திங்கள், 27 ஜனவரி, 2025

திரு. மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: ரிவியூ

 திரு.


மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: 


பஸ் ஸ்டான்டில் புத்தக கடையுடன் லாட்டரியையும் சேர்த்து விற்கும் ஒரு நேர்மையான மனிதர், அவரின் வாழ்க்கையும் குடும்பத்தின் சவால்களும், மனிதரின் உள்ளம் வருடும் கதைதான் திரு. மாணிக்கம்.


கதை சுருக்கம்:


இக்கதையின் மையத்தில் நிற்கும் நாயகன், ஒரு சின்ன லாட்டரி கடை நடத்தி, தனது இரண்டு பெண் குழந்தைகளையும், மருத்துவ சிகிச்சைக்காக போராடும் மகளையும், தனது கடன் சுமைகளையும் சமாளிக்கிறார்.


ஒருநாள், கடனாக ஒரு பெரியவருக்கு லாட்டரி சீட்டொன்றை தருகிறார். அதிர்ச்சியாக அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுகிறது. ஆனால் அந்த பெரியவரின் மகள், வரதட்சணை பிரச்சனை காரணமாக தனது பிறந்த வீட்டிற்கு திரும்பி வரும் சூழல், கதையில் நெகிழ்ச்சியான திருப்பங்களை உருவாக்குகிறது.


நேர்மையான லாட்டரி கடைக்காரர், பரிசு பெற்ற லாட்டரி சீட்டை அந்த பெரியவரிடம் கொடுக்க செல்லும் போது, அவரது குடும்பத்தினரும், காவல் துறையும் தங்களின் செல்வாக்குடன் அவரை தடுக்க முயல்கிறார்கள். இந்நிலையில், அவர் நேர்மையுடன் நிலைத்திருக்க எடுத்த முடிவுகள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழவைக்கும்.


இக் கதாப்பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை விட யாரும் சரியாக பொருந்த முடியாது. அவரது நடிப்பு, பார்வையாளர்களை அவரது கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ வைக்கிறது. குறிப்பாக, அவர் காட்டும் நேர்மை படம் பார்க்கும் நம்மையும் அவருடைய குடும்ப உறுப்பினர் போலவே அவர் மீது கோபப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.


ஏன் இவ்வளவு நேர்மை குசும்பு க்கு காரணம்?

அழுத்தமான fLashback, அதுக்கு உயிர் கொடுத்திருப்பார் "நாசர்" அவரின் பரவசமான நடிப்பு, கதை க்கு உயிர் கொடுக்கிறது.


மனித உணர்வுகளை சித்தரிக்கும் கலை:


இத்தகைய திரைப்படங்கள் மனிதர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கின்றன. உறவுகள், நேர்மை, மனித உணர்வுகளை மனதிற்கு பதியும்படி கொண்டுவந்துள்ளது திரு. மாணிக்கம்.


என்னை கவர்ந்த அம்சங்கள்:


1. நேர்மையின் மீது அழுத்தம் கொடுக்கும் கதை.

2. கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டும் சமுத்திரக்கனியின் நடிப்பு.

3. நாசரின் ஃபிளாஷ்பேக் கதைக்கு கொடுக்கும் காட்சி.

4. நுணுக்கமான உணர்வுகளை சித்தரிக்கும் மனதை வருடும் பின்னணி இசை.

5. படம் சுபமாக முடிந்து Feel Good அனுபவத்தைக் கொடுப்பது.


அந்த நேர்மையும் கண்ணியமும் உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு திரு. மாணிக்கம் ஓர் அழுத்தமான சாட்சியம்.


Zee5 OTT-யில் உள்ளது.


ஓர் feel Good movie படங்களை விரும்புபவர்கள் தவறாமல் பாருங்கள்!


#ThiruManickam #Zee5 #Tamilmovie @thondankani 👏🏻👏🏻👏🏻

 திரு.


மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: 


பஸ் ஸ்டான்டில் புத்தக கடையுடன் லாட்டரியையும் சேர்த்து விற்கும் ஒரு நேர்மையான மனிதர், அவரின் வாழ்க்கையும் குடும்பத்தின் சவால்களும், மனிதரின் உள்ளம் வருடும் கதைதான் திரு. மாணிக்கம்.


கதை சுருக்கம்:


இக்கதையின் மையத்தில் நிற்கும் நாயகன், ஒரு சின்ன லாட்டரி கடை நடத்தி, தனது இரண்டு பெண் குழந்தைகளையும், மருத்துவ சிகிச்சைக்காக போராடும் மகளையும், தனது கடன் சுமைகளையும் சமாளிக்கிறார்.


ஒருநாள், கடனாக ஒரு பெரியவருக்கு லாட்டரி சீட்டொன்றை தருகிறார். அதிர்ச்சியாக அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுகிறது. ஆனால் அந்த பெரியவரின் மகள், வரதட்சணை பிரச்சனை காரணமாக தனது பிறந்த வீட்டிற்கு திரும்பி வரும் சூழல், கதையில் நெகிழ்ச்சியான திருப்பங்களை உருவாக்குகிறது.


நேர்மையான லாட்டரி கடைக்காரர், பரிசு பெற்ற லாட்டரி சீட்டை அந்த பெரியவரிடம் கொடுக்க செல்லும் போது, அவரது குடும்பத்தினரும், காவல் துறையும் தங்களின் செல்வாக்குடன் அவரை தடுக்க முயல்கிறார்கள். இந்நிலையில், அவர் நேர்மையுடன் நிலைத்திருக்க எடுத்த முடிவுகள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழவைக்கும்.


இக் கதாப்பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை விட யாரும் சரியாக பொருந்த முடியாது. அவரது நடிப்பு, பார்வையாளர்களை அவரது கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ வைக்கிறது. குறிப்பாக, அவர் காட்டும் நேர்மை படம் பார்க்கும் நம்மையும் அவருடைய குடும்ப உறுப்பினர் போலவே அவர் மீது கோபப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.


ஏன் இவ்வளவு நேர்மை குசும்பு க்கு காரணம்?

அழுத்தமான fLashback, அதுக்கு உயிர் கொடுத்திருப்பார் "நாசர்" அவரின் பரவசமான நடிப்பு, கதை க்கு உயிர் கொடுக்கிறது.


மனித உணர்வுகளை சித்தரிக்கும் கலை:


இத்தகைய திரைப்படங்கள் மனிதர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கின்றன. உறவுகள், நேர்மை, மனித உணர்வுகளை மனதிற்கு பதியும்படி கொண்டுவந்துள்ளது திரு. மாணிக்கம்.


என்னை கவர்ந்த அம்சங்கள்:


1. நேர்மையின் மீது அழுத்தம் கொடுக்கும் கதை.

2. கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டும் சமுத்திரக்கனியின் நடிப்பு.

3. நாசரின் ஃபிளாஷ்பேக் கதைக்கு கொடுக்கும் காட்சி.

4. நுணுக்கமான உணர்வுகளை சித்தரிக்கும் மனதை வருடும் பின்னணி இசை.

5. படம் சுபமாக முடிந்து Feel Good அனுபவத்தைக் கொடுப்பது.


அந்த நேர்மையும் கண்ணியமும் உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு திரு. மாணிக்கம் ஓர் அழுத்தமான சாட்சியம்.


Zee5 OTT-யில் உள்ளது.


ஓர் feel Good movie படங்களை விரும்புபவர்கள் தவறாமல் பாருங்கள்!


#ThiruManickam #Zee5 #Tamilmovie @thondankani 👏🏻👏🏻👏🏻

வெள்ளி, 24 ஜனவரி, 2025

தலைவாசல் – 90களின் கல்லூரி கதை

 தலைவாசல் – 90களின் கல்லூரி கதை



தலைவாசல் திரைப்படம் 90களில் கல்லூரி வாழ்க்கையை கண் முன்னே கொண்டுவரும் ஒரு சிறந்த திரைப்படம். கமல்ஹாசனின் நம்மவர் படத்திற்கு முன்னோட்டமாக படம் இது, ஒழுக்கக் கேடு நிறைந்த கல்லூரியின் மாற்றத்தை மையமாகக் கொண்டது.


கதைக்களம்:

சென்னையின் நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்கக் கேடுகளால் கஞ்சா, அடிதடி, தவறான வழிகளில் சென்ற மாணவர்களை திருத்த முதல்வராக வரும் SP.பாலசுப்ரமணியம் அவர்களின் கதாபாத்திரம் முக்கியம்.


நாயகன்:

ஆனந்த் என்றாலும், கதையின் ஆதாரமாக இருக்கும் SP.பாலசுப்ரமணியம் வலிமையான பாத்திரமாக அசத்துகிறார்.


நாயகி:

சில படங்களில் புகழ்பெற்ற சிவரஞ்சினி, தன் இனிமையான நடிப்பால் மையம் கவர்ந்தார்.


வில்லனாக நாசர்:

நாசர் அவர்கள் "பீடா சேட்" கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். நெல்பொலியனின் நிச்சயம் பாராட்டத்தக்க பங்களிப்பு இதில் உள்ளது.


கானா பாடல்களின் வரவேற்பு:

பாலபாரதியின் இசையில் 

கானா பாடல்கள் தமிழ்சினிமாவில் முதல் முதலாக முத்திரையிட்டது. கானா பாபு வாக வாழ்ந்து இருப்பார் நடிகர் விஜய் அவர்கள் இதன் பின்னர் தான் "தலைவாசல் விஜய்" என அழைக்கப்பட்டார்.


இயக்குனர் செல்வாவின் வெற்றி:

கல்லூரி மாணவர்களின் சமூகச் சிக்கல்களை துல்லியமாக வெளிப்படுத்திய இந்த படம் கமர்ஷியல் சினிமாவின் வணிக வெற்றி மட்டுமல்லாமல் ஒரு நினைவுப்படமாகவும் திகழ்கிறது.


தலைவாசல் – ஒரு கல்லூரி வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள், அரசியல், மற்றும் எமோஷன்களின் சிறந்த கலவையாக தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

#தலைவாசல்

#தலைவாசல் #Thalavaasal #90களின்_நினைவுகள் #தமிழ்_திரைப்படம் #கல்லூரி_வாழ்க்கை #SPB #நாசர் #கானா #தமிழ்சினிமா #Nostalgia #Kollywood #ClassicMovies #TamilHits #TamilBloggers #CinemaReview 

#MovieReview #TamilNadu #TamilCulture #CinemaNostalgia #TrendingTamil

 தலைவாசல் – 90களின் கல்லூரி கதை



தலைவாசல் திரைப்படம் 90களில் கல்லூரி வாழ்க்கையை கண் முன்னே கொண்டுவரும் ஒரு சிறந்த திரைப்படம். கமல்ஹாசனின் நம்மவர் படத்திற்கு முன்னோட்டமாக படம் இது, ஒழுக்கக் கேடு நிறைந்த கல்லூரியின் மாற்றத்தை மையமாகக் கொண்டது.


கதைக்களம்:

சென்னையின் நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்கக் கேடுகளால் கஞ்சா, அடிதடி, தவறான வழிகளில் சென்ற மாணவர்களை திருத்த முதல்வராக வரும் SP.பாலசுப்ரமணியம் அவர்களின் கதாபாத்திரம் முக்கியம்.


நாயகன்:

ஆனந்த் என்றாலும், கதையின் ஆதாரமாக இருக்கும் SP.பாலசுப்ரமணியம் வலிமையான பாத்திரமாக அசத்துகிறார்.


நாயகி:

சில படங்களில் புகழ்பெற்ற சிவரஞ்சினி, தன் இனிமையான நடிப்பால் மையம் கவர்ந்தார்.


வில்லனாக நாசர்:

நாசர் அவர்கள் "பீடா சேட்" கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். நெல்பொலியனின் நிச்சயம் பாராட்டத்தக்க பங்களிப்பு இதில் உள்ளது.


கானா பாடல்களின் வரவேற்பு:

பாலபாரதியின் இசையில் 

கானா பாடல்கள் தமிழ்சினிமாவில் முதல் முதலாக முத்திரையிட்டது. கானா பாபு வாக வாழ்ந்து இருப்பார் நடிகர் விஜய் அவர்கள் இதன் பின்னர் தான் "தலைவாசல் விஜய்" என அழைக்கப்பட்டார்.


இயக்குனர் செல்வாவின் வெற்றி:

கல்லூரி மாணவர்களின் சமூகச் சிக்கல்களை துல்லியமாக வெளிப்படுத்திய இந்த படம் கமர்ஷியல் சினிமாவின் வணிக வெற்றி மட்டுமல்லாமல் ஒரு நினைவுப்படமாகவும் திகழ்கிறது.


தலைவாசல் – ஒரு கல்லூரி வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள், அரசியல், மற்றும் எமோஷன்களின் சிறந்த கலவையாக தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

#தலைவாசல்

#தலைவாசல் #Thalavaasal #90களின்_நினைவுகள் #தமிழ்_திரைப்படம் #கல்லூரி_வாழ்க்கை #SPB #நாசர் #கானா #தமிழ்சினிமா #Nostalgia #Kollywood #ClassicMovies #TamilHits #TamilBloggers #CinemaReview 

#MovieReview #TamilNadu #TamilCulture #CinemaNostalgia #TrendingTamil

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!

 "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ் 


1984 இல் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள Union Carbide India Limited (UCIL) தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து அனைவரின் மனதிலும் நிற்கும். Methyl Isocyanate (MIC) காற்றில் கலந்து அப்பகுதி மக்களை ஒய்வு எடுக்காமல் தாக்கியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அந்த கொடிய நாளில், போபால் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் துணிச்சலான செயல் பல உயிர்களை காப்பாற்றியது. இதையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ்.


இந்த கதையின் மையமாக ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் கே. கே. மேனன், ஜெனரல் மேனேஜராக ஆர். மாதவன், திருடனாக திவ்யேந்து, துடிப்பான இளைஞனாக பபில் கான் ஆகியோர் தங்கள் நடிப்பால் கவர்கிறார்கள் . இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் அமைப்பு, அதை இயங்கச் செய்யும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, இன்றும் உலகை பிரமிக்க செய்கிறது. இந்த வெப் சீரிஸ் பார்க்கும் போது நாம் உணர்வோம்.


கதை உணர்ச்சிப்பூர்வமாக செல்கிறது. ரயில்வே அதிகாரிகளின் சாதனைகள் மட்டுமல்ல , கலவரக் குழுவிடமிருந்து சீக்கியர்களை காப்பாற்றும் மனிதர்களின் கதை நம்மை நெகிழச் செய்கிறது. அதேபோல், MIC விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய வரும் ஜெர்மன் விஞ்ஞானி மற்றும் சில அதிகாரிகளின் முயற்சிகள் இன்னும் மனிதநேயத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.


இந்த வெப் சீரிஸ் சமூகத்தின் நல்லவர்களால் தான் இன்றும் மனிதகுலம் தொடர்வதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு வெற்றி மிக்க திரைக்கதை, சிறந்த நடிப்பு, உணர்ச்சிமிக்க காட்சிகள்.


இந்தக் கதை முடிந்தவுடன், ரயில்வே துறையின் பெருமை நம் மனதில் உயர்ந்து நிற்கும்.


இந்த வெப் சீரிஸை கண்டிப்பாக பார்க்கலாம் 

available in #Netflix 

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!


#Netflix #Therailwayman

 "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ் 


1984 இல் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள Union Carbide India Limited (UCIL) தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து அனைவரின் மனதிலும் நிற்கும். Methyl Isocyanate (MIC) காற்றில் கலந்து அப்பகுதி மக்களை ஒய்வு எடுக்காமல் தாக்கியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அந்த கொடிய நாளில், போபால் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் துணிச்சலான செயல் பல உயிர்களை காப்பாற்றியது. இதையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ்.


இந்த கதையின் மையமாக ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் கே. கே. மேனன், ஜெனரல் மேனேஜராக ஆர். மாதவன், திருடனாக திவ்யேந்து, துடிப்பான இளைஞனாக பபில் கான் ஆகியோர் தங்கள் நடிப்பால் கவர்கிறார்கள் . இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் அமைப்பு, அதை இயங்கச் செய்யும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, இன்றும் உலகை பிரமிக்க செய்கிறது. இந்த வெப் சீரிஸ் பார்க்கும் போது நாம் உணர்வோம்.


கதை உணர்ச்சிப்பூர்வமாக செல்கிறது. ரயில்வே அதிகாரிகளின் சாதனைகள் மட்டுமல்ல , கலவரக் குழுவிடமிருந்து சீக்கியர்களை காப்பாற்றும் மனிதர்களின் கதை நம்மை நெகிழச் செய்கிறது. அதேபோல், MIC விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய வரும் ஜெர்மன் விஞ்ஞானி மற்றும் சில அதிகாரிகளின் முயற்சிகள் இன்னும் மனிதநேயத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.


இந்த வெப் சீரிஸ் சமூகத்தின் நல்லவர்களால் தான் இன்றும் மனிதகுலம் தொடர்வதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு வெற்றி மிக்க திரைக்கதை, சிறந்த நடிப்பு, உணர்ச்சிமிக்க காட்சிகள்.


இந்தக் கதை முடிந்தவுடன், ரயில்வே துறையின் பெருமை நம் மனதில் உயர்ந்து நிற்கும்.


இந்த வெப் சீரிஸை கண்டிப்பாக பார்க்கலாம் 

available in #Netflix 

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!


#Netflix #Therailwayman

செவ்வாய், 21 ஜனவரி, 2025

கவியரசன் வைரமுத்துவுக்கு உரைத்த அற்புதமான பாராட்டுகள்: தமிழின் பெருமை, கவிதையின் சக்தி!

 நான்கூட ஒரு நூலகப் பறவைதான்; இல்லையென்றால் அரிவாள்களோடும் கடப்பாரைகளோடும் கழிந்திருக்கும் என் வாழ்வு"// எனும் உங்கள் (வைரமுத்து வின்)


வார்த்தைகள், உங்கள் கவி ஆற்றலின் சிகரத்தை வெளிப்படுத்துகிறது.

வேல் கம்பும், வீச்சு அருவாவும் என வெற்றியின் அடையாளமாக வாழ்ந்த முன்னோர்களின் பாதையில், 

கூர்மையான பேனா கொண்டு நீங்கள் உருவாக்கிய கவிதைகளும் பாடல்களும் தமிழின் வீரத்தையும் அழகிய சுவையும் புதிய வடிவில் காட்சிப்படுத்துகிறது.


கள்ளிக்காட்டு கம்பனே, உங்கள் கற்றல், சிந்தனை, எழுத்து இவையனைத்தும் எங்களை அசர வைத்தது மட்டுமல்ல, தேசிய விருதுகள் மூலம் உலகத்துக்கும் தமிழின் வலிமையை வெளிப்படுத்தியது.

உங்கள் வார்த்தைகள் தட்டுப்பாடில்லா கோடுகளாக எங்கள் மனதை ஆளுகிறது. நீங்கள் என்றும் கவியுலக சிகரமே @Vairamuthu! ❤️👏🙏🏻

#Vairamuthu


இவன் 

ராஜா. க 

 நான்கூட ஒரு நூலகப் பறவைதான்; இல்லையென்றால் அரிவாள்களோடும் கடப்பாரைகளோடும் கழிந்திருக்கும் என் வாழ்வு"// எனும் உங்கள் (வைரமுத்து வின்)


வார்த்தைகள், உங்கள் கவி ஆற்றலின் சிகரத்தை வெளிப்படுத்துகிறது.

வேல் கம்பும், வீச்சு அருவாவும் என வெற்றியின் அடையாளமாக வாழ்ந்த முன்னோர்களின் பாதையில், 

கூர்மையான பேனா கொண்டு நீங்கள் உருவாக்கிய கவிதைகளும் பாடல்களும் தமிழின் வீரத்தையும் அழகிய சுவையும் புதிய வடிவில் காட்சிப்படுத்துகிறது.


கள்ளிக்காட்டு கம்பனே, உங்கள் கற்றல், சிந்தனை, எழுத்து இவையனைத்தும் எங்களை அசர வைத்தது மட்டுமல்ல, தேசிய விருதுகள் மூலம் உலகத்துக்கும் தமிழின் வலிமையை வெளிப்படுத்தியது.

உங்கள் வார்த்தைகள் தட்டுப்பாடில்லா கோடுகளாக எங்கள் மனதை ஆளுகிறது. நீங்கள் என்றும் கவியுலக சிகரமே @Vairamuthu! ❤️👏🙏🏻

#Vairamuthu


இவன் 

ராஜா. க 

சனி, 18 ஜனவரி, 2025

குடும்ப உறவுகளும் கனவுகளும் இணையும் கதை - #FamilyPadam

 #FamilyPadam - குடும்பத்தோடு பார்க்க அழகான படம்


இன்றைய காலத்தில், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை தங்களை மாதிரி வடிவமைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையை ஒரு அழகான குடும்ப பின்னணியில் அமைத்துக் கூறியிருக்கிறது #FamilyPadam.


கதை ஒரு விசித்திரமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அப்பா ஜிம் நடத்துகிறார், அம்மா எல்லாரையும் மனதார ஆதரிக்கிறாள். மூன்று மக்களில் ஒருவன் வக்கீல், ஒருவன் IT வேலையில் பிஸி, மூன்றாவவன் சினிமா டைரக்டர் ஆகும் கனவு காண்கிறான். இந்த வீட்டில் வக்கீலின் மனைவி, குழந்தை உட்பட எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.


இந்த மூன்றாவது பையன் டைரக்டர் ஆகும் பயணமே படம் முழுக்க நகைச்சுவையுடன், செண்டிமெண்ட் மாறி மாறி சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்பத்துடன் ரசிக்கிற நல்ல பொழுதுபோக்கு படம்.


படத்தின் சிறப்பம்சங்கள்


1. விவேக் பிரசன்னாவின் கலக்கல் காமெடி

விவேக் பிரசன்னா அவர்களின் டயலாக் டெலிவரி, ஹாஸ்ய நேரம் என்று அசத்திப் போடுகிறார்கள். காமெடி காட்சிகளில் அவரின் வேற லெவல் எக்ஸ்பிரஷன்ஸ் கூடுதல் சுவை சேர்க்கிறது.



2. உணர்ச்சிகள் கவிழ்க்கும் காட்சிகள்

கதையின் நெடுவெளியில் வரும் செண்டிமெண்ட் டச் படத்துக்கு ஜொலிக்க வைத்திருக்கும் சிகப்பு நிறக் கல் மாதிரி. குறிப்பாக தாத்தா சொல்கிற ‘சினிமா ஏன் மூன்றாவது பையனுக்கு பிடிக்குது’ ன்னு விளக்குவது ஒவ்வொருவரின் மனசையும் தொடும்.



3. திருமாறன் டைரக்டரின் அசத்தல் டச்

கதை நகர்த்தும் விதம், ஒவ்வொரு காட்சியையும் எளிமையாக, ஆனால் செரியசாக, சொல்லும் டைரக்டரின் அசத்திய வேலை வெளிச்சமாக தெரிகிறது.



4. குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்

குடும்பம், உறவுகள், சிரிப்பு, உணர்ச்சி எல்லாத்தையும் சேர்த்து ஒரு அழகான கலவை. சுத்தமான சினிமா.






#FamilyPadam ஒரு நல்ல குடும்ப படமாக அனைவரையும் கவரும். உங்கள் கனவுகளை எதிர்பார்க்கும் போது குடும்பத்துடன் உள்ள தொடர்புகளையும் பறிக்காதீர்கள் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.


இப்போதே Aha-யில் ஸ்ட்ரீம் செய்யலாம்! இந்த அழகான படத்தை மிஸ் செய்யாதீர்கள்.


விமர்சனம்: ராஜா K


#FamilyPadam

#TamilCinema

#OTTRelease

#AhaTamil

#ComedyDrama

#TamilFamilyMovie

#MovieReview

#TamilOTT

#VivekPrasanna

#Thirumaran

#TamilEntertainment

#Tami


lMovies2025



 #FamilyPadam - குடும்பத்தோடு பார்க்க அழகான படம்


இன்றைய காலத்தில், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை தங்களை மாதிரி வடிவமைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையை ஒரு அழகான குடும்ப பின்னணியில் அமைத்துக் கூறியிருக்கிறது #FamilyPadam.


கதை ஒரு விசித்திரமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அப்பா ஜிம் நடத்துகிறார், அம்மா எல்லாரையும் மனதார ஆதரிக்கிறாள். மூன்று மக்களில் ஒருவன் வக்கீல், ஒருவன் IT வேலையில் பிஸி, மூன்றாவவன் சினிமா டைரக்டர் ஆகும் கனவு காண்கிறான். இந்த வீட்டில் வக்கீலின் மனைவி, குழந்தை உட்பட எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.


இந்த மூன்றாவது பையன் டைரக்டர் ஆகும் பயணமே படம் முழுக்க நகைச்சுவையுடன், செண்டிமெண்ட் மாறி மாறி சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்பத்துடன் ரசிக்கிற நல்ல பொழுதுபோக்கு படம்.


படத்தின் சிறப்பம்சங்கள்


1. விவேக் பிரசன்னாவின் கலக்கல் காமெடி

விவேக் பிரசன்னா அவர்களின் டயலாக் டெலிவரி, ஹாஸ்ய நேரம் என்று அசத்திப் போடுகிறார்கள். காமெடி காட்சிகளில் அவரின் வேற லெவல் எக்ஸ்பிரஷன்ஸ் கூடுதல் சுவை சேர்க்கிறது.



2. உணர்ச்சிகள் கவிழ்க்கும் காட்சிகள்

கதையின் நெடுவெளியில் வரும் செண்டிமெண்ட் டச் படத்துக்கு ஜொலிக்க வைத்திருக்கும் சிகப்பு நிறக் கல் மாதிரி. குறிப்பாக தாத்தா சொல்கிற ‘சினிமா ஏன் மூன்றாவது பையனுக்கு பிடிக்குது’ ன்னு விளக்குவது ஒவ்வொருவரின் மனசையும் தொடும்.



3. திருமாறன் டைரக்டரின் அசத்தல் டச்

கதை நகர்த்தும் விதம், ஒவ்வொரு காட்சியையும் எளிமையாக, ஆனால் செரியசாக, சொல்லும் டைரக்டரின் அசத்திய வேலை வெளிச்சமாக தெரிகிறது.



4. குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்

குடும்பம், உறவுகள், சிரிப்பு, உணர்ச்சி எல்லாத்தையும் சேர்த்து ஒரு அழகான கலவை. சுத்தமான சினிமா.






#FamilyPadam ஒரு நல்ல குடும்ப படமாக அனைவரையும் கவரும். உங்கள் கனவுகளை எதிர்பார்க்கும் போது குடும்பத்துடன் உள்ள தொடர்புகளையும் பறிக்காதீர்கள் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.


இப்போதே Aha-யில் ஸ்ட்ரீம் செய்யலாம்! இந்த அழகான படத்தை மிஸ் செய்யாதீர்கள்.


விமர்சனம்: ராஜா K


#FamilyPadam

#TamilCinema

#OTTRelease

#AhaTamil

#ComedyDrama

#TamilFamilyMovie

#MovieReview

#TamilOTT

#VivekPrasanna

#Thirumaran

#TamilEntertainment

#Tami


lMovies2025



வியாழன், 16 ஜனவரி, 2025

பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நம் மழலை நினைவுகள்

 பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நம் மழலை நினைவுகள்



சிறுவயதில் தீபாவளி என்றாலே சட்டென்று நினைவில் முளைக்கும் மத்தாப்புகள், பட்டாசுகளின் மகிழ்ச்சியை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. காலத்தினாலும், வயதினாலும் அது கொஞ்சம் குறைந்திருந்தாலும், அந்த ஈர்ப்பு முழுமையாக ஓய்ந்ததில்லை.


அதே போல், பொங்கல் என்றவுடன் மனதில் எழும் மகிழ்ச்சியின் நிறம் அடங்கிய நினைவுகள் “பொங்கல் வாழ்த்து அட்டைகள்”! பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே இந்த அட்டைகளின் சீசன் ஆரம்பமாகி விடும்.


எங்கள் ஊரில் உள்ள அன்பு ஸ்டோர், வள்ளுவன் ஸ்டோர், லதா ஸ்டோர் போன்றவை இவற்றுக்கு புகழ் பெற்றவை. கடைகளின் வெளியே பெரிய பலகைகளில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளையும் பரப்பி வைத்து, விற்பனைக்கு வைக்கப்படும்.


அந்த அட்டைகள் மீது முத்தமிழ் உலகின் மொத்த நட்சத்திரங்களும் மலர்ந்து நிற்கும் – MGR தொடங்கி ரஜினி, கமல் என எல்லாரும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள். 50 பைசா முதல் 5 ரூபாய் வரை உள்ள விதவிதமான அட்டைகள், அக்காலத்தை கண்களுக்கு நிறைத்துவிடும்.


சிறுவயதில் நான் ரஜினி ரசிகன். எனது நண்பர்களுக்கு பெரும்பாலும் நான் கொடுப்பது ரஜினியின் பொங்கல் அட்டைகளே. அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகளை கொடுப்பதை தவறமாட்டேன். எனது குழந்தை மனம் அப்போதுதான் நடிப்பு பாணியை தொடங்கியிருக்கலாம்.


அட்டைகளின் மகிழ்ச்சி

நமக்கு மிகவும் பிடித்த, எதிர்பார்த்தவர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை பெரிய increment letter கூட தர முடியாது. அப்போதெல்லாம் நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் கிடைத்தது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அந்த நாள் vs இந்த நாள்

அந்த நாட்களில் மனமும் நேரமும் நிறைய இருந்தது; பணம் மட்டும் குறைவாக இருந்தது. இன்று பணம் அதிகமாக இருக்கிறது, ஆனால் மனமும் நேரமும் கிடைப்பது கடினம்.


சுஜாதா சொன்னது போல வாழ்க்கையில் rewind பட்டன் இருந்தால், அந்த மழலை நினைவுகளை மீண்டும் அனுபவித்துவிட மாட்டோமா!


இனிய பொங்கல் வாழ்த்துகள்!

என் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.


மகிழ்ச்சியுடன்,

ராஜா.க



---




 பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நம் மழலை நினைவுகள்



சிறுவயதில் தீபாவளி என்றாலே சட்டென்று நினைவில் முளைக்கும் மத்தாப்புகள், பட்டாசுகளின் மகிழ்ச்சியை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. காலத்தினாலும், வயதினாலும் அது கொஞ்சம் குறைந்திருந்தாலும், அந்த ஈர்ப்பு முழுமையாக ஓய்ந்ததில்லை.


அதே போல், பொங்கல் என்றவுடன் மனதில் எழும் மகிழ்ச்சியின் நிறம் அடங்கிய நினைவுகள் “பொங்கல் வாழ்த்து அட்டைகள்”! பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே இந்த அட்டைகளின் சீசன் ஆரம்பமாகி விடும்.


எங்கள் ஊரில் உள்ள அன்பு ஸ்டோர், வள்ளுவன் ஸ்டோர், லதா ஸ்டோர் போன்றவை இவற்றுக்கு புகழ் பெற்றவை. கடைகளின் வெளியே பெரிய பலகைகளில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளையும் பரப்பி வைத்து, விற்பனைக்கு வைக்கப்படும்.


அந்த அட்டைகள் மீது முத்தமிழ் உலகின் மொத்த நட்சத்திரங்களும் மலர்ந்து நிற்கும் – MGR தொடங்கி ரஜினி, கமல் என எல்லாரும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள். 50 பைசா முதல் 5 ரூபாய் வரை உள்ள விதவிதமான அட்டைகள், அக்காலத்தை கண்களுக்கு நிறைத்துவிடும்.


சிறுவயதில் நான் ரஜினி ரசிகன். எனது நண்பர்களுக்கு பெரும்பாலும் நான் கொடுப்பது ரஜினியின் பொங்கல் அட்டைகளே. அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகளை கொடுப்பதை தவறமாட்டேன். எனது குழந்தை மனம் அப்போதுதான் நடிப்பு பாணியை தொடங்கியிருக்கலாம்.


அட்டைகளின் மகிழ்ச்சி

நமக்கு மிகவும் பிடித்த, எதிர்பார்த்தவர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை பெரிய increment letter கூட தர முடியாது. அப்போதெல்லாம் நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் கிடைத்தது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அந்த நாள் vs இந்த நாள்

அந்த நாட்களில் மனமும் நேரமும் நிறைய இருந்தது; பணம் மட்டும் குறைவாக இருந்தது. இன்று பணம் அதிகமாக இருக்கிறது, ஆனால் மனமும் நேரமும் கிடைப்பது கடினம்.


சுஜாதா சொன்னது போல வாழ்க்கையில் rewind பட்டன் இருந்தால், அந்த மழலை நினைவுகளை மீண்டும் அனுபவித்துவிட மாட்டோமா!


இனிய பொங்கல் வாழ்த்துகள்!

என் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.


மகிழ்ச்சியுடன்,

ராஜா.க



---




திங்கள், 13 ஜனவரி, 2025

MathaGajaRaja - லாஜிக் இல்ல, மாஜிக் தான் - பொங்கலுக்கு பக்கா விருந்து

 #MathaGajaRaja – செம கமர்ஷியல் தள்ளுபடி!


#SundarC சார் இன்னொரு பக்கா கமர்ஷியல் படம் எடுத்துட்டார்! எப்போதும் மாதிரி, லாஜிக்-கு இடம் இல்லை, மாஜிக்குக்கு மட்டும் இடம் தான்.


ஸ்டோரி ரெடி:


ஹீரோ வின் மாஸ் என்ட்ரி in பைக் , 

ஹீரோயின்-கிட்ட 

Love at First Sight 

ஹீரோவின் 3 பிரெண்ட்ஸ் களுக்கு பிரச்சனை.


ஹீரோவின் மாஸ் 

Problem solved 


கடைசியில்... சுபம்!


என்ன கொடுத்திருக்காங்க:

😂 #Santhanam-க்கு காமெடியின் கிங் பட்டம் போடலாம்.

Timing காமெடி வேற லெவல் 

💃 #Anjali & #Varalaxmi-கள் கலக்கலான கமர்ஷியல் ப்ரெஸன்ஸ்

🎶 #VijayAntony-யின் திக்குமுக்காடும் பாட்டுகள்


படத்தின் ஹைலைட்ஸ்:


முதல் பாதி பக்கா காமெடி, ரெண்டு டூயட் , ரொம்ப சுவாரஸ்யம்


இரண்டாம் பாதி வில்லன் என்ட்ரி, ஃபிரெண்ட்ஸுடன் காமெடி, செண்டிமென்ட், குத்து பாட்டு, ஃபைட்... 

கடைசி வரை கொஞ்சம் கூட bore அடிக்காது !


2013-ல் வர வேண்டிய படம் இப்போ 2025-ல் வந்தாலும், கமர்ஷியல் படம் எப்பவுமே டைம் பாஸ் தான்!


🎥 #SundarC சார் சார் கமர்ஷியல் சினிமா மாஸ்டர்-னு மீண்டும் நிரூபிச்சுட்டார்!

🎊 #MathaGajaRaja பக்கா பொங்கல் வெற்றிப்படம்!


#SanthanamComedy #PongalSpecial



#MassEntertainment

#mathakajaraja

 #MathaGajaRaja – செம கமர்ஷியல் தள்ளுபடி!


#SundarC சார் இன்னொரு பக்கா கமர்ஷியல் படம் எடுத்துட்டார்! எப்போதும் மாதிரி, லாஜிக்-கு இடம் இல்லை, மாஜிக்குக்கு மட்டும் இடம் தான்.


ஸ்டோரி ரெடி:


ஹீரோ வின் மாஸ் என்ட்ரி in பைக் , 

ஹீரோயின்-கிட்ட 

Love at First Sight 

ஹீரோவின் 3 பிரெண்ட்ஸ் களுக்கு பிரச்சனை.


ஹீரோவின் மாஸ் 

Problem solved 


கடைசியில்... சுபம்!


என்ன கொடுத்திருக்காங்க:

😂 #Santhanam-க்கு காமெடியின் கிங் பட்டம் போடலாம்.

Timing காமெடி வேற லெவல் 

💃 #Anjali & #Varalaxmi-கள் கலக்கலான கமர்ஷியல் ப்ரெஸன்ஸ்

🎶 #VijayAntony-யின் திக்குமுக்காடும் பாட்டுகள்


படத்தின் ஹைலைட்ஸ்:


முதல் பாதி பக்கா காமெடி, ரெண்டு டூயட் , ரொம்ப சுவாரஸ்யம்


இரண்டாம் பாதி வில்லன் என்ட்ரி, ஃபிரெண்ட்ஸுடன் காமெடி, செண்டிமென்ட், குத்து பாட்டு, ஃபைட்... 

கடைசி வரை கொஞ்சம் கூட bore அடிக்காது !


2013-ல் வர வேண்டிய படம் இப்போ 2025-ல் வந்தாலும், கமர்ஷியல் படம் எப்பவுமே டைம் பாஸ் தான்!


🎥 #SundarC சார் சார் கமர்ஷியல் சினிமா மாஸ்டர்-னு மீண்டும் நிரூபிச்சுட்டார்!

🎊 #MathaGajaRaja பக்கா பொங்கல் வெற்றிப்படம்!


#SanthanamComedy #PongalSpecial



#MassEntertainment

#mathakajaraja

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

பாட்ஷா: திரையுலக வரலாற்றை மாற்றிய 30 ஆண்டு சாதனை

 இது போல டிசம்பர் 12 

அன்று சூப்பர் ஸ்டார் பாட்ஷா திரைப்படம் வெளியானது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத படைப்பாக விளங்கும் 'பாட்ஷா' திரைப்படம், இன்று தனது 30வது ஆண்டு கொண்டாடுகிறது. 1995 ஜனவரி 12 அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'பாட்ஷா', ரஜினிகாந்தின் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாகும். அவரது டான் கதாபாத்திரம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்தின் நடிப்புக்கு சிறந்த நடிகர் விருதுகள் கிடைத்தன.


'பாட்ஷா' திரைப்படத்தின் பாடல்கள், இசையமைப்பாளர் தேவாவின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவானவை. 'நான் ஆட்டோக்காரன்' போன்ற பாடல்கள், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தன.


இந்த திரைப்படம், ரஜினிகாந்தின் நடிப்பில் மட்டுமன்றி, அவரது வசனங்களாலும் பிரபலமானது. "நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற வசனம், ரசிகர்களின் நினைவில் இன்றும் நிலைத்துள்ளது.


'பாட்ஷா' திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக இருந்து, பல படங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அதன் 30வது ஆண்டு நினைவுநாளில், இந்த படைப்பை மீண்டும் நினைவுகூர்வது, தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும், ரஜினிகாந்தின் சாதனைகளையும் பாராட்டும் விதமாகும்.

#Baashha #Rajinikanth #SuperstarRajinikanth #TamilCinema #30YearsOfBaashha #Thalaivar #Blockbuster #SureshKrissna #TamilMovies #ClassicFilm #DevotionalCinema #RajiniDialogues #Kollywood #Movie


Anniversary

 இது போல டிசம்பர் 12 

அன்று சூப்பர் ஸ்டார் பாட்ஷா திரைப்படம் வெளியானது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத படைப்பாக விளங்கும் 'பாட்ஷா' திரைப்படம், இன்று தனது 30வது ஆண்டு கொண்டாடுகிறது. 1995 ஜனவரி 12 அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'பாட்ஷா', ரஜினிகாந்தின் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாகும். அவரது டான் கதாபாத்திரம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்தின் நடிப்புக்கு சிறந்த நடிகர் விருதுகள் கிடைத்தன.


'பாட்ஷா' திரைப்படத்தின் பாடல்கள், இசையமைப்பாளர் தேவாவின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவானவை. 'நான் ஆட்டோக்காரன்' போன்ற பாடல்கள், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தன.


இந்த திரைப்படம், ரஜினிகாந்தின் நடிப்பில் மட்டுமன்றி, அவரது வசனங்களாலும் பிரபலமானது. "நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற வசனம், ரசிகர்களின் நினைவில் இன்றும் நிலைத்துள்ளது.


'பாட்ஷா' திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக இருந்து, பல படங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அதன் 30வது ஆண்டு நினைவுநாளில், இந்த படைப்பை மீண்டும் நினைவுகூர்வது, தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும், ரஜினிகாந்தின் சாதனைகளையும் பாராட்டும் விதமாகும்.

#Baashha #Rajinikanth #SuperstarRajinikanth #TamilCinema #30YearsOfBaashha #Thalaivar #Blockbuster #SureshKrissna #TamilMovies #ClassicFilm #DevotionalCinema #RajiniDialogues #Kollywood #Movie


Anniversary

வெள்ளி, 3 ஜனவரி, 2025

ரகுமானுடன் சந்திப்பு

 ரகுமானுடன் சந்திப்பு



சமீபத்தில் நான் என் குலதெய்வக் கோயிலான திருச்செந்தூர் அருகே உள்ள குன்றிமலை சாஸ்தா கோயிலுக்கு சென்றேன். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோயில் அழகாக புனரமைக்கப்பட்டிருந்தது. கோயிலின் அமைதியும் அதை சுற்றியுள்ள இயற்கையும் என்னைக் கவர்ந்தன. அங்கு நடந்த சன்னிதி சுற்றுப்பயணத்தின் போது, நான் எதிர்பாராத ஒரு விஷயத்தை சந்தித்தேன்—அதில் தான் அசந்தேன்!


எனக்கு எதிரே உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் AR ரகுமான் நின்றிருந்தார்! அவரது சாதாரணமான தோற்றமும் மெலிதான சிரிப்பும் எப்போதும் போல தனித்துவமாக இருந்தது. கோயிலின் புனரமைப்பு மற்றும் அதின் சுவடுகள் பற்றி அவருடன் பேச ஆரம்பித்தேன். அவர் கேட்டிருந்த வண்ணம் கேட்டு, நான் கூறிய விபரங்கள் அவரை ஆச்சர்யமடையச் செய்தது.


அவருடன் நடந்து கொண்டு கோயிலின் ஒவ்வொரு மூலையையும் பார்க்கும் போது, மனதில் ஒரு குறிக்கோள் வந்தது—"ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா?" என்று. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "இல்லை, பிரச்சனை இல்லை" என்று சம்மதித்தார். ஆனால் என் மொபைல் கையில் இல்லை என்பதை உணர்ந்ததும், அவரிடம் உதவி கேட்டேன்.


"சார், உங்க மொபைலில் செல்ஃபி எடுத்து எனக்கு அனுப்புவீங்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்து, "உங்க வாட்ஸ்அப் நம்பரை கொடுக்க மாட்டீங்களா?" என்று பதில் சொன்னார். நாங்கள் ஒரு செல்ஃபி எடுத்தோம். அதற்கு பிறகு அவர் என்னோடு இன்னும் சில நிமிடங்கள் உற்சாகமாகப் பேசினார்.


ஆனால்… இந்த சம்பவம் நிஜமில்லை!


---


கனவுகளின் மர்மம்


கனவுகள் எப்போதும் ஒரு மர்மம்தான்! நம்மால் நினைத்து உணர முடியாத விஷயங்களை, சில நேரங்களில் கனவுகள் எளிதில் காட்சிப்படுத்தி விடுகின்றன. நாம் தூங்கும் போது தோன்றும், மறையும் கனவுகள் எப்போதும் வியப்பூட்டுபவை. சில கனவுகள் நம்மை முழுமையாக தன் பிடியில் சிக்கவைத்து மறக்க முடியாத அனுபவமாகிறது.


நேற்றைய கனவில் ரகுமான் சார் எனக்கு நேருக்கு நேர் பேசும் அனுபவம் ஒரு அதிசயமாகவே இருந்தது. இதை உண்மையில் வாழும் நாள் வந்தால் நிச்சயமாக அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வேன்!

@arrahman

#Rahman 

#கனவுகள் #ரகுமானுடன்_சந்திப்பு #திருச்செந்தூர்

 ரகுமானுடன் சந்திப்பு



சமீபத்தில் நான் என் குலதெய்வக் கோயிலான திருச்செந்தூர் அருகே உள்ள குன்றிமலை சாஸ்தா கோயிலுக்கு சென்றேன். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோயில் அழகாக புனரமைக்கப்பட்டிருந்தது. கோயிலின் அமைதியும் அதை சுற்றியுள்ள இயற்கையும் என்னைக் கவர்ந்தன. அங்கு நடந்த சன்னிதி சுற்றுப்பயணத்தின் போது, நான் எதிர்பாராத ஒரு விஷயத்தை சந்தித்தேன்—அதில் தான் அசந்தேன்!


எனக்கு எதிரே உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் AR ரகுமான் நின்றிருந்தார்! அவரது சாதாரணமான தோற்றமும் மெலிதான சிரிப்பும் எப்போதும் போல தனித்துவமாக இருந்தது. கோயிலின் புனரமைப்பு மற்றும் அதின் சுவடுகள் பற்றி அவருடன் பேச ஆரம்பித்தேன். அவர் கேட்டிருந்த வண்ணம் கேட்டு, நான் கூறிய விபரங்கள் அவரை ஆச்சர்யமடையச் செய்தது.


அவருடன் நடந்து கொண்டு கோயிலின் ஒவ்வொரு மூலையையும் பார்க்கும் போது, மனதில் ஒரு குறிக்கோள் வந்தது—"ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா?" என்று. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "இல்லை, பிரச்சனை இல்லை" என்று சம்மதித்தார். ஆனால் என் மொபைல் கையில் இல்லை என்பதை உணர்ந்ததும், அவரிடம் உதவி கேட்டேன்.


"சார், உங்க மொபைலில் செல்ஃபி எடுத்து எனக்கு அனுப்புவீங்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்து, "உங்க வாட்ஸ்அப் நம்பரை கொடுக்க மாட்டீங்களா?" என்று பதில் சொன்னார். நாங்கள் ஒரு செல்ஃபி எடுத்தோம். அதற்கு பிறகு அவர் என்னோடு இன்னும் சில நிமிடங்கள் உற்சாகமாகப் பேசினார்.


ஆனால்… இந்த சம்பவம் நிஜமில்லை!


---


கனவுகளின் மர்மம்


கனவுகள் எப்போதும் ஒரு மர்மம்தான்! நம்மால் நினைத்து உணர முடியாத விஷயங்களை, சில நேரங்களில் கனவுகள் எளிதில் காட்சிப்படுத்தி விடுகின்றன. நாம் தூங்கும் போது தோன்றும், மறையும் கனவுகள் எப்போதும் வியப்பூட்டுபவை. சில கனவுகள் நம்மை முழுமையாக தன் பிடியில் சிக்கவைத்து மறக்க முடியாத அனுபவமாகிறது.


நேற்றைய கனவில் ரகுமான் சார் எனக்கு நேருக்கு நேர் பேசும் அனுபவம் ஒரு அதிசயமாகவே இருந்தது. இதை உண்மையில் வாழும் நாள் வந்தால் நிச்சயமாக அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வேன்!

@arrahman

#Rahman 

#கனவுகள் #ரகுமானுடன்_சந்திப்பு #திருச்செந்தூர்