திங்கள், 14 நவம்பர், 2022

காந்தாரா என் பார்வையில் !!

 மனிதன் தான் கடவுள் , கடவுள் தான் மனிதன். கடவுள் மனிதனிடம் , 

தான் கூறியதை நிறைவேற்றியதை போல நீ கூறியதை நிறைவேற்று என கூறி தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பறினார் கடவுள் என்பது தான் காந்தாரா..



மலை வாழ் மக்கள் அவர்களுக்கு என ஒரு கடவுள் , அந்த கடவுள் என்னோடு வர வேண்டும் என ராஜா ஒருவர் கேட்க ? அதற்கு அந்த கடவுள, என் மக்களுக்கு என்ன என்ன கொடுப்பாய் என பதிலுக்கு கேட்க ? தனக்கு சொந்தமான இந்த நிலங்களை தருகிறேன் என கூறுகிறார்.



பேராசை கொண்ட மனிதன் தானே , ராஜாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் கொடுத்த இடத்தை கேட்கிறார்கள்.

 எப்படி கடவுள் ?(மனிதர்கள் ,கோ , அரசு) காப்பாற்றினார் என்பதை சுவாரஸ்யமான திரைகதையால் 

படம் முழுக்க அந்த கிராம மக்களுடன் வாழும் உணர்வை பெருகிறோம். 


கமல் கூறுவார் சினிமாவே ஒரு மொழி தானே அந்த மாதிரி (கன்னடம் , துளு) என்று சில இடங்களில் பேசினாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது , கன்னட மக்களின் விளையாட்டு , அவர்கள் சாமி கும்பிடும் முறை அனைத்தும் தமிழ்நாடு மக்களோடு ஒத்துப்போகும் படியாக உள்ளதால் என்னவோ படத்தோடு ஒண்றிக்கொள்ள முடிகிறது.



இறை நம்பிக்கை உள்ளவர்கள் படம் பார்க்கும் போது அவர்களின் சிறு வயதில் கேட்ட கதைகள் பார்த்த மனிதர்கள் கதாப்பாத்திரமாக வருவார்கள். இறுதி காட்சி எல்லாம் மெய் சிலிர்த்து போகும் அளவுக்கான நடிப்பு , கடவுளின் உடல் மொழி கிராமத்து மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைத்திருப்பது மயிர்கூச்சரியும் காட்சி (goosebumps). படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது படத்தின் தாக்கம் சிறுது நேரம் இருக்க வேண்டும் இருந்தது.



கொசுறு தகவல்:  Night Show பார்த்துவிட்டு பைக்கில் செல்கையில் 7 எட்டு நாய்கள் அருகில் செல்கையில் காந்தார மாதிரி ஓஓஓஓஓஓம்ம்ம் என்றேன் நாய்கள் தெறிந்து ஓடியது 😲😀😂





#Kantara #Kantaramovie 

இவன்

ராஜா க


 மனிதன் தான் கடவுள் , கடவுள் தான் மனிதன். கடவுள் மனிதனிடம் , 

தான் கூறியதை நிறைவேற்றியதை போல நீ கூறியதை நிறைவேற்று என கூறி தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பறினார் கடவுள் என்பது தான் காந்தாரா..



மலை வாழ் மக்கள் அவர்களுக்கு என ஒரு கடவுள் , அந்த கடவுள் என்னோடு வர வேண்டும் என ராஜா ஒருவர் கேட்க ? அதற்கு அந்த கடவுள, என் மக்களுக்கு என்ன என்ன கொடுப்பாய் என பதிலுக்கு கேட்க ? தனக்கு சொந்தமான இந்த நிலங்களை தருகிறேன் என கூறுகிறார்.



பேராசை கொண்ட மனிதன் தானே , ராஜாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் கொடுத்த இடத்தை கேட்கிறார்கள்.

 எப்படி கடவுள் ?(மனிதர்கள் ,கோ , அரசு) காப்பாற்றினார் என்பதை சுவாரஸ்யமான திரைகதையால் 

படம் முழுக்க அந்த கிராம மக்களுடன் வாழும் உணர்வை பெருகிறோம். 


கமல் கூறுவார் சினிமாவே ஒரு மொழி தானே அந்த மாதிரி (கன்னடம் , துளு) என்று சில இடங்களில் பேசினாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது , கன்னட மக்களின் விளையாட்டு , அவர்கள் சாமி கும்பிடும் முறை அனைத்தும் தமிழ்நாடு மக்களோடு ஒத்துப்போகும் படியாக உள்ளதால் என்னவோ படத்தோடு ஒண்றிக்கொள்ள முடிகிறது.



இறை நம்பிக்கை உள்ளவர்கள் படம் பார்க்கும் போது அவர்களின் சிறு வயதில் கேட்ட கதைகள் பார்த்த மனிதர்கள் கதாப்பாத்திரமாக வருவார்கள். இறுதி காட்சி எல்லாம் மெய் சிலிர்த்து போகும் அளவுக்கான நடிப்பு , கடவுளின் உடல் மொழி கிராமத்து மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைத்திருப்பது மயிர்கூச்சரியும் காட்சி (goosebumps). படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது படத்தின் தாக்கம் சிறுது நேரம் இருக்க வேண்டும் இருந்தது.



கொசுறு தகவல்:  Night Show பார்த்துவிட்டு பைக்கில் செல்கையில் 7 எட்டு நாய்கள் அருகில் செல்கையில் காந்தார மாதிரி ஓஓஓஓஓஓம்ம்ம் என்றேன் நாய்கள் தெறிந்து ஓடியது 😲😀😂





#Kantara #Kantaramovie 

இவன்

ராஜா க


சனி, 12 நவம்பர், 2022

குடிகாரருடன் ஒரு பயணம் !!

 இந்த மாதிரி கதை எழுத எனக்கு inspiration @Sollakudatham இவரை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறோம் என்று கூறிவிட்டு கதைக்கு செல்வோம்.

திட்டமிடா பயணம் என்பதால் இரயில் டிக்கெட் கிடைக்கவில்லை @redBus_in உதவியுடன் ticket book செய்கையில் individual sleeper சீட் , double sleeper சீட் இரண்டும் இருந்தது. 


இரண்டு seat க்கும் 75₹ வித்யாசம் தான்.

இந்த ரூபாயை மிச்சம் பிடித்து தான் ஊரப்பாகத்தில் அரை ground இடம் வாங்க போறோம் என்ற நினைப்பு அதனால் double  sleeper சீட் தான் புக் பண்ணியாச்சு.


உடன்குடி யிலிருந்து பஸ் கிழம்பும் போது நடத்துனர் call பண்ணி அண்ணே கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க என்றார். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ்க்காகலாம் சூனா , பானா காத்திருக்க வேண்டி இருக்கு என்ற insta ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த பொழுது பஸ் வந்தது.



Busஇல் எனக்கான சீட்டில் கால் நீட்டி உடகார்ந்த போது பக்கத்து சீட் பேர்வழி வரல , இதுக்கு அப்புறம் வருவார் போலனு நினைத்து கொண்டே,  charging point வேலை செய்யுதா செக் பண்ணிட்டு மல்லாக்கா படுத்து கொண்டு வானில் நட்சத்திரங்களோடு , நகர  தொடங்கியது பயணம். தூத்துக்குடி வந்தாயிற்று.



வழக்கமாக நிற்கும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் கடையில் பிடித்த பொறிச்ச புரோட்டா வும் இட்லி வாங்கி கொண்டு சீட்டுக்கு வந்தேன் , பஸ் கிழம்பியது பக்கத்து சீட்டு க்கு ஆள் வரவில்லை சின்ன சந்தோஷம். PS-1 பார்த்து கொண்டே டின்னர் முடித்து விட்டு படமும் ஓடியது.



பஸ் மதுரை நெருங்க தூக்கமும் எட்டி பார்த்தது. இன்னும் என்னடா படம் தூங்கு என்ற range இல் double seat comfortable தூங்கியாச்சு. 

தூங்கா நகரம் (மதுரை) வந்தது , என் தூக்கத்தை கெடுக்கும் இம்சை யும் கூடவே வர போகிறது என்று எனக்கு அப்போ தெரியல.



பக்கத்து சீட் பேர்வழி மதுரை யில் ஏறினார் , சோகம் என்னன்னா படி வழியா அவரால எற முடியல அந்த அளவுக்கு மது வோடு இணக்கம் போல , இணைந்த கைகள் ஹீரோனு நினைப்பு எனக்கு அவரின் கையை  பிடித்து சீட்டில் அமர்ந்தார். ரொம்ப thanks பாஸ் என்றார் , பரவாயில்லை என்றேன்.


சாப்பிட நினைத்து அவர் கொண்டு வந்த பார்சலை ஓப்பன் செய்தார் ,பரோட்டா வை பிச்சு போட்டு குருமாவை எடுத்தார் , ஆண்டவன் முடிச்சை விட கடைக்காரர்கள் தான் கற்று கொண்ட மொத்த வித்தை யையும் காட்டி கஷ்டமான முடிச்சு போட்டுருப்பார் போல , அண்ணே கொஞ்சம் பிரிச்சி கொடுங்க என்றார். 



சரி பொறுமையா

அந்த ரப்பர் பேண்டை கழட்டி கொடுத்தேன் , சோகம் என்னன்னா நமக்கு இந்த மாதிரி நடக்கும் போது எரிச்சல் வரும் அடுத்தவர்களுக்கு என்று வரும் போது பொறுமை யா கை ஆள்வோம் அது தான் டிசைன் போல. இந்த உதவிக்கும் ரொம்ப thanks அண்ணே என்றார். அட இருக்கட்டும் என்றேன்.



தூங்க தொடங்கினேன். பக்கத்து சீட் பேர்வழி சாப்பிட்டு விட்டு போனில் சத்தமாக பேச தொடங்கினார் , ரைட்டு இன்று நம் தூக்கம் அவ்ளோ தான் போல என்று நினைத்தேன். பேசி முடித்து விட்டு lover  அண்ணே , புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறா என்னை என்று காதல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான் அந்த தம்பி.



அடேய் போதும் டா , என்னை தூங்கவிடு தம்பி என்று மனதுக்குள் சொல்லி கொண்டேன். அழ ஆரம்பித்தான் ஒரு வழியா மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி விட்டு அப்படியே தூங்கி விட்டார் அந்த குடிகாரர் தம்பி. இந்த மாதிரி காலேஜ் days என் நண்பர்கள் செய்வது ஏன் நினைவுக்கு வந்தது.



காதல் இன்னும் இவ்வுலகில் உயிர்ப்போடு உள்ளது தான் போல அதை நினைத்து கொண்டு ,  சிரித்து கொண்டே தூங்க தொடங்கினேன். திடீரென ஒரு சத்தம் , ஆம் குறட்டை சத்தம் , தம்பி பயங்கரமா குறட்டை விட்டு கொண்டே அவரின் கைகளை என் மீது போட்டார் , அவரின் கைகளை தள்ளி விட்டேன்.



ஆனால் குறட்டை சத்தம் தொடர்ந்து ஒலித்தது. எனக்கு தூக்கம் எல்லாம் பல கிலோமீட்டர் க்கு அப்பால் சென்று விட்டது. இனிமேல் இந்த மாதிரி சீட் புக் பண்ணுவ என எனக்கு நானே கேட்டு கொண்டேன். ஒரு வழியா தூங்கி எழுகையில் கூடுவாஞ்செரி அருகில் பஸ் சென்றது.


சுதாரித்து எழுந்து கொண்டு பக்கத்து சீட் தம்பியை எழுப்பினேன் ,  அவர் எழுந்து அண்ணே ரொம்ப thanks என்றார் சிரித்து கொண்டே வண்டலூர் இறங்கி கொண்டேன். காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் இன்னும் மாறவில்லை. கதைகள் தொடரும் ..


#travel  #Travelexperience #journey 

இவண் 

ராஜா. க


 இந்த மாதிரி கதை எழுத எனக்கு inspiration @Sollakudatham இவரை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறோம் என்று கூறிவிட்டு கதைக்கு செல்வோம்.

திட்டமிடா பயணம் என்பதால் இரயில் டிக்கெட் கிடைக்கவில்லை @redBus_in உதவியுடன் ticket book செய்கையில் individual sleeper சீட் , double sleeper சீட் இரண்டும் இருந்தது. 


இரண்டு seat க்கும் 75₹ வித்யாசம் தான்.

இந்த ரூபாயை மிச்சம் பிடித்து தான் ஊரப்பாகத்தில் அரை ground இடம் வாங்க போறோம் என்ற நினைப்பு அதனால் double  sleeper சீட் தான் புக் பண்ணியாச்சு.


உடன்குடி யிலிருந்து பஸ் கிழம்பும் போது நடத்துனர் call பண்ணி அண்ணே கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க என்றார். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ்க்காகலாம் சூனா , பானா காத்திருக்க வேண்டி இருக்கு என்ற insta ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த பொழுது பஸ் வந்தது.



Busஇல் எனக்கான சீட்டில் கால் நீட்டி உடகார்ந்த போது பக்கத்து சீட் பேர்வழி வரல , இதுக்கு அப்புறம் வருவார் போலனு நினைத்து கொண்டே,  charging point வேலை செய்யுதா செக் பண்ணிட்டு மல்லாக்கா படுத்து கொண்டு வானில் நட்சத்திரங்களோடு , நகர  தொடங்கியது பயணம். தூத்துக்குடி வந்தாயிற்று.



வழக்கமாக நிற்கும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் கடையில் பிடித்த பொறிச்ச புரோட்டா வும் இட்லி வாங்கி கொண்டு சீட்டுக்கு வந்தேன் , பஸ் கிழம்பியது பக்கத்து சீட்டு க்கு ஆள் வரவில்லை சின்ன சந்தோஷம். PS-1 பார்த்து கொண்டே டின்னர் முடித்து விட்டு படமும் ஓடியது.



பஸ் மதுரை நெருங்க தூக்கமும் எட்டி பார்த்தது. இன்னும் என்னடா படம் தூங்கு என்ற range இல் double seat comfortable தூங்கியாச்சு. 

தூங்கா நகரம் (மதுரை) வந்தது , என் தூக்கத்தை கெடுக்கும் இம்சை யும் கூடவே வர போகிறது என்று எனக்கு அப்போ தெரியல.



பக்கத்து சீட் பேர்வழி மதுரை யில் ஏறினார் , சோகம் என்னன்னா படி வழியா அவரால எற முடியல அந்த அளவுக்கு மது வோடு இணக்கம் போல , இணைந்த கைகள் ஹீரோனு நினைப்பு எனக்கு அவரின் கையை  பிடித்து சீட்டில் அமர்ந்தார். ரொம்ப thanks பாஸ் என்றார் , பரவாயில்லை என்றேன்.


சாப்பிட நினைத்து அவர் கொண்டு வந்த பார்சலை ஓப்பன் செய்தார் ,பரோட்டா வை பிச்சு போட்டு குருமாவை எடுத்தார் , ஆண்டவன் முடிச்சை விட கடைக்காரர்கள் தான் கற்று கொண்ட மொத்த வித்தை யையும் காட்டி கஷ்டமான முடிச்சு போட்டுருப்பார் போல , அண்ணே கொஞ்சம் பிரிச்சி கொடுங்க என்றார். 



சரி பொறுமையா

அந்த ரப்பர் பேண்டை கழட்டி கொடுத்தேன் , சோகம் என்னன்னா நமக்கு இந்த மாதிரி நடக்கும் போது எரிச்சல் வரும் அடுத்தவர்களுக்கு என்று வரும் போது பொறுமை யா கை ஆள்வோம் அது தான் டிசைன் போல. இந்த உதவிக்கும் ரொம்ப thanks அண்ணே என்றார். அட இருக்கட்டும் என்றேன்.



தூங்க தொடங்கினேன். பக்கத்து சீட் பேர்வழி சாப்பிட்டு விட்டு போனில் சத்தமாக பேச தொடங்கினார் , ரைட்டு இன்று நம் தூக்கம் அவ்ளோ தான் போல என்று நினைத்தேன். பேசி முடித்து விட்டு lover  அண்ணே , புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறா என்னை என்று காதல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான் அந்த தம்பி.



அடேய் போதும் டா , என்னை தூங்கவிடு தம்பி என்று மனதுக்குள் சொல்லி கொண்டேன். அழ ஆரம்பித்தான் ஒரு வழியா மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி விட்டு அப்படியே தூங்கி விட்டார் அந்த குடிகாரர் தம்பி. இந்த மாதிரி காலேஜ் days என் நண்பர்கள் செய்வது ஏன் நினைவுக்கு வந்தது.



காதல் இன்னும் இவ்வுலகில் உயிர்ப்போடு உள்ளது தான் போல அதை நினைத்து கொண்டு ,  சிரித்து கொண்டே தூங்க தொடங்கினேன். திடீரென ஒரு சத்தம் , ஆம் குறட்டை சத்தம் , தம்பி பயங்கரமா குறட்டை விட்டு கொண்டே அவரின் கைகளை என் மீது போட்டார் , அவரின் கைகளை தள்ளி விட்டேன்.



ஆனால் குறட்டை சத்தம் தொடர்ந்து ஒலித்தது. எனக்கு தூக்கம் எல்லாம் பல கிலோமீட்டர் க்கு அப்பால் சென்று விட்டது. இனிமேல் இந்த மாதிரி சீட் புக் பண்ணுவ என எனக்கு நானே கேட்டு கொண்டேன். ஒரு வழியா தூங்கி எழுகையில் கூடுவாஞ்செரி அருகில் பஸ் சென்றது.


சுதாரித்து எழுந்து கொண்டு பக்கத்து சீட் தம்பியை எழுப்பினேன் ,  அவர் எழுந்து அண்ணே ரொம்ப thanks என்றார் சிரித்து கொண்டே வண்டலூர் இறங்கி கொண்டேன். காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் இன்னும் மாறவில்லை. கதைகள் தொடரும் ..


#travel  #Travelexperience #journey 

இவண் 

ராஜா. க


சனி, 29 அக்டோபர், 2022

நானே வருவேன்

 நடிகர் ராமராஜன் நடித்த படம். "ஊரு விட்டு ஊரு வந்து " நடிகை கௌதமி யின் கல்யாணம் கடைசி நேரத்தில் தடைபட்டு நிற்க ராமராஜன் அம்மா நீ கட்டுடா தாலியை என சொல்ல கல்யாணம் செய்கிறார் கதாநாயகன். முதல் இரவில் கௌதமி க்கு பேய் பிடித்தது தெரிய வருகிறது. எதற்கு கௌதமியை அந்த பேய் பிடித்தது.


சிங்கப்பூர் உள்ள தன் தந்தை யை தூக்கிலிருந்து ராமராஜன் எப்படி காப்பாற்றினார் என்பதை கவுண்ட மணி ,செந்தில் , காமெடி இளையராஜா இசை சொர்க்கமே என்றாலும் பாடல் இந்த படம் தான் )சுவாராஸ்யமாக சொல்லி இருப்பார்கள். 

சரி இந்த படத்தை ஏன் சொல்லறோம் னா ? 


சமிபத்தில் பார்த்த நானே வருவேன் படமும் கிட்ட திட்ட ஒரே கதை தான் , தன் சகோதரனை கொன்றவனை கொல்ல துடிக்கும் ஆவி இன்னொரு உயிர்க்குள் போய் அவளை பாடாய் படுத்தி எடுக்கிறது. அந்த ஆவியுடன் பேசி அது கேட்பதை செய்ய ஒத்துக்கொள்கிறான் கதாநாயகன் தனுஷ்.

#நானேவருவேன்



முதல் பாதியில் ஒரு மகளின் தந்தையாக அப்படி ஒரு பக்குவபட்ட நடிப்பு , அந்த பெண் குழந்தை தனுஷ் ஒவ்வொரு முறையும் Dada என்று கூறுகையில் அவ்ளோ அழகு. தன் குழந்தை க்கு பிரச்சினை என்ற பின் தனுஷ் தன் முகத்தில் காட்டும் expression அவ்ளோ எதார்த்தம். #தனுஷ் #நானேவருவேன்



இரண்டாம் பாதியில் மற்றோரு தனுஷ் அவரும் மனைவி குழந்தை களுடன்  சந்தோஷமாக வாழ்கிறார் .  இரவில் வேட்டை க்கு செல்கிறார் , அவருக்கு தெரியமால் மகனும் அவருடன் ஏறி செல்கிறார் , மகனுக்கு என்ன ஆனது ? என இரண்டு கதைகளையும் சுவாரஸ்யமான முறையில் முடித்து வைக்கிறார் இயக்குனர் #செல்வராகவன்



இரண்டாம் பாதியில் வரும் தனுஷ் நடிப்பு நடிப்பின் அடுத்த பரிமாணம் , ஒரே ஒரு ஊரிலே பாட்டுக்கு தனுஷ் போடும் ஆட்டம் கலக்கல். @dhanushkraja தன் கண் முன்னே தன் மகள் உடல்நிலை மோசமாவதை ஏற்று கொள்ள இயலாமல் நொறுங்கிறார் #தனுஷ் #நானேவருவேன்


இறுதியில் தன் மகளை காப்பாறினாரா , அந்த ஆவியின் ஆசை நிறைவேறியதா என்பதை எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் தன் அனுபவ இயக்கத்தால் நகர்த்தி செல்கிறார் #செல்வராகவன் #நானேவருவேன் 

வென்று விட்டான் 💪🏼👏🏼👏🏼👌🏻👌🏻#Amazonprime








 நடிகர் ராமராஜன் நடித்த படம். "ஊரு விட்டு ஊரு வந்து " நடிகை கௌதமி யின் கல்யாணம் கடைசி நேரத்தில் தடைபட்டு நிற்க ராமராஜன் அம்மா நீ கட்டுடா தாலியை என சொல்ல கல்யாணம் செய்கிறார் கதாநாயகன். முதல் இரவில் கௌதமி க்கு பேய் பிடித்தது தெரிய வருகிறது. எதற்கு கௌதமியை அந்த பேய் பிடித்தது.


சிங்கப்பூர் உள்ள தன் தந்தை யை தூக்கிலிருந்து ராமராஜன் எப்படி காப்பாற்றினார் என்பதை கவுண்ட மணி ,செந்தில் , காமெடி இளையராஜா இசை சொர்க்கமே என்றாலும் பாடல் இந்த படம் தான் )சுவாராஸ்யமாக சொல்லி இருப்பார்கள். 

சரி இந்த படத்தை ஏன் சொல்லறோம் னா ? 


சமிபத்தில் பார்த்த நானே வருவேன் படமும் கிட்ட திட்ட ஒரே கதை தான் , தன் சகோதரனை கொன்றவனை கொல்ல துடிக்கும் ஆவி இன்னொரு உயிர்க்குள் போய் அவளை பாடாய் படுத்தி எடுக்கிறது. அந்த ஆவியுடன் பேசி அது கேட்பதை செய்ய ஒத்துக்கொள்கிறான் கதாநாயகன் தனுஷ்.

#நானேவருவேன்



முதல் பாதியில் ஒரு மகளின் தந்தையாக அப்படி ஒரு பக்குவபட்ட நடிப்பு , அந்த பெண் குழந்தை தனுஷ் ஒவ்வொரு முறையும் Dada என்று கூறுகையில் அவ்ளோ அழகு. தன் குழந்தை க்கு பிரச்சினை என்ற பின் தனுஷ் தன் முகத்தில் காட்டும் expression அவ்ளோ எதார்த்தம். #தனுஷ் #நானேவருவேன்



இரண்டாம் பாதியில் மற்றோரு தனுஷ் அவரும் மனைவி குழந்தை களுடன்  சந்தோஷமாக வாழ்கிறார் .  இரவில் வேட்டை க்கு செல்கிறார் , அவருக்கு தெரியமால் மகனும் அவருடன் ஏறி செல்கிறார் , மகனுக்கு என்ன ஆனது ? என இரண்டு கதைகளையும் சுவாரஸ்யமான முறையில் முடித்து வைக்கிறார் இயக்குனர் #செல்வராகவன்



இரண்டாம் பாதியில் வரும் தனுஷ் நடிப்பு நடிப்பின் அடுத்த பரிமாணம் , ஒரே ஒரு ஊரிலே பாட்டுக்கு தனுஷ் போடும் ஆட்டம் கலக்கல். @dhanushkraja தன் கண் முன்னே தன் மகள் உடல்நிலை மோசமாவதை ஏற்று கொள்ள இயலாமல் நொறுங்கிறார் #தனுஷ் #நானேவருவேன்


இறுதியில் தன் மகளை காப்பாறினாரா , அந்த ஆவியின் ஆசை நிறைவேறியதா என்பதை எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் தன் அனுபவ இயக்கத்தால் நகர்த்தி செல்கிறார் #செல்வராகவன் #நானேவருவேன் 

வென்று விட்டான் 💪🏼👏🏼👏🏼👌🏻👌🏻#Amazonprime








வெள்ளி, 14 அக்டோபர், 2022

உன்னால் முடியும் !!

 உன்னால் முடியும் !!


90's களில் ஆடியோ கேசட்டுகள் பிரபலம் , அதில் பெயர் போனது HMV கம்பெனி. இவர்களின் பக்தி பாடல்கள் ஆல்பம் பெரிய ஹிட். அதில் ஒன்று சூலமங்களம் sister's பாடிய கந்த சஷ்டி கவசம் , கந்த குரு குவசம்.  ஆனால் இவர்கள் எல்லா கடைகளுக்கும் தங்கள் கேசட்டுகளை கொடுக்க மாட்டார்கள் , ஒரு குறிப்பிட்ட deposit தொகை கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.


எங்கள் கடை அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த நேரம் , சண்முகவிலாசம் புக்ஸ்டால். எல்லாருக்கும் வழி கிடைத்தது போலவே எங்களுக்கும் கிடைத்தது ஆம் HMV இணையாக symphony என்ற கேசட் கம்பெனி அப்போது பிரபலமாகி தொடங்கி இருந்தது. அவர்கள் எங்கள் கடைக்கு எந்த deposit தொகை யும் இல்லாமல் உங்களுக்கு விற்பனை ஆவதை வைத்து எங்களுக்கு பணம் செலுத்தினால் போதும் என்றனர்.



Symphony யும் கந்த சஷ்டி கவசம் ஆல்பம் ரெடி செய்தனர் பாடியது மகாநதி பட புகழ் ஷோபனா. எங்கள் கடைக்கு முதலில் 500 கேசட்டுகள் கொடுத்தனர். பள்ளி நேரங்கள் தவிர கிடைக்கும் நேரங்களில் கடைக்கு சென்று வியாபாரம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 


டேப்பிர் கார்டில் மாகநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாட்டை கேட்டேன் , மிகவும் பிடித்தது. சரி இதை விற்பனை செய்ய வேண்டும் ஆனால் கேட்க்கும் பலரும் HMV யின்  சூலமங்களம்  சிஸ்ட்ரஸ் பாடிய கேசட்டுகள் தான் வேண்டும் என்றனர். தனது முயற்சி யில் சற்றும் தளராத விகர்மாதித்ன் போல வந்தவர்களிடம் இந்த பாடலை ஒரு கேட்டு பாருங்கள் என்ற கேட்க ஆரம்பித்தேன்.



முதல் முயற்சி வெற்றி கிடைத்தது , ஆம் கேட்டவர்களுக்கு பிடித்த போக அதே யுக்தியை கையாண்டேன். மற்ற கேசட்டுகள் கேட்டு வந்தாலும் இந்த கேசட் விளம்பர படுத்தினேன். ஒரு வழியாக 500 கேசட்டுகள் விற்று தீர்ந்தது. அடுத்து முறை 1000 கொடுத்தார்கள் நம்பிக்கை அடிப்படை யில் , உள்ளூர வைராக்கியம் இவர்கள் நம்மை நம்பி கொடுத்துள்ளனர்.



கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் ரெக்கில் மகாநதி ஷோபனா விற்கென்று தனி Row , வருப்வர்களிடத்தில் எல்லாம் இந்த கேசட்டுகள் விற்று தீர்த்து விட வேண்டும் என்ற இலட்சியம். கடவுள் ஆசியுடன் இனிதே நடந்தது. ஆம் 5000 கேசட்டுகள் விற்பனை செய்தோம்.

பின்னாளில் sympony கம்பெனி யின் பல ஆலபங்கள் hit. குறிப்பாக "கட்டும் கட்டி " என்ற ஆல்பம் இன்று வரை மார்கழி மாதத்தில் ஒலிக்கும். மனதில் சின்ன மகிழ்ச்சி நம்மால் முடியும் என்று.


#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால் 

#திருச்செந்தூர்

#ShanmugavilasamBookStall

#Tiruchendur 





 உன்னால் முடியும் !!


90's களில் ஆடியோ கேசட்டுகள் பிரபலம் , அதில் பெயர் போனது HMV கம்பெனி. இவர்களின் பக்தி பாடல்கள் ஆல்பம் பெரிய ஹிட். அதில் ஒன்று சூலமங்களம் sister's பாடிய கந்த சஷ்டி கவசம் , கந்த குரு குவசம்.  ஆனால் இவர்கள் எல்லா கடைகளுக்கும் தங்கள் கேசட்டுகளை கொடுக்க மாட்டார்கள் , ஒரு குறிப்பிட்ட deposit தொகை கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.


எங்கள் கடை அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த நேரம் , சண்முகவிலாசம் புக்ஸ்டால். எல்லாருக்கும் வழி கிடைத்தது போலவே எங்களுக்கும் கிடைத்தது ஆம் HMV இணையாக symphony என்ற கேசட் கம்பெனி அப்போது பிரபலமாகி தொடங்கி இருந்தது. அவர்கள் எங்கள் கடைக்கு எந்த deposit தொகை யும் இல்லாமல் உங்களுக்கு விற்பனை ஆவதை வைத்து எங்களுக்கு பணம் செலுத்தினால் போதும் என்றனர்.



Symphony யும் கந்த சஷ்டி கவசம் ஆல்பம் ரெடி செய்தனர் பாடியது மகாநதி பட புகழ் ஷோபனா. எங்கள் கடைக்கு முதலில் 500 கேசட்டுகள் கொடுத்தனர். பள்ளி நேரங்கள் தவிர கிடைக்கும் நேரங்களில் கடைக்கு சென்று வியாபாரம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 


டேப்பிர் கார்டில் மாகநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாட்டை கேட்டேன் , மிகவும் பிடித்தது. சரி இதை விற்பனை செய்ய வேண்டும் ஆனால் கேட்க்கும் பலரும் HMV யின்  சூலமங்களம்  சிஸ்ட்ரஸ் பாடிய கேசட்டுகள் தான் வேண்டும் என்றனர். தனது முயற்சி யில் சற்றும் தளராத விகர்மாதித்ன் போல வந்தவர்களிடம் இந்த பாடலை ஒரு கேட்டு பாருங்கள் என்ற கேட்க ஆரம்பித்தேன்.



முதல் முயற்சி வெற்றி கிடைத்தது , ஆம் கேட்டவர்களுக்கு பிடித்த போக அதே யுக்தியை கையாண்டேன். மற்ற கேசட்டுகள் கேட்டு வந்தாலும் இந்த கேசட் விளம்பர படுத்தினேன். ஒரு வழியாக 500 கேசட்டுகள் விற்று தீர்ந்தது. அடுத்து முறை 1000 கொடுத்தார்கள் நம்பிக்கை அடிப்படை யில் , உள்ளூர வைராக்கியம் இவர்கள் நம்மை நம்பி கொடுத்துள்ளனர்.



கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் ரெக்கில் மகாநதி ஷோபனா விற்கென்று தனி Row , வருப்வர்களிடத்தில் எல்லாம் இந்த கேசட்டுகள் விற்று தீர்த்து விட வேண்டும் என்ற இலட்சியம். கடவுள் ஆசியுடன் இனிதே நடந்தது. ஆம் 5000 கேசட்டுகள் விற்பனை செய்தோம்.

பின்னாளில் sympony கம்பெனி யின் பல ஆலபங்கள் hit. குறிப்பாக "கட்டும் கட்டி " என்ற ஆல்பம் இன்று வரை மார்கழி மாதத்தில் ஒலிக்கும். மனதில் சின்ன மகிழ்ச்சி நம்மால் முடியும் என்று.


#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால் 

#திருச்செந்தூர்

#ShanmugavilasamBookStall

#Tiruchendur 





திங்கள், 3 அக்டோபர், 2022

மண்ணின் மைந்தன்


 பத்திரிக்கையில் கார்டுனிஸ்ட் ஆக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒரு சராசரி மனிதன் ,  தன் மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தி யாக எப்படி உருவானார் ? என்பதை 2மணி நேரத்தில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்து , அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.


கதையின் நாயகன் தன் எண்ணங்களை கார்ட்டூன் மூலம் பேச்சு பொருளாகி புயலை கிளப்புகிறான் , பத்திரிக்கை யின் தன் உயரதிகாரி நாயகனை கண்டிக்க வேலையை உதறி தள்ளி விட்டு சினிமா செல்கிறான்,  அங்கே தன் மக்கள் கேளிக்கை பொருளாவதை கண்டு அம்மக்களுக்கு தன் முயன்றதை பத்திரிகை மூலம் செய்ய முயல்கிறார்.


எம் மண்ணில் என் மாநில

மக்களுக்கு தான் முதல் உரிமை , பத்திரிகை மூலம் பரப்புகிறான். அது வரை மனதில் புழங்கி கொண்டிருந்த மக்களுக்கு தனக்கான ஒரு நபர் / பத்திரிகை வந்தது கண்டு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கரம் நீள்கிறது (காவல் துறை உட்பட).


பத்திரிகையை கட்சி யாக மாற்றி அதிகார மையத்தை நோக்கி நகர்கிறான் , அவனது துடிப்பான பேச்சில் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். களத்தில் இறங்கி தன் மாநில மக்களுக்கு தான் முன்னுரிமை என சுபாஷ் சந்திர போஸ் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.  அடி மட்ட தொண்டர்கள் வரை உதவிகள் செய்து பூஜை அறையில் தன் புகைப்படம் வைக்கின்ற 

தலைவனாக உருவாகிறான்.


கட்சி யை காங்கிரஸ் உடன் சேர்க்க கட்டாயத்த படுத்துகின்றனர். உதறி தள்ளுகிறான். எமர்ஜென்சி யை தனக்கு சாதுர்யமாக மாற்றி கொண்டு அவன் பாதையை நோக்கி காய்களை நகர்த்தி கொள்கிறான். இறுதியில் தன்

 கட்சி யை சேர்ந்த நபரை முதலமைச்சர் ஆக்கி கிங் மேக்கராக மக்கள் மனதில் நிற்கிறான்.


கதையின் நாயகன்

Nawazuddin Siddiqui அவ்ளோ நேர்த்தி யாக நடித்திருந்தார் என்பதை தாண்டி தாக்கரே வே வாழ்ந்திருந்தார். ஹிந்தி தெரியத எனக்கு கூட "ஜெய் மகாராஷ்ட்ரா" என என்னை அறியாமல் சொல்ல வைக்கும் அளவுக்கு ghoosebup நடிப்பு.பலமான பின்னணி இசை @NetflixIndia உள்ளது #Thackeray


இவண்

ராஜா.க



 பத்திரிக்கையில் கார்டுனிஸ்ட் ஆக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒரு சராசரி மனிதன் ,  தன் மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தி யாக எப்படி உருவானார் ? என்பதை 2மணி நேரத்தில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்து , அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.


கதையின் நாயகன் தன் எண்ணங்களை கார்ட்டூன் மூலம் பேச்சு பொருளாகி புயலை கிளப்புகிறான் , பத்திரிக்கை யின் தன் உயரதிகாரி நாயகனை கண்டிக்க வேலையை உதறி தள்ளி விட்டு சினிமா செல்கிறான்,  அங்கே தன் மக்கள் கேளிக்கை பொருளாவதை கண்டு அம்மக்களுக்கு தன் முயன்றதை பத்திரிகை மூலம் செய்ய முயல்கிறார்.


எம் மண்ணில் என் மாநில

மக்களுக்கு தான் முதல் உரிமை , பத்திரிகை மூலம் பரப்புகிறான். அது வரை மனதில் புழங்கி கொண்டிருந்த மக்களுக்கு தனக்கான ஒரு நபர் / பத்திரிகை வந்தது கண்டு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கரம் நீள்கிறது (காவல் துறை உட்பட).


பத்திரிகையை கட்சி யாக மாற்றி அதிகார மையத்தை நோக்கி நகர்கிறான் , அவனது துடிப்பான பேச்சில் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். களத்தில் இறங்கி தன் மாநில மக்களுக்கு தான் முன்னுரிமை என சுபாஷ் சந்திர போஸ் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.  அடி மட்ட தொண்டர்கள் வரை உதவிகள் செய்து பூஜை அறையில் தன் புகைப்படம் வைக்கின்ற 

தலைவனாக உருவாகிறான்.


கட்சி யை காங்கிரஸ் உடன் சேர்க்க கட்டாயத்த படுத்துகின்றனர். உதறி தள்ளுகிறான். எமர்ஜென்சி யை தனக்கு சாதுர்யமாக மாற்றி கொண்டு அவன் பாதையை நோக்கி காய்களை நகர்த்தி கொள்கிறான். இறுதியில் தன்

 கட்சி யை சேர்ந்த நபரை முதலமைச்சர் ஆக்கி கிங் மேக்கராக மக்கள் மனதில் நிற்கிறான்.


கதையின் நாயகன்

Nawazuddin Siddiqui அவ்ளோ நேர்த்தி யாக நடித்திருந்தார் என்பதை தாண்டி தாக்கரே வே வாழ்ந்திருந்தார். ஹிந்தி தெரியத எனக்கு கூட "ஜெய் மகாராஷ்ட்ரா" என என்னை அறியாமல் சொல்ல வைக்கும் அளவுக்கு ghoosebup நடிப்பு.பலமான பின்னணி இசை @NetflixIndia உள்ளது #Thackeray


இவண்

ராஜா.க


செவ்வாய், 27 செப்டம்பர், 2022

இந்திய நீதி துறையும் , தீர்ப்புகளும்

 சிறு வயது முதலே கதை கேட்பதில் ஆர்வம் உண்டு. அடுத்த கட்டம் School days இல்  வரலாறு மீது கொண்ட ஆர்வம் , குடிமையியல் மீதான கேள்விகள் , புவியியல் மீதான ஆச்சரியங்கள் என சமூக அறிவியல் பாடம் மீது அதீத விருப்பம்.  


புத்தக பாடத்தை தாண்டி இந்திய அரசியலை பால படமாக கற்று கொடுத்த குரு சாந்தா டீச்சர். அவர்கள் மீதான மதிப்பு அப்படத்தில் மேலும் ஆர்வம் காட்டியது. அப்படி ஒரு முறை கூறிய பாடம் 1975 இல் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு.  



Justice Jagmohanlal Sinha சர்வ வல்லமை படைத்த இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கூறி வரலாற்று தீர்ப்பு எழுதினார் என்று கூறினார். அப்போது தான் தெரியும் இந்திய நீதி துறையின் அதிகாரம் பற்றி படித்து தெரிந்து கொண்டேன்.



இதெல்லாம் இனி வரும் காலங்களில் நடக்குமா என எனக்கு நானே கேள்வி கேட்பதுண்டு. வருடங்கள் உருண்டோடின 30 வருடம் கழித்து 2015 செப்டம்பர் 27இல் அது போன்ற தொரு தீர்ப்பு இம்முறை பண பலம் , அதிகார பலம் என அனைத்தையும் தாண்டி நீதியரசர் குன்ஹா தன் தீர்ப்பை எழுதினார். அதில் PB ஆச்சார்யா விற்கு முக்கிய பங்குண்டு. 




 சிறு வயது முதலே கதை கேட்பதில் ஆர்வம் உண்டு. அடுத்த கட்டம் School days இல்  வரலாறு மீது கொண்ட ஆர்வம் , குடிமையியல் மீதான கேள்விகள் , புவியியல் மீதான ஆச்சரியங்கள் என சமூக அறிவியல் பாடம் மீது அதீத விருப்பம்.  


புத்தக பாடத்தை தாண்டி இந்திய அரசியலை பால படமாக கற்று கொடுத்த குரு சாந்தா டீச்சர். அவர்கள் மீதான மதிப்பு அப்படத்தில் மேலும் ஆர்வம் காட்டியது. அப்படி ஒரு முறை கூறிய பாடம் 1975 இல் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு.  



Justice Jagmohanlal Sinha சர்வ வல்லமை படைத்த இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கூறி வரலாற்று தீர்ப்பு எழுதினார் என்று கூறினார். அப்போது தான் தெரியும் இந்திய நீதி துறையின் அதிகாரம் பற்றி படித்து தெரிந்து கொண்டேன்.



இதெல்லாம் இனி வரும் காலங்களில் நடக்குமா என எனக்கு நானே கேள்வி கேட்பதுண்டு. வருடங்கள் உருண்டோடின 30 வருடம் கழித்து 2015 செப்டம்பர் 27இல் அது போன்ற தொரு தீர்ப்பு இம்முறை பண பலம் , அதிகார பலம் என அனைத்தையும் தாண்டி நீதியரசர் குன்ஹா தன் தீர்ப்பை எழுதினார். அதில் PB ஆச்சார்யா விற்கு முக்கிய பங்குண்டு. 




ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

Happy Independence Day


இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.


மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 


8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!


பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.


பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 


"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"


"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.


படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.


ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.


 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 


ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.


இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 


படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.


நினைவுகளுடன்

ராஜா.க


இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.


மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 


8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!


பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.


பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 


"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"


"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.


படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.


ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.


 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 


ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.


இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 


படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.


நினைவுகளுடன்

ராஜா.க