புதன், 29 ஆகஸ்ட், 2018

ஜெய் மோடி சர்கார்

ஒரே வருடத்தில் 15₹ பெட்ரோல் விலை ஏற்றம்; சர்வதேத சந்தையில் கச்சா எண்ணெய் சரிவு;

கேட்டால் மன்மோகன் ஆட்சியில் ஏறவில்லையா ? என்பார்கள் ; ஒவ்வொரு வருடதையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்; படித்த பொருளாதார மேதையின் நிர்வாகமும்;  ஏழைத்தாயின் மகனின் நிர்வாகமும்.

இத்தனைக்கும் 2009 இல் உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது அதில் சுமாராக பாதிப்படைந்தது இந்தியாவே ;

மாதிரி ஆதார பூர்வமான தகவல்களை சங்கிகளிடம் காட்டினால், இந்தியா இந்துக்களுக்கே என்று பிதற்றல் வேறு;

பாஜக வின் ஒரே சாதனை காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகம் பரவாயில்லை என்று நம்மை சிந்திக்க வைத்தது..

ஜெய் மோடி சர்கார் 🎤 அது தாண்டா
அதே தான் 🙏🏻🙏🏻🙏🏻

பிராயிசித்தம் தேடும்
ராஜா.க
ஒரே வருடத்தில் 15₹ பெட்ரோல் விலை ஏற்றம்; சர்வதேத சந்தையில் கச்சா எண்ணெய் சரிவு;

கேட்டால் மன்மோகன் ஆட்சியில் ஏறவில்லையா ? என்பார்கள் ; ஒவ்வொரு வருடதையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்; படித்த பொருளாதார மேதையின் நிர்வாகமும்;  ஏழைத்தாயின் மகனின் நிர்வாகமும்.

இத்தனைக்கும் 2009 இல் உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது அதில் சுமாராக பாதிப்படைந்தது இந்தியாவே ;

மாதிரி ஆதார பூர்வமான தகவல்களை சங்கிகளிடம் காட்டினால், இந்தியா இந்துக்களுக்கே என்று பிதற்றல் வேறு;

பாஜக வின் ஒரே சாதனை காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகம் பரவாயில்லை என்று நம்மை சிந்திக்க வைத்தது..

ஜெய் மோடி சர்கார் 🎤 அது தாண்டா
அதே தான் 🙏🏻🙏🏻🙏🏻

பிராயிசித்தம் தேடும்
ராஜா.க

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

ஏழைத்தாயின் மகள்

கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா.

தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,
சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..

வடிவேலு இல்லாமல் தவித்த
தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம்.

அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.  

பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன்
 என்ற  #KolamaavuKokila
கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா.

தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,
சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..

வடிவேலு இல்லாமல் தவித்த
தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம்.

அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.  

பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன்
 என்ற  #KolamaavuKokila

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

PaayrPremaKadhal

படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..

தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..

கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல;

மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன்,
ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ?

Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற்
கொண்டு.

அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு
கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.

ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ?

எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு
செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.

இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.

அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;

இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.

ப்யார்,ப்ரேமா,காதலுடன்
ராஜா.க
படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..

தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..

கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல;

மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன்,
ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ?

Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற்
கொண்டு.

அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு
கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.

ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ?

எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு
செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.

இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.

அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;

இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.

ப்யார்,ப்ரேமா,காதலுடன்
ராஜா.க

ஞாயிறு, 29 ஜூலை, 2018

சாப்பிட போலாம் வாங்க

சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே 
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது 
காசி விநாயகா மெஸ்
திருவல்லிக்கேணி 

சுவையுடன்

ராஜா.
சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே 
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது 
காசி விநாயகா மெஸ்
திருவல்லிக்கேணி 

சுவையுடன்

ராஜா.

வெள்ளி, 13 ஜூலை, 2018

கள்ளி காட்டு கள்வரே !!!

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசிவெற்றி
முதல் காதலில் தோற்றவனுக்கு அது 
தான் கடைசிதோல்வி

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின்அழகு
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின்அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

உந்தன் தமிழ் வரிகளால் எங்களை கடத்திய கள்ளரே !!! 
வேல் கம்பை விட கூர்மையானது உங்கள் பேனா (வின்) முனை..

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்,
தேசப்பற்று என அனைத்தையும் உங்கள்வைரவரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர்வைரமுத்து 


இவண்

ராஜா. 

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசிவெற்றி
முதல் காதலில் தோற்றவனுக்கு அது 
தான் கடைசிதோல்வி

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின்அழகு
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின்அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

உந்தன் தமிழ் வரிகளால் எங்களை கடத்திய கள்ளரே !!! 
வேல் கம்பை விட கூர்மையானது உங்கள் பேனா (வின்) முனை..

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்,
தேசப்பற்று என அனைத்தையும் உங்கள்வைரவரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர்வைரமுத்து 


இவண்

ராஜா. 

ஞாயிறு, 24 ஜூன், 2018

தமிழ் சினிமாவின் புற்று நோய்

தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம்.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க
தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம்.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க

சனி, 9 ஜூன், 2018

காலா என் பார்வையில்

அறிமுக காட்சி முதல் இறுதி காட்சி வரை நான் இயக்குனரின் நடிகன்  என்று நிருபணம் செய்த “super star” சினிமாவில் தன் வெறுப்பாளர்களை  
 “க்ளீன் போல்ட்செய்திருக்கிறார்.

கரிகாலனின் அடுத்த தலைமுறைக்கான பார்வையை அகிம்சை,வன்முறை,சுயநலம் என்று மகன்கள் கதாபாத்திரத்தால் இன்றைய சமூகத்தின் இயக்குனர் பார்வைநச்”.

மனைவி,முன்னாள் காதலி கதாபாத்திரத்தின் வலிமையை நகைச்சுவையாக,கவிதையாக,நேர்த்தியாக காட்சிபடுத்திய விதம் அழகியஹைகூ”.

கதையில் வில்லனின் பலத்தை பொறுத்து நாயகனின் பலம் புலப்படும். அந்த வகையில் தன் நடிப்பால்,வசனங்களால் ஒரு காட்சியில் நாயகனை தன் நடிப்பால் அடித்து தன் அசுரபலத்தை (இராவணன்) நிருப்பிக்கிறார் நானா படேகர்.

கதையுடன் கூடிய பாடல்கள்,பிண்ணனி இசை படத்திற்கு பலம்

விஷமிகளின் விமர்சனங்களை துறந்து,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
பற்றற்று பார்க்கையில் 
காலா என்கிற கருப்புமேலும் அழகாகிறது

ரசிகன்
ராஜா.  




அறிமுக காட்சி முதல் இறுதி காட்சி வரை நான் இயக்குனரின் நடிகன்  என்று நிருபணம் செய்த “super star” சினிமாவில் தன் வெறுப்பாளர்களை  
 “க்ளீன் போல்ட்செய்திருக்கிறார்.

கரிகாலனின் அடுத்த தலைமுறைக்கான பார்வையை அகிம்சை,வன்முறை,சுயநலம் என்று மகன்கள் கதாபாத்திரத்தால் இன்றைய சமூகத்தின் இயக்குனர் பார்வைநச்”.

மனைவி,முன்னாள் காதலி கதாபாத்திரத்தின் வலிமையை நகைச்சுவையாக,கவிதையாக,நேர்த்தியாக காட்சிபடுத்திய விதம் அழகியஹைகூ”.

கதையில் வில்லனின் பலத்தை பொறுத்து நாயகனின் பலம் புலப்படும். அந்த வகையில் தன் நடிப்பால்,வசனங்களால் ஒரு காட்சியில் நாயகனை தன் நடிப்பால் அடித்து தன் அசுரபலத்தை (இராவணன்) நிருப்பிக்கிறார் நானா படேகர்.

கதையுடன் கூடிய பாடல்கள்,பிண்ணனி இசை படத்திற்கு பலம்

விஷமிகளின் விமர்சனங்களை துறந்து,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
பற்றற்று பார்க்கையில் 
காலா என்கிற கருப்புமேலும் அழகாகிறது

ரசிகன்
ராஜா.