செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

ஒரு காலம். இரண்டு பயணங்கள். — சிவகார்த்திகேயன் பற்றி என் குறிப்பேடு

 ஒரு காலம். இரண்டு பயணங்கள். — சிவகார்த்திகேயன் பற்றி என் குறிப்பேடு


ஒவ்வொரு நடிகரும் ஒரு கால கட்டத்தில் நமக்கு பிடிப்பார்கள்.

ஆனால் சிலர் மட்டும் — நம்ம வயசு நண்பன் போல பிடித்து விடுவார்கள்.

எனக்கு அப்படித் தோன்றியவர் Sivakarthikeyan.

2012 — ஒரே ஆண்டு, இரண்டு திருப்பங்கள்

2012 என் வாழ்க்கையிலும், அவரின் பயணத்திலும் ஒரு முக்கிய ஆண்டு.

எனக்கு அது career turning point.

அவருக்கு முழு ஹீரோவாகத் தோன்றிய மனம் கொத்தி பறவை.

அந்த படத்தை theatre-ல் பார்த்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.

அந்த காலத்தில் தமிழ் சினிமா ரசிகர் படைகள் உறுதியானவை — Ajith, Vijay, Dhanush, Simbu… அதற்கு மேல் Rajini, Kamal, Vikram.

அந்த கூட்டத்தில் ஒரு புதிய முகம் வந்தது.

Hero entry இல்லை.

பக்கத்து வீட்டு பையன் entry.

அதனால்தான் connect ஆனது.

அவரின் வளர்ச்சியை நான் பார்த்ததில்லை.

ஒரு classmate-ன் growth-ஐ பார்த்தேன்.

எதிர் நீச்சல் — தலைப்பு போலவே பயணம்

அடுத்து எதிர் நீச்சல்.

Udhayam theatre-ல் பார்த்த அந்த நாள் இன்னும் fresh.

Title மாதிரி தான் அவர் பயணம் — எதிர் நீச்சல்.

பின் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்

கிராம புற இளைஞர்களின் மனதில் பதிந்தது.

அவர் ரசிகன் என்றதைத் தாண்டி “நம்ம பக்கம் இருந்தவன்” என்ற உணர்வு வந்தது.

குடும்ப ரசிகர்களை கட்டிய படங்கள்

மான் கராத்தே

குழந்தைகள் audience-ஐ cover செய்த படம்.

Anirudh பாடல்கள், Hansika peak — theatre vibe.

காக்கிசட்டை

Constable role.

Hero image safe zone-ல் போகவில்லை.

Audience-ஐ step by step build பண்ணினார்.

Kids → Family → Mass.

Smart growth.

சோதனைகளுக்குப் பின் வந்த ஓட்டம்

சில தடைகளைத் தாண்டி ரஜினி முருகன்.

A, B, C centres முழுவதும் ஓடிய படம்.

Soori comedy இன்னும் memes-ல் வாழ்கிறது.

அந்த படம் அவரை settled hero-ஆக stamp செய்தது.

கனவுகளுக்கு ரசீது

எனக்கு personal favourite ரெமோ.

PC Sreeram camera — ஒவ்வொரு frame-மும் goosebumps.

படத்தில் ஒரு dialogue:

“ஒரு நாள் சத்யம் theatre-ல் பெரிய banner வைக்கணும்.”

சில வருடங்களில்

அதே சத்யம் theatre வாசலில்

அவருக்கே பெரிய banner.

சில கனவுகள்… ரசீது வைத்துக் கொள்கின்றன.

அடுத்த கட்டம்

வேலைக்காரன்

ஒரு jump.

பின் நம்ம வீட்டு பிள்ளை,

டாக்டர்,

டான்,

ஹீரோ —

ஒவ்வொரு படியிலும் growth தெரிந்தது.

மாவீரன்

அயலான்

theatre-க்கு போகவேண்டும் என்று தோன்றும் படங்கள்.

பின் teaser பார்த்த அமரன்.

ஒரு காலத்தில் constable.

இன்று Indian Army officer screen-ல்.

அவரின் உயர்வு —

நானே வெற்றி அடைந்தது போல உணர்வு.

ஒரே உணர்வு

நூறு கனவு கண்டால்

ஆறு கனவு பலிக்கும் என்று சொல்வார்கள்.

சிலருக்கு அந்த ஆறும் கூட பலிக்க ஆரம்பிக்கும்.

சில நடிகர்கள் நம்மை entertain பண்ணுவார்கள்.

சிலர் inspire பண்ணுவார்கள்.

மிகச் சிலர் மட்டும் —

நம்மோடு பயணம் செய்த உணர்வு தருவார்கள்.

சிவகார்த்திகேயன் எனக்கு அந்த வகை.

ரசிகனாக மட்டும் இல்லை.

ஒரு batchmate போல.

ஒரு நண்பன் போல.

அவரின் பயணம் தொடர்ந்து உயரட்டும்.

நம்ம கனவுகளும் அதோடு ஓடட்டும்.


இவன் 

ராஜா க

 ஒரு காலம். இரண்டு பயணங்கள். — சிவகார்த்திகேயன் பற்றி என் குறிப்பேடு


ஒவ்வொரு நடிகரும் ஒரு கால கட்டத்தில் நமக்கு பிடிப்பார்கள்.

ஆனால் சிலர் மட்டும் — நம்ம வயசு நண்பன் போல பிடித்து விடுவார்கள்.

எனக்கு அப்படித் தோன்றியவர் Sivakarthikeyan.

2012 — ஒரே ஆண்டு, இரண்டு திருப்பங்கள்

2012 என் வாழ்க்கையிலும், அவரின் பயணத்திலும் ஒரு முக்கிய ஆண்டு.

எனக்கு அது career turning point.

அவருக்கு முழு ஹீரோவாகத் தோன்றிய மனம் கொத்தி பறவை.

அந்த படத்தை theatre-ல் பார்த்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.

அந்த காலத்தில் தமிழ் சினிமா ரசிகர் படைகள் உறுதியானவை — Ajith, Vijay, Dhanush, Simbu… அதற்கு மேல் Rajini, Kamal, Vikram.

அந்த கூட்டத்தில் ஒரு புதிய முகம் வந்தது.

Hero entry இல்லை.

பக்கத்து வீட்டு பையன் entry.

அதனால்தான் connect ஆனது.

அவரின் வளர்ச்சியை நான் பார்த்ததில்லை.

ஒரு classmate-ன் growth-ஐ பார்த்தேன்.

எதிர் நீச்சல் — தலைப்பு போலவே பயணம்

அடுத்து எதிர் நீச்சல்.

Udhayam theatre-ல் பார்த்த அந்த நாள் இன்னும் fresh.

Title மாதிரி தான் அவர் பயணம் — எதிர் நீச்சல்.

பின் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்

கிராம புற இளைஞர்களின் மனதில் பதிந்தது.

அவர் ரசிகன் என்றதைத் தாண்டி “நம்ம பக்கம் இருந்தவன்” என்ற உணர்வு வந்தது.

குடும்ப ரசிகர்களை கட்டிய படங்கள்

மான் கராத்தே

குழந்தைகள் audience-ஐ cover செய்த படம்.

Anirudh பாடல்கள், Hansika peak — theatre vibe.

காக்கிசட்டை

Constable role.

Hero image safe zone-ல் போகவில்லை.

Audience-ஐ step by step build பண்ணினார்.

Kids → Family → Mass.

Smart growth.

சோதனைகளுக்குப் பின் வந்த ஓட்டம்

சில தடைகளைத் தாண்டி ரஜினி முருகன்.

A, B, C centres முழுவதும் ஓடிய படம்.

Soori comedy இன்னும் memes-ல் வாழ்கிறது.

அந்த படம் அவரை settled hero-ஆக stamp செய்தது.

கனவுகளுக்கு ரசீது

எனக்கு personal favourite ரெமோ.

PC Sreeram camera — ஒவ்வொரு frame-மும் goosebumps.

படத்தில் ஒரு dialogue:

“ஒரு நாள் சத்யம் theatre-ல் பெரிய banner வைக்கணும்.”

சில வருடங்களில்

அதே சத்யம் theatre வாசலில்

அவருக்கே பெரிய banner.

சில கனவுகள்… ரசீது வைத்துக் கொள்கின்றன.

அடுத்த கட்டம்

வேலைக்காரன்

ஒரு jump.

பின் நம்ம வீட்டு பிள்ளை,

டாக்டர்,

டான்,

ஹீரோ —

ஒவ்வொரு படியிலும் growth தெரிந்தது.

மாவீரன்

அயலான்

theatre-க்கு போகவேண்டும் என்று தோன்றும் படங்கள்.

பின் teaser பார்த்த அமரன்.

ஒரு காலத்தில் constable.

இன்று Indian Army officer screen-ல்.

அவரின் உயர்வு —

நானே வெற்றி அடைந்தது போல உணர்வு.

ஒரே உணர்வு

நூறு கனவு கண்டால்

ஆறு கனவு பலிக்கும் என்று சொல்வார்கள்.

சிலருக்கு அந்த ஆறும் கூட பலிக்க ஆரம்பிக்கும்.

சில நடிகர்கள் நம்மை entertain பண்ணுவார்கள்.

சிலர் inspire பண்ணுவார்கள்.

மிகச் சிலர் மட்டும் —

நம்மோடு பயணம் செய்த உணர்வு தருவார்கள்.

சிவகார்த்திகேயன் எனக்கு அந்த வகை.

ரசிகனாக மட்டும் இல்லை.

ஒரு batchmate போல.

ஒரு நண்பன் போல.

அவரின் பயணம் தொடர்ந்து உயரட்டும்.

நம்ம கனவுகளும் அதோடு ஓடட்டும்.


இவன் 

ராஜா க

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

சைதாப்பேட்டை டூ மணிமங்களம்: ஒரு தேடலின் சிவராத்திரி!

 


அப்பன் இருக்கிறான்: ஒரு சிவராத்திரி நினைவலை!

​சென்னை... பிழைக்க வரும் எவரையும் இந்த ஊர் அவ்வளவு சீக்கிரம் கைவிடுவதில்லை. ஆனால், ஆரம்பத்தில் அது கொடுக்கும் நெருக்கடி இருக்கிறதே, அது ஒரு தனி ரகம்.

​அந்தப் புதுசு... கண்கள் நிறைய அடுத்த கட்டத்தைப் பற்றிய கனவுகளும், உள்ளுக்குள் ‘இன்னும் உயர வேண்டுமே’ என்கிற ஒரு தவிப்பும் இருந்த காலம் அது. சைதாப்பேட்டையில் நண்பர்களோடு ஒரு சின்ன அறை. ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய், கையில் காசில்லாத போதும் ஒரு பிடிமானத்தோடு இருந்த அந்த நாட்கள் தான் இன்று நான் நிற்கும் வாழ்வின் அஸ்திவாரம்.

​அந்த முதல் சிவராத்திரி

​அன்று ஒரு சிவராத்திரி. என் நண்பனை அழைத்தேன், "வாடா... இந்த சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலுக்குப் போய் வரலாம்" என்று. அவனோ முதலில் தயங்கினான். அன்றைய இளைஞர்களுக்கே உரிய அந்த லேசான நாத்திகமோ அல்லது அயர்ச்சியோ தெரியவில்லை. நான் விடவில்லை. "ஏதோ ஒரு நம்பிக்கை... போய்த்தான் பார்ப்போமே, நல்லது நடந்தால் சந்தோஷம் தானே?" என்று சொல்லி வண்டியை எடுத்தேன். வண்டிக்கு ஒரு பத்து ரூபாய் பெட்ரோல் போட்டால் மனதுக்கும் கொஞ்சம் தெம்பு ஏறும். அந்தப் பத்து ரூபாய் பெட்ரோலில் தான் எங்கள் நம்பிக்கையே ஓடிக்கொண்டிருந்தது.

​அன்று காரணீஸ்வரர் கோயிலில் பெரிய கூட்டமில்லை. ஈசனின் தரிசனம் முடித்து அமர்ந்தால், அங்கே மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு. "இந்தக் கதை இப்படித்தான் முடியும்" என்று நான் முன்கூட்டியே சொல்ல, என் நண்பன் ஆச்சரியமாகப் பார்த்தான். "கிருபானந்த வாரியாரின் சீஷ்யை... அவர் பாணி எனக்குத் தெரியுமடா" என்றேன். அந்தச் சொல்லாடல்களில் ஒரு ஈர்ப்பு வந்தது.

​அடுத்த கால பூஜையும் வந்தது. பிரசாதம் விநியோகிக்க இளைஞர்கள் தேவைப்பட, எங்களையும் அழைத்தார்கள். என் நண்பன், எதற்கும் தயங்குபவன், அன்று தன் முழு பலத்தையும் காட்டி அந்தச் சேவையில் இறங்கினான். அன்று இரவு முழுக்க பரதநாட்டியம், பக்தி, அந்த ஆலயத்தின் அமைதி என விடிய விடிய ஈசனின் நிழலிலேயே தங்கிவிட்டோம்.

​தேடலும் விடையுமாய் ஈசன்

​ஈசன் கைவிடவில்லை.

​அடுத்த சில மாதங்களிலேயே அவனுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. "மச்சி... அடுத்த சிவராத்திரிக்கு மறக்காம அதே கோயிலுக்குப் போகணும்டா" என்று அவன் சொன்ன போதுதான் புரிந்தது, அவன் மனதுக்குள் அந்த இறைவன் மெல்ல நுழைந்துவிட்டான் என்று. மெல்ல மெல்ல ஒவ்வொருவராக வாழ்க்கையின் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டோம்.

​காலம் எங்களை வெவ்வேறு திசைகளில் பிரித்திருக்கலாம். பிழைப்புக்காக ஆளுக்கொரு திசையில் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு சிவராத்திரி வரும்போதெல்லாம் எங்களை இணைக்கும் கண்ணுக்குத் தெரியாத சரடு அந்தப் பழைய நினைவுகள் தான்.

​தொடரும் பயணம்

​மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், தையூர் செங்கன்மாலீஸ்வரர் எனப் பல ஆலயங்களைத் தரிசித்த நான், இன்று சிவராத்திரி அன்று மணிமங்களத்தில் ஞானாம்பிகை சமேத கைலாசநாதர் ஆலயத்தில் நிற்கிறேன்.

​அன்று சென்னைக்கு வந்து ஒரு பிடிமானத்திற்காகத் தேடிய எங்களைப் போல, இன்றும் பல இளைஞர்கள் தேடலோடு, கண்ணில் கனவுகளோடு வந்திருப்பார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:

​"அப்பன் இருக்கிறான்... அவன் கைவிட மாட்டான்." அந்த மகா சிவபெருமான் மீதான நம்பிக்கையே உங்கள் வாழ்வின் ஒளியாகட்டும். விழித்திருப்போம்... அவன் அருளால் உயர்வோம்!

​சிவாய நம! 🙏🏻


 #Shivaratri #PersonalJourney #ChennaiDiaries #Spirituality #Karaniswarar


 


அப்பன் இருக்கிறான்: ஒரு சிவராத்திரி நினைவலை!

​சென்னை... பிழைக்க வரும் எவரையும் இந்த ஊர் அவ்வளவு சீக்கிரம் கைவிடுவதில்லை. ஆனால், ஆரம்பத்தில் அது கொடுக்கும் நெருக்கடி இருக்கிறதே, அது ஒரு தனி ரகம்.

​அந்தப் புதுசு... கண்கள் நிறைய அடுத்த கட்டத்தைப் பற்றிய கனவுகளும், உள்ளுக்குள் ‘இன்னும் உயர வேண்டுமே’ என்கிற ஒரு தவிப்பும் இருந்த காலம் அது. சைதாப்பேட்டையில் நண்பர்களோடு ஒரு சின்ன அறை. ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய், கையில் காசில்லாத போதும் ஒரு பிடிமானத்தோடு இருந்த அந்த நாட்கள் தான் இன்று நான் நிற்கும் வாழ்வின் அஸ்திவாரம்.

​அந்த முதல் சிவராத்திரி

​அன்று ஒரு சிவராத்திரி. என் நண்பனை அழைத்தேன், "வாடா... இந்த சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலுக்குப் போய் வரலாம்" என்று. அவனோ முதலில் தயங்கினான். அன்றைய இளைஞர்களுக்கே உரிய அந்த லேசான நாத்திகமோ அல்லது அயர்ச்சியோ தெரியவில்லை. நான் விடவில்லை. "ஏதோ ஒரு நம்பிக்கை... போய்த்தான் பார்ப்போமே, நல்லது நடந்தால் சந்தோஷம் தானே?" என்று சொல்லி வண்டியை எடுத்தேன். வண்டிக்கு ஒரு பத்து ரூபாய் பெட்ரோல் போட்டால் மனதுக்கும் கொஞ்சம் தெம்பு ஏறும். அந்தப் பத்து ரூபாய் பெட்ரோலில் தான் எங்கள் நம்பிக்கையே ஓடிக்கொண்டிருந்தது.

​அன்று காரணீஸ்வரர் கோயிலில் பெரிய கூட்டமில்லை. ஈசனின் தரிசனம் முடித்து அமர்ந்தால், அங்கே மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு. "இந்தக் கதை இப்படித்தான் முடியும்" என்று நான் முன்கூட்டியே சொல்ல, என் நண்பன் ஆச்சரியமாகப் பார்த்தான். "கிருபானந்த வாரியாரின் சீஷ்யை... அவர் பாணி எனக்குத் தெரியுமடா" என்றேன். அந்தச் சொல்லாடல்களில் ஒரு ஈர்ப்பு வந்தது.

​அடுத்த கால பூஜையும் வந்தது. பிரசாதம் விநியோகிக்க இளைஞர்கள் தேவைப்பட, எங்களையும் அழைத்தார்கள். என் நண்பன், எதற்கும் தயங்குபவன், அன்று தன் முழு பலத்தையும் காட்டி அந்தச் சேவையில் இறங்கினான். அன்று இரவு முழுக்க பரதநாட்டியம், பக்தி, அந்த ஆலயத்தின் அமைதி என விடிய விடிய ஈசனின் நிழலிலேயே தங்கிவிட்டோம்.

​தேடலும் விடையுமாய் ஈசன்

​ஈசன் கைவிடவில்லை.

​அடுத்த சில மாதங்களிலேயே அவனுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. "மச்சி... அடுத்த சிவராத்திரிக்கு மறக்காம அதே கோயிலுக்குப் போகணும்டா" என்று அவன் சொன்ன போதுதான் புரிந்தது, அவன் மனதுக்குள் அந்த இறைவன் மெல்ல நுழைந்துவிட்டான் என்று. மெல்ல மெல்ல ஒவ்வொருவராக வாழ்க்கையின் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டோம்.

​காலம் எங்களை வெவ்வேறு திசைகளில் பிரித்திருக்கலாம். பிழைப்புக்காக ஆளுக்கொரு திசையில் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு சிவராத்திரி வரும்போதெல்லாம் எங்களை இணைக்கும் கண்ணுக்குத் தெரியாத சரடு அந்தப் பழைய நினைவுகள் தான்.

​தொடரும் பயணம்

​மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், தையூர் செங்கன்மாலீஸ்வரர் எனப் பல ஆலயங்களைத் தரிசித்த நான், இன்று சிவராத்திரி அன்று மணிமங்களத்தில் ஞானாம்பிகை சமேத கைலாசநாதர் ஆலயத்தில் நிற்கிறேன்.

​அன்று சென்னைக்கு வந்து ஒரு பிடிமானத்திற்காகத் தேடிய எங்களைப் போல, இன்றும் பல இளைஞர்கள் தேடலோடு, கண்ணில் கனவுகளோடு வந்திருப்பார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:

​"அப்பன் இருக்கிறான்... அவன் கைவிட மாட்டான்." அந்த மகா சிவபெருமான் மீதான நம்பிக்கையே உங்கள் வாழ்வின் ஒளியாகட்டும். விழித்திருப்போம்... அவன் அருளால் உயர்வோம்!

​சிவாய நம! 🙏🏻


 #Shivaratri #PersonalJourney #ChennaiDiaries #Spirituality #Karaniswarar


வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

காதலர் தினம் February 14

 

பெண்ணைத் தொடுவது காதலல்ல...

அவள் மௌனத்தைத் தொடுவதுதான் காதல்!


​இன்று 250 மில்லியன் ரோஜாக்கள் விற்கப்படலாம்.

ஆனால், ஒரு பெண்ணின் அகங்காரத்தை உடைக்காமல்,

அவள் சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்கு மட்டுமே

காதல் வசப்படும்.


​ஆண் என்பவன் ஆள்பவன் அல்ல;

அன்பால் சரணடைபவன்.


​உடல் தாகம் தீர்ந்த பின் மிஞ்சுவது எதுவோ,

அதுவே உண்மையான பிணைப்பு.

உன் துணையின் கண்களில் உன்னைப் பார்...


அங்கே கடவுள் தெரிவான்!

​காதல் ஒரு தவம்.

காதலிப்பவர்கள் எல்லாரும் சித்தர்கள்!


​வாழ்க காதலர்... வளர்க புரிதல்

#Val


entinesDay2026 #love

 

பெண்ணைத் தொடுவது காதலல்ல...

அவள் மௌனத்தைத் தொடுவதுதான் காதல்!


​இன்று 250 மில்லியன் ரோஜாக்கள் விற்கப்படலாம்.

ஆனால், ஒரு பெண்ணின் அகங்காரத்தை உடைக்காமல்,

அவள் சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்கு மட்டுமே

காதல் வசப்படும்.


​ஆண் என்பவன் ஆள்பவன் அல்ல;

அன்பால் சரணடைபவன்.


​உடல் தாகம் தீர்ந்த பின் மிஞ்சுவது எதுவோ,

அதுவே உண்மையான பிணைப்பு.

உன் துணையின் கண்களில் உன்னைப் பார்...


அங்கே கடவுள் தெரிவான்!

​காதல் ஒரு தவம்.

காதலிப்பவர்கள் எல்லாரும் சித்தர்கள்!


​வாழ்க காதலர்... வளர்க புரிதல்

#Val


entinesDay2026 #love

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

Sarvam Maya review

 Sarvam Maya


— 

ஒரு மனிதன் இரண்டு உலகங்களுக்கு நடுவில் நிற்கிறான்.

ஒன்றில் பாரம்பரியம்.

மற்றொன்றில் அவன் தனிப்பட்ட இசை.


மலையாள சினிமா ஒரு விஷயத்தை நன்றாக அறிவது —

அது சத்தமாக பேசாது.

நிசப்தத்துக்கு வேலை கொடுக்கும்.


Sarvam Maya ஒரு ghost story அல்ல.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையை யார் எழுத வேண்டும் என்று quietly கேட்கும் கதை.

அவன் தந்தையா?

அவன் கடமையா?

அல்லது அவன் உள்ளே ஒலிக்கும் ஒரு melodyயா?


படம் முழுக்க பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்காது.

ஆனால் சிறிய உணர்வுகள் நடக்கிறது.

அதுதான் முக்கியம்.


Nivin Pauly நடித்திருக்கும் மனிதன்

வாழ்க்கையில் late-ஆ அல்ல,

life-க்கு parallel-ஆ நடக்கிறான்.

அதனால் தான் அவன் முகத்தில்

ஒரு permanent தயக்கம்.


Ghost இங்கு பயமுறுத்துவதற்கு இல்லை.

அது நினைவூட்டுவதற்கு.

நம்மை நாமே தவிர்த்துவிட்ட விஷயங்களை

மீண்டும் அழைக்க.


படத்தின் வேகம் மெதுவாக இருக்கும்.

அது குறை அல்ல.

அது ஒரு தீர்மானம்.


இந்த படத்தை பார்க்கும் போது

கதை முடிவை விட

நம்முடைய முடிவுகளை தான் நினைக்க வைக்கும்.


முடிவில்,

எல்லாம் மாயை என்று சொல்லவில்லை படம்.

சில மாயைகள் தான்

நம்மை நிஜத்துக்கு கொண்டு போகும் என்று சொல்கிறது.


#sarvammaya #moviereview #review #cinema 

 Sarvam Maya


— 

ஒரு மனிதன் இரண்டு உலகங்களுக்கு நடுவில் நிற்கிறான்.

ஒன்றில் பாரம்பரியம்.

மற்றொன்றில் அவன் தனிப்பட்ட இசை.


மலையாள சினிமா ஒரு விஷயத்தை நன்றாக அறிவது —

அது சத்தமாக பேசாது.

நிசப்தத்துக்கு வேலை கொடுக்கும்.


Sarvam Maya ஒரு ghost story அல்ல.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையை யார் எழுத வேண்டும் என்று quietly கேட்கும் கதை.

அவன் தந்தையா?

அவன் கடமையா?

அல்லது அவன் உள்ளே ஒலிக்கும் ஒரு melodyயா?


படம் முழுக்க பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்காது.

ஆனால் சிறிய உணர்வுகள் நடக்கிறது.

அதுதான் முக்கியம்.


Nivin Pauly நடித்திருக்கும் மனிதன்

வாழ்க்கையில் late-ஆ அல்ல,

life-க்கு parallel-ஆ நடக்கிறான்.

அதனால் தான் அவன் முகத்தில்

ஒரு permanent தயக்கம்.


Ghost இங்கு பயமுறுத்துவதற்கு இல்லை.

அது நினைவூட்டுவதற்கு.

நம்மை நாமே தவிர்த்துவிட்ட விஷயங்களை

மீண்டும் அழைக்க.


படத்தின் வேகம் மெதுவாக இருக்கும்.

அது குறை அல்ல.

அது ஒரு தீர்மானம்.


இந்த படத்தை பார்க்கும் போது

கதை முடிவை விட

நம்முடைய முடிவுகளை தான் நினைக்க வைக்கும்.


முடிவில்,

எல்லாம் மாயை என்று சொல்லவில்லை படம்.

சில மாயைகள் தான்

நம்மை நிஜத்துக்கு கொண்டு போகும் என்று சொல்கிறது.


#sarvammaya #moviereview #review #cinema 

சனி, 7 பிப்ரவரி, 2026

Tea Talkies Diaries: OMR-ல் ஒரு அமைதியான வெள்ளி

 

Tea Talkies – ஒரு வெள்ளி இரவு


Tea Talkies.


A cinematic café.

இந்த பெயரே ஒரு முன்னுரை போல இருந்தது.





அங்கே நான் peri peri fries order பண்ணியிருந்தேன்.

French fries-க்கு cuisine இருக்கா என தெரியாது.

ஆனா அந்த fries, அந்த இரவு,

சென்னை குளிர்ந்த காற்றோடு

தூரல் மழை கலந்து

சரியான இடத்தில் வந்து சேர்ந்திருந்தது.


OMR சாலை.

வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்து

அடுத்த இரண்டு நாட்கள்

ECR-ல் செலவு செய்பவர்களின் பகுதி என்று

எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

இப்போது அந்த வாழ்க்கையை

நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடையை சுற்றி கண்ணாடி.

உள்ளே… இன்னொரு கண்ணாடி அறை.

அதற்குள் நான்.

உள்ளிருந்து

வெளியே போகும் வாகனங்களை

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.


வெள்ளி இரவு.

மணி 11.

முன்னால் இரண்டு நாட்கள் விடுமுறை.

இந்த freedom-ஐ monetize செய்ய

OMR-ல் இப்போது

எண்ணிக்கையில்லா கடைகள்.

கடைக்குள்

“ஒரு தடவை சொல்வாயா…”

Vintage Vijay-யின் Vaseegara

மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது.

Time machine இல்லாமலே

அந்தப் படம்

என்னை தன் காலத்துக்கு அழைத்துச் சென்றது.


பாடல் முடியும் தருணத்தில்

“Sir… your order”

என்று waiter சொன்னான்.

நிகழ்காலம்

திரும்ப கை பிடித்து இழுத்தது.

அந்த waiter-க்கு வயசு ரொம்ப சின்னது.

அவன் “Sir”னு சொன்னது சரிதான்.

ஆனா “Bro”னு சொல்லி இருந்தா

என் சந்தோஷம்

இரட்டிப்பு ஆகி இருக்கும்.


சின்ன வயசுல

பெரியவன் ஆகணும்னு ஆசை படறதும்…

பெரியவன் ஆனதும்

சின்ன பையன் ஆகணும்னு ஆசை படறதும்

மனித இயல்பு தானே?


மொறு மொறு fries.

ஒரு கடி.

அட… அருமை.

எனக்கு ஒரு பழக்கம்.

சாப்பாடு உண்மையிலேயே சுவையா இருந்தா

கண்ணை மூடி

அதை ரசிப்பேன்.

அந்த இரவு

அதுவே நடந்தது.

உடனே

“Super bro…”

ன்னு சொன்னேன்.

அவன் முகத்துல

சின்ன சந்தோஷம்.

ஆனா உண்மையானது.


அம்மா சொல்வாள்:

“நீ சமைச்சவங்களை மறக்காம பாராட்டுவ.

மற்றவர்கள் மாடு போல தின்னிட்டு போயிடுவாங்க.”

அந்த வார்த்தைகள்

மனசுக்குள் மெதுவா வந்தது.

உருளைக்கிழங்கு மீது எனக்கு இருக்கும் விருப்பம்

அம்மாவிடமிருந்து தான்.

சின்ன வயசுல

அவள் ஆரம்பித்தது,

இன்று French fries வரை வந்திருக்கிறது.

அதனால்தான் என்னவோ,

நானும் இப்போது

உருளை போல

கொஞ்சம் குண்டா ஆயிட்டேன்.


வருடம் தொடங்கும்போது

“இந்த வருஷம் weight குறைக்கணும்”

ன்னு சொன்ன வாக்குறுதி,

அரசியல்வாதிகளின் வாக்குறுதி போல

ஜனவரி லேயே

காலாவதி ஆனது.


Fries கொரித்துக் கொண்டே

வழக்கம் போல

எதிர்காலத்தை பற்றி

சிந்திக்க ஆரம்பித்தேன்.

சிரிப்பு வந்தது.

“எதை இழந்தாலும்

உன் நம்பிக்கையை இழக்காதே”

ன்னு

என் பாட்டி

சின்ன வயசுல சொன்ன வார்த்தைகள்

மனசுக்குள் ஒலித்தது.


இந்த memes உலகில்,

கவுண்டமணி

ஒட்டக்கண்ணாடி போட்டுக்கிட்டு

எப்படி தைரியமா நிக்கறியோ

ன்னு

ரஜினிகாந்த் கேட்பார் இல்லையா…

அந்த மாதிரி

நானே எனக்கே

“நீ ரொம்ப தைரியசாலி”

ன்னு சொல்லிக்கிட்டு

சிரிச்சுக்கிட்டேன்.


அந்த நேரம்

கடைக்குள்

“அலையே அலையே

காட்டுல மழையே…”

ஒலித்தது.

“என் மூச்சவள்

பேச்சவள்

பேர் சொல்லும் அழகவள்

எனக்குள்ள கலக்குற

ஆக்ஸிஜன் அளவவள்…”

என்னை அறியாமலே

பாட ஆரம்பிச்சேன்.

“Super bro!”

ன்னு அந்த கடை தம்பி சொன்னான்.

இந்த முறை

“Sir” இல்ல.

“Bro”.

அந்த ஒரு வார்த்தை

இந்த வெள்ளி இரவை

முழுமையாக்கியது.

இப்படித்தான்

கடந்து போனது

ஒரு வெள்ளி இரவு.


#TeaTalkies

#FridayNight

#ChennaiNights

#OMRDiaries

 

Tea Talkies – ஒரு வெள்ளி இரவு


Tea Talkies.


A cinematic café.

இந்த பெயரே ஒரு முன்னுரை போல இருந்தது.





அங்கே நான் peri peri fries order பண்ணியிருந்தேன்.

French fries-க்கு cuisine இருக்கா என தெரியாது.

ஆனா அந்த fries, அந்த இரவு,

சென்னை குளிர்ந்த காற்றோடு

தூரல் மழை கலந்து

சரியான இடத்தில் வந்து சேர்ந்திருந்தது.


OMR சாலை.

வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்து

அடுத்த இரண்டு நாட்கள்

ECR-ல் செலவு செய்பவர்களின் பகுதி என்று

எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

இப்போது அந்த வாழ்க்கையை

நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடையை சுற்றி கண்ணாடி.

உள்ளே… இன்னொரு கண்ணாடி அறை.

அதற்குள் நான்.

உள்ளிருந்து

வெளியே போகும் வாகனங்களை

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.


வெள்ளி இரவு.

மணி 11.

முன்னால் இரண்டு நாட்கள் விடுமுறை.

இந்த freedom-ஐ monetize செய்ய

OMR-ல் இப்போது

எண்ணிக்கையில்லா கடைகள்.

கடைக்குள்

“ஒரு தடவை சொல்வாயா…”

Vintage Vijay-யின் Vaseegara

மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது.

Time machine இல்லாமலே

அந்தப் படம்

என்னை தன் காலத்துக்கு அழைத்துச் சென்றது.


பாடல் முடியும் தருணத்தில்

“Sir… your order”

என்று waiter சொன்னான்.

நிகழ்காலம்

திரும்ப கை பிடித்து இழுத்தது.

அந்த waiter-க்கு வயசு ரொம்ப சின்னது.

அவன் “Sir”னு சொன்னது சரிதான்.

ஆனா “Bro”னு சொல்லி இருந்தா

என் சந்தோஷம்

இரட்டிப்பு ஆகி இருக்கும்.


சின்ன வயசுல

பெரியவன் ஆகணும்னு ஆசை படறதும்…

பெரியவன் ஆனதும்

சின்ன பையன் ஆகணும்னு ஆசை படறதும்

மனித இயல்பு தானே?


மொறு மொறு fries.

ஒரு கடி.

அட… அருமை.

எனக்கு ஒரு பழக்கம்.

சாப்பாடு உண்மையிலேயே சுவையா இருந்தா

கண்ணை மூடி

அதை ரசிப்பேன்.

அந்த இரவு

அதுவே நடந்தது.

உடனே

“Super bro…”

ன்னு சொன்னேன்.

அவன் முகத்துல

சின்ன சந்தோஷம்.

ஆனா உண்மையானது.


அம்மா சொல்வாள்:

“நீ சமைச்சவங்களை மறக்காம பாராட்டுவ.

மற்றவர்கள் மாடு போல தின்னிட்டு போயிடுவாங்க.”

அந்த வார்த்தைகள்

மனசுக்குள் மெதுவா வந்தது.

உருளைக்கிழங்கு மீது எனக்கு இருக்கும் விருப்பம்

அம்மாவிடமிருந்து தான்.

சின்ன வயசுல

அவள் ஆரம்பித்தது,

இன்று French fries வரை வந்திருக்கிறது.

அதனால்தான் என்னவோ,

நானும் இப்போது

உருளை போல

கொஞ்சம் குண்டா ஆயிட்டேன்.


வருடம் தொடங்கும்போது

“இந்த வருஷம் weight குறைக்கணும்”

ன்னு சொன்ன வாக்குறுதி,

அரசியல்வாதிகளின் வாக்குறுதி போல

ஜனவரி லேயே

காலாவதி ஆனது.


Fries கொரித்துக் கொண்டே

வழக்கம் போல

எதிர்காலத்தை பற்றி

சிந்திக்க ஆரம்பித்தேன்.

சிரிப்பு வந்தது.

“எதை இழந்தாலும்

உன் நம்பிக்கையை இழக்காதே”

ன்னு

என் பாட்டி

சின்ன வயசுல சொன்ன வார்த்தைகள்

மனசுக்குள் ஒலித்தது.


இந்த memes உலகில்,

கவுண்டமணி

ஒட்டக்கண்ணாடி போட்டுக்கிட்டு

எப்படி தைரியமா நிக்கறியோ

ன்னு

ரஜினிகாந்த் கேட்பார் இல்லையா…

அந்த மாதிரி

நானே எனக்கே

“நீ ரொம்ப தைரியசாலி”

ன்னு சொல்லிக்கிட்டு

சிரிச்சுக்கிட்டேன்.


அந்த நேரம்

கடைக்குள்

“அலையே அலையே

காட்டுல மழையே…”

ஒலித்தது.

“என் மூச்சவள்

பேச்சவள்

பேர் சொல்லும் அழகவள்

எனக்குள்ள கலக்குற

ஆக்ஸிஜன் அளவவள்…”

என்னை அறியாமலே

பாட ஆரம்பிச்சேன்.

“Super bro!”

ன்னு அந்த கடை தம்பி சொன்னான்.

இந்த முறை

“Sir” இல்ல.

“Bro”.

அந்த ஒரு வார்த்தை

இந்த வெள்ளி இரவை

முழுமையாக்கியது.

இப்படித்தான்

கடந்து போனது

ஒரு வெள்ளி இரவு.


#TeaTalkies

#FridayNight

#ChennaiNights

#OMRDiaries

திங்கள், 2 பிப்ரவரி, 2026

மெட்ராஸ் டயரி: விசிலில் தொடங்கும் விடியல்

 மெட்ராஸ் டயரி: விசிலில் தொடங்கும் விடியல் 



​தை குளிர் தரையைப் பிளக்கிறதோ இல்லையோ, நடுத்தர வர்க்கத்தின் கனவுகளைப் பிளந்து கொண்டு சூரியன் வந்துவிட்டான்.


​குக்கர் புராணம்

சென்னையில் கோழிகள் கூவுவதில்லை; குக்கர்கள்தான் அலறுகின்றன. அடுப்பு ஊதி, சோறு பொங்கி, டிபன் பாக்ஸில் அடைத்து... ஒரு வழியாகக் கணவனையும் பிள்ளைகளையும் 'ஷிப்மென்ட்' செய்துவிட்டுதான் அந்தப் பெண்களுக்குப் பொழுது விடிகிறது.


​ஒத்திகை பார்க்கும் முதுகுகள்


பள்ளிப் பைகள்... அது பையல்ல, குழந்தைகளின் எதிர்காலச் சுமைக்கான பயிற்சி முகாம். பிற்காலத்தில் குடும்ப பாரத்தைத் தாங்கப் போகும் முதுகுகளுக்கு இப்போதே 'ஹெவி வெயிட்' டிரெய்னிங் கொடுக்கிறது இந்தச் சமூகம். அந்தப் பிஞ்சு முதுகுகளில் தெரிவது புத்தகங்கள் அல்ல, நம் தோல்விகளின் பாரம்.


​அட்டைப்பூச்சிகளும் அனிச்சைச் செயல்களும்


அரசுப் பேருந்துகளில் நடுத்தர வர்க்கப் பெண்களின் பயணம் ஒரு யுத்தம். கூட்டத்தைச் சாக்காக்கி உரசிப் பார்க்கும் அந்த அட்டைப்பூச்சிகளைச் சபித்துக் கொண்டே, "நாளை விடியும்" என்கிற போலி நம்பிக்கையைத் துணையாகக் கொண்டு நகர்கிறார்கள். அந்தத் தீண்டல்களைக் கடந்து அலுவலகம் செல்வதே ஒரு சாதனைதான்.


​EMI எலைட்கள்


EMI-ல் கார் வாங்கிவிட்டு, அடுத்த மாதம் தவணை கட்ட முடியுமா என்ற கவலையை மறைக்கக் கண்ணாடி ஏற்றி ஏசி போட்டுக்கொண்டு, சாலையில் பைக்கில் போவோரை 'கிள்ளுக்கீரையாய்' பார்க்கும் ஜந்துக்கள் இவர்கள். ரோடு சரியில்லை என்று அரசாங்கத்தைத் திட்டிவிட்டு, தான் ஏதோ அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் பயணிப்பதாக ஒரு மாயையில் இருக்கும் 'குளோபல்' குடிமகன்கள்.


​சாமான்யர்களின் சாலை யுத்தம்


இன்னொரு பக்கம் ஷேர் ஆட்டோக்களில் முட்டி மோதிப் பயணிக்கும் நடுத்தர வர்க்கம். சாதாரண ஆட்டோக்களில் மீட்டர் போடுவதைப் பற்றிப் பேசிப் பேசிப் பயனும் இல்லை... ஒரு தொகையை பேரம் பேசி, அதில் ஆட்டோக்காரருக்கும் திருப்தி இருக்காது, ஏறிய பயணிக்கும் மன நிறைவு இருக்காது; இருவருக்குள்ளும் ஒரு 'அமைதிப் படை' போர் நடந்து கொண்டே இருக்கும். இனி 'கேப்' (Cab) எடுத்தால் நிம்மதி கிடைக்குமா என்றால், ஆப் காட்டும் தொகைக்கு மேல் 'ஒரு அம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா' கொடுத்தால் தான் வண்டி நகரும் என அடம் பிடிக்கும் டிரைவர்கள். இவர்கள்தான் நம் நாட்டின் உண்மையான அன்றாட அடையாளங்கள்!


​யார் அந்த 'ஆள்'?


"நம்மைப் பற்றி எல்லாம் யார் எழுதப் போகிறார்கள்?" என்று தங்களைத் தாங்களே தாழ்வாக நினைக்கும் இந்தச் சாதாரண மனிதர்களை, ஒரு கேமராவின் துல்லியத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன்.

​அவன் இந்தப் பிரபஞ்சத்தின் சாட்சி.

அவன் தான் நான்.

​அன்புடன்,

ராஜா. க

 மெட்ராஸ் டயரி: விசிலில் தொடங்கும் விடியல் 



​தை குளிர் தரையைப் பிளக்கிறதோ இல்லையோ, நடுத்தர வர்க்கத்தின் கனவுகளைப் பிளந்து கொண்டு சூரியன் வந்துவிட்டான்.


​குக்கர் புராணம்

சென்னையில் கோழிகள் கூவுவதில்லை; குக்கர்கள்தான் அலறுகின்றன. அடுப்பு ஊதி, சோறு பொங்கி, டிபன் பாக்ஸில் அடைத்து... ஒரு வழியாகக் கணவனையும் பிள்ளைகளையும் 'ஷிப்மென்ட்' செய்துவிட்டுதான் அந்தப் பெண்களுக்குப் பொழுது விடிகிறது.


​ஒத்திகை பார்க்கும் முதுகுகள்


பள்ளிப் பைகள்... அது பையல்ல, குழந்தைகளின் எதிர்காலச் சுமைக்கான பயிற்சி முகாம். பிற்காலத்தில் குடும்ப பாரத்தைத் தாங்கப் போகும் முதுகுகளுக்கு இப்போதே 'ஹெவி வெயிட்' டிரெய்னிங் கொடுக்கிறது இந்தச் சமூகம். அந்தப் பிஞ்சு முதுகுகளில் தெரிவது புத்தகங்கள் அல்ல, நம் தோல்விகளின் பாரம்.


​அட்டைப்பூச்சிகளும் அனிச்சைச் செயல்களும்


அரசுப் பேருந்துகளில் நடுத்தர வர்க்கப் பெண்களின் பயணம் ஒரு யுத்தம். கூட்டத்தைச் சாக்காக்கி உரசிப் பார்க்கும் அந்த அட்டைப்பூச்சிகளைச் சபித்துக் கொண்டே, "நாளை விடியும்" என்கிற போலி நம்பிக்கையைத் துணையாகக் கொண்டு நகர்கிறார்கள். அந்தத் தீண்டல்களைக் கடந்து அலுவலகம் செல்வதே ஒரு சாதனைதான்.


​EMI எலைட்கள்


EMI-ல் கார் வாங்கிவிட்டு, அடுத்த மாதம் தவணை கட்ட முடியுமா என்ற கவலையை மறைக்கக் கண்ணாடி ஏற்றி ஏசி போட்டுக்கொண்டு, சாலையில் பைக்கில் போவோரை 'கிள்ளுக்கீரையாய்' பார்க்கும் ஜந்துக்கள் இவர்கள். ரோடு சரியில்லை என்று அரசாங்கத்தைத் திட்டிவிட்டு, தான் ஏதோ அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் பயணிப்பதாக ஒரு மாயையில் இருக்கும் 'குளோபல்' குடிமகன்கள்.


​சாமான்யர்களின் சாலை யுத்தம்


இன்னொரு பக்கம் ஷேர் ஆட்டோக்களில் முட்டி மோதிப் பயணிக்கும் நடுத்தர வர்க்கம். சாதாரண ஆட்டோக்களில் மீட்டர் போடுவதைப் பற்றிப் பேசிப் பேசிப் பயனும் இல்லை... ஒரு தொகையை பேரம் பேசி, அதில் ஆட்டோக்காரருக்கும் திருப்தி இருக்காது, ஏறிய பயணிக்கும் மன நிறைவு இருக்காது; இருவருக்குள்ளும் ஒரு 'அமைதிப் படை' போர் நடந்து கொண்டே இருக்கும். இனி 'கேப்' (Cab) எடுத்தால் நிம்மதி கிடைக்குமா என்றால், ஆப் காட்டும் தொகைக்கு மேல் 'ஒரு அம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா' கொடுத்தால் தான் வண்டி நகரும் என அடம் பிடிக்கும் டிரைவர்கள். இவர்கள்தான் நம் நாட்டின் உண்மையான அன்றாட அடையாளங்கள்!


​யார் அந்த 'ஆள்'?


"நம்மைப் பற்றி எல்லாம் யார் எழுதப் போகிறார்கள்?" என்று தங்களைத் தாங்களே தாழ்வாக நினைக்கும் இந்தச் சாதாரண மனிதர்களை, ஒரு கேமராவின் துல்லியத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன்.

​அவன் இந்தப் பிரபஞ்சத்தின் சாட்சி.

அவன் தான் நான்.

​அன்புடன்,

ராஜா. க

வியாழன், 15 ஜனவரி, 2026

பொங்கல் கொண்டாட்டங்கள்: அன்பின் பிணைப்பா? அல்லது அதிகாரமா?

 



​சமூக வலைதளங்களில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் 82 வயது மாமனார் கரும்பு சுமக்கிறார், ஆந்திராவில் மாமியார் 155 பதார்த்தங்கள் செய்கிறார்; இது பெண்ணை விட ஆண் உயர்ந்தவர் என்ற நிலையை உறுதிப்படுத்துகிறது" என்பது அந்த வாதத்தின் சுருக்கம்.

​ஆனால், என் பார்வை வேறு. உறவுகளுக்குள் இருக்கும் "பாசம்" மற்றும் "கடமை" ஆகியவற்றை வெறும் ஆதிக்கக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது ஒரு மிகப்பெரிய தவறு.

​பாசம் என்பது சௌகரியம் பார்ப்பதல்ல

​82 வயதில் ஒரு முதியவர் கரும்பு சுமப்பதும், ஒரு தாய் 150-க்கும் மேற்பட்ட பதார்த்தங்களைச் செய்வதும் யாருடைய கட்டாயத்தினாலோ அல்லது ஒருவரை உயர்ந்தவராகக் காட்டவோ செய்யப்படுவதல்ல. அவை அன்பின் வெளிப்பாடுகள். உறவுகளுக்குள் இருக்கும் இந்த நெகிழ்ச்சிதான் இந்தியக் குடும்ப அமைப்பின் அஸ்திவாரம். இதை 'ஆணுக்குச் சௌகரியம், பெண்ணுக்கு அசௌகரியம்' என்று 'Normalize' செய்வது உறவுகளின் புனிதத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.

​பணத்தைத் தாண்டிய ஒரு உலகம்

​உலகமயமாக்கலுக்குப் பிறகு (Globalization), உலகம் முழுவதிலும் மனிதர்கள் "பணம்" என்ற ஒன்றை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாசம், நேசம் மற்றும் விசுவாசம் ஆகியவை குறைந்து வரும் வேளையில், இந்தியப் பண்டிகைகள் இன்றும் அந்த மதிப்பீடுகளை உயிர்ப்போடு வைத்துள்ளன. மற்ற நாடுகள் நம் இந்தியக் குடும்ப அமைப்பைப் பார்த்து வியப்பதற்குக் காரணமே இதுபோன்ற விட்டுக்கொடுத்தல்களும், ஒருவருக்கொருவர் காட்டும் அளப்பரிய பிரியமும்தான்.

​குடும்பச் சங்கிலியின் பலம்

​மேற்கத்திய நாடுகள் தனிமனிதவாதத்தால் (Individualism) சிதைந்து வரும் வேளையில், இந்தியக் குடும்பச் சங்கிலியை அறுந்துவிடாமல் பிடிப்புடன் வைத்திருப்பது இதுபோன்ற தருணங்கள்தான். அன்பால் செய்யப்படும் செயல்களை 'அடிமைத்தனம்' என்று முத்திரை குத்துவது ஆபத்தானது.

​உண்மையில், இதுபோன்ற ஆழமான அன்பைக் குடும்பத்தினரிடம் இருந்து அனுபவிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களே இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பணம் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது, அது "அன்பு" என்பதை இந்தப் பொங்கல் பண்டிகை மீண்டும் நிரூபித்துள்ளது.


அன்புடன் 

ராஜா.க 

 



​சமூக வலைதளங்களில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் 82 வயது மாமனார் கரும்பு சுமக்கிறார், ஆந்திராவில் மாமியார் 155 பதார்த்தங்கள் செய்கிறார்; இது பெண்ணை விட ஆண் உயர்ந்தவர் என்ற நிலையை உறுதிப்படுத்துகிறது" என்பது அந்த வாதத்தின் சுருக்கம்.

​ஆனால், என் பார்வை வேறு. உறவுகளுக்குள் இருக்கும் "பாசம்" மற்றும் "கடமை" ஆகியவற்றை வெறும் ஆதிக்கக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது ஒரு மிகப்பெரிய தவறு.

​பாசம் என்பது சௌகரியம் பார்ப்பதல்ல

​82 வயதில் ஒரு முதியவர் கரும்பு சுமப்பதும், ஒரு தாய் 150-க்கும் மேற்பட்ட பதார்த்தங்களைச் செய்வதும் யாருடைய கட்டாயத்தினாலோ அல்லது ஒருவரை உயர்ந்தவராகக் காட்டவோ செய்யப்படுவதல்ல. அவை அன்பின் வெளிப்பாடுகள். உறவுகளுக்குள் இருக்கும் இந்த நெகிழ்ச்சிதான் இந்தியக் குடும்ப அமைப்பின் அஸ்திவாரம். இதை 'ஆணுக்குச் சௌகரியம், பெண்ணுக்கு அசௌகரியம்' என்று 'Normalize' செய்வது உறவுகளின் புனிதத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.

​பணத்தைத் தாண்டிய ஒரு உலகம்

​உலகமயமாக்கலுக்குப் பிறகு (Globalization), உலகம் முழுவதிலும் மனிதர்கள் "பணம்" என்ற ஒன்றை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாசம், நேசம் மற்றும் விசுவாசம் ஆகியவை குறைந்து வரும் வேளையில், இந்தியப் பண்டிகைகள் இன்றும் அந்த மதிப்பீடுகளை உயிர்ப்போடு வைத்துள்ளன. மற்ற நாடுகள் நம் இந்தியக் குடும்ப அமைப்பைப் பார்த்து வியப்பதற்குக் காரணமே இதுபோன்ற விட்டுக்கொடுத்தல்களும், ஒருவருக்கொருவர் காட்டும் அளப்பரிய பிரியமும்தான்.

​குடும்பச் சங்கிலியின் பலம்

​மேற்கத்திய நாடுகள் தனிமனிதவாதத்தால் (Individualism) சிதைந்து வரும் வேளையில், இந்தியக் குடும்பச் சங்கிலியை அறுந்துவிடாமல் பிடிப்புடன் வைத்திருப்பது இதுபோன்ற தருணங்கள்தான். அன்பால் செய்யப்படும் செயல்களை 'அடிமைத்தனம்' என்று முத்திரை குத்துவது ஆபத்தானது.

​உண்மையில், இதுபோன்ற ஆழமான அன்பைக் குடும்பத்தினரிடம் இருந்து அனுபவிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களே இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பணம் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது, அது "அன்பு" என்பதை இந்தப் பொங்கல் பண்டிகை மீண்டும் நிரூபித்துள்ளது.


அன்புடன் 

ராஜா.க