வெள்ளி, 21 ஏப்ரல், 2023

DeivaMachan தெய்வ மச்சான்

 ஒரு சிம்பிள் ஸ்டோரி , ஆர்ப்பாட்டம் இல்லாத கதாநாயகன்(விமல்) அவன் தங்கைக்கு எப்படி கல்யாணம் செய்து வைக்கிறான் ? என்பதை எவ்வளவு க்கு எவ்வளவு சிரிப்புடன் சொல்ல முடியுமோ  சொல்ல முயற்சி செய்து , வெற்றி யும் பெற்றுள்ளது #DeivaMachan படக்குழு.

நடிகர் பால சரவணன் படத்துக்கு மிக பெரிய பலம். படம் முழுவதும் அவர் வரும் இடங்களில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். 


சினிமாவில் செண்டிமெண்ட் மிக முக்கியமானது. விமல் - பால சரவணன் #விலங்கு  வெப் சீரிஸ் வெற்றி க்கு பிறகு மீண்டும் கை கூடியுள்ளது. 

கார்த்திக் -கவுண்டமணி , 

பார்த்திபன்-கவுண்டமனி மாதிரி. விமல்- @Bala_actor காம்போ நல்ல செட் ஆகியுள்ளது. 

இந்த லாஜிக் எல்லாம் பார்க்காமல் , காலை 4 மணிக்கு ஷோ க்கு எல்லாம் செல்லாமல் , வார இறுதி நாட்களில் ஒரு தியேட்டர் க்கு சென்று கவலை எல்லாம் மறந்து சிரித்து விட்டு வரலாம். சிரிக்க வைக்கிறான் இந்த தெய்வ மச்சான். 

 #DeivaMachan


 ஒரு சிம்பிள் ஸ்டோரி , ஆர்ப்பாட்டம் இல்லாத கதாநாயகன்(விமல்) அவன் தங்கைக்கு எப்படி கல்யாணம் செய்து வைக்கிறான் ? என்பதை எவ்வளவு க்கு எவ்வளவு சிரிப்புடன் சொல்ல முடியுமோ  சொல்ல முயற்சி செய்து , வெற்றி யும் பெற்றுள்ளது #DeivaMachan படக்குழு.

நடிகர் பால சரவணன் படத்துக்கு மிக பெரிய பலம். படம் முழுவதும் அவர் வரும் இடங்களில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். 


சினிமாவில் செண்டிமெண்ட் மிக முக்கியமானது. விமல் - பால சரவணன் #விலங்கு  வெப் சீரிஸ் வெற்றி க்கு பிறகு மீண்டும் கை கூடியுள்ளது. 

கார்த்திக் -கவுண்டமணி , 

பார்த்திபன்-கவுண்டமனி மாதிரி. விமல்- @Bala_actor காம்போ நல்ல செட் ஆகியுள்ளது. 

இந்த லாஜிக் எல்லாம் பார்க்காமல் , காலை 4 மணிக்கு ஷோ க்கு எல்லாம் செல்லாமல் , வார இறுதி நாட்களில் ஒரு தியேட்டர் க்கு சென்று கவலை எல்லாம் மறந்து சிரித்து விட்டு வரலாம். சிரிக்க வைக்கிறான் இந்த தெய்வ மச்சான். 

 #DeivaMachan


ஞாயிறு, 19 மார்ச், 2023

முதல் அனுபவம் !!

 இது போன்றதொரு பிரதோஷ நாளில் குலசேகர பட்டினத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி (சிவன் கோயில்) தரிசனம் செய்ய வாய்ப்பு நல்கியது. 


பெரும்பாலும்  கோயில்களுக்கு வேட்டி , சட்டை யில் செல்வது வழக்கம். அன்றும் அதே உடையில் சென்று இருந்தேன். பிரதோஷம் அன்று சிவ பெருமான் அம்பாள் சகிதம் சப்பரத்தில் (சிவிலி யில்) பிரகாரம் சுற்றுவது வழக்கம் அந்த கோயிலில்.


அன்று கோயிலில் மிக குறைந்த நபர்கள் வந்து இருந்தனர். சிவிலி தூக்க ஆட்கள் பற்றாக்குறை போல என்னை பார்த்து விட்டு தம்பி நீங்க தூக்குகிறார்களா என கேட்க ? சற்று தயக்கத்துடன் ஒத்துக்கொண்டேன்.அந்த உடைக்கு (வேஸ்டி ) நன்றி சொல்லணும். 


முதன் முறை இது போன்ற அனுபவம்.ஒரு வழியாக மூன்று முறை பிரகாரம் சுற்றினோம் மூன்றாவது சுற்றில் சற்று வலி இருந்தது. வெளி காட்டி கொள்ளாமல் சப்பரத்தை இறக்கி வைத்தோம். 


முடிவில் தம்பி தேவாரம் பாடி முடித்து விடுங்க என்று கூற , அண்ணே என்று இழுத்தேன் தம்பி இந்தாங்க  இப்போது யாரும் மனப்பாடமா படிக்கிறார்கள் இந்தாங்க புத்தகம்

 என்று  படிக்க சொன்னார்.அவர் தான் வழக்கமா படிப்பார் போலும் அடுத்த தலைமுறை அவர் வழி கொடுத்தது மகிழ்ச்சி தந்தது.

குலசேக்ரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி க்கு நன்றி 🙏🙏🙏


#குலசை #குலசேகரன்பட்டினம்

#சிவன் #கோயில் #பிரதோஷம் 


 இது போன்றதொரு பிரதோஷ நாளில் குலசேகர பட்டினத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி (சிவன் கோயில்) தரிசனம் செய்ய வாய்ப்பு நல்கியது. 


பெரும்பாலும்  கோயில்களுக்கு வேட்டி , சட்டை யில் செல்வது வழக்கம். அன்றும் அதே உடையில் சென்று இருந்தேன். பிரதோஷம் அன்று சிவ பெருமான் அம்பாள் சகிதம் சப்பரத்தில் (சிவிலி யில்) பிரகாரம் சுற்றுவது வழக்கம் அந்த கோயிலில்.


அன்று கோயிலில் மிக குறைந்த நபர்கள் வந்து இருந்தனர். சிவிலி தூக்க ஆட்கள் பற்றாக்குறை போல என்னை பார்த்து விட்டு தம்பி நீங்க தூக்குகிறார்களா என கேட்க ? சற்று தயக்கத்துடன் ஒத்துக்கொண்டேன்.அந்த உடைக்கு (வேஸ்டி ) நன்றி சொல்லணும். 


முதன் முறை இது போன்ற அனுபவம்.ஒரு வழியாக மூன்று முறை பிரகாரம் சுற்றினோம் மூன்றாவது சுற்றில் சற்று வலி இருந்தது. வெளி காட்டி கொள்ளாமல் சப்பரத்தை இறக்கி வைத்தோம். 


முடிவில் தம்பி தேவாரம் பாடி முடித்து விடுங்க என்று கூற , அண்ணே என்று இழுத்தேன் தம்பி இந்தாங்க  இப்போது யாரும் மனப்பாடமா படிக்கிறார்கள் இந்தாங்க புத்தகம்

 என்று  படிக்க சொன்னார்.அவர் தான் வழக்கமா படிப்பார் போலும் அடுத்த தலைமுறை அவர் வழி கொடுத்தது மகிழ்ச்சி தந்தது.

குலசேக்ரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி க்கு நன்றி 🙏🙏🙏


#குலசை #குலசேகரன்பட்டினம்

#சிவன் #கோயில் #பிரதோஷம் 


திங்கள், 6 பிப்ரவரி, 2023

இரண்டு ஜாம்பவான்களும் இசை யும் !!

 இரண்டு ஜாம்பவான் களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் புதிய இரண்டு ஜாம்பவான்கள் கிடைக்கும் இது காலத்தின் விளையாட்டு ; ஆம் காலம் தனக்கு தேவையான வற்றை எடுத்து கொள்ளும்; நாம் நினைபோம் நம்மால் தான் என்று , அது வல்ல நிதர்சனம் நாம் அதில் ஒரு காரணியே.


1989 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம்  பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புதுப்புது அர்த்தங்கள். இப்படத்தில் பின்னணி இசை சேர்ப்பதில் கால தாமதம் ஏற்பட இயக்குனர்  பாலச்சந்தர் க்கும் இசை அமைப்பாளர் இளையராஜா பிரச்சினை ஏற்பட்டது.


ஆம் ; அது இளையராஜா வின் காலம் எப்போதும் பிசியாகவே உள்ள காலம் ; ஆதலால் , புதுப்புது அர்த்தங்கள் படத்துக்கு கால தாமதம்.  இசைக்கு எப்படி இளையராஜா உச்சமோ , இயக்கத்தில் சிகரம் பாலச்சந்தர்.



அதன் பின் அவர் இயக்கிய மூன்று படங்கள் "ஒரு வீடு ஒரு வாசல்' ,இப்படத்தில் பாடல்கள் கிடையாது இசை V. S. Narasimhan. 

"அழகன்", "வானமே எல்லை" இந்த இரு  படங்களுக்கு மரகதமணி என்கிற இசையமைப்பாளர் அறிமுகம் செய்தார் பாலச்சந்தர்.இந்த 

மரகதமணி தான் பின்நாளில்.


காலங்கள் கடந்தன ஆம் 1992 ஆம் ஆண்டு பிறந்தது , தமிழ் சினிமா வின் மறக்க முடியாத வருடம் மூன்று படங்களுக்கு பூஜை போட பட்டது பாலச்சந்தர் தயாரிப்பில்.


முதல் படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணாமலை , 

இரண்டாம் படம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா ,

மூன்றாவது படம் பாலச்சந்தர் இயக்கத்தில் முகேஷ் ,குஷ்பு நடிப்பில்  ஜாதி மல்லி.


அண்ணாமலை க்கு தேவா இசை ,

ரோஜா க்கு ரகுமான் என்கிற புதிய இசை அமைப்பாளர்.

ஜாதி மல்லி க்கு மரகதமணி இசை  இந்த மரகதமணி தான் பின்நாளில் கிறவானி யானர் (பாகுபலி ,RRR இசை அமைப்பாளர்).



இளையராஜா இல்லாமல் மூன்று முக்கிய படங்கள் முதல் மாடியில் அண்ணாமலை , இரண்டாம் மாடியில் ரோஜா என படங்கள் பரபரப்பாக தொடங்கியது. 

முதலில் வெளிவந்தது.



அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களும் சூப்பர் அப்போதும் இன்றை போல பட விமர்சகர்கள் தேவா குறை கூறினார்கள் படம் அண்ணாமலை , பாடல்கள் 

தம்பி மலை என்று ஆனால் படத்தின் வெற்றியை பாதிக்க வில்லை.


அண்ணாமலை ஓடி கொண்டே இருக்கும் போது மணிரத்னத்தின் ரோஜா வெளியானது.

படம் வெளியாகும் முன்னே ரகுமான் என்னும் இளம் இசை புயல் விச தொடங்கியது  பாடல்கள் ஹிட் , ரேடியோ வில் சின்ன சின்ன ஆசை பாடலுக்கு repeat audience. 


படம் வெளியான பின்பு அந்த இசை புயல் தமிழ் சினிமாவில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எவரும் நினைத்து இருக்க மாட்டார்கள் தமிழ் சினிமா பாடல்களை கிமு , கிபி போல ரோஜா க்கு முன் , ரோஜாக்கு பின் என்று கேட்கும் படி அமைந்தது. 


1993 ஆம் ஆண்டு மூன்றாம் படமான ஜாதி மல்லி வெளியானது இசை கிரவாணி பாடல்கள் கேட்க்கும் படி அமைந்தது. 


தமிழ் சினிமாவிற்கு பாலச்சந்தர் கொடுத்த பல துறைகளில் வித்தகர்களை அறிமுகம் செய்து தன் பங்கை ஆற்றினார். இசையமைப்பாளர்கள் ரகுமான் & மரகதமணி. இந்த மரகதமணி தான் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது வாங்கிய கீரவாணி. 


இளையராஜாவை எதிர்த்து பாலச்சந்தரால் களமிறக்கப்பட்ட இருவரும் ஆஸ்கார் வாங்கி விட்டார்கள் என்று ஒரு யூட்யூப் வீடியோ பார்த்தேன்!..சற்று வருத்தமாக இருந்தது , காலம் தனக்கு தேவையான வற்றை எடுத்து கொண்டு சுழன்று கொண்டே இருக்கும்.


















#ilayaraja #Balachander #maniratnam #Rahman #Keervani #Annamalai #Roja

 இரண்டு ஜாம்பவான் களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் புதிய இரண்டு ஜாம்பவான்கள் கிடைக்கும் இது காலத்தின் விளையாட்டு ; ஆம் காலம் தனக்கு தேவையான வற்றை எடுத்து கொள்ளும்; நாம் நினைபோம் நம்மால் தான் என்று , அது வல்ல நிதர்சனம் நாம் அதில் ஒரு காரணியே.


1989 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம்  பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புதுப்புது அர்த்தங்கள். இப்படத்தில் பின்னணி இசை சேர்ப்பதில் கால தாமதம் ஏற்பட இயக்குனர்  பாலச்சந்தர் க்கும் இசை அமைப்பாளர் இளையராஜா பிரச்சினை ஏற்பட்டது.


ஆம் ; அது இளையராஜா வின் காலம் எப்போதும் பிசியாகவே உள்ள காலம் ; ஆதலால் , புதுப்புது அர்த்தங்கள் படத்துக்கு கால தாமதம்.  இசைக்கு எப்படி இளையராஜா உச்சமோ , இயக்கத்தில் சிகரம் பாலச்சந்தர்.



அதன் பின் அவர் இயக்கிய மூன்று படங்கள் "ஒரு வீடு ஒரு வாசல்' ,இப்படத்தில் பாடல்கள் கிடையாது இசை V. S. Narasimhan. 

"அழகன்", "வானமே எல்லை" இந்த இரு  படங்களுக்கு மரகதமணி என்கிற இசையமைப்பாளர் அறிமுகம் செய்தார் பாலச்சந்தர்.இந்த 

மரகதமணி தான் பின்நாளில்.


காலங்கள் கடந்தன ஆம் 1992 ஆம் ஆண்டு பிறந்தது , தமிழ் சினிமா வின் மறக்க முடியாத வருடம் மூன்று படங்களுக்கு பூஜை போட பட்டது பாலச்சந்தர் தயாரிப்பில்.


முதல் படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணாமலை , 

இரண்டாம் படம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா ,

மூன்றாவது படம் பாலச்சந்தர் இயக்கத்தில் முகேஷ் ,குஷ்பு நடிப்பில்  ஜாதி மல்லி.


அண்ணாமலை க்கு தேவா இசை ,

ரோஜா க்கு ரகுமான் என்கிற புதிய இசை அமைப்பாளர்.

ஜாதி மல்லி க்கு மரகதமணி இசை  இந்த மரகதமணி தான் பின்நாளில் கிறவானி யானர் (பாகுபலி ,RRR இசை அமைப்பாளர்).



இளையராஜா இல்லாமல் மூன்று முக்கிய படங்கள் முதல் மாடியில் அண்ணாமலை , இரண்டாம் மாடியில் ரோஜா என படங்கள் பரபரப்பாக தொடங்கியது. 

முதலில் வெளிவந்தது.



அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களும் சூப்பர் அப்போதும் இன்றை போல பட விமர்சகர்கள் தேவா குறை கூறினார்கள் படம் அண்ணாமலை , பாடல்கள் 

தம்பி மலை என்று ஆனால் படத்தின் வெற்றியை பாதிக்க வில்லை.


அண்ணாமலை ஓடி கொண்டே இருக்கும் போது மணிரத்னத்தின் ரோஜா வெளியானது.

படம் வெளியாகும் முன்னே ரகுமான் என்னும் இளம் இசை புயல் விச தொடங்கியது  பாடல்கள் ஹிட் , ரேடியோ வில் சின்ன சின்ன ஆசை பாடலுக்கு repeat audience. 


படம் வெளியான பின்பு அந்த இசை புயல் தமிழ் சினிமாவில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எவரும் நினைத்து இருக்க மாட்டார்கள் தமிழ் சினிமா பாடல்களை கிமு , கிபி போல ரோஜா க்கு முன் , ரோஜாக்கு பின் என்று கேட்கும் படி அமைந்தது. 


1993 ஆம் ஆண்டு மூன்றாம் படமான ஜாதி மல்லி வெளியானது இசை கிரவாணி பாடல்கள் கேட்க்கும் படி அமைந்தது. 


தமிழ் சினிமாவிற்கு பாலச்சந்தர் கொடுத்த பல துறைகளில் வித்தகர்களை அறிமுகம் செய்து தன் பங்கை ஆற்றினார். இசையமைப்பாளர்கள் ரகுமான் & மரகதமணி. இந்த மரகதமணி தான் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது வாங்கிய கீரவாணி. 


இளையராஜாவை எதிர்த்து பாலச்சந்தரால் களமிறக்கப்பட்ட இருவரும் ஆஸ்கார் வாங்கி விட்டார்கள் என்று ஒரு யூட்யூப் வீடியோ பார்த்தேன்!..சற்று வருத்தமாக இருந்தது , காலம் தனக்கு தேவையான வற்றை எடுத்து கொண்டு சுழன்று கொண்டே இருக்கும்.


















#ilayaraja #Balachander #maniratnam #Rahman #Keervani #Annamalai #Roja

புதன், 25 ஜனவரி, 2023

கடனும் , நண்பனும்

 ரொம்ப நாளாக எழுதணும் நினைத்த த்ரெட்.

இன்று நேரம் அமைந்ததால் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது. 

" கடன்"இந்த வார்த்தை பலரின் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமான வார்த்தை.



இந்த கடனால் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள் , பழைய நண்பர்கள் விலகுவார்கள்.

ஒரு பக்கம் மகிழ்ச்சி , மறு பக்கம் துன்பம் என்று இதனால் இரண்டு வகையான உணர்வுகளையும் அதிகமாகேவே கொடுக்க வல்லது. 


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கடனுக்கும் பொருந்தும். தன் சக்தி க்கு மீறி கடன் வாங்கும் பலர் சுனாமி அலைகள் போல அடித்து சென்று கடலின் கோர பசிக்கு இறையான சான்று இன்றும் உள்ளது சிலர்  மட்டுமே கறை சேருவார்கள். 


உலகமயமாக்களின் விளைவு பெரும்பாலானோர் எங்கோ , யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள். சிலர் வெளியே தெரிந்து (தனி நபர்களிடம்) சிலர் வெளியே தெரியாமல் (வங்கிகளிடம்).  மேலே கூறியது போல நம் சக்தி க்கு மீறி கடன் வாங்கினால் இழப்பு வாங்கியவருக்கும் அவரின் சுற்றத்தாருக்கும்.


இந்த கடனால் பல நட்புகள் பரம எதிரிகளாக மாறிய வரலாறை இந்த பூமி கண்டுள்ளது. 


கடனும் நானும் : 

இன்று வரை நண்பர்களுக்கு மொபைலில் அழைத்தால் attend செய்வார்கள் , அப்போது எடுக்க முடியாமல் போனால் மறுபடியும் அழைபபார்கள். அதற்கான மிக முக்கியமான காரணம் நண்பர்களிடத்தில் பணம் வாங்கவோ கேட்டதோ கிடையாது. இதை எனக்கு உணர்த்தியதே ஒரு நண்பன் தான் , ஒரு முறை அவனிடம் நேரில் பேசி கொண்டு இருக்கையில் 



ஒரு முறை அவனிடத்தில் நேரில் பேசி கொண்டு இருக்கையில் அவனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது , பெயரை பார்த்தவுடன் நெற்றி சுருக்கி அழைப்பை எடுக்க வில்லை , ஏன் டா ? என நான் கேட்க , இவன் லாம் பணம் கேட்க தான் அழைப்பான் என்றான்.  வேணும் னா பாரேன் , திருப்பி அழைப்பு வந்தது.



நண்பன் விஜய் போன்று இப்போ உனக்கு live demo கொடுக்கறேன் என்று சொல்லி அந்த அழைப்பை எடுத்து பேசினான் ,speaker போட்டு விட்டான். அவன் கூறிய படி கடன் தான் கேட்டான்.நாளை க்கு பேசறேன் இப்போ driving இருக்கேன் என்று அழைப்பை துண்டித்தான் சிரித்து கொண்டே என்னை பார்த்து demo ஓகே வா என்றான்.



ஏன் டா இவனுக்கு கொடுக்க விருப்பமில்லையா என நான் கேட்க ; இவனுக்கு இதற்கு முன் கொடுத்த பணத்தையே தரவில்லை , உனக்காக தான் call attend பண்ணினேன் என்றான் casual ஆக. அப்போது தான் எனக்கு புரிந்தது பாடம் கடன் வாங்கினால் நட்பு என்ன செய்யும் என்று 🤔 engineering இதெல்லாம் சொல்லி தரவில்லை.



மேற்கூறிய இரு நபர்களும் கல்லூரியில் அவ்வளவு நெருக்கம்.  ஆம் கல்லூரி கால வாழ்க்கை வேறு , கல்லூரி பிறகு வாழ்க்கை வேறு. இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது ஒன்று தான் நண்பர்கள் இடத்தில் கடன் வாங்க கூடாது என்று. நாம் ஒரு கொள்கை யில் இருக்க முயன்றால்  அதில்


 குஷ்பு போல சின்ன , சின்ன movement கூடிய dance ஆட காலம் நினைக்கும் அதை விதி என்றும் கூறலாம். ஒரு property வாங்குவதற்கு Bank லோன் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. வடிவேலு சொல்வது போல எல்லாம் பிளான் பண்ணினாலும் திடிரென்று 1 இலட்சம் துண்டு விழுந்தது.


என்ன செய்ய என்று யோசித்து சரி இதில் என்ன ஈகோ என அப்பா விடம் கேட்க , அவரோ சிரித்து கொண்டே தருகிறேன் ஆனால் உனக்கு ஒரு பாடம் ; ஏதோ கூறுவாயே உன் நட்பு , நட்பு என்று ,சும்மா அவர்களிடம் கேள் நீ யார் என்று அவர்கள் உனக்கு உணர்த்துவார்கள் என்று.



சூரியன் படத்தில் கவண்டர் மகான் கூறுவது போல " சத்ய சோதனை " என்று கூறி கொண்டு , யாரிடம் கேட்க ? எப்படி கேட்க என இரவு முழுவதும் யோசனை , அவன் என்ன நினைப்பான் , இவன் என்ன நினைப்பான் என ஏகப்பட்ட திரைக்கதை கண் முன் ஓடியது.



நமக்கென்று நாலு பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஒவ்வொரு நபரிடமும் 25 ஆயிரம் என முடிவு செய்து. முதலில் அழைத்தது" Haja " மறுமுனையில் சொல்லுடா என கூற சற்று தயங்கி பிறகு ஏதோ ஒரு தைரியத்தில் பேச; எவ்வளவு வேணும் என கேட்க என் plan சொல்ல அரை மணி நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறி விட்டான்.


ஏகபட்ட கேள்வி கேட்டு கொண்டேன் , நாம் கேட்டது சரியா / தவறா என்று. சரி இன்றைக்கு இது போதும் எதுவாகினும் நாளை மற்றவர்கள் இடத்தில் பேசி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டேன். அடுத்த 15 நிமிடத்தில் sms வந்தது பார்த்து சற்று அதிர்ச்சி ஆனேன்.



ஆம் 1 இலட்சம் credited to tour account என்ற குறுந்தகவல் மிகப்பெரிய மகிழ்ச்சி யை கொடுத்தது. அவனும் நானும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தோம் , சொல்ல போனால் அவனை பார்த்து தான் அந்த வங்கியில் கணக்கை தொடங்கினேன் அது ஒரு சுவராஸ்யமான சம்பவம் அதை வேறு த்ரெட்டில் எழுதுகிறேன்.



நண்பனிடம் நன்றி கூற அழைத்த போது " சரிடா யப்பா போதும் " என்று கூறி call ஐ cut செய்தான். தந்தை யிடம் சவாலில் வெற்றி பெறுவது சின்ன சங்கடம் தான் என்றாலும் அவர் சிரித்து கொண்டே உனக்கு இப்போது தான் பொறுப்பு கூடியுள்ளது . கவனமாக இரு என்று ஒரு சின்ன எச்சரிக்கை அதில் அர்த்தம் இருந்தது.



அந்த கடனை அடுத்த 10 நாட்களில் கொடுத்து விட்டேன் , அதன் பிறகு முடிந்த வரை நண்பர்கள் இடத்தில் கடன் வாங்குவது இல்லை. வழியே இல்லாத நிலையில் credit card என்கிற பிரம்மாஸ்திரம் எடுத்து கொள்வேன். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை உருவாகும்.



முடிந்த வரை கடன் வாங்காமல் ஓட முயற்சி செய்வோம் நட்பு வட்டத்தை பெருக்கி கொள்வோம். 

#கடன் #நண்பன் #credit #loan #loans #personalloan #homeloan

இவன்

ராஜா.க 










 ரொம்ப நாளாக எழுதணும் நினைத்த த்ரெட்.

இன்று நேரம் அமைந்ததால் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது. 

" கடன்"இந்த வார்த்தை பலரின் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமான வார்த்தை.



இந்த கடனால் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள் , பழைய நண்பர்கள் விலகுவார்கள்.

ஒரு பக்கம் மகிழ்ச்சி , மறு பக்கம் துன்பம் என்று இதனால் இரண்டு வகையான உணர்வுகளையும் அதிகமாகேவே கொடுக்க வல்லது. 


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கடனுக்கும் பொருந்தும். தன் சக்தி க்கு மீறி கடன் வாங்கும் பலர் சுனாமி அலைகள் போல அடித்து சென்று கடலின் கோர பசிக்கு இறையான சான்று இன்றும் உள்ளது சிலர்  மட்டுமே கறை சேருவார்கள். 


உலகமயமாக்களின் விளைவு பெரும்பாலானோர் எங்கோ , யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள். சிலர் வெளியே தெரிந்து (தனி நபர்களிடம்) சிலர் வெளியே தெரியாமல் (வங்கிகளிடம்).  மேலே கூறியது போல நம் சக்தி க்கு மீறி கடன் வாங்கினால் இழப்பு வாங்கியவருக்கும் அவரின் சுற்றத்தாருக்கும்.


இந்த கடனால் பல நட்புகள் பரம எதிரிகளாக மாறிய வரலாறை இந்த பூமி கண்டுள்ளது. 


கடனும் நானும் : 

இன்று வரை நண்பர்களுக்கு மொபைலில் அழைத்தால் attend செய்வார்கள் , அப்போது எடுக்க முடியாமல் போனால் மறுபடியும் அழைபபார்கள். அதற்கான மிக முக்கியமான காரணம் நண்பர்களிடத்தில் பணம் வாங்கவோ கேட்டதோ கிடையாது. இதை எனக்கு உணர்த்தியதே ஒரு நண்பன் தான் , ஒரு முறை அவனிடம் நேரில் பேசி கொண்டு இருக்கையில் 



ஒரு முறை அவனிடத்தில் நேரில் பேசி கொண்டு இருக்கையில் அவனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது , பெயரை பார்த்தவுடன் நெற்றி சுருக்கி அழைப்பை எடுக்க வில்லை , ஏன் டா ? என நான் கேட்க , இவன் லாம் பணம் கேட்க தான் அழைப்பான் என்றான்.  வேணும் னா பாரேன் , திருப்பி அழைப்பு வந்தது.



நண்பன் விஜய் போன்று இப்போ உனக்கு live demo கொடுக்கறேன் என்று சொல்லி அந்த அழைப்பை எடுத்து பேசினான் ,speaker போட்டு விட்டான். அவன் கூறிய படி கடன் தான் கேட்டான்.நாளை க்கு பேசறேன் இப்போ driving இருக்கேன் என்று அழைப்பை துண்டித்தான் சிரித்து கொண்டே என்னை பார்த்து demo ஓகே வா என்றான்.



ஏன் டா இவனுக்கு கொடுக்க விருப்பமில்லையா என நான் கேட்க ; இவனுக்கு இதற்கு முன் கொடுத்த பணத்தையே தரவில்லை , உனக்காக தான் call attend பண்ணினேன் என்றான் casual ஆக. அப்போது தான் எனக்கு புரிந்தது பாடம் கடன் வாங்கினால் நட்பு என்ன செய்யும் என்று 🤔 engineering இதெல்லாம் சொல்லி தரவில்லை.



மேற்கூறிய இரு நபர்களும் கல்லூரியில் அவ்வளவு நெருக்கம்.  ஆம் கல்லூரி கால வாழ்க்கை வேறு , கல்லூரி பிறகு வாழ்க்கை வேறு. இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது ஒன்று தான் நண்பர்கள் இடத்தில் கடன் வாங்க கூடாது என்று. நாம் ஒரு கொள்கை யில் இருக்க முயன்றால்  அதில்


 குஷ்பு போல சின்ன , சின்ன movement கூடிய dance ஆட காலம் நினைக்கும் அதை விதி என்றும் கூறலாம். ஒரு property வாங்குவதற்கு Bank லோன் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. வடிவேலு சொல்வது போல எல்லாம் பிளான் பண்ணினாலும் திடிரென்று 1 இலட்சம் துண்டு விழுந்தது.


என்ன செய்ய என்று யோசித்து சரி இதில் என்ன ஈகோ என அப்பா விடம் கேட்க , அவரோ சிரித்து கொண்டே தருகிறேன் ஆனால் உனக்கு ஒரு பாடம் ; ஏதோ கூறுவாயே உன் நட்பு , நட்பு என்று ,சும்மா அவர்களிடம் கேள் நீ யார் என்று அவர்கள் உனக்கு உணர்த்துவார்கள் என்று.



சூரியன் படத்தில் கவண்டர் மகான் கூறுவது போல " சத்ய சோதனை " என்று கூறி கொண்டு , யாரிடம் கேட்க ? எப்படி கேட்க என இரவு முழுவதும் யோசனை , அவன் என்ன நினைப்பான் , இவன் என்ன நினைப்பான் என ஏகப்பட்ட திரைக்கதை கண் முன் ஓடியது.



நமக்கென்று நாலு பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஒவ்வொரு நபரிடமும் 25 ஆயிரம் என முடிவு செய்து. முதலில் அழைத்தது" Haja " மறுமுனையில் சொல்லுடா என கூற சற்று தயங்கி பிறகு ஏதோ ஒரு தைரியத்தில் பேச; எவ்வளவு வேணும் என கேட்க என் plan சொல்ல அரை மணி நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறி விட்டான்.


ஏகபட்ட கேள்வி கேட்டு கொண்டேன் , நாம் கேட்டது சரியா / தவறா என்று. சரி இன்றைக்கு இது போதும் எதுவாகினும் நாளை மற்றவர்கள் இடத்தில் பேசி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டேன். அடுத்த 15 நிமிடத்தில் sms வந்தது பார்த்து சற்று அதிர்ச்சி ஆனேன்.



ஆம் 1 இலட்சம் credited to tour account என்ற குறுந்தகவல் மிகப்பெரிய மகிழ்ச்சி யை கொடுத்தது. அவனும் நானும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தோம் , சொல்ல போனால் அவனை பார்த்து தான் அந்த வங்கியில் கணக்கை தொடங்கினேன் அது ஒரு சுவராஸ்யமான சம்பவம் அதை வேறு த்ரெட்டில் எழுதுகிறேன்.



நண்பனிடம் நன்றி கூற அழைத்த போது " சரிடா யப்பா போதும் " என்று கூறி call ஐ cut செய்தான். தந்தை யிடம் சவாலில் வெற்றி பெறுவது சின்ன சங்கடம் தான் என்றாலும் அவர் சிரித்து கொண்டே உனக்கு இப்போது தான் பொறுப்பு கூடியுள்ளது . கவனமாக இரு என்று ஒரு சின்ன எச்சரிக்கை அதில் அர்த்தம் இருந்தது.



அந்த கடனை அடுத்த 10 நாட்களில் கொடுத்து விட்டேன் , அதன் பிறகு முடிந்த வரை நண்பர்கள் இடத்தில் கடன் வாங்குவது இல்லை. வழியே இல்லாத நிலையில் credit card என்கிற பிரம்மாஸ்திரம் எடுத்து கொள்வேன். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை உருவாகும்.



முடிந்த வரை கடன் வாங்காமல் ஓட முயற்சி செய்வோம் நட்பு வட்டத்தை பெருக்கி கொள்வோம். 

#கடன் #நண்பன் #credit #loan #loans #personalloan #homeloan

இவன்

ராஜா.க 










சனி, 14 ஜனவரி, 2023

துணிவு திரைவிமர்சனம்

 நடிகர்கள் தங்கள் நடித்து வெளி வரும் படங்களில் சமுதாயத்திற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பது அறம் சார்ந்தது அதை பெரும்பாலானோர் செய்ய தவறினாலும் சிலர் தயங்காமல் செய்கின்றனர்.



தனக்கான ஒரு பெருங்கூட்டம் இருப்பது தெரிந்ததால் தான் என்னவோ ,  அவர்களுக்கு தன்னால் முடிந்த அறிவுறையை திரையின் வாயிலாக கூற இயலும் நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். 



அஜித்குமார் , மஞ்சுவாரியர் , சமுத்திரகனி , பக்ஸ் ,இன்னும் பலர் நடித்து , ஜிப்ரான் இசையில் , H.வினோத் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு  திரைக்கு வந்துள்ள படம் துணிவு. 



நகரத்தின் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை கொள்ளையர்கள் கொள்ள அடிக்க முயல்கிறார்கள் அவர்கள் எண்ணம் நிறைவேறியதா ? அந்த வங்கியின் பின்னணி என்ன ? வங்கியில் உள்ள மக்களை எப்படி அரசு காக்க முயலும் என்பதை சமகால நிகழ்வுகளோடு சுவார்ஸமாக சொல்லி வென்று விட்டார் படத்தின் இயக்குனர் வினோத்.



கொள்ளையர்களிடமிருந்து வங்கியில் உள்ள பிணைய கைதிகளை காப்பாற்ற முயலும்  அஜீத்தை கைதட்டி வரவேற்கும் மக்களிடம் சிரித்து கொண்டே நானும் கொள்ளையடிக்கத்தான் வந்துள்ளேன் என்று கூறி அமர்க்களமான ஆரம்ப காட்சி முதல் No Guts No Glory என்று கூறி இறுதி காட்சி வரை அஜீத் தன் கொடி பறக்க விடுகிறார் திரைப்படம் முழுவதும்.



சென்னை கமிஷனராக சமுத்திரகனி கனகச்சிதமாக பொருந்துகிறார் , குறிப்பாக கமெண்டோ chief இடம் இது வடக்கு அல்ல தமிழ்நாடு என்று கூறுகையில் தன்னை அறியாமல் கைதட்டல் சத்தம் இடுகிறார்கள்.


வெள்ளித்திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் மோகன சுந்தரம் (மை பா ) பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்கிறார் பக்ஸ் (போலீஸ் அதிகாரி )உடன் அவரின் பேரம் கலந்த journalism சிரிப்பு க்கு உத்தரவாதம்  நடப்பு journalism கண் முன் நிறுத்துகிறார்கள் இருவரும். 



வெளியில் நடப்பதை வேவு பார்த்து அஜித் க்கு உதவியாக சொல்லப்போனால் வலதுகரமாக இருந்து படம் முழுவதும் stylish  பயணிக்கிறார் கண்மணி என்கிற

மஞ்சு வாரியர்.  


சில்லா , சில்லா என்ற பாடலில் ஜிப்ரான் இசை , வைசாக் வரிகள் , அனிருத் குரலில் இன்றைய ரசிகர்களை ஆட வைக்கிறது ,  பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நிரவ்ஷா வின் கேமரா ஒவ்வொரு frame ம் கண்களுக்கு விருந்து , வங்கியை அவ்வளவு லாவகமாக எடுந்திருந்தார் , சண்டை காட்சிகளில் அவ்வளவு தத்ரூபம். 



முதல் பாதி முழுக்க அஜித் தின் ஆட்டம் , இரண்டாம் பாதியில் இயக்குனர் வலுவான திரைக்கதையால் வலு சேர்கிறார் வங்கிகளின் அத்துமீறல் , share market , mutual fund உள்ள அப்தங்களின் தோலுரித்து காட்டுகிறார். பொது மக்களுக்குள்ள பொறுப்பை உணர அறிவுறுத்துகிறார். 


துணிவு - அஜித்தின் துள்ளல். 


இவண்

ராஜா.க 



 நடிகர்கள் தங்கள் நடித்து வெளி வரும் படங்களில் சமுதாயத்திற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பது அறம் சார்ந்தது அதை பெரும்பாலானோர் செய்ய தவறினாலும் சிலர் தயங்காமல் செய்கின்றனர்.



தனக்கான ஒரு பெருங்கூட்டம் இருப்பது தெரிந்ததால் தான் என்னவோ ,  அவர்களுக்கு தன்னால் முடிந்த அறிவுறையை திரையின் வாயிலாக கூற இயலும் நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். 



அஜித்குமார் , மஞ்சுவாரியர் , சமுத்திரகனி , பக்ஸ் ,இன்னும் பலர் நடித்து , ஜிப்ரான் இசையில் , H.வினோத் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு  திரைக்கு வந்துள்ள படம் துணிவு. 



நகரத்தின் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை கொள்ளையர்கள் கொள்ள அடிக்க முயல்கிறார்கள் அவர்கள் எண்ணம் நிறைவேறியதா ? அந்த வங்கியின் பின்னணி என்ன ? வங்கியில் உள்ள மக்களை எப்படி அரசு காக்க முயலும் என்பதை சமகால நிகழ்வுகளோடு சுவார்ஸமாக சொல்லி வென்று விட்டார் படத்தின் இயக்குனர் வினோத்.



கொள்ளையர்களிடமிருந்து வங்கியில் உள்ள பிணைய கைதிகளை காப்பாற்ற முயலும்  அஜீத்தை கைதட்டி வரவேற்கும் மக்களிடம் சிரித்து கொண்டே நானும் கொள்ளையடிக்கத்தான் வந்துள்ளேன் என்று கூறி அமர்க்களமான ஆரம்ப காட்சி முதல் No Guts No Glory என்று கூறி இறுதி காட்சி வரை அஜீத் தன் கொடி பறக்க விடுகிறார் திரைப்படம் முழுவதும்.



சென்னை கமிஷனராக சமுத்திரகனி கனகச்சிதமாக பொருந்துகிறார் , குறிப்பாக கமெண்டோ chief இடம் இது வடக்கு அல்ல தமிழ்நாடு என்று கூறுகையில் தன்னை அறியாமல் கைதட்டல் சத்தம் இடுகிறார்கள்.


வெள்ளித்திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் மோகன சுந்தரம் (மை பா ) பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்கிறார் பக்ஸ் (போலீஸ் அதிகாரி )உடன் அவரின் பேரம் கலந்த journalism சிரிப்பு க்கு உத்தரவாதம்  நடப்பு journalism கண் முன் நிறுத்துகிறார்கள் இருவரும். 



வெளியில் நடப்பதை வேவு பார்த்து அஜித் க்கு உதவியாக சொல்லப்போனால் வலதுகரமாக இருந்து படம் முழுவதும் stylish  பயணிக்கிறார் கண்மணி என்கிற

மஞ்சு வாரியர்.  


சில்லா , சில்லா என்ற பாடலில் ஜிப்ரான் இசை , வைசாக் வரிகள் , அனிருத் குரலில் இன்றைய ரசிகர்களை ஆட வைக்கிறது ,  பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நிரவ்ஷா வின் கேமரா ஒவ்வொரு frame ம் கண்களுக்கு விருந்து , வங்கியை அவ்வளவு லாவகமாக எடுந்திருந்தார் , சண்டை காட்சிகளில் அவ்வளவு தத்ரூபம். 



முதல் பாதி முழுக்க அஜித் தின் ஆட்டம் , இரண்டாம் பாதியில் இயக்குனர் வலுவான திரைக்கதையால் வலு சேர்கிறார் வங்கிகளின் அத்துமீறல் , share market , mutual fund உள்ள அப்தங்களின் தோலுரித்து காட்டுகிறார். பொது மக்களுக்குள்ள பொறுப்பை உணர அறிவுறுத்துகிறார். 


துணிவு - அஜித்தின் துள்ளல். 


இவண்

ராஜா.க 



வெள்ளி, 6 ஜனவரி, 2023

குழந்தை தனம் !!

 உங்களுக்குள் இருக்கும் குழந்தையை தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.!-ஜாக்கி சான். இதை படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்று , சின்ன வயதில் சில விஷயங்களை பண்ணும் போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் , திரும்ப திரும்ப பண்ண தோணும் , but நம்மால் பண்ண முடியாது.


அப்படி ஒரு பழக்கம் தான் lift இல் (பயணிப்பது) செல்வது , மேலும் செல்வோம் , மறுபடியும் கீழே இறங்கி வருவோம். ஆனால் சின்ன பசங்க என்பதால் அனுமதிப்பதில்லை. இன்று மேலே ஜாக்கிசான் கூறிய quote படித்தவுடன் lift இல் பயணிக்க தொடங்கினேன். என்னுடைய 7th floor வந்ததும் lift வெளியே வரமாமல்


Ground floor பட்டனை அழத்தினேன். எனக்குள்ளே சிரித்து கொண்டேன். நம்மை யாரும் இப்போது திட்ட மாட்டார்கள் , ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க மாட்டராகள். இருந்தாலும் என் மகிழ்ச்சி க்கு இரண்டு முறை மேல் நோக்கி சென்று கீழ் நோக்கி வந்தேன். ஆம் ஜாக்கிசான் கூறியது உண்மை தான்.


நமக்குள் இருக்கும் குழந்தை யை தொலையாமல் பார்த்த் கொள்ள வேண்டும்.

நன்றி ஜாக்கிசான் 😀😀😀

#குழந்தை #நினைவுகள்

 உங்களுக்குள் இருக்கும் குழந்தையை தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.!-ஜாக்கி சான். இதை படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்று , சின்ன வயதில் சில விஷயங்களை பண்ணும் போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் , திரும்ப திரும்ப பண்ண தோணும் , but நம்மால் பண்ண முடியாது.


அப்படி ஒரு பழக்கம் தான் lift இல் (பயணிப்பது) செல்வது , மேலும் செல்வோம் , மறுபடியும் கீழே இறங்கி வருவோம். ஆனால் சின்ன பசங்க என்பதால் அனுமதிப்பதில்லை. இன்று மேலே ஜாக்கிசான் கூறிய quote படித்தவுடன் lift இல் பயணிக்க தொடங்கினேன். என்னுடைய 7th floor வந்ததும் lift வெளியே வரமாமல்


Ground floor பட்டனை அழத்தினேன். எனக்குள்ளே சிரித்து கொண்டேன். நம்மை யாரும் இப்போது திட்ட மாட்டார்கள் , ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க மாட்டராகள். இருந்தாலும் என் மகிழ்ச்சி க்கு இரண்டு முறை மேல் நோக்கி சென்று கீழ் நோக்கி வந்தேன். ஆம் ஜாக்கிசான் கூறியது உண்மை தான்.


நமக்குள் இருக்கும் குழந்தை யை தொலையாமல் பார்த்த் கொள்ள வேண்டும்.

நன்றி ஜாக்கிசான் 😀😀😀

#குழந்தை #நினைவுகள்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

திருச்செந்தூரின் அடையாளம் !!

 எங்கள் திருச்செந்தூர் முதல் அடையாளம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அதற்கு பிறகு கல்வி கோயில்கள் மூலம் சிறந்த அடையாளம் தந்ததில் சி.பா #ஆதித்தனார் பங்கு அளப்பரியது. ஆம்.  ஆதித்தனார் ,

கோவிந்த்தமாள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்த இரு கல்லூரிகள் மூலம் மூன்று தலைமுறை யினர் பட்டம் 

பெற்றுள்ளனர். 


ஆண்களுக்கு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியும் , பெண்களுக்கு கோவிந்தமாள் கல்லூரி யும் உருவாக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் செயல் பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முன் இந்த இரு கோயில்களையும் கடந்து வந்து தான் சுப்ரமணியசுவாமியே தரிசிக்கலாம். 



கல்வி சேவையில் திரு. சி.பா. ஆதித்தனார் , சிவந்தி ஆதித்தனார் இவர்களின் பங்கும்  காலம் கடந்தும் அவர்கள் பெருமைகளை பறைசாற்றும்.


 #ஆதித்தனார் #கோவிந்தம்மாள் #கல்லூரி #திருச்செந்தூர்




 எங்கள் திருச்செந்தூர் முதல் அடையாளம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அதற்கு பிறகு கல்வி கோயில்கள் மூலம் சிறந்த அடையாளம் தந்ததில் சி.பா #ஆதித்தனார் பங்கு அளப்பரியது. ஆம்.  ஆதித்தனார் ,

கோவிந்த்தமாள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்த இரு கல்லூரிகள் மூலம் மூன்று தலைமுறை யினர் பட்டம் 

பெற்றுள்ளனர். 


ஆண்களுக்கு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியும் , பெண்களுக்கு கோவிந்தமாள் கல்லூரி யும் உருவாக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் செயல் பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முன் இந்த இரு கோயில்களையும் கடந்து வந்து தான் சுப்ரமணியசுவாமியே தரிசிக்கலாம். 



கல்வி சேவையில் திரு. சி.பா. ஆதித்தனார் , சிவந்தி ஆதித்தனார் இவர்களின் பங்கும்  காலம் கடந்தும் அவர்கள் பெருமைகளை பறைசாற்றும்.


 #ஆதித்தனார் #கோவிந்தம்மாள் #கல்லூரி #திருச்செந்தூர்