திருநெல்வேலி நாள் வாழ்த்துகள் 🎉
திருநெல்வேலி – பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை அந்த காலத்தில் பிரித்திருந்த ஆற்றை கடக்க, அப்போது மக்கள் பரிசல்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
அந்த நிலையை பார்த்து, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்த ஒரு “தனி நபர்” தன்னுடைய பணத்தோடு நேரடியாக ஆங்கிலேய கலெக்டரிடம் சென்றார்.
ஆனால் கலெக்டர், அவமானப்படுத்தும் விதமாக —
“உன் பணத்தை தண்ணீரில் போய் போடு” என்று கூறினார்.
ஆனால் அந்த தனி நபர், அதையே உண்மையாகக் கொண்டார். ஆம், அவர் தண்ணீரில் தான் தனது பணத்தை போட்டார்!
அதன் விளைவாக, பாளையங்கோட்டை – திருநெல்வேலி இடையே ஒரு பாலம் கட்டப்பட்டது.
அந்த தனி நபர் தான் சுலோச்சனா முதலியார். 🙏
அவரின் சேவைக்காக, அந்தப் பாலத்துக்கு அவரின் பெயரையே சூட்டினார்கள்.
அன்று தொடங்கி இன்று வரை, அந்தப் பாலம்
“சுலோச்சனா முதலியார் பாலம்” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ❤️
இன்று #திருநெல்வேலி நாள்!
இந்த அற்புத வரலாற்றை நினைவு
கூர்ந்து
Happy Birthday Tirunelveli ! 🎂✨
இவன்
ராஜா. க.
#Tirunelveli | #tirunelveliday
#Tirunelveli #Palayamkottai #SulochanaMudaliarBridge #TirunelveliDay #Heritage #History #Legacy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக