்கிறது! மனிதர்கள் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் எடை போடலாம், அவரது செயல்களை விமர்சிக்கலாம். ஆனால், அந்தப் பரம்பொருளின் கருணை எல்லைகளற்றது. தன்னைத் திட்டியவர்களுக்கும் (வைதார்), எதிர்த்தவர்களுக்கும் கூட மோட்சம் அளிக்கும் கதவுகள் திறந்திருக்கும் நாள் அது.

​முடிவுரை: காலத்தின் கணக்கு

​அரசியல், போர், அதிகாரம் என அனைத்தையும் கடந்து, ஒரு மனிதனின் ஆன்மா இறுதி அமைதி கொள்ளும் இடமாக வைகுண்டம் இருக்கிறது. அந்தப் புனிதமான ஏகாதசி நாளில், சொர்க்க வாசல் திறந்திருக்கும் வேளையில், சதாம் உசைனின் உயிர் பிரிந்ததை நினைக்கும் போது, என் ஆசிரியரின் கூற்றுப்படி அவரும் அந்தப் பெருங்கருணையின் நிழலில் அமைதி கொண்டிருப்பார் என்றே நானும் நம்புகிறேன்.

​காலம் சில நிகழ்வுகளை விசித்திரமாக இணைக்கிறது. ஒருபுறம் பக்தி, மறுபுறம் உலக அரசியல் - இவ்விரண்டையும் இணைத்த அந்த டிசம்பர் 30 என்றும் என் நினைவில் அழியாது.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

​என் தந்தை தந்த சினிமா காதலும்... இயக்குநர் சிகரத்தின் காலத்தால் அழியாத படைப்புகளும்!

 இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்: கலைத்தாய் ஈன்றெடுத்த படைப்பாளி!


இன்று (டிசம்பர் 23), தமிழ் திரையுலகின் ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர் அவர்களின் நினைவு நாள். அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் உருவாக்கிய காவியங்கள் இன்றும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவரைப் பற்றிய எனது ஒரு சிறிய பகிர்வு இது.

​தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் வந்து சென்றிருக்கலாம். ஆனால், ஒரு இயக்குநருக்காகவே திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கும் ஒரு பெரும் 'ரசிகர் பட்டாளத்தை' உருவாக்கிய பெருமை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களையே சாரும்.

​தந்தை தந்த சினிமா பொக்கிஷம்

​பலருக்குச் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு. ஆனால், எனக்கு அது ஒரு வாழ்வியல் பாடமாக மாறியதற்கு என் தந்தைதான் காரணம். அவர் அறிமுகப்படுத்திய பாலசந்தரின் படங்கள், சினிமா மீதான எனது காதலை இன்னும் விஸ்தாரமாக்கின. ஒரு தந்தை தன் மகனுக்குச் சொத்துக்களைக் கடத்துவதை விட, ஒரு நல்ல ரசனையைக் கடத்துவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை இன்று நான் உணர்கிறேன்.

​ரசித்த படைப்புகள்: நூறு என்பது வெறும் எண்ணிக்கையல்ல

​பாலசந்தரின் நூறாவது படம் வரை பார்த்த ரசிகர்களுக்குத் தெரியும், அது வெறும் திரையனுபவம் அல்ல, அது ஒரு பரவசம்.

​பூவா தலையா, பாமா விஜயம் போன்ற படங்களில் நகைச்சுவையை நுணுக்கமாகக் கையாண்ட விதம்.

​அருங்கேற்றம், தப்பு தாளங்கள், இரு கோடுகள் ஆகியவற்றில் சமூகக் கட்டமைப்பு உடைத்த துணிச்சல்.

​மன்மத லீலை, புது புது அர்த்தங்கள், டூயட், கல்கி என உறவுகளின் சிக்கல்களையும், அதன் பின்னால் இருக்கும் ஆழமான உணர்வுகளையும் அவர் கையாண்ட விதம் ஈடுஇணையற்றது.

​இந்த ரசனைப் பயணத்தை நான் இன்று அடுத்த தலைமுறைக்கும் கடத்தத் தொடங்கிவிட்டேன். 'பாமா விஜயம்' படத்தின் மூலம் என் வாரிசுகளுக்கும் பாலசந்தரின் உலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பது எனக்குப் பெருமிதம் அளிக்கிறது.

​கலையுலகிற்கு அவர் அளித்த கொடைகள்

​பாலசந்தர் ஒரு தனிநபர் அல்ல; அவர் ஒரு கலைப் பல்கலைக்கழகம். அவர் தமிழுக்குத் தந்த வைரங்கள் ஏராளம்:

​நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன்.

​இசை: ஏ.ஆர். ரகுமான் (மின்னல்), மரகதமணி (கீரவாணி).

​நகைச்சுவை & நடனம்: சின்னக்கலைவாணர் விவேக் மற்றும் ராம்ஜி, ராகவா லாரன்ஸ்.

​இயக்கம்: வசந்த், சரண், சமுத்திரக்கனி போன்ற திறமையான இயக்குநர்கள்.

​இப்படித் திரைத்துறையின் ஒவ்வொரு அங்கத்திலும் தன் முத்திரையைப் பதித்த ஆளுமைகளை உருவாக்கிய சிற்பி அவர்.

​பாலசந்தர் மறைந்தாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் வழியாகவும், அவர் வளர்த்தெடுத்த கலை வாரிசுகள் வழியாகவும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என் தந்தையிடம் தொடங்கி, என்னைக் கடந்து, என் பிள்ளைகள் வரை அந்த ‘சிகரத்தின்’ நிழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

​உங்கள் தந்தை உங்களுக்குச் செய்த அந்தப் பெரிய உதவியைப் போலவே, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பாலசந்தரின் படங்களைக் காட்டி வளர்ப்பது மிகச் சிறந்த விஷயம்.


இவன்

ராஜா. க





 இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்: கலைத்தாய் ஈன்றெடுத்த படைப்பாளி!


இன்று (டிசம்பர் 23), தமிழ் திரையுலகின் ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர் அவர்களின் நினைவு நாள். அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் உருவாக்கிய காவியங்கள் இன்றும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவரைப் பற்றிய எனது ஒரு சிறிய பகிர்வு இது.

​தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் வந்து சென்றிருக்கலாம். ஆனால், ஒரு இயக்குநருக்காகவே திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கும் ஒரு பெரும் 'ரசிகர் பட்டாளத்தை' உருவாக்கிய பெருமை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களையே சாரும்.

​தந்தை தந்த சினிமா பொக்கிஷம்

​பலருக்குச் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு. ஆனால், எனக்கு அது ஒரு வாழ்வியல் பாடமாக மாறியதற்கு என் தந்தைதான் காரணம். அவர் அறிமுகப்படுத்திய பாலசந்தரின் படங்கள், சினிமா மீதான எனது காதலை இன்னும் விஸ்தாரமாக்கின. ஒரு தந்தை தன் மகனுக்குச் சொத்துக்களைக் கடத்துவதை விட, ஒரு நல்ல ரசனையைக் கடத்துவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை இன்று நான் உணர்கிறேன்.

​ரசித்த படைப்புகள்: நூறு என்பது வெறும் எண்ணிக்கையல்ல

​பாலசந்தரின் நூறாவது படம் வரை பார்த்த ரசிகர்களுக்குத் தெரியும், அது வெறும் திரையனுபவம் அல்ல, அது ஒரு பரவசம்.

​பூவா தலையா, பாமா விஜயம் போன்ற படங்களில் நகைச்சுவையை நுணுக்கமாகக் கையாண்ட விதம்.

​அருங்கேற்றம், தப்பு தாளங்கள், இரு கோடுகள் ஆகியவற்றில் சமூகக் கட்டமைப்பு உடைத்த துணிச்சல்.

​மன்மத லீலை, புது புது அர்த்தங்கள், டூயட், கல்கி என உறவுகளின் சிக்கல்களையும், அதன் பின்னால் இருக்கும் ஆழமான உணர்வுகளையும் அவர் கையாண்ட விதம் ஈடுஇணையற்றது.

​இந்த ரசனைப் பயணத்தை நான் இன்று அடுத்த தலைமுறைக்கும் கடத்தத் தொடங்கிவிட்டேன். 'பாமா விஜயம்' படத்தின் மூலம் என் வாரிசுகளுக்கும் பாலசந்தரின் உலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பது எனக்குப் பெருமிதம் அளிக்கிறது.

​கலையுலகிற்கு அவர் அளித்த கொடைகள்

​பாலசந்தர் ஒரு தனிநபர் அல்ல; அவர் ஒரு கலைப் பல்கலைக்கழகம். அவர் தமிழுக்குத் தந்த வைரங்கள் ஏராளம்:

​நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன்.

​இசை: ஏ.ஆர். ரகுமான் (மின்னல்), மரகதமணி (கீரவாணி).

​நகைச்சுவை & நடனம்: சின்னக்கலைவாணர் விவேக் மற்றும் ராம்ஜி, ராகவா லாரன்ஸ்.

​இயக்கம்: வசந்த், சரண், சமுத்திரக்கனி போன்ற திறமையான இயக்குநர்கள்.

​இப்படித் திரைத்துறையின் ஒவ்வொரு அங்கத்திலும் தன் முத்திரையைப் பதித்த ஆளுமைகளை உருவாக்கிய சிற்பி அவர்.

​பாலசந்தர் மறைந்தாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் வழியாகவும், அவர் வளர்த்தெடுத்த கலை வாரிசுகள் வழியாகவும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என் தந்தையிடம் தொடங்கி, என்னைக் கடந்து, என் பிள்ளைகள் வரை அந்த ‘சிகரத்தின்’ நிழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

​உங்கள் தந்தை உங்களுக்குச் செய்த அந்தப் பெரிய உதவியைப் போலவே, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பாலசந்தரின் படங்களைக் காட்டி வளர்ப்பது மிகச் சிறந்த விஷயம்.


இவன்

ராஜா. க