ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

எனக்கு பிடித்த பாடல்

 எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

முதல்வன் திரைப்படத்தில் வரும்

 " குருக்கு சிறுத்தவளே " பாடல். இன்று வரை அடிக்கடி முனுமுனுக்கும் பாடலும் கூட.


பஞ்ச பூதங்களில் (நீர்,நிலம்,காற்று, நெருப்பு, ஆகாயம்) நடப்பது போல் இப்பாடல் படமாக்க பட்டிருக்கும்.

கேமரா மேன் மற்றும் இயக்குனர்  ஷங்கர் ரொம்பவே மெனக்கிட்டுருப்பார்கள். 


மனசு கொஞ்சம் கனமாக இருக்கையில் இந்த பாடலை 

கேட்கையில் ரொம்ப லேசாகி விடும். அப்படி ஒரு அருமையான மெலடி பாடல். 


இப்பாடல் புல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கும். 


இப்பாடல் உருவாக காரணமானவர்கள் தாய், தந்தை(இசை, வரிகள்)யாக    ரஹமான்,வைரமுத்துவும்.  


பாடல் வரிகள் கிராமத்து பெண்ணை மனதில் வைத்து எழுதியிருப்பார் வைரமுத்து.

 (பெண்: கம்பசங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்திரியே, 

ஆண்: மஞ்சள் தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே, 

உம்போல சிவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல ) 


ரகுமான் இசை அப்படியே நம்மை மெய்மறக்க செய்யும் குறிப்பாக புல்லாங்குழல் தனித்துவமாக தெரியும். இசை வாத்தியங்கள் நம்மை தாலாட்டு  modeக்கு கொண்டு செல்லும்.


இப்பாடலுக்கு தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார் 

பாடகர் ஹரிஹரன். (குறிப்பாக குங்குமத்தில் கரைச்சவளே என்பதில் ஒரு அழத்தம் கொடுப்பார் ) மனுஷன் ரசிச்சு பாடியிருப்பார். இன்று வரை முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வுக்கு அக்குரல் முக்கிய காரணம்..


இப்பாடல் ஒரு குழந்தையை போன்றது எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.


இவன்

ராஜா.க

 எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

முதல்வன் திரைப்படத்தில் வரும்

 " குருக்கு சிறுத்தவளே " பாடல். இன்று வரை அடிக்கடி முனுமுனுக்கும் பாடலும் கூட.


பஞ்ச பூதங்களில் (நீர்,நிலம்,காற்று, நெருப்பு, ஆகாயம்) நடப்பது போல் இப்பாடல் படமாக்க பட்டிருக்கும்.

கேமரா மேன் மற்றும் இயக்குனர்  ஷங்கர் ரொம்பவே மெனக்கிட்டுருப்பார்கள். 


மனசு கொஞ்சம் கனமாக இருக்கையில் இந்த பாடலை 

கேட்கையில் ரொம்ப லேசாகி விடும். அப்படி ஒரு அருமையான மெலடி பாடல். 


இப்பாடல் புல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கும். 


இப்பாடல் உருவாக காரணமானவர்கள் தாய், தந்தை(இசை, வரிகள்)யாக    ரஹமான்,வைரமுத்துவும்.  


பாடல் வரிகள் கிராமத்து பெண்ணை மனதில் வைத்து எழுதியிருப்பார் வைரமுத்து.

 (பெண்: கம்பசங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்திரியே, 

ஆண்: மஞ்சள் தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே, 

உம்போல சிவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல ) 


ரகுமான் இசை அப்படியே நம்மை மெய்மறக்க செய்யும் குறிப்பாக புல்லாங்குழல் தனித்துவமாக தெரியும். இசை வாத்தியங்கள் நம்மை தாலாட்டு  modeக்கு கொண்டு செல்லும்.


இப்பாடலுக்கு தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார் 

பாடகர் ஹரிஹரன். (குறிப்பாக குங்குமத்தில் கரைச்சவளே என்பதில் ஒரு அழத்தம் கொடுப்பார் ) மனுஷன் ரசிச்சு பாடியிருப்பார். இன்று வரை முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வுக்கு அக்குரல் முக்கிய காரணம்..


இப்பாடல் ஒரு குழந்தையை போன்றது எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.


இவன்

ராஜா.க

புதன், 19 ஆகஸ்ட், 2020

ஏழைத்தாயின் மகள்

 கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா. 


தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,

சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..


வடிவேலு இல்லாமல் தவித்த 

தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம். 


அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.    


பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன் 

 என்ற  #KolamaavuKokila

 கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா. 


தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,

சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..


வடிவேலு இல்லாமல் தவித்த 

தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம். 


அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.    


பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன் 

 என்ற  #KolamaavuKokila

புதன், 12 ஆகஸ்ட், 2020

ப்யார்,ப்ரேமா,காதலுடன்

 படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..


தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..


கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல; 


மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன், 

ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ? 


Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற் 

கொண்டு.


அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு 

கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.


ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ? 


எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு 

செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.


இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.


அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;


இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.


ப்யார்,ப்ரேமா,காதலுடன்

ராஜா.க

 படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..


தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..


கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல; 


மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன், 

ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ? 


Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற் 

கொண்டு.


அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு 

கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.


ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ? 


எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு 

செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.


இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.


அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;


இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.


ப்யார்,ப்ரேமா,காதலுடன்

ராஜா.க

செவ்வாய், 28 ஜூலை, 2020

சாப்பிட போலாம் வாங்க

சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று,
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்,
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்)

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது
“காசி விநாயகா மெஸ்”

சுவையுடன்
ராஜா.க


சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று,
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்,
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்)

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது
“காசி விநாயகா மெஸ்”

சுவையுடன்
ராஜா.க


ஞாயிறு, 12 ஜூலை, 2020

கள்ளிகாட்டு கவிஞனே !!!

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”
முதல் காதலில் தோற்றவனுக்கு அது
தான் கடைசி “தோல்வி”

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின் ‘அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து

இவண்
ராஜா.க
முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”
முதல் காதலில் தோற்றவனுக்கு அது
தான் கடைசி “தோல்வி”

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின் ‘அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து

இவண்
ராஜா.க

புதன், 8 ஜூலை, 2020

தமிழ் சினிமாவின் துரோணர்

ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.

 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல.

நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,
லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,
சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....

யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....
ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.

 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல.

நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,
லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,
சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....

யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....

பழைய குற்றாலம்

பழைய குற்றாலம் வரலாறு

வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.இந்த முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று..

சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.

இவண்
ராஜா.க
பழைய குற்றாலம் வரலாறு

வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.இந்த முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று..

சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.

இவண்
ராஜா.க