ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

படித்ததில் ரசித்தது

 #அந்தகாலம் 


ஊசி போடாத *Doctor* ..


சில்லறை கேட்காத *Conductor* ..


சிரிக்கும் *police* ...


முறைக்கும் *காதலி* ..


உப்பு தொட்ட *மாங்கா* ..


மொட்டமாடி *தூக்கம்* ..


திருப்தியான ஏப்பம்...


Notebookன் *கடைசிப்பக்கம்* ...


தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....


பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..


இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..


இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...


கோபம் மறந்த *அப்பா* ..


சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..


அக்கறை காட்டும் *அண்ணன்* ..


அதட்டும் *அக்கா* ...


மாட்டி விடாத *தங்கை* ..


சமையல் பழகும் *மனைவி* ...


சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..


வழிவிடும் *ஆட்டோ* காரர்...


 *High beam* போடாத லாரி ஓட்டுனர்..


அரை மூடி *தேங்கா* ..


12மணி *குல்பி* ..


sunday *சாலை* ...


மரத்தடி *அரட்டை* ...


தூங்க விடாத *குறட்டை* ...


புது நோட் *வாசம்* ..


மார்கழி *மாசம்* ..


ஜன்னல் *இருக்கை* ..


கோவில் *தெப்பகுளம்* ..


Exhibition *அப்பளம்* ..


முறைப்பெண்ணின் *சீராட்டு* ...


எதிரியின் *பாராட்டு* ..


தோசைக்கல் *சத்தம்* ..


எதிர்பாராத  *முத்தம்* ...


பிஞ்சு *பாதம்* ..


எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,


வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,


சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,


முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,


 *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,


 *எம்ஜிஆர், கலைஞர்*  உயிரோடு இருந்தார்கள்.


 *ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.


கபில் தேவின் *கிரிக்கெட்* .


குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.


 *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,


எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,


சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,* 


தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,


மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,


மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,


ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,


பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,


எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,


கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...


பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...


கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...


7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..


பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...


எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது


வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்


 *சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்


ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்


பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,


சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,


தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,


இதை எழுதும் *நான்* ..


படிக்கும் *நீங்கள்* ..


இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .


கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.


#நம்சுகங்களும்_நம்பிக்கைகளும்தான்.

 #அந்தகாலம் 


ஊசி போடாத *Doctor* ..


சில்லறை கேட்காத *Conductor* ..


சிரிக்கும் *police* ...


முறைக்கும் *காதலி* ..


உப்பு தொட்ட *மாங்கா* ..


மொட்டமாடி *தூக்கம்* ..


திருப்தியான ஏப்பம்...


Notebookன் *கடைசிப்பக்கம்* ...


தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....


பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..


இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..


இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...


கோபம் மறந்த *அப்பா* ..


சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..


அக்கறை காட்டும் *அண்ணன்* ..


அதட்டும் *அக்கா* ...


மாட்டி விடாத *தங்கை* ..


சமையல் பழகும் *மனைவி* ...


சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..


வழிவிடும் *ஆட்டோ* காரர்...


 *High beam* போடாத லாரி ஓட்டுனர்..


அரை மூடி *தேங்கா* ..


12மணி *குல்பி* ..


sunday *சாலை* ...


மரத்தடி *அரட்டை* ...


தூங்க விடாத *குறட்டை* ...


புது நோட் *வாசம்* ..


மார்கழி *மாசம்* ..


ஜன்னல் *இருக்கை* ..


கோவில் *தெப்பகுளம்* ..


Exhibition *அப்பளம்* ..


முறைப்பெண்ணின் *சீராட்டு* ...


எதிரியின் *பாராட்டு* ..


தோசைக்கல் *சத்தம்* ..


எதிர்பாராத  *முத்தம்* ...


பிஞ்சு *பாதம்* ..


எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,


வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,


சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,


முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,


 *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,


 *எம்ஜிஆர், கலைஞர்*  உயிரோடு இருந்தார்கள்.


 *ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.


கபில் தேவின் *கிரிக்கெட்* .


குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.


 *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,


எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,


சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,* 


தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,


மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,


மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,


ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,


பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,


எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,


கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...


பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...


கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...


7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..


பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...


எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது


வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்


 *சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்


ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்


பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,


சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,


தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,


இதை எழுதும் *நான்* ..


படிக்கும் *நீங்கள்* ..


இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .


கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.


#நம்சுகங்களும்_நம்பிக்கைகளும்தான்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

#TeachersDay

 September 5  

Radhakrishnan Birthday 

#TeachersDay 👩‍🏫  👨‍🏫


என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை  

மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவர்கள்.


நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  


இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர். 


வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர். 


ஒரு உதவாக்கரையை 

இன்று 

ஒரு உதவும்கரை ஆக்கி 

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

 September 5  

Radhakrishnan Birthday 

#TeachersDay 👩‍🏫  👨‍🏫


என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை  

மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவர்கள்.


நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  


இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர். 


வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர். 


ஒரு உதவாக்கரையை 

இன்று 

ஒரு உதவும்கரை ஆக்கி 

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இரயிலும், மசால் பொரியும்

 சுவையான அனுபவம்


ஒரு இரயில் பயணத்தின் பொழுது எனது கோச்சில் மசாலா பொறி கொண்டு வந்தார் வணிகர், 

முதலில் அனைவருமே மன்மோகன்சிங் நிலையில் தான் இருந்தோம், 

நாம் சும்மா இருந்தால் தான் நம் வாய் சும்மாக இருக்காதே ! 

அண்ணா பொறி என்றேன், 

அவரும் சிக்கிட்டான் டா ஒருத்தன் என்ற ரீதியில் எடுத்து கொடுத்தார்.


சில நொடிகளில் நம் வலது கை, இடது கை,எதிரில் இருந்தவர் என 6 கைகள் நீட்டியது..

மைண்ட் வாய்ஸ் : ஏன் பா நீங்களா வாங்க மாட்டிங்க, எவராவது ஒருவர் வாங்கியவுடன் தானும் வாங்கி கொள்வது..

என்ன ஒரு புத்திசாலி தனம் 😲


நீங்களும் ஒரு முறை இது போன்று முயற்சி செய்து பாருங்களேன் 👍🏻

 சுவையான அனுபவம்


ஒரு இரயில் பயணத்தின் பொழுது எனது கோச்சில் மசாலா பொறி கொண்டு வந்தார் வணிகர், 

முதலில் அனைவருமே மன்மோகன்சிங் நிலையில் தான் இருந்தோம், 

நாம் சும்மா இருந்தால் தான் நம் வாய் சும்மாக இருக்காதே ! 

அண்ணா பொறி என்றேன், 

அவரும் சிக்கிட்டான் டா ஒருத்தன் என்ற ரீதியில் எடுத்து கொடுத்தார்.


சில நொடிகளில் நம் வலது கை, இடது கை,எதிரில் இருந்தவர் என 6 கைகள் நீட்டியது..

மைண்ட் வாய்ஸ் : ஏன் பா நீங்களா வாங்க மாட்டிங்க, எவராவது ஒருவர் வாங்கியவுடன் தானும் வாங்கி கொள்வது..

என்ன ஒரு புத்திசாலி தனம் 😲


நீங்களும் ஒரு முறை இது போன்று முயற்சி செய்து பாருங்களேன் 👍🏻

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

சல்லிகளும் சல்லாபங்களும்..

 

சல்லிகளும் சல்லாபங்களும்..


சாமியார்கள் என்று சொன்னால் 

Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.


இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ? 

பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.


80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..


15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??


குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..


இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?  

இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது. 

நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ? 

நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.


இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடமும், நட்புகளிடமும் கலந்துரையாடினால் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.


அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.  


சிந்திப்போம்.....

 

சல்லிகளும் சல்லாபங்களும்..


சாமியார்கள் என்று சொன்னால் 

Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.


இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ? 

பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.


80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..


15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??


குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..


இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?  

இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது. 

நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ? 

நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.


இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடமும், நட்புகளிடமும் கலந்துரையாடினால் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.


அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.  


சிந்திப்போம்.....

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

எனக்கு பிடித்த பாடல்

 எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

முதல்வன் திரைப்படத்தில் வரும்

 " குருக்கு சிறுத்தவளே " பாடல். இன்று வரை அடிக்கடி முனுமுனுக்கும் பாடலும் கூட.


பஞ்ச பூதங்களில் (நீர்,நிலம்,காற்று, நெருப்பு, ஆகாயம்) நடப்பது போல் இப்பாடல் படமாக்க பட்டிருக்கும்.

கேமரா மேன் மற்றும் இயக்குனர்  ஷங்கர் ரொம்பவே மெனக்கிட்டுருப்பார்கள். 


மனசு கொஞ்சம் கனமாக இருக்கையில் இந்த பாடலை 

கேட்கையில் ரொம்ப லேசாகி விடும். அப்படி ஒரு அருமையான மெலடி பாடல். 


இப்பாடல் புல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கும். 


இப்பாடல் உருவாக காரணமானவர்கள் தாய், தந்தை(இசை, வரிகள்)யாக    ரஹமான்,வைரமுத்துவும்.  


பாடல் வரிகள் கிராமத்து பெண்ணை மனதில் வைத்து எழுதியிருப்பார் வைரமுத்து.

 (பெண்: கம்பசங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்திரியே, 

ஆண்: மஞ்சள் தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே, 

உம்போல சிவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல ) 


ரகுமான் இசை அப்படியே நம்மை மெய்மறக்க செய்யும் குறிப்பாக புல்லாங்குழல் தனித்துவமாக தெரியும். இசை வாத்தியங்கள் நம்மை தாலாட்டு  modeக்கு கொண்டு செல்லும்.


இப்பாடலுக்கு தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார் 

பாடகர் ஹரிஹரன். (குறிப்பாக குங்குமத்தில் கரைச்சவளே என்பதில் ஒரு அழத்தம் கொடுப்பார் ) மனுஷன் ரசிச்சு பாடியிருப்பார். இன்று வரை முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வுக்கு அக்குரல் முக்கிய காரணம்..


இப்பாடல் ஒரு குழந்தையை போன்றது எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.


இவன்

ராஜா.க

 எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

முதல்வன் திரைப்படத்தில் வரும்

 " குருக்கு சிறுத்தவளே " பாடல். இன்று வரை அடிக்கடி முனுமுனுக்கும் பாடலும் கூட.


பஞ்ச பூதங்களில் (நீர்,நிலம்,காற்று, நெருப்பு, ஆகாயம்) நடப்பது போல் இப்பாடல் படமாக்க பட்டிருக்கும்.

கேமரா மேன் மற்றும் இயக்குனர்  ஷங்கர் ரொம்பவே மெனக்கிட்டுருப்பார்கள். 


மனசு கொஞ்சம் கனமாக இருக்கையில் இந்த பாடலை 

கேட்கையில் ரொம்ப லேசாகி விடும். அப்படி ஒரு அருமையான மெலடி பாடல். 


இப்பாடல் புல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கும். 


இப்பாடல் உருவாக காரணமானவர்கள் தாய், தந்தை(இசை, வரிகள்)யாக    ரஹமான்,வைரமுத்துவும்.  


பாடல் வரிகள் கிராமத்து பெண்ணை மனதில் வைத்து எழுதியிருப்பார் வைரமுத்து.

 (பெண்: கம்பசங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்திரியே, 

ஆண்: மஞ்சள் தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே, 

உம்போல சிவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல ) 


ரகுமான் இசை அப்படியே நம்மை மெய்மறக்க செய்யும் குறிப்பாக புல்லாங்குழல் தனித்துவமாக தெரியும். இசை வாத்தியங்கள் நம்மை தாலாட்டு  modeக்கு கொண்டு செல்லும்.


இப்பாடலுக்கு தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார் 

பாடகர் ஹரிஹரன். (குறிப்பாக குங்குமத்தில் கரைச்சவளே என்பதில் ஒரு அழத்தம் கொடுப்பார் ) மனுஷன் ரசிச்சு பாடியிருப்பார். இன்று வரை முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வுக்கு அக்குரல் முக்கிய காரணம்..


இப்பாடல் ஒரு குழந்தையை போன்றது எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.


இவன்

ராஜா.க

புதன், 19 ஆகஸ்ட், 2020

ஏழைத்தாயின் மகள்

 கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா. 


தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,

சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..


வடிவேலு இல்லாமல் தவித்த 

தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம். 


அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.    


பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன் 

 என்ற  #KolamaavuKokila

 கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா. 


தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,

சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..


வடிவேலு இல்லாமல் தவித்த 

தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம். 


அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.    


பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன் 

 என்ற  #KolamaavuKokila

புதன், 12 ஆகஸ்ட், 2020

ப்யார்,ப்ரேமா,காதலுடன்

 படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..


தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..


கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல; 


மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன், 

ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ? 


Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற் 

கொண்டு.


அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு 

கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.


ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ? 


எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு 

செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.


இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.


அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;


இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.


ப்யார்,ப்ரேமா,காதலுடன்

ராஜா.க

 படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..


தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..


கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல; 


மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன், 

ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ? 


Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற் 

கொண்டு.


அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு 

கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.


ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ? 


எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு 

செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.


இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.


அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;


இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.


ப்யார்,ப்ரேமா,காதலுடன்

ராஜா.க