சனி, 25 ஜூலை, 2026

சேனல் மாற்ற மனசே வராத ஒரு பாடல் – ஆளுங்குயில் கூவும் ரயில்"


 சில பாடல்கள் டிவியில் ஓடும்போது, ரிமோட் கையில் இருந்தாலும் சேனல் மாற்ற மனசே வராது.


பார்த்திபன் கனவு படத்தில் வரும் "ஆளுங்குயில் கூவும் ரயில்" அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று.


இந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம், வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் "சிப்பி இருக்குது முத்து இருக்குது" பாடலின் feel எனக்கு ஞாபகத்திற்கு வரும். அந்தப் பாடலில் ஹீரோ கமல் பேசிக்கொண்டே பாடுவார். இந்தப் பாடலில் ஹீரோயின் பாடிக்கொண்டிருக்க, ஹீரோ சில வார்த்தைகள் மட்டும் சொல்ல... அதற்கு பதிலாக கவிதை போல பாடல் வரிகள் வருவது இந்தப் பாடலின் தனி அழகு.


எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்...


திருக்குறள்...

"இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,

இருவரும் இது போல இருந்தால் சுகம்..."


இந்த வரிகள் வரும் போது, ஸ்ரீகாந்த் மெதுவாக ஸ்நேகாவிற்கு அருகில் வந்து அமரும் அந்தச் சிறிய தருணம்... பெரிய காதல் வசனங்களை விட அந்த ஒரு movement-தான் மனதில் நிற்கிறது.


"கண்ணாடி..."

"இதில் என்னைப் பார்க்கிறேன்... அது உன்னைக் காட்டுதே!"


எவ்வளவு எளிமையான வரிகள்... ஆனால் காதலை அழகாகச் சொல்லிவிடுகின்றன.


"மீசை..."

"இது எனக்கு மட்டும் சொந்தமாகும்... கூந்தல் குழந்தைதான்."


இப்படி சாதாரண வார்த்தைகளையே கவிதையாக்கி இருப்பது இந்தப் பாடலின் மிகப்பெரிய பலம்.


இந்தப் பாடலைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகுதான், கர்நாடக இசையின் காபி ராகத்தை அடிப்படையாக வைத்து இசையமைப்பாளர் வித்யாசாகர் இவ்வளவு அழகாக compose செய்திருக்கிறார் என்று அறிந்தேன். அதிலும், இறுதியில் "என்ன தவம் செய்தனாய் யசோதா" என்ற கர்நாடக இசைத் தொடுதலோடு பாடலை முடிப்பது... ஒவ்வொரு முறையும் கேட்கும்போது ஒரு தனி ஆனந்தத்தை தருகிறது.


90s kids-களின் favourite ஜோடிகளில் ஒன்றான ஸ்நேகா மற்றும் ஸ்ரீகாந்த், இந்தப் பாடலில் நடித்ததே இல்லை... வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இருவரின் இயல்பான நடிப்பு, இந்த மெலடிக்கு இன்னும் உயிர் சேர்க்கிறது.


ஒரு பாடல் வெற்றி பெறுவது இசை, வரிகள், பாடகர்கள் மட்டுமல்ல... அதை எப்படி திரையில் கொண்டு வருகிறார்கள் என்பதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் கரு. பழனியப்பன், இந்தப் பாடலை மிகுந்த ரசனையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


Last but not least...


இந்தப் பாடலுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் பாடகி ஹரிணி. எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர்.


Gen Z-க்கு சொல்லணும்னா... இன்று உங்களுக்கு favourite-ஆ இருக்கும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் அம்மாதான் இந்தப் பாடலைப் பாடிய ஹரிணி.


சில பாடல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும்...


சில பாடல்கள், "இப்படி ஒரு காதல் நமக்கும் நடந்திருந்தா எவ்வளவு அழகாக இருந்திருக்கும்..." என்று கனவு காண வைக்கும்...


"ஆளுங்குயில் கூவும் ரயில்" எனக்கு அந்த இரண்டு வகையிலும் சேர்ந்த பாடல்.


அடுத்த முறை இந்தப் பாடல் டிவியில் வந்தால்... சேனலை மாற்றாதீங்க.


ஒரு ரசிகன் சொல்றான்...


ஒரு முறை feel பண்ணி பாருங்க.


இவன்,

ராஜா. க




 சில பாடல்கள் டிவியில் ஓடும்போது, ரிமோட் கையில் இருந்தாலும் சேனல் மாற்ற மனசே வராது.


பார்த்திபன் கனவு படத்தில் வரும் "ஆளுங்குயில் கூவும் ரயில்" அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று.


இந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம், வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் "சிப்பி இருக்குது முத்து இருக்குது" பாடலின் feel எனக்கு ஞாபகத்திற்கு வரும். அந்தப் பாடலில் ஹீரோ கமல் பேசிக்கொண்டே பாடுவார். இந்தப் பாடலில் ஹீரோயின் பாடிக்கொண்டிருக்க, ஹீரோ சில வார்த்தைகள் மட்டும் சொல்ல... அதற்கு பதிலாக கவிதை போல பாடல் வரிகள் வருவது இந்தப் பாடலின் தனி அழகு.


எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்...


திருக்குறள்...

"இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,

இருவரும் இது போல இருந்தால் சுகம்..."


இந்த வரிகள் வரும் போது, ஸ்ரீகாந்த் மெதுவாக ஸ்நேகாவிற்கு அருகில் வந்து அமரும் அந்தச் சிறிய தருணம்... பெரிய காதல் வசனங்களை விட அந்த ஒரு movement-தான் மனதில் நிற்கிறது.


"கண்ணாடி..."

"இதில் என்னைப் பார்க்கிறேன்... அது உன்னைக் காட்டுதே!"


எவ்வளவு எளிமையான வரிகள்... ஆனால் காதலை அழகாகச் சொல்லிவிடுகின்றன.


"மீசை..."

"இது எனக்கு மட்டும் சொந்தமாகும்... கூந்தல் குழந்தைதான்."


இப்படி சாதாரண வார்த்தைகளையே கவிதையாக்கி இருப்பது இந்தப் பாடலின் மிகப்பெரிய பலம்.


இந்தப் பாடலைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகுதான், கர்நாடக இசையின் காபி ராகத்தை அடிப்படையாக வைத்து இசையமைப்பாளர் வித்யாசாகர் இவ்வளவு அழகாக compose செய்திருக்கிறார் என்று அறிந்தேன். அதிலும், இறுதியில் "என்ன தவம் செய்தனாய் யசோதா" என்ற கர்நாடக இசைத் தொடுதலோடு பாடலை முடிப்பது... ஒவ்வொரு முறையும் கேட்கும்போது ஒரு தனி ஆனந்தத்தை தருகிறது.


90s kids-களின் favourite ஜோடிகளில் ஒன்றான ஸ்நேகா மற்றும் ஸ்ரீகாந்த், இந்தப் பாடலில் நடித்ததே இல்லை... வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இருவரின் இயல்பான நடிப்பு, இந்த மெலடிக்கு இன்னும் உயிர் சேர்க்கிறது.


ஒரு பாடல் வெற்றி பெறுவது இசை, வரிகள், பாடகர்கள் மட்டுமல்ல... அதை எப்படி திரையில் கொண்டு வருகிறார்கள் என்பதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் கரு. பழனியப்பன், இந்தப் பாடலை மிகுந்த ரசனையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


Last but not least...


இந்தப் பாடலுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் பாடகி ஹரிணி. எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர்.


Gen Z-க்கு சொல்லணும்னா... இன்று உங்களுக்கு favourite-ஆ இருக்கும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் அம்மாதான் இந்தப் பாடலைப் பாடிய ஹரிணி.


சில பாடல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும்...


சில பாடல்கள், "இப்படி ஒரு காதல் நமக்கும் நடந்திருந்தா எவ்வளவு அழகாக இருந்திருக்கும்..." என்று கனவு காண வைக்கும்...


"ஆளுங்குயில் கூவும் ரயில்" எனக்கு அந்த இரண்டு வகையிலும் சேர்ந்த பாடல்.


அடுத்த முறை இந்தப் பாடல் டிவியில் வந்தால்... சேனலை மாற்றாதீங்க.


ஒரு ரசிகன் சொல்றான்...


ஒரு முறை feel பண்ணி பாருங்க.


இவன்,

ராஜா. க



செவ்வாய், 21 ஜூலை, 2026

கட்டாகுஸ்தி2 - Review 🎬

 #கட்டாகுஸ்தி2 - Review 🎬



இரண்டு வாரங்களாக இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். வாய்ப்பு அமையவில்லை. மூன்றாவது வாரத்தில் தான் நேரம் கிடைத்தது. அதுவும் Weekend Housefull! அதுவே இந்தப் படத்தின் வெற்றிக்குச் சான்று.


முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை தொடங்குகிறது. ஹீரோ - ஹீரோயின் வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை. குழந்தையை வளர்க்கும் House Husband-ஆக ஹீரோவும், Wrestling-ல் தொடர்ந்து சாதிக்கும் ஹீரோயினும். இதைப் பார்த்து கடுப்பாகும் பக்கத்து வீட்டு கணவன்மார்கள், பள்ளி ஆசிரியையாக வரும் மீனு, இடையிடையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை என முதல் பாதி ரசிக்க வைக்கிறது. ஹீரோ - ஹீரோயின் பிரிவோடு இடைவேளை வருகிறது.


இரண்டாம் பாதியில் கருணாஸ் தனது நகைச்சுவையால் கலகலப்பை கூட்டுகிறார். குழந்தையின் இயல்பான நடிப்பு மனதை கவர்கிறது. ரம்யா கிருஷ்ணனின் கோர்ட் காட்சிகள் கதைக்கு வலு சேர்க்கின்றன. இறுதியில் ஹீரோ - ஹீரோயின் மோதலும், அதற்கான தீர்வும் திருப்திகரமாக அமைந்துள்ளது.


இன்றைய காலத்தில் குழந்தைகள் கட்டாயம் ஏதாவது ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இயக்குநரின் சிந்தனைக்கு ஒரு பெரிய சபாஷ்! 👏


இரண்டாம் பாதியில் வரும் அப்பா - மகள் பாடல் மனதை நெகிழ வைக்கிறது.


பெரிய லாஜிக் எதையும் தேடாமல், குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். தியேட்டரில் பார்த்ததில் முழு திருப்தி.


– ராஜா க.

 #கட்டாகுஸ்தி2 - Review 🎬



இரண்டு வாரங்களாக இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். வாய்ப்பு அமையவில்லை. மூன்றாவது வாரத்தில் தான் நேரம் கிடைத்தது. அதுவும் Weekend Housefull! அதுவே இந்தப் படத்தின் வெற்றிக்குச் சான்று.


முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை தொடங்குகிறது. ஹீரோ - ஹீரோயின் வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை. குழந்தையை வளர்க்கும் House Husband-ஆக ஹீரோவும், Wrestling-ல் தொடர்ந்து சாதிக்கும் ஹீரோயினும். இதைப் பார்த்து கடுப்பாகும் பக்கத்து வீட்டு கணவன்மார்கள், பள்ளி ஆசிரியையாக வரும் மீனு, இடையிடையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை என முதல் பாதி ரசிக்க வைக்கிறது. ஹீரோ - ஹீரோயின் பிரிவோடு இடைவேளை வருகிறது.


இரண்டாம் பாதியில் கருணாஸ் தனது நகைச்சுவையால் கலகலப்பை கூட்டுகிறார். குழந்தையின் இயல்பான நடிப்பு மனதை கவர்கிறது. ரம்யா கிருஷ்ணனின் கோர்ட் காட்சிகள் கதைக்கு வலு சேர்க்கின்றன. இறுதியில் ஹீரோ - ஹீரோயின் மோதலும், அதற்கான தீர்வும் திருப்திகரமாக அமைந்துள்ளது.


இன்றைய காலத்தில் குழந்தைகள் கட்டாயம் ஏதாவது ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இயக்குநரின் சிந்தனைக்கு ஒரு பெரிய சபாஷ்! 👏


இரண்டாம் பாதியில் வரும் அப்பா - மகள் பாடல் மனதை நெகிழ வைக்கிறது.


பெரிய லாஜிக் எதையும் தேடாமல், குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். தியேட்டரில் பார்த்ததில் முழு திருப்தி.


– ராஜா க.

சனி, 11 ஜூலை, 2026

சில இடங்கள் நம்மை மறப்பதில்லை...

 சில இடங்கள் நம்மை மறப்பதில்லை...


கன்னியாகுமாரி எனக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்.




சில இடங்கள் சிலருக்குப் பிடிக்கும்.


சில இடங்களுக்கு சிலரைப் பிடித்துவிடும்.


நான் இரண்டாவது வகை.


திருச்செந்தூரில் பிறந்து அங்கே வளர்ந்த எனக்கு, இந்தியாவின் தென் கோடி எல்லையான கன்னியாகுமாரி ஒரு சுற்றுலாத் தலம் மட்டும் அல்ல. அது என் வாழ்க்கையின் பல பருவங்களை அமைதியாகச் சேமித்து வைத்திருக்கும் ஒரு நினைவுக் களஞ்சியம்.


சிறு வயது முதலே எங்கு சுற்றுலா என்றாலும், பள்ளி சுற்றுலாவாக இருந்தாலும், குடும்பச் சுற்றுலாவாக இருந்தாலும், இறுதியில் வந்து சேரும் இடம் கன்னியாகுமாரிதான்.


சிலருக்குச் சில்லென்ற மலைகள் பிடிக்கும்.


எனக்கோ வெயில் பிடிக்கும்.


வெயிலோடு விளையாடி, வெயிலோடு வளர்ந்தவன் நான். அதனாலோ என்னவோ, கடலின் உப்புக் காற்றும், சூரியனின் வெப்பமும் எனக்கு எப்போதும் நெருக்கமானவை.


"இமயம் முதல் குமரி வரை" என்று புத்தகங்களில் படித்திருக்கிறோம்.


ஆனால், அந்த "குமரி" என் வாழ்க்கையில் ஒரு பாடப்புத்தக வரியாக இல்லாமல், நினைவுகளால் நிரம்பிய இடமாக மாறிவிட்டது.


சிறு வயதில் என் பள்ளி ஆசிரியர் என் கையைப் பிடித்து இந்த மண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினார்.


வாலிப வயதில் நண்பர்களும் நண்பிகளும் கைகோர்த்து வந்தோம்.


காலம் இன்னும் கொஞ்சம் நகர்ந்தது.


எங்கள் வீட்டின் அடுத்த தலைமுறையின் சிறிய கைகளைப் பிடித்து, "இது தான் கன்னியாகுமாரி..." என்று பெருமையோடு காட்டினேன்.


இந்த முறை மட்டும் அந்தப் பயணம் வேறுபட்டிருந்தது.


என் பெற்றோரின் கைகளைப் பிடித்து அவர்களை அழைத்து வந்தேன்.


விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகு ஒவ்வொரு அலையிலும் உயர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது.


அப்பா அருகிலிருந்த கைப்பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்தார்.


அந்த ஒரு நொடியில்...


சிறு வயதில் அவர் என் கையைப் பிடித்து நடத்திய நாட்கள் எல்லாம் கண்முன்னே ஓடின.


அந்த அலைகளை விட என் நினைவுகள்தான் அதிகமாக அசைந்தன.


அன்றுதான் புரிந்தது...


சிறு வயதில் நம்மை யாரோ கைபிடித்து உலகத்தை அறிமுகப்படுத்துவார்கள்.


ஒரு நாள், அதே கைகளை நாம் பிடித்து நடத்த வேண்டிய காலமும் வரும்.


வயோதிகம் எல்லோருக்கும் வரும்.


ஆனால் அது நம் பெற்றோரிடம் வரும்போது மட்டும், அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.


அந்த உண்மையை எனக்குக் கற்றுக் கொடுத்த மண் கன்னியாகுமாரி.


அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்...


சில இடங்கள் நமக்குப் பிடிக்கும்.


சில இடங்களுக்கு நம்மைப் பிடித்துவிடும்.


கன்னியாகுமாரி என்னை அப்படித்தான் பிடித்துவிட்டது.


ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் போது, கன்னியாகுமாரி பகவதி அம்மன் மீண்டும் அழைத்திருக்கிறார் என்ற உணர்வு வரும்.


காலை சூரியன் கடலில் இருந்து மெதுவாக எழும் காட்சியைப் பார்ப்பது...


அலைகளோடு குழந்தைகளைப் போல விளையாடுவது...


படகில் ஏறி விவேகானந்தர் பாறையை அடைவது...


மூன்று கடல்கள் சங்கமிக்கும் அந்த எல்லையற்ற நீலத்தை அமைதியாக நின்று ரசிப்பது...


தியானம் என்றால் என்னவென்று தெரியாத வயதிலேயே, அமைதிக்கும் ஒரு மொழி இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்த இடம் அது.


இன்று வானைத் தொடும் திருவள்ளுவர் சிலையும், கண்ணாடிப் பாலமும் அந்த அழகுக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்திருக்கின்றன.


கன்னியாகுமாரியில் ஒரு பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை.


அங்குள்ள கடைகளில் ஒரு கவ்பாய் தொப்பி வாங்குவது.


பிறகு, மொபைலில் எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும், அங்குள்ள புகைப்படக் கலைஞரை அழைத்து குடும்பத்தோடு ஒரு புகைப்படம் எடுப்பது.


ஏனென்றால், அந்த ஒரு புகைப்படத்தில் நம் நினைவுகள் மட்டுமல்ல...


அவருடைய வாழ்வாதாரமும் இருக்கிறது.


இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்கிறோம்.


இந்த முறை எங்கள் குடும்பப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் "சிரிங்க..." என்றார்.


நாங்களும் சிரித்தோம்.


அந்தப் புகைப்படத்தில் சிரித்தது முகங்கள் மட்டும் இல்லை.


பல வருட நினைவுகளும்.


ஒவ்வொரு முறை கன்னியாகுமாரியை விட்டு திரும்பும் போதும், "மீண்டும் வா..." என்று யாரோ மெதுவாக அழைப்பது போல இருக்கும்.


அது கடலா...


காற்றா...


பகவதி அம்மனின் அருளா...


இல்லை என் சிறுவயது நினைவுகளா...


எனக்குத் தெரியவில்லை.


ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.


சில இடங்கள் நம்மை மறப்பதில்லை.


கன்னியாகுமாரி... என்னை இன்னும் மறக்கவில்லை.



– ராஜா.க ✍🏻✍🏻

திருச்செந்தூரில் பிறந்தவன். நினைவுகளைத் தேடி பயணிப்பவன்.



 சில இடங்கள் நம்மை மறப்பதில்லை...


கன்னியாகுமாரி எனக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்.




சில இடங்கள் சிலருக்குப் பிடிக்கும்.


சில இடங்களுக்கு சிலரைப் பிடித்துவிடும்.


நான் இரண்டாவது வகை.


திருச்செந்தூரில் பிறந்து அங்கே வளர்ந்த எனக்கு, இந்தியாவின் தென் கோடி எல்லையான கன்னியாகுமாரி ஒரு சுற்றுலாத் தலம் மட்டும் அல்ல. அது என் வாழ்க்கையின் பல பருவங்களை அமைதியாகச் சேமித்து வைத்திருக்கும் ஒரு நினைவுக் களஞ்சியம்.


சிறு வயது முதலே எங்கு சுற்றுலா என்றாலும், பள்ளி சுற்றுலாவாக இருந்தாலும், குடும்பச் சுற்றுலாவாக இருந்தாலும், இறுதியில் வந்து சேரும் இடம் கன்னியாகுமாரிதான்.


சிலருக்குச் சில்லென்ற மலைகள் பிடிக்கும்.


எனக்கோ வெயில் பிடிக்கும்.


வெயிலோடு விளையாடி, வெயிலோடு வளர்ந்தவன் நான். அதனாலோ என்னவோ, கடலின் உப்புக் காற்றும், சூரியனின் வெப்பமும் எனக்கு எப்போதும் நெருக்கமானவை.


"இமயம் முதல் குமரி வரை" என்று புத்தகங்களில் படித்திருக்கிறோம்.


ஆனால், அந்த "குமரி" என் வாழ்க்கையில் ஒரு பாடப்புத்தக வரியாக இல்லாமல், நினைவுகளால் நிரம்பிய இடமாக மாறிவிட்டது.


சிறு வயதில் என் பள்ளி ஆசிரியர் என் கையைப் பிடித்து இந்த மண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினார்.


வாலிப வயதில் நண்பர்களும் நண்பிகளும் கைகோர்த்து வந்தோம்.


காலம் இன்னும் கொஞ்சம் நகர்ந்தது.


எங்கள் வீட்டின் அடுத்த தலைமுறையின் சிறிய கைகளைப் பிடித்து, "இது தான் கன்னியாகுமாரி..." என்று பெருமையோடு காட்டினேன்.


இந்த முறை மட்டும் அந்தப் பயணம் வேறுபட்டிருந்தது.


என் பெற்றோரின் கைகளைப் பிடித்து அவர்களை அழைத்து வந்தேன்.


விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகு ஒவ்வொரு அலையிலும் உயர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது.


அப்பா அருகிலிருந்த கைப்பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்தார்.


அந்த ஒரு நொடியில்...


சிறு வயதில் அவர் என் கையைப் பிடித்து நடத்திய நாட்கள் எல்லாம் கண்முன்னே ஓடின.


அந்த அலைகளை விட என் நினைவுகள்தான் அதிகமாக அசைந்தன.


அன்றுதான் புரிந்தது...


சிறு வயதில் நம்மை யாரோ கைபிடித்து உலகத்தை அறிமுகப்படுத்துவார்கள்.


ஒரு நாள், அதே கைகளை நாம் பிடித்து நடத்த வேண்டிய காலமும் வரும்.


வயோதிகம் எல்லோருக்கும் வரும்.


ஆனால் அது நம் பெற்றோரிடம் வரும்போது மட்டும், அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.


அந்த உண்மையை எனக்குக் கற்றுக் கொடுத்த மண் கன்னியாகுமாரி.


அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்...


சில இடங்கள் நமக்குப் பிடிக்கும்.


சில இடங்களுக்கு நம்மைப் பிடித்துவிடும்.


கன்னியாகுமாரி என்னை அப்படித்தான் பிடித்துவிட்டது.


ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் போது, கன்னியாகுமாரி பகவதி அம்மன் மீண்டும் அழைத்திருக்கிறார் என்ற உணர்வு வரும்.


காலை சூரியன் கடலில் இருந்து மெதுவாக எழும் காட்சியைப் பார்ப்பது...


அலைகளோடு குழந்தைகளைப் போல விளையாடுவது...


படகில் ஏறி விவேகானந்தர் பாறையை அடைவது...


மூன்று கடல்கள் சங்கமிக்கும் அந்த எல்லையற்ற நீலத்தை அமைதியாக நின்று ரசிப்பது...


தியானம் என்றால் என்னவென்று தெரியாத வயதிலேயே, அமைதிக்கும் ஒரு மொழி இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்த இடம் அது.


இன்று வானைத் தொடும் திருவள்ளுவர் சிலையும், கண்ணாடிப் பாலமும் அந்த அழகுக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்திருக்கின்றன.


கன்னியாகுமாரியில் ஒரு பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை.


அங்குள்ள கடைகளில் ஒரு கவ்பாய் தொப்பி வாங்குவது.


பிறகு, மொபைலில் எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும், அங்குள்ள புகைப்படக் கலைஞரை அழைத்து குடும்பத்தோடு ஒரு புகைப்படம் எடுப்பது.


ஏனென்றால், அந்த ஒரு புகைப்படத்தில் நம் நினைவுகள் மட்டுமல்ல...


அவருடைய வாழ்வாதாரமும் இருக்கிறது.


இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்கிறோம்.


இந்த முறை எங்கள் குடும்பப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் "சிரிங்க..." என்றார்.


நாங்களும் சிரித்தோம்.


அந்தப் புகைப்படத்தில் சிரித்தது முகங்கள் மட்டும் இல்லை.


பல வருட நினைவுகளும்.


ஒவ்வொரு முறை கன்னியாகுமாரியை விட்டு திரும்பும் போதும், "மீண்டும் வா..." என்று யாரோ மெதுவாக அழைப்பது போல இருக்கும்.


அது கடலா...


காற்றா...


பகவதி அம்மனின் அருளா...


இல்லை என் சிறுவயது நினைவுகளா...


எனக்குத் தெரியவில்லை.


ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.


சில இடங்கள் நம்மை மறப்பதில்லை.


கன்னியாகுமாரி... என்னை இன்னும் மறக்கவில்லை.



– ராஜா.க ✍🏻✍🏻

திருச்செந்தூரில் பிறந்தவன். நினைவுகளைத் தேடி பயணிப்பவன்.



சனி, 27 ஜூன், 2026

ஹீரோவை அல்ல... திரைக்கதையையே ஹீரோவாக்கிய மனிதர்

 



என் பார்வையில் 'சின்ன வீடு' மற்றும் K. பாக்யராஜ்


ஒரு படைப்பாளியின் மறைவு என்பது ஒரு மனிதரை இழப்பது மட்டுமல்ல.


ஒரு காலத்தின் கதை சொல்லும் மொழியையே இழப்பது.


அப்படிப்பட்ட ஒரு பெயர் K. பாக்யராஜ்.


அவர் மறைந்த செய்தியை கேட்டவுடன், எனக்கு முதலில் நினைவுக்கு வந்த படம் 'சின்ன வீடு'.


அந்த படம் வெளியானபோது நான் பிறந்திருக்கவில்லை.


90-களின் இறுதியில் தொலைக்காட்சியில்தான் முதன்முதலாக பார்த்தேன்.


உண்மையைச் சொன்னால், பதின்ம வயதில் அந்தப் படத்தின் சில காட்சிகள்தான் முதலில் என்னை ஈர்த்தது. ஆனால் வயதும், வாழ்க்கை அனுபவமும் அதிகரித்த பிறகு அதே படத்தை மீண்டும் பார்த்தபோது புரிந்தது...


நான் ரசித்தது அந்தக் காட்சிகளை அல்ல.


ஒரு திரைக்கதை மேதையின் சிந்தனையை.


'சின்ன வீடு' ஒரு சாதாரண குடும்பக் கதை அல்ல.


வெளிப்புற அழகை மட்டுமே வாழ்க்கையின் அளவுகோலாக நினைக்கும் ஒரு மனிதன், ஒரு பெண்ணின் அன்பு, பொறுப்பு, தியாகம், மன அழகு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் பயணம்தான் அந்த படம்.


திருமணத்திற்கு முன் அழகான பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் கதாநாயகன்...


திருமணத்திற்குப் பிறகு மனைவியின் அன்பைப் பார்த்து மெதுவாக மாறுகிறான்.


அந்த மாற்றத்தை ஒரு பெரிய வசனத்தால் சொல்லவில்லை.


சிறிய சிறிய காட்சிகளால் உணர வைத்தார் பாக்யராஜ்.


எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று.


மதியத்தில் மனைவி சமைத்த குழம்பை இரவிலும் கேட்பார்.


அப்போது அம்மா,


"உனக்கு சூடாகச் சமைத்ததுதானே பிடிக்கும்... அதனால்தான் இரவுக்கு புதிதாக சமைத்தேன்." என்பார்.


அதற்கு அவர்,


"இல்லை... மதியம் அவள் சமைத்தது மிகவும் நன்றாக இருந்தது. இத்தனை வருடமாக இப்படிப்பட்ட சாப்பாடு சாப்பிட்டதே இல்லை." என்பார்.


அந்த ஒரு வசனத்திற்குப் பிறகு பாக்கியலட்சுமியின் கண்களில் தெரியும் கண்ணீர்...


அது வெறும் மகிழ்ச்சி அல்ல.


அங்கீகாரம்.


அந்தக் காட்சியில் அவர் மனைவியின் அழகைப் பாராட்டவில்லை.


அவளுடைய அன்பைப் பாராட்டுகிறார்.


அதுதான் அந்தக் காட்சியின் உண்மையான அழகு.


இன்னொரு சிறிய விஷயம்...


பாக்கியலட்சுமி M.Com படித்திருந்தும், திருமண அழைப்பிதழில் தனது பட்டத்தை சேர்க்க விடமாட்டாள்.


ஏனெனில் கணவர் B.Com மட்டுமே படித்தவர்.


ஒரு வசனம் கூட இல்லாமல், ஒரு பெண்ணின் மனதை ஒரு சிறிய விவரத்தின் மூலம் புரிய வைத்திருப்பார் பாக்யராஜ்.


இதுதான் Character Writing.


படம் முழுவதும் அவர் தனது மனைவியை "பாக்கி" என்றே அழைப்பார்.


ஒரு காட்சியில் இயல்பாக,


"உனக்கு பெரிய மனசு பாக்கி..." என்று சொல்வார்.


முதல் முறை அந்த வசனத்தைக் கேட்டபோது அது ஒரு சாதாரண பாராட்டு என்று தோன்றியது.


இன்று மீண்டும் பார்க்கும்போது புரிகிறது...


அந்த ஒரு வரியிலேயே பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தின் முழு வாழ்க்கையையும் சொல்லிவிடுகிறார்.


அவள் கணவனின் குறைகளைப் பெரிதுபடுத்தவில்லை.


அவரை மாற்ற முயற்சித்தாள்; ஆனால் அவமானப்படுத்தவில்லை.


காதலித்தாள்; ஆனால் தன்னுடைய சுயமரியாதையை இழக்கவில்லை.


மன்னித்தாள்; ஆனால் பலவீனமாக இல்லை.


அதனால்தான் "பெரிய மனசு" என்ற இரண்டு வார்த்தைகள், அந்தக் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.


ஒரு நல்ல கதாபாத்திரத்தை உருவாக்குவது வேறு.


ஒரே ஒரு வசனத்தில் அந்தக் கதாபாத்திரத்தை பார்வையாளர்களின் மனதில் நிலைநிறுத்துவது வேறு.


அதுதான் K. பாக்யராஜ் என்ற எழுத்தாளரின் முத்திரை.


அதேபோல்...


80-களின் தமிழ் சினிமாவில் "அம்மா எப்போதும் சரி" என்ற எழுதப்படாத விதி இருந்தது.


ஆனால் 'சின்ன வீடு'வில், மனைவி சரியான இடத்தில் இருக்கிறார்.


அம்மா தவறான இடத்தில் இருக்கிறார்.


அதை எந்த தயக்கமும் இல்லாமல் திரையில் காட்டினார் பாக்யராஜ்.


அந்த காலத்திற்கு அது மிகப்பெரிய தைரியம்.


அதனால்தான் 'சின்ன வீடு' இன்று வரை பேசப்படுகிறது.


இன்று கூட...


"பாக்கியலட்சுமி" என்ற கதாபாத்திரத்தின் பெயர் எனக்கு நினைவில் இருக்கிறது.


இருபது ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு படத்தின் கதாபாத்திரம் இன்னும் மனதில் வாழ்ந்தால்...


அது நடிகையின் வெற்றி மட்டுமல்ல.


அதை உருவாக்கிய எழுத்தாளரின் வெற்றி.


'சின்ன வீடு' படத்தைப் பார்த்த பிறகுதான்...


நான் K. பாக்யராஜ் படங்களைத் தேடித் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்.


ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு புதிய திரைக்கதைப் பாடமாக இருந்தது.


'ருத்ரா' படத்தில், கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் கழித்துதான் அந்தக் கதாபாத்திரம் களமிறங்குகிறது. ஆனால் அதன்பிறகு படத்தின் வேகமே மாறிவிடுகிறது. ஒரு கதாபாத்திரத்தின் மூலம் திரைக்கதையின் தாளத்தை எப்படி மாற்றுவது என்பதை அங்கே பார்க்கலாம்.


'ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி'...


வெளிப்படையாக அது ஒரு நகைச்சுவைப் படம்.


ஆனால் அதன் பின்னால் இருக்கும் திரைக்கதை அமைப்பு வியக்க வைக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கும்.


'முந்தானை முடிச்சு'...


இன்றும் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஒளிபரப்பானால், சேனலை மாற்ற மனம் வருவதில்லை.


அதுதான் ஒரு காலத்தை வென்ற கிளாசிக் திரைப்படத்தின் அடையாளம்.


'மௌன கீதங்கள்'...


என்னுடைய மிகவும் பிடித்த பாக்யராஜ் படங்களில் ஒன்று.


காதல், குடும்பம், உறவுகள், மனித உணர்வுகள்...


எதையும் மிகைப்படுத்தாமல், வாழ்க்கையைப் போலவே திரையில் வாழ வைத்த படம்.


இந்த எல்லாப் படங்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது.


அந்தப் படங்களில் ஹீரோ பாக்யராஜ் அல்ல.


திரைக்கதைதான் ஹீரோ.


ஒரு நடிகரை நாம் நினைவில் வைத்திருப்பது அவரது முகத்திற்காக.


ஒரு எழுத்தாளரை நாம் நினைவில் வைத்திருப்பது அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்காக.


அவர் நடித்த கதாபாத்திரங்கள் நம்மைச் சிரிக்க வைத்தன.


அவர் எழுதிய கதாபாத்திரங்கள் நம்மை யோசிக்க வைத்தன.


அவர் இயக்கிய காட்சிகள் இன்றும் நம் நினைவில் வாழ்கின்றன.


அதனால்தான் K. பாக்யராஜ் ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல...


தமிழ் சினிமா கண்ட மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரும் ஆவார்.


இன்று அவர் நம்முடன் இல்லாமல் இருக்கலாம்.


ஆனால் "பாக்கியலட்சுமி" இன்னும் நம்முடன் வாழ்கிறாள்.


'முந்தானை முடிச்சு' இன்னும் நம்மைச் சிரிக்க வைக்கிறது.


'மௌன கீதங்கள்' இன்னும் மனதை நெகிழ வைக்கிறது.


'ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி' இன்னும் திரைக்கதை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.


ஒரு படைப்பாளி மறையலாம்.


ஆனால் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும்...


அவர் எழுதிய திரைக்கதைகளும்...


காலத்தால் ஒருபோதும் அழியாது.


அவை ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாகப் பிறந்து, புதிய ரசிகர்களைக் கண்டடையும்.


அதுவே K. பாக்யராஜ் என்ற படைப்பாளியின் உண்மையான வெற்றி.


நன்றி, திரைக்கதை ஜாம்பவான். 🙏🎬


இவன் 

ராஜா க 

 



என் பார்வையில் 'சின்ன வீடு' மற்றும் K. பாக்யராஜ்


ஒரு படைப்பாளியின் மறைவு என்பது ஒரு மனிதரை இழப்பது மட்டுமல்ல.


ஒரு காலத்தின் கதை சொல்லும் மொழியையே இழப்பது.


அப்படிப்பட்ட ஒரு பெயர் K. பாக்யராஜ்.


அவர் மறைந்த செய்தியை கேட்டவுடன், எனக்கு முதலில் நினைவுக்கு வந்த படம் 'சின்ன வீடு'.


அந்த படம் வெளியானபோது நான் பிறந்திருக்கவில்லை.


90-களின் இறுதியில் தொலைக்காட்சியில்தான் முதன்முதலாக பார்த்தேன்.


உண்மையைச் சொன்னால், பதின்ம வயதில் அந்தப் படத்தின் சில காட்சிகள்தான் முதலில் என்னை ஈர்த்தது. ஆனால் வயதும், வாழ்க்கை அனுபவமும் அதிகரித்த பிறகு அதே படத்தை மீண்டும் பார்த்தபோது புரிந்தது...


நான் ரசித்தது அந்தக் காட்சிகளை அல்ல.


ஒரு திரைக்கதை மேதையின் சிந்தனையை.


'சின்ன வீடு' ஒரு சாதாரண குடும்பக் கதை அல்ல.


வெளிப்புற அழகை மட்டுமே வாழ்க்கையின் அளவுகோலாக நினைக்கும் ஒரு மனிதன், ஒரு பெண்ணின் அன்பு, பொறுப்பு, தியாகம், மன அழகு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் பயணம்தான் அந்த படம்.


திருமணத்திற்கு முன் அழகான பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் கதாநாயகன்...


திருமணத்திற்குப் பிறகு மனைவியின் அன்பைப் பார்த்து மெதுவாக மாறுகிறான்.


அந்த மாற்றத்தை ஒரு பெரிய வசனத்தால் சொல்லவில்லை.


சிறிய சிறிய காட்சிகளால் உணர வைத்தார் பாக்யராஜ்.


எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று.


மதியத்தில் மனைவி சமைத்த குழம்பை இரவிலும் கேட்பார்.


அப்போது அம்மா,


"உனக்கு சூடாகச் சமைத்ததுதானே பிடிக்கும்... அதனால்தான் இரவுக்கு புதிதாக சமைத்தேன்." என்பார்.


அதற்கு அவர்,


"இல்லை... மதியம் அவள் சமைத்தது மிகவும் நன்றாக இருந்தது. இத்தனை வருடமாக இப்படிப்பட்ட சாப்பாடு சாப்பிட்டதே இல்லை." என்பார்.


அந்த ஒரு வசனத்திற்குப் பிறகு பாக்கியலட்சுமியின் கண்களில் தெரியும் கண்ணீர்...


அது வெறும் மகிழ்ச்சி அல்ல.


அங்கீகாரம்.


அந்தக் காட்சியில் அவர் மனைவியின் அழகைப் பாராட்டவில்லை.


அவளுடைய அன்பைப் பாராட்டுகிறார்.


அதுதான் அந்தக் காட்சியின் உண்மையான அழகு.


இன்னொரு சிறிய விஷயம்...


பாக்கியலட்சுமி M.Com படித்திருந்தும், திருமண அழைப்பிதழில் தனது பட்டத்தை சேர்க்க விடமாட்டாள்.


ஏனெனில் கணவர் B.Com மட்டுமே படித்தவர்.


ஒரு வசனம் கூட இல்லாமல், ஒரு பெண்ணின் மனதை ஒரு சிறிய விவரத்தின் மூலம் புரிய வைத்திருப்பார் பாக்யராஜ்.


இதுதான் Character Writing.


படம் முழுவதும் அவர் தனது மனைவியை "பாக்கி" என்றே அழைப்பார்.


ஒரு காட்சியில் இயல்பாக,


"உனக்கு பெரிய மனசு பாக்கி..." என்று சொல்வார்.


முதல் முறை அந்த வசனத்தைக் கேட்டபோது அது ஒரு சாதாரண பாராட்டு என்று தோன்றியது.


இன்று மீண்டும் பார்க்கும்போது புரிகிறது...


அந்த ஒரு வரியிலேயே பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தின் முழு வாழ்க்கையையும் சொல்லிவிடுகிறார்.


அவள் கணவனின் குறைகளைப் பெரிதுபடுத்தவில்லை.


அவரை மாற்ற முயற்சித்தாள்; ஆனால் அவமானப்படுத்தவில்லை.


காதலித்தாள்; ஆனால் தன்னுடைய சுயமரியாதையை இழக்கவில்லை.


மன்னித்தாள்; ஆனால் பலவீனமாக இல்லை.


அதனால்தான் "பெரிய மனசு" என்ற இரண்டு வார்த்தைகள், அந்தக் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.


ஒரு நல்ல கதாபாத்திரத்தை உருவாக்குவது வேறு.


ஒரே ஒரு வசனத்தில் அந்தக் கதாபாத்திரத்தை பார்வையாளர்களின் மனதில் நிலைநிறுத்துவது வேறு.


அதுதான் K. பாக்யராஜ் என்ற எழுத்தாளரின் முத்திரை.


அதேபோல்...


80-களின் தமிழ் சினிமாவில் "அம்மா எப்போதும் சரி" என்ற எழுதப்படாத விதி இருந்தது.


ஆனால் 'சின்ன வீடு'வில், மனைவி சரியான இடத்தில் இருக்கிறார்.


அம்மா தவறான இடத்தில் இருக்கிறார்.


அதை எந்த தயக்கமும் இல்லாமல் திரையில் காட்டினார் பாக்யராஜ்.


அந்த காலத்திற்கு அது மிகப்பெரிய தைரியம்.


அதனால்தான் 'சின்ன வீடு' இன்று வரை பேசப்படுகிறது.


இன்று கூட...


"பாக்கியலட்சுமி" என்ற கதாபாத்திரத்தின் பெயர் எனக்கு நினைவில் இருக்கிறது.


இருபது ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு படத்தின் கதாபாத்திரம் இன்னும் மனதில் வாழ்ந்தால்...


அது நடிகையின் வெற்றி மட்டுமல்ல.


அதை உருவாக்கிய எழுத்தாளரின் வெற்றி.


'சின்ன வீடு' படத்தைப் பார்த்த பிறகுதான்...


நான் K. பாக்யராஜ் படங்களைத் தேடித் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்.


ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு புதிய திரைக்கதைப் பாடமாக இருந்தது.


'ருத்ரா' படத்தில், கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் கழித்துதான் அந்தக் கதாபாத்திரம் களமிறங்குகிறது. ஆனால் அதன்பிறகு படத்தின் வேகமே மாறிவிடுகிறது. ஒரு கதாபாத்திரத்தின் மூலம் திரைக்கதையின் தாளத்தை எப்படி மாற்றுவது என்பதை அங்கே பார்க்கலாம்.


'ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி'...


வெளிப்படையாக அது ஒரு நகைச்சுவைப் படம்.


ஆனால் அதன் பின்னால் இருக்கும் திரைக்கதை அமைப்பு வியக்க வைக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கும்.


'முந்தானை முடிச்சு'...


இன்றும் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஒளிபரப்பானால், சேனலை மாற்ற மனம் வருவதில்லை.


அதுதான் ஒரு காலத்தை வென்ற கிளாசிக் திரைப்படத்தின் அடையாளம்.


'மௌன கீதங்கள்'...


என்னுடைய மிகவும் பிடித்த பாக்யராஜ் படங்களில் ஒன்று.


காதல், குடும்பம், உறவுகள், மனித உணர்வுகள்...


எதையும் மிகைப்படுத்தாமல், வாழ்க்கையைப் போலவே திரையில் வாழ வைத்த படம்.


இந்த எல்லாப் படங்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது.


அந்தப் படங்களில் ஹீரோ பாக்யராஜ் அல்ல.


திரைக்கதைதான் ஹீரோ.


ஒரு நடிகரை நாம் நினைவில் வைத்திருப்பது அவரது முகத்திற்காக.


ஒரு எழுத்தாளரை நாம் நினைவில் வைத்திருப்பது அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்காக.


அவர் நடித்த கதாபாத்திரங்கள் நம்மைச் சிரிக்க வைத்தன.


அவர் எழுதிய கதாபாத்திரங்கள் நம்மை யோசிக்க வைத்தன.


அவர் இயக்கிய காட்சிகள் இன்றும் நம் நினைவில் வாழ்கின்றன.


அதனால்தான் K. பாக்யராஜ் ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல...


தமிழ் சினிமா கண்ட மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரும் ஆவார்.


இன்று அவர் நம்முடன் இல்லாமல் இருக்கலாம்.


ஆனால் "பாக்கியலட்சுமி" இன்னும் நம்முடன் வாழ்கிறாள்.


'முந்தானை முடிச்சு' இன்னும் நம்மைச் சிரிக்க வைக்கிறது.


'மௌன கீதங்கள்' இன்னும் மனதை நெகிழ வைக்கிறது.


'ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி' இன்னும் திரைக்கதை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.


ஒரு படைப்பாளி மறையலாம்.


ஆனால் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும்...


அவர் எழுதிய திரைக்கதைகளும்...


காலத்தால் ஒருபோதும் அழியாது.


அவை ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாகப் பிறந்து, புதிய ரசிகர்களைக் கண்டடையும்.


அதுவே K. பாக்யராஜ் என்ற படைப்பாளியின் உண்மையான வெற்றி.


நன்றி, திரைக்கதை ஜாம்பவான். 🙏🎬


இவன் 

ராஜா க 

வெள்ளி, 26 ஜூன், 2026

ஒரு காலத்தையே உருவாக்கிய மும்மூர்த்திகள்


 ஒரு காலத்தை உருவாக்கிய மும்மூர்த்திகள் – தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கூட்டணிகள்


நம் பாரம்பரியத்தில் "மும்மூர்த்திகள்" என்ற உவமைக்கு ஒரு தனி இடம் உண்டு. அது மூன்று தெய்வங்களைப் பற்றியது மட்டுமல்ல; ஒரு முழுமையான படைப்பின் மூன்று பரிமாணங்களை நினைவூட்டும் ஒரு சிந்தனையும் கூட.


அதேபோல, தமிழ் சினிமாவிலும் சில காலங்களை மூன்று படைப்பாளிகள் சேர்ந்து வடிவமைத்திருக்கிறார்கள்.


ஒருவர் கதைகளுக்கு உயிர் கொடுத்தார்.


ஒருவர் அந்த உணர்வுகளுக்கு வார்த்தைகள் கொடுத்தார்.


மற்றொருவர் அந்த வார்த்தைகளுக்கு உயிர் தந்த இசையை வழங்கினார்.


ஒரு சிறந்த திரைப்படம் உருவாக பல நூறு பேரின் உழைப்பு தேவை. ஆனால், ஒரு தலைமுறையின் மனதில் நிலைத்து நிற்கும் திரைப்படங்களை உருவாக்கியதில் இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகிய மூவரின் பங்களிப்பு அளவிட முடியாதது.


ஒரு காலத்தின் அடையாளங்கள்


MSV • கண்ணதாசன் • K. பாலச்சந்தர்


இசை, இலக்கியம், மனித உறவுகள்—இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து தமிழ் சினிமாவிற்கு புதிய உயரத்தை அளித்த காலம்.


இளையராஜா • வைரமுத்து • பாரதிராஜா


கிராமத்தின் மண்வாசனையை இசையிலும், கவிதையிலும், காட்சிகளிலும் உணர வைத்த தலைமுறை.


ஷங்கர் • A.R. ரஹ்மான் • வைரமுத்து


பிரம்மாண்டம், தொழில்நுட்பம், உலகத் தர இசை, கவித்துவமான வரிகள்—தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேச வைத்த கூட்டணி.


செல்வராகவன் • யுவன் ஷங்கர் ராஜா • நா. முத்துக்குமார்


இளைஞர்களின் மனக்குழப்பம், காதல், தனிமை, வாழ்க்கையின் சொல்லப்படாத உணர்வுகளை இசையாலும், வரிகளாலும், காட்சிகளாலும் மனதில் பதித்த தலைமுறை.


இவர்கள் வெறும் வெற்றிக் கூட்டணிகள் அல்ல.


ஒரு தலைமுறையின் காதல் மொழியை உருவாக்கியவர்கள்.


ஒரு தலைமுறையின் இசை ரசனையை மாற்றியவர்கள்.


ஒரு தலைமுறையின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தவர்கள்.


அதனால்தான், சில கூட்டணிகள் வெற்றிப் படங்களை மட்டும் உருவாக்குவதில்லை.


அவர்கள் ஒரு காலத்தையே உருவாக்குகிறார்கள்.


இன்று அந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது, நாம் கதையை மட்டும் நினைவுகூர்வதில்லை.


அந்த காலத்தையும், அந்த இசையையும், அந்த உணர்வுகளையும், நம் வாழ்க்கையின் ஒரு பகுதியையும் மீண்டும் வாழ்கிறோம்.


அதுவே காலத்தை வென்ற படைப்பாளிகளின் உண்மையான வெற்றி.

இவன் 

ராஜா க


 ஒரு காலத்தை உருவாக்கிய மும்மூர்த்திகள் – தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கூட்டணிகள்


நம் பாரம்பரியத்தில் "மும்மூர்த்திகள்" என்ற உவமைக்கு ஒரு தனி இடம் உண்டு. அது மூன்று தெய்வங்களைப் பற்றியது மட்டுமல்ல; ஒரு முழுமையான படைப்பின் மூன்று பரிமாணங்களை நினைவூட்டும் ஒரு சிந்தனையும் கூட.


அதேபோல, தமிழ் சினிமாவிலும் சில காலங்களை மூன்று படைப்பாளிகள் சேர்ந்து வடிவமைத்திருக்கிறார்கள்.


ஒருவர் கதைகளுக்கு உயிர் கொடுத்தார்.


ஒருவர் அந்த உணர்வுகளுக்கு வார்த்தைகள் கொடுத்தார்.


மற்றொருவர் அந்த வார்த்தைகளுக்கு உயிர் தந்த இசையை வழங்கினார்.


ஒரு சிறந்த திரைப்படம் உருவாக பல நூறு பேரின் உழைப்பு தேவை. ஆனால், ஒரு தலைமுறையின் மனதில் நிலைத்து நிற்கும் திரைப்படங்களை உருவாக்கியதில் இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகிய மூவரின் பங்களிப்பு அளவிட முடியாதது.


ஒரு காலத்தின் அடையாளங்கள்


MSV • கண்ணதாசன் • K. பாலச்சந்தர்


இசை, இலக்கியம், மனித உறவுகள்—இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து தமிழ் சினிமாவிற்கு புதிய உயரத்தை அளித்த காலம்.


இளையராஜா • வைரமுத்து • பாரதிராஜா


கிராமத்தின் மண்வாசனையை இசையிலும், கவிதையிலும், காட்சிகளிலும் உணர வைத்த தலைமுறை.


ஷங்கர் • A.R. ரஹ்மான் • வைரமுத்து


பிரம்மாண்டம், தொழில்நுட்பம், உலகத் தர இசை, கவித்துவமான வரிகள்—தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேச வைத்த கூட்டணி.


செல்வராகவன் • யுவன் ஷங்கர் ராஜா • நா. முத்துக்குமார்


இளைஞர்களின் மனக்குழப்பம், காதல், தனிமை, வாழ்க்கையின் சொல்லப்படாத உணர்வுகளை இசையாலும், வரிகளாலும், காட்சிகளாலும் மனதில் பதித்த தலைமுறை.


இவர்கள் வெறும் வெற்றிக் கூட்டணிகள் அல்ல.


ஒரு தலைமுறையின் காதல் மொழியை உருவாக்கியவர்கள்.


ஒரு தலைமுறையின் இசை ரசனையை மாற்றியவர்கள்.


ஒரு தலைமுறையின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தவர்கள்.


அதனால்தான், சில கூட்டணிகள் வெற்றிப் படங்களை மட்டும் உருவாக்குவதில்லை.


அவர்கள் ஒரு காலத்தையே உருவாக்குகிறார்கள்.


இன்று அந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது, நாம் கதையை மட்டும் நினைவுகூர்வதில்லை.


அந்த காலத்தையும், அந்த இசையையும், அந்த உணர்வுகளையும், நம் வாழ்க்கையின் ஒரு பகுதியையும் மீண்டும் வாழ்கிறோம்.


அதுவே காலத்தை வென்ற படைப்பாளிகளின் உண்மையான வெற்றி.

இவன் 

ராஜா க

திங்கள், 22 ஜூன், 2026

அந்த கவிதையின் முகவரி

 



சிலர் சிரிப்பால் நினைவில் நிற்பார்கள்.

சிலர் பேச்சால் மனதில் நிற்பார்கள்.


ஆனால் சிலர்...


அவர்களின் கண்களால் மட்டும்

நம்முள் ஒரு இடத்தை உருவாக்கி விடுவார்கள்.


நீ எத்தனை முறை

உன் கண்களின் புகைப்படத்தைப் பகிர்ந்தாலும்,

அதை நான் வெறும் புகைப்படமாகப் பார்ப்பதில்லை.


ஒவ்வொரு முறையும்

புதிதாக திறக்கும்

ஒரு கவிதையின் கதவாகத்தான் பார்க்கிறேன்.


உன்னை முதல் முறையாகப் பார்க்கவில்லை.


ஆனால்,

ஒவ்வொரு முறையும்

உன் கண்கள் என் கண்களைத் தொடும்போது,

வார்த்தைகள் வருவதில்லை.


வியப்புதான் வருகிறது.


கவிதை எழுத நினைக்கிறேன்.

ஆனால்,

என்னை அறியாமலே

கவிதையாக மாறி நிற்கிறேன்.


"என் கண்களில் அப்படி என்னதான் இருக்கிறது?"

என்று

குறும்பாய் கேட்கும் உன் கண்களுக்கு,


எப்படி சொல்வது?


இந்த மண்ணில் பிறந்த

ஒரு புதுக் குழந்தை,


முதல் முறையாக

வானத்தையும்,

வண்ணங்களையும்,

வாழ்க்கையையும்

விரிந்த விழிகளால்

வியந்து பார்ப்பதைப் போல,


உன் கண்களை

ஒவ்வொரு முறையும்

புதிதாகப் பார்க்கிறேன்.


நேற்று பார்த்த கண்கள்தான்.


ஆனால் இன்று,

அதில் ஒரு புதிய நிலவு உதிக்கிறது.


இன்று பார்த்த கண்கள்தான்.


ஆனால் நாளை,

அதில் ஒரு புதிய உலகம் பிறக்கிறது.


அதனால்தான்,

உன் கண்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,


நான் காதலனாக இருப்பதில்லை.


இந்த உலகத்தை

முதல் முறையாகக் காணும்

ஒரு குழந்தையாகி விடுகிறேன்.


அந்த வியப்பின் பெயர்தான்

என் கவிதை.


அந்த கவிதையின் முகவரிதான்

உன் கண்கள்.


இவன் 

ராஜா க ✍🏻

 



சிலர் சிரிப்பால் நினைவில் நிற்பார்கள்.

சிலர் பேச்சால் மனதில் நிற்பார்கள்.


ஆனால் சிலர்...


அவர்களின் கண்களால் மட்டும்

நம்முள் ஒரு இடத்தை உருவாக்கி விடுவார்கள்.


நீ எத்தனை முறை

உன் கண்களின் புகைப்படத்தைப் பகிர்ந்தாலும்,

அதை நான் வெறும் புகைப்படமாகப் பார்ப்பதில்லை.


ஒவ்வொரு முறையும்

புதிதாக திறக்கும்

ஒரு கவிதையின் கதவாகத்தான் பார்க்கிறேன்.


உன்னை முதல் முறையாகப் பார்க்கவில்லை.


ஆனால்,

ஒவ்வொரு முறையும்

உன் கண்கள் என் கண்களைத் தொடும்போது,

வார்த்தைகள் வருவதில்லை.


வியப்புதான் வருகிறது.


கவிதை எழுத நினைக்கிறேன்.

ஆனால்,

என்னை அறியாமலே

கவிதையாக மாறி நிற்கிறேன்.


"என் கண்களில் அப்படி என்னதான் இருக்கிறது?"

என்று

குறும்பாய் கேட்கும் உன் கண்களுக்கு,


எப்படி சொல்வது?


இந்த மண்ணில் பிறந்த

ஒரு புதுக் குழந்தை,


முதல் முறையாக

வானத்தையும்,

வண்ணங்களையும்,

வாழ்க்கையையும்

விரிந்த விழிகளால்

வியந்து பார்ப்பதைப் போல,


உன் கண்களை

ஒவ்வொரு முறையும்

புதிதாகப் பார்க்கிறேன்.


நேற்று பார்த்த கண்கள்தான்.


ஆனால் இன்று,

அதில் ஒரு புதிய நிலவு உதிக்கிறது.


இன்று பார்த்த கண்கள்தான்.


ஆனால் நாளை,

அதில் ஒரு புதிய உலகம் பிறக்கிறது.


அதனால்தான்,

உன் கண்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,


நான் காதலனாக இருப்பதில்லை.


இந்த உலகத்தை

முதல் முறையாகக் காணும்

ஒரு குழந்தையாகி விடுகிறேன்.


அந்த வியப்பின் பெயர்தான்

என் கவிதை.


அந்த கவிதையின் முகவரிதான்

உன் கண்கள்.


இவன் 

ராஜா க ✍🏻

செவ்வாய், 9 ஜூன், 2026

29 — காஃபியின் சுவையும், தமிழ் சினிமாவின் காதலும்!

 ​🎬 29 — சினிமா விமர்சனம் ☕🌾


​காஃபியோட ருசி அதை நாம குடிக்கிற இடத்தை பொறுத்து மாறலாம், ஆனா காஃபி ஒண்ணுதான். காதலும் அப்படித்தான். அது எல்லாத்துக்கும் பொதுவானதுதான். ஆனா, அதை தமிழ் சினிமாவுல எந்தக் களத்துல வச்சு, எவ்வளவு எதார்த்தமா சொல்றாங்கன்றதுல தான் ரசிகனோட மனசுக்குள்ள அந்தப் படம் போய்ப் உட்காருது. ✨

​🧑‍🤝‍🧑 கதை சுருக்கம்:

​29 வயசுல ஒரு பையன், 21 வயசுல ஒரு பொண்ணு. ரெண்டு பேருக்கும் இடையில வர்ற காதல், அப்புறம் எதிர்பாராம நடக்குற பிரிவு. அந்தப் பிரிவுக்கு அப்புறமா அவங்க வாழ்க்கையை எப்படி எதிர்கொள்றாங்க, எப்படித் தேத்திக்கிறாங்கங்கிறதுதான் இந்த '29' படத்தோட கதை.

​📊 SPEEDOMETER RATINGS & EMOTION METERS

​(கீழே உள்ள மீட்டர்கள் படத்தின் தன்மையை துல்லியமாக காட்டும்)

​1. காதல் & எமோஷன் (Romance & Emotions Meter)

🟢🟢🟢🟢🟡 | 90% - டாப் நாட்ச்!

​விளக்கம்: காதலைச் சொன்னதும் சரி, பிரிவைச் சொன்னதும் சரி... நெஞ்சைத் தொடுது.

​2. வசனங்கள் (Dialogues Meter)

🟢🟢🟢🟢🟢 | 96% - பக்கா ரியலிஸ்டிக்!

​விளக்கம்: பாஸ்கர் சக்தி பாணியில் சாமான்யனின் எதார்த்தக் கவிதை. வசனங்கள் தான் படத்தின் முதுகெலும்பு.

​3. காமெடி (Comedy Meter)

🟢🟢🟡⚪⚪ | 50% - ஆங்காங்கே ரசிக்க வைக்கும்!

​விளக்கம்: கதையோடு ஒட்டிய இயல்பான நகைச்சுவை.

​4. ஆக்ஷன் & புரட்சி (Action & Drama Meter)

🟢🟡⚪⚪⚪ | 30% - ஓட்டவில்லை!

​விளக்கம்: செகண்ட் ஹாஃபில் வரும் அந்த 'புரட்சி மோடு' படத்திற்கு செட் ஆகவில்லை.

​⏱️ SCREENPLAY DASHBOARD (திரைக்கதை வேகம்)

​முதல் பாதி (First Half): [🔴]—[🟠]—[🟡]—[🟢]—[👉90%] 🚀 செம்ம ஸ்பீடு, எமோஷனல் கனெக்ட் சூப்பர்!

​இரண்டாம் பாதி (Second Half): [🔴]—[🟠]—[👉50%]—[🟢]—[⚪] 📉 வண்டி தடம் மாறி லூப் லைனில் சிக்கிக்கொள்கிறது.

​வில்லன் வெயிட்டேஜ் (Villain Weightage): [🔴]—[👉20%]—[🟡]—[🟢]—[⚪] 🤖 VIP படத்து 'டம்மி' வில்லன் மாடல்.

​🌾 படத்தின் பலங்கள் (The Positives):

​வசனங்கள்: பாசாங்கு இல்லாத எதார்த்தமான வரிகள். காதலைச் சொன்ன விதம் ரொம்பப் புதுசு. மனசுல நச்சுனு தைக்கிற சில டயலாக்ஸ்:

​"அவ பேரை முதன்முதலா எழுதும்போது எனக்குத் தெரியாதுப்பா... என் ஆயுசு முடியுற வரைக்கும் அந்தப் பேரைத்தான் நான் உச்சரிக்கப் போறேன்னு!" 🥺🎯

"என்னைத் தொட்டு கல்யாணம் பண்ணிக்கப் போறியா? இல்லை என்னை தொட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கப் போறியா?" (நெருக்கமான கேள்வி!)

"திருப்பிப் போட்ட திருக்குறள் மாதிரி உன் உதடு..." 💋 (அழகான உவமை).

​இயல்பான காதல்: முதல் பாதியில வர்ற காதலும் சரி, அவங்க பிரியுற இடமும் சரி... எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம அவ்வளவு அழகா இருக்கு.

​நடிப்புத்திறன்: விஜி தலையைத் தொட்டு "நாம பிரிஞ்சிடலாம்"னு சொல்ற அந்த ஒரு இடத்துல சத்யாவோட நடிப்பு இருக்கே... அப்படியே கண்ணுல தண்ணி வரவச்சிருது. 🥹❤️👌🏼 ரெண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. ப்ரீத்தி கொள்ளை அழகு, மனசைக் கொள்ளையடிச்சிடுறாங்க. ❤️🫠

​இசை: "சிலே சிலே" பாட்டு மனசுக்குள்ளேயே ஒரு மெல்லிய ராகமா ஓடிக்கிட்டே இருக்கு. பிஜிஎம் படத்தோட எமோஷனை நல்லா தாங்கிப் பிடிக்குது. 🎵

​⚠️ படத்தின் பலவீனங்கள் (The Negatives):

​தடம் மாறிய செகண்ட் ஹாஃப்: முதல் பாதியில இருந்த அந்த யதார்த்தம், இரண்டாம் பாதியில அப்படியே தலைகீழா மாறிடுது. திடீர்னு ஒரு 'புரட்சி mோடுக்கு' மாறுறதால, நம்மால கதையோடு முழுசா ஒட்ட முடியாம ஒரு அந்நியத்தன்மை வந்துடுது.

​வில்லன் கேரக்டர்: 'VIP' படத்துல வர்ற மாதிரி ரொம்ப வீக்கான வில்லன். அவரோடப் பகுதிகள் கதையோடு ஒட்டவே இல்லை, சுணக்கம் தருது.

​📋 பாட்டம் லைன் (Final Verdict):

​First Half: 💪🏻💪🏻💪🏻💪🏻 (மனசைத் தொட்டது)

​Second Half: 💪🏻💪🏻 (கொஞ்சம் சுமார்தான்)




​இவன்,

✍️ ராஜா. க

 ​🎬 29 — சினிமா விமர்சனம் ☕🌾


​காஃபியோட ருசி அதை நாம குடிக்கிற இடத்தை பொறுத்து மாறலாம், ஆனா காஃபி ஒண்ணுதான். காதலும் அப்படித்தான். அது எல்லாத்துக்கும் பொதுவானதுதான். ஆனா, அதை தமிழ் சினிமாவுல எந்தக் களத்துல வச்சு, எவ்வளவு எதார்த்தமா சொல்றாங்கன்றதுல தான் ரசிகனோட மனசுக்குள்ள அந்தப் படம் போய்ப் உட்காருது. ✨

​🧑‍🤝‍🧑 கதை சுருக்கம்:

​29 வயசுல ஒரு பையன், 21 வயசுல ஒரு பொண்ணு. ரெண்டு பேருக்கும் இடையில வர்ற காதல், அப்புறம் எதிர்பாராம நடக்குற பிரிவு. அந்தப் பிரிவுக்கு அப்புறமா அவங்க வாழ்க்கையை எப்படி எதிர்கொள்றாங்க, எப்படித் தேத்திக்கிறாங்கங்கிறதுதான் இந்த '29' படத்தோட கதை.

​📊 SPEEDOMETER RATINGS & EMOTION METERS

​(கீழே உள்ள மீட்டர்கள் படத்தின் தன்மையை துல்லியமாக காட்டும்)

​1. காதல் & எமோஷன் (Romance & Emotions Meter)

🟢🟢🟢🟢🟡 | 90% - டாப் நாட்ச்!

​விளக்கம்: காதலைச் சொன்னதும் சரி, பிரிவைச் சொன்னதும் சரி... நெஞ்சைத் தொடுது.

​2. வசனங்கள் (Dialogues Meter)

🟢🟢🟢🟢🟢 | 96% - பக்கா ரியலிஸ்டிக்!

​விளக்கம்: பாஸ்கர் சக்தி பாணியில் சாமான்யனின் எதார்த்தக் கவிதை. வசனங்கள் தான் படத்தின் முதுகெலும்பு.

​3. காமெடி (Comedy Meter)

🟢🟢🟡⚪⚪ | 50% - ஆங்காங்கே ரசிக்க வைக்கும்!

​விளக்கம்: கதையோடு ஒட்டிய இயல்பான நகைச்சுவை.

​4. ஆக்ஷன் & புரட்சி (Action & Drama Meter)

🟢🟡⚪⚪⚪ | 30% - ஓட்டவில்லை!

​விளக்கம்: செகண்ட் ஹாஃபில் வரும் அந்த 'புரட்சி மோடு' படத்திற்கு செட் ஆகவில்லை.

​⏱️ SCREENPLAY DASHBOARD (திரைக்கதை வேகம்)

​முதல் பாதி (First Half): [🔴]—[🟠]—[🟡]—[🟢]—[👉90%] 🚀 செம்ம ஸ்பீடு, எமோஷனல் கனெக்ட் சூப்பர்!

​இரண்டாம் பாதி (Second Half): [🔴]—[🟠]—[👉50%]—[🟢]—[⚪] 📉 வண்டி தடம் மாறி லூப் லைனில் சிக்கிக்கொள்கிறது.

​வில்லன் வெயிட்டேஜ் (Villain Weightage): [🔴]—[👉20%]—[🟡]—[🟢]—[⚪] 🤖 VIP படத்து 'டம்மி' வில்லன் மாடல்.

​🌾 படத்தின் பலங்கள் (The Positives):

​வசனங்கள்: பாசாங்கு இல்லாத எதார்த்தமான வரிகள். காதலைச் சொன்ன விதம் ரொம்பப் புதுசு. மனசுல நச்சுனு தைக்கிற சில டயலாக்ஸ்:

​"அவ பேரை முதன்முதலா எழுதும்போது எனக்குத் தெரியாதுப்பா... என் ஆயுசு முடியுற வரைக்கும் அந்தப் பேரைத்தான் நான் உச்சரிக்கப் போறேன்னு!" 🥺🎯

"என்னைத் தொட்டு கல்யாணம் பண்ணிக்கப் போறியா? இல்லை என்னை தொட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கப் போறியா?" (நெருக்கமான கேள்வி!)

"திருப்பிப் போட்ட திருக்குறள் மாதிரி உன் உதடு..." 💋 (அழகான உவமை).

​இயல்பான காதல்: முதல் பாதியில வர்ற காதலும் சரி, அவங்க பிரியுற இடமும் சரி... எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம அவ்வளவு அழகா இருக்கு.

​நடிப்புத்திறன்: விஜி தலையைத் தொட்டு "நாம பிரிஞ்சிடலாம்"னு சொல்ற அந்த ஒரு இடத்துல சத்யாவோட நடிப்பு இருக்கே... அப்படியே கண்ணுல தண்ணி வரவச்சிருது. 🥹❤️👌🏼 ரெண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. ப்ரீத்தி கொள்ளை அழகு, மனசைக் கொள்ளையடிச்சிடுறாங்க. ❤️🫠

​இசை: "சிலே சிலே" பாட்டு மனசுக்குள்ளேயே ஒரு மெல்லிய ராகமா ஓடிக்கிட்டே இருக்கு. பிஜிஎம் படத்தோட எமோஷனை நல்லா தாங்கிப் பிடிக்குது. 🎵

​⚠️ படத்தின் பலவீனங்கள் (The Negatives):

​தடம் மாறிய செகண்ட் ஹாஃப்: முதல் பாதியில இருந்த அந்த யதார்த்தம், இரண்டாம் பாதியில அப்படியே தலைகீழா மாறிடுது. திடீர்னு ஒரு 'புரட்சி mோடுக்கு' மாறுறதால, நம்மால கதையோடு முழுசா ஒட்ட முடியாம ஒரு அந்நியத்தன்மை வந்துடுது.

​வில்லன் கேரக்டர்: 'VIP' படத்துல வர்ற மாதிரி ரொம்ப வீக்கான வில்லன். அவரோடப் பகுதிகள் கதையோடு ஒட்டவே இல்லை, சுணக்கம் தருது.

​📋 பாட்டம் லைன் (Final Verdict):

​First Half: 💪🏻💪🏻💪🏻💪🏻 (மனசைத் தொட்டது)

​Second Half: 💪🏻💪🏻 (கொஞ்சம் சுமார்தான்)




​இவன்,

✍️ ராஜா. க