வெள்ளி, 22 மே, 2026

தெற்கிலிருந்து வந்தவனும்... சென்னை மாநகரத்து ‘என்றென்றும் புன்னகை’யும்!

 தெற்கிலிருந்து வந்தவனும்... சென்னை மாநகரத்து ‘என்றென்றும் புன்னகை’யும்!



தெற்கிலிருந்து சென்னை நோக்கி வர்ற எல்லாருக்குள்ளயும் ஒரு பெரிய கனவு இருக்கும். திருச்செந்தூர் கடல் காத்தைக் குடிச்சு வளர்ந்த நானும், சென்னைக்கு வந்தப்போ அப்படித்தான் ஒரு வெறியோட ஒரு கனவைச் சுமந்துட்டு வந்தேன்.


2000-ல தியேட்டர் இருட்டுல 'அலைபாயுதே' படம் பார்த்துட்டு இருக்கேன். காதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு, ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரா மாதவன் பைக்ல வர்ற அந்த இன்ட்ரோ சீன் அப்படியே மனசுல பதிஞ்சிடுச்சு. "நாமளும் பெருசானதும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகணும், சென்னை சிட்டில இதே மாதிரி பைக் வாங்கி ஓட்டணும்" அப்படின்னு அன்னைக்கு மனசுக்குள்ள விழுந்த விதை அது.


​இப்போ உள்ள பசங்க லாங்குவேஜ்ல சொல்லணும்னா, அந்த மாதவன் சீனை என் லைஃப்ல ரீ-கிரியேட் பண்ண எனக்குச் சரியா 12 வருஷம் தேவைப்பட்டுச்சு.


உண்மையைச் சொன்னா, என்னை சாஃப்ட்வேர் இன்ஜினியரா அப்பா படிக்க வச்சாரு; ஆனா, இந்த பைக்கை என் சொந்த உழைப்போட சேமிப்புல நான் வாங்கினேன்! எந்த ஃபைனான்ஸும் இல்லாம, கடனே இல்லாம, கஷ்டப்பட்டுச் சேர்த்த என்னோட காசுல இந்த வண்டியோட சாவியை கையில் வாங்குனப்போ இருந்த கெத்தே தனி. நண்பர்கள் சொன்ன மாதிரியே நல்ல மைலேஜும் கொடுத்துச்சு.


ஒருவழியாக வண்டியை எடுத்து, காதுல அதே 'என்றென்றும் புன்னகை' பாட்டை ஓடவிட்டு, சென்னை ரோட்ல நான் அடிச்ச அந்த முதல் ரவுண்ட் இருக்கே... அது வெறும் பைக் ரைடு இல்ல, அப்பாவோட காசுல படிச்சுட்டு, தனக்கான கனவை இந்தச் சென்னையில ஜெயிச்சுக் காட்டுன ஒரு தெற்கத்திக்காரனோட கெத்தான தருணம்! 


@Vairamuthu கவிப்பேரரசு சொன்ன மாதிரி நூறு கனவுகள் கண்டாளே ஆறு கனவுகள் பலிக்காதா அந்த மாதிரி சில பொருட்கள், சில படங்கள் நம் ஆழ் மனதில் பதிந்து இருக்கும்.

@ActorMadhavan

#அலைபாயுதே #TamilCinema #Dream

 தெற்கிலிருந்து வந்தவனும்... சென்னை மாநகரத்து ‘என்றென்றும் புன்னகை’யும்!



தெற்கிலிருந்து சென்னை நோக்கி வர்ற எல்லாருக்குள்ளயும் ஒரு பெரிய கனவு இருக்கும். திருச்செந்தூர் கடல் காத்தைக் குடிச்சு வளர்ந்த நானும், சென்னைக்கு வந்தப்போ அப்படித்தான் ஒரு வெறியோட ஒரு கனவைச் சுமந்துட்டு வந்தேன்.


2000-ல தியேட்டர் இருட்டுல 'அலைபாயுதே' படம் பார்த்துட்டு இருக்கேன். காதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு, ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரா மாதவன் பைக்ல வர்ற அந்த இன்ட்ரோ சீன் அப்படியே மனசுல பதிஞ்சிடுச்சு. "நாமளும் பெருசானதும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகணும், சென்னை சிட்டில இதே மாதிரி பைக் வாங்கி ஓட்டணும்" அப்படின்னு அன்னைக்கு மனசுக்குள்ள விழுந்த விதை அது.


​இப்போ உள்ள பசங்க லாங்குவேஜ்ல சொல்லணும்னா, அந்த மாதவன் சீனை என் லைஃப்ல ரீ-கிரியேட் பண்ண எனக்குச் சரியா 12 வருஷம் தேவைப்பட்டுச்சு.


உண்மையைச் சொன்னா, என்னை சாஃப்ட்வேர் இன்ஜினியரா அப்பா படிக்க வச்சாரு; ஆனா, இந்த பைக்கை என் சொந்த உழைப்போட சேமிப்புல நான் வாங்கினேன்! எந்த ஃபைனான்ஸும் இல்லாம, கடனே இல்லாம, கஷ்டப்பட்டுச் சேர்த்த என்னோட காசுல இந்த வண்டியோட சாவியை கையில் வாங்குனப்போ இருந்த கெத்தே தனி. நண்பர்கள் சொன்ன மாதிரியே நல்ல மைலேஜும் கொடுத்துச்சு.


ஒருவழியாக வண்டியை எடுத்து, காதுல அதே 'என்றென்றும் புன்னகை' பாட்டை ஓடவிட்டு, சென்னை ரோட்ல நான் அடிச்ச அந்த முதல் ரவுண்ட் இருக்கே... அது வெறும் பைக் ரைடு இல்ல, அப்பாவோட காசுல படிச்சுட்டு, தனக்கான கனவை இந்தச் சென்னையில ஜெயிச்சுக் காட்டுன ஒரு தெற்கத்திக்காரனோட கெத்தான தருணம்! 


@Vairamuthu கவிப்பேரரசு சொன்ன மாதிரி நூறு கனவுகள் கண்டாளே ஆறு கனவுகள் பலிக்காதா அந்த மாதிரி சில பொருட்கள், சில படங்கள் நம் ஆழ் மனதில் பதிந்து இருக்கும்.

@ActorMadhavan

#அலைபாயுதே #TamilCinema #Dream

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக