செவ்வாய், 5 மே, 2020

வியட்நாம் வீடு

பொதுவாக பழைய (MGR,Sivaji)
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு.

“வியட்நாம்காலனி” காமெடி என்று YouTube தேடுகையில் “வியட்நாம்வீடு” என்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்.

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது.

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால் “வியட்நாம்” வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்.

மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது.

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்.  வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார்
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா.க
பொதுவாக பழைய (MGR,Sivaji)
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு.

“வியட்நாம்காலனி” காமெடி என்று YouTube தேடுகையில் “வியட்நாம்வீடு” என்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்.

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது.

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால் “வியட்நாம்” வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்.

மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது.

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்.  வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார்
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா.க

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

புரிதல்

புரிதல்  !!!

இன்று நடக்கும் பல குழப்பங்களுக்கு இது இல்லாததது தான் முதல் காரணமே. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.

என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் புரிதலுக்கு உண்டான சான்றுகள்..

செல்வா,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை.
யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம்.

சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE மாணவர்கள் 7 நபர்கள் தங்கும் பெரிய வீடு. கூட்டினுள் கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.

நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் அமர்ந்து வெட்டி கதை பேசி மகிழ்ந்த தருணம்.

ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் என முகத்தை சுறுக்க,

நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் அளவளாவியது ஒரு புறம்.

எங்கள் மூவருக்கும் உண்டான புரிதல் அன்று வெளிப்பட்ட தருணம். நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல்.

இரண்டாவது நிகழ்வு.

8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால்
A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார்.

நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை.
மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம்.

இந்த புரிதல் ஒருவருக்கு ஒருவர் இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.

புரிதலுடன்
ராஜா . க
புரிதல்  !!!

இன்று நடக்கும் பல குழப்பங்களுக்கு இது இல்லாததது தான் முதல் காரணமே. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.

என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் புரிதலுக்கு உண்டான சான்றுகள்..

செல்வா,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை.
யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம்.

சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE மாணவர்கள் 7 நபர்கள் தங்கும் பெரிய வீடு. கூட்டினுள் கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.

நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் அமர்ந்து வெட்டி கதை பேசி மகிழ்ந்த தருணம்.

ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் என முகத்தை சுறுக்க,

நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் அளவளாவியது ஒரு புறம்.

எங்கள் மூவருக்கும் உண்டான புரிதல் அன்று வெளிப்பட்ட தருணம். நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல்.

இரண்டாவது நிகழ்வு.

8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால்
A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார்.

நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை.
மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம்.

இந்த புரிதல் ஒருவருக்கு ஒருவர் இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.

புரிதலுடன்
ராஜா . க

சனி, 11 ஏப்ரல், 2020

IPl ம் மசாலாவும்

சினிமாவில மட்டுமல்ல எல்லாவற்றிலும்   மசாலா கேட்கறாங்க நம் மக்கள் என்று கூறுவார் நம்மவர் கமல்
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில்.

அது போல் IPL கிரிக்கெட்டிலும் cheers girls, dance,வீரர்களுகிடையே சண்டை,அழுகாட்சி என மசாலாக்களை தூவி திறம்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறது IPL நிர்வாகம்.

இது மட்டும் போதாது என்று நினைத்து உள்ளது போலும், மேலும் சில பல சுவாரசிய நிகழ்ச்சிகளை அறங்கேற்றுகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சில rules and regulations இருக்கும் அதையும் மீறுகையில் தான் அது விவாத பொருளாகிறது.

நமக்கு பிடித்த அணி, நமக்கு பிடித்த ஆட்டகாரர் என்பதால் அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அவுட் ஆகி சென்றவர் மீண்டும் மைதானத்துக்குள் வருவதே தவறு. அதிலும் ஒரு கேப்டன் உள்ளே வந்து அம்பையரிடம் வாக்குவாதம் செய்வது தவறான எடுத்துகாட்டு .

பிறகு களத்தில் எதற்கு இரண்டு நடுவர்கள் ? 3ம் நடுவர் எதற்கு ?  வெறும் 50% அபராதத்துடன் அதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில், அந்த கேப்டன் தோனியாக இருக்க வேண்டும். மேட்ச் இந்தியாவில் தான் நடக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் பல நல்ல நுட்பங்களை சக வீரர்களுக்கு கற்று கொடுக்கும் வீரர் இது போன்றவைகளை தவிர்த்துருக்கலாம். நாளை இது போல் மற்ற அணி வீரர்களும் இதை பின் தொடர்ந்தால் gentlemen game சிறுபிள்ளை விளையாட்டாகி விடும்.

விசில் போடுவோம்
ராஜா.க
சினிமாவில மட்டுமல்ல எல்லாவற்றிலும்   மசாலா கேட்கறாங்க நம் மக்கள் என்று கூறுவார் நம்மவர் கமல்
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில்.

அது போல் IPL கிரிக்கெட்டிலும் cheers girls, dance,வீரர்களுகிடையே சண்டை,அழுகாட்சி என மசாலாக்களை தூவி திறம்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறது IPL நிர்வாகம்.

இது மட்டும் போதாது என்று நினைத்து உள்ளது போலும், மேலும் சில பல சுவாரசிய நிகழ்ச்சிகளை அறங்கேற்றுகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சில rules and regulations இருக்கும் அதையும் மீறுகையில் தான் அது விவாத பொருளாகிறது.

நமக்கு பிடித்த அணி, நமக்கு பிடித்த ஆட்டகாரர் என்பதால் அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அவுட் ஆகி சென்றவர் மீண்டும் மைதானத்துக்குள் வருவதே தவறு. அதிலும் ஒரு கேப்டன் உள்ளே வந்து அம்பையரிடம் வாக்குவாதம் செய்வது தவறான எடுத்துகாட்டு .

பிறகு களத்தில் எதற்கு இரண்டு நடுவர்கள் ? 3ம் நடுவர் எதற்கு ?  வெறும் 50% அபராதத்துடன் அதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில், அந்த கேப்டன் தோனியாக இருக்க வேண்டும். மேட்ச் இந்தியாவில் தான் நடக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் பல நல்ல நுட்பங்களை சக வீரர்களுக்கு கற்று கொடுக்கும் வீரர் இது போன்றவைகளை தவிர்த்துருக்கலாம். நாளை இது போல் மற்ற அணி வீரர்களும் இதை பின் தொடர்ந்தால் gentlemen game சிறுபிள்ளை விளையாட்டாகி விடும்.

விசில் போடுவோம்
ராஜா.க

ஞாயிறு, 29 மார்ச், 2020

கெ(கே)ட்ட வார்த்தைகள்

ஒரு பிரபலமான ஜவுளி கடையில் நடந்த சம்பவம்.
 Lift உதவியுடன் 5வது மாடிக்கு செல்கையில் ஒரு அழகான பெண் குழந்தை அதற்குறிய பாணியில் அதன் அன்னையை இம்சை செய்த்தது.

கடுப்பான அந்த அன்னை அவளுக்குரிய பாஷையில் “ஏய் சாவ அடிச்சுடுவேன்” என்று தன் முகத்தை அஷ்ட கோணலுடன் கூறினாள்..
அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் அக்குழந்தை விழித்தது. தந்தையும் எதுவும் பேசாமல் இருந்தார்.

இதே கெ(கே)ட்ட வார்த்தையை தான் நாளை இக்குழந்தை மற்ற இடத்திலும் பிறயோகிக்கும்.

யாருக்கு தெரியும் ? சிவா,சிவா என்று
எதிர்காலத்தில் நீங்கள்
“சங்கரா புராணம்” பார்க்கும் வயதில்
இதே வார்த்தையை உங்களிடமே கூறி உங்களை உரைய வைக்கலாம்.

கெட்ட வார்த்தை களை தவிர்ப்போம்
இவண்
ராஜா.க
ஒரு பிரபலமான ஜவுளி கடையில் நடந்த சம்பவம்.
 Lift உதவியுடன் 5வது மாடிக்கு செல்கையில் ஒரு அழகான பெண் குழந்தை அதற்குறிய பாணியில் அதன் அன்னையை இம்சை செய்த்தது.

கடுப்பான அந்த அன்னை அவளுக்குரிய பாஷையில் “ஏய் சாவ அடிச்சுடுவேன்” என்று தன் முகத்தை அஷ்ட கோணலுடன் கூறினாள்..
அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் அக்குழந்தை விழித்தது. தந்தையும் எதுவும் பேசாமல் இருந்தார்.

இதே கெ(கே)ட்ட வார்த்தையை தான் நாளை இக்குழந்தை மற்ற இடத்திலும் பிறயோகிக்கும்.

யாருக்கு தெரியும் ? சிவா,சிவா என்று
எதிர்காலத்தில் நீங்கள்
“சங்கரா புராணம்” பார்க்கும் வயதில்
இதே வார்த்தையை உங்களிடமே கூறி உங்களை உரைய வைக்கலாம்.

கெட்ட வார்த்தை களை தவிர்ப்போம்
இவண்
ராஜா.க

வியாழன், 13 பிப்ரவரி, 2020

மசால் தோசையும் , Arranged Marriage ம்

மசால் தோசையும் ,
Arranged Marriage ம்

உள்துறை அமைச்சர் (மனைவி) உடன் வெளியே சென்றிருந்தேன்;
பார் புகழும் "அண்ணா சாலை"யில் நீண்ட நேர பயணத்தில்  சற்று இளைப்பாற ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் சென்றோம்.

இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுக்க பிரித்து பார்த்தேன்; வடிவேலு ஒரு படத்தில் கூறுவாரே Veg Roll, Spring Roll, என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்ற வழிய பாருங்கப்பானு சொல்லுவாரு.
அது போல அத்தனை வகைகள் இருந்தது மெனுக்கார்டில்.

சிறு வயது முதல் இன்று வரை எனக்கு Veg Puff மீது பிரியம் அதை ஆர்டர் செய்ய, உள்துறை அமைச்சரோ waiter இடம் ஆங்கிலத்தில் உரையாடி கேக் ஆர்டர் செய்தார்.

உங்களுக்கு Pineapple Pastry
கேக் பிடிக்காதா என கேட்க,
இப்படில்லாம் கேக் இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும் என நான் கூற, எப்ப பாரு கிண்டல்,நக்கல் என மறுமுனையில்.

சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது; எடுத்து பார்த்தேன் சிறிய அதிர்ச்சி  கேக் 99₹ என்று இருந்தது, ஏய் ஒரு கேக் 99₹  ஆ !!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt என மனசுக்குள் கேட்டு;

இந்த ரூபாய்க்கு ஒரு மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே கூற;
இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் "arranged marriage" ஆச்சு னு என உள்துறை அமைச்சர் கூற

சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,
" சொல்லால் அடித்த சுந்தரி " என விஜயகாந்தை போல் இளையராஜா பாடலை பாடி பில்லை கட்டி நடையை கட்டினோம்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

இவன்
ராஜா.க
மசால் தோசையும் ,
Arranged Marriage ம்

உள்துறை அமைச்சர் (மனைவி) உடன் வெளியே சென்றிருந்தேன்;
பார் புகழும் "அண்ணா சாலை"யில் நீண்ட நேர பயணத்தில்  சற்று இளைப்பாற ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் சென்றோம்.

இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுக்க பிரித்து பார்த்தேன்; வடிவேலு ஒரு படத்தில் கூறுவாரே Veg Roll, Spring Roll, என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்ற வழிய பாருங்கப்பானு சொல்லுவாரு.
அது போல அத்தனை வகைகள் இருந்தது மெனுக்கார்டில்.

சிறு வயது முதல் இன்று வரை எனக்கு Veg Puff மீது பிரியம் அதை ஆர்டர் செய்ய, உள்துறை அமைச்சரோ waiter இடம் ஆங்கிலத்தில் உரையாடி கேக் ஆர்டர் செய்தார்.

உங்களுக்கு Pineapple Pastry
கேக் பிடிக்காதா என கேட்க,
இப்படில்லாம் கேக் இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும் என நான் கூற, எப்ப பாரு கிண்டல்,நக்கல் என மறுமுனையில்.

சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது; எடுத்து பார்த்தேன் சிறிய அதிர்ச்சி  கேக் 99₹ என்று இருந்தது, ஏய் ஒரு கேக் 99₹  ஆ !!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt என மனசுக்குள் கேட்டு;

இந்த ரூபாய்க்கு ஒரு மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே கூற;
இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் "arranged marriage" ஆச்சு னு என உள்துறை அமைச்சர் கூற

சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,
" சொல்லால் அடித்த சுந்தரி " என விஜயகாந்தை போல் இளையராஜா பாடலை பாடி பில்லை கட்டி நடையை கட்டினோம்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

இவன்
ராஜா.க

சனி, 8 பிப்ரவரி, 2020

வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
சிற்றருவி, தண்ணீர் இல்லாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!

எல்லா அருவிகளிலும் குளித்த பிற்பாடு இந்த சிற்றருவியில்   குளித்தால் தான் ஒரு finishing touch கிடைக்கும்.

காலத்தின் கோலம்;
வறட்சி சிற்றருவியையும் இன்று விட்டு வைக்கவில்லை..

அன்று பழமுதிர் தோட்டம் அருவி,
நேற்று செண்பகாதேவி அருவி,
இன்று சிற்றருவி..
நாளை ?

 #Courtallam | #Chitraruvi
வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
சிற்றருவி, தண்ணீர் இல்லாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!

எல்லா அருவிகளிலும் குளித்த பிற்பாடு இந்த சிற்றருவியில்   குளித்தால் தான் ஒரு finishing touch கிடைக்கும்.

காலத்தின் கோலம்;
வறட்சி சிற்றருவியையும் இன்று விட்டு வைக்கவில்லை..

அன்று பழமுதிர் தோட்டம் அருவி,
நேற்று செண்பகாதேவி அருவி,
இன்று சிற்றருவி..
நாளை ?

 #Courtallam | #Chitraruvi

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

வைரமுத்துக்கள்

ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.

விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு.

வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.
ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும்.

அதில் சில பாடல் வரிகள். 

பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்)

வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,

பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா)

வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..

பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)

வரிகள் : கொஞ்சம் கடவுள்,
கொஞ்சம் மிருகம்

பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)

வரிகள் : கடவுள் பாதி,
மிருகம் பாதி..

பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே

வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.
உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.

பாடல் : இளமை விடுகதை (வரலாறு)

மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,
பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..

வைரமுத்துகளுடன்
ராஜா.க
ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.

விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு.

வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.
ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும்.

அதில் சில பாடல் வரிகள். 

பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்)

வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,

பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா)

வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..

பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)

வரிகள் : கொஞ்சம் கடவுள்,
கொஞ்சம் மிருகம்

பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)

வரிகள் : கடவுள் பாதி,
மிருகம் பாதி..

பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே

வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.
உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.

பாடல் : இளமை விடுகதை (வரலாறு)

மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,
பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..

வைரமுத்துகளுடன்
ராஜா.க