திங்கள், 6 ஜூன், 2022

சிலேடையும் , தமிழ் பாடலும்

 பிடித்த வரிகள் !!! 

"சிலேடை" 

இரு நபர்களின் பொதுவான


குணாதிசயங்கள் ஒரு பொருள் பட எடுத்துரைப்பது. 


நீரையும் , பெண் இருவரின் குணாதிசயங்கள் ஒரு சேர சேர்த்து  அமைந்த ஒரு தமிழ் பாடல். ரிதம் திரைபடத்தில் கவிஞர் வைரமுத்து வால் , எழுதபட்டிருக்கும்.


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே


நீர் பெருமையை பெண்ணோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கணத்தை காலத்தால் அழியாத படைப்புகளில் சேர்த்த பெருமை

வைரமுத்து வை சாரும் !!!


இவன்

ராஜா.க


#ரிதம் #தமிழ்பாடல்கள் #சிலேடை #இலக்கணம் 


 பிடித்த வரிகள் !!! 

"சிலேடை" 

இரு நபர்களின் பொதுவான


குணாதிசயங்கள் ஒரு பொருள் பட எடுத்துரைப்பது. 


நீரையும் , பெண் இருவரின் குணாதிசயங்கள் ஒரு சேர சேர்த்து  அமைந்த ஒரு தமிழ் பாடல். ரிதம் திரைபடத்தில் கவிஞர் வைரமுத்து வால் , எழுதபட்டிருக்கும்.


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே


நீர் பெருமையை பெண்ணோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கணத்தை காலத்தால் அழியாத படைப்புகளில் சேர்த்த பெருமை

வைரமுத்து வை சாரும் !!!


இவன்

ராஜா.க


#ரிதம் #தமிழ்பாடல்கள் #சிலேடை #இலக்கணம் 


வெள்ளி, 3 ஜூன், 2022

விக்ரம் திரை விமர்சனம்

 


தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு , அன்றைய இயக்குனர் ஸ்ரீதர் தொடங்கி இன்றைய இயக்குனர் நெல்சன் வரை இந்த பட்டியல் நீளும். 


அந்த பட்டியலில் இக்காலத்தில் உள்ள முக்கியமான இயக்குனர் திரு. லோகோஷ் கனகராஜ் , தன் முந்தைய மூன்று படங்கள் மூலம் அதை நிரூபித்து காட்டியுள்ளார். அதனால் தான் என்னவோ நான்காம் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு .மேலும் இந்த முறை அவர் கை கோர்த்து உள்ளது உலகநாயகன் கமல்ஹாசனிடம்.


இயக்குனர் ஷங்கர் க்கு மூன்றாவது படத்தில் கமலை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அது போன்றதொரு வாய்ப்பு லோகேஷ் க்கு நான்காம் படத்தில் கிடைத்துள்ளது. இயக்குனரிடம் முழு பொறுப்பை கொடுத்தால் வெற்றி உறுதி என்பதை ஷங்கர் இந்தியனில் நிரூபித்ததை போல் லோகேஷ் கனகராஜ் விக்ரமில் நிரூபித்தாரா ?


இந்த முறை விமர்சிக்கும் படம் விக்ரம் , படத்துக்கு போலாமா ?


கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றம் தன் படைப்புகளில் அமைக்க வேண்டியது இயக்குனர் கட்டாயம் , அப்படி ஒரு மாற்றம் தன் முந்தைய படத்தை தற்போது உள்ள படத்தோடு லிங்க்(connect) செய்வது. தன் முந்தைய படமான கைதி யை இதில் இணைந்துள்ளார்.


கைப்பற்ற பட்ட கஞ்சாவை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருளை , காவல்துறை அதிகாரி பத்திரமாக வைக்கிறார் என்று தொடங்குகிறது இந்த படம், அவரை கொன்று அவரோடு நில்லாமல் மேலும் அதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் கொல்ல படுகிறார்கள் மேலும் கர்ணன் எனும் போதை ஆசாமி (போலீஸ் அதிகாரியின் தந்தை) கமலும் கொல்லப்படுகிறார் , கொலையாளிகளை பிடிக்க காவல்துறை ஒரு ரகசிய குழுவை அமைக்கிறது  அதற்கு தலைமை வகிக்கிறார் ஃபஹத் ஃபாசில் , 


ஃபஹத் ஃபாசில்  அந்த கும்பலை கண்டுபிடித்தாரா ? அந்த கஞ்சா மூலப்பொருளை எப்படியாவது மீட்டு ஒரு அரசாங்கத்தையே உருவாக்க முடியும் என நினைக்கும் சந்தானத்தின் கனவு நிறைவேறியதா ? மகனை பறி கொடுத்த தந்தை என்ன செய்தார் ? இந்த மூன்று கேள்விகளுக்கான விடையை 3 மணி நேரம் சுவாரஸ்யமான அதே நேரத்தில் தொய்வில்லாத திரைக்கதை யால் நம்மை கஞ்சா Mafia உலகத்திற்கு அழைத்து செல்கிறார் இயக்குனர்.


ஃபஹத் ஃபாசில் நடிப்பு , அவரின் பேச்சு அவரின் பார்வை , action காட்சிகள் எல்லாமே நடிப்பின் வேறு பரிமாணம் , தமிழ்சினிமா விற்கு  புதிது அவரின் கண்களே நடிக்கிறது. 


சந்தானமாக விஜய் சேதுபதி அவருக்கே உரித்தான இயல்பான நடிப்பு சில படங்களில் பார்த்தது தான் ஆனாலும் தன் பங்கை நிறைவாக செய்கிறார்.  போதை வஸ்து வை கடித்த பிற்பாடு அவரினுள் வெளிப்படும் மிருகதனமான நடிப்பு பகீர் ரகம்.



கர்ணனாக கமல் , மகனை இழந்த ஒரு தந்தை யின் மனது எப்படி பரிதவிக்கும் என தனக்கே உரிய நடிப்பு அவரின் குரல் சிங்கத்தின் கர்ஜனை நினைவு படுத்துகிறது. பிற்பாடு மது, மாது , கஞ்சா என வாழ்க்கை தடம்மாறி மகனை கொன்றவனை அவர் பழிவாங்கினாரா ? அவரின் குடும்பதிற்கும் வருங்கால சந்ததிகும் அவர் அளிக்கும் பங்கு என்ன என்பதை தன் நடிப்பால் விடை கூறுகிறார்.


இந்த மூவரின் நடிப்பு க்கு தீனி போடுவது சவாலானது அதை தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தால் வெளிக்கொணர்ந்து வெற்றி வாகி சூடியுள்ளார் லோகேஷ் கனகராஜ். Trendsetter movie in kollywood.


அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் , பத்தல பத்தல பாடல் கமல் தன் ரசிகர்களுக்கு கொடுக்கும்  மினி ட்ரீட். படத்தின் இடைவேளை காட்சி , சின்ன சின்ன twist , action sequence களில் கேமரா கண்களால் தன் பங்கை சரியாக செய்துள்ளார்

கிருஷ் கங்காதரன்.


தியேட்டர் க்கு செல்லுமுன் இயக்குனர் கூறியது போல கைதி படத்தை பார்த்து விட்டு செல்வது பரீட்சை க்கு செல்லும் முன் படித்துவிட்டு செல் என்று ஆசிரியர் கூறுவது  போல ஒரு அறிவுரை.


விக்ரம் விக்டரி 

ராஜா .க 


#விக்ரம் #Vikram #vikramreview

#Vikramreview #Vikraminaction


 


தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு , அன்றைய இயக்குனர் ஸ்ரீதர் தொடங்கி இன்றைய இயக்குனர் நெல்சன் வரை இந்த பட்டியல் நீளும். 


அந்த பட்டியலில் இக்காலத்தில் உள்ள முக்கியமான இயக்குனர் திரு. லோகோஷ் கனகராஜ் , தன் முந்தைய மூன்று படங்கள் மூலம் அதை நிரூபித்து காட்டியுள்ளார். அதனால் தான் என்னவோ நான்காம் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு .மேலும் இந்த முறை அவர் கை கோர்த்து உள்ளது உலகநாயகன் கமல்ஹாசனிடம்.


இயக்குனர் ஷங்கர் க்கு மூன்றாவது படத்தில் கமலை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அது போன்றதொரு வாய்ப்பு லோகேஷ் க்கு நான்காம் படத்தில் கிடைத்துள்ளது. இயக்குனரிடம் முழு பொறுப்பை கொடுத்தால் வெற்றி உறுதி என்பதை ஷங்கர் இந்தியனில் நிரூபித்ததை போல் லோகேஷ் கனகராஜ் விக்ரமில் நிரூபித்தாரா ?


இந்த முறை விமர்சிக்கும் படம் விக்ரம் , படத்துக்கு போலாமா ?


கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றம் தன் படைப்புகளில் அமைக்க வேண்டியது இயக்குனர் கட்டாயம் , அப்படி ஒரு மாற்றம் தன் முந்தைய படத்தை தற்போது உள்ள படத்தோடு லிங்க்(connect) செய்வது. தன் முந்தைய படமான கைதி யை இதில் இணைந்துள்ளார்.


கைப்பற்ற பட்ட கஞ்சாவை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருளை , காவல்துறை அதிகாரி பத்திரமாக வைக்கிறார் என்று தொடங்குகிறது இந்த படம், அவரை கொன்று அவரோடு நில்லாமல் மேலும் அதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் கொல்ல படுகிறார்கள் மேலும் கர்ணன் எனும் போதை ஆசாமி (போலீஸ் அதிகாரியின் தந்தை) கமலும் கொல்லப்படுகிறார் , கொலையாளிகளை பிடிக்க காவல்துறை ஒரு ரகசிய குழுவை அமைக்கிறது  அதற்கு தலைமை வகிக்கிறார் ஃபஹத் ஃபாசில் , 


ஃபஹத் ஃபாசில்  அந்த கும்பலை கண்டுபிடித்தாரா ? அந்த கஞ்சா மூலப்பொருளை எப்படியாவது மீட்டு ஒரு அரசாங்கத்தையே உருவாக்க முடியும் என நினைக்கும் சந்தானத்தின் கனவு நிறைவேறியதா ? மகனை பறி கொடுத்த தந்தை என்ன செய்தார் ? இந்த மூன்று கேள்விகளுக்கான விடையை 3 மணி நேரம் சுவாரஸ்யமான அதே நேரத்தில் தொய்வில்லாத திரைக்கதை யால் நம்மை கஞ்சா Mafia உலகத்திற்கு அழைத்து செல்கிறார் இயக்குனர்.


ஃபஹத் ஃபாசில் நடிப்பு , அவரின் பேச்சு அவரின் பார்வை , action காட்சிகள் எல்லாமே நடிப்பின் வேறு பரிமாணம் , தமிழ்சினிமா விற்கு  புதிது அவரின் கண்களே நடிக்கிறது. 


சந்தானமாக விஜய் சேதுபதி அவருக்கே உரித்தான இயல்பான நடிப்பு சில படங்களில் பார்த்தது தான் ஆனாலும் தன் பங்கை நிறைவாக செய்கிறார்.  போதை வஸ்து வை கடித்த பிற்பாடு அவரினுள் வெளிப்படும் மிருகதனமான நடிப்பு பகீர் ரகம்.



கர்ணனாக கமல் , மகனை இழந்த ஒரு தந்தை யின் மனது எப்படி பரிதவிக்கும் என தனக்கே உரிய நடிப்பு அவரின் குரல் சிங்கத்தின் கர்ஜனை நினைவு படுத்துகிறது. பிற்பாடு மது, மாது , கஞ்சா என வாழ்க்கை தடம்மாறி மகனை கொன்றவனை அவர் பழிவாங்கினாரா ? அவரின் குடும்பதிற்கும் வருங்கால சந்ததிகும் அவர் அளிக்கும் பங்கு என்ன என்பதை தன் நடிப்பால் விடை கூறுகிறார்.


இந்த மூவரின் நடிப்பு க்கு தீனி போடுவது சவாலானது அதை தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தால் வெளிக்கொணர்ந்து வெற்றி வாகி சூடியுள்ளார் லோகேஷ் கனகராஜ். Trendsetter movie in kollywood.


அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் , பத்தல பத்தல பாடல் கமல் தன் ரசிகர்களுக்கு கொடுக்கும்  மினி ட்ரீட். படத்தின் இடைவேளை காட்சி , சின்ன சின்ன twist , action sequence களில் கேமரா கண்களால் தன் பங்கை சரியாக செய்துள்ளார்

கிருஷ் கங்காதரன்.


தியேட்டர் க்கு செல்லுமுன் இயக்குனர் கூறியது போல கைதி படத்தை பார்த்து விட்டு செல்வது பரீட்சை க்கு செல்லும் முன் படித்துவிட்டு செல் என்று ஆசிரியர் கூறுவது  போல ஒரு அறிவுரை.


விக்ரம் விக்டரி 

ராஜா .க 


#விக்ரம் #Vikram #vikramreview

#Vikramreview #Vikraminaction


திங்கள், 30 மே, 2022

கண்ணே கண்ணாடி

 கண்ணே கண்ணாடி !!!


இந்த கண் கண்ணாடி யை பற்றி எழுத என்ன காரணம் ?  

வருடங்கள் பல உருண்டோயிய பிறகு கண்ணையும் , கண்ணாடியையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை .


என்ன கண்ணு தெரியாது அது தானே ? 

என்ற பகடி வார்த்தைகள் பார்த்து, கேட்டு.

பழகி , புளித்து போனது என் கண்ணாடி க்கும் , காதுகளுக்கும்.


உன்னை முதன் முதலில் அணியும் போது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சொல்ல போனால் உன்னை மறந்தும் கூட சென்றுள்ளேன் அதனால் தான் என்னவோ தெளிவான பார்வை இல்லாமல் சிலரின் உண்மை முகங்களை காண முடியவில்லை. 


நாட்கள் செல்ல , செல்ல என் உடம்பினுள் உள்ள ஒரு உறுப்பாகவே மாறிவிட்டாய். இப்போதும் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் , நீ என்னோடு இருக்கிறாய் என்று கூட தெரியாமல் ,  ஆழ்ந்த நித்திரை க்கு சென்று விட்டு எழுந்து முகத்தில் தண்ணிர் விடுகையில் தான் உணர்கிறேன். நீ என்னோடு தான் உள்ளாய் என்பதை. பிறகு சிரித்து கொண்டே உன்னை துடைத்து கொள்வேன்.


எனக்கான அடையாளங்கில் ஒருவனாகவே மாறி போனாய் , அந்த கண்ணாடி போட்ட ஒரு தம்பி ஒருவர் வருவாரே ? என்று என் பெயர் கூட தெரியாமல் உன்னை வைத்து எனக்கு கிடைத்த அங்கிகாரம் பல இடங்களில்.


பூமியே தன் சமநிலை யிலிருந்து விலகி ஒரு இடத்தில் அதிக மழை ,அதிக வெயில் கொடுக்கும். மானிடர்கள் எம்மாத்திரம் அவர்கள் தரும் ஒரு வகையான வெளிப்பாடன

கண்ணீர், என் கண்ணங்கள் வரை கூட விடாமல் ஒரு அ(ன்)ணை போல தடுத்து விடுவாய். 


அஃறிணை யான நீ உயர்திணை யை விட உயர்ந்து நிற்கிறாய் பல நேரங்களில்.


கண்ணாடி யுடன் 

ராஜா. க


 கண்ணே கண்ணாடி !!!


இந்த கண் கண்ணாடி யை பற்றி எழுத என்ன காரணம் ?  

வருடங்கள் பல உருண்டோயிய பிறகு கண்ணையும் , கண்ணாடியையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை .


என்ன கண்ணு தெரியாது அது தானே ? 

என்ற பகடி வார்த்தைகள் பார்த்து, கேட்டு.

பழகி , புளித்து போனது என் கண்ணாடி க்கும் , காதுகளுக்கும்.


உன்னை முதன் முதலில் அணியும் போது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சொல்ல போனால் உன்னை மறந்தும் கூட சென்றுள்ளேன் அதனால் தான் என்னவோ தெளிவான பார்வை இல்லாமல் சிலரின் உண்மை முகங்களை காண முடியவில்லை. 


நாட்கள் செல்ல , செல்ல என் உடம்பினுள் உள்ள ஒரு உறுப்பாகவே மாறிவிட்டாய். இப்போதும் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் , நீ என்னோடு இருக்கிறாய் என்று கூட தெரியாமல் ,  ஆழ்ந்த நித்திரை க்கு சென்று விட்டு எழுந்து முகத்தில் தண்ணிர் விடுகையில் தான் உணர்கிறேன். நீ என்னோடு தான் உள்ளாய் என்பதை. பிறகு சிரித்து கொண்டே உன்னை துடைத்து கொள்வேன்.


எனக்கான அடையாளங்கில் ஒருவனாகவே மாறி போனாய் , அந்த கண்ணாடி போட்ட ஒரு தம்பி ஒருவர் வருவாரே ? என்று என் பெயர் கூட தெரியாமல் உன்னை வைத்து எனக்கு கிடைத்த அங்கிகாரம் பல இடங்களில்.


பூமியே தன் சமநிலை யிலிருந்து விலகி ஒரு இடத்தில் அதிக மழை ,அதிக வெயில் கொடுக்கும். மானிடர்கள் எம்மாத்திரம் அவர்கள் தரும் ஒரு வகையான வெளிப்பாடன

கண்ணீர், என் கண்ணங்கள் வரை கூட விடாமல் ஒரு அ(ன்)ணை போல தடுத்து விடுவாய். 


அஃறிணை யான நீ உயர்திணை யை விட உயர்ந்து நிற்கிறாய் பல நேரங்களில்.


கண்ணாடி யுடன் 

ராஜா. க


ஞாயிறு, 22 மே, 2022

பேருந்து பயணமும் திடீர் பற்றும்....

 




வெகு நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் -தூத்துக்குடி பேருந்தில் செல்லும் வாய்ப்பு நல்கியது. கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. திருச்செந்தூர் இருந்து ஏறியதாலவோ என்னவோ அமர்ந்து செல்ல இடம் கிடைத்தது , பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது.


என்னருகில் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் வயதானவர் , தம்பி நீங்கள் எழுந்து அமர இடம் கொடுத்தால் நானும் எழுந்திருக்க வேண்டி இருக்கும் அதனால் , என்று இழுத்தார்,

சரி என்று புரிந்து  கொண்டு இருவரும் அமர்ந்திருந்தோம்.


பேருந்து பயணிக்க தொடங்கியது. மூன்று , நான்கு பேருந்து நிறுத்தத்திற்கு பிறகு பேருந்து "காயல்பட்டினம்" வந்தது அங்கு ஒரு பெண் சகோதரி ஏறினார்கள் , அது வரை பேருந்தில் நடப்பதை கண்டுகொள்ளாமல்  அமைதியாக இருந்த அந்த பெரியவர் ,


திடீரென எழுந்து காயல்பட்டினத்தில் எறிய அந்த பாய்அம்மா வை நோக்கி குரல் கொடுத்து நீங்க என் சீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று திடீர் பற்றுடன் அவரை அமர வைத்தார்.


 அப்பெரியவரின் செய்கை அப்போது தான் எனக்குள் தூங்கி கொண்டிருந்த பற்று வெளிக் கொணர செய்தது, நானும் என் அருகில் நின்று கொண்டிருந்த செந்தூரில் இருந்து பயணித்து கொண்டிருந்த குங்கும பொட்டு வைத்திருந்த சீதா லெட்சுமி (இந்த பெயரில் மாற்று கருத்து உள்ளவர்கள் வள்ளி ,காமாட்சி , மீனாட்சி , விசாலாட்சி என்று ஏதேனும் ஒன்றை படித்து கொள்ளுங்கள் ) யை போன்ற சகோதரியை அமருங்கள் என்று எனது இருக்கையை கொடுத்தேன்.


யானைக்கும் சரி மனிதனுக்கும் சரி மதம் பிடித்து விட்டால் பேராபத்து என்று எங்கேயோ படித்தது  நினைவுக்கு வந்தது..


நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் சுற்றமும் , சூழ்நிலையும் தான் தீர்மானிக்கும் போல.


ஜெய்ஹிந்த்

தமிழ் வெல்லும்

ராஜா .க

 




வெகு நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் -தூத்துக்குடி பேருந்தில் செல்லும் வாய்ப்பு நல்கியது. கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. திருச்செந்தூர் இருந்து ஏறியதாலவோ என்னவோ அமர்ந்து செல்ல இடம் கிடைத்தது , பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது.


என்னருகில் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் வயதானவர் , தம்பி நீங்கள் எழுந்து அமர இடம் கொடுத்தால் நானும் எழுந்திருக்க வேண்டி இருக்கும் அதனால் , என்று இழுத்தார்,

சரி என்று புரிந்து  கொண்டு இருவரும் அமர்ந்திருந்தோம்.


பேருந்து பயணிக்க தொடங்கியது. மூன்று , நான்கு பேருந்து நிறுத்தத்திற்கு பிறகு பேருந்து "காயல்பட்டினம்" வந்தது அங்கு ஒரு பெண் சகோதரி ஏறினார்கள் , அது வரை பேருந்தில் நடப்பதை கண்டுகொள்ளாமல்  அமைதியாக இருந்த அந்த பெரியவர் ,


திடீரென எழுந்து காயல்பட்டினத்தில் எறிய அந்த பாய்அம்மா வை நோக்கி குரல் கொடுத்து நீங்க என் சீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று திடீர் பற்றுடன் அவரை அமர வைத்தார்.


 அப்பெரியவரின் செய்கை அப்போது தான் எனக்குள் தூங்கி கொண்டிருந்த பற்று வெளிக் கொணர செய்தது, நானும் என் அருகில் நின்று கொண்டிருந்த செந்தூரில் இருந்து பயணித்து கொண்டிருந்த குங்கும பொட்டு வைத்திருந்த சீதா லெட்சுமி (இந்த பெயரில் மாற்று கருத்து உள்ளவர்கள் வள்ளி ,காமாட்சி , மீனாட்சி , விசாலாட்சி என்று ஏதேனும் ஒன்றை படித்து கொள்ளுங்கள் ) யை போன்ற சகோதரியை அமருங்கள் என்று எனது இருக்கையை கொடுத்தேன்.


யானைக்கும் சரி மனிதனுக்கும் சரி மதம் பிடித்து விட்டால் பேராபத்து என்று எங்கேயோ படித்தது  நினைவுக்கு வந்தது..


நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் சுற்றமும் , சூழ்நிலையும் தான் தீர்மானிக்கும் போல.


ஜெய்ஹிந்த்

தமிழ் வெல்லும்

ராஜா .க

வியாழன், 28 ஏப்ரல், 2022

நண்பர்களும் புரிதலும் !!

 நண்பர்களும்  புரிதலும்  !!! 


இன்று நண்பர்கள் க்கு இடையே நடக்கும் பல குழப்பங்களுக்கு இந்த

 " புரிதல் " இல்லாததது தான் முதல் காரணம் என்பது என் அவதானிப்பு. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.


அப்படி ஒரு அழகான மற்றும் அழத்தமான நினைவுகள் என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் இந்த புரிதலுக்கு உண்டான சிறு சான்றுகள்..


செல்வ ராஜ் ,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை. 

யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம். 


சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE பிரிவு மாணவர்கள் 7, நாங்கள் CSE மொத்தம் 10 நபர்கள் தங்கும் பெரிய வீடு.


கூட்டினுள் (விடுதியில்) கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.


நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி   மகிழ்ந்த காலம். 


ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல,  செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் உங்களுக்கு புரியாது என முகத்தை சுறுக்க,


நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது,  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் பேசியது ஒரு புறம். 


நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல். 

ஆனால் எங்களுக்குள் உள்ள புரிதல் ஒரே சேர வெளி கொணர்ந்த தருணம் அது.


இரண்டாவது நிகழ்வு.


8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால் 

A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம். 

A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார். 


நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை. 

மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம். எங்களை பார்த்து எங்கள் B பிரிவு மாணவிகள் வெளியேறியது செம மாஸா இருந்தது.


இந்த மாதிரி யான  புரிதல் நண்பர்களுக்குள்   இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.


புரிதலுடன் 

ராஜா . க

 நண்பர்களும்  புரிதலும்  !!! 


இன்று நண்பர்கள் க்கு இடையே நடக்கும் பல குழப்பங்களுக்கு இந்த

 " புரிதல் " இல்லாததது தான் முதல் காரணம் என்பது என் அவதானிப்பு. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.


அப்படி ஒரு அழகான மற்றும் அழத்தமான நினைவுகள் என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் இந்த புரிதலுக்கு உண்டான சிறு சான்றுகள்..


செல்வ ராஜ் ,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை. 

யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம். 


சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE பிரிவு மாணவர்கள் 7, நாங்கள் CSE மொத்தம் 10 நபர்கள் தங்கும் பெரிய வீடு.


கூட்டினுள் (விடுதியில்) கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.


நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி   மகிழ்ந்த காலம். 


ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல,  செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் உங்களுக்கு புரியாது என முகத்தை சுறுக்க,


நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது,  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் பேசியது ஒரு புறம். 


நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல். 

ஆனால் எங்களுக்குள் உள்ள புரிதல் ஒரே சேர வெளி கொணர்ந்த தருணம் அது.


இரண்டாவது நிகழ்வு.


8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால் 

A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம். 

A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார். 


நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை. 

மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம். எங்களை பார்த்து எங்கள் B பிரிவு மாணவிகள் வெளியேறியது செம மாஸா இருந்தது.


இந்த மாதிரி யான  புரிதல் நண்பர்களுக்குள்   இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.


புரிதலுடன் 

ராஜா . க

சனி, 2 ஏப்ரல், 2022

ஸ்ரீ பாலாஜி பவன் சைதாப்பேட்டை !!!

 



ஒரு வேலையாக #சைதாப்பேட்டை செல்ல  வேண்டி இருந்தது, வேலை முடிந்த பின் பழைய நினைவுகளுடன்

சைதாப்பேட்டை பாலத்தை கடந்து செல்கையில் சைதை யின் ஒரு அடையாளமான கலைஞர் ஆர்ச் (வளைவு) தாண்டி உள்ள ஸ்ரீ பாலாஜி பவன் அன்போடு அழைத்தது.


ஒரு காலத்துல என்னோட favourite ஹோட்டல் இங்கே மதியம்  lunch ரொம்ப சூப்பரா இருக்கும் குறிப்பாக சாம்பார், டிபன் வகையறாக்கள் கூட நல்லா தான் இருக்கும், சரி வந்ததும் வந்துட்டோம், மாலை பொழுதில்  லைட்டா ஒரு டிபன் சாப்பிடுவோம் என முடிவு செய்து, உள்ளே சென்றேன், ஒரு போர்டில் evening Combo என்று ஒரு மெனு.


ஒரு தோசை(மினி), கிச்சடி, சாம்பார் வடை, மினி காபி. அடடே நம்மை போல ஒருவன் தான் இது போன்ற மெனுவை  தயார் செய்து  இருப்பான் என்ற மகிழ்ச்சியில் சரி இன்று அதேயே ஆர்டர் கொடுத்தேன், எனக்கு தெரிந்து 12 வருடமாக அதே இடத்தில் இயங்குகின்ற கடை,


அதற்கு போட்டியாக அருகிலேயே ஹோட்டல் உடுப்பி ,

காரைக்குடி உணவகம் 

எல்லாம் வந்தது கால போக்கில் காணாமல் போனது. ஹோட்டல் தொழில் செய்வதில் எவ்வளவு கஷ்டம் என நினைத்து கொண்டு இருக்கையில் ஆர்டர் செய்த மெனு வந்தது. 


தேங்காய் சட்னி, கார சட்னி,சாம்பார் சகிதம்

முதலில் கிச்சடி யை நோக்கியே கண்கள் சென்றது. சாம்பாரை கிச்சடியில் படர செய்து சூடான சாம்பார் மற்றும் சற்று குழைந்த கிச்சடியுடன் சுவைக்கையில் அடடே பாண்டிய மன்னனுக்கு எழுந்த சந்தேகம் போல சாம்பரால் கிச்சடி சுவையானதா ? கிச்சடியால் சாம்பார் சுவை யானதா ? என்று சந்தேகம்.


சந்தேகம் தீர்க்க புலவர் தருமியை யா அழைக்க முடியும் ? இந்த முறை சட்னி உதவியுடன் உட்கொள்கையில் அந்த அளவுக்கு சுவையில்லை  கண்டேன் சீதையை என்ற கம்பன் வரிகளை போல கண்டேன் விடையை என்று பெருமிதத்துடன், சாம்பார் தான் சுவைக்கு காரணம் என்று ,ஆதலால் சாம்பார் வடை உதவியுடன் கிச்சடி உண்ணும் போது அதன் சுவை இரட்டிப்பு ஆனது.


மூன்றாவது முறையாக சாம்பார் வடை, கார சட்னி சகிதம் கிச்சடி சேர்த்து உண்ட பொழுது அட இந்த காம்போ நல்லா தான் இருக்கு என்று நினைத்து கிச்சடி யை தேடினால் அதன் தடமே இல்லை, அடேய் இது மினி கிச்சடி டா என்றது பிளேட். சரி சாம்பார் வடையை வதம் செய்து, மினி தோசை க்கு சென்று சட்னியுடன் ,சாம்பார்


சேர்த்து குழைத்து அடித்து தோசை யை முடிப்பதற்கு முன்பே காபியை கேட்டு விட்டேன், காபி வரம் நேரமும்  கார சட்னி தோசை காம்போ முடியவும் பழைய தமிழ் படங்களில் க்ளைமாக்ஸ் வரும் போலீஸ் போல சரியாக இருந்தது, நாக்கில் காரத்தின் சுவை ஒட்டி இருக்கையில் காபி யை ருசிக்கும் தருணம் காரமும் , அந்த காபி யின் இனிப்பும் ஒரு சேர்கையில் it's Bliss (இட்ஸ் பிளிஸ்).


திருப்தியான ஒரு evening டிபன் சாப்பிட்ட உணர்வு , பில் வந்தது குறைந்தது 90₹ முதல் 100₹ இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியம் நம் கணிப்பு பெரும்பாலும் தவறாக தான் முடியும் போல.  60₹ என்று இருந்தது 100 நாட்கள் கடந்தும் பெட்ரோல் விலை மாறாமல் இருந்ததை போன்ற அதிர்ச்சி.

இது போன்ற (Combo) காம்போ க்களை மற்ற ஹோட்டல்களும் முயற்சி செய்யலாம்.


பில்லை கட்டி விட்டு கல்லாவில் இருந்தவரிடத்தில் நல்லா இருந்தது, மூன்று வருடங்கள் முன்பு இங்கு வந்ததா நினைவு இன்றும் உங்கள் கடையின் சாம்பார் சுவை குறையவில்லை என்று கூறி விடை பெற்றேன். அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

நன்றி என்று கூறினார். 


இப்போது ள்ள பெரும்பாலான ஹோட்டல் கள் திறந்த வுடன் மூடு விழா காண்கிறது. காரணம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம், 

மேலும் முறையான master இல்லாமல் அவர்களே மாஸ்டர் வேடம் போட்டு கொள்வது. இதை பற்றி கேட்ட போது நமக்கு நல்லா சமைக்க தெரியும் மைண்ட் வாய்ஸ் அதை நாங்க சொல்லணும்.


 ஆண்பாவம் படத்தில் ஒரு காட்சி வரும், அதில் விகே. ராமசாமியை பார்த்து தென்னை மட்டை விற்றவன் லாம் தியேட்டர் கட்டினா இப்படி தான் நடக்கும் என்பார். அது போல எல்லாராலும் ஹோட்டல் வியாபாரம் செய்து வெற்றி பெறுவது கடினமே !!


ஸ்ரீ பாலாஜி பவன் வெற்றி அங்கு பணி புரியும் அனைவருக்குமான வெற்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉


இவன்

ராஜா.க

 



ஒரு வேலையாக #சைதாப்பேட்டை செல்ல  வேண்டி இருந்தது, வேலை முடிந்த பின் பழைய நினைவுகளுடன்

சைதாப்பேட்டை பாலத்தை கடந்து செல்கையில் சைதை யின் ஒரு அடையாளமான கலைஞர் ஆர்ச் (வளைவு) தாண்டி உள்ள ஸ்ரீ பாலாஜி பவன் அன்போடு அழைத்தது.


ஒரு காலத்துல என்னோட favourite ஹோட்டல் இங்கே மதியம்  lunch ரொம்ப சூப்பரா இருக்கும் குறிப்பாக சாம்பார், டிபன் வகையறாக்கள் கூட நல்லா தான் இருக்கும், சரி வந்ததும் வந்துட்டோம், மாலை பொழுதில்  லைட்டா ஒரு டிபன் சாப்பிடுவோம் என முடிவு செய்து, உள்ளே சென்றேன், ஒரு போர்டில் evening Combo என்று ஒரு மெனு.


ஒரு தோசை(மினி), கிச்சடி, சாம்பார் வடை, மினி காபி. அடடே நம்மை போல ஒருவன் தான் இது போன்ற மெனுவை  தயார் செய்து  இருப்பான் என்ற மகிழ்ச்சியில் சரி இன்று அதேயே ஆர்டர் கொடுத்தேன், எனக்கு தெரிந்து 12 வருடமாக அதே இடத்தில் இயங்குகின்ற கடை,


அதற்கு போட்டியாக அருகிலேயே ஹோட்டல் உடுப்பி ,

காரைக்குடி உணவகம் 

எல்லாம் வந்தது கால போக்கில் காணாமல் போனது. ஹோட்டல் தொழில் செய்வதில் எவ்வளவு கஷ்டம் என நினைத்து கொண்டு இருக்கையில் ஆர்டர் செய்த மெனு வந்தது. 


தேங்காய் சட்னி, கார சட்னி,சாம்பார் சகிதம்

முதலில் கிச்சடி யை நோக்கியே கண்கள் சென்றது. சாம்பாரை கிச்சடியில் படர செய்து சூடான சாம்பார் மற்றும் சற்று குழைந்த கிச்சடியுடன் சுவைக்கையில் அடடே பாண்டிய மன்னனுக்கு எழுந்த சந்தேகம் போல சாம்பரால் கிச்சடி சுவையானதா ? கிச்சடியால் சாம்பார் சுவை யானதா ? என்று சந்தேகம்.


சந்தேகம் தீர்க்க புலவர் தருமியை யா அழைக்க முடியும் ? இந்த முறை சட்னி உதவியுடன் உட்கொள்கையில் அந்த அளவுக்கு சுவையில்லை  கண்டேன் சீதையை என்ற கம்பன் வரிகளை போல கண்டேன் விடையை என்று பெருமிதத்துடன், சாம்பார் தான் சுவைக்கு காரணம் என்று ,ஆதலால் சாம்பார் வடை உதவியுடன் கிச்சடி உண்ணும் போது அதன் சுவை இரட்டிப்பு ஆனது.


மூன்றாவது முறையாக சாம்பார் வடை, கார சட்னி சகிதம் கிச்சடி சேர்த்து உண்ட பொழுது அட இந்த காம்போ நல்லா தான் இருக்கு என்று நினைத்து கிச்சடி யை தேடினால் அதன் தடமே இல்லை, அடேய் இது மினி கிச்சடி டா என்றது பிளேட். சரி சாம்பார் வடையை வதம் செய்து, மினி தோசை க்கு சென்று சட்னியுடன் ,சாம்பார்


சேர்த்து குழைத்து அடித்து தோசை யை முடிப்பதற்கு முன்பே காபியை கேட்டு விட்டேன், காபி வரம் நேரமும்  கார சட்னி தோசை காம்போ முடியவும் பழைய தமிழ் படங்களில் க்ளைமாக்ஸ் வரும் போலீஸ் போல சரியாக இருந்தது, நாக்கில் காரத்தின் சுவை ஒட்டி இருக்கையில் காபி யை ருசிக்கும் தருணம் காரமும் , அந்த காபி யின் இனிப்பும் ஒரு சேர்கையில் it's Bliss (இட்ஸ் பிளிஸ்).


திருப்தியான ஒரு evening டிபன் சாப்பிட்ட உணர்வு , பில் வந்தது குறைந்தது 90₹ முதல் 100₹ இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியம் நம் கணிப்பு பெரும்பாலும் தவறாக தான் முடியும் போல.  60₹ என்று இருந்தது 100 நாட்கள் கடந்தும் பெட்ரோல் விலை மாறாமல் இருந்ததை போன்ற அதிர்ச்சி.

இது போன்ற (Combo) காம்போ க்களை மற்ற ஹோட்டல்களும் முயற்சி செய்யலாம்.


பில்லை கட்டி விட்டு கல்லாவில் இருந்தவரிடத்தில் நல்லா இருந்தது, மூன்று வருடங்கள் முன்பு இங்கு வந்ததா நினைவு இன்றும் உங்கள் கடையின் சாம்பார் சுவை குறையவில்லை என்று கூறி விடை பெற்றேன். அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

நன்றி என்று கூறினார். 


இப்போது ள்ள பெரும்பாலான ஹோட்டல் கள் திறந்த வுடன் மூடு விழா காண்கிறது. காரணம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம், 

மேலும் முறையான master இல்லாமல் அவர்களே மாஸ்டர் வேடம் போட்டு கொள்வது. இதை பற்றி கேட்ட போது நமக்கு நல்லா சமைக்க தெரியும் மைண்ட் வாய்ஸ் அதை நாங்க சொல்லணும்.


 ஆண்பாவம் படத்தில் ஒரு காட்சி வரும், அதில் விகே. ராமசாமியை பார்த்து தென்னை மட்டை விற்றவன் லாம் தியேட்டர் கட்டினா இப்படி தான் நடக்கும் என்பார். அது போல எல்லாராலும் ஹோட்டல் வியாபாரம் செய்து வெற்றி பெறுவது கடினமே !!


ஸ்ரீ பாலாஜி பவன் வெற்றி அங்கு பணி புரியும் அனைவருக்குமான வெற்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉


இவன்

ராஜா.க

வெள்ளி, 25 மார்ச், 2022

RRR என் பார்வையில்

 RRR


சினிமா என்பது ஒரு கண் கட்டி வித்தை, பார்க்கும் நம் இரு கண்களை  ஒரு மூன்று மணி நேரம் கட்டி போட்டு திரையில் வரும் காட்சிகளோடு நம்மை பயணிக்க வைப்பது. சில  திரைப்படங்கள் பார்த்து விட்டு தியேட்டர் விட்டு வெளியேறிய பின்பும் சில காட்சிகள் நம் மன திரையில் ஒடும் அப்படி யுள்ள படங்கள் காலத்தால் அழியாத கோலங்கள்.


ராம் சரண், ஜூனியர் NTR  நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 

வெளிவந்துள்ள திரைப்படம்

RRR .


சமீப காலமாக சினிமாவில் கதை பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றெல்லாம் ஒரு பேச்சு அடிபடும் எனக்கு அதில் பெரும்பாலும் உடன்பாடு கிடையாது, ஏனென்றால் நம் வாழும் வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் என ஒவ்வொன்றும் வித்தியாசமானது அதை வைத்தே ஆயிரமாயிரம் கதை எழுதலாம் மேலும் நம் இந்தியா வில் பிறந்ததுநாளோ என்னவோ ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை என இதிகாசங்களை கேட்டு வளர்ந்து இருப்போம்.


இன்னும் சொல்ல போனால் ராமாயணம், மகாபாரதம் போன்ற வற்றில் உள்ள கிளை கதைகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் அதில் உள்ள ஒரு கிளை கதையை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் இன்றைய technology உபயோகித்து திரையில் நம் கண்களுக்கு விருந்து படைக்கலாம்.


இந்த இதிகாசங்களில் உள்ள ஒரு வரி கதை யை நிகழ் காலத்தில் நம் சந்திந்த நாம் பார்த்த மனிதர்களோடு இணைத்து ஒரு கதையை கையில் எடுத்து அதை தொய்வில்லாமல் நகர்த்தும் திரைக்கதை அமைத்தால் அப்படம் வெற்றியே.


சுதந்திரத்திற்கு முன் இந்தியா வில் உள்ள ஒரு  மலைவாழ் கிராமம் அங்குள்ள சிறு பிள்ளையை (மல்லி) அவளின் குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் பிரிட்டிஷார் மனைவி மல்லியை இழுத்து செல்கிறாள் அவளை அந்த கிராமத்து காப்பான் ஒருவன் எப்படி மீட்க போகிறான் இது ஒரு கதை.


பிரிட்டிஷாரின் போலீஸ் பணியில் சேர்ந்து மிக உயர்ந்த பொறுப்பான உச்ச காவல் அதிகாரி யாக விரும்பும் ஒரு இந்திய இளைஞன் அவன் ஏன் அந்த பணியில் சேர விரும்பினான் ? அதற்காக அவன் என்னவெல்லாம் செய்தான் , எதற்காக இதை செய்கிறான் இது ஒரு கதை.


இந்த இரு கதையில் உள்ள நாயகர்கள் ஒரு மைய புள்ளியில் இணைந்து அவர்கள் எவ்வாறு வெற்றி இலக்கை அடைந்தார்கள் என்பதை 3 மணி நேரம் மிக சுவாரஸ்யமான திரைக்கதை யால்  நகைச்சுவை, பாசம்,நட்பு, காதல்,துரோகம்,தேசம்,

விடுதலை என எல்லாம் கலந்து நம் கவலைகளை மறக்க செய்து இவ்வளவு கஷ்டப்பட்டா நமக்கு சுதந்திரம் கிடைத்தது என நம்மை நினைக்க வைத்து வெற்றி பெறுகிறார் இயக்குனர்.


ராம் சரண், ஜூனியர் NTR இவர்களின் அசாத்திய உடற் கட்டு இவர்கள் எதிரிகளை துவம்சம் செய்யும் போதெல்லாம் இதெல்லாம்  சாத்தியம் தான் என் நம்மை நினைக்க வைப்பது தான் கதாபாத்திரங்கள் வெற்றி அதை செவ்வனே செய்துள்ளார்கள் இருவரும்.


முதல் பாதியில் junior NTR நடிப்பு, நடனம்,சண்டை காட்சிகள், கண்ணீர் என ஸ்கோர் செய்கிறார், இரண்டாம் பாதியில் ராம் சரண்  ஸ்கோர் செய்கிறார்  அதிலும் அவரின் தோற்றமும், வில் ஏந்தி ராமனாக வே நம் கண்களில் தோன்றி வெள்ளை காரர்களை வதம் செய்வதெல்லாம் மயிற்கூச்சரியும் காட்சிகள்.


ராம்சரனை கண்டதும் அவரின் காதலி சீதா கொடுத்த டாலரை NTR கொடுப்பது அழகிய ஹைக்கூ ❤️❤️


ராமனுக்கு (ராம் சரன் ) உதவியாக பீம் (Junior NTR) இருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் பரபரப்பின் உச்சம். (சொல்லப்போனா சில்லறைகளை சிதற விடும் காட்சிகள்)


மதன் கார்கியின் வசனங்கள் துப்பாக்கி யில் இருந்து வரும் தோட்டாகள் ரகம் (வைரமுத்து மகன் ஆயிற்றே).


இரண்டு கதாபாத்திரங்களும் சம அளவில் பங்கு கொடுத்தற்கே இயக்குனர்க்கு சபாஷ்.பாடல்களும் சரி ,பிண்ணனி இசையும் சரி படத்திற்கு மிக பெரிய பலம்.


அசுரன்  போன்ற படங்களுக்கு சென்று அப்படத்தை பார்த்து கலைஞர்களை  ஊக்குவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது போன்ற சுதந்திர த்தை போற்றும் திரைப்படங்களுக்கும் சென்று ஊக்குவித்தால் அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.


ராஜமௌலி சார் உங்கள் திரைப்படத்தில் இன்னொரு மணிமகுடம் இந்த RRR வாழ்த்துக்கள்  ❤️❤️❤️

#RRR 


ரசிகன்

ராஜா.க


 RRR


சினிமா என்பது ஒரு கண் கட்டி வித்தை, பார்க்கும் நம் இரு கண்களை  ஒரு மூன்று மணி நேரம் கட்டி போட்டு திரையில் வரும் காட்சிகளோடு நம்மை பயணிக்க வைப்பது. சில  திரைப்படங்கள் பார்த்து விட்டு தியேட்டர் விட்டு வெளியேறிய பின்பும் சில காட்சிகள் நம் மன திரையில் ஒடும் அப்படி யுள்ள படங்கள் காலத்தால் அழியாத கோலங்கள்.


ராம் சரண், ஜூனியர் NTR  நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 

வெளிவந்துள்ள திரைப்படம்

RRR .


சமீப காலமாக சினிமாவில் கதை பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றெல்லாம் ஒரு பேச்சு அடிபடும் எனக்கு அதில் பெரும்பாலும் உடன்பாடு கிடையாது, ஏனென்றால் நம் வாழும் வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் என ஒவ்வொன்றும் வித்தியாசமானது அதை வைத்தே ஆயிரமாயிரம் கதை எழுதலாம் மேலும் நம் இந்தியா வில் பிறந்ததுநாளோ என்னவோ ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை என இதிகாசங்களை கேட்டு வளர்ந்து இருப்போம்.


இன்னும் சொல்ல போனால் ராமாயணம், மகாபாரதம் போன்ற வற்றில் உள்ள கிளை கதைகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் அதில் உள்ள ஒரு கிளை கதையை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் இன்றைய technology உபயோகித்து திரையில் நம் கண்களுக்கு விருந்து படைக்கலாம்.


இந்த இதிகாசங்களில் உள்ள ஒரு வரி கதை யை நிகழ் காலத்தில் நம் சந்திந்த நாம் பார்த்த மனிதர்களோடு இணைத்து ஒரு கதையை கையில் எடுத்து அதை தொய்வில்லாமல் நகர்த்தும் திரைக்கதை அமைத்தால் அப்படம் வெற்றியே.


சுதந்திரத்திற்கு முன் இந்தியா வில் உள்ள ஒரு  மலைவாழ் கிராமம் அங்குள்ள சிறு பிள்ளையை (மல்லி) அவளின் குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் பிரிட்டிஷார் மனைவி மல்லியை இழுத்து செல்கிறாள் அவளை அந்த கிராமத்து காப்பான் ஒருவன் எப்படி மீட்க போகிறான் இது ஒரு கதை.


பிரிட்டிஷாரின் போலீஸ் பணியில் சேர்ந்து மிக உயர்ந்த பொறுப்பான உச்ச காவல் அதிகாரி யாக விரும்பும் ஒரு இந்திய இளைஞன் அவன் ஏன் அந்த பணியில் சேர விரும்பினான் ? அதற்காக அவன் என்னவெல்லாம் செய்தான் , எதற்காக இதை செய்கிறான் இது ஒரு கதை.


இந்த இரு கதையில் உள்ள நாயகர்கள் ஒரு மைய புள்ளியில் இணைந்து அவர்கள் எவ்வாறு வெற்றி இலக்கை அடைந்தார்கள் என்பதை 3 மணி நேரம் மிக சுவாரஸ்யமான திரைக்கதை யால்  நகைச்சுவை, பாசம்,நட்பு, காதல்,துரோகம்,தேசம்,

விடுதலை என எல்லாம் கலந்து நம் கவலைகளை மறக்க செய்து இவ்வளவு கஷ்டப்பட்டா நமக்கு சுதந்திரம் கிடைத்தது என நம்மை நினைக்க வைத்து வெற்றி பெறுகிறார் இயக்குனர்.


ராம் சரண், ஜூனியர் NTR இவர்களின் அசாத்திய உடற் கட்டு இவர்கள் எதிரிகளை துவம்சம் செய்யும் போதெல்லாம் இதெல்லாம்  சாத்தியம் தான் என் நம்மை நினைக்க வைப்பது தான் கதாபாத்திரங்கள் வெற்றி அதை செவ்வனே செய்துள்ளார்கள் இருவரும்.


முதல் பாதியில் junior NTR நடிப்பு, நடனம்,சண்டை காட்சிகள், கண்ணீர் என ஸ்கோர் செய்கிறார், இரண்டாம் பாதியில் ராம் சரண்  ஸ்கோர் செய்கிறார்  அதிலும் அவரின் தோற்றமும், வில் ஏந்தி ராமனாக வே நம் கண்களில் தோன்றி வெள்ளை காரர்களை வதம் செய்வதெல்லாம் மயிற்கூச்சரியும் காட்சிகள்.


ராம்சரனை கண்டதும் அவரின் காதலி சீதா கொடுத்த டாலரை NTR கொடுப்பது அழகிய ஹைக்கூ ❤️❤️


ராமனுக்கு (ராம் சரன் ) உதவியாக பீம் (Junior NTR) இருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் பரபரப்பின் உச்சம். (சொல்லப்போனா சில்லறைகளை சிதற விடும் காட்சிகள்)


மதன் கார்கியின் வசனங்கள் துப்பாக்கி யில் இருந்து வரும் தோட்டாகள் ரகம் (வைரமுத்து மகன் ஆயிற்றே).


இரண்டு கதாபாத்திரங்களும் சம அளவில் பங்கு கொடுத்தற்கே இயக்குனர்க்கு சபாஷ்.பாடல்களும் சரி ,பிண்ணனி இசையும் சரி படத்திற்கு மிக பெரிய பலம்.


அசுரன்  போன்ற படங்களுக்கு சென்று அப்படத்தை பார்த்து கலைஞர்களை  ஊக்குவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது போன்ற சுதந்திர த்தை போற்றும் திரைப்படங்களுக்கும் சென்று ஊக்குவித்தால் அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.


ராஜமௌலி சார் உங்கள் திரைப்படத்தில் இன்னொரு மணிமகுடம் இந்த RRR வாழ்த்துக்கள்  ❤️❤️❤️

#RRR 


ரசிகன்

ராஜா.க