வியாழன், 31 டிசம்பர், 2020

வைகுண்ட ஏகாதசி யும், அதிபரும்

 இது போல ஒரு வருடத்தின் கடைசி நாள் டிசம்பர் 31. அன்று: வைகுண்ட ஏகாதசி. காலையில் எழுந்த வுடன் தொலைக்காட்சி முகத்தில் விழித்தேன்.இன்று போல் அன்று மொபைல் க்கு முக்கிய துவம் இல்லாத காலகட்டம். 

தொலைக்காட்சி யில் அன்றைய தலைப்பு செய்தி ஈராக் முன்னாள் அதிபர் சதாம்முசைன் பற்றியது. 


அப்போது எனக்கு இருந்த வாசிப்பு அறிவுக்கு அவர் சிறந்த நிர்வாகி. எண்ணெய்க்கு உணவு வழங்கும் திட்டம் மூலம் இந்தியாவிடம் நல்ல நட்பு. 

 தன் நாட்டை திறம் பட வழிநடத்தியவர்.


 அமெரிக்க வுக்கு எதிரான பின் நடந்த போரில் தோல்வி யடைந்து சிறை பட்டிருந்தார். யாரும் எதிர்பாராத நிகழ்வு என்று நான் நினைத்த தருணம். காலையில் செய்தி பார்த்த பின் எனது டியஷன் சாரிடம் இதை பற்றி பேசி கொண்டிருந்தேன். இறுதியில் அவர் கூறினார் இன்று வைகுண்ட ஏகாதசி வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்.


ஆம் , இன்று டிசம்பர் 31 ஒரு நாட்டின் அதிபர் தூக்கிலிடபட்டு இறந்த நாள். நான் நம்புகிறேன் வைகுண்டத்தில் சதாமுசைன் இருப்பார் என்று.


 இது போல ஒரு வருடத்தின் கடைசி நாள் டிசம்பர் 31. அன்று: வைகுண்ட ஏகாதசி. காலையில் எழுந்த வுடன் தொலைக்காட்சி முகத்தில் விழித்தேன்.இன்று போல் அன்று மொபைல் க்கு முக்கிய துவம் இல்லாத காலகட்டம். 

தொலைக்காட்சி யில் அன்றைய தலைப்பு செய்தி ஈராக் முன்னாள் அதிபர் சதாம்முசைன் பற்றியது. 


அப்போது எனக்கு இருந்த வாசிப்பு அறிவுக்கு அவர் சிறந்த நிர்வாகி. எண்ணெய்க்கு உணவு வழங்கும் திட்டம் மூலம் இந்தியாவிடம் நல்ல நட்பு. 

 தன் நாட்டை திறம் பட வழிநடத்தியவர்.


 அமெரிக்க வுக்கு எதிரான பின் நடந்த போரில் தோல்வி யடைந்து சிறை பட்டிருந்தார். யாரும் எதிர்பாராத நிகழ்வு என்று நான் நினைத்த தருணம். காலையில் செய்தி பார்த்த பின் எனது டியஷன் சாரிடம் இதை பற்றி பேசி கொண்டிருந்தேன். இறுதியில் அவர் கூறினார் இன்று வைகுண்ட ஏகாதசி வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்.


ஆம் , இன்று டிசம்பர் 31 ஒரு நாட்டின் அதிபர் தூக்கிலிடபட்டு இறந்த நாள். நான் நம்புகிறேன் வைகுண்டத்தில் சதாமுசைன் இருப்பார் என்று.


வெள்ளி, 20 நவம்பர், 2020

சூரரை போற்றுவோம்

  முதன் முதலில் பார்க்கையில் ஒரு அச்சம். தலையாட்டி கொண்டே

இடது-வலது,மேழும்-கீழும் என

கையில் கத்தி சகிதம்  கம்பிரமாக தெரு வீதி உலா வருவார். 

நான்கு ரத வீதிகளில் உலா சென்று முருகனை  போரில் காண போர் களத்துக்கு(கடல்)  சென்றடைவார்.


நல்லவன் தானாம் பின் நாட்களில் கெட்டவனாகி எங்கள் ஊர் சக்ரவர்த்தி யுடனே  போர் செய்ய தயாராகிவிட்டான் என சிறுவயதில் அன்னை கூறியது. பின் நாட்களில் அவரை வைத்து தான் அன்னை சாதம் கொடுப்பாளாம்.


இப்பொழுது பார்க்கையிலும் அவரின்  வருகை, அவருடன் கூட வரும் மேல தாளங்கள் சுவாரசியத்தையும் , இனம் புரியாத மகிழ்ச்சியையம் தருகிறது. 


இம்முறை மருமகளுக்கு அவரை காண்பித்து சாதம் ஊட்டினாள் தங்கை.


நல்லவரோ /கெட்டவரோ இன்று வரை மறக்க முடியாத நபர் சூரபத்மன்.


#திருச்செந்தூர் #சூரபத்மன்



  முதன் முதலில் பார்க்கையில் ஒரு அச்சம். தலையாட்டி கொண்டே

இடது-வலது,மேழும்-கீழும் என

கையில் கத்தி சகிதம்  கம்பிரமாக தெரு வீதி உலா வருவார். 

நான்கு ரத வீதிகளில் உலா சென்று முருகனை  போரில் காண போர் களத்துக்கு(கடல்)  சென்றடைவார்.


நல்லவன் தானாம் பின் நாட்களில் கெட்டவனாகி எங்கள் ஊர் சக்ரவர்த்தி யுடனே  போர் செய்ய தயாராகிவிட்டான் என சிறுவயதில் அன்னை கூறியது. பின் நாட்களில் அவரை வைத்து தான் அன்னை சாதம் கொடுப்பாளாம்.


இப்பொழுது பார்க்கையிலும் அவரின்  வருகை, அவருடன் கூட வரும் மேல தாளங்கள் சுவாரசியத்தையும் , இனம் புரியாத மகிழ்ச்சியையம் தருகிறது. 


இம்முறை மருமகளுக்கு அவரை காண்பித்து சாதம் ஊட்டினாள் தங்கை.


நல்லவரோ /கெட்டவரோ இன்று வரை மறக்க முடியாத நபர் சூரபத்மன்.


#திருச்செந்தூர் #சூரபத்மன்



திங்கள், 7 செப்டம்பர், 2020

புதிய இந்தியா

 எங்கே என் பழைய இந்தியா ??


வந்தாரை வாழ வைத்த என் இந்திய தேசம் இன்று ரோஹிங்யா இன மக்களை அனுமதிக்க மறுப்பது ஏன் ?


யார் இந்த் ரோஹிங்யா இன மக்கள் ?

மியான்மாரில் வசித்த சன்னி இன முஸ்லீம்களின் ஒரு பிரிவு. 


புத்தரின் கொள்கைகளை கடுகளவு கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு நேரெதிரான வன்முறையை கையில் எடுத்த பெளத்தர்களின் வெறியாட்டத்தால் வீடு வாசல் இழந்து ,நடை பிணமாக நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்.


இஸ்லாமிய நாடுகள் சில கை விரிக்க சில ஆயிரம் நபர்களை அண்டை நாடான பங்களாதேஷ் ஏற்று கொண்டது.இதற்கு மேல் எங்களால் முடியாது என்று எல்லை கதவையும் மூடியாகிவிட்டது.


இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் திபெத்தியர்களையும்,பார்சிகளையும்   இரு கரம் கூப்பி  இன்முகத்துடன் வரவேற்ற  என் இந்தியா இன்று இம் மக்களை ஏற்க மறுத்ததுடன் வருபவர்களை நாடு கடத்துகின்றது. சட்டப்படி தான் எல்லாம் நடக்கின்றது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ 

நீதித்துறைக்கு பதிலளித்து விட்டார்.


இந்தியாவின் அழகே பன்முகதன்மை கொண்ட மக்களை அரைவணைத்து சென்று ஜன நாயகத்தை பூத்து குலுங்க செய்வதே.  


மத வெறியர்களால் அனைத்தையும் இழந்து நிற்கதியாக வரும் மக்களை இந்த நாடாவது (கடவுள்) காப்பாற்றாதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை திருப்பி அனுப்புவதான் அறமா ? இது தான் ராஜநியதி யா ? 


நம் பாரத தேசம் என்று புகழ் போற்றுவோம் ? என்பது இப்பொழுது வெறும் பாடல் வரிகளே.. 


நம் போன்ற மக்களை வரவேற்கும் நாடு இந்தியா என்று ரோஹிங்யா மக்கள் நினைத்திருப்பார்கள் போலும்  அவர்களுக்கு தெரியவில்லை நாம் இருப்பது

" புதிய இந்தியாவில் "  என்று 


இப்படிக்கு 

 புதிய இந்தியன் 😭😭😭

 எங்கே என் பழைய இந்தியா ??


வந்தாரை வாழ வைத்த என் இந்திய தேசம் இன்று ரோஹிங்யா இன மக்களை அனுமதிக்க மறுப்பது ஏன் ?


யார் இந்த் ரோஹிங்யா இன மக்கள் ?

மியான்மாரில் வசித்த சன்னி இன முஸ்லீம்களின் ஒரு பிரிவு. 


புத்தரின் கொள்கைகளை கடுகளவு கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு நேரெதிரான வன்முறையை கையில் எடுத்த பெளத்தர்களின் வெறியாட்டத்தால் வீடு வாசல் இழந்து ,நடை பிணமாக நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்.


இஸ்லாமிய நாடுகள் சில கை விரிக்க சில ஆயிரம் நபர்களை அண்டை நாடான பங்களாதேஷ் ஏற்று கொண்டது.இதற்கு மேல் எங்களால் முடியாது என்று எல்லை கதவையும் மூடியாகிவிட்டது.


இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் திபெத்தியர்களையும்,பார்சிகளையும்   இரு கரம் கூப்பி  இன்முகத்துடன் வரவேற்ற  என் இந்தியா இன்று இம் மக்களை ஏற்க மறுத்ததுடன் வருபவர்களை நாடு கடத்துகின்றது. சட்டப்படி தான் எல்லாம் நடக்கின்றது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ 

நீதித்துறைக்கு பதிலளித்து விட்டார்.


இந்தியாவின் அழகே பன்முகதன்மை கொண்ட மக்களை அரைவணைத்து சென்று ஜன நாயகத்தை பூத்து குலுங்க செய்வதே.  


மத வெறியர்களால் அனைத்தையும் இழந்து நிற்கதியாக வரும் மக்களை இந்த நாடாவது (கடவுள்) காப்பாற்றாதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை திருப்பி அனுப்புவதான் அறமா ? இது தான் ராஜநியதி யா ? 


நம் பாரத தேசம் என்று புகழ் போற்றுவோம் ? என்பது இப்பொழுது வெறும் பாடல் வரிகளே.. 


நம் போன்ற மக்களை வரவேற்கும் நாடு இந்தியா என்று ரோஹிங்யா மக்கள் நினைத்திருப்பார்கள் போலும்  அவர்களுக்கு தெரியவில்லை நாம் இருப்பது

" புதிய இந்தியாவில் "  என்று 


இப்படிக்கு 

 புதிய இந்தியன் 😭😭😭

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

படித்ததில் ரசித்தது

 #அந்தகாலம் 


ஊசி போடாத *Doctor* ..


சில்லறை கேட்காத *Conductor* ..


சிரிக்கும் *police* ...


முறைக்கும் *காதலி* ..


உப்பு தொட்ட *மாங்கா* ..


மொட்டமாடி *தூக்கம்* ..


திருப்தியான ஏப்பம்...


Notebookன் *கடைசிப்பக்கம்* ...


தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....


பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..


இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..


இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...


கோபம் மறந்த *அப்பா* ..


சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..


அக்கறை காட்டும் *அண்ணன்* ..


அதட்டும் *அக்கா* ...


மாட்டி விடாத *தங்கை* ..


சமையல் பழகும் *மனைவி* ...


சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..


வழிவிடும் *ஆட்டோ* காரர்...


 *High beam* போடாத லாரி ஓட்டுனர்..


அரை மூடி *தேங்கா* ..


12மணி *குல்பி* ..


sunday *சாலை* ...


மரத்தடி *அரட்டை* ...


தூங்க விடாத *குறட்டை* ...


புது நோட் *வாசம்* ..


மார்கழி *மாசம்* ..


ஜன்னல் *இருக்கை* ..


கோவில் *தெப்பகுளம்* ..


Exhibition *அப்பளம்* ..


முறைப்பெண்ணின் *சீராட்டு* ...


எதிரியின் *பாராட்டு* ..


தோசைக்கல் *சத்தம்* ..


எதிர்பாராத  *முத்தம்* ...


பிஞ்சு *பாதம்* ..


எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,


வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,


சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,


முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,


 *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,


 *எம்ஜிஆர், கலைஞர்*  உயிரோடு இருந்தார்கள்.


 *ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.


கபில் தேவின் *கிரிக்கெட்* .


குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.


 *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,


எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,


சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,* 


தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,


மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,


மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,


ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,


பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,


எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,


கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...


பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...


கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...


7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..


பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...


எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது


வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்


 *சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்


ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்


பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,


சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,


தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,


இதை எழுதும் *நான்* ..


படிக்கும் *நீங்கள்* ..


இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .


கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.


#நம்சுகங்களும்_நம்பிக்கைகளும்தான்.

 #அந்தகாலம் 


ஊசி போடாத *Doctor* ..


சில்லறை கேட்காத *Conductor* ..


சிரிக்கும் *police* ...


முறைக்கும் *காதலி* ..


உப்பு தொட்ட *மாங்கா* ..


மொட்டமாடி *தூக்கம்* ..


திருப்தியான ஏப்பம்...


Notebookன் *கடைசிப்பக்கம்* ...


தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....


பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..


இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..


இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...


கோபம் மறந்த *அப்பா* ..


சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..


அக்கறை காட்டும் *அண்ணன்* ..


அதட்டும் *அக்கா* ...


மாட்டி விடாத *தங்கை* ..


சமையல் பழகும் *மனைவி* ...


சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..


வழிவிடும் *ஆட்டோ* காரர்...


 *High beam* போடாத லாரி ஓட்டுனர்..


அரை மூடி *தேங்கா* ..


12மணி *குல்பி* ..


sunday *சாலை* ...


மரத்தடி *அரட்டை* ...


தூங்க விடாத *குறட்டை* ...


புது நோட் *வாசம்* ..


மார்கழி *மாசம்* ..


ஜன்னல் *இருக்கை* ..


கோவில் *தெப்பகுளம்* ..


Exhibition *அப்பளம்* ..


முறைப்பெண்ணின் *சீராட்டு* ...


எதிரியின் *பாராட்டு* ..


தோசைக்கல் *சத்தம்* ..


எதிர்பாராத  *முத்தம்* ...


பிஞ்சு *பாதம்* ..


எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,


வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,


சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,


முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,


 *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,


 *எம்ஜிஆர், கலைஞர்*  உயிரோடு இருந்தார்கள்.


 *ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.


கபில் தேவின் *கிரிக்கெட்* .


குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.


 *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,


எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,


சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,* 


தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,


மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,


மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,


ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,


பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,


எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,


கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...


பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...


கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...


7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..


பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...


எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது


வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்


 *சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்


ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்


பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,


சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,


தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,


இதை எழுதும் *நான்* ..


படிக்கும் *நீங்கள்* ..


இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .


கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.


#நம்சுகங்களும்_நம்பிக்கைகளும்தான்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

#TeachersDay

 September 5  

Radhakrishnan Birthday 

#TeachersDay 👩‍🏫  👨‍🏫


என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை  

மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவர்கள்.


நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  


இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர். 


வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர். 


ஒரு உதவாக்கரையை 

இன்று 

ஒரு உதவும்கரை ஆக்கி 

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

 September 5  

Radhakrishnan Birthday 

#TeachersDay 👩‍🏫  👨‍🏫


என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை  

மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவர்கள்.


நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  


இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர். 


வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர். 


ஒரு உதவாக்கரையை 

இன்று 

ஒரு உதவும்கரை ஆக்கி 

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இரயிலும், மசால் பொரியும்

 சுவையான அனுபவம்


ஒரு இரயில் பயணத்தின் பொழுது எனது கோச்சில் மசாலா பொறி கொண்டு வந்தார் வணிகர், 

முதலில் அனைவருமே மன்மோகன்சிங் நிலையில் தான் இருந்தோம், 

நாம் சும்மா இருந்தால் தான் நம் வாய் சும்மாக இருக்காதே ! 

அண்ணா பொறி என்றேன், 

அவரும் சிக்கிட்டான் டா ஒருத்தன் என்ற ரீதியில் எடுத்து கொடுத்தார்.


சில நொடிகளில் நம் வலது கை, இடது கை,எதிரில் இருந்தவர் என 6 கைகள் நீட்டியது..

மைண்ட் வாய்ஸ் : ஏன் பா நீங்களா வாங்க மாட்டிங்க, எவராவது ஒருவர் வாங்கியவுடன் தானும் வாங்கி கொள்வது..

என்ன ஒரு புத்திசாலி தனம் 😲


நீங்களும் ஒரு முறை இது போன்று முயற்சி செய்து பாருங்களேன் 👍🏻

 சுவையான அனுபவம்


ஒரு இரயில் பயணத்தின் பொழுது எனது கோச்சில் மசாலா பொறி கொண்டு வந்தார் வணிகர், 

முதலில் அனைவருமே மன்மோகன்சிங் நிலையில் தான் இருந்தோம், 

நாம் சும்மா இருந்தால் தான் நம் வாய் சும்மாக இருக்காதே ! 

அண்ணா பொறி என்றேன், 

அவரும் சிக்கிட்டான் டா ஒருத்தன் என்ற ரீதியில் எடுத்து கொடுத்தார்.


சில நொடிகளில் நம் வலது கை, இடது கை,எதிரில் இருந்தவர் என 6 கைகள் நீட்டியது..

மைண்ட் வாய்ஸ் : ஏன் பா நீங்களா வாங்க மாட்டிங்க, எவராவது ஒருவர் வாங்கியவுடன் தானும் வாங்கி கொள்வது..

என்ன ஒரு புத்திசாலி தனம் 😲


நீங்களும் ஒரு முறை இது போன்று முயற்சி செய்து பாருங்களேன் 👍🏻

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

சல்லிகளும் சல்லாபங்களும்..

 

சல்லிகளும் சல்லாபங்களும்..


சாமியார்கள் என்று சொன்னால் 

Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.


இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ? 

பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.


80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..


15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??


குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..


இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?  

இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது. 

நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ? 

நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.


இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடமும், நட்புகளிடமும் கலந்துரையாடினால் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.


அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.  


சிந்திப்போம்.....

 

சல்லிகளும் சல்லாபங்களும்..


சாமியார்கள் என்று சொன்னால் 

Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.


இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ? 

பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.


80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..


15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??


குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..


இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?  

இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது. 

நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ? 

நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.


இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடமும், நட்புகளிடமும் கலந்துரையாடினால் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.


அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.  


சிந்திப்போம்.....