வெள்ளி, 23 ஜூலை, 2021

என்றோ எழுதியது

 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


வியாழன், 8 ஜூலை, 2021

பழைய குற்றாலம் வரலாறு


 பழைய குற்றாலம் வரலாறு 


வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.ஒரு முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம். 


எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று.. 


சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.


#Kutrlam #History #Tourism #Tamilnadu

இவண் 

ராஜா.க


 பழைய குற்றாலம் வரலாறு 


வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.ஒரு முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம். 


எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று.. 


சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.


#Kutrlam #History #Tourism #Tamilnadu

இவண் 

ராஜா.க

தமிழ் சினிமா win குரு

 ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.



 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல. 


நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,

லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,

சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....


யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....


#KB #Balachander #Director

 ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.



 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல. 


நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,

லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,

சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....


யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....


#KB #Balachander #Director

வெள்ளி, 11 ஜூன், 2021

வலி மிகு வார்த்தை

 சென்னை யில் 2015 இல் பெய்த கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடிச்சூரும் ஒன்று , நான் இருந்த இடம் வெள்ளக்காடானது, தீவில் இருந்தது போல சூழல். என்ன செய்யவதென்று யோசித்த நேரம், நண்பனிடம் இருந்து செல்போனில் அழைப்பு. 



ரொம்பவும் யோசிக்க வேண்டாம்,  உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தது விடு என்று. அவனுக்கு தெரியும் தொடர்ந்து பேசினால், ஏதாவ்து காரணம் கூறி அவன் அழைப்பை நிராகரித்து விடுவேன் என்று (12 வருட நட்பு ஆயிற்றே) 



அவன் வீட்டுக்கு சென்றேன், என் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு நாள் ஆயிற்று. பிறகு நீண்ட நேரம் உரையாடல் , அரட்டை என்று பொழுது போனது. அவன் இருக்கும் இடத்திலிருந்தும் எனது அலுவலக பேருந்து இயக்கம் உண்டு. 


ஒரு நாள் பேருந்தில் 

பயணிக்கையில் சகஊழியர் ஒருவரை சந்திந்தேன், சிறிய ஆச்சரிய பார்வைக்கு பின் இந்த ஏரியா வில் எப்படி என்று கேட்க நண்பன் வீட்டில் உள்ளேன் என்றேன்.  பின் இரு நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில் காபி குடிக்கையில் சக ஊழியர்களுடன் பேசி கொள்ளும் போது 

என்னுடன் பேருந்தில் பயணித்த நபரும் அந்த அரட்டையில் பங்கு கொள்ள, ஏதோ ஒரு தருணத்தில் இப்போது ராஜா எங்கள் எரியாவில் தான் உள்ளார்.



நிலைமை சரியாகும் வரை எங்கள் ஏரியா தான் அவருக்கு "அகதி" முகாம் என்று நகைச்சுவை யாக குறிப்பிட்டார். அது வரை அந்த வார்த்தையை  

செய்தித்தாள்கள், செய்திகளில் கேட்டுள்ளேன் தவிர அந்த வார்த்தையின்  வலியை உணர்ந்தேன். 



ஒரே இடத்தில் (சென்னை) விட்டை விட்டு வேறு ஏரியா விற்கு சென்றதே நமக்கு இப்படி வலிக்குது என்றால் சொந்த நாட்டில் இருந்து 

வேறு ஒரு நாட்டிற்கு வந்து இடம் பெயர்ந்து எங்கோ தங்கி உள்ளவர்களுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தேன். அன்று முதல் அந்த வார்த்தையை படிக்கையில் , கேட்கையில் ஒரு இனம் புரியாத வருத்தம் ஏற்படுகிறது. 



சமீப காலமாக நமது சந்தில் அந்த வார்த்தை அதிகமாகவும் , அவர்களை திட்டியும் பதிவு செய்ய படுகிறது. யாரோ ஒரு சிலரின் தவறுக்காக அனைவரையும் அவமானப்படுத்துவது போல உள்ளது. 

#அகதி சிறிய வார்த்தை தான் ஆனால் வலி அதிகம் மிகுந்த வார்த்தை


#chennairains

#Pain 

 சென்னை யில் 2015 இல் பெய்த கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடிச்சூரும் ஒன்று , நான் இருந்த இடம் வெள்ளக்காடானது, தீவில் இருந்தது போல சூழல். என்ன செய்யவதென்று யோசித்த நேரம், நண்பனிடம் இருந்து செல்போனில் அழைப்பு. 



ரொம்பவும் யோசிக்க வேண்டாம்,  உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தது விடு என்று. அவனுக்கு தெரியும் தொடர்ந்து பேசினால், ஏதாவ்து காரணம் கூறி அவன் அழைப்பை நிராகரித்து விடுவேன் என்று (12 வருட நட்பு ஆயிற்றே) 



அவன் வீட்டுக்கு சென்றேன், என் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு நாள் ஆயிற்று. பிறகு நீண்ட நேரம் உரையாடல் , அரட்டை என்று பொழுது போனது. அவன் இருக்கும் இடத்திலிருந்தும் எனது அலுவலக பேருந்து இயக்கம் உண்டு. 


ஒரு நாள் பேருந்தில் 

பயணிக்கையில் சகஊழியர் ஒருவரை சந்திந்தேன், சிறிய ஆச்சரிய பார்வைக்கு பின் இந்த ஏரியா வில் எப்படி என்று கேட்க நண்பன் வீட்டில் உள்ளேன் என்றேன்.  பின் இரு நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில் காபி குடிக்கையில் சக ஊழியர்களுடன் பேசி கொள்ளும் போது 

என்னுடன் பேருந்தில் பயணித்த நபரும் அந்த அரட்டையில் பங்கு கொள்ள, ஏதோ ஒரு தருணத்தில் இப்போது ராஜா எங்கள் எரியாவில் தான் உள்ளார்.



நிலைமை சரியாகும் வரை எங்கள் ஏரியா தான் அவருக்கு "அகதி" முகாம் என்று நகைச்சுவை யாக குறிப்பிட்டார். அது வரை அந்த வார்த்தையை  

செய்தித்தாள்கள், செய்திகளில் கேட்டுள்ளேன் தவிர அந்த வார்த்தையின்  வலியை உணர்ந்தேன். 



ஒரே இடத்தில் (சென்னை) விட்டை விட்டு வேறு ஏரியா விற்கு சென்றதே நமக்கு இப்படி வலிக்குது என்றால் சொந்த நாட்டில் இருந்து 

வேறு ஒரு நாட்டிற்கு வந்து இடம் பெயர்ந்து எங்கோ தங்கி உள்ளவர்களுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தேன். அன்று முதல் அந்த வார்த்தையை படிக்கையில் , கேட்கையில் ஒரு இனம் புரியாத வருத்தம் ஏற்படுகிறது. 



சமீப காலமாக நமது சந்தில் அந்த வார்த்தை அதிகமாகவும் , அவர்களை திட்டியும் பதிவு செய்ய படுகிறது. யாரோ ஒரு சிலரின் தவறுக்காக அனைவரையும் அவமானப்படுத்துவது போல உள்ளது. 

#அகதி சிறிய வார்த்தை தான் ஆனால் வலி அதிகம் மிகுந்த வார்த்தை


#chennairains

#Pain 

ஞாயிறு, 23 மே, 2021

திருநெல்வேலி பாம்பே தியேட்டர்

திருநெல்வேலி பாம்பே தியேட்டர்




நண்பர்கள் சகிதம் சிரித்து, சிரித்து பார்த்து படம் சிம்பு   கதாநாயகனாக நடித்த முதல் படம்

காதல் அழிவதில்லை !!!

சிம்பு வின் இன்ட்ரோ ,அவர் பெயரை உச்சரிக்கும் படி  BGM, பாடல்கள், fight scene ,  என தன் பங்குக்கு மசாலா கலந்திருப்பார் டி.ஆர். படத்துக்கு நல்ல ஓப்பனிங்  மேலும் வணிக ரீதியாக வசூல் வெற்றி பெற்ற படம்.


அப்படத்துடன் விஜயின் பகவதி, அஜீத் வில்லன் வெளிவந்து இருந்தது இவை அனைத்தும் தீபாவளி ரிலீஸ்.


பகவதி பூர்ணகலா தியேட்டரில் , வில்லன் ரத்னா தியேட்டர் இரண்டுமே கொஞ்சம் பழைய தியேட்டர்கள்.  இரண்டு படங்களும் பார்த்தாச்சு. சரி இது வரை பார்க்காத தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தேன்.


Latest sound effects DTS  சும்மா அதிரும் சிறந்த தியேட்டர் பாரமாரிப்பு, கேண்டின் icecream என எல்லாம் சூப்பர், படம் தான் மொக்க but நண்பர்கள் படை சூழ போனதால் ஒவ்வொரு சீனும் கலாய்த்து ரசித்து பார்த்த படம். #காதல்அழிவதில்லை #

#Bombay #Theatre

#Tirunelveli

திருநெல்வேலி பாம்பே தியேட்டர்




நண்பர்கள் சகிதம் சிரித்து, சிரித்து பார்த்து படம் சிம்பு   கதாநாயகனாக நடித்த முதல் படம்

காதல் அழிவதில்லை !!!

சிம்பு வின் இன்ட்ரோ ,அவர் பெயரை உச்சரிக்கும் படி  BGM, பாடல்கள், fight scene ,  என தன் பங்குக்கு மசாலா கலந்திருப்பார் டி.ஆர். படத்துக்கு நல்ல ஓப்பனிங்  மேலும் வணிக ரீதியாக வசூல் வெற்றி பெற்ற படம்.


அப்படத்துடன் விஜயின் பகவதி, அஜீத் வில்லன் வெளிவந்து இருந்தது இவை அனைத்தும் தீபாவளி ரிலீஸ்.


பகவதி பூர்ணகலா தியேட்டரில் , வில்லன் ரத்னா தியேட்டர் இரண்டுமே கொஞ்சம் பழைய தியேட்டர்கள்.  இரண்டு படங்களும் பார்த்தாச்சு. சரி இது வரை பார்க்காத தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தேன்.


Latest sound effects DTS  சும்மா அதிரும் சிறந்த தியேட்டர் பாரமாரிப்பு, கேண்டின் icecream என எல்லாம் சூப்பர், படம் தான் மொக்க but நண்பர்கள் படை சூழ போனதால் ஒவ்வொரு சீனும் கலாய்த்து ரசித்து பார்த்த படம். #காதல்அழிவதில்லை #

#Bombay #Theatre

#Tirunelveli

செவ்வாய், 18 மே, 2021

Chess ம் வாழ்க்கையும்

 சதுரங்கம் 


விளையாட்டு களில் சுவாரஸ்யமான மற்றும் மூளை க்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு களில் ஒன்று. 


காரணம் அதில் இடம் பெற்றுள்ள காய்கள் (coin)  , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள். 

இவை அனைத்தையும் சரியான முறையில் நாம் உபயோக படுத்தினால் எளிதில் சுலப வெற்றி பெறலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை.


காரணம் எதிரில் நின்று விளையாடும் நபரின் ஆட்டத்தை பொறுத்து நமது ஆட்டமும் ,வெற்றியும்  வேறுபடும்.


இந்த காய்களில் (coin)களில் ராணி யின் பலம் மற்றவர்களை காட்டிலும் கூடுதல். 


சிலர் மட்டுமே ராணி யின் பலத்தை வைத்து நாம் ஏன் ஆட வேண்டும் என நினைத்து தன் மீதுள்ள அதீத அறிவு மற்றும் நம்பிக்கை யால் மற்ற காய்ன் களை மட்டுமே பயன்படுத்தி சுலபமாக  வெற்றியும் பெறுகிறார்கள்.


ஆனால் அவர்களுக்கும் தெரியும் ராணியின் பலம் என்னவென்று. இப்படி வெற்றி பெறுபவர்கள் நான் மேலே கூறியது போல ஒரு சிலரே.


இந்த சிலரை பார்த்து  நாமும் இது போன்று ஆடி வெற்றி பெறலாம் என நினைத்து தோல்வி அடைந்தவர்கள் பலர்.


சிலர் ராணி யின் பலத்தால்   மற்றவர்களை எல்லாம் காப்பாற்றி வெற்றியும் பெறுவார்கள் ஆனால் ராணியை இழந்து விடுவார்கள் இவர்களும் சிலரே.


தன் அறிவுணர்ந்து , தன் சுற்றி உள்ளவர்களின் பலம் அறிந்து, ராணி யின் பலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே.


இவ்விளையாட்டின் சுவாரஸ்யமான ஒன்று   நம் வாழ்க்கையோடும் ஒத்து போகும். சுற்றி இருக்கும் படைகள் உறவுகள் மற்றும் நண்பர்கள் , ராணி என்பவள் மனைவி.


மேலே கூறியுள்ள முறைகளில்  நாம் அனைவரும்  எதாவது ஒரு  முறையை தேர்ந்தெடுத்து வாழக்கை என்னும் சதுரங்க விளையாட்டில் பெற்றி பெற முயன்று வருகிறோம். 


நீங்கள் சிலரா ? பலரா ?  வெகு சிலரா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.


#Chess #Queen #King

இவன்

ராஜா.க

 சதுரங்கம் 


விளையாட்டு களில் சுவாரஸ்யமான மற்றும் மூளை க்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு களில் ஒன்று. 


காரணம் அதில் இடம் பெற்றுள்ள காய்கள் (coin)  , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள். 

இவை அனைத்தையும் சரியான முறையில் நாம் உபயோக படுத்தினால் எளிதில் சுலப வெற்றி பெறலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை.


காரணம் எதிரில் நின்று விளையாடும் நபரின் ஆட்டத்தை பொறுத்து நமது ஆட்டமும் ,வெற்றியும்  வேறுபடும்.


இந்த காய்களில் (coin)களில் ராணி யின் பலம் மற்றவர்களை காட்டிலும் கூடுதல். 


சிலர் மட்டுமே ராணி யின் பலத்தை வைத்து நாம் ஏன் ஆட வேண்டும் என நினைத்து தன் மீதுள்ள அதீத அறிவு மற்றும் நம்பிக்கை யால் மற்ற காய்ன் களை மட்டுமே பயன்படுத்தி சுலபமாக  வெற்றியும் பெறுகிறார்கள்.


ஆனால் அவர்களுக்கும் தெரியும் ராணியின் பலம் என்னவென்று. இப்படி வெற்றி பெறுபவர்கள் நான் மேலே கூறியது போல ஒரு சிலரே.


இந்த சிலரை பார்த்து  நாமும் இது போன்று ஆடி வெற்றி பெறலாம் என நினைத்து தோல்வி அடைந்தவர்கள் பலர்.


சிலர் ராணி யின் பலத்தால்   மற்றவர்களை எல்லாம் காப்பாற்றி வெற்றியும் பெறுவார்கள் ஆனால் ராணியை இழந்து விடுவார்கள் இவர்களும் சிலரே.


தன் அறிவுணர்ந்து , தன் சுற்றி உள்ளவர்களின் பலம் அறிந்து, ராணி யின் பலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே.


இவ்விளையாட்டின் சுவாரஸ்யமான ஒன்று   நம் வாழ்க்கையோடும் ஒத்து போகும். சுற்றி இருக்கும் படைகள் உறவுகள் மற்றும் நண்பர்கள் , ராணி என்பவள் மனைவி.


மேலே கூறியுள்ள முறைகளில்  நாம் அனைவரும்  எதாவது ஒரு  முறையை தேர்ந்தெடுத்து வாழக்கை என்னும் சதுரங்க விளையாட்டில் பெற்றி பெற முயன்று வருகிறோம். 


நீங்கள் சிலரா ? பலரா ?  வெகு சிலரா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.


#Chess #Queen #King

இவன்

ராஜா.க

வியாழன், 6 மே, 2021

ஸ்டாலின்_எனும்_நான்

 கலைஞரோட மகன் தான். ஆனா அவருக்கு எதுவுமே சுலபமாக கிடைக்கவில்லை எதுவுமே தானாகவும் வரவில்லை!


அவரிடம் என்ன ஆளுமை இருக்குனு கேட்ட நடுநிலைவாதிகளே.


10 வருஷம் ஆட்சியில் இல்லையென்றாலும் கட்சியை காப்பாற்றினார்.


2011 இல் மிக பெரிய தோல்வி,

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை, அதை தொடர்ந்து நடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை,


இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை  திமுக என்ற கட்சியும் அதன் தலைவர் கலைஞர்  கூட சந்திந்தது இல்லை.


2016 சட்டமன்ற தேர்தல் பலமான எதிர்க்கட்சி, அதை தொடர்ந்து 2019 கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தல், இந்தியா ஓர் முடிவெடுக்க தமிழ்நாடு மட்டும் வேறுமுடிவு எடுத்தது. 


அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் , எத்தனையோ சாணக்கியர்கள் திமுக வின் கூட்டனி உடையும். கண்டிப்பாக இந்த முறையும் ஆட்சி க்கு வர முடியாது என்று ஆருடம் கூறினார்கள்.


மேலும் ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று பிரம்மரிஷி அளவுக்கு ஓரு பில்டப்.


வாட்ஸப், முகநூல் என்று எங்கு திரும்பினாலும் பல அவதூறுகள். பாஜக என்ற பலமான எதிர்க்கட்சி யை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. பாஜக வின் ஒரே நோக்கம் திமுக வெற்றியை தடுப்பது மட்டுமே ஒரே இலக்கு. அதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.


மேலும்  அன்று தொடங்கிய அதிமுக முதல் நேற்று தொடங்கிய மையம் வரை திமுக வையே வசைபாடினார்.


உழைப்பு உழைப்பு உழைப்பு!!

தன் 50 வருட உழைப்பு 

என்ற கருவியால் இவை அனைத்தையும் முறியடித்து தனி பெரும்பான்மையுடன் திமுக என்ற கட்சியை ஆறாவது முறை ஆட்சி கட்டிலில் அமரவைத்து  முதல்வர்  ஆகியுள்ளார் திரு.ஸ்டாலின்.


அவர் முன் இருக்கும் சவால்கள் ஏராளம், இது வரை கண்டிராத நிதி நெருக்கடி, கொரானா என்ற 

பெருந்தொற்று இந்த தடை கற்களை படி கற்களாக மாற்றுவார் என்று நம்புவோம்.


வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் !!! 


#ஸ்டாலின்_எனும்_நான்


 கலைஞரோட மகன் தான். ஆனா அவருக்கு எதுவுமே சுலபமாக கிடைக்கவில்லை எதுவுமே தானாகவும் வரவில்லை!


அவரிடம் என்ன ஆளுமை இருக்குனு கேட்ட நடுநிலைவாதிகளே.


10 வருஷம் ஆட்சியில் இல்லையென்றாலும் கட்சியை காப்பாற்றினார்.


2011 இல் மிக பெரிய தோல்வி,

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை, அதை தொடர்ந்து நடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை,


இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை  திமுக என்ற கட்சியும் அதன் தலைவர் கலைஞர்  கூட சந்திந்தது இல்லை.


2016 சட்டமன்ற தேர்தல் பலமான எதிர்க்கட்சி, அதை தொடர்ந்து 2019 கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தல், இந்தியா ஓர் முடிவெடுக்க தமிழ்நாடு மட்டும் வேறுமுடிவு எடுத்தது. 


அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் , எத்தனையோ சாணக்கியர்கள் திமுக வின் கூட்டனி உடையும். கண்டிப்பாக இந்த முறையும் ஆட்சி க்கு வர முடியாது என்று ஆருடம் கூறினார்கள்.


மேலும் ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று பிரம்மரிஷி அளவுக்கு ஓரு பில்டப்.


வாட்ஸப், முகநூல் என்று எங்கு திரும்பினாலும் பல அவதூறுகள். பாஜக என்ற பலமான எதிர்க்கட்சி யை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. பாஜக வின் ஒரே நோக்கம் திமுக வெற்றியை தடுப்பது மட்டுமே ஒரே இலக்கு. அதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.


மேலும்  அன்று தொடங்கிய அதிமுக முதல் நேற்று தொடங்கிய மையம் வரை திமுக வையே வசைபாடினார்.


உழைப்பு உழைப்பு உழைப்பு!!

தன் 50 வருட உழைப்பு 

என்ற கருவியால் இவை அனைத்தையும் முறியடித்து தனி பெரும்பான்மையுடன் திமுக என்ற கட்சியை ஆறாவது முறை ஆட்சி கட்டிலில் அமரவைத்து  முதல்வர்  ஆகியுள்ளார் திரு.ஸ்டாலின்.


அவர் முன் இருக்கும் சவால்கள் ஏராளம், இது வரை கண்டிராத நிதி நெருக்கடி, கொரானா என்ற 

பெருந்தொற்று இந்த தடை கற்களை படி கற்களாக மாற்றுவார் என்று நம்புவோம்.


வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் !!! 


#ஸ்டாலின்_எனும்_நான்