வியாழன், 28 டிசம்பர், 2017

குரு” பார்வையால் கூட்டணி மாற்றமா ?


“குரு” பார்வையால் கூட்டணி மாற்றமா ?

சமீபத்திய நிகழ்வுகள் 2G case தீர்ப்பு,
RK nagar ல் தினகரன் வெற்றி,
தமிழக முதலவ்ர் மற்றும் துனை முதல்வரை பற்றி auditor குருமூர்த்தியின் அநாகரிக ட்வீட் விமர்சனம் impotent.

இம்மூன்று நிகழ்வுகளும் எதேச்சையாகவோ , திட்டமிட்டோ நடந்த சம்பவங்களாக இருப்பினும் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் கூட்டணி மாற்றத்திற்கான சமிக்ஞை யாகவே தெரிகிறது.

ஆடிட்டர் குரு மூர்த்தி என்ன தான் அந்த (impotent)வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் வலுத்த கண்டணத்துக்குரியது.

2014 பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் திரு.சல்மான் குர்ஷித் இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல்வரையும் இதே வார்த்தையை பிரயோக படுத்துகையில் ஓட்டு மொத்த பாஜக வும்  கொந்தளித்தது விளைவு மன்னிப்பு கோரினார் அது அரசியல் நாகரீகம்.

இன்று அதே போன்ற சம்பவம் தட்டி கேட்க வேண்டியர்வர்கள் திரு.மன்மோகன் சிங் mode ல் உள்ளனர். பிரதான எதிர்கட்சி தலைவர் கட்சி வேறுபாடு கலைந்து குரல் கொடுத்திருந்தால் அவரின் மதிப்பு கூடியிருக்கும் அதுவும் மிஸ்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள், சூரியனின் பார்வை தாமரை மீது விழுவது போல் உள்ளது.

அப்படி விழுவதற்கான சரியான நேரமும் தருணமும் இதுவல்ல, என்பது என் போன்ற அரசியலை பார்த்து கொண்டிருக்கும் குழந்தைக்கு தெரிந்தது எப்படி கோபாலபுரத்திற்கு தெரியாமல் இருக்கிறது என்பது வியப்பாக உள்ளது.

வடிவேலுவின் காமெடி ஓன்றில் அவரை அனைவரும் அடிப்பார்கள் ஏனேன்று கேட்கையில் வார்டன் என்றால் அடிப்போம் என்பார்கள். அது போன்று இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்தால் சென்ற முறை சட்டமன்ற தேர்தலில் செய்த அதே தவறை (காங்கிரஸ் கூட்டணி ) செய்வதற்கு சமம்.

சூரியன் தன் பார்வையை தாமரை மீது செலுத்துமா ? பிரிந்த இலைகள் சேர்ந்து  கையுடன் கை கோர்க்குமா ?

காலத்துடன் பயணிப்போம்
ராஜா.க

“குரு” பார்வையால் கூட்டணி மாற்றமா ?

சமீபத்திய நிகழ்வுகள் 2G case தீர்ப்பு,
RK nagar ல் தினகரன் வெற்றி,
தமிழக முதலவ்ர் மற்றும் துனை முதல்வரை பற்றி auditor குருமூர்த்தியின் அநாகரிக ட்வீட் விமர்சனம் impotent.

இம்மூன்று நிகழ்வுகளும் எதேச்சையாகவோ , திட்டமிட்டோ நடந்த சம்பவங்களாக இருப்பினும் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் கூட்டணி மாற்றத்திற்கான சமிக்ஞை யாகவே தெரிகிறது.

ஆடிட்டர் குரு மூர்த்தி என்ன தான் அந்த (impotent)வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் வலுத்த கண்டணத்துக்குரியது.

2014 பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் திரு.சல்மான் குர்ஷித் இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல்வரையும் இதே வார்த்தையை பிரயோக படுத்துகையில் ஓட்டு மொத்த பாஜக வும்  கொந்தளித்தது விளைவு மன்னிப்பு கோரினார் அது அரசியல் நாகரீகம்.

இன்று அதே போன்ற சம்பவம் தட்டி கேட்க வேண்டியர்வர்கள் திரு.மன்மோகன் சிங் mode ல் உள்ளனர். பிரதான எதிர்கட்சி தலைவர் கட்சி வேறுபாடு கலைந்து குரல் கொடுத்திருந்தால் அவரின் மதிப்பு கூடியிருக்கும் அதுவும் மிஸ்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள், சூரியனின் பார்வை தாமரை மீது விழுவது போல் உள்ளது.

அப்படி விழுவதற்கான சரியான நேரமும் தருணமும் இதுவல்ல, என்பது என் போன்ற அரசியலை பார்த்து கொண்டிருக்கும் குழந்தைக்கு தெரிந்தது எப்படி கோபாலபுரத்திற்கு தெரியாமல் இருக்கிறது என்பது வியப்பாக உள்ளது.

வடிவேலுவின் காமெடி ஓன்றில் அவரை அனைவரும் அடிப்பார்கள் ஏனேன்று கேட்கையில் வார்டன் என்றால் அடிப்போம் என்பார்கள். அது போன்று இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்தால் சென்ற முறை சட்டமன்ற தேர்தலில் செய்த அதே தவறை (காங்கிரஸ் கூட்டணி ) செய்வதற்கு சமம்.

சூரியன் தன் பார்வையை தாமரை மீது செலுத்துமா ? பிரிந்த இலைகள் சேர்ந்து  கையுடன் கை கோர்க்குமா ?

காலத்துடன் பயணிப்போம்
ராஜா.க

சனி, 9 டிசம்பர், 2017

சத்யா என் பார்வையில் !!!


முன்னாள் காதலிக்கு உதவ  நினைக்கும் கதா நாயகன் வெற்றி பெற்றனா ?
என்பதை விறு விறுப்பான திரைக்கதை கொண்டு வெற்றியடைய வைத்துவிட்டார்கள்.

மகா நடிகனின் மகனான சிபிராஜ்க்கு சொல்லி கொள்ளும் படியான திரைப்படம்.

மகளாக,காதலியாக,அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் ரம்யா நம்பிசன்.

சீரியசனா,சிரிப்பு போலிசாக கலந்து கட்டி அசல்ட்டாக நடிக்கிறார் ஆனந்தராஜ்.

வரலெட்சுமி கதாபாத்திரம் கனகட்சிதம்.

சிறிது நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கும் யோகி பாபு.

கலாசார்த்தை சிதைத்து த்ரிலிங் க்ளைமாக்ஸ் சிறு நெருடல்.

#சத்யா

முன்னாள் காதலிக்கு உதவ  நினைக்கும் கதா நாயகன் வெற்றி பெற்றனா ?
என்பதை விறு விறுப்பான திரைக்கதை கொண்டு வெற்றியடைய வைத்துவிட்டார்கள்.

மகா நடிகனின் மகனான சிபிராஜ்க்கு சொல்லி கொள்ளும் படியான திரைப்படம்.

மகளாக,காதலியாக,அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் ரம்யா நம்பிசன்.

சீரியசனா,சிரிப்பு போலிசாக கலந்து கட்டி அசல்ட்டாக நடிக்கிறார் ஆனந்தராஜ்.

வரலெட்சுமி கதாபாத்திரம் கனகட்சிதம்.

சிறிது நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கும் யோகி பாபு.

கலாசார்த்தை சிதைத்து த்ரிலிங் க்ளைமாக்ஸ் சிறு நெருடல்.

#சத்யா

செவ்வாய், 5 டிசம்பர், 2017

தொட்டு தொடரும் பாரம்பரியமா ???

தொட்டு தொடரும் பாரம்பரியமா ???


அகில இந்தியா தேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுபேற்க  உள்ள  திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்

இன்று இந்தியாவை உலக அரங்கில் 
ஜனநாயக நாடாக தலை நிமிர செய்ததில் காங்கிரஸின் பங்கு இன்றியமையாதது.
அக்கட்சியின் மத சார்பின்மை கொள்கை, சிறுபான்மை மக்களின் நலன் பேணுதல் அதன் மணிமகுடத்தில் ஒருவைரக்கல்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்கலால் நேரு அக்கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ள வில்லை.
அகதிகளாக இந்தியா வந்த பார்சிகள்,யூதர்கள்,திபெத்தியர்கள் என அனைவரையும் அன்புடன் வரவேற்று  அடைக்கலம் கொடுத்த அற்புத பூமி

இத்தகைய பெருமைகள் கொண்ட இக்கட்சியின் தலைமை பண்பும்,
இந்திய நாட்டின் உச்ச பட்ச 
அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியும் 
ஒரு குடும்பத்தில் உள்ள ஓருவருக்கே வாழையடி வாழையாக கிடைப்பது சிறிது மன்னராட்சியை நினைவுபடுத்தினாலும் ஆச்சர்யபட ஏதேதுமில்லை!!! 

நேரு தொடங்கி அவரின் மகள் திருமதி.இந்திரா அவரின் மகன் 
அமரர் திரு.ராஜிவ் அவரின் மகன்
திரு.ராகுல் என தொடர்கிறது

அக்கட்சி வரலாற்றை படிக்கையில் அதீத திறமை உள்ள நபர்களுக்கு பஞ்சம் இல்லை. திரு.வல்லபாய் படேலில் தொடங்கி, திரு.லால் பகதூர் சாஸ்திரி,திரு.காமராஜ்,
திரு.மன்மோகன் சிங்,பா.சிதம்பரம்,திரு.ராஜசேகர ரெட்டி இவர்கள் தம் தம் துறையில் சாதித்தாலும் முழுதான தலைமை பண்பை அடையவில்லை என்பதே நிதர்சன உண்மை.

நாட்டின் மற்றொரு கட்சியான பா.. இதில் சிறிது வேறு பட்டுள்ளது. தலைமையும் சரி,பிரதமர் பதவியும் சரி கட்சியிலும் மக்கள் மன்றத்திலும் தன் திறமையை நிருபித்தால் தனி அங்கிகாரம் கிடைக்கிறது

காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்கையில்
காங்கிரஸ் மட்டும் என்ன 
விதிவிலக்கா என்ன !!! 

காலத்துடன் பயணிப்போம்
ராஜா. 



தொட்டு தொடரும் பாரம்பரியமா ???


அகில இந்தியா தேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுபேற்க  உள்ள  திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்

இன்று இந்தியாவை உலக அரங்கில் 
ஜனநாயக நாடாக தலை நிமிர செய்ததில் காங்கிரஸின் பங்கு இன்றியமையாதது.
அக்கட்சியின் மத சார்பின்மை கொள்கை, சிறுபான்மை மக்களின் நலன் பேணுதல் அதன் மணிமகுடத்தில் ஒருவைரக்கல்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்கலால் நேரு அக்கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ள வில்லை.
அகதிகளாக இந்தியா வந்த பார்சிகள்,யூதர்கள்,திபெத்தியர்கள் என அனைவரையும் அன்புடன் வரவேற்று  அடைக்கலம் கொடுத்த அற்புத பூமி

இத்தகைய பெருமைகள் கொண்ட இக்கட்சியின் தலைமை பண்பும்,
இந்திய நாட்டின் உச்ச பட்ச 
அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியும் 
ஒரு குடும்பத்தில் உள்ள ஓருவருக்கே வாழையடி வாழையாக கிடைப்பது சிறிது மன்னராட்சியை நினைவுபடுத்தினாலும் ஆச்சர்யபட ஏதேதுமில்லை!!! 

நேரு தொடங்கி அவரின் மகள் திருமதி.இந்திரா அவரின் மகன் 
அமரர் திரு.ராஜிவ் அவரின் மகன்
திரு.ராகுல் என தொடர்கிறது

அக்கட்சி வரலாற்றை படிக்கையில் அதீத திறமை உள்ள நபர்களுக்கு பஞ்சம் இல்லை. திரு.வல்லபாய் படேலில் தொடங்கி, திரு.லால் பகதூர் சாஸ்திரி,திரு.காமராஜ்,
திரு.மன்மோகன் சிங்,பா.சிதம்பரம்,திரு.ராஜசேகர ரெட்டி இவர்கள் தம் தம் துறையில் சாதித்தாலும் முழுதான தலைமை பண்பை அடையவில்லை என்பதே நிதர்சன உண்மை.

நாட்டின் மற்றொரு கட்சியான பா.. இதில் சிறிது வேறு பட்டுள்ளது. தலைமையும் சரி,பிரதமர் பதவியும் சரி கட்சியிலும் மக்கள் மன்றத்திலும் தன் திறமையை நிருபித்தால் தனி அங்கிகாரம் கிடைக்கிறது

காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்கையில்
காங்கிரஸ் மட்டும் என்ன 
விதிவிலக்கா என்ன !!! 

காலத்துடன் பயணிப்போம்
ராஜா. 



வெள்ளி, 24 நவம்பர், 2017

திருப்பதிக்கு போலாம் வாங்க ?



திருப்பதிக்கு போலாம் வாங்க!

திருப்பதிக்கு சென்றோம் என்ற சொன்னவுடன் நம்மை நோக்கி அடுத்த வரும் கேள்வி:

எவ்வளவு நேரம் ஆகிறது?

எத்தனை கூண்டுக்குள் அடைத்தார்கள்?

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, திருப்பதி தேவஸ்தானம் தனது தரிசன முறைகளில் பல மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பக்தர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நிர்வாகத்திறமைக்கு 👏🏻👏🏻👏🏻 ஒரு பெரிய சல்யூட்.

ஶ்ரீவாரி மெட்டு

திருப்பதியில் தரிசனம் எளிதாக்கும் வழிகளில் முக்கியமானது ஶ்ரீவாரி மெட்டு பாதை. இது திருப்பதியிலிருந்து 19 கிமீ தொலைவில் உள்ளது.

காலை 4 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து காரில் வருபவர்கள் திருப்பதிக்குச் செல்லும் முன்பே சீனிவாச மங்காபுரம் வழியாக இங்கே வந்து விடலாம். இங்கே கார் நிறுத்தும் வசதியும் உண்டு.

பாதை காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவில் நடந்து செல்ல அனுமதி இல்லை (அது ஒரு காட்டு பகுதி). திருமலைக்கு செல்வதற்கு 2388 படிகட்டுகள் கடக்க வேண்டும்.

த்வ்ய தர்ஷன் – இது என்ன சலுகை?
நடந்து வரும் பக்தர்களுக்கு தினமும் 6000 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 1200வது படிக்கட்டில் இந்த டோக்கன் வழங்கப்படுகிறது, அதில் தரிசனத்திற்கான சரியான நேர ஸ்லாட் குறிப்பிடப்பட்டிருக்கும்.

படிகளை ஏறுவது தொடக்கத்தில் சிரமமாக இருக்கும். ஆனால், 1200 படிக்கட்டுக்கு பிறகு தொடர் படிகள் இருப்பதால் எளிதாக நடந்து செல்ல முடியும்.

நாங்கள் காலை 6 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினோம். எங்களுக்கு கிடைத்த ஸ்லாட் காலை 10 மணி. 8 மணிக்கே திருமலைக்கு சென்றடைந்து விட்டோம்.

10 மணிக்கு வரிசையில் நின்று, 11.30 மணிக்கெல்லாம் பாலாஜியை தரிசித்தோம். திருப்பதி லட்டு கவுண்டரில் நெய் மணக்கும் லட்டுகளை வாங்கினோம்!

திறந்த இதயத்துடன் ஒரு சிறப்பு பயணம்
திருமலைக்கு ஏறுவது சிரமமாக இருந்தாலும், இறங்குவது மிக எளிது என்பதை அனுபவத்தில் உணர்ந்தோம்.

பயணங்கள் தொடரும்...
ராஜா.க

#Tirupati #SrivariMettu #DivineJourney #TirumalaDarshan #Pilgrimage #BalajiDarshan #Devotion #TravelTips #SacredJourney #IncredibleIndia




திருப்பதிக்கு போலாம் வாங்க!

திருப்பதிக்கு சென்றோம் என்ற சொன்னவுடன் நம்மை நோக்கி அடுத்த வரும் கேள்வி:

எவ்வளவு நேரம் ஆகிறது?

எத்தனை கூண்டுக்குள் அடைத்தார்கள்?

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, திருப்பதி தேவஸ்தானம் தனது தரிசன முறைகளில் பல மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பக்தர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நிர்வாகத்திறமைக்கு 👏🏻👏🏻👏🏻 ஒரு பெரிய சல்யூட்.

ஶ்ரீவாரி மெட்டு

திருப்பதியில் தரிசனம் எளிதாக்கும் வழிகளில் முக்கியமானது ஶ்ரீவாரி மெட்டு பாதை. இது திருப்பதியிலிருந்து 19 கிமீ தொலைவில் உள்ளது.

காலை 4 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து காரில் வருபவர்கள் திருப்பதிக்குச் செல்லும் முன்பே சீனிவாச மங்காபுரம் வழியாக இங்கே வந்து விடலாம். இங்கே கார் நிறுத்தும் வசதியும் உண்டு.

பாதை காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவில் நடந்து செல்ல அனுமதி இல்லை (அது ஒரு காட்டு பகுதி). திருமலைக்கு செல்வதற்கு 2388 படிகட்டுகள் கடக்க வேண்டும்.

த்வ்ய தர்ஷன் – இது என்ன சலுகை?
நடந்து வரும் பக்தர்களுக்கு தினமும் 6000 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 1200வது படிக்கட்டில் இந்த டோக்கன் வழங்கப்படுகிறது, அதில் தரிசனத்திற்கான சரியான நேர ஸ்லாட் குறிப்பிடப்பட்டிருக்கும்.

படிகளை ஏறுவது தொடக்கத்தில் சிரமமாக இருக்கும். ஆனால், 1200 படிக்கட்டுக்கு பிறகு தொடர் படிகள் இருப்பதால் எளிதாக நடந்து செல்ல முடியும்.

நாங்கள் காலை 6 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினோம். எங்களுக்கு கிடைத்த ஸ்லாட் காலை 10 மணி. 8 மணிக்கே திருமலைக்கு சென்றடைந்து விட்டோம்.

10 மணிக்கு வரிசையில் நின்று, 11.30 மணிக்கெல்லாம் பாலாஜியை தரிசித்தோம். திருப்பதி லட்டு கவுண்டரில் நெய் மணக்கும் லட்டுகளை வாங்கினோம்!

திறந்த இதயத்துடன் ஒரு சிறப்பு பயணம்
திருமலைக்கு ஏறுவது சிரமமாக இருந்தாலும், இறங்குவது மிக எளிது என்பதை அனுபவத்தில் உணர்ந்தோம்.

பயணங்கள் தொடரும்...
ராஜா.க

#Tirupati #SrivariMettu #DivineJourney #TirumalaDarshan #Pilgrimage #BalajiDarshan #Devotion #TravelTips #SacredJourney #IncredibleIndia


புதன், 22 நவம்பர், 2017

நாச்சியார்களின் காலமா இது ?

நாச்சியார்களின் காலமா இது

சினிமாவிற்காக எந்த வித சமரசமும்  செய்து கொள்ளாமல் தன் மனதில் உள்ளதை கேமராவின் கண்கள் வழியாக இவ்வுலகிற்கு எடுத்து காட்டும் இயக்குனர்கள் சிலரே அதில் திரு.பாலாவும் ஒருவர்

அதற்கு சான்று பாலா வின் முந்தைய திரைப்படங்கள். சேது வில் தொடங்கிய பயணம் தாரை தப்பட்டை வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் இப்படியெல்லாம் இருப்பார்களா இவ்வுலகில் மனிதர்கள் என்று பல தரப்பு மக்களையும் ஆச்சரியபடவைக்கும் கதாபாத்திரங்களை படைத்திருப்பார்

சமீபத்தில் பாலா இயக்கியிருக்கும் நாச்சியாரும் அதில் விதிவிலக்கலசமீபத்தில் வெளியான அப்படத்தின் டீஸர் பலரையும் விவாதிக்க வைத்துள்ளது அதில் இடம் பெற்றிருக்கிம் ஒரு வார்த்தை
 “தே..பயலே”.

வழக்கம் போல் கலாசார காப்பாளர்கள் நாம் தான் என்று நம்பிகொள்ளும்
நாம் (மட்டும் தான் )தமிழர்கள்கூட்டம் போல் பொங்கி எழுகின்றனர்


ஒரு பெண் எப்படி இந்த வார்த்தையை பேசலாம் ? பிரச்சனை அந்த வார்த்தையிலா இல்லை அதை பெண் பேசினால் என்பதிலா
அதே வார்த்தையை ஆண் பேசினால் அவனை கண்டு ஒதுங்கும் இதே சமூகம், பெண் கூறினால் சமூக சீரழிவு என்று முகம் சுழிக்கிறது.இரண்டு விதமான முக சுழிவுகள் ஆணுக்குளுக்கு ஒரு வகை 
பெண்களுக்கு ஒரு வகை

சமீப காலமாக தமிழ் சினிமா 
இது தான் பெண் சுதந்திரம் என்று தவறாக காட்டுகிறது என்று ஒரு கும்பல்
இது தான் பெண் சுதந்திரம்
இதுவல்ல பெண் சுதந்திரம் 
என்று வரையறுக்க பட்டாலே சுதந்திரம் என்பது காற்றில் கரையும் கற்பூரமாகி விடுகிறது


அக்காலத்தில் உள்ள பெண்கள் இப்படி இல்லையே பிறகு ஏன்? , அக்காலத்தில் உள்ள ஆண்களும் அப்படி இல்லை. கால மாற்றத்துக்கு ஏற்ற படி மாறவில்லையெனில் அடித்து செல்ல படுவோம்.தன்னை பாதுகாத்து கொள்ள இது ஒரு ஆயுதம் என்றால் அதை அந்த பெண் பிரயோகிப்பதில் தவறேதும் இல்லை.  

காலத்துடன் பயணிப்போம்
ராஜா. 


நாச்சியார்களின் காலமா இது

சினிமாவிற்காக எந்த வித சமரசமும்  செய்து கொள்ளாமல் தன் மனதில் உள்ளதை கேமராவின் கண்கள் வழியாக இவ்வுலகிற்கு எடுத்து காட்டும் இயக்குனர்கள் சிலரே அதில் திரு.பாலாவும் ஒருவர்

அதற்கு சான்று பாலா வின் முந்தைய திரைப்படங்கள். சேது வில் தொடங்கிய பயணம் தாரை தப்பட்டை வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் இப்படியெல்லாம் இருப்பார்களா இவ்வுலகில் மனிதர்கள் என்று பல தரப்பு மக்களையும் ஆச்சரியபடவைக்கும் கதாபாத்திரங்களை படைத்திருப்பார்

சமீபத்தில் பாலா இயக்கியிருக்கும் நாச்சியாரும் அதில் விதிவிலக்கலசமீபத்தில் வெளியான அப்படத்தின் டீஸர் பலரையும் விவாதிக்க வைத்துள்ளது அதில் இடம் பெற்றிருக்கிம் ஒரு வார்த்தை
 “தே..பயலே”.

வழக்கம் போல் கலாசார காப்பாளர்கள் நாம் தான் என்று நம்பிகொள்ளும்
நாம் (மட்டும் தான் )தமிழர்கள்கூட்டம் போல் பொங்கி எழுகின்றனர்


ஒரு பெண் எப்படி இந்த வார்த்தையை பேசலாம் ? பிரச்சனை அந்த வார்த்தையிலா இல்லை அதை பெண் பேசினால் என்பதிலா
அதே வார்த்தையை ஆண் பேசினால் அவனை கண்டு ஒதுங்கும் இதே சமூகம், பெண் கூறினால் சமூக சீரழிவு என்று முகம் சுழிக்கிறது.இரண்டு விதமான முக சுழிவுகள் ஆணுக்குளுக்கு ஒரு வகை 
பெண்களுக்கு ஒரு வகை

சமீப காலமாக தமிழ் சினிமா 
இது தான் பெண் சுதந்திரம் என்று தவறாக காட்டுகிறது என்று ஒரு கும்பல்
இது தான் பெண் சுதந்திரம்
இதுவல்ல பெண் சுதந்திரம் 
என்று வரையறுக்க பட்டாலே சுதந்திரம் என்பது காற்றில் கரையும் கற்பூரமாகி விடுகிறது


அக்காலத்தில் உள்ள பெண்கள் இப்படி இல்லையே பிறகு ஏன்? , அக்காலத்தில் உள்ள ஆண்களும் அப்படி இல்லை. கால மாற்றத்துக்கு ஏற்ற படி மாறவில்லையெனில் அடித்து செல்ல படுவோம்.தன்னை பாதுகாத்து கொள்ள இது ஒரு ஆயுதம் என்றால் அதை அந்த பெண் பிரயோகிப்பதில் தவறேதும் இல்லை.  

காலத்துடன் பயணிப்போம்
ராஜா. 


வெள்ளி, 17 நவம்பர், 2017

நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

சென்னை ஆதம்பக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இந்துஜா என்ற பெண்மணி தன் பள்ளி வகுப்பு தோழனான ஆகாஷ் என்பவனால்  தீக்கறை யாக்க பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

பள்ளி தோழன், நட்பாகி பிறகு ஒரு தலை காதலாக மாறி இன்று உயிரையே குடித்து விட்டது. ஆகாஷ் செய்தது பைத்தியகார தனத்தின் உச்சம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.அந்த தண்டனை மற்ற ஆகாஷ் களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை

இந்துஜா தீக்கரையாக்க பட்டது அவளது வீட்டில்
உங்கள் மகளிடத்தில் நான் பேச வேண்டும் என்று சம்மதம் கேட்டுள்ளான். தாயாரும் சம்மதித்துள்ளார் என்றால் அவர்களின் நட்பு நன்கு பரிச்சயமான நட்பு என்று எண்ண தோன்றுகிறது.
பேச்சு ஒரு கட்டத்தில் எல்லை மீற திட்டமிட்ட படி கொண்டு வந்திருந்த எரிபொருளை இந்துஜா மீது ஊற்றி பற்ற வைத்து விட்டான் செய்வதறியாது திகைத்த அவளது தாயார், சகோதரி அனைவருடத்திலும் ஊற்றி தீக்கறை யாக்கி விட்டான். மருத்தவமனைக்கு செல்லும் முன்னே இந்துஜாவின் உயிர் பிரிந்தது

தவறு ஆகாஷிடம் மட்டும் தான் உள்ளதா ? ஏனென்றால் ஆகாஷ் போன்ற நட்புகளை வீடு வரை அனுமதித்ததே முதல் தவறு. இக்காலத்தில் எந்த பெண்ணும் மிக சுலபமாக புரிந்து கொள்வாள் ஆண் தன்னுடன் பழகும் பழக்கத்தை வைத்து இது நட்பா இல்லை காதலா என்று

காதல் என்று தெரியும் பட்சத்தில் இது நம் வாழ்க்கைக்கு, குடும்பத்துக்கு உகந்ததா ? என்பதை நன்கு ஆராய்தல் மிக அவசியம்

இன்றைய சமூகத்தில் கார்,பைக் இல்லாமல் இருப்பவர்களை எப்படி பார்க்குமோ அதே போல் காதலனோ / காதலியோ இல்லையென்றால் ஒரு மாதிரியாக பார்க்கும் காலம் இது

காதல் என்பது படகில்  சவாரி செய்வது    
போன்றது அக்கறையிலிருந்து இக்கறைக்கு பயணிக்கையில் மகிழ்ச்சியாகவும்,இனிமையாகவும் இருக்கும் ஆனால் பயணத்தின் நடுவிலேயே அக்கறைக்கு திரும்ப நினைக்கையில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது சிலர் லாவகமாக அக்கறை திரும்புகின்றனர் சிலர் தான் நடுவில் தவித்து காட்டாறால் அடித்து செல்ல படுகின்றனர்

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழனாக தான் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஓதுக்குங்கள், விவாதியுங்கள், உங்களை அவர்களுக்கு புரியவையுங்கள்  அவர்களை நன்கு  புரிந்து கொண்டு நட்பாகி விட்டால் போதும் அவர்களுக்கு எதாவது சிக்கல்  என்றால் உங்களிடம் தான் முதலில் கூறுவர் பிரச்சனைகளையும் எளிதில் கலைந்து விடலாம்.

பிள்ளைகளும் பெற்றோர்களை நண்பர்களாக பாவித்தால் 
இந்துஜாக்களையும்,சுவாதிக்களின்   இழப்பை தடுக்கலாம் இவ்வுலகத்தில்.

நட்புடன்

ராஜா. 
நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

சென்னை ஆதம்பக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இந்துஜா என்ற பெண்மணி தன் பள்ளி வகுப்பு தோழனான ஆகாஷ் என்பவனால்  தீக்கறை யாக்க பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

பள்ளி தோழன், நட்பாகி பிறகு ஒரு தலை காதலாக மாறி இன்று உயிரையே குடித்து விட்டது. ஆகாஷ் செய்தது பைத்தியகார தனத்தின் உச்சம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.அந்த தண்டனை மற்ற ஆகாஷ் களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை

இந்துஜா தீக்கரையாக்க பட்டது அவளது வீட்டில்
உங்கள் மகளிடத்தில் நான் பேச வேண்டும் என்று சம்மதம் கேட்டுள்ளான். தாயாரும் சம்மதித்துள்ளார் என்றால் அவர்களின் நட்பு நன்கு பரிச்சயமான நட்பு என்று எண்ண தோன்றுகிறது.
பேச்சு ஒரு கட்டத்தில் எல்லை மீற திட்டமிட்ட படி கொண்டு வந்திருந்த எரிபொருளை இந்துஜா மீது ஊற்றி பற்ற வைத்து விட்டான் செய்வதறியாது திகைத்த அவளது தாயார், சகோதரி அனைவருடத்திலும் ஊற்றி தீக்கறை யாக்கி விட்டான். மருத்தவமனைக்கு செல்லும் முன்னே இந்துஜாவின் உயிர் பிரிந்தது

தவறு ஆகாஷிடம் மட்டும் தான் உள்ளதா ? ஏனென்றால் ஆகாஷ் போன்ற நட்புகளை வீடு வரை அனுமதித்ததே முதல் தவறு. இக்காலத்தில் எந்த பெண்ணும் மிக சுலபமாக புரிந்து கொள்வாள் ஆண் தன்னுடன் பழகும் பழக்கத்தை வைத்து இது நட்பா இல்லை காதலா என்று

காதல் என்று தெரியும் பட்சத்தில் இது நம் வாழ்க்கைக்கு, குடும்பத்துக்கு உகந்ததா ? என்பதை நன்கு ஆராய்தல் மிக அவசியம்

இன்றைய சமூகத்தில் கார்,பைக் இல்லாமல் இருப்பவர்களை எப்படி பார்க்குமோ அதே போல் காதலனோ / காதலியோ இல்லையென்றால் ஒரு மாதிரியாக பார்க்கும் காலம் இது

காதல் என்பது படகில்  சவாரி செய்வது    
போன்றது அக்கறையிலிருந்து இக்கறைக்கு பயணிக்கையில் மகிழ்ச்சியாகவும்,இனிமையாகவும் இருக்கும் ஆனால் பயணத்தின் நடுவிலேயே அக்கறைக்கு திரும்ப நினைக்கையில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது சிலர் லாவகமாக அக்கறை திரும்புகின்றனர் சிலர் தான் நடுவில் தவித்து காட்டாறால் அடித்து செல்ல படுகின்றனர்

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழனாக தான் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஓதுக்குங்கள், விவாதியுங்கள், உங்களை அவர்களுக்கு புரியவையுங்கள்  அவர்களை நன்கு  புரிந்து கொண்டு நட்பாகி விட்டால் போதும் அவர்களுக்கு எதாவது சிக்கல்  என்றால் உங்களிடம் தான் முதலில் கூறுவர் பிரச்சனைகளையும் எளிதில் கலைந்து விடலாம்.

பிள்ளைகளும் பெற்றோர்களை நண்பர்களாக பாவித்தால் 
இந்துஜாக்களையும்,சுவாதிக்களின்   இழப்பை தடுக்கலாம் இவ்வுலகத்தில்.

நட்புடன்

ராஜா.