வெள்ளி, 7 ஜனவரி, 2022

அன்பறிவு விமர்சனம்

 அன்பறிவு விமர்சனம்


அடி, தடி  குணாதிசயங்கள் உள்ள ஒரு கதாபாத்திரம், 

பாசமாமுள்ள, பாந்தமான கதாபாத்திரம்,எங்கள் வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்  முதல் வேல் சூர்யா வரை தமிழ் சினிமா அடித்து  துவைத்த இரட்டை வேட  கதை தான் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள்  , இக்காலத்திற்கு ஏற்ற மாதிரி எடுத்துள்ளனர்.


இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அவர்களின் கல்யாணம், அதை காதலை உபயோகித்து சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவன் தன்னை அதிகாரமையமாக்கி கொள்ளும் தந்திரமுள்ள வில்லன்.


பிற்காலத்தில் அவனே சாதியை வைத்து தான் சார்ந்த மக்களை பின்னோக்கி அழைத்து செல்வது என நிகழ்கால அரசியலை தன் திரைக்கதை யால் பதியவைக்கும் இயக்குனர்க்கு சபாஷ்.


2K kid ஆஸ்தான ஹீரோ ஆதி (ஹிப்ஹாப் தமிழா) கிராமத்து சண்டியர்  கதாப்பாத்திரம், 

வெளிநாட்டில் வளரும் படித்த, பாந்தமான yo-yo boy கதாபாத்திரம் என இரு வேடங்களில் தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்கிறார்.


அம்மா-மகன் செண்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். மாஸ் & கிளாஸ் intro ஆதி க்கு பொருந்துகிறது. ரஜினி ஆரம்பித்து வைத்தது இன்றும் தொடர்கிறது.


எல்லா மனிதர்களும் சமம், ஆண்ட பெருமை பேசி (கடந்த கால) கொண்டு நிகழ் காலத்தை வீணடிக்காமல் ,  படித்து பரந்து,விரிந்த உலகை பார்த்து  உன்னோடு, உன் சார்ந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள் என்கிறான் அன்பறிவு.


அன்பறிவு - அற்புதம்

 

#AnbarivuOnHotstar 

#Anbariv 

#AnbarivuReview 

#AnbarivuFestOnJan7th 

#AnbarivuReview 

#AnbarivuOnHotstar 

#AnbarivuFestOnJan7th

 அன்பறிவு விமர்சனம்


அடி, தடி  குணாதிசயங்கள் உள்ள ஒரு கதாபாத்திரம், 

பாசமாமுள்ள, பாந்தமான கதாபாத்திரம்,எங்கள் வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்  முதல் வேல் சூர்யா வரை தமிழ் சினிமா அடித்து  துவைத்த இரட்டை வேட  கதை தான் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள்  , இக்காலத்திற்கு ஏற்ற மாதிரி எடுத்துள்ளனர்.


இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அவர்களின் கல்யாணம், அதை காதலை உபயோகித்து சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவன் தன்னை அதிகாரமையமாக்கி கொள்ளும் தந்திரமுள்ள வில்லன்.


பிற்காலத்தில் அவனே சாதியை வைத்து தான் சார்ந்த மக்களை பின்னோக்கி அழைத்து செல்வது என நிகழ்கால அரசியலை தன் திரைக்கதை யால் பதியவைக்கும் இயக்குனர்க்கு சபாஷ்.


2K kid ஆஸ்தான ஹீரோ ஆதி (ஹிப்ஹாப் தமிழா) கிராமத்து சண்டியர்  கதாப்பாத்திரம், 

வெளிநாட்டில் வளரும் படித்த, பாந்தமான yo-yo boy கதாபாத்திரம் என இரு வேடங்களில் தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்கிறார்.


அம்மா-மகன் செண்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். மாஸ் & கிளாஸ் intro ஆதி க்கு பொருந்துகிறது. ரஜினி ஆரம்பித்து வைத்தது இன்றும் தொடர்கிறது.


எல்லா மனிதர்களும் சமம், ஆண்ட பெருமை பேசி (கடந்த கால) கொண்டு நிகழ் காலத்தை வீணடிக்காமல் ,  படித்து பரந்து,விரிந்த உலகை பார்த்து  உன்னோடு, உன் சார்ந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள் என்கிறான் அன்பறிவு.


அன்பறிவு - அற்புதம்

 

#AnbarivuOnHotstar 

#Anbariv 

#AnbarivuReview 

#AnbarivuFestOnJan7th 

#AnbarivuReview 

#AnbarivuOnHotstar 

#AnbarivuFestOnJan7th

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஆர்கானிக் உணவு வகைகள்

 


ஒரு காலத்தில் நெல்  சோறு(அரிசி) சாதம்  , பால் , முட்டை, அசைவ உணவு (கோழி கறி) அனைவருக்கும் கிடைக்கவில்லை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

(காதலர் தினம் படத்தில் குணால் அப்பா கூறுவார் என்னடா படிக்கணும் ஆசை 

படற நாளைக்கு நெல்லு சோறு தின்ன ஆசை படுவ ஒழுங்கா இரு என்பார் )


பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இந்தியாவில் தலை எடுக்கும் முன் எல்லாமே ஆர்கானிக் உணவு தான்.

அதனால் தான் அரிசி சாப்பாடு பெரிய விசயமாய் கருதப்பட்டது. 


நம் அனைவருக்கும் இப்போது கிடைக்கும் அரிசி சாப்பாடாக இருக்கட்டும், அசைவ உணவாக இருக்கட்டும், இவற்றை உண்பவர்கள் சராசரி வயது அப்போது ஆர்கானிக்காக இருந்த காலத்தின் சராசரி வயதை விட இப்போது கூடுதலாகத்தானிருக்கிறது.


என் பாட்டி காலத்தில் வீட்டிற்கு சில பிள்ளைகள் இறந்து கொண்டே தான் இருக்கும். 

ஒப்பீட்டளவில் இந்த மரணம் எல்லாம் குறைந்துள்ளன.


ஆர்கானிக் என்பது இப்போதய வெற்றிகரமான வியாபாரம் மேலும்,

 மக்களிடையே ஒரு பாகுபாட்டைக் கொண்டு வரும் ஆயுதமும் ஆகும்.


அதனால் நமக்கு கிடைத்த உணவை நன்கு உண்டு இன்புற்றிருக்கலாம்.


இவண்

ராஜா.க

 


ஒரு காலத்தில் நெல்  சோறு(அரிசி) சாதம்  , பால் , முட்டை, அசைவ உணவு (கோழி கறி) அனைவருக்கும் கிடைக்கவில்லை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

(காதலர் தினம் படத்தில் குணால் அப்பா கூறுவார் என்னடா படிக்கணும் ஆசை 

படற நாளைக்கு நெல்லு சோறு தின்ன ஆசை படுவ ஒழுங்கா இரு என்பார் )


பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இந்தியாவில் தலை எடுக்கும் முன் எல்லாமே ஆர்கானிக் உணவு தான்.

அதனால் தான் அரிசி சாப்பாடு பெரிய விசயமாய் கருதப்பட்டது. 


நம் அனைவருக்கும் இப்போது கிடைக்கும் அரிசி சாப்பாடாக இருக்கட்டும், அசைவ உணவாக இருக்கட்டும், இவற்றை உண்பவர்கள் சராசரி வயது அப்போது ஆர்கானிக்காக இருந்த காலத்தின் சராசரி வயதை விட இப்போது கூடுதலாகத்தானிருக்கிறது.


என் பாட்டி காலத்தில் வீட்டிற்கு சில பிள்ளைகள் இறந்து கொண்டே தான் இருக்கும். 

ஒப்பீட்டளவில் இந்த மரணம் எல்லாம் குறைந்துள்ளன.


ஆர்கானிக் என்பது இப்போதய வெற்றிகரமான வியாபாரம் மேலும்,

 மக்களிடையே ஒரு பாகுபாட்டைக் கொண்டு வரும் ஆயுதமும் ஆகும்.


அதனால் நமக்கு கிடைத்த உணவை நன்கு உண்டு இன்புற்றிருக்கலாம்.


இவண்

ராஜா.க

வெள்ளி, 24 டிசம்பர், 2021

பாலசந்தர் நினைவுகள்

 எம்.ஜி.ஆர் , சிவாஜி black and white பட காலகட்டத்தில் கதாநாயகர்களுக்காக அல்லாமல் ஒரு 

இயக்குனர்க்காக படம் பார்த்த ஒரு தலைமுறை உருவாகியது. 


அந்த தலைமுறை யையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் தன் படைப்பால்  உலகிற்கு பதிவு செய்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அவரின் படங்களை என்னை பார்க்க தூண்டியதும் அக்கால  தலைமுறையினரே.


பாமா விஜயம், 

தாமரை நெஞ்சம்,

பூவா தலையா,

இரு கோடுகள்,

அரங்கேற்றம்,

நான் அவனில்லை,

எதிர் நீச்சல்,

நூற்றுக்கு நூறு,

அவள் ஒரு தொடர்கதை,

மன்மத லீலை,


மேலே உள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிவே போடலாம், இன்னும் நிறைய படங்கள் இந்த லிஸ்ட்டில் மிஸ்ஸிங்.


இன்றோடு அவர் மறைந்து 7 ஆண்டுகள் ஆனால் அவரின் படைப்புகள் காலத்திற்கும் அழியாதவைகள்..


#KB #Balachander


 எம்.ஜி.ஆர் , சிவாஜி black and white பட காலகட்டத்தில் கதாநாயகர்களுக்காக அல்லாமல் ஒரு 

இயக்குனர்க்காக படம் பார்த்த ஒரு தலைமுறை உருவாகியது. 


அந்த தலைமுறை யையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் தன் படைப்பால்  உலகிற்கு பதிவு செய்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அவரின் படங்களை என்னை பார்க்க தூண்டியதும் அக்கால  தலைமுறையினரே.


பாமா விஜயம், 

தாமரை நெஞ்சம்,

பூவா தலையா,

இரு கோடுகள்,

அரங்கேற்றம்,

நான் அவனில்லை,

எதிர் நீச்சல்,

நூற்றுக்கு நூறு,

அவள் ஒரு தொடர்கதை,

மன்மத லீலை,


மேலே உள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிவே போடலாம், இன்னும் நிறைய படங்கள் இந்த லிஸ்ட்டில் மிஸ்ஸிங்.


இன்றோடு அவர் மறைந்து 7 ஆண்டுகள் ஆனால் அவரின் படைப்புகள் காலத்திற்கும் அழியாதவைகள்..


#KB #Balachander


ஞாயிறு, 19 டிசம்பர், 2021

ஆயுத பூஜையும் தயிர் வடையும்

 ஆயுத பூஜையும் தயிர் வடையும்



இந்த பதிவு எழுத்தவதற்கு உதவி திருச்செந்தூர் கிருஷ்ணா டாக்கீஸ்.


பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் இந்த தியேட்டர் செல்வது வழக்கம் அப்போது பெரும்பாலும் மேட்னி  ஷோக்கு தான் செல்வோம்.

 

அர்ஜுன் நடித்த "ஆயுத பூஜை" என்று நினைக்கிறேன். அர்ஜீன் fight, கவண்டர் காமெடி, ஊர்வசி நடிப்பு, ரோஜா பாட்டு  ,  படம் அப்படின்னு போச்சு..


படத்தின் இடைவெளி முடிந்தவுடன்  நண்பன் அவசரமாக அழைத்து  தியேட்டரில் இருக்கும் கேண்டின் க்கு கூட்டி சென்றான்,  அண்ணன் தயிர் வடை இரண்டு பிளேட் என்றான்.


தயிரில் சில பல வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் சகிதம் ஆம வடை (பருப்பு வடை) ஊற வைத்திருந்தார்கள். இரன்டு பிளேட்டுகளில் வடை அது கூடவே தயிருடன் வந்தது. 


ஒரு வடை யை கையால் தொட்டவுடன் அப்படியே உதிர்ந்தது, உதிர்ந்த வடை பொறுக்குகளை தயிர் மற்றும் வெங்காயம் உதவியுடன் எடுத்து சாப்பிட பொழுது " அட,அட அட " வடை க்கும் இப்படி ஒரு சுவை உண்டோ என உணர்ந்த தருணம். பிரமாதாமாக இருந்தது..


தயிரின் புளிப்பு, மிளகாய் காரம், வெங்காயத்தின் நெடி, என அனைத்தும் சேர்ந்து  அது நாள் வரை உழந்த (மெது)வடை ரசிகனான என்னை பருப்பு வடை ப்ரியணாக்கியது.


சரி இன்னும் இரண்டு வடை கொடுங்க என்றவுடன் காலி ஆயிடுச்சு தம்பி என்றார்.

நண்பனிடம் கோப பட்டேன் ஏன் டா இவ்வளவு சூப்பரா இருக்கு அதிகம் போட்டு வைக்கலாம் என்றேன்.

நண்பனின் பதில் அதெல்லாம் அதிகம் தான் போடுவாங்க

 

11 மணி காட்சி கோஷ்டி (அண்ணன் மார்கள்)  முக்கால்வாசி வடை காலி பண்ணிடுவாங்க , அதுக்காக தான் உன்னை சீக்கிரம் அழைத்து கொண்டு வந்தேன் என்றான்.  அவனின் smart திட்டமிடல் என்னை நெகிழ செய்தது. படம் சுமாரா இருந்தாலும் வடை சூப்பராக இருந்தது.


இந்த நிகழ்வுக்கு பின் இந்த தயிர் வடைக்காகவே கிருஷ்ணா டாக்கீஸ் என்னை அழைத்தது..


கொசுறு தகவல் இந்த ஆயுத பூஜை படம் தான் பிற்காலத்தில் விஸ்வாசமாக உருவெடுத்தது.


இவண்

ராஜா.க

 ஆயுத பூஜையும் தயிர் வடையும்



இந்த பதிவு எழுத்தவதற்கு உதவி திருச்செந்தூர் கிருஷ்ணா டாக்கீஸ்.


பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் இந்த தியேட்டர் செல்வது வழக்கம் அப்போது பெரும்பாலும் மேட்னி  ஷோக்கு தான் செல்வோம்.

 

அர்ஜுன் நடித்த "ஆயுத பூஜை" என்று நினைக்கிறேன். அர்ஜீன் fight, கவண்டர் காமெடி, ஊர்வசி நடிப்பு, ரோஜா பாட்டு  ,  படம் அப்படின்னு போச்சு..


படத்தின் இடைவெளி முடிந்தவுடன்  நண்பன் அவசரமாக அழைத்து  தியேட்டரில் இருக்கும் கேண்டின் க்கு கூட்டி சென்றான்,  அண்ணன் தயிர் வடை இரண்டு பிளேட் என்றான்.


தயிரில் சில பல வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் சகிதம் ஆம வடை (பருப்பு வடை) ஊற வைத்திருந்தார்கள். இரன்டு பிளேட்டுகளில் வடை அது கூடவே தயிருடன் வந்தது. 


ஒரு வடை யை கையால் தொட்டவுடன் அப்படியே உதிர்ந்தது, உதிர்ந்த வடை பொறுக்குகளை தயிர் மற்றும் வெங்காயம் உதவியுடன் எடுத்து சாப்பிட பொழுது " அட,அட அட " வடை க்கும் இப்படி ஒரு சுவை உண்டோ என உணர்ந்த தருணம். பிரமாதாமாக இருந்தது..


தயிரின் புளிப்பு, மிளகாய் காரம், வெங்காயத்தின் நெடி, என அனைத்தும் சேர்ந்து  அது நாள் வரை உழந்த (மெது)வடை ரசிகனான என்னை பருப்பு வடை ப்ரியணாக்கியது.


சரி இன்னும் இரண்டு வடை கொடுங்க என்றவுடன் காலி ஆயிடுச்சு தம்பி என்றார்.

நண்பனிடம் கோப பட்டேன் ஏன் டா இவ்வளவு சூப்பரா இருக்கு அதிகம் போட்டு வைக்கலாம் என்றேன்.

நண்பனின் பதில் அதெல்லாம் அதிகம் தான் போடுவாங்க

 

11 மணி காட்சி கோஷ்டி (அண்ணன் மார்கள்)  முக்கால்வாசி வடை காலி பண்ணிடுவாங்க , அதுக்காக தான் உன்னை சீக்கிரம் அழைத்து கொண்டு வந்தேன் என்றான்.  அவனின் smart திட்டமிடல் என்னை நெகிழ செய்தது. படம் சுமாரா இருந்தாலும் வடை சூப்பராக இருந்தது.


இந்த நிகழ்வுக்கு பின் இந்த தயிர் வடைக்காகவே கிருஷ்ணா டாக்கீஸ் என்னை அழைத்தது..


கொசுறு தகவல் இந்த ஆயுத பூஜை படம் தான் பிற்காலத்தில் விஸ்வாசமாக உருவெடுத்தது.


இவண்

ராஜா.க

வெள்ளி, 17 டிசம்பர், 2021

மகிழ்ச்சி தரும் மார்கழி

 மகிழ்ச்சி தரும் மார்கழி


அதிகாலை ஆதவன் ☀️ வரும் முன்,

கடிகாரம் உதவியுடன் துயில் கலைந்து, நீராடி நண்பர்கள் சகிதம் "பஜனை" மாமா வீட்டில் ஒன்று கூடுவோம். அவர்கள் வீட்டில் எங்களை இன் முகத்துடன் வரவேற்று டம்ளர் தததும்ப தததும்ப நுரையுடன் தரும் பில்டர் காபியை  ☕️️ 

ருசி கண்போம்.


பனி பொழியும் பொழுதில் பஜனை புறப்படும் "முருகா சரணம்!! சரணம் முருகா !! என்று "

எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் , கோரிக்கைகள் இல்லாமல்  இறைவனை பக்தியுடன் அழைத்த பருவம் அது. 


தொடரும் எங்களின்  பஜனை வீதிகளை கடந்து இறைவன் இல்லம்(கோவில்)நோக்கி முன்னேறும்  அங்கு இறை வழிபாடு முடித்த

கையில் சூடாக நெய் சாதமும் அதற்கு துணையாக துவையலும் பிரசாதமாக கிடைக்கும் அதை உண்டு கடற்கறையில் கால் நனைத்து,ஓடி,ஆடி, விளையாடி இன்புற்ற காலம். 


சுவையான நினைவுகளை அசைபோடுகின்றேன்.

நினைவுகள் தொடரும்.. #மார்கழி !!!

 மகிழ்ச்சி தரும் மார்கழி


அதிகாலை ஆதவன் ☀️ வரும் முன்,

கடிகாரம் உதவியுடன் துயில் கலைந்து, நீராடி நண்பர்கள் சகிதம் "பஜனை" மாமா வீட்டில் ஒன்று கூடுவோம். அவர்கள் வீட்டில் எங்களை இன் முகத்துடன் வரவேற்று டம்ளர் தததும்ப தததும்ப நுரையுடன் தரும் பில்டர் காபியை  ☕️️ 

ருசி கண்போம்.


பனி பொழியும் பொழுதில் பஜனை புறப்படும் "முருகா சரணம்!! சரணம் முருகா !! என்று "

எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் , கோரிக்கைகள் இல்லாமல்  இறைவனை பக்தியுடன் அழைத்த பருவம் அது. 


தொடரும் எங்களின்  பஜனை வீதிகளை கடந்து இறைவன் இல்லம்(கோவில்)நோக்கி முன்னேறும்  அங்கு இறை வழிபாடு முடித்த

கையில் சூடாக நெய் சாதமும் அதற்கு துணையாக துவையலும் பிரசாதமாக கிடைக்கும் அதை உண்டு கடற்கறையில் கால் நனைத்து,ஓடி,ஆடி, விளையாடி இன்புற்ற காலம். 


சுவையான நினைவுகளை அசைபோடுகின்றேன்.

நினைவுகள் தொடரும்.. #மார்கழி !!!

ஞாயிறு, 28 நவம்பர், 2021

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் விமர்சனம்


 


சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் !!!


இந்த படம் பார்த்தற்கு முக்கிய காரணம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சீடர்   இயக்குனர் வசந்த் அவர்களின்  படைப்பு.


மூன்று பெண்களை பற்றிய கதை,மூன்று பெண்களும் வெல்வேறு குடும்ப சூழ்நிலை, மூன்று வெல்வேறு காலகட்டங்களில், இவை எல்லாம் வெவ்வேறு ஆனால் அப்பெண்களுக்கு  நடப்பது என்னவோ ஒன்று தான்.


1980 காலகட்டத்தில்  நடப்பது போல ஒரு கதை,

1990 காலக்கட்டத்தில் நடப்பது போல இரண்டாம் கதை,

2000  காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாம் கதை.


காலங்கள் மாறலாம், அறிவியல் மாறலாம், 

ஆனால் பெண்களை வைத்து அமைக்கப்பட்ட இந்த சமூக கட்டமைப்பு மாற வில்லை என்பதை திரைக்கதை யால் பதிய வைக்கிறார் இயக்குனர்.


இப்படி லாம் அந்த காலத்திலே  நடந்ததா ? இப்படிலாம் இன்னமுமா  நடக்குது ? அட போங்க சார் என்று கூறுபவர்கள் உங்கள் நட்பு வட்டத்தை தாண்டி மிக பெரிய உலகம் ஓன்று உள்ளது என்பதை அறிந்து கொள்க.


மூன்று பெண்களிடத்தில் உள்ள ஒரே ஒற்றுமை பெண்கள் பலமானவர்கள், உடலிலும், உள்ளத்திலும். அதனால் அந்த மூன்று பெண்கள் எதற்கும் துவளாமல் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது ஹைலைட்..


தியேட்டரில் எல்லாம் இது போன்ற படங்களை பார்க்க மாட்டார்கள் என்பதற்காக தான் OTT (sony liv)யில் வெளியிடுகிறார்கள். Technology கூட தன் பங்கிற்கு பெண்களுக்கு உதவுகிறது..

படம் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம்.. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் சற்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் உங்களுக்கான படம் அல்ல.


இவண் 

ராஜா.க



#sivaranjiyuminnumsilapengalum #movie #review


 


சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் !!!


இந்த படம் பார்த்தற்கு முக்கிய காரணம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சீடர்   இயக்குனர் வசந்த் அவர்களின்  படைப்பு.


மூன்று பெண்களை பற்றிய கதை,மூன்று பெண்களும் வெல்வேறு குடும்ப சூழ்நிலை, மூன்று வெல்வேறு காலகட்டங்களில், இவை எல்லாம் வெவ்வேறு ஆனால் அப்பெண்களுக்கு  நடப்பது என்னவோ ஒன்று தான்.


1980 காலகட்டத்தில்  நடப்பது போல ஒரு கதை,

1990 காலக்கட்டத்தில் நடப்பது போல இரண்டாம் கதை,

2000  காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாம் கதை.


காலங்கள் மாறலாம், அறிவியல் மாறலாம், 

ஆனால் பெண்களை வைத்து அமைக்கப்பட்ட இந்த சமூக கட்டமைப்பு மாற வில்லை என்பதை திரைக்கதை யால் பதிய வைக்கிறார் இயக்குனர்.


இப்படி லாம் அந்த காலத்திலே  நடந்ததா ? இப்படிலாம் இன்னமுமா  நடக்குது ? அட போங்க சார் என்று கூறுபவர்கள் உங்கள் நட்பு வட்டத்தை தாண்டி மிக பெரிய உலகம் ஓன்று உள்ளது என்பதை அறிந்து கொள்க.


மூன்று பெண்களிடத்தில் உள்ள ஒரே ஒற்றுமை பெண்கள் பலமானவர்கள், உடலிலும், உள்ளத்திலும். அதனால் அந்த மூன்று பெண்கள் எதற்கும் துவளாமல் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது ஹைலைட்..


தியேட்டரில் எல்லாம் இது போன்ற படங்களை பார்க்க மாட்டார்கள் என்பதற்காக தான் OTT (sony liv)யில் வெளியிடுகிறார்கள். Technology கூட தன் பங்கிற்கு பெண்களுக்கு உதவுகிறது..

படம் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம்.. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் சற்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் உங்களுக்கான படம் அல்ல.


இவண் 

ராஜா.க



#sivaranjiyuminnumsilapengalum #movie #review

திங்கள், 22 நவம்பர், 2021

பொன்மாணிக்கவேல் விமர்சனம்

 

ஒரு திரைப்படம் வெற்றிபெற கொஞ்சம் சுமாரான  கதை , நல்ல திரைக்கதை, இருந்தால் போதுமானது..


ஆனால் இந்த இரண்டும் இருந்தும் அதில் நடிக்கும் கதாநாயகன் சரி இல்லை என்றால், மொத்தமுமே காலியாகிடும்.


அப்படி ஒரு படம் தான் பொன்மாணிக்கவேல். வழக்கமான பழிவாங்கும்  கதை தான் ஆனாளும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் இருந்தும் என்ன பயன், கதாநாயகன் முழு படத்தை யும் தன் நடிப்பில் சொதப்பி விட்டார்.


மாஸ் கதாநாயகன் க்கு intro கொடுப்பது போல பிரபுதேவா விற்கு கொடுக்கையில் குபீர் சிரிப்பு தான் வருது.



எடிட்டர் சிறு பிழையால் யார் கொலைகாரன் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஒரே ஆறுதல் கதாநாயகன்- கதாநாயகி கெமிஸ்ட்ரி. 


பிரபுதேவா வெல்லாம் play boy பார்த்து பழகியதால் police ஆக பார்க்க இயலவில்லை..


#ponmanickavel #


review


மொத்தத்தில் சர்க்கரை பொங்கல் க்கு சாம்பார் combo இந்த பொன்மாணிக்கவேல்.



இவண்

ராஜா.க


 

ஒரு திரைப்படம் வெற்றிபெற கொஞ்சம் சுமாரான  கதை , நல்ல திரைக்கதை, இருந்தால் போதுமானது..


ஆனால் இந்த இரண்டும் இருந்தும் அதில் நடிக்கும் கதாநாயகன் சரி இல்லை என்றால், மொத்தமுமே காலியாகிடும்.


அப்படி ஒரு படம் தான் பொன்மாணிக்கவேல். வழக்கமான பழிவாங்கும்  கதை தான் ஆனாளும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் இருந்தும் என்ன பயன், கதாநாயகன் முழு படத்தை யும் தன் நடிப்பில் சொதப்பி விட்டார்.


மாஸ் கதாநாயகன் க்கு intro கொடுப்பது போல பிரபுதேவா விற்கு கொடுக்கையில் குபீர் சிரிப்பு தான் வருது.



எடிட்டர் சிறு பிழையால் யார் கொலைகாரன் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஒரே ஆறுதல் கதாநாயகன்- கதாநாயகி கெமிஸ்ட்ரி. 


பிரபுதேவா வெல்லாம் play boy பார்த்து பழகியதால் police ஆக பார்க்க இயலவில்லை..


#ponmanickavel #


review


மொத்தத்தில் சர்க்கரை பொங்கல் க்கு சாம்பார் combo இந்த பொன்மாணிக்கவேல்.



இவண்

ராஜா.க