ஒரு காலம். இரண்டு பயணங்கள். — சிவகார்த்திகேயன் பற்றி என் குறிப்பேடு
ஒவ்வொரு நடிகரும் ஒரு கால கட்டத்தில் நமக்கு பிடிப்பார்கள்.
ஆனால் சிலர் மட்டும் — நம்ம வயசு நண்பன் போல பிடித்து விடுவார்கள்.
எனக்கு அப்படித் தோன்றியவர் Sivakarthikeyan.
2012 — ஒரே ஆண்டு, இரண்டு திருப்பங்கள்
2012 என் வாழ்க்கையிலும், அவரின் பயணத்திலும் ஒரு முக்கிய ஆண்டு.
எனக்கு அது career turning point.
அவருக்கு முழு ஹீரோவாகத் தோன்றிய மனம் கொத்தி பறவை.
அந்த படத்தை theatre-ல் பார்த்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.
அந்த காலத்தில் தமிழ் சினிமா ரசிகர் படைகள் உறுதியானவை — Ajith, Vijay, Dhanush, Simbu… அதற்கு மேல் Rajini, Kamal, Vikram.
அந்த கூட்டத்தில் ஒரு புதிய முகம் வந்தது.
Hero entry இல்லை.
பக்கத்து வீட்டு பையன் entry.
அதனால்தான் connect ஆனது.
அவரின் வளர்ச்சியை நான் பார்த்ததில்லை.
ஒரு classmate-ன் growth-ஐ பார்த்தேன்.
எதிர் நீச்சல் — தலைப்பு போலவே பயணம்
அடுத்து எதிர் நீச்சல்.
Udhayam theatre-ல் பார்த்த அந்த நாள் இன்னும் fresh.
Title மாதிரி தான் அவர் பயணம் — எதிர் நீச்சல்.
பின் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்
கிராம புற இளைஞர்களின் மனதில் பதிந்தது.
அவர் ரசிகன் என்றதைத் தாண்டி “நம்ம பக்கம் இருந்தவன்” என்ற உணர்வு வந்தது.
குடும்ப ரசிகர்களை கட்டிய படங்கள்
மான் கராத்தே
குழந்தைகள் audience-ஐ cover செய்த படம்.
Anirudh பாடல்கள், Hansika peak — theatre vibe.
காக்கிசட்டை
Constable role.
Hero image safe zone-ல் போகவில்லை.
Audience-ஐ step by step build பண்ணினார்.
Kids → Family → Mass.
Smart growth.
சோதனைகளுக்குப் பின் வந்த ஓட்டம்
சில தடைகளைத் தாண்டி ரஜினி முருகன்.
A, B, C centres முழுவதும் ஓடிய படம்.
Soori comedy இன்னும் memes-ல் வாழ்கிறது.
அந்த படம் அவரை settled hero-ஆக stamp செய்தது.
கனவுகளுக்கு ரசீது
எனக்கு personal favourite ரெமோ.
PC Sreeram camera — ஒவ்வொரு frame-மும் goosebumps.
படத்தில் ஒரு dialogue:
“ஒரு நாள் சத்யம் theatre-ல் பெரிய banner வைக்கணும்.”
சில வருடங்களில்
அதே சத்யம் theatre வாசலில்
அவருக்கே பெரிய banner.
சில கனவுகள்… ரசீது வைத்துக் கொள்கின்றன.
அடுத்த கட்டம்
வேலைக்காரன்
ஒரு jump.
பின் நம்ம வீட்டு பிள்ளை,
டாக்டர்,
டான்,
ஹீரோ —
ஒவ்வொரு படியிலும் growth தெரிந்தது.
மாவீரன்
அயலான்
theatre-க்கு போகவேண்டும் என்று தோன்றும் படங்கள்.
பின் teaser பார்த்த அமரன்.
ஒரு காலத்தில் constable.
இன்று Indian Army officer screen-ல்.
அவரின் உயர்வு —
நானே வெற்றி அடைந்தது போல உணர்வு.
ஒரே உணர்வு
நூறு கனவு கண்டால்
ஆறு கனவு பலிக்கும் என்று சொல்வார்கள்.
சிலருக்கு அந்த ஆறும் கூட பலிக்க ஆரம்பிக்கும்.
சில நடிகர்கள் நம்மை entertain பண்ணுவார்கள்.
சிலர் inspire பண்ணுவார்கள்.
மிகச் சிலர் மட்டும் —
நம்மோடு பயணம் செய்த உணர்வு தருவார்கள்.
சிவகார்த்திகேயன் எனக்கு அந்த வகை.
ரசிகனாக மட்டும் இல்லை.
ஒரு batchmate போல.
ஒரு நண்பன் போல.
அவரின் பயணம் தொடர்ந்து உயரட்டும்.
நம்ம கனவுகளும் அதோடு ஓடட்டும்.
இவன்
ராஜா க










