சில நடிகர்களை நாம் அவர்கள் நடித்த கதாபாத்திரங்களுக்காக நினைவில் வைத்திருப்போம்.
சிலரை அவர்கள் நடித்த படங்களுக்காக நினைவில் வைத்திருப்போம்.
ஆனால் சௌகார் ஜானகி போன்ற சில நடிகைகளை, அவர்கள் நடிப்பையே நினைத்துப் பார்த்து ரசிப்போம்.
எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவரான கே.பாலசந்தரின் படங்களில் சௌகார் ஜானகி ஒரு தனி presence.
எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் என்று ஒவ்வொரு படத்திலும் அவருடைய நடிப்பு ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்தக் கதாபாத்திரங்களை அவர் நடித்தார் என்று சொல்வதைவிட, அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
அவருடைய dialogue delivery மட்டும் இல்லை…
ஒரு பார்வை, ஒரு reaction, ஒரு சிறிய body language கூட அந்தக் காட்சியின் mood-ஐ மாற்றிவிடும்.
குறிப்பாக பாமா விஜயம் போன்ற படங்களில் அவருடைய timing-ஐ இன்றைய comedy scenes-ோடு compare செய்து பார்த்தாலும் ரசிக்க முடியும். அந்தக் காலத்து நடிப்பு என்பதால் மட்டும் அது பழையதாகத் தெரியாது. அதுதான் அவருடைய பெரிய பலம்.
அதே சௌகார் ஜானகியை தில்லுமுல்லு படத்தில் பார்க்கும்போது இன்னொரு surprise.
அது இரட்டை வேடம் கிடையாது. ஆனால் அவர் காட்டும் நடிப்பில், ஒரே கதாபாத்திரத்துக்குள் இரண்டு விதமான shades இருப்பது போல ஒரு feel இருக்கும்.
ரஜினிகாந்துடன் வரும் அந்த comedy portions-ல் அவருடைய expressions, timing, reaction எல்லாமே வேற லெவல். காட்சியில் அவர் பேசும் வசனத்தைவிட, அவர் கொடுக்கும் reaction-ஐ பார்த்து சிரிக்க வைக்கும் அளவுக்கு அந்த performance இருக்கும்.
அதனால்தான் சௌகார் ஜானகியின் நடிப்பை “அந்தக் காலத்து நடிப்பு” என்று மட்டும் சொல்லிவிட்டு கடந்து போக முடியாது.
இன்றைய தலைமுறை performance, screen presence, comic timing, natural acting என்று தனித்தனியாக பேசும் விஷயங்கள் எல்லாம் அவருடைய நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது.
ஒரு நடிகை அழகாக நடிக்கலாம்.
ஒரு நடிகை நன்றாக வசனம் பேசலாம்.
ஒரு நடிகை comedy செய்யலாம்.
ஆனால் ஒரே career-ல் இத்தனை விதமான கதாபாத்திரங்களையும், இத்தனை இயல்பாக carry செய்வது தான் சௌகார் ஜானகியின் தனித்துவம்.
கே.பாலசந்தரின் படங்களில் அவரைப் பார்க்கும்போதெல்லாம், “இந்தக் கதாபாத்திரத்திற்கு இவரைத் தவிர வேறு யாரை யோசித்திருக்க முடியும்?” என்ற எண்ணம் வரும்.
அதுதான் ஒரு great actor-ன் அடையாளம்.
சினிமா மாறிவிட்டது.
கதைகள் மாறிவிட்டன.
நடிப்பு style மாறிவிட்டது.
ஆனால் நல்ல நடிப்புக்கு expiry date கிடையாது.
அதனால் தான் பல வருடங்கள் கழித்தும் எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள், தில்லுமுல்லு போன்ற படங்களில் சௌகார் ஜானகியைப் பார்க்கும்போது, அவருடைய performance இன்னும் fresh-ஆகவே இருக்கிறது.
ஒரு தலைமுறை பார்த்து ரசித்த நடிகை…
இன்னொரு தலைமுறை பார்த்து வியக்க வேண்டிய நடிகை.
தமிழ் சினிமாவின் அந்த அற்புதமான நடிப்புத் தலைமுறையைச் சேர்ந்த சௌகார் ஜானகி இன்று நம்மிடையே இல்லை.
சௌகார் ஜானகி மறைந்தார்.
ஆனால் அவர் விட்டுச் சென்ற நடிப்பு — திரையில் என்றும் மறையாது. ❤️
இவன்
ராஜா . க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக