புதன், 25 ஜனவரி, 2023

கடனும் , நண்பனும்

 ரொம்ப நாளாக எழுதணும் நினைத்த த்ரெட்.

இன்று நேரம் அமைந்ததால் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது. 

" கடன்"இந்த வார்த்தை பலரின் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமான வார்த்தை.



இந்த கடனால் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள் , பழைய நண்பர்கள் விலகுவார்கள்.

ஒரு பக்கம் மகிழ்ச்சி , மறு பக்கம் துன்பம் என்று இதனால் இரண்டு வகையான உணர்வுகளையும் அதிகமாகேவே கொடுக்க வல்லது. 


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கடனுக்கும் பொருந்தும். தன் சக்தி க்கு மீறி கடன் வாங்கும் பலர் சுனாமி அலைகள் போல அடித்து சென்று கடலின் கோர பசிக்கு இறையான சான்று இன்றும் உள்ளது சிலர்  மட்டுமே கறை சேருவார்கள். 


உலகமயமாக்களின் விளைவு பெரும்பாலானோர் எங்கோ , யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள். சிலர் வெளியே தெரிந்து (தனி நபர்களிடம்) சிலர் வெளியே தெரியாமல் (வங்கிகளிடம்).  மேலே கூறியது போல நம் சக்தி க்கு மீறி கடன் வாங்கினால் இழப்பு வாங்கியவருக்கும் அவரின் சுற்றத்தாருக்கும்.


இந்த கடனால் பல நட்புகள் பரம எதிரிகளாக மாறிய வரலாறை இந்த பூமி கண்டுள்ளது. 


கடனும் நானும் : 

இன்று வரை நண்பர்களுக்கு மொபைலில் அழைத்தால் attend செய்வார்கள் , அப்போது எடுக்க முடியாமல் போனால் மறுபடியும் அழைபபார்கள். அதற்கான மிக முக்கியமான காரணம் நண்பர்களிடத்தில் பணம் வாங்கவோ கேட்டதோ கிடையாது. இதை எனக்கு உணர்த்தியதே ஒரு நண்பன் தான் , ஒரு முறை அவனிடம் நேரில் பேசி கொண்டு இருக்கையில் 



ஒரு முறை அவனிடத்தில் நேரில் பேசி கொண்டு இருக்கையில் அவனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது , பெயரை பார்த்தவுடன் நெற்றி சுருக்கி அழைப்பை எடுக்க வில்லை , ஏன் டா ? என நான் கேட்க , இவன் லாம் பணம் கேட்க தான் அழைப்பான் என்றான்.  வேணும் னா பாரேன் , திருப்பி அழைப்பு வந்தது.



நண்பன் விஜய் போன்று இப்போ உனக்கு live demo கொடுக்கறேன் என்று சொல்லி அந்த அழைப்பை எடுத்து பேசினான் ,speaker போட்டு விட்டான். அவன் கூறிய படி கடன் தான் கேட்டான்.நாளை க்கு பேசறேன் இப்போ driving இருக்கேன் என்று அழைப்பை துண்டித்தான் சிரித்து கொண்டே என்னை பார்த்து demo ஓகே வா என்றான்.



ஏன் டா இவனுக்கு கொடுக்க விருப்பமில்லையா என நான் கேட்க ; இவனுக்கு இதற்கு முன் கொடுத்த பணத்தையே தரவில்லை , உனக்காக தான் call attend பண்ணினேன் என்றான் casual ஆக. அப்போது தான் எனக்கு புரிந்தது பாடம் கடன் வாங்கினால் நட்பு என்ன செய்யும் என்று 🤔 engineering இதெல்லாம் சொல்லி தரவில்லை.



மேற்கூறிய இரு நபர்களும் கல்லூரியில் அவ்வளவு நெருக்கம்.  ஆம் கல்லூரி கால வாழ்க்கை வேறு , கல்லூரி பிறகு வாழ்க்கை வேறு. இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது ஒன்று தான் நண்பர்கள் இடத்தில் கடன் வாங்க கூடாது என்று. நாம் ஒரு கொள்கை யில் இருக்க முயன்றால்  அதில்


 குஷ்பு போல சின்ன , சின்ன movement கூடிய dance ஆட காலம் நினைக்கும் அதை விதி என்றும் கூறலாம். ஒரு property வாங்குவதற்கு Bank லோன் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. வடிவேலு சொல்வது போல எல்லாம் பிளான் பண்ணினாலும் திடிரென்று 1 இலட்சம் துண்டு விழுந்தது.


என்ன செய்ய என்று யோசித்து சரி இதில் என்ன ஈகோ என அப்பா விடம் கேட்க , அவரோ சிரித்து கொண்டே தருகிறேன் ஆனால் உனக்கு ஒரு பாடம் ; ஏதோ கூறுவாயே உன் நட்பு , நட்பு என்று ,சும்மா அவர்களிடம் கேள் நீ யார் என்று அவர்கள் உனக்கு உணர்த்துவார்கள் என்று.



சூரியன் படத்தில் கவண்டர் மகான் கூறுவது போல " சத்ய சோதனை " என்று கூறி கொண்டு , யாரிடம் கேட்க ? எப்படி கேட்க என இரவு முழுவதும் யோசனை , அவன் என்ன நினைப்பான் , இவன் என்ன நினைப்பான் என ஏகப்பட்ட திரைக்கதை கண் முன் ஓடியது.



நமக்கென்று நாலு பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஒவ்வொரு நபரிடமும் 25 ஆயிரம் என முடிவு செய்து. முதலில் அழைத்தது" Haja " மறுமுனையில் சொல்லுடா என கூற சற்று தயங்கி பிறகு ஏதோ ஒரு தைரியத்தில் பேச; எவ்வளவு வேணும் என கேட்க என் plan சொல்ல அரை மணி நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறி விட்டான்.


ஏகபட்ட கேள்வி கேட்டு கொண்டேன் , நாம் கேட்டது சரியா / தவறா என்று. சரி இன்றைக்கு இது போதும் எதுவாகினும் நாளை மற்றவர்கள் இடத்தில் பேசி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டேன். அடுத்த 15 நிமிடத்தில் sms வந்தது பார்த்து சற்று அதிர்ச்சி ஆனேன்.



ஆம் 1 இலட்சம் credited to tour account என்ற குறுந்தகவல் மிகப்பெரிய மகிழ்ச்சி யை கொடுத்தது. அவனும் நானும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தோம் , சொல்ல போனால் அவனை பார்த்து தான் அந்த வங்கியில் கணக்கை தொடங்கினேன் அது ஒரு சுவராஸ்யமான சம்பவம் அதை வேறு த்ரெட்டில் எழுதுகிறேன்.



நண்பனிடம் நன்றி கூற அழைத்த போது " சரிடா யப்பா போதும் " என்று கூறி call ஐ cut செய்தான். தந்தை யிடம் சவாலில் வெற்றி பெறுவது சின்ன சங்கடம் தான் என்றாலும் அவர் சிரித்து கொண்டே உனக்கு இப்போது தான் பொறுப்பு கூடியுள்ளது . கவனமாக இரு என்று ஒரு சின்ன எச்சரிக்கை அதில் அர்த்தம் இருந்தது.



அந்த கடனை அடுத்த 10 நாட்களில் கொடுத்து விட்டேன் , அதன் பிறகு முடிந்த வரை நண்பர்கள் இடத்தில் கடன் வாங்குவது இல்லை. வழியே இல்லாத நிலையில் credit card என்கிற பிரம்மாஸ்திரம் எடுத்து கொள்வேன். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை உருவாகும்.



முடிந்த வரை கடன் வாங்காமல் ஓட முயற்சி செய்வோம் நட்பு வட்டத்தை பெருக்கி கொள்வோம். 

#கடன் #நண்பன் #credit #loan #loans #personalloan #homeloan

இவன்

ராஜா.க 










 ரொம்ப நாளாக எழுதணும் நினைத்த த்ரெட்.

இன்று நேரம் அமைந்ததால் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது. 

" கடன்"இந்த வார்த்தை பலரின் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமான வார்த்தை.



இந்த கடனால் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள் , பழைய நண்பர்கள் விலகுவார்கள்.

ஒரு பக்கம் மகிழ்ச்சி , மறு பக்கம் துன்பம் என்று இதனால் இரண்டு வகையான உணர்வுகளையும் அதிகமாகேவே கொடுக்க வல்லது. 


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கடனுக்கும் பொருந்தும். தன் சக்தி க்கு மீறி கடன் வாங்கும் பலர் சுனாமி அலைகள் போல அடித்து சென்று கடலின் கோர பசிக்கு இறையான சான்று இன்றும் உள்ளது சிலர்  மட்டுமே கறை சேருவார்கள். 


உலகமயமாக்களின் விளைவு பெரும்பாலானோர் எங்கோ , யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள். சிலர் வெளியே தெரிந்து (தனி நபர்களிடம்) சிலர் வெளியே தெரியாமல் (வங்கிகளிடம்).  மேலே கூறியது போல நம் சக்தி க்கு மீறி கடன் வாங்கினால் இழப்பு வாங்கியவருக்கும் அவரின் சுற்றத்தாருக்கும்.


இந்த கடனால் பல நட்புகள் பரம எதிரிகளாக மாறிய வரலாறை இந்த பூமி கண்டுள்ளது. 


கடனும் நானும் : 

இன்று வரை நண்பர்களுக்கு மொபைலில் அழைத்தால் attend செய்வார்கள் , அப்போது எடுக்க முடியாமல் போனால் மறுபடியும் அழைபபார்கள். அதற்கான மிக முக்கியமான காரணம் நண்பர்களிடத்தில் பணம் வாங்கவோ கேட்டதோ கிடையாது. இதை எனக்கு உணர்த்தியதே ஒரு நண்பன் தான் , ஒரு முறை அவனிடம் நேரில் பேசி கொண்டு இருக்கையில் 



ஒரு முறை அவனிடத்தில் நேரில் பேசி கொண்டு இருக்கையில் அவனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது , பெயரை பார்த்தவுடன் நெற்றி சுருக்கி அழைப்பை எடுக்க வில்லை , ஏன் டா ? என நான் கேட்க , இவன் லாம் பணம் கேட்க தான் அழைப்பான் என்றான்.  வேணும் னா பாரேன் , திருப்பி அழைப்பு வந்தது.



நண்பன் விஜய் போன்று இப்போ உனக்கு live demo கொடுக்கறேன் என்று சொல்லி அந்த அழைப்பை எடுத்து பேசினான் ,speaker போட்டு விட்டான். அவன் கூறிய படி கடன் தான் கேட்டான்.நாளை க்கு பேசறேன் இப்போ driving இருக்கேன் என்று அழைப்பை துண்டித்தான் சிரித்து கொண்டே என்னை பார்த்து demo ஓகே வா என்றான்.



ஏன் டா இவனுக்கு கொடுக்க விருப்பமில்லையா என நான் கேட்க ; இவனுக்கு இதற்கு முன் கொடுத்த பணத்தையே தரவில்லை , உனக்காக தான் call attend பண்ணினேன் என்றான் casual ஆக. அப்போது தான் எனக்கு புரிந்தது பாடம் கடன் வாங்கினால் நட்பு என்ன செய்யும் என்று 🤔 engineering இதெல்லாம் சொல்லி தரவில்லை.



மேற்கூறிய இரு நபர்களும் கல்லூரியில் அவ்வளவு நெருக்கம்.  ஆம் கல்லூரி கால வாழ்க்கை வேறு , கல்லூரி பிறகு வாழ்க்கை வேறு. இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது ஒன்று தான் நண்பர்கள் இடத்தில் கடன் வாங்க கூடாது என்று. நாம் ஒரு கொள்கை யில் இருக்க முயன்றால்  அதில்


 குஷ்பு போல சின்ன , சின்ன movement கூடிய dance ஆட காலம் நினைக்கும் அதை விதி என்றும் கூறலாம். ஒரு property வாங்குவதற்கு Bank லோன் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. வடிவேலு சொல்வது போல எல்லாம் பிளான் பண்ணினாலும் திடிரென்று 1 இலட்சம் துண்டு விழுந்தது.


என்ன செய்ய என்று யோசித்து சரி இதில் என்ன ஈகோ என அப்பா விடம் கேட்க , அவரோ சிரித்து கொண்டே தருகிறேன் ஆனால் உனக்கு ஒரு பாடம் ; ஏதோ கூறுவாயே உன் நட்பு , நட்பு என்று ,சும்மா அவர்களிடம் கேள் நீ யார் என்று அவர்கள் உனக்கு உணர்த்துவார்கள் என்று.



சூரியன் படத்தில் கவண்டர் மகான் கூறுவது போல " சத்ய சோதனை " என்று கூறி கொண்டு , யாரிடம் கேட்க ? எப்படி கேட்க என இரவு முழுவதும் யோசனை , அவன் என்ன நினைப்பான் , இவன் என்ன நினைப்பான் என ஏகப்பட்ட திரைக்கதை கண் முன் ஓடியது.



நமக்கென்று நாலு பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஒவ்வொரு நபரிடமும் 25 ஆயிரம் என முடிவு செய்து. முதலில் அழைத்தது" Haja " மறுமுனையில் சொல்லுடா என கூற சற்று தயங்கி பிறகு ஏதோ ஒரு தைரியத்தில் பேச; எவ்வளவு வேணும் என கேட்க என் plan சொல்ல அரை மணி நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறி விட்டான்.


ஏகபட்ட கேள்வி கேட்டு கொண்டேன் , நாம் கேட்டது சரியா / தவறா என்று. சரி இன்றைக்கு இது போதும் எதுவாகினும் நாளை மற்றவர்கள் இடத்தில் பேசி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டேன். அடுத்த 15 நிமிடத்தில் sms வந்தது பார்த்து சற்று அதிர்ச்சி ஆனேன்.



ஆம் 1 இலட்சம் credited to tour account என்ற குறுந்தகவல் மிகப்பெரிய மகிழ்ச்சி யை கொடுத்தது. அவனும் நானும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தோம் , சொல்ல போனால் அவனை பார்த்து தான் அந்த வங்கியில் கணக்கை தொடங்கினேன் அது ஒரு சுவராஸ்யமான சம்பவம் அதை வேறு த்ரெட்டில் எழுதுகிறேன்.



நண்பனிடம் நன்றி கூற அழைத்த போது " சரிடா யப்பா போதும் " என்று கூறி call ஐ cut செய்தான். தந்தை யிடம் சவாலில் வெற்றி பெறுவது சின்ன சங்கடம் தான் என்றாலும் அவர் சிரித்து கொண்டே உனக்கு இப்போது தான் பொறுப்பு கூடியுள்ளது . கவனமாக இரு என்று ஒரு சின்ன எச்சரிக்கை அதில் அர்த்தம் இருந்தது.



அந்த கடனை அடுத்த 10 நாட்களில் கொடுத்து விட்டேன் , அதன் பிறகு முடிந்த வரை நண்பர்கள் இடத்தில் கடன் வாங்குவது இல்லை. வழியே இல்லாத நிலையில் credit card என்கிற பிரம்மாஸ்திரம் எடுத்து கொள்வேன். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை உருவாகும்.



முடிந்த வரை கடன் வாங்காமல் ஓட முயற்சி செய்வோம் நட்பு வட்டத்தை பெருக்கி கொள்வோம். 

#கடன் #நண்பன் #credit #loan #loans #personalloan #homeloan

இவன்

ராஜா.க 










சனி, 14 ஜனவரி, 2023

துணிவு திரைவிமர்சனம்

 நடிகர்கள் தங்கள் நடித்து வெளி வரும் படங்களில் சமுதாயத்திற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பது அறம் சார்ந்தது அதை பெரும்பாலானோர் செய்ய தவறினாலும் சிலர் தயங்காமல் செய்கின்றனர்.



தனக்கான ஒரு பெருங்கூட்டம் இருப்பது தெரிந்ததால் தான் என்னவோ ,  அவர்களுக்கு தன்னால் முடிந்த அறிவுறையை திரையின் வாயிலாக கூற இயலும் நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். 



அஜித்குமார் , மஞ்சுவாரியர் , சமுத்திரகனி , பக்ஸ் ,இன்னும் பலர் நடித்து , ஜிப்ரான் இசையில் , H.வினோத் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு  திரைக்கு வந்துள்ள படம் துணிவு. 



நகரத்தின் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை கொள்ளையர்கள் கொள்ள அடிக்க முயல்கிறார்கள் அவர்கள் எண்ணம் நிறைவேறியதா ? அந்த வங்கியின் பின்னணி என்ன ? வங்கியில் உள்ள மக்களை எப்படி அரசு காக்க முயலும் என்பதை சமகால நிகழ்வுகளோடு சுவார்ஸமாக சொல்லி வென்று விட்டார் படத்தின் இயக்குனர் வினோத்.



கொள்ளையர்களிடமிருந்து வங்கியில் உள்ள பிணைய கைதிகளை காப்பாற்ற முயலும்  அஜீத்தை கைதட்டி வரவேற்கும் மக்களிடம் சிரித்து கொண்டே நானும் கொள்ளையடிக்கத்தான் வந்துள்ளேன் என்று கூறி அமர்க்களமான ஆரம்ப காட்சி முதல் No Guts No Glory என்று கூறி இறுதி காட்சி வரை அஜீத் தன் கொடி பறக்க விடுகிறார் திரைப்படம் முழுவதும்.



சென்னை கமிஷனராக சமுத்திரகனி கனகச்சிதமாக பொருந்துகிறார் , குறிப்பாக கமெண்டோ chief இடம் இது வடக்கு அல்ல தமிழ்நாடு என்று கூறுகையில் தன்னை அறியாமல் கைதட்டல் சத்தம் இடுகிறார்கள்.


வெள்ளித்திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் மோகன சுந்தரம் (மை பா ) பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்கிறார் பக்ஸ் (போலீஸ் அதிகாரி )உடன் அவரின் பேரம் கலந்த journalism சிரிப்பு க்கு உத்தரவாதம்  நடப்பு journalism கண் முன் நிறுத்துகிறார்கள் இருவரும். 



வெளியில் நடப்பதை வேவு பார்த்து அஜித் க்கு உதவியாக சொல்லப்போனால் வலதுகரமாக இருந்து படம் முழுவதும் stylish  பயணிக்கிறார் கண்மணி என்கிற

மஞ்சு வாரியர்.  


சில்லா , சில்லா என்ற பாடலில் ஜிப்ரான் இசை , வைசாக் வரிகள் , அனிருத் குரலில் இன்றைய ரசிகர்களை ஆட வைக்கிறது ,  பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நிரவ்ஷா வின் கேமரா ஒவ்வொரு frame ம் கண்களுக்கு விருந்து , வங்கியை அவ்வளவு லாவகமாக எடுந்திருந்தார் , சண்டை காட்சிகளில் அவ்வளவு தத்ரூபம். 



முதல் பாதி முழுக்க அஜித் தின் ஆட்டம் , இரண்டாம் பாதியில் இயக்குனர் வலுவான திரைக்கதையால் வலு சேர்கிறார் வங்கிகளின் அத்துமீறல் , share market , mutual fund உள்ள அப்தங்களின் தோலுரித்து காட்டுகிறார். பொது மக்களுக்குள்ள பொறுப்பை உணர அறிவுறுத்துகிறார். 


துணிவு - அஜித்தின் துள்ளல். 


இவண்

ராஜா.க 



 நடிகர்கள் தங்கள் நடித்து வெளி வரும் படங்களில் சமுதாயத்திற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பது அறம் சார்ந்தது அதை பெரும்பாலானோர் செய்ய தவறினாலும் சிலர் தயங்காமல் செய்கின்றனர்.



தனக்கான ஒரு பெருங்கூட்டம் இருப்பது தெரிந்ததால் தான் என்னவோ ,  அவர்களுக்கு தன்னால் முடிந்த அறிவுறையை திரையின் வாயிலாக கூற இயலும் நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். 



அஜித்குமார் , மஞ்சுவாரியர் , சமுத்திரகனி , பக்ஸ் ,இன்னும் பலர் நடித்து , ஜிப்ரான் இசையில் , H.வினோத் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு  திரைக்கு வந்துள்ள படம் துணிவு. 



நகரத்தின் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை கொள்ளையர்கள் கொள்ள அடிக்க முயல்கிறார்கள் அவர்கள் எண்ணம் நிறைவேறியதா ? அந்த வங்கியின் பின்னணி என்ன ? வங்கியில் உள்ள மக்களை எப்படி அரசு காக்க முயலும் என்பதை சமகால நிகழ்வுகளோடு சுவார்ஸமாக சொல்லி வென்று விட்டார் படத்தின் இயக்குனர் வினோத்.



கொள்ளையர்களிடமிருந்து வங்கியில் உள்ள பிணைய கைதிகளை காப்பாற்ற முயலும்  அஜீத்தை கைதட்டி வரவேற்கும் மக்களிடம் சிரித்து கொண்டே நானும் கொள்ளையடிக்கத்தான் வந்துள்ளேன் என்று கூறி அமர்க்களமான ஆரம்ப காட்சி முதல் No Guts No Glory என்று கூறி இறுதி காட்சி வரை அஜீத் தன் கொடி பறக்க விடுகிறார் திரைப்படம் முழுவதும்.



சென்னை கமிஷனராக சமுத்திரகனி கனகச்சிதமாக பொருந்துகிறார் , குறிப்பாக கமெண்டோ chief இடம் இது வடக்கு அல்ல தமிழ்நாடு என்று கூறுகையில் தன்னை அறியாமல் கைதட்டல் சத்தம் இடுகிறார்கள்.


வெள்ளித்திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் மோகன சுந்தரம் (மை பா ) பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்கிறார் பக்ஸ் (போலீஸ் அதிகாரி )உடன் அவரின் பேரம் கலந்த journalism சிரிப்பு க்கு உத்தரவாதம்  நடப்பு journalism கண் முன் நிறுத்துகிறார்கள் இருவரும். 



வெளியில் நடப்பதை வேவு பார்த்து அஜித் க்கு உதவியாக சொல்லப்போனால் வலதுகரமாக இருந்து படம் முழுவதும் stylish  பயணிக்கிறார் கண்மணி என்கிற

மஞ்சு வாரியர்.  


சில்லா , சில்லா என்ற பாடலில் ஜிப்ரான் இசை , வைசாக் வரிகள் , அனிருத் குரலில் இன்றைய ரசிகர்களை ஆட வைக்கிறது ,  பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நிரவ்ஷா வின் கேமரா ஒவ்வொரு frame ம் கண்களுக்கு விருந்து , வங்கியை அவ்வளவு லாவகமாக எடுந்திருந்தார் , சண்டை காட்சிகளில் அவ்வளவு தத்ரூபம். 



முதல் பாதி முழுக்க அஜித் தின் ஆட்டம் , இரண்டாம் பாதியில் இயக்குனர் வலுவான திரைக்கதையால் வலு சேர்கிறார் வங்கிகளின் அத்துமீறல் , share market , mutual fund உள்ள அப்தங்களின் தோலுரித்து காட்டுகிறார். பொது மக்களுக்குள்ள பொறுப்பை உணர அறிவுறுத்துகிறார். 


துணிவு - அஜித்தின் துள்ளல். 


இவண்

ராஜா.க 



வெள்ளி, 6 ஜனவரி, 2023

குழந்தை தனம் !!

 உங்களுக்குள் இருக்கும் குழந்தையை தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.!-ஜாக்கி சான். இதை படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்று , சின்ன வயதில் சில விஷயங்களை பண்ணும் போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் , திரும்ப திரும்ப பண்ண தோணும் , but நம்மால் பண்ண முடியாது.


அப்படி ஒரு பழக்கம் தான் lift இல் (பயணிப்பது) செல்வது , மேலும் செல்வோம் , மறுபடியும் கீழே இறங்கி வருவோம். ஆனால் சின்ன பசங்க என்பதால் அனுமதிப்பதில்லை. இன்று மேலே ஜாக்கிசான் கூறிய quote படித்தவுடன் lift இல் பயணிக்க தொடங்கினேன். என்னுடைய 7th floor வந்ததும் lift வெளியே வரமாமல்


Ground floor பட்டனை அழத்தினேன். எனக்குள்ளே சிரித்து கொண்டேன். நம்மை யாரும் இப்போது திட்ட மாட்டார்கள் , ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க மாட்டராகள். இருந்தாலும் என் மகிழ்ச்சி க்கு இரண்டு முறை மேல் நோக்கி சென்று கீழ் நோக்கி வந்தேன். ஆம் ஜாக்கிசான் கூறியது உண்மை தான்.


நமக்குள் இருக்கும் குழந்தை யை தொலையாமல் பார்த்த் கொள்ள வேண்டும்.

நன்றி ஜாக்கிசான் 😀😀😀

#குழந்தை #நினைவுகள்

 உங்களுக்குள் இருக்கும் குழந்தையை தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.!-ஜாக்கி சான். இதை படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்று , சின்ன வயதில் சில விஷயங்களை பண்ணும் போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் , திரும்ப திரும்ப பண்ண தோணும் , but நம்மால் பண்ண முடியாது.


அப்படி ஒரு பழக்கம் தான் lift இல் (பயணிப்பது) செல்வது , மேலும் செல்வோம் , மறுபடியும் கீழே இறங்கி வருவோம். ஆனால் சின்ன பசங்க என்பதால் அனுமதிப்பதில்லை. இன்று மேலே ஜாக்கிசான் கூறிய quote படித்தவுடன் lift இல் பயணிக்க தொடங்கினேன். என்னுடைய 7th floor வந்ததும் lift வெளியே வரமாமல்


Ground floor பட்டனை அழத்தினேன். எனக்குள்ளே சிரித்து கொண்டேன். நம்மை யாரும் இப்போது திட்ட மாட்டார்கள் , ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க மாட்டராகள். இருந்தாலும் என் மகிழ்ச்சி க்கு இரண்டு முறை மேல் நோக்கி சென்று கீழ் நோக்கி வந்தேன். ஆம் ஜாக்கிசான் கூறியது உண்மை தான்.


நமக்குள் இருக்கும் குழந்தை யை தொலையாமல் பார்த்த் கொள்ள வேண்டும்.

நன்றி ஜாக்கிசான் 😀😀😀

#குழந்தை #நினைவுகள்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

திருச்செந்தூரின் அடையாளம் !!

 எங்கள் திருச்செந்தூர் முதல் அடையாளம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அதற்கு பிறகு கல்வி கோயில்கள் மூலம் சிறந்த அடையாளம் தந்ததில் சி.பா #ஆதித்தனார் பங்கு அளப்பரியது. ஆம்.  ஆதித்தனார் ,

கோவிந்த்தமாள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்த இரு கல்லூரிகள் மூலம் மூன்று தலைமுறை யினர் பட்டம் 

பெற்றுள்ளனர். 


ஆண்களுக்கு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியும் , பெண்களுக்கு கோவிந்தமாள் கல்லூரி யும் உருவாக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் செயல் பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முன் இந்த இரு கோயில்களையும் கடந்து வந்து தான் சுப்ரமணியசுவாமியே தரிசிக்கலாம். 



கல்வி சேவையில் திரு. சி.பா. ஆதித்தனார் , சிவந்தி ஆதித்தனார் இவர்களின் பங்கும்  காலம் கடந்தும் அவர்கள் பெருமைகளை பறைசாற்றும்.


 #ஆதித்தனார் #கோவிந்தம்மாள் #கல்லூரி #திருச்செந்தூர்




 எங்கள் திருச்செந்தூர் முதல் அடையாளம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அதற்கு பிறகு கல்வி கோயில்கள் மூலம் சிறந்த அடையாளம் தந்ததில் சி.பா #ஆதித்தனார் பங்கு அளப்பரியது. ஆம்.  ஆதித்தனார் ,

கோவிந்த்தமாள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்த இரு கல்லூரிகள் மூலம் மூன்று தலைமுறை யினர் பட்டம் 

பெற்றுள்ளனர். 


ஆண்களுக்கு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியும் , பெண்களுக்கு கோவிந்தமாள் கல்லூரி யும் உருவாக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் செயல் பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முன் இந்த இரு கோயில்களையும் கடந்து வந்து தான் சுப்ரமணியசுவாமியே தரிசிக்கலாம். 



கல்வி சேவையில் திரு. சி.பா. ஆதித்தனார் , சிவந்தி ஆதித்தனார் இவர்களின் பங்கும்  காலம் கடந்தும் அவர்கள் பெருமைகளை பறைசாற்றும்.


 #ஆதித்தனார் #கோவிந்தம்மாள் #கல்லூரி #திருச்செந்தூர்




செவ்வாய், 22 நவம்பர், 2022

மேடைவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலை

 சில நாட்களுக்கு முன் நடந்தது.


வழக்கமாக செல்லும் office Bus இல் ,  நானும் என் நண்பரும் செல்கையில் அன்று ஏனோ அனைத்து சீட் களும் நிரம்பியது , காலை trip என்பதால் வேறு சில நிறுத்தங்களிலும் driver நிறுத்தியதால் நான்கைந்து நபர்கள் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது. 



ஒரு சிலரோ அடுத்த பஸ் ஸ்டாப்பிங் இறங்கி வேறு பஸ்சில்  ஏறி கொள்வர் இவர்கள் ஏனோ செய்யவில்லை. 5 பேரில் இருவர் எங்கள் சீட் அருகே நின்று கொண்டிருந்தனர் ,இருவரும் பெண்கள். அன்று மேடைவாக்கம்-சோழிங்கநல்லூர் செம ட்ராபிக். 




வெகு நேரமாக பேருந்து நகரவில்லை , அதில் ஒரு பெண்ணால் நிற்க முடியவில்லை என்பது பட்டுவர்த்தனமாக தெரிந்தது.  என் நண்பரை பார்த்தேன் , அடுத்த கனமே தெரிந்து விட்டது நான் என்ன செய்ய போகிறேன் என்று இருவரும் எழுந்து விட்டோம் அவர்களை அமர சொன்னோம். 


It's ok no problem என்ற வார்த்தைகள் , அட உட்காருங்க ஜீ என்றவுடன் இருவரும் அமர்ந்தனர்.  நானும் , என் நண்பரும் நின்று கொண்டு driver play பண்ணின இசை மழையில் மிதக்க என் நண்பர் என்னை எரிக்கும் பார்வையில் பார்த்தார். 


இனிமேல் உங்களை நான் பக்கத்தில் உட்கார வைக்க மாட்டேன் என்றார் , தலைவரே விடுங்க ladies , செண்டிமெண்ட் அப்படி என்று இழுத்தேன். இங்கே இந்த பஸ் எத்தனை பெண்கள் உள்ளனர் அவர்கள் இடம் கொடுத்தார்களா என்ற போது என்னிடம் பதில் இல்லை .  வருங்காலங்களில் மாறும் என்று நம்பிக்கையோடு பயணிப்போம். 


#officebus #omr #chennaitraffic #trafficupdate #Travel #womens

இவன்

ராஜா.க

 சில நாட்களுக்கு முன் நடந்தது.


வழக்கமாக செல்லும் office Bus இல் ,  நானும் என் நண்பரும் செல்கையில் அன்று ஏனோ அனைத்து சீட் களும் நிரம்பியது , காலை trip என்பதால் வேறு சில நிறுத்தங்களிலும் driver நிறுத்தியதால் நான்கைந்து நபர்கள் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது. 



ஒரு சிலரோ அடுத்த பஸ் ஸ்டாப்பிங் இறங்கி வேறு பஸ்சில்  ஏறி கொள்வர் இவர்கள் ஏனோ செய்யவில்லை. 5 பேரில் இருவர் எங்கள் சீட் அருகே நின்று கொண்டிருந்தனர் ,இருவரும் பெண்கள். அன்று மேடைவாக்கம்-சோழிங்கநல்லூர் செம ட்ராபிக். 




வெகு நேரமாக பேருந்து நகரவில்லை , அதில் ஒரு பெண்ணால் நிற்க முடியவில்லை என்பது பட்டுவர்த்தனமாக தெரிந்தது.  என் நண்பரை பார்த்தேன் , அடுத்த கனமே தெரிந்து விட்டது நான் என்ன செய்ய போகிறேன் என்று இருவரும் எழுந்து விட்டோம் அவர்களை அமர சொன்னோம். 


It's ok no problem என்ற வார்த்தைகள் , அட உட்காருங்க ஜீ என்றவுடன் இருவரும் அமர்ந்தனர்.  நானும் , என் நண்பரும் நின்று கொண்டு driver play பண்ணின இசை மழையில் மிதக்க என் நண்பர் என்னை எரிக்கும் பார்வையில் பார்த்தார். 


இனிமேல் உங்களை நான் பக்கத்தில் உட்கார வைக்க மாட்டேன் என்றார் , தலைவரே விடுங்க ladies , செண்டிமெண்ட் அப்படி என்று இழுத்தேன். இங்கே இந்த பஸ் எத்தனை பெண்கள் உள்ளனர் அவர்கள் இடம் கொடுத்தார்களா என்ற போது என்னிடம் பதில் இல்லை .  வருங்காலங்களில் மாறும் என்று நம்பிக்கையோடு பயணிப்போம். 


#officebus #omr #chennaitraffic #trafficupdate #Travel #womens

இவன்

ராஜா.க

திங்கள், 14 நவம்பர், 2022

காந்தாரா என் பார்வையில் !!

 மனிதன் தான் கடவுள் , கடவுள் தான் மனிதன். கடவுள் மனிதனிடம் , 

தான் கூறியதை நிறைவேற்றியதை போல நீ கூறியதை நிறைவேற்று என கூறி தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பறினார் கடவுள் என்பது தான் காந்தாரா..



மலை வாழ் மக்கள் அவர்களுக்கு என ஒரு கடவுள் , அந்த கடவுள் என்னோடு வர வேண்டும் என ராஜா ஒருவர் கேட்க ? அதற்கு அந்த கடவுள, என் மக்களுக்கு என்ன என்ன கொடுப்பாய் என பதிலுக்கு கேட்க ? தனக்கு சொந்தமான இந்த நிலங்களை தருகிறேன் என கூறுகிறார்.



பேராசை கொண்ட மனிதன் தானே , ராஜாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் கொடுத்த இடத்தை கேட்கிறார்கள்.

 எப்படி கடவுள் ?(மனிதர்கள் ,கோ , அரசு) காப்பாற்றினார் என்பதை சுவாரஸ்யமான திரைகதையால் 

படம் முழுக்க அந்த கிராம மக்களுடன் வாழும் உணர்வை பெருகிறோம். 


கமல் கூறுவார் சினிமாவே ஒரு மொழி தானே அந்த மாதிரி (கன்னடம் , துளு) என்று சில இடங்களில் பேசினாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது , கன்னட மக்களின் விளையாட்டு , அவர்கள் சாமி கும்பிடும் முறை அனைத்தும் தமிழ்நாடு மக்களோடு ஒத்துப்போகும் படியாக உள்ளதால் என்னவோ படத்தோடு ஒண்றிக்கொள்ள முடிகிறது.



இறை நம்பிக்கை உள்ளவர்கள் படம் பார்க்கும் போது அவர்களின் சிறு வயதில் கேட்ட கதைகள் பார்த்த மனிதர்கள் கதாப்பாத்திரமாக வருவார்கள். இறுதி காட்சி எல்லாம் மெய் சிலிர்த்து போகும் அளவுக்கான நடிப்பு , கடவுளின் உடல் மொழி கிராமத்து மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைத்திருப்பது மயிர்கூச்சரியும் காட்சி (goosebumps). படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது படத்தின் தாக்கம் சிறுது நேரம் இருக்க வேண்டும் இருந்தது.



கொசுறு தகவல்:  Night Show பார்த்துவிட்டு பைக்கில் செல்கையில் 7 எட்டு நாய்கள் அருகில் செல்கையில் காந்தார மாதிரி ஓஓஓஓஓஓம்ம்ம் என்றேன் நாய்கள் தெறிந்து ஓடியது 😲😀😂





#Kantara #Kantaramovie 

இவன்

ராஜா க


 மனிதன் தான் கடவுள் , கடவுள் தான் மனிதன். கடவுள் மனிதனிடம் , 

தான் கூறியதை நிறைவேற்றியதை போல நீ கூறியதை நிறைவேற்று என கூறி தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பறினார் கடவுள் என்பது தான் காந்தாரா..



மலை வாழ் மக்கள் அவர்களுக்கு என ஒரு கடவுள் , அந்த கடவுள் என்னோடு வர வேண்டும் என ராஜா ஒருவர் கேட்க ? அதற்கு அந்த கடவுள, என் மக்களுக்கு என்ன என்ன கொடுப்பாய் என பதிலுக்கு கேட்க ? தனக்கு சொந்தமான இந்த நிலங்களை தருகிறேன் என கூறுகிறார்.



பேராசை கொண்ட மனிதன் தானே , ராஜாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் கொடுத்த இடத்தை கேட்கிறார்கள்.

 எப்படி கடவுள் ?(மனிதர்கள் ,கோ , அரசு) காப்பாற்றினார் என்பதை சுவாரஸ்யமான திரைகதையால் 

படம் முழுக்க அந்த கிராம மக்களுடன் வாழும் உணர்வை பெருகிறோம். 


கமல் கூறுவார் சினிமாவே ஒரு மொழி தானே அந்த மாதிரி (கன்னடம் , துளு) என்று சில இடங்களில் பேசினாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது , கன்னட மக்களின் விளையாட்டு , அவர்கள் சாமி கும்பிடும் முறை அனைத்தும் தமிழ்நாடு மக்களோடு ஒத்துப்போகும் படியாக உள்ளதால் என்னவோ படத்தோடு ஒண்றிக்கொள்ள முடிகிறது.



இறை நம்பிக்கை உள்ளவர்கள் படம் பார்க்கும் போது அவர்களின் சிறு வயதில் கேட்ட கதைகள் பார்த்த மனிதர்கள் கதாப்பாத்திரமாக வருவார்கள். இறுதி காட்சி எல்லாம் மெய் சிலிர்த்து போகும் அளவுக்கான நடிப்பு , கடவுளின் உடல் மொழி கிராமத்து மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைத்திருப்பது மயிர்கூச்சரியும் காட்சி (goosebumps). படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது படத்தின் தாக்கம் சிறுது நேரம் இருக்க வேண்டும் இருந்தது.



கொசுறு தகவல்:  Night Show பார்த்துவிட்டு பைக்கில் செல்கையில் 7 எட்டு நாய்கள் அருகில் செல்கையில் காந்தார மாதிரி ஓஓஓஓஓஓம்ம்ம் என்றேன் நாய்கள் தெறிந்து ஓடியது 😲😀😂





#Kantara #Kantaramovie 

இவன்

ராஜா க


சனி, 12 நவம்பர், 2022

குடிகாரருடன் ஒரு பயணம் !!

 இந்த மாதிரி கதை எழுத எனக்கு inspiration @Sollakudatham இவரை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறோம் என்று கூறிவிட்டு கதைக்கு செல்வோம்.

திட்டமிடா பயணம் என்பதால் இரயில் டிக்கெட் கிடைக்கவில்லை @redBus_in உதவியுடன் ticket book செய்கையில் individual sleeper சீட் , double sleeper சீட் இரண்டும் இருந்தது. 


இரண்டு seat க்கும் 75₹ வித்யாசம் தான்.

இந்த ரூபாயை மிச்சம் பிடித்து தான் ஊரப்பாகத்தில் அரை ground இடம் வாங்க போறோம் என்ற நினைப்பு அதனால் double  sleeper சீட் தான் புக் பண்ணியாச்சு.


உடன்குடி யிலிருந்து பஸ் கிழம்பும் போது நடத்துனர் call பண்ணி அண்ணே கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க என்றார். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ்க்காகலாம் சூனா , பானா காத்திருக்க வேண்டி இருக்கு என்ற insta ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த பொழுது பஸ் வந்தது.



Busஇல் எனக்கான சீட்டில் கால் நீட்டி உடகார்ந்த போது பக்கத்து சீட் பேர்வழி வரல , இதுக்கு அப்புறம் வருவார் போலனு நினைத்து கொண்டே,  charging point வேலை செய்யுதா செக் பண்ணிட்டு மல்லாக்கா படுத்து கொண்டு வானில் நட்சத்திரங்களோடு , நகர  தொடங்கியது பயணம். தூத்துக்குடி வந்தாயிற்று.



வழக்கமாக நிற்கும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் கடையில் பிடித்த பொறிச்ச புரோட்டா வும் இட்லி வாங்கி கொண்டு சீட்டுக்கு வந்தேன் , பஸ் கிழம்பியது பக்கத்து சீட்டு க்கு ஆள் வரவில்லை சின்ன சந்தோஷம். PS-1 பார்த்து கொண்டே டின்னர் முடித்து விட்டு படமும் ஓடியது.



பஸ் மதுரை நெருங்க தூக்கமும் எட்டி பார்த்தது. இன்னும் என்னடா படம் தூங்கு என்ற range இல் double seat comfortable தூங்கியாச்சு. 

தூங்கா நகரம் (மதுரை) வந்தது , என் தூக்கத்தை கெடுக்கும் இம்சை யும் கூடவே வர போகிறது என்று எனக்கு அப்போ தெரியல.



பக்கத்து சீட் பேர்வழி மதுரை யில் ஏறினார் , சோகம் என்னன்னா படி வழியா அவரால எற முடியல அந்த அளவுக்கு மது வோடு இணக்கம் போல , இணைந்த கைகள் ஹீரோனு நினைப்பு எனக்கு அவரின் கையை  பிடித்து சீட்டில் அமர்ந்தார். ரொம்ப thanks பாஸ் என்றார் , பரவாயில்லை என்றேன்.


சாப்பிட நினைத்து அவர் கொண்டு வந்த பார்சலை ஓப்பன் செய்தார் ,பரோட்டா வை பிச்சு போட்டு குருமாவை எடுத்தார் , ஆண்டவன் முடிச்சை விட கடைக்காரர்கள் தான் கற்று கொண்ட மொத்த வித்தை யையும் காட்டி கஷ்டமான முடிச்சு போட்டுருப்பார் போல , அண்ணே கொஞ்சம் பிரிச்சி கொடுங்க என்றார். 



சரி பொறுமையா

அந்த ரப்பர் பேண்டை கழட்டி கொடுத்தேன் , சோகம் என்னன்னா நமக்கு இந்த மாதிரி நடக்கும் போது எரிச்சல் வரும் அடுத்தவர்களுக்கு என்று வரும் போது பொறுமை யா கை ஆள்வோம் அது தான் டிசைன் போல. இந்த உதவிக்கும் ரொம்ப thanks அண்ணே என்றார். அட இருக்கட்டும் என்றேன்.



தூங்க தொடங்கினேன். பக்கத்து சீட் பேர்வழி சாப்பிட்டு விட்டு போனில் சத்தமாக பேச தொடங்கினார் , ரைட்டு இன்று நம் தூக்கம் அவ்ளோ தான் போல என்று நினைத்தேன். பேசி முடித்து விட்டு lover  அண்ணே , புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறா என்னை என்று காதல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான் அந்த தம்பி.



அடேய் போதும் டா , என்னை தூங்கவிடு தம்பி என்று மனதுக்குள் சொல்லி கொண்டேன். அழ ஆரம்பித்தான் ஒரு வழியா மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி விட்டு அப்படியே தூங்கி விட்டார் அந்த குடிகாரர் தம்பி. இந்த மாதிரி காலேஜ் days என் நண்பர்கள் செய்வது ஏன் நினைவுக்கு வந்தது.



காதல் இன்னும் இவ்வுலகில் உயிர்ப்போடு உள்ளது தான் போல அதை நினைத்து கொண்டு ,  சிரித்து கொண்டே தூங்க தொடங்கினேன். திடீரென ஒரு சத்தம் , ஆம் குறட்டை சத்தம் , தம்பி பயங்கரமா குறட்டை விட்டு கொண்டே அவரின் கைகளை என் மீது போட்டார் , அவரின் கைகளை தள்ளி விட்டேன்.



ஆனால் குறட்டை சத்தம் தொடர்ந்து ஒலித்தது. எனக்கு தூக்கம் எல்லாம் பல கிலோமீட்டர் க்கு அப்பால் சென்று விட்டது. இனிமேல் இந்த மாதிரி சீட் புக் பண்ணுவ என எனக்கு நானே கேட்டு கொண்டேன். ஒரு வழியா தூங்கி எழுகையில் கூடுவாஞ்செரி அருகில் பஸ் சென்றது.


சுதாரித்து எழுந்து கொண்டு பக்கத்து சீட் தம்பியை எழுப்பினேன் ,  அவர் எழுந்து அண்ணே ரொம்ப thanks என்றார் சிரித்து கொண்டே வண்டலூர் இறங்கி கொண்டேன். காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் இன்னும் மாறவில்லை. கதைகள் தொடரும் ..


#travel  #Travelexperience #journey 

இவண் 

ராஜா. க


 இந்த மாதிரி கதை எழுத எனக்கு inspiration @Sollakudatham இவரை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறோம் என்று கூறிவிட்டு கதைக்கு செல்வோம்.

திட்டமிடா பயணம் என்பதால் இரயில் டிக்கெட் கிடைக்கவில்லை @redBus_in உதவியுடன் ticket book செய்கையில் individual sleeper சீட் , double sleeper சீட் இரண்டும் இருந்தது. 


இரண்டு seat க்கும் 75₹ வித்யாசம் தான்.

இந்த ரூபாயை மிச்சம் பிடித்து தான் ஊரப்பாகத்தில் அரை ground இடம் வாங்க போறோம் என்ற நினைப்பு அதனால் double  sleeper சீட் தான் புக் பண்ணியாச்சு.


உடன்குடி யிலிருந்து பஸ் கிழம்பும் போது நடத்துனர் call பண்ணி அண்ணே கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க என்றார். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ்க்காகலாம் சூனா , பானா காத்திருக்க வேண்டி இருக்கு என்ற insta ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த பொழுது பஸ் வந்தது.



Busஇல் எனக்கான சீட்டில் கால் நீட்டி உடகார்ந்த போது பக்கத்து சீட் பேர்வழி வரல , இதுக்கு அப்புறம் வருவார் போலனு நினைத்து கொண்டே,  charging point வேலை செய்யுதா செக் பண்ணிட்டு மல்லாக்கா படுத்து கொண்டு வானில் நட்சத்திரங்களோடு , நகர  தொடங்கியது பயணம். தூத்துக்குடி வந்தாயிற்று.



வழக்கமாக நிற்கும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் கடையில் பிடித்த பொறிச்ச புரோட்டா வும் இட்லி வாங்கி கொண்டு சீட்டுக்கு வந்தேன் , பஸ் கிழம்பியது பக்கத்து சீட்டு க்கு ஆள் வரவில்லை சின்ன சந்தோஷம். PS-1 பார்த்து கொண்டே டின்னர் முடித்து விட்டு படமும் ஓடியது.



பஸ் மதுரை நெருங்க தூக்கமும் எட்டி பார்த்தது. இன்னும் என்னடா படம் தூங்கு என்ற range இல் double seat comfortable தூங்கியாச்சு. 

தூங்கா நகரம் (மதுரை) வந்தது , என் தூக்கத்தை கெடுக்கும் இம்சை யும் கூடவே வர போகிறது என்று எனக்கு அப்போ தெரியல.



பக்கத்து சீட் பேர்வழி மதுரை யில் ஏறினார் , சோகம் என்னன்னா படி வழியா அவரால எற முடியல அந்த அளவுக்கு மது வோடு இணக்கம் போல , இணைந்த கைகள் ஹீரோனு நினைப்பு எனக்கு அவரின் கையை  பிடித்து சீட்டில் அமர்ந்தார். ரொம்ப thanks பாஸ் என்றார் , பரவாயில்லை என்றேன்.


சாப்பிட நினைத்து அவர் கொண்டு வந்த பார்சலை ஓப்பன் செய்தார் ,பரோட்டா வை பிச்சு போட்டு குருமாவை எடுத்தார் , ஆண்டவன் முடிச்சை விட கடைக்காரர்கள் தான் கற்று கொண்ட மொத்த வித்தை யையும் காட்டி கஷ்டமான முடிச்சு போட்டுருப்பார் போல , அண்ணே கொஞ்சம் பிரிச்சி கொடுங்க என்றார். 



சரி பொறுமையா

அந்த ரப்பர் பேண்டை கழட்டி கொடுத்தேன் , சோகம் என்னன்னா நமக்கு இந்த மாதிரி நடக்கும் போது எரிச்சல் வரும் அடுத்தவர்களுக்கு என்று வரும் போது பொறுமை யா கை ஆள்வோம் அது தான் டிசைன் போல. இந்த உதவிக்கும் ரொம்ப thanks அண்ணே என்றார். அட இருக்கட்டும் என்றேன்.



தூங்க தொடங்கினேன். பக்கத்து சீட் பேர்வழி சாப்பிட்டு விட்டு போனில் சத்தமாக பேச தொடங்கினார் , ரைட்டு இன்று நம் தூக்கம் அவ்ளோ தான் போல என்று நினைத்தேன். பேசி முடித்து விட்டு lover  அண்ணே , புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறா என்னை என்று காதல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான் அந்த தம்பி.



அடேய் போதும் டா , என்னை தூங்கவிடு தம்பி என்று மனதுக்குள் சொல்லி கொண்டேன். அழ ஆரம்பித்தான் ஒரு வழியா மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி விட்டு அப்படியே தூங்கி விட்டார் அந்த குடிகாரர் தம்பி. இந்த மாதிரி காலேஜ் days என் நண்பர்கள் செய்வது ஏன் நினைவுக்கு வந்தது.



காதல் இன்னும் இவ்வுலகில் உயிர்ப்போடு உள்ளது தான் போல அதை நினைத்து கொண்டு ,  சிரித்து கொண்டே தூங்க தொடங்கினேன். திடீரென ஒரு சத்தம் , ஆம் குறட்டை சத்தம் , தம்பி பயங்கரமா குறட்டை விட்டு கொண்டே அவரின் கைகளை என் மீது போட்டார் , அவரின் கைகளை தள்ளி விட்டேன்.



ஆனால் குறட்டை சத்தம் தொடர்ந்து ஒலித்தது. எனக்கு தூக்கம் எல்லாம் பல கிலோமீட்டர் க்கு அப்பால் சென்று விட்டது. இனிமேல் இந்த மாதிரி சீட் புக் பண்ணுவ என எனக்கு நானே கேட்டு கொண்டேன். ஒரு வழியா தூங்கி எழுகையில் கூடுவாஞ்செரி அருகில் பஸ் சென்றது.


சுதாரித்து எழுந்து கொண்டு பக்கத்து சீட் தம்பியை எழுப்பினேன் ,  அவர் எழுந்து அண்ணே ரொம்ப thanks என்றார் சிரித்து கொண்டே வண்டலூர் இறங்கி கொண்டேன். காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் இன்னும் மாறவில்லை. கதைகள் தொடரும் ..


#travel  #Travelexperience #journey 

இவண் 

ராஜா. க