சனி, 21 ஆகஸ்ட், 2021

சென்னை நீ என் அன்னை

 

வந்தாரை

வாழ (வைத்த,வைக்கின்ற,வைக்கும்)

சென்னை

 நீ என் அன்னை !!

சுனாமி,புயல், மழை என எத்தனை இயற்கை இடற்பாடுகள் வந்தாலும் அத்தனையும் முறியடித்து மேலும்,மேலும் வளர்கிறாய்.. 

வயது ஆக,ஆக நீ மேலும் 

அழகாகிறாய் !!! 


Devotion-Triplicane,Santhome

Shopping- T-Nagar,

Theatre- Sathyam,phoenix

Art-Mahabalipuram

Filter Coffee - West Mambalam 


382 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை 




#சென்னைதினம்


#MadrasDay2021


#சென்னைதினம்

 

வந்தாரை

வாழ (வைத்த,வைக்கின்ற,வைக்கும்)

சென்னை

 நீ என் அன்னை !!

சுனாமி,புயல், மழை என எத்தனை இயற்கை இடற்பாடுகள் வந்தாலும் அத்தனையும் முறியடித்து மேலும்,மேலும் வளர்கிறாய்.. 

வயது ஆக,ஆக நீ மேலும் 

அழகாகிறாய் !!! 


Devotion-Triplicane,Santhome

Shopping- T-Nagar,

Theatre- Sathyam,phoenix

Art-Mahabalipuram

Filter Coffee - West Mambalam 


382 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை 




#சென்னைதினம்


#MadrasDay2021


#சென்னைதினம்

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கண்களில் பட்டது


கேமரா கண்களின் வழியே பார்த்தது !!!

#WorldPhotographyDay2021









#Myclicks 



கேமரா கண்களின் வழியே பார்த்தது !!!

#WorldPhotographyDay2021









#Myclicks 


ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

பாபாவும், சுதந்திர தினமும்

 இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.


மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 


8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!


பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.


பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 


"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"


"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.


படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.


ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.


 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 


ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.


இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 


படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.


நினைவுகளுடன்

ராஜா.க


#Tamilcinema #Baba # IndependenceDay

#August #Rajini 

 இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.


மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 


8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!


பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.


பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 


"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"


"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.


படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.


ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.


 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 


ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.


இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 


படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.


நினைவுகளுடன்

ராஜா.க


#Tamilcinema #Baba # IndependenceDay

#August #Rajini 

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

விஸ்வாசமும், கொரானா வும்

 நண்பருடன் வெளியே சென்றிருந்தேன், வேலை முடித்த பின்பு எங்கு இரவு உணவிற்கு செல்லலாம் என்று கேட்க ?  குரோம்பேட்டை யில் உள்ள பாலாஜி பவன் க்கு செல்லலாமா என்றதும் நண்பரும்  அதை வழி மொழிந்தார்.


வழக்கமாக அமரும் டேபிளில் அமர, சர்வர் புன்னகையுடன் வரவேற்று பரஸ்பர விசாரிப்புக்கு பின் ஆர்டர் கொடுத்தோம்.


குரோம்பேட்டை ஒரு புதிய திநகர் போன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் ஹோட்டலில் நல்ல கூட்டம். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றது தெரிந்தது. 


நண்பரிடம்  கூறினேன் இந்த சர்வர் எனக்கு பழக்கம் நீண்ட நாட்களாக இங்கு உள்ளார் மேலும் இவர்களை போன்றவர்களை லாக்டவுண் காலத்திலும் வீட்டிக்கு அனுப்பாமல் உரிய ஊதியம் கொடுத்து தக்கவைத்து கொண்டது இந்த ஹோட்டல் நிர்வாகத்தின் வெற்றி என்று கூறினேன்.


என் கருத்திலிருந்து நண்பர் வேறுபட்டார், இவர்களுக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்திருக்க வாய்ப்பு குறைவு என்று கூறினார். கடையே திறக்காமல் எப்படி?சம்பளம் கொடுக்க முடியும் என்று கூறினார்.


எனக்கு உடன்பாடில்லை, சற்று பெரிய நிறுவனங்கள் நீண்ட  நாள் ஊழியர்கள்

 தக்க வைத்து கொள்ள சம்பளம் கொடத்திருபார்கள் என்பது என் வாதம்.


நேரடியாக ஊழியருடன் கேட்டு விட்டேன் அவரின் பதில் எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது. 

சம்பளம் கொடுக்க வில்லையாம் வேறு யாரோ சிலர் தான் இரண்டு மாதத்திற்கு உரிய மளிகை சாமான்கள் கொடுத்தார்கள் போலும்.


அவரின் பதிலும் , அவரின் குரலில் உள்ள வலியையும் வார்த்தைகளால் கூற முடியாது.


சிறு நிர்வாகமோ,

பெரிய நிர்வாகமோ, தங்கள் நலனுக்கு தான் முன்னுரிமை போலும் மற்றவர்கள் எல்லாம்.அப்புறம் தான் போல.


விஸ்வாசம் என்கிற வார்த்தை அழிந்து கொண்டு இருப்பதற்கான பின்னாள் உள்ள காரணங்கள் இது தான் போல.


தடுப்பூசி எடுத்து கொள்வோம்,

கொரனாவை ஒழிப்போம் !!


#Bhavan #Hotel #Chennai #Chrompet

#Corona


இவண் 

ராஜா.க

 நண்பருடன் வெளியே சென்றிருந்தேன், வேலை முடித்த பின்பு எங்கு இரவு உணவிற்கு செல்லலாம் என்று கேட்க ?  குரோம்பேட்டை யில் உள்ள பாலாஜி பவன் க்கு செல்லலாமா என்றதும் நண்பரும்  அதை வழி மொழிந்தார்.


வழக்கமாக அமரும் டேபிளில் அமர, சர்வர் புன்னகையுடன் வரவேற்று பரஸ்பர விசாரிப்புக்கு பின் ஆர்டர் கொடுத்தோம்.


குரோம்பேட்டை ஒரு புதிய திநகர் போன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் ஹோட்டலில் நல்ல கூட்டம். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றது தெரிந்தது. 


நண்பரிடம்  கூறினேன் இந்த சர்வர் எனக்கு பழக்கம் நீண்ட நாட்களாக இங்கு உள்ளார் மேலும் இவர்களை போன்றவர்களை லாக்டவுண் காலத்திலும் வீட்டிக்கு அனுப்பாமல் உரிய ஊதியம் கொடுத்து தக்கவைத்து கொண்டது இந்த ஹோட்டல் நிர்வாகத்தின் வெற்றி என்று கூறினேன்.


என் கருத்திலிருந்து நண்பர் வேறுபட்டார், இவர்களுக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்திருக்க வாய்ப்பு குறைவு என்று கூறினார். கடையே திறக்காமல் எப்படி?சம்பளம் கொடுக்க முடியும் என்று கூறினார்.


எனக்கு உடன்பாடில்லை, சற்று பெரிய நிறுவனங்கள் நீண்ட  நாள் ஊழியர்கள்

 தக்க வைத்து கொள்ள சம்பளம் கொடத்திருபார்கள் என்பது என் வாதம்.


நேரடியாக ஊழியருடன் கேட்டு விட்டேன் அவரின் பதில் எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது. 

சம்பளம் கொடுக்க வில்லையாம் வேறு யாரோ சிலர் தான் இரண்டு மாதத்திற்கு உரிய மளிகை சாமான்கள் கொடுத்தார்கள் போலும்.


அவரின் பதிலும் , அவரின் குரலில் உள்ள வலியையும் வார்த்தைகளால் கூற முடியாது.


சிறு நிர்வாகமோ,

பெரிய நிர்வாகமோ, தங்கள் நலனுக்கு தான் முன்னுரிமை போலும் மற்றவர்கள் எல்லாம்.அப்புறம் தான் போல.


விஸ்வாசம் என்கிற வார்த்தை அழிந்து கொண்டு இருப்பதற்கான பின்னாள் உள்ள காரணங்கள் இது தான் போல.


தடுப்பூசி எடுத்து கொள்வோம்,

கொரனாவை ஒழிப்போம் !!


#Bhavan #Hotel #Chennai #Chrompet

#Corona


இவண் 

ராஜா.க

வெள்ளி, 23 ஜூலை, 2021

என்றோ எழுதியது

 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


வியாழன், 8 ஜூலை, 2021

பழைய குற்றாலம் வரலாறு


 பழைய குற்றாலம் வரலாறு 


வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.ஒரு முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம். 


எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று.. 


சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.


#Kutrlam #History #Tourism #Tamilnadu

இவண் 

ராஜா.க


 பழைய குற்றாலம் வரலாறு 


வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.ஒரு முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம். 


எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று.. 


சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.


#Kutrlam #History #Tourism #Tamilnadu

இவண் 

ராஜா.க

தமிழ் சினிமா win குரு

 ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.



 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல. 


நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,

லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,

சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....


யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....


#KB #Balachander #Director

 ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.



 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல. 


நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,

லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,

சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....


யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....


#KB #Balachander #Director