திங்கள், 6 மே, 2019

வியட்நாம் வீடு

பொதுவாக பழைய (MGR,Sivaji) 
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு

வியட்நாம்காலனிகாமெடி என்று YouTube தேடுகையில்வியட்நாம்வீடுஎன்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொரு வரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால்வியட்நாம்வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.  
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.  

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்


மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.  

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை 
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார் 
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா. 













பொதுவாக பழைய (MGR,Sivaji) 
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு

வியட்நாம்காலனிகாமெடி என்று YouTube தேடுகையில்வியட்நாம்வீடுஎன்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொரு வரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால்வியட்நாம்வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.  
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.  

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்


மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.  

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை 
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார் 
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா. 













வெள்ளி, 12 ஏப்ரல், 2019

அஷ்டமியும்,நவமியும்

எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்

ஜெய் ஶ்ரீராம் !!!
நண்பர்களுக்கு ராம நவமி வாழ்த்துகள்
ராஜா. 


எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்

ஜெய் ஶ்ரீராம் !!!
நண்பர்களுக்கு ராம நவமி வாழ்த்துகள்
ராஜா. 


ஞாயிறு, 24 மார்ச், 2019

அஷ்டமியும்,நவமியும் !!!

எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்;

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்.

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்.

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.

ஜெய் ஶ்ரீராம் !!!
எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்;

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்.

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்.

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.

ஜெய் ஶ்ரீராம் !!!

புதன், 20 மார்ச், 2019

குல தெய்வ வழிபாடு நாள்

இன்று பங்குனி உத்திரம்

இந்நாள் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நாள். பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு வெளியே தான் இருக்கும். இக்கோயிலுனுள் இருக்கும் சிலைக்கு(கல்) உருவம் (முகம்) இருக்காது. இக் கடவுளை சாஸ்தா என்று அழைப்பார்கள்

இவ்வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபாடு எனவும் கூறலாம். அவர்கள் நினைவாக நட்ட கல்லை வணங்கி அவர்களின் ஆசியை பெறலாம். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று
குல தெய்வ வழிபாடு உன் குலத்துக்கே நல்லது !!! 

எங்களுக்கு குல தெய்வம் இவ்வூரில்  இல்லையே என நினைப்பவர்கள். நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் ஆன முருக பெருந்தகையை வணங்கி வழிபடலாம்

இவண்

ராஜா. 
இன்று பங்குனி உத்திரம்

இந்நாள் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நாள். பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு வெளியே தான் இருக்கும். இக்கோயிலுனுள் இருக்கும் சிலைக்கு(கல்) உருவம் (முகம்) இருக்காது. இக் கடவுளை சாஸ்தா என்று அழைப்பார்கள்

இவ்வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபாடு எனவும் கூறலாம். அவர்கள் நினைவாக நட்ட கல்லை வணங்கி அவர்களின் ஆசியை பெறலாம். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று
குல தெய்வ வழிபாடு உன் குலத்துக்கே நல்லது !!! 

எங்களுக்கு குல தெய்வம் இவ்வூரில்  இல்லையே என நினைப்பவர்கள். நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் ஆன முருக பெருந்தகையை வணங்கி வழிபடலாம்

இவண்

ராஜா. 

வியாழன், 14 மார்ச், 2019

காரைடையான் நோன்பு

காரைடையான் நோன்பு 

சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 

அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 

இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 

ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!


#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு 
காரைடையான் நோன்பு 

சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 

அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 

இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 

ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!


#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

எடப்பாடியார் கில்லாடி

எடப்படியார் சிறந்த அரசியல்வாதி தான்.
மத்தியில் பலமான கட்சி,
பத்தொன்பது மாநிலத்தில் ஆளும் கட்சி என மிதப்புடன் இருந்த பாஜக விற்கு 
தமிழகத்தில் வெறும் 5 தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளார். 

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்துவிடுவார்கள் அறிவித்தவுடன் மத்திய அரசு காமந்து அரசாகிவிடும். எடப்பாடியார் அரசை எதுவும் செய்ய முடியாது என்ற கணக்கு தான். 

ஒரு பழமொழி உண்டு.
கையில் வைத்திருக்கும் கம்பும் ஒடிந்துவிடக்கூடாது,
தாக்க வரும் பாம்பையும் தாக்க வேண்டும்.

எடிப்பாடி அரசு அதனை செவ்வனே செய்கிறது. 

#எடப்பாடியார் #தமிழ்நாடு
எடப்படியார் சிறந்த அரசியல்வாதி தான்.
மத்தியில் பலமான கட்சி,
பத்தொன்பது மாநிலத்தில் ஆளும் கட்சி என மிதப்புடன் இருந்த பாஜக விற்கு 
தமிழகத்தில் வெறும் 5 தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளார். 

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்துவிடுவார்கள் அறிவித்தவுடன் மத்திய அரசு காமந்து அரசாகிவிடும். எடப்பாடியார் அரசை எதுவும் செய்ய முடியாது என்ற கணக்கு தான். 

ஒரு பழமொழி உண்டு.
கையில் வைத்திருக்கும் கம்பும் ஒடிந்துவிடக்கூடாது,
தாக்க வரும் பாம்பையும் தாக்க வேண்டும்.

எடிப்பாடி அரசு அதனை செவ்வனே செய்கிறது. 

#எடப்பாடியார் #தமிழ்நாடு

திங்கள், 14 ஜனவரி, 2019

பேட்ட என் பார்வையில்

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரம் படைக்க பட்டிருந்தால் அத்திரைப்படம் விறுவிறுப்பாகவும்,சுவாரசியமாகவும்
இருக்கும்

அந்த சூட்சமத்தை அறிந்த நடிகர் ரஜினி அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அவரின் சூப்பர்,டூப்பர் ஹிட் படங்களை பார்த்தாலே அது தெரியும்.

மாப்பிள்ளையில் தொடங்கி மன்னன்,அண்ணாமலை,பாட்ஷா,
படையப்பா,சந்திரமுகி,சிவாஜி என நீளும் இந்த பட்டியல்.

எஜமான்,வீரா,அருணாச்சலம்,
உழைப்பாளி இதில் வில்லன்களுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது இவையெல்லாம் சுமார் ரகம் தான்

ரஜினி ரசிகராக சிறு சிறு விஷயங்களை பார்த்து பார்த்து reference ( ,பாம்பு பாம்பு,)
அழகாக வைத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் தடுமாறிவிட்டார். ஜித்து கதாபாத்திரத்திற்கும்,சிங்காரம் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவமே கொடுக்கவில்லை. இவர்களை பார்த்து பயம் வரவில்லை மாறாக பரிதாபமே வருகிறது

படத்தின் பலம் அனிருத்தின் பின்னனி இசை பின்னி பெடல் எடுத்துள்ளார்
த்ரிஷா,சிம்ரன்,விஜய் சேதுபதி போன்றோர் தங்கள் கலைபயணத்தில் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.  


 படத்தின் கதையில் (பாட்ஷா,கிரி,ஊர்காவலன்) சாயல்கள் தெரிந்தாலும் தன் திரைக்கதையால் (உத்திரபிரதேசம்,காதலர் தின வன்முறை,பசு மாடு,காவி கொடி) உதவியுடன் ஒட்டு போட முயல்கிறார் இயக்குனர். மிசா நடந்தது 1977 அப்பொழுது செல்போனெல்லாம் இந்தியாவில் வந்ததா?சரி ரஜினிக்காக மன்னிப்போம் மறப்போம்.  



பலமில்லாத வில்லன்,இரண்டாம் பாதியின் நீளத்திற்கு கத்திரி போட்டிருந்தால் ரஜினிக்கு இன்னொரு மணி மகுடமாக சூட்டபடவேண்டிய இந்த  பேட்ட முந்தைய மகுடத்தின் மயில் இறகாக மட்டுமே அலங்கரித்துள்ளது #பேட்ட  
ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரம் படைக்க பட்டிருந்தால் அத்திரைப்படம் விறுவிறுப்பாகவும்,சுவாரசியமாகவும்
இருக்கும்

அந்த சூட்சமத்தை அறிந்த நடிகர் ரஜினி அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அவரின் சூப்பர்,டூப்பர் ஹிட் படங்களை பார்த்தாலே அது தெரியும்.

மாப்பிள்ளையில் தொடங்கி மன்னன்,அண்ணாமலை,பாட்ஷா,
படையப்பா,சந்திரமுகி,சிவாஜி என நீளும் இந்த பட்டியல்.

எஜமான்,வீரா,அருணாச்சலம்,
உழைப்பாளி இதில் வில்லன்களுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது இவையெல்லாம் சுமார் ரகம் தான்

ரஜினி ரசிகராக சிறு சிறு விஷயங்களை பார்த்து பார்த்து reference ( ,பாம்பு பாம்பு,)
அழகாக வைத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் தடுமாறிவிட்டார். ஜித்து கதாபாத்திரத்திற்கும்,சிங்காரம் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவமே கொடுக்கவில்லை. இவர்களை பார்த்து பயம் வரவில்லை மாறாக பரிதாபமே வருகிறது

படத்தின் பலம் அனிருத்தின் பின்னனி இசை பின்னி பெடல் எடுத்துள்ளார்
த்ரிஷா,சிம்ரன்,விஜய் சேதுபதி போன்றோர் தங்கள் கலைபயணத்தில் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.  


 படத்தின் கதையில் (பாட்ஷா,கிரி,ஊர்காவலன்) சாயல்கள் தெரிந்தாலும் தன் திரைக்கதையால் (உத்திரபிரதேசம்,காதலர் தின வன்முறை,பசு மாடு,காவி கொடி) உதவியுடன் ஒட்டு போட முயல்கிறார் இயக்குனர். மிசா நடந்தது 1977 அப்பொழுது செல்போனெல்லாம் இந்தியாவில் வந்ததா?சரி ரஜினிக்காக மன்னிப்போம் மறப்போம்.  



பலமில்லாத வில்லன்,இரண்டாம் பாதியின் நீளத்திற்கு கத்திரி போட்டிருந்தால் ரஜினிக்கு இன்னொரு மணி மகுடமாக சூட்டபடவேண்டிய இந்த  பேட்ட முந்தைய மகுடத்தின் மயில் இறகாக மட்டுமே அலங்கரித்துள்ளது #பேட்ட